Friday, June 28, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 28 6 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. அன்னக்கொடியும் கொடிவீரனும்..


16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தவர் பாரதிராஜா. அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், முதல்மரியாதை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனர் இமயமாக உயர்ந்தவர். 

சென்னை நகருக்குள்ளே முடங்கியிருந்த சினிமா ஷூட்டிங்கை கிராமத்து கதை களத்திற்‌கு கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. கிராமும், கிராமத்து மண்சார்ந்த மனிதர்களும் இவரது படத்தில் பெரும் பங்காக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது கனவுப்படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படக்கதையை கையில் எடுத்து, படத்தையும் முடித்துவிட்டார். இப்படம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

* அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பூஜையை தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், கிராமத்து ஆட்டம், பாட்டு கொண்டாட்டத்துடன், வீரப்ப அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படு அமர்க்களமாக ஆரம்பித்தார் பாரதிராஜா. மேலும் இந்தவிழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களை தனது கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

* ஆரம்பத்தில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் டைரக்டர் அமீர், இனியா, புதுமுகம் லக்ஷ்மண், கார்த்திகா ஆகியோர் நடிப்பதாக இருந்து, படத்திற்கான ஷூட்டும் நடந்தது. ஆனால் பின்னர் படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அமீர், இனி‌யா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

* அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. சுமார் 10 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவை ராதா ஆட்டிப்படைத்தார் என்றால் மிகையல்ல. அதேப்போல் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள கார்த்திகா, அம்மா ராதாவை காட்டிலும் சிறப்பாக நடித்துள்ளாராம். நிச்சயம் கார்த்திகாவும் தென்னிந்திய சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை பிடிப்பார் என்று பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்தளவுக்கு கார்த்திகா இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளாராம்.

* தன்னுடைய சினிமா கேரியரில் எத்தனையோ ஹீரோக்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, இந்தப்படத்திலும் சினிமாவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு இளைஞனை, ஒரு கல்லூரி மாணவனை, ஒரு கிரிக்கெட் வீரனை ஹீரோவாக்கி இருக்கிறார். அவர் லக்ஷ்மண். இவர் பாரதிராஜாவின் நண்பர் மகன் ஆவார்.

* பாரதிராஜா மகன் மனோஜ் ரொம்பநாளைக்கு பிறகு அன்னக்கொடி படத்தில் சடையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அப்படியே கிராமத்து இளைஞராகவே மாறியிருக்கிறார். இவரது நடிப்பும் பெரிதும் பேசப்படுமாம்.

* சினிமா வாசனையே இல்லாத மதுரை மண்ணின் மக்கள் அனைவரும் இத்திரைப்படத்தில் கதாபாத்திரமாகவே மாறியிருப்பது மிகச்சிறப்பு.

* இந்தப்படத்தின் கதைகளம் மதுரை என்பதால் இயக்குனர் பல நாட்கள் அலைந்து திரிந்து, இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத அழகிய கிராமம் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி உள்ளார். மேலும் படத்தின் ஒரு பகுதியை படமாக்குவதற்கென கலை இயக்குனர் மோகன் மகேந்திரன் அவர்களால் ஆண்டிப்பட்டி அருகே 20 கி.மீ தொலைவில் மலைஅடிவாரத்தில் பெரும் பொருட்ச்செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டது.

* வைரமுத்து, அறிவுமதி ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கங்கை அமரனும் இப்படத்திற்காக பாடல் எழுதியுள்ளார்.

* இதுவரை தனது படங்களுக்கு இளையராஜா, எ.ஆர்.ரஹ்மா‌ன் ஆகியோரை இசையமைக்க வைத்த பாரதிராஜா, தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாரை இப்படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கிறார்.

* படத்தில் வசனம் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்டத்தின் கருமாத்தூரை சேர்ந்த ரோஸ் முகிலன் என்பவரை இயக்குனர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

* தன்னுடைய படங்களுக்கு இதுவரை நிவாஸ், கண்ணன் ஆகி‌யோரை மட்டுமே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்த பாரதிராஜா முதன்முறையாக சாலை சகாதேவன் என்கிற புதிய ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

* கதாநாயகனும், கதாநாயகியும் ஆடு மேய்ப்பவர்களாக நடிப்பதால் 200 ஆடுகளும், 100 மாடுகளும் பிரத்தியேகமாக வாங்கப்பட்டு படமாக்கப்பட்டது.

* அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தில் காதலோடு யாரும் ‌எதிர்பார்க்க முடியாத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இயக்குனர் இமயம் சொல்லியிருப்பது இன்றைய சினிமாவில் புதுசாக இருக்கும்.

* படத்தின் பூஜையை போலவே படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக மதுரையில் நடத்தினார். இதில் இசைஞானி இளையராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களுடன் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பல திரை நட்சத்திரங்களையும் மதுரைக்கு வர வழைத்து அசத்தினார். 

படம் முழுக்க எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தை கூட்டம்தான்- கார்த்திகா பிரமிப்பு
Karthikas annakodiyum kodiveeranum experience
சில படங்களில் எங்குபார்த்தாலும் ஆளாக தெரிகிறது என்பார்கள். ஆனால் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திகா நாயகியாக நடித்துள்ள அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் எந்த காட்சியில் பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தையாகத்தான் தெரிகிறதாம். 
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் ஆடு இல்லாத காட்சியே இல்லை என்கிறார்கள். இதுபற்றி அப்படத்தின் நாயகி கார்த்திகாவைக்கேட்டால், உண்மைதான். அந்த படத்தில் நான் ஆடுமேய்க்கும் பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன். அதனால் இப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமானபோது, ஆட்டுடன் பழகியிருக்கிறாயா? என்றுதான் கேட்டார்கள். நானோ, ஆட்டுக்குட்டியை இதுவரை தொட்டுக்கூட பார்த்ததில்லை என்று சொன்னேன்.

அதையடுத்து, என்னை தேனிக்கு கூட்டிச்சென்று, சில ஆடுமேய்ச்சிகளிடம் சொல்லி, ஆடுகளை எப்படி மந்தையாக அழைத்து செல்வது என்பதை சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது எந்த மாதிரி ஆடுகளுக்கு புரியுற மாதிரி குரல் கொடுக்க வேண்டும் என்றும் சீட்டி அடித்து காட்டினார்கள். இப்படியாக நடிப்பு பயிற்சியை விட, ஆடு மேய்ப்பதற்காகத்தான் நிறைய பயிற்சி எடுத்தேன் என்று சொல்லும் கார்த்திகா, படத்தில் எனக்கு முதுகெழும்பு போன்ற கதாபாத்திரம் என்பதால், நிறைய சீன்களில் நான்தான் வருவேன. நான் வந்தால் ஆடுகளும் வந்தாக வேண்டும். அதைப்பார்த்துதான் எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தை கூட்டமாக தெரிவதாக சொல்கிறார்கள் என்று தெளிவுபடுத்துகிறார் கார்த்திகா.
ஈரோடு அபிராமி , ஸ்ரீ கிருஷ்ணா வில் ரிலீஸ்  

பட விமர்சனம்-

அன்னக்கொடி (யும் கொடிவீரனும் ) - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/06/blog-post_28.html


2. அம்பிகாபதி -நடிகர் தனுஷ் 'ராஞ்சனா' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வருகிறது. கதாநாயகியாக சோனம்கபூர் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.

அம்பிகாபதி அமராவதி போன்று உயிர்ப்பான காதல் கதையாக இதை எடுத்துள்ளனர். பனாரஸ் பகுதியில் துறுதுறுவென வெட்டியாக சுற்றித் திரியும் இளைஞன் தனுஷ். பெரிய படிப்பறிவு இல்லாதவர். அவருக்கும் பணக்காரப் பெண் சோனம் கபூருக்கும் சந்திப்பு நிகழ்கிறது. நட்பாக பழகுகிறார்கள். பின்னர் காதல் வயப்படுகின்றனர். பின்னர் சோனம்கபூர் உயர் படிப்புக்காக டெல்லி செல்கிறார். அங்கு தன்னுடன் படிக்கும் அபய் தியோலை சந்திக்கிறார்.

அபய்க்கு சோனம் கபூர் மேல் காதல் வருகிறது. தனுஷ் காதல் என்னவாகிறது என்பது மீதி கதை. இப்படம் குறித்து தனுஷ் கூறும் போது, அம்பிகாபதி சிறந்த கதை. இந்த படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சோனம் கபூர் கூறும் போது, அம்பிகாபதி நல்ல காதல்கதை என்றார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
 வி எஸ் பி , சண்டிகா , அன்னபூரணி என 3 தியேட்டர்களில் ரிலீஸ்
 
3. துள்ளி விளையாடு  -ப்ரியமுடன் படம் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்தவர் வின்சென்ட் செல்வா. யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர். த்ரில்லர் கதைகளை கையாள்வதில் தேர்ந்தவரான இவர் இப்போது கையிலெடுத்திருப்பது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையை. படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா. 
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் – வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர். இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரித்துள்ளார் . எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா இசை
  ஆர்பி ஸ்டூடியோஸ் வழங்கும் படம், ‘துள்ளி விளை யாடு’. புதுமுகங்கள் யுவராஜ், தீப்தி மற்றும் பிரகாஷ் ராஜ், ஜெயபிரகாஷ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். வின்சென்ட் செல்வா இயக்கி உள்ளார். இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.  படம் பற்றி வின்சென்ட் செல்வா கூறியதாவது: ஒரு சிங்கத்தை கலாய்க்கும் மூன்று எலிகளின் கதைதான் படம். இதோடு காதலும் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை காட்டியிருக்கிறோம்.

சிங்கமாக பிரகாஷ் ராஜும், எலிகளாக யுவராஜ், சென்ராயன், சூரியும் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹைலைட்டாக ராஜஸ்தான் பாலைவனத்தில் எடுத்த ஒட்டக சேஸிங் காட்சி அமைந்திருக்கிறது. ஒட்டகங்கள் இவ்வளவு வேகமாக ஓடும் என்பதை இதுவரை பார்த்ததில்லை. இந்த படத்தின் ஷூட்டிங்கில்தான் பார்த்து மிரண்டேன். படத்தின் பாடல்களை மும்பையில் வைத்து நடிகர் விஜய் வெளியிட்டார். பாடல்களையும் டிரைலரையும் பார்த்த அவர், சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார். அந்த பாராட்டு எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு கலகலப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஈரோடு  ராயலில் ரிலீஸ் 

4. BALUPU-





Ravi Teja is a perfect fit for mass stories which combine action and entertainment in proper proportions. He earned the title of Mass Maharaja by dishing out such movies successfully. His dialogue delivery and timing has immensely impressed masses. As a result he became c/o address for mass movies in Tollywood. But of late his movies have become routine and started to bomb at box office. Alerted by this, Raviteja is bringing Balupu with utmost caution. He has put utmost care in making Balupu as entertaining as possible to reclaim his success streak.



 It’s a ‘do or die’ situation for Raviteja now. Directed by Gopichand Malineni and starring two beauties Shruthi Hasan and Anjali, Balupu will decide the future course of Mass Maharaja Raviteja. Let’s find out what are the highlights of Balupu and whether it will give the much needed hit for Mass Maharaj.


*Gopichand Malineni designed Balupu as a mass entertainer. This is the second time Gopichand Malineni is directing Raviteja. Raviteja gave opportunity to Gopichand with Don Seenu. After making Don Seenu hit, Gopi bagged a flop with Venkatesh’s Bodyguard. With one hit and one flop to his credit, it has to be seen which way Gopichand Malineni will travel with Balupu.


*Entertainment factor plays a key role in making Raviteja’s movies success. More than action and songs, movies which had good entertaining episodes have become hit in Raviteja’s career. Keeping this in mind, it is said that comedy has been given utmost screen time in Balupu. Entertaining episodes between Brahmanandam, Shruthi Hasan and Raviteja are said to be the main strength of Balupu. The fate of the movie will be decided by hilarious comedy scenes involving these three actors.


*Thaman is a regular for Raviteja movies. Right from Kick, Anjaneyulu to Don Seenu and Balupu, Thaman has composed tunes for Raviteja regularly. Except Kick, all the other albums have been average. Couple of songs in Balupu have impressed youngsters. It has to be seen what magic he has created with re-recording. For that we have to wait till movie releases.



*Once again Brahmanandam is going to be the centre of attraction in a movie. Brahmi will appear as Crazy Mohan in Balupu. Scenes in which Raviteja tortures Brahmi will create uncontrollable laughter it seems. 


*Censor report has been positive for Balupu. Though controversy surrounded regarding derogatory remarks towards Brahmins, Balupu steered clear of it by removing that dialogue. It’s interesting whether Balupu contains more such dialogues.


*Irrespective of what Raviteja fans and audience are hoping for Balupu, industry people are wishing for its success. Because being a minimum guarantee hero, Raviteja keeps everyone busy by doing four five movies at a time, which gives livelihood for industry technicians and workers. If Raviteja movie runs, then it will be a festival for industry people.


Keep watching this space for quick and authentic updates and review of Balupu movie.











0 comments: