Friday, June 15, 2012

முரட்டுக்காளை - சினிமா விமர்சனம்

http://lh6.ggpht.com/_OMHy_G6FX48/TJGVMqRSEKI/AAAAAAAAEzs/uW2a8cVHlLY/Murattukkaalai-Poster-2.jpgகாளையன் எனும் ஆண்மைத்தனம் மிளிரும் கேரக்டரில் நடித்த ரஜினியின் முரட்டுக்காளை ரீமேக்கிற்கு மிராசுதார் ஃஆஃப் த மிக்சர் பார்ட்டி , பிஞ்சு மூஞ்சி மிஸ்டர் சுந்தர் சி யை தேர்வு செய்ததற்காக சக ஊர்க்காரர் என்ற உரிமையில் இயக்குநர் செல்வபாரதிக்கு என் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து விமர்சனத்தை தொடங்குறேன்..

ஹீரோவுக்கு  4 தம்பி,, வில்லனுக்கு ஒரு தங்கச்சி.. ஹீரோ ரேக்ளா ரேஸ்ல ஜெயிச்சதைப்பார்த்ததும் ஹீரோயினுக்கு லவ் வந்துடுது.. ( ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் ஏரியாவில் சீனின்னு என் ஃபிரண்டு பைக் ரேஸ்ல முதல்ல வந்தான், ஆனா அவன் லவ்வர் டாட்டா, பிர்லா, அம்பானி காட்டிட்டு போய்ட்டா).. ஹீரோ கிட்டே இருக்கற நிலத்துக்கு ஆசைப்பட்டு வில்லன் பேக்கரி உனக்கு, என் தங்கச்சி உனக்குன்னு டீல் பேச ஐ மீன் நிச்சயதார்த்தம் பேச விழா நடக்குது.. 

அந்த நிச்சயதார்த்தத்துல ஹீரோவுக்கு தன் தம்பிகளை தன் கிட்டே இருந்து பிரிச்சுடுவா-னு தெரிஞ்சு கேன்சல் பண்றாரு.. இடைவேளை.. 

இப்போ இன்னொரு ஹீரோயின் ..அந்த ஊர்ல 1117 வீடுகள் இருந்தாலும் எதேச்சையா ஹீரோ வீட்ல வந்து தங்கி அவன் மனசுல இடம் பிடிச்சுடறா.. வில்லனுக்கு ஹீரோயின் மேல ஆசை.. மீதி என்ன நடக்குதுங்கறதை படு பயங்கர சஸ்பென்ஸோட படம் எடுத்திருக்காங்க.. 

சுந்தர் சி படம் பூரா சிரிச்ச முகத்தோட, ஆக்‌ஷன், ஃபைட் சீன்ல கூட திருநீறு, குங்குமம் கலையாம பொத்தி வெச்ச மல்லிகை மொட்டாட்டம் வந்துட்டுப்போறாரு.. கோபம் வர்ற மாதிரி சீன்ல உருமறார்.. பார்க்க காமெடியா இருக்கு..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIPKyzTsb3uamdoAFYDbydJJbKcQsWzGs8DlIz8MP0fPfV_vmOF9pmdupRgPRzxR1LhunOz5KRQlT6tM0G5PgGLsIbd0eJ2lwL8EboFL9_f5y0fLYv4nEEOIiTR20S2IX_JGV1Y4i1nBo/s1600/Sindhu+Tolani+in+saree+still.jpg


முதல் ஹீரோயின் சிந்து துலானி.. முடிஞ்ச வரை காட்டு காட்டுன்னு காட்டிட்டு போறார்.. ஹூம்.. ஆல்ரெடி மன்மதன்ல பார்த்ததுதானே?

2 வது ஹீரோயின்  சினேகா.. பிரசன்னாவை நினைச்சா பாவமா இருக்கு.. அவரோட கடைசி படம் ஐ மீன் மேரேஜ்க்கு முன்னே ஷூட் பண்ண  கடைசி படம் இப்படியா அமையனும்? செம சீன்.. 

வில்லனா சுமன்.. எடுபடலை.. சிவாஜில சிங்கம் மாதிரி இருந்தவரை இப்படி நரி மாதிரி ஆக்கிட்டாங்க பாவம்

 விவேக்  திருநங்கை கேரக்டர்ல காமெடி பண்றதா  நினைச்சுக்கிட்டு கேவலமா ஆபாசமா  வசனம் பேசிட்டு சி செண்ட்டர் ரசிகர்கள் கூட  ரசிக்க முடியாத வல்கர் கமெண்ட்ஸ் எல்லாம் அடிச்சு முடிஞ்சவரை தன் பேரை கெடுத்துட்டு போறார்.. சக போட்டியாளர் டாப் கீர்ல மணிக்கு 120 கிமீ வேகத்துல காமெடி டிராக்ல போய்ட்டிருக்கறப்போ இவர் ரிவர்ஸ்ல 140 கிமீ வேகத்துல போனா விளங்குமா?


http://mimg.sulekha.com/sneha/images/stills/sneha-stills-0580.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. விவேக்கின் நண்பரான செல் முருகன் காமெடி தான் படத்தில் ரசிக்கக்கூடிய முக்கிய அம்சம்.. 16 வயதினிலே பட மயில்  ஸ்ரீதேவியை கரெக்ட் பண்ண ட்ரை பண்ண டாக்டரின் மகனாக வந்தவர் விவேக்கை பெண் என நினைத்து செய்யும் கூத்துகள் கல கல காமெடி..


2. சினேகா வை அதிக பட்ச கிளாமர் காட்ட வைத்ததற்கு ஒரு சபாஷ்


3. பல காட்சிகளில் கவர்ச்சியை, கிளாமரை அள்ளித்தெளித்தும் இந்தப்படத்துக்கு யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.








இயக்குநரிடம் சில கேள்விகள்

1. பாடல் காட்சிகளில் சுந்தர் சி ஏன் கேப்டனை இமிடேட் பண்றார்? நானே ராஜா நானே மந்திரி பட பாடல் ஸ்டெப்போல் ட்ரை பண்றாரு,, முடியல 


2. சிந்து துலானி ஸ்கிப்பிங்க் ஆடற மாதிரி சீன்ல கேமரா ஆங்கிளை டாப்ல வெச்சு கலக்காம பூமில படுத்துக்கிட்டே லோ ஷாட்ட்டா வைப்பாங்க.. ஜி கே டெவலப் ப்ளீஸ்.. ஒரு வேளை பூமிகா ரசிகரா?


3. விவேக் பாத்ரூமில் குளிக்கும்போது அன்பே என் அன்பே உன் விழி பார்க்க பாடல் வரிகளை ஓட விட்டு அவர் பண்ணும் சேஷ்டைகள் ஆபாசம்


4. கெண்டைக்கால் அளவு ஓடும் தண்ணீரில் மீன் பிடிக்கும் சினேகா எதுக்கு பாவாடையை தொடை வரை தூக்கி கட்டனும்?


5. மழை பெஞ்சுட்டு இருக்கு, ராத்திரி மணி 9.. அந்த நேரங்கெட்ட நேரத்துல சினேகா லூஸ் மாதிரி வில்லன் வீட்டுக்கு போய் “ உன் அண்ணனை கட்ட எனக்கு இஷ்டம் இல்லை”ன்னு சொல்லுறதுக்குப்போய் வில்லன் கிட்டே மாட்டிக்கறதா சீன் இருக்கு.. அந்த டயலாக்கை காலைல, அல்லது மத்தியானம் போய் சொல்லக்கூடாதா? 

6. தனியா வந்த சிட்டை ரேப் பண்ணாம கெக்கே பிக்கேக்கேன்னு கோட்டை விட்டுட்டு கையாலாகாத வில்லன் வேடிக்கைபார்க்கறான்


7. கிராமத்துல ஒவ்வொரு கொலையையும் மாட்டின் ஒரு கொம்பை வெச்சு வில்லன் அண்ட் கோ செஞ்சுட்டு பழியை மாட்டு மேல போட்டுடறாங்க.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரே ஒரு கொம்பால தான் ஒவ்வொரு கொலையிலும் குத்தப்பட்டிருக்குன்னு போலீஸ் கண்டு பிடிக்க மாட்டாங்களா? மாட்டுக்கு 2 கொம்புன்னு தெரியாதா?


http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Murattu-kalai/01.jpg


8. ஒரு சீன்ல விவேக் என் இதயம்.. மயங்கவே....” பாட்டுக்கு மூவ்மெண்ட் தர்றாரு.. ஆனா லிப் மூவ்மெண்ட் வேற பாட்டுக்கு.. ( ஐ திங்க் ஷூட்டிங்க் டைம்ல வேற பாட்டு போட்டுட்டு அப்புறம் பாட்டை மாத்தி இருக்கலாம்.. )


9. படம் முழுக்க மொழு மொழு கன்னத்தோட வர்ற ஹீரோ ஒரு பாடல் காட்சியில், 2 சீனில் மட்டும் சம்பந்தமே இல்லாம தேவதாஸ் கெட்டப்ல தாடியோட சோகமா வர்றாரே? சம்பள பாக்கியா?

10. அண்ணன், அண்ணி குஜாலா ரொமான்ஸ் பண்றப்போ அண்ணியோட லோ கட் சீனை தம்பிகள் ரசிக்கற மாதிரி ஷாட் எதுக்கு?


11.க்ளைமாக்ஸ்ல எதுக்கு இன்ஸ்பெக்டரா வர்ற தியாகு வில்லனோட திட்டத்தை வாலண்ட்ரியா ஹீரோ கிட்டே சொல்லி மாட்டிக்கறாரு?


12. மலையூர் மம்பட்டியான்ல வர்ற மாதிரி ஹீரோ ஏதோ ஒரு காட்டுக்குள்ளே போய் தலை மறைவா இருக்காரு.. கொலை கேஸ்ல போலீஸ் தேடுதுன்னு.. ஆனா கரெக்ட்டா சிந்து துலானி அந்த இடத்தை எப்படி கண்டு பிடிக்கறாரு?


13. படம் போட்டதுல இருந்து ஹீரோ அவர் வீட்லயே தான் இருக்காரு.. அப்போ எல்லாம் விட்டுட்டு ஹீரோ தலைமறைவான 14 வது ரீல்ல வில்லன் பெரிய இவரு மாதிரி பழி வாங்க அலையறாரே? ஏன்?


http://actresspadam.com/wp-content/uploads/2012/06/South-Tamil-Movie-Murattu-Kaalai-2012-Online-Picture-Moments.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்



1. வேட்டியை இறக்குங்கடா..  ஆளாளுக்கு மனசுக்குள்ள ஆம்பளை ரம்பான்னு நினப்பு..


2. இது ஹைபிரிட் ஆரஞ்ச்..

 அப்படின்னா?


 கொட்டை எடுத்தது, அப்படியே சாப்பிடலாம்


3. என்னடி? உங்க வீட்டு கிரைண்டர் இப்படி ஆடுது?


4. பாம்பு கடிச்ச மாதிரி டிராமா போட;லாம்.. முள்ளை எங்கே குத்த? காலை காட்டுடி

 கால் வேணாம்டி.. இடுப்புல குத்து.. அதான் ரொமான்ஸ் ஏரியா..


5. பாம்பு ஏன் இடுப்புல கொத்துச்சு..? சினிமால எல்லாம் ஆம்லெட் போடற ஏரியா. முட்டை இருக்கும்னு பார்க்க வந்து ஏமாந்து போயிருக்கும்.. பொட்டுன்னு போட்டுடுச்சு


6. இப்படி எல்லாம் கிளாமரா டிரஸ் பண்ணீட்டு வந்து நல்ல பாம்பை ஏன் கெட்ட பாம்பு ஆக்கறீங்க?


7.  பாம்பு உங்களை எங்கே கடிச்சுது?

 இதோ இங்கே.. மார்க் இருக்கு பாருங்க..

 ஆமா.. பெரிய மார்க்.. 100க்கு எவ்ளவ்?



8./ என் இடுப்புல வாயை வெச்சு உறிஞ்சுனாருங்க..


 வாயையா?


 பின்னே? ஸ்ட்ரா வெச்சா உறிஞ்சுவாங்க?


9. அடிப்பாவி.. தென் காசி டூ மதுரை என் பேரை டேமேஜ் பண்ணிட்டியே.. எவனைப்பார்த்தாலும் இடுப்புல வாயை வெச்சு உறிஞ்சுனியா?ன்னு கேட்கறான்


10.  என்னடா பசங்களா அடிச்சுக்கறீங்க?


 என் ஆளை இவன் கரெக்ட் பண்னப்பார்க்கிறான்


இந்த சின்ன வயசுல என்ன பேச்சு இது? யார்டா உங்க 2 பேர் ஆள்?

 நீ தான்.. ஹி ஹி


http://2.bp.blogspot.com/-CV8j74hnrHA/TeTpe0ff0yI/AAAAAAAAAu0/NJE4IvMq7zs/s640/Sneha+in+Amala+Oil+Add+%25281%2529.jpg


11. அவ பேரென்னா?

 பூவன்னா


என்னது?

 புவனாங்கறதை நீட்டி முழக்கி சொன்னேன்..



12. ஆஹா.. புவனா.. சின்னதா , அழகா இருக்கு

 என்னது?

 பேரைசொன்னேன்


13. அண்ணே.. நீங்க பெரிய ஆள்.. மோகினிப்பிசாசே பார்த்து பயப்படற அள்வு என்னத்தை காட்டுனீங்க?



14.  ஏண்டப்பா ஒரே வண்டில 3 பேர் ஏறி வர்றீங்களே.. வண்டி தாங்குமா?



15. டூ வீலர் வெச்சிருக்கற உங்களுக்கே இவ்ளவ் தெனாவெட்டுன்னா அஞ்சு வீல் வெச்சிருக்கற எனக்கு எவ்ளவ் தெனாவெட்டு இருக்கும்./.



4 வீல் தானே?

 ஸ்டெப்னியை சேர்த்து சொன்னேன்



16. டெயிலி வெய்யில்ல உங்க மேனி பட்டும் எப்படி இவ்ளவ் வெள்ளையா இருக்கீங்க?

 ம் டெயிலி ஷேவ் பண்ணுவேன்


என்னது?



17. முயல்னா காதை பிடிச்சு தூக்கனும்.. கோழின்னா கழுத்தை பிடிச்சு தூக்கனும்..

 டேய்.. யானையை எதை பிடிச்சுத்தூக்குவே?


18/ ஆம்பளை கிட்டே பேசனும்னா அரை செகண்ட்ல பேசிடுவேன்./ பொம்பளை கிட்டே பேச ஒரு நாள் ஆகும்.. பழக்கம் இல்லை பாருங்க ஹி ஹி


19.. என்னடா.. அவ 2 காலும் சமீரா ரெட்டி மாதிரி இருக்கு.. ஆனா முடி மட்டும் ஜி கே ரெட்டி மாதிரி இருக்கு?


20. ம்க்கும்..இவன் தவ்வி தவ்வி போறதுக்குள்ளே அங்கே ஃபர்ஸ்ட் நைட்டே முடிஞ்சுடும்



http://lh3.ggpht.com/_UtKy-iLm-ck/St4UjqKqBUI/AAAAAAAABjk/oRpKH1upCes/actress-sindhu-tolani-stills-more-14.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்



சி.பி கமெண்ட் -  சுந்தர் சி டைரக்‌ஷனை தொடர்வதே நல்லது.. என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக உணர்த்தும் படம்.. டி வி ல போட்டா இடைவேளை வரை பார்க்கலாம்..ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtH1bSnzj_MHLSTbGR-KgRqRqgmiRt2X3N77EoNzDJuIVFBqhdHv4fqW-L6w9IEsK-DtY9bARTUn8J9iwfU9nFKYslu4pJLuRtq2a0aSBfdYwxpUVc72Op5eOPwGE8lq9eMgS4LEEL_i4/s320/Sneha+pins+hope+on+Murattu+Kaalai.jpga


டிஸ்கி -

மறுபடியும் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/06/blog-post_5873.html
 

7 comments:

Senthil said...

Gud

Thanks

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

இன்னும் ஜனங்க சுந்தர் சி யை வைத்து ரிஸ்க் எடுக்குறாங்க....

Stumblednews said...

Your blog is cool. If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

Yoga.S. said...

முயல்னா காதுல புடிச்சுத் தூக்கணும்,கோழின்னா கழுத்தைப் புடிச்சுத் தூக்கணும்!டேய் யானைய எதைப் புடிச்சுத் தூக்குவே?///கிரேன் புடிச்சுத் தூக்குவேன்!!!

rajamelaiyur said...

பாவம் ரஜினியின் முரட்டுகாளை ...

sikkal.blogspot.com said...
This comment has been removed by the author.
sikkal.blogspot.com said...
This comment has been removed by the author.