Saturday, August 17, 2013

எகனை மொகனை ஜோக்ஸ்

1.நமக்கு தரப்படும் வலிகளை நாம் எப்படி ஏற்கிறோம்?எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமது வலிமை கணக்கிடப்படுகிறது.

--------------------------------------
2. .என் மனைவி பாட்டு கேட்டுட்டேதான் வேலை எல்லாம் செய்வாங்க.


.ஹூம், என் மனைவி கிட்டே  பாட்டு வாங்கிட்டே எல்லா வேலையும்  நான் செய்யறேன்..


----------------------------------

3. என் மீது தொடர்ந்து முட்களை வீசுகிறாய்! இயற்கையின் நியதிப்படி முட்களுக்குப்பிறகு பூக்கள் வரும் என்பதால் கனவுகளுடன் காத்திருகிறேன்

-----------------------------

4. தலைவர் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே? 

ஏன்?

லேடீஸ் ஃபிங்கர் என்பதால் வெண்டைக்காயை சமையல்ல சேர்த்துக்கறதே இல்லையாம்

------------------------------

5. தீப்பந்தங்களுடன் எதிரிகள் என் மீது பாய்கிறார்கள்,எனக்குத்தேவையான வெளிச்சத்தை, வெப்பத்தை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டேன்

-----------------------------

6. எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் என்னை புண் படுத்தியபோது நீ மட்டும் தான் என்னை பண் படுத்தினாய் என் அன்பே!

----------------------------

7. காதலிக்கும்போது காதலியை சந்தேகப்படாதவர்கள் கூட மனைவி ஆன பின் சந்தேகப்படத்தொடங்குவது தாம்பத்யத்தின் சாபம்

---------------------------

8. மழை வரும்போது உன் ஞாபகங்களை அழைத்து வருகிறது, ஆனால் மழை நிற்கும்போது அது மீண்டும் உன் நினைவுகளை எடுத்துச்செல்வதில்லை,விட்டு செல்கிறது

------------------------

9.  என்மீது வெறுப்புத்தான் வருது என்றாய்! உன்னிடம் வெறுப்பையாவது சம்பாதிக்க முடிந்ததே என்ற சந்தோஷத்துடன் நான்

----------------------------

10. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... 

மன்னா.... அப்போ தராசு, ஜூனியர் விகடன் திறந்தா குற்றம் இல்லையா?

------------------------

11. தலைவரை ஏன் மாதர் சங்கங்கள் கும்முது? 

பர்மா பஜார்ல குடி இருக்கற பொண்ணை பஜாரின்னு கூப்பிட்டாராம்

----------------------------

12. MONEY கண்டனாக இரு என அவள் விஷம் கக்கினாள், நான் நீல கண்டன் ஆகிவிட்டேன்

----------------------------

13. காதல் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்தான், ஆனால் அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பொதுவான விஷயம்

---------------------

14. மரண பயம் வரும்போதும், வயோதிகத்தின் கடைசி அத்தியாயம் துவங்கும்போதும் மனிதர்களிடம் நாத்திக உணர்வு மறைந்து ஆன்மீக உணர்வு தலை தூக்குகிறது

--------------------------------

15. இனிமே என்னை யாரும் அணில்னு கூப்பிட வேணாம்..

ஏனுங்க்ணா? 

அனில்கபூர், அனில்கும்ப்ளே 2 பேரும் என் மேல மான நஷ்ட வழக்கு போட்டிருக்காங்க..

----------------------------------

16. இப்போது நடப்பது சர்வாதிகார ஆட்சி, வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட பேச முடியல .

. இப்போக்கூட 10 வார்த்தை பேசிட்டீங்களே தலைவரே?

---------------------------

17. தமிழகத்தில் இனி எந்த தீயசக்தியாலும் கொள்ளையடிக்க முடியாது-ஜெ # இனி அடிக்க என்ன மிச்சம் இருக்கு? - கலைஞர்

--------------------------

18. நமது இலக்கை நோக்கி மிதமான வேகத்தில் நாம் முன்னேறும்போது எதிரிகள் நம்மை துரத்தி வேகத்தை அதிகமாக்கி நம் இலக்கை முன்பே அடைய உதவுகிறார்கள்

------------------------------

19. காதல்தோல்வியை விட மனிதர்களை அதிகம் பாதிப்பது காதலில் சந்தேகம்

------------------------

20.  உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டனே,இனி என் கிட்டே பேச என்ன இருக்கு? 

அட லூசே, பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா ஏன் பேசி டைம் வேஸ்ட் பண்ணனும்?

----------------------

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்