Wednesday, August 07, 2013

தலைவா ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? புதிய சிக்கல்!







விஜய் நடித்த தலைவா திரைப்படம் நாளை மறுநாள் (ஆக.9)வெளியாக உள்ளது. ஆனால் அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.




சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. தலைவா திரைப்படத்தை வெளியிட அரசின் ஒத்துழைப்பு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம்.




 இந்த இரண்டும் உறுதி செய்யப்படாத நிலையில் தலைவா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்ற முடிவுடன், தமிழகமெங்கும் படத்தை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.


அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை திரையிடுவது குறித்து பரிசீலிப்போம் என அறிவித்துள்ளனர்.

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆரம்பம்... ஆரம்பம்...
மீண்டும் ஒரு விஸ்வரூப வெற்றி காத்திருக்கு..