Tuesday, March 19, 2013

தமிழ் இனத்தலைவரின் தன்னிகரற்ற பல்டி பேட்டி

ஐ.மு.கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகல்: கருணாநிதி அறிவிப்பு! 
 
 
சென்னை: ஐ.மு.கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் இது தொடர்பான அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு, படித்தார்.

அந்த அறிக்கையில், "ஈழத் தமிழர் பிரச்னையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வாவின் காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும், தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் குரலெழுப்பி வந்துள்ளது.

அறிஞர் அண்ணா காலத்திலேயே 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

தந்தை செல்வா காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப்புலிகள் மற்றும் விடுதலைப்போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட;

அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும். தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ, மொழி வாழ, நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப்போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து,

அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக, தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட, அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த, இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு, உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்னையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர்மறை கருத்துரைப்பதோ, இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை, அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆழ்ந்து பார்த்து, அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.

எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளி்த்த பேட்டியில் கூறியதாவது:

இனிமேல் பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?

பொதுவாக பிரச்னை அடிப்படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறை தானே!

அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?

எதுவும் கிடையாது.

2009 ஆம் ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்ட போது எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது நீங்கள் எடுத்திருக்கும் முடிவு காலதாமதமானது என நினைக்கிறீர்களா?


2009 ஆம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.

பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்படுகிறதே.?

பொது என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.

டெசோ அமைப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.

தி.மு.க அமைச்சர்கள் எப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வார்கள்?

இன்றோ அல்லது நாளையோ.

தி.மு.க வெளியேற மத்திய அரசுக்கு ஏதும் கெடு நிர்ணயித்து இருந்தீர்களா?

நாங்கள் கூறியிருக்கும் திருத்தம் உள்ள தீர்மானத்தை ஏற்க 21ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறோம். திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை.

உடனடியாக நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தால் தேர்தலை சந்திப்பீர்களா?

எப்போது வந்தாலும் சந்திப்போம்.

மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பத‌ற்காகதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள்.நீங்கள் வெளியேறியதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?

அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

நேற்றைய தினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிடம் இருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?

பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.
 
 
மக்கள் கருத்து 
 
 
1.மாணவர் போராட்டத்தைக் கண்டு கதிகலங்கி நிற்கும் நீர் ஒரு வாரத்தில் விலகுவீர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பரவாயிலலை இரண்டு நாட்களிலேயே விலகிவிட்டீர். இதிலிருந்தே மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி என்று தெரிகிறது.

அடுத்து (உண்மையான) உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்வீர் என்று எதிர் பார்க்கிறோம். ஆனால் நீர் தலைகீழாக நின்றாலும் திமுக அழிவதைத் தடுக்க முடியாது. ஏனென்றால் உம் துரோகத்தின் அளவு அவ்வளவு பெரிது
 
 
 
2. 2014 தேர்தல் பிரசாரத்தில்: பார்த்தாயா தமிழா, உன்னைக் காக்க உன் உரிமையை நிலை நாட்ட நானும் எங்கள் கழகமும் எத்தகைய தியாகத்தை செய்திருக்கிறோம் பார்த்தாயா. 2009-ல் தில்லாலங்கடி காங்கிரஸை நம்பி ஏமாந்தேன். 2012-ல் அதை உணர்ந்த (?!) உடனே எங்கள் பதவிகளை துறந்துவிட்டோம். என் எண்ணம், மூச்சு, உயிர் எல்லாமே தமிழை சுற்றித்தான், தமிழர் நலமொற்றித்தான் என்பதை மறவாதே......
 
 
3. இன்னைக்கி செவ்வாய்க் கெழமை கரிநாள் .... பகுத்தறிவு ஜோசியப்படி நல்ல நாள் இல்லை ... எனவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கேற்ப பெரியாரின் இளவல்கள் நாளை அமைச்சர் பதவி விலகுவார்கள் !!!!! நல்லா 9 வருசம் ஒக்காந்து தின்னவய்ங்க செய்யுற அலும்பப்பாரு !!!! நீங்கள்ளாம் நல்லா வருவீங்கடா நல்லா வருவீய்ங்க 
 
 
4இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு எல்லாரும் இப்புடி கூவுறீக?

- இவிங்க மந்திரிங்க ராசினாம கடுதாசிய அந்தந்த மாவட்ட செயலாலரிடம் கொடுப்பாக
- அவுக தலைமைக்கழக செயலாளருக்கு அனுப்புவாகா
- அவுக கட்சி தலைவரிடம் கொடுப்பாக
- அவுக பொதுக்குழு, செயற்குழுவ கூட்டி முடிவெடுத்து... அப்புறமா
- டெல்லியில உள்ள கட்சி கொரடாவாண்ட கொடுக்க கொரியருல அனுப்புவாக
- அவுக நாடாளுமன்ற ஸ்பீக்கரம்மாகிட்ட கொடுப்பாக
- அப்புறம் அவிங்க ஜனாதிபதிகிட்ட அனுப்புவாக

இப்புடி ஊரெல்லாம் சுத்தி ராசினாமா செய்யரத்துக்குள்ள சனவரி 2014 வந்துராது?

அதுவரைக்கு அஞ்சானெஞ்ஜன் மந்திரிதானே மந்திரிதானே. இப்ப என்ன செய்யுவீக?
 
 
திமுக விலகல் குறித்து சொல்ல ஒன்றுமில்லை: சோனியா காந்தி 
 
 
புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விலகுவதாக திமுக அறிவித்துள்ளது குறித்து இப்போதைக்கு சொல்ல ஏதுமில்லை என்று காங்கிரஸ் கட்சித் ஹலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு, இது குறித்த தகவல் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது,.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு வெளியில் வந்த சோனியாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, திமுக விலகல் பற்றி இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்,.


thanx - vikatan
 
 
எனது ட்வீட்ஸ்
 
 
1. தமிழ் இனத்தலைவர் திடீர் னு தியாகி ஆகிட்டாரே? நிஜமாவே திருந்திட்டாரோ?
 
 
 
2. உயிருனும் மேலான உடன் பிறப்பே!ஆதாயம் இல்லாம நான் ஆத்தோட போக மாட்டேன்.பொறுத்திரு.எல்லாம் ஒரு ராஜ தந்திரமே!
 
 
 
3. டியர்.உன்னை டைவர்ஸ் பண்ணலை. உனக்குக்குடுத்த ஆதரவை விலக்கிக்கறேன்.ஆனா வீட்டுக்கு டெயிலி வருவேன்.ஹி ஹி
 
 
 
4. அய்யோ ராமா ! எல்லாம் டிராமா!
 
 
5. திமுகவின் வாபஸ் அறிவிப்பால் சென்செக்ஸ் கிடுகிடு வீழ்ச்சி# எப்டிப்பார்த்தாலும் தானைத்தலைவரால தமிழ்நாட்டுக்கு நட்டம் தான் வரும் போல
 
 
6. வாழ்க்கை ஒரு வட்டம்.இன்னைக்கு விலகுனவங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க.
 
 
7 த இ தலைவர் -மேடம்.என் நாடகம் எப்டி? சோனியா - சி பி ஐ ரெய்டு வரப்போகுது.முடிஞ்ச வரை சொத்தைக்காப்பாத்திக்கப்பாருங்க
 
 
8. அழகிரி - அப்பா. நாம எல்லாரும் களி சாப்டற மாதிரி கனா கண்டேன்.பலிச்சிடுமோ?
 
 
 மக்கள் கருத்து 
 
 
1. ஆனால் வருங்கால சரித்திரத்தில் உங்கள் குடும்பத்தை பற்றி சொல்ல நிறைய இருக்கும். நாடு விட்டு நாடு வந்து மாமியார் இறந்து, கொழுந்தன் இறந்து, கணவன் இறந்து பதவிக்கு வந்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய இனப் படுகொலையை முன் நின்று நடத்திய மாபெரும் வீராங்கனை என்றும் இந்திய சுதந்திர போரை முன் நின்று நடத்திய காங்கிரஸ் இயக்கத்தை ஒழித்தவர் என்றும் சரித்திரம் பதியும். 
 
 
 
2. எப்படி சொல்லுவிங்க? என்னத்த சொல்லுவிங்க? பிள்ளையை பிரதமராக்க கனவு கண்டுகிட்டு இருக்கவங்க என்னத்த சொல்ல முடியும்? எப்போவோ செய்ய வேண்டிய வேலையை ரெம்ப தாமதமா செஞ்சுருக்காரு திமுக தலைவரு. இது இப்படியே இருக்கணும்னு தான் நாங்க எல்லாரும் வேண்டிகிறோம். 
 
 
3. திமுக விலகல் பற்றி இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்,. ----> பின்ன என்ன, சென்னை டூ திஹாருக்கு ஒரு ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க'ன்னா வெளிப்படையாக சொல்வார்?

0 comments: