Tuesday, July 17, 2012

ஐஸ்கிரீம் கடை, ஒயின் ஷாப் என்ன வித்தியாசம்? (ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

ஒரு தாயின் கவிதை...

பட்டினி கிடந்து பள்ளியில் சேர்த்தேன்.
கல், மண் சுமந்து கல்லூரியில் சேர்த்தேன்,
வெய்யிலில் வெந்து வேலையில் சேர்த்தேன்.
மகனே! நீயோ என்னை எளிதில் சேர்த்து விட்டாய்..,
முதியோர் இல்லத்தில்.


............



2. நீ பெரியவன் ஆகி என்ன பண்ணப் போறே?

“கல்யாணம்”.

அது இல்ல..., நீ என்னவா ஆக விரும்புறே?

“கணவனா”...,

அதில்ல.., உனக்கு லைஃப்ல என்ன கிடைக்கனும்ன்னு எதிர்பார்க்குறே?


“ஒயிஃப்”

ஓ நோ..., உன் பேரண்ட்ஸ்க்கு என்ன பண்ணப் போறே.?


“மருமகளை தேடித்தரப்போறேன்”

ஸ்டுப்பிட்!  உன் பேரண்ட்ஸ் உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பாங்க?

“பேரக்குழந்தையை”

ஐயோ ,ஐயோ, உன் வாழ்வின் லட்சியம்தான் என்ன?

“நாம் இருவர்..., நமக்கு இருவர்”.

............



3. காதல் என்பது ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வரலாறு ஆகிறது.
ஆனால், ஒரு யுவதியின் வாழ்க்கையில் ஜஸ்ட் ஒரு எபிசோட் ஆகிறது.
.....




4.பசங்க ஏன் லவ் பண்றாங்க?


ஃபிரண்ட்ஸ் இருக்காங்க எப்படியும் சேர்த்து வெச்சிடுவாங்க அப்படினுதான்.

 பொண்ணுங்க ஏன் லவ் பண்றாங்க?


பேரண்ட்ஸ் இருக்காங்க எப்படியும் பிரிச்சுடுவாங்கன்னுதான்.


..............


5. முகம் பார்க்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் பேலன்ஸ் இல்லாத மொபலை வைத்திருந்தாலும் நம் உண்மையான அன்பு எஸ்.எம்.எஸ்ல தொடரும்.
..........

சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.



6.வியர்வை துளிகளும், கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவைதான் வாழ்க்கையின் இறுதியில் இனிப்பாக இருக்கும்.
.....



7. நல்லவனாக இரு.ஆனால், அதை மற்றாவர்களுக்கு நிரூபிக்க முயலாதே.



.....


8. நிரந்தர பகையும் இல்லை...,
நிரந்தர நட்பும் இல்லை...,
 நிரந்தரமாய் ஊழல் மட்டும்...,
மானங்கெட்ட அரசியல்..., பெயர்தான் மக்கள் ஆட்சி...,
ஆனால் நடப்பதோ மாக்கான்களின் ஆட்சி...,
....




9. அன்பே! நீ ஒரு நைட்டி போட்ட ரோஜா...,


அப்போ நீங்க?


 கட்டிங்க் போட்ட ராஜா.


.......




10. அரேஞ்ஜ்டு மேரேஜ்னா மேரேஜ் செலவு ரூ.6லட்சம்,  நகை 4 லட்சம், மொத்தம் 10லட்சம் செலவு ஆகும். லவ் மேரேஜ்னா ரூ100க்கு ஸ்டாம்ப் பேப்பர், ரூ.20 நோட்டரி, ரூ 50க்கு மாலை, ரூ 10க்கு ஃபோட்டோ. மொத்தம் 180 தான் செலவு. அதனால அரேஞ்ஜ்டு மேரேஜை அவாய்டு பண்ணுங்க். பெற்றோர் பணத்தை மிச்சம் பண்ணுங்க.




.....




11.  ஒரு உயிரை நேசிப்பது நிஜம் என்றால் அதை பறவை போல் பறக்க விடு..., அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால் மீண்டும் உன்னை தேடி வரும்.



.........
12.  ஒரு பெண்ணின் உயர்வுக்கு காரணம் என்ன?


சயிண்டிஸ்ட் மாதிரி யோசிக்காதீங்க..., ஹை ஹீல்ஸ்தான்.


............




13. நேற்று ஜெயித்தவன் இன்றும் ஜெயிக்கலாம். ஆனால், நேற்று தோற்றவன் தினமும் தோற்பதில்லை.
.....




14. வாடிப்போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது. வாழப்போகிற நாம் ஏன் அழ வேண்டும்..
.............




15.  என்னைப் பார்த்த உடனே பூக்கும் பூக்கள் உன்னிடம் மட்டுமே உண்டு. அன்பு.., சிரிப்பு.
.....




16.என்னதான் கேர்ள்ஸ் வெள்ளையா இருந்தாலும் அவங்க மனசு கறுப்பு. என்னதான் பசங்க கறுப்பா இருந்தாலும் அவங்க மனசு வெள்ளை. By கறுப்பா இருந்தாலும் களையா இருப்போர் சங்கம்.
...............




17. ஐஸ்கிரீம் கடை, ஒயின் ஷாப் என்ன வித்தியாசம்?


லவ் ஸ்டார்ட் ஆனா ஐஸ் கிரீம் கடைக்கு போவாங்க. லவ் ஸ்டாப் ஆனா(புட்டுக்கிச்சுனா) ஒயின் ஷாப் போவாங்க.



.....


18. கோபம் - நம்மை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும்.
அன்பு- நம்ம வெறுப்பவர்களை யும் நேசிக்க வைக்கும்.
......




19. ஒரு பொண்ணு, ராங்கா  ரோட்டை கிராஸ் பண்றப்ப டிராஃபிக் போலீஸ் விசிலடிச்சார். அந்தப் பொண்ணு கண்டுக்காம ரோட்டை கிராஸ் பண்ணுச்சு.

“நான் விசிலடிச்சும், கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கலை.?

நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல.
..........




20.  அனைவருக்கும் குடி இருந்த கோயில் - அம்மா, பலருக்கு குடி இருக்கும் கோயில் டாஸ்மாக்




---------------------------


4 comments:

cheena (சீனா) said...

அன்பின் செந்தில் - கவிதை நெகிழ வைக்கிறது - அருமை - சூப்பரெல்லா ஜோக்ஸூம் - நட்புடன் சீனா

ஹாலிவுட்ரசிகன் said...

ஜோக்ஸ் எல்லாம் அருமை சி.பி. அந்த கல்யாணம் பற்றிய கேள்வி பதில் சூப்பர்!!

JR Benedict II said...

Last two days ur tweets ARE super anna..

princely said...

#2

Really superb..