Saturday, March 23, 2013

கருப்பம்பட்டி -சினிமா விமர்சனம் ( தினமலர்)

 
 
தினமலர் விமர்சனம்
 
  • நடிகர் : அஜ்மல்
  • நடிகை : அபர்னா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிரபு ராஜா சோழன்
 


இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்துள்ள இயக்குனரின் படைப்பு எனும் கேப்ஷனுடன் விளம்பரம் செய்யப்பட்டு வரும் "கருப்பம்பட்டி", உறவுகளின் உன்னதத்தை சொல்லும் விதத்தில் மெய்யாலுமே கருப்பட்டி வெல்லமாக இனித்திருக்கிறது என்றால் மிகையல்ல!

கதைப்படி தனது கிராமத்து கலாச்சாரத்தையும், தன் பெற்றோர் உள்ளிட்ட கிராமத்து மக்களையும் வெறுத்து ஒதுக்கும் ஹீரோ, அந்த கிராமம் மொத்தத்தையும் அடமானம் வைத்துவிட்டு, அந்தகாசில் மேலைநாட்டு நாகரீகத்தை விரும்பி பிரான்ஸ் நாட்டில் போய் செட்டில் ஆகிறார்! அங்கு அந்தநாட்டுப் பெண்ணை திருமணமும் செய்து ஒரு குழந்தைக்கும் அப்பா ஆகிறார். 
 
 
 
மேலைநாட்டு நாகரீகத்தில் வளர்ந்த மனைவி நம் ஹீரோவுக்கு துரோகம் செய்ய, ஹீரோ போதை மருந்துக்கு அடிமையாகிறார். அப்புறம்? அப்புறமென்ன போதை பழக்கத்தால் போய் சேருவதற்கு முன் வளர்ந்து ஆளாகும் தன் மகனிடம் தான் செய்த துரோகம் மொத்தத்தையும் சொல்லி செத்துபோகிறார். மற்றொரு ஹீரோவான மகன் அப்பாவின் துரோகத்திற்கு பிராயசித்தம் தேடும் விதமாக அடமானத்தில் கிடக்கும் கருப்பம்பட்டியை மீட்டு, சிதறுண்டு கிடக்கும் சொந்த பந்தங்களை ஒன்று சேர்த்து, அந்த உறவிலேயே ஒரு பெண்ணை காதலித்து, கரம்பிடித்து, இந்தியன் சிட்டிசன் ஆகிறார். இதுதான் "கருப்பம்பட்டியின் கரு, கதை, களம் எல்லாம்!

அப்பா, மகன் என டபுள் ஆக்டிங்கில் அஜ்மல் அசத்தல்! அதிலும் மேலைநாட்டு கலாச்சாரத்தை விரும்பும் அப்பாவாகவும், சொந்த கிராமத்தையும் சொந்த பந்தங்களையும் விரும்பும் மகனாகவும், அஜ்மல் இருவேறு துருவங்களிலும் நின்று அஜ்மல் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். அப்பா வெறுத்து ஒதுக்கிய தன் தாத்தாவை தேடிப்பிடித்து, மொத்த கருப்பம்பட்டி சொந்தங்களையும் தேடிப்பிடிக்க கார்ட்ப‌ோர்டு ‌சீட்டில் ஸ்கெட்ச் போட்டு, உறவுப்பையன் ஜெகனுடன் சேர்ந்து கொண்டு சாப்ட்வேர் கோடீஸ்வரர் பில்கேட்ஸின் ரெப்பரஸென்டேடீவ்ஸ்... இந்திய கிராமங்களை தத்தெடுக்கும் டீமின் லீடர் என்று கருப்பம்பட்டி உறவுகளை பொங்கல் திருநாளில் அவர்களது கிராமத்திலேயே ஒன்று சேர்த்து பொங்கல் கொண்டாட வைப்பது சூப்பர்ப்!


அப்பா காதலி சாந்தியாகவும், மகனின் காதலி காவேரியாகவும் அபர்ணா பாஜ்பாய் ஒரு சாயலில் அசின் மாதிரி தெரிந்து, நம் நெஞ்சில் பிசின் போட்டு ஒட்டிக்கொள்கிறார். அப்பா அஜ்மலை ஒரு தலையாக காதலித்தாலும், அவரை நினைத்து இருதலை கொள்ளி எறும்பாக வாழ்ந்து மடிந்தாலும், அப்பாவின் காதலி மகள், அவரது மகனுக்கு தங்கை முறை உறவில்தானே வரவேண்டும்....?! எங்கோ லாஜிக் இடிக்கிறதே...? என‌ யோசிப்பவர்களுக்கு இயக்குனர் பிரபுராஜ சோழன் தான் பதில் சொல்ல வேண்டும்! அதுபோகட்டும்... சாந்தியாகவும், காவேரியாகவும் வரும் அபர்ணா அபாரமண்ணா...!!

கல்லூரி ஹாஸ்டல் வார்டன், கம் புரபசர் ஆக வரும் எம்.எஸ்.பாஸ்கர், செல்லாது செல்லாது... என்படியே சிரிப்பு மூட்டும் கருப்பு ஜெகன், ஸ்ரீநாத், மகாதேவன், கணேஷ்கர், சேத்தன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது படத்தின் பலம்!


கண்ணனின் இசையில், கபிலனின் பாடல் வரிகள், அதிலும் பாலிவுட் பிரபலம் பப்பிலகரி பாடியிருக்கும் 1980களில் பிரபலமான டிஸ்கோ பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் அசத்தல்! சந்தோஷ் ஸ்ரீராம் - சஞ்சீவ் இருவரது ஒளிப்பதிவும் தூள். பிரான்ஸை இவ்வளவு பிரமாதமாக இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டியதில்லை என்பது ப்ளஸ்! பி.லெனினின் படத்தொகுப்பு, பிரபுராஜ சோழனின் எழுத்து - இயக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கின்றது!

ஆகமொத்தத்தில், "கருப்பம்பட்டி" - "கலெக்ஷ்ன்பெட்டி"!!

1 comments:

RBR said...

Neenga ARYA vin padam chiku bhuku pakalaya... athan appavin kadali magal maganuku jodi.