Wednesday, September 19, 2012

அணு உலை பாலிடிக்ஸ் @ கல்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJuzKTqPkOBNET9ttxJVtnRh3EEGnbUCuKMkz1gis3WnPWmoLBi2sM1qbTR4BLu8oBKMQQR7S8nLHdtZWm7io8DL5RrEGyqNNX76qcINFGltlYXhep41OgebcWvoYpI4qmD_HOrIPpdE_S/s400/koodankulam.jpg 

அணு உலை பாலிடிக்ஸ்

கொதிக்கும் கூடங்குளம்... அடக்கும் அரசாங்கம்!

ப்ரியன்

போலீஸ் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை என்று கூடங்குளமும், சுற்று வட்டாரமும் கலவரப் பூமியாகி இருக்கிறது. ‘என்னைக் கைது செய்தாலும், அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடரும்என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் சொல்லி இருக்கிறார். எதிர்ப்பலை ஓயவில்லை. இப்போது கூடங்குளம் தேசியப் பிரச்னையாக மாறியிருக்கிறது.

‘கூடங்குளம் அணுமின் உற்பத்திக்குத் தடைவிதிக்க வேண்டும்என்று உயர் நீதிமன்றத்தை அணுகியது, ‘பூவுலகின் நண்பர்கள்என்ற சுற்றுச்சூழல் அமைப்பு. அதைப்போல வேறு தனிப்பட்ட சமூக ஆர்வலர்களும் வழக்குப் போட்டார்கள். வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ‘பூவுலகின் நண்பர்கள்அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இது தொடர்பாக தில்லியில் இருந்த அந்த அமைப்பின் அறங்காவலர் ஜி.சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

 http://tamil.oneindia.in/img/2011/09/16-kudankulam-nuclear-power-pl.jpg

அணுமின் எரிபொருள் கசிவால் ஏற்படும் கதிர்வீச்சு மாபெரும் பேராபத்தை, மனிதகுலத்துக்கு உருவாக்கும் என்பது பல முறை சொல்லப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள எந்த அணுஉலையும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. ‘ஆபத்தான தொழில்நுட்பம், அதிகமான உற்பத்திச் செலவு, கதிரியக்க ஆபத்து ஆகியவை காரணமாக அணுமின் உற்பத்தி மனிதகுலத்துக்குப் பேரழிவை உருவாக்கும்என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் சொல்லியிருக்கிறார்


 அணுமின் நிலையத்தின் கழிவுகள் சாகாத் தன்மை கொண்டவை. அவற்றின் கதிரியக்க வீரியத்தை முற்றிலும் அழித்துவிடும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா (த்ரீ மைல் ஐலேண்ட்) மற்றும் ரஷ்யாவில் (சென்னோ பில்) ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துக்களுக்குப் பிறகு அந்த நாடுகள் அணுமின் நிலையம் குறித்து மறுபரிசீலனையில் இருக்கின்றன. ஆனால் தொழில்நுட்பம், மற்றும் அணுஉலை போன்றவற்றில் வர்த்தக நோக்கில் நம்மைப் போன்ற நாடுகளை வளைத்துப் போடுகின்றன.



நமது நாட்டில் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் ஒரு விசித்திரமான அமைப்பு. அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை முற்றிலும் உறுதிசெய்து கொள்ளும் பொறுப்பு இந்த அமைப்புக்கு உண்டு. ஆனால் இது அணுசக்தித் துறையின் கீழ் இயங்குகிறதே தவிர, சுதந்திர அமைப்பு அல்ல. ‘இந்த அமைப்பு சுதந்திர அமைப்பும் கிடையாது; நம்பத்தகுந்ததும் அல்லஎன்று நமது கணக்குத் தணிக்கை அதிகாரி சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பின் தலைவராக இருந்த டாக்டர் கோபாலகிருஷ்ணன், ‘இது போலித்தனமான, மதிப்பில்லாத அமைப்புஎன்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு கொடுக்கிற பாதுகாப்புச் சான்றிதழ் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்?

 http://tamil.oneindia.in/img/2011/11/17-kudankulam-plant-300.jpg

ஜப்பானில் புகோஷிமா அணுஉலை விபத்துக்குப் பிறகு இந்தியாவில் உள்ள அணுஉலைகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, மத்திய அரசு வல்லுனர்கள் பணிக்குழு (Task force) ஒன்றை நியமித்தது. அந்தப் பரிந்துரைகளில் ஆறு பரிந்துரைகள்தான் செயல் வடிவம் பெற்றிருக்கின்றன. இன்னமும் 11 பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை


 இவற்றை நிறைவேற்ற ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை ஆகலாம் என்று அணுமின் ஒழுங்கு முறை வாரியம் சொல்லியிருக்கிறது. அப்படியிருக்க, அணுமின் நிலையம் இயங்க அவசரம் காட்டுவது ஏன்? இதில் ஒரு முக்கிய பரிந்துரை, இயற்கை பேரிடர்களால் (பூமி அதிர்வு, சுனாமி) அணுமின் உலை பாதிப்புக்கு உள்ளாகும்போது அதை குளிர்விக்கத் தேவையான மற்றும் தானாக இயங்க மாற்று நன்னீர் வசதி (fresh water). சுனாமி உருவாக வாய்ப்புள்ள கடல் பகுதியிலிருந்து கூடங்குளம் 1300 கி.மீட்டருக்கு தள்ளியிருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில் கூட கூடங்குளத்திலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷம் காட்டின. இயற்கையின் செயல்பாடுகளை யாரும் வரையறுக்க முடியாது.



நமது நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் இயங்கிய காலத்தை விட, பழுதாகி இருந்த காலம் மிக அதிகம். அதேபோல் உற்பத்தியிலும் முழு அளவு எட்டவில்லை. எனவே, நமது எதிர்காலச் சந்ததிகளை மனத்தில் கொண்டு கூடங்குளம் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். ஆபத்தில்லாத மாற்று எரிசக்தி திட்டங்கள் தீட்ட வேண்டும். உச்சநீதிமன்றமும் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிடில் மக்கள் மன்றத்தில் எங்கள் போராட்டம் தொடரும்." என்கிறார் ஜி.சுந்தர்ராஜன்.

13,500 கோடி செலவில் கடந்த 23 வருடங்களாக உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இறுதிக்கட்டத்தில் தடைகள் ஏற்படுத்துவது சரியல்ல; அதிலும் குறிப்பாக 3000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ள தமிழகத்தின் தேவையில் சிறிதேனும் ஈடுகட்ட கூடங்குளம் அவசியம். மத்திய, மாநில வல்லுனர் குழுக்கள் ஆய்வு செய்து பாதுகாப்பானது என்று உறுதியளித்துள்ளன.


 அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியளிப்பதால்தான் உயர்நீதிமன்றமும் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி கொடுத்துவிட்டது. முக்கியக் கட்சிகள் எதுவும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மக்கள் ஆதரவு இல்லாத அமைப்புகளும், கட்சிகளும்தான் எதிர்ப்பைக் காட்டுகின்றன. தமிழக மக்களிடம் கூடங்குளம் எதிர்ப்புக்கு ஆதரவு இல்லை. காரணம், தமிழகம் சந்திக்கும் மின் பற்றாக்குறை


 கல்பாக்கம் பகுதியில் மீனவர் வாழ்வாதாரத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கூடங்குளத்தில் 8000 மெகா வாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, திட்டத்தை முடக்க வேண்டாம்" என்கிறார்கருத்துக்களம்ஆசிரியர் இரா. தங்கத்துரை.

நன்றி - கல்கி , புலவர் தருமி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYo5WXppL687OCr3DJphXr2jyeyQHLFd2k45YHvKhTNGCQKwQS-LH-RrtEAWWoD5yQ3GindCbtnO68mdIf6Q3oMJr66o2oDEM82NtylZq5J4PAGYr7QAJoh6QxhZNLl_0n3NO1bTH-9dJW/s1600/koodangulam+anumin+nilayam+%25282%2529.jpg

1 comments:

தமிழ் காமெடி உலகம் said...

மக்கள் தான் பாவம்..... அரசியல் என்கிற பெயரில் மக்களை பழி வாங்குறாங்க.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)