Thursday, January 31, 2013

எம் ஜி ஆர் VS கலைஞர் நட்பு - மு க ஸ்டாலின் பேட்டி

அ தி.மு.க-வில் தங்களுக்குப் பிடித்த நபர் யார்? மறைக்காமல் சொல்லுங்கள்?''
''எனது மிகுந்த மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஒரே ஒருவர் இருந்தார். அவரும் மறைந்துவிட்டார். அவர்தான் அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!''



ச.புவனேந்திரன், தேனி.


 '' 'தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறை யில் கட்சியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களால் கூற முடியுமா?''


''தி.மு.க. எப்போதும் ஒளிவு மறைவற்ற இயக்கம். அதன் வரவு - செலவுக் கணக்குகள் முறையாக வருமான வரித் துறைக்குத் தாக்கல் செய்யப்பட்டுவருவது மட்டுமல்லாமல்; தணிக்கைக் குழுவின் மூலம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு, பொதுக் குழுவில் வைக்கப்படுகிறது. இதற்கும் மேலதிகமான தகவல் உங்களுக்கு வேண்டுமாயின், நீங்கள் கழகத்தின் பொதுக் குழுவில் இடம்பெற வேண்டும்!''



எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


''தங்கள் மனைவி துர்கா கடவுளை வழிபடுவது அரசியலாக்கப்படுகிறதே?''

 ''ஆன்மிக ஈடுபாடு என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பொறுத்ததுதானே? அதனை அரசியல் ஆக்குவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஆகாதே. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அறிஞர்அண்ணா அவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவித்ததை ஏன் மறைக்க வேண்டும்?''


த.சத்தியநாராயணன், அயன்புரம்.


''உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள நினைக்கும் கேள்வி?''


 ''  'தலைவர் கலைஞர் அவர்க ளும், பொதுச் செயலாளர் பேராசிரி யர் அவர்களும், கழக முன்னணியின ரும், கழகச் செயல்வீரர்களும், கழக உறுப்பினர்களும், இளைஞர் அணி யினரும், மகளிரும், பொதுமக்களும் என் மீது பொழிந்துவரும் பாசத்துக்கும் அன்புக் கும் எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்?’ என்ற கேள்விதான்!''


இனியவதி சரவணன், கொட்டாரக்குடி.


''புரட்சித் தலைவர், கலைஞர் இருவரின் நட்பைப் பற்றிச் சொல்லுங்கள்?''


''என் வார்த்தைகளைவிட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே இதைப் பற்றிச் சொல்லிஇருக்கிறார்.


அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்...


'தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் 20 ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் நோய் பரவிக்கொண்டு இருந்த காரணத்தால், குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். நான் இருந்த வீட்டுக்கு அப்போது 12 ரூபாய் வாடகை. இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.


அப்போது அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால், இறுதியில் நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும் நான் கழகத்தின் பொருளாளராக வும் இருக்கும் அளவுக்கு அந்த ஈர்ப்பு வலிமை யானது. கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமை யும் புகழும் என்று யாராவது நினைத்தால், அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகள் எல்லாம் தேடி வந்து அமைவதற்கு முன்பே, பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருந்தவர் கலைஞர். நான் முதன்முதலாகப் பெற்ற பட்டம் புரட்சி நடிகர் என்பது. அந்தப் பட்டத்தை எனக்குத் தந்தவர் கலைஞர்’. கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு, சரித்திரத்தில் சான்றாவணமாக நின்று நிலைத்துவிட்ட நட்பு!''


கு.அரவிந்தராஜ், சேலம்-6.


''தி.மு.க. ஆட்சியைத் தோற்கடித்த மக்கள் மீது கோபமே இல்லையா?''


'' 'மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று மக்களாட்சித் தத்துவத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பிறகு, பெரும்பான்மை மக்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு, கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர, யார் மீதும் கோபம்கொள்வதோ, யாரிடமும் குறை காண்பதோ தேவை இல்லாதது. பெரும்பான்மை மக்களின் முடிவுக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, அதைக் களைய அயராது காரியமாற்ற வேண்டும்!''


மு.சந்தோஷ்குமார், திருவான்மியூர்.


''உங்களைக் கவர்ந்த பேச்சாளர்கள் யார் யார்?''


''தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் வீரமணி, அண்ணன் துரைமுருகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், திருச்சி என்.சிவா, ஆ.ராசா என என்னைக் கவர்ந்த பேச்சாளர்கள் பட்டியல் நீளமானது.''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.


''உங்கள் பிறந்த நாள் அன்று என்ன செய்வீர்கள்?''


''எனது பிறந்த நாளில் காலையில் நானும் எனது மனைவியும் எனது பெற்றோரிடம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வது வழக்கமான முதல் கடமை. அதனைத் தொடர்ந்து இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடுதல், கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்துக்களைப் பெறுவேன்.


அதன்பிறகு, அண்ணா சாலை மேம்பாலம் அருகேயுள்ள பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளியில் பயிலும் சிறுமலர் பள்ளிக்குக் குடும் பத்துடன் செல்வேன். அந்தக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகின்ற மனநிறைவான பணியை ஒவ் வொரு ஆண்டும் தவறாது செய்துவருகிறோம்.''


போஸ்டல் சந்தானம், முத்துப்பேட்டை.


''உங்களுக்குப் பிடித்த விளையாட்டு, விளையாட்டு வீரர் யார்?''


''பிடித்த விளையாட்டு - கிரிக்கெட்.

விளையாட்டு வீரர் - சச்சின் டெண்டுல்கர்.''

ஜி.கருப்பையா, பொள்ளாச்சி.

''பள்ளிப் பருவத் தோழர்கள் இன்றும் உங்களிடம் நட்பு பாராட்டுகிறார்களா?''


''பள்ளிப் பருவத்தில் என்னுடன் சிநேகம் கொண்ட 40-க்கும் மேற்பட்ட நண்பர்களை நான்கு மாதத்துக்கு முன்னர் எனது வீட்டுக்கு அழைத்து, உபசரித்து, கலந்துரையாடி மகிழ்ந்தேன்.


சிறந்த பேச்சாளர் சுகிசிவம், திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நடிகர் 'சிறை’ பிரசன்னா உட்பட மேலும் சில பெண் நண்பர் களும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இப்படியான சந்திப்புகள் போக கடிதங்கள், தொலைபேசி வாயிலாகவும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறேன்.''


மு.தியாகராஜன், ஆழ்வார் திருநகர்.


''நாளுக்கு நாள் இப்படி இலவசங்களை வாரி வழங்குவது நல்லதா?''


''இலவசங்கள் வழங்குவதில் தவறு இல்லை. 'பசி என்று வருபவனுக்கு உண்ணு வதற்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’


என்பதை நாங்களும் அறிவோம். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறோம். எனினும் 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ அல்லவா?பசித்த வனுக்கு உடனடியாக உணவளித்து, அவன் பசி ஆறியதற்குப் பிறகு வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வழியைக் கற்பித்துப் பயிற்சி அளிப்பதே தொலைநோக்கில் நன்மை அளிப்ப தாக இருக்கும். எல்லாரும் எல்லாமும் பெற இயலாத இந்தியா போன்ற ஒரு நாட்டில், இல்லா தோர்க்கு அவர்களிடம் இல்லாததை அவர் களாகவே பெற்று நுகரும் நிலை உருவாகிடும் வரை இலவசங்களை வழங்குவதில் தவறு இல்லை.''


சு.அருளாளன், ஆரணி.


''மேயர், அமைச்சர், துணை முதல்வர் ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நீங்கள். ஒரு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்?''


''மக்களுக்கான நிர்வாகமாக அது அமைய வேண்டும். எல்லா வகையிலும், எந்த நிலையிலும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பதே நல்ல நிர்வாகத்துக்கான அழகு. அத்தகைய நிர்வாக அமைப்புதான் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் உயிரோட்டம் உள்ள அமைப்பாகத் திகழும்.''


சு.இராமஜெயம், ஆற்காடு.


''தனிமையை விரும்பினால் நீங்கள்செல்லும் இடம் எது?''


''மாமல்லபுரம்!

ஒரு பக்கம் பல்லவர் காலத்துச் சிற்பங்கள்... இன்னொரு பக்கம் ஓயாமல் பாடிக்கொண்டு இருக்கும் அலைகள். தனிமையை நாடும் மனம் கலையோடும் அலையோடும் கலந்துவிடும்.''


ப.கணேஷ், சென்னை-8.


''தி.மு.க-வின் எதிர்காலம்?''


''சூரியன் மறையும். ஆனால், உதிக்கும். அதனை யாரும் தடுக்கவும் முடியாது... மறைக்கவும் முடியாது.


காலம் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைகொண்டு இருப்பது இல்லை. வசந்த காலம், வேனிற் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் எனப் பருவங்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இது தனிமனித வாழ்க்கைக் கும் ஓர் இயக்கத்துக்கும்கூடப் பொருந்தக் கூடியதே. தனி மனித வாழ்க்கையில் ஏற்ற இறக் கங்கள், ஓர் இயக்கத்தில் மேடு பள்ளங்கள் என்பதை இயல்பானது என்ற அளவிலேதான் பார்க்க வேண்டும். தி.மு.க-வின் எதிர்காலம் ஏற்றமானது என்பதைக் காலம் கட்டாயம் நிரூபிக்கும்!''


ஆ.மணி, உத்திரமேரூர்.


''ஜெயலலிதாவை நேருக்கு நேர் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படிச் சந்தித்திருந்தால், என்ன பேசிக்கொண்டீர்கள்?''


''இரண்டு முறை சந்தித்துள்ளேன்.


2.3.2002 அன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது கழகப் பொதுச் செயலா ளர் பேராசிரியருடன் நானும் கலந்துகொண்டேன். பதவியேற்றுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.


10.2.2005 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய 'மண்ணின் மைந்தன்’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 11 லட்சம், 'கண்ணம்மா’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 10 லட்சம்... ஆக மொத்தம் ரூபாய் 21 லட்சம் நிதியை சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக அப்போது வழங்கி னேன். என்னிடம் இருந்து காசோலை யைப் பெற்றுக்கொண்ட முதலமைச் சர் ஜெயலலிதா, 'அப்பா நலமாக இருக்கிறாரா?’ என்று கேட்டார். 'நலமாக உள்ளார்’ என்று கூறினேன். எங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை அவ்வளவுதான்!''


நன்றி - விகடன்



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


ிஸ்கி - 3 ிராவிடக்கட்சிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியா? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 3 http://www.adrasaka.com/2013/01/2016.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html


பாகம் 5 -நான் ஏன் ட்விட்டருக்கு வர்லை?  http://www.adrasaka.com/2013/01/blog-post_635.html 


தன்னிகரற்ற தானைத்தலைவியின் தன்னிலை விளக்கம்

வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை: ஜெயலலிதா 
 
 
 
Posted Date : 12:32 (31/01/2013)Last updated : 13:47 (31/01/2013)
சென்னை: வன்முறை 
வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.



 விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக  செய்தியாளர்கள் கூட்டத்தில் தற்போது விளக்கம் அளித்து பேசிய  ஜெயலலிதா, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பல்வேறு விஸ்வரூபம் தொட்பாக பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுக்கள், பல்வேறு விவாதங்கள், நடந்துகொண்டே இருக்கிறது. முறையாக புரிந்துகொள்ளாமல், நிலைமையை புரிந்துகொள்ளாமல். அதனால் இதுபற்றி விளக்க வேண்டி விரும்புகிறேன்

படம் தடை செய்யப்படக்கூடாது, திரையரங்குக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். உண்மையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது பற்றி புரிந்துகொள்வதில்லை. முதல் கடமை முதலமைச்சராக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி மக்கள் மத்தியில் அமைதி நிலைநாட்டுவது, தினசரி வாழ்க்கையை கடைபிடிக்க நடவடிக்கை எடுப்பது முக்கிய கடமை.

எப்படி சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது. காவல் துறையைக் கொண்டு இதை செய்கிறோம். போராட்டத்தை பொருட்படுத்தாமல், ஒருவேளை இந்த படத்தை நாங்கள் அனுமதித்தோம் என்றால், இந்த படம் 524 திரையரங்களில் வெளியிடுவதாக இருந்தது. ஏரளாமான முஸ்லிம் அமைப்புகள் 24 அமைப்புகள் மற்றும் இதுதவிர சில அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். மாநில உள்துறை அமைச்சரை சந்தித்து படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். இவர்கள் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு, பல்வேறு பேராட்டங்களை அறிவித்துள்ளன இந்த அமைப்புகள்.

இத்தனை திரையரங்குக்கு பாதுகாப்பு அளிப்பது சாத்தியமா? 1 லட்சத்து 30 ஆயிரம் 780 போலீசார் உள்ளனர். 21 ஆயிரம் காலியிடம் உள்ளது. 91,807 போலீசார்தான் உள்ளனர். இதுதவிர பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இந்த சிறப்பு பிரிவுகளைக் கழித்தால் 87, 226 போலீசார்தான் உள்ளனர். 7 கோடி 8 லட்சம் பேருக்கு இவ்வளவு போலீசார் உள்ளனர்- சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும்.  திரையரங்க பாதுகாப்புக்கு 31440 பேர் பாதுகாப்புக்கு தேவை

படம் வெளியானமல் பாதுகாப்புக்கு மட்டும் 50, 440 போலீசார் தேவைப்படுவார்கள். ஆனால் வெறும் 9 ஆயிரம் பேர்தான் உள்ளனர். எப்படி ஒரு மாநில அரசால் இப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். எங்களிடம் போதுமான காவல்துறை இல்லாதநிலையில் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்? சட்டம் ஒழுங்கை காப்பது என்றால் என்ன?

உளவுத் துறை பல இடங்களில் வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது? அரசு என்ன செய்யும்? அந்த வன்முறை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.


விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இப்படத்திற்கு 24 இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படம் வெளியிடப்பட்டால், வன்முறை வெடிக்கலாம் என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என உளவுத் துறை தகவல் அனுப்பி இருந்தது.

இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் படத்தை திரையிட அனுமதித்தால் அப்படம் திரையிடப்படும் 524 திரையரங்குகளிலும் 56,446 காவலர்கள் தேவை.அந்த அளவுக்கு போதுமான காவலர்கள் படை இல்லை.



கமல்ஹாசன் மீது  தனிப்பட்ட விரோதம் இல்லை.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அரசுக்கு உண்டு. இதில் அரசியல் பழிவாங்கும் எண்ணம் எதுவும் இல்லை. கமல்ஹாசன் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை.


இப்படம வெளியாகமல் போனால் தனது வீடு, சொத்தை இழக்க வேண்டியது வரும் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகு என்னைப் பார்க்க கமல் நேரம் கேட்டிருந்தார். வழக்கு தொடர்ந்தபிறகு பார்ப்பதில் என்ன இருக்கிறது...



கமலஹாசனுக்கு 58 வயதாகிறது..அவர் சில கணக்குகளை போட்டு,  100 கோடி ரூபாய் செலவில் தனது ரிஸ்க்கில் படம் எடுத்து, இழப்பை சந்தித்தால் அதற்கு அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும்?


மேலும் விஸ்வரூபம் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா தொலைக்காட்சிக்கு விற்காததாலும்,.ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு வேட்டி கட்டிய தமிழன் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கமலஹான கூறியதாலும்தான் அப்படத்திற்கு நான் தடை விதித்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.



ஜெயா தொலைக்காட்சிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும், இல்லை. அது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு ஆதரவாக செயலபடுகிறது அவ்வளவுதான்.அதேப்போன்று அரசியலில் நான் பல ஆண்டு காலம் உள்ளேன். அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்களே தவிர, கமலஹாசன் சொல்லி அல்ல என்பது எனக்கு தெரியும். என்று அவர் மேலும் கூறினார்.


திமுக தலைவர் கருணாநிதி என்ன பிரச்னை எழுந்தாலும் அதில் அரசியல் செய்யத்தான் பார்ப்பார்.


சுமூக தீர்வு:


சில பகுதிகளை அகற்றுவதாக கமல் உறுதி அளித்துள்ளதாக கூறிய்ளள்ளார் அதை முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கௌர்வதாக தெரிவித்துள்ளர். சுமூக தீர்வு ஏற்பட முஸ்லிம் தலைவர்கள், கமல் அமர்ந்து முடிவெத்தால் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காவல்துறை டிஜிபி ராமானுஜம்,அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

 விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான்: சோ 

சென்னை: விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான் என்று அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சோ அளித்த பேட்டியில்," தமிழக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒருதிரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்" என்று கூறியுள்ளார்.



'விஸ்வரூபம்' தடைக்கு அரசியல் காரணமில்லை: சந்திரஹாசன்  

'விஸ்வரூபம்' தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை என்று நடிகர்  கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரஹாசன் இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஸ்வரூபம்' படம் வெளியான எல்லா இடங்களிலும்  நன்றாக ஓடுகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றார்


விஸ்வரூபம்' தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை என்று நடிகர்  கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரஹாசன் இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஸ்வரூபம்' படம் வெளியான எல்லா இடங்களிலும்  நன்றாக ஓடுகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றார்.



தமிழ்நாட்டில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் இருப்பதாக  கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “விஸ்வரூபம் படம் தடை  செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே தமிழக  அரசு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார் அவர்.



நன்றி - விகடன்

கமல் அரசியலுக்கு வந்தா நீங்க தாங்க மாட்டீங்க - பாரதிராஜா சவால் பேட்டி @ விகடன்

கடந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு... கடுகடுவென அவர் கூறிய நேரடி பதில்கள் தணிக்கைக்குப் பிறகு இங்கே...


 '' 'விஸ்வரூபம்’ பட வெளியீடு தொடர்பாக கமலுக்கு...''


''வேண்டாம்யா... வேண்டாம்! ஆத்தாத்துப் போயிருக்கேன். நெஞ்சு கொதிக்குது. கமல் ஒரு மகா கலைஞன்யா. எங்கே அவனுக்காகக் குரல் கொடுத்தா, நம்மளுக்கு எதுவும் சிக்கல் வந்துருமோனு பயந்து நடுங்கி ஒதுங்கிக் கிடக்குது சினிமா உலகம். எங்கேயோ வடக்குல இருக்குற அமீர் கான் குரல் கொடுக்குறான்.


 ஏன்... அந்த உணர்வு இங்கே இருக்குற 'படைப்பாளி’களுக்கு வரலை? ஏன்யா... உங்க அத்தனை பேரோட உரிமைக்கும் சேர்த்துத்தானே ஒத்தை மனுஷனா கமல் கெடந்து போராடிக்கிட்டு இருக்கான். அறுபது வருஷத்துக்கு முன்னாடியே கடவுள் சிலையைப் பார்த்து 'இது கல்... பேசாது..!’னு கலைஞர் வசனத்தை 'பராசக்தி’யில் அனுமதிச்சு ரசிச்ச மண்ணுய்யா இது.



நான் எந்த அடையாளத்துக்குள்ளும் போக விரும்பலை. ஆனா,  கமல்ங்கிற கலைஞனுக்காக பாரதிராஜா என்கிற கலைஞன் குரல் கொடுக்கிறான். அவ்வளவுதான்!''


''ஆனால், 'கலைக்கு எல்லை இல்லை’ என்று சொல்லி சிறுபான்மையினர் உணர்வுகள் புண்பட அனுமதிக்க முடியுமா?''



''உண்மை என்னன்னு ஊர் உலகம் முழுசா புரிஞ்சுக்காமலே, 'புண்படுத்திட்டாங்க’னு சொல்றது நியாயமா? 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் க்ளைமாக்ஸில் பூணூலையும் சிலுவையையும் கார்த்திக், ராதா அறுத்து எறிவாங்க. அந்தக் காட்சி இந்து, கிறிஸ்துவர்களை எந்த வகையிலாவது புண்படுத்தியதா? 'வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கிட்ட ஒரு சின்னப் பையன், 'நான் கரையேறிட்டேன். 



நீங்க இன்னும் ஏறலையா?’னு கேட்பான். அந்தக் காட்சியைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட சாதியினர் புண்பட்டாங்களா?  ஒரே வார்த்தை - வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு களங்களில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும். அது எந்த இடத்தில், எந்தச் சூழலில் ஒலிக்குதுனு பார்க்கணும் இல்லையா?



சினிமா ஒரு அபூர்வ ஊடகம். அதில் படைப்பின் நேர்த்தியைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு, 'இது நொள்ளை... அது நொட்டை’னு வம்படியா குத்தம் சொல்லாதீங்க.''  



''இது தொடர்பா கமல்ஹாசன்கிட்ட நீங்க எதுவும் பேசுனீங்களா? இந்த விவகாரத்தில் எதுவும் அரசியல் பின்னணி இருக்கா?''



''அவன்கிட்ட பேசலை. அவன் மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, இந்த விஷயத்தை உன்னிப்பா கவனிக்கிறப்போ எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. பாக்யராஜ் கட்சி ஆரம்பிச்சப்போ, டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பிச்சப்போ, விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்போ எல்லாம் நான்தான் முதல் ஆளா அவங்களைத் திட்டித் தீர்த்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா, அவங்க மூணு பேரும் ஏதோ ஒரு விஷயத்தில் பலமா காயம்பட்டு, மனசு நொந்த பிறகே, அரசியலுக்கு வந்திருக்காங்க. இப்போ அந்த அரசியல் பாதையில் கமலையும் இறக்கிவிட்றாதீங்க.



கமல் மத்தவங்க மாதிரி இல்லை. எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதுக்கான முழுத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கிட்டுதான் இறங்குவான். அப்புறம் அவன் அரசியலை உங்க யாராலும் தாங்க முடியாது.''




''தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய சினிமா கலைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால், இப்போது டெசோ மாநாடு, கண்டனத் தீர்மானம்னு அதே இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. போராடுதே?''



''நான் எல்லாருக்கும் பொதுவானவன். அந்த வகையில்தான் அப்போது ஆட்சியில் இருந்த அய்யாவைப் பார்த்தேன். இப்போ ஆட்சி செய்யும் அம்மாவையும் பார்க்கிறேன். கல்யாண வீட்டுக்குப் போனா சிரிக்கணும்... இழவு வீட்டுக்குப் போனா அழணும். அதுதான் இயற்கை நியதி. அதைத்தான் நான் செஞ்சுட்டு இருக்கேன்!''



விஸ்வரூபம்





நன்றி - விகடன்

விஜய் + அஜித் + நித்தியானந்தா = ? சினிமா புதிர்

1. டாக்டர்,ரோஜா அல்லது ரோஜா இதழ் எதுவுமே என்னை கவருவதில்லை,இது எதனால?  



ஒரு வேளை ஆர் கே செல்வமணி பக்கத்து வீடுன்னு பயமோ?




--------------


2. ட்ரெய்லரில் அடக்கி வாசித்து இருந்தால் கமல் இத்தனை பிரச்சனைகளை சந்திச்சிருக்கத்தேவை இல்லை # நீதி - பட மேக்கிங்கை விட ட்ரெய்லர் முக்கியம்



-------------------------


3. சார், ஹீரோயினை க்ளைமாக்ஸ் சீன்ல தான் டச் பண்றீங்களாமே? ஏன்? 




கமல் - உச்சத்தில் ஏதும் மிச்சம் வெச்ச குறை இருக்கக்கூடாதுன்னுதான்



-------------------


4. கமல் ரசிகையை லவ் பண்ணுனா நிறைய யூஸ் உண்டு , ஆனா தனுஷ் ரசிகையை லவ் பண்ணா சைக்கோ ஆக்காம விட மாட்டாங்க # சும்மா 



---------------------


5. டாடி, எனக்கு கத்திரிப்பூ கலர்ல சேலையே இல்லை.



 முதல்ல உன் நெட் கனெக்‌ஷனுக்கு கத்திரி போடனும்



----------------------


6. டியர், நான் உங்க மேல பைத்தியமா இருக்கேன். 



ம், நானும் # MAD FOR EACH OTHER



-----------------------


7. காதலிப்பது எப்படி? என 18 புக்கும் படிச்சேன், பைத்தியம் ஆனேன் # பதினெண் கீழ்(ப்பாக்க)க்கணக்கு நூல் போல 



-----------------------


8. படத்தை விற்றுவிட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை- தமிழக அரசு அதிரடி வாதம் #படத்தை வாங்குனது அரசா?



----------------------------



9. ஜெ ( மனசுக்குள் ) - ஹூம், நமக்கும் கோர்ட்டுக்கும் ராசியே இல்லை போல




-----------------------



10. இன்னும் எனக்கு காதலிக்கிற வயசே வரவில்லை- அமலாபால் # நல்ல வேளை, இன்னும் வயசுக்கே வர்லைனு சொல்லலை





-------------------------



11. கமல் ரசிகர்கள் மட்டுமல்ல நல்ல சினிமா ரசிகர்கள் மனதிலும் இப்போ ஓடும் பாட்டு - அய்யய்யோ ஆனந்தமே .மலர்ந்ததம்மா கமல் முகமே



-----------



12. விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கை!# அப்படிப்போடு அருவாளை.தேவர் மகனா கொக்கா?




----------------------


13. ஜட்ஜ் - நல்லவேளை நான் கமல் ரசிகன் கற மேட்டர் யாருக்கும் தெரியல



--------------------------



14. பெண்களுக்கு பேன்கள் தொல்லை.ஆண்களுக்கு பெண்கள் தொல்லை.



----------------------

15. ஜட்ஜ் - மொத்தமா உனக்கு எத்தனை சம்சாரம் ? 
எசமான்.மொத்தமா.1 ஒல்லியா 2 ஆக மொத்தம் 3
------------------------
16. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா
-----------------------------
17. ஜட்ஜ் - பிரச்சனையை பேசித்தீர்க்க முடியாதா ?
,யுவர் ஆனர்.பிரச்சனையே என் சம்சாரம் என் கிட்டே பேசமாட்டேங்கறா அப்டினுதான் 
-----------------------------
18. ரிசப்ஷனிஸ்ட் - 20 நிமிஷமா பேப்பர் படிச்சுட்டு இருக்கீங்க? 
யாரைப்பார்க்கனும்? உங்களைத்தான் ஸைட்டிங்.பேப்பர் ஒரு சாக்கு 
-----------------------------
19. மேடமை பார்க்கனும். ரிசப்ஷனிஸ்ட் - 
வெயிட் ப்ளீஸ். 
என் வெயிட் 78,உங்க வெயிட் 46 இருக்கும் 
-------------------------
20./ கமல் - கனம் கோர்ட்டார் அவர்களே! படம் பார்த்தாச்சா?
 ஜட்ஜ் - சத்யராஜ் படத்துலயே செம மொக்கை படம் அதுதான்
-------------------------
21. சின்னத்தம்பி பிரபு - எனக்கு தாலின்னா என்னன்னே தெரியாது.என் கிட்டே வந்து தாலிபான் னா யாருன்னு கேட்கறாங்க
---------------------
22. உடன்பிறப்பே! தம்பி கமல்.எனக்கு முஸ்லீம்கள் ஓட்டும் வேண்டும்.உன் ரசிகர்கள் ஆதரவும் வேண்டும்.அதுதான் இருதலைக்கொள்ளி எறும்பாய்த்தவிக்கிறேன்
-------------------------
23. ரஜினி -(மனசுக்குள்) = நல்ல வேளை.பாட்ஷா இப்போ வர்லை.நம்மை பாதுஷா ஆக்கி இருப்பாங்க
-------------------------------
24.  முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிரான வசனங்கள் வைத்த புத்திசாலித்தன டைட்டில் படங்கள் = தாயகம் , ஐ லவ் இண்டியா ,ஜெய் ஹிந்த்
--------------------
25. கமல் (மனசுக்குள் ) - அரசியல் எனக்கு தெரியாது.அப்டியே நான் மேடைல பேசுனா யாருக்கும் புரியாது.என்னை தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகாதீங்க
----------------------------
26. புரட்சித்தலைவி அவர்களுக்கு வணக்கம். கோச்சடையான் க்கு இதே போல் தடை போட திராணி இருக்கா? # சும்மா
-----------------------
27. சட்டம் தன் கடமையைச்செய்தால் மகிழ்ச்சி! மடமையை செய்தால் ஆதரவு அமைதிப்புரட்சி # விஸ்வரூபம் தீர்ப்பு
-------------------
28. பேஷன் டிசைனிங் படிக்கிறேன்.உங்களுக்கு அதுல ஆர்வம் உண்டா? பேஷன் டி வி வேனா பார்ப்பேன் # பஸ் கடலை்
------------------------
29. உலகையே சுற்றி வந்தேன்.ஆனாலும் இளைக்க முடியவில்லை. 2 நாளாக உன்னையே சுற்றிவந்தேன்.கிரி வலம் இன்னும் முடியவில்லை.சுற்றளவு ஜாஸ்தி
---------------------
30. வெற்றி நடை போடுகிறது"= விஜய் ( வெற்றி) அஜித் ( நடை) நித்தி ( விளக்கனுமா?)
---------------------------

Wednesday, January 30, 2013

ஜெ VS கமல் - மோதல் - உண்மையான காரணம் என்ன?ஜு வி யின் அலசல்

விஸ்வரூப அரசியல்!

சேட்டிலைட் நிழல் யுத்தம்... சென்சார் சண்டை... கோலிவுட் மோதல்
 
'யார் என்று புரிகிறதா
 இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்

ஞாபகம் வருகிறதா’ - 'விஸ்வரூபம்’ படத்தில் வரும் பாடல் வரிகள் இவை. தடைகளைத் தாண்டி கமல் எப்படி வெல்லப்போகிறார் என்பதை தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. விஸ்வரூப விவ காரத்தில் திரைக்குப் பின்னால் நடக்கும் சில விஷ யங்கள் இங்கே..


பிரச்னைக்குக் காரணம், தி.மு.க. நெருக்கமா?


''சென்சார் போர்டில் அசன் முகம்மது ஜின்னா என்ற முஸ்லிம் ஒருவரே படத்தைப் பார்த்து ஓகே செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது படத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கமல் தரப்பில் கேட்கிறார்கள். இந்த ஜின்னா யார் தெரியுமா? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா, ''முஸ்லிம்களுக்கு எதிரானகாட்சிகள் 'விஸ்வரூபம்’ படத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டோம். உடனே, கமல் சார்பில் என்னிடம் பேசியவர் ஜின்னாதான். 'படத்தின் டிரைலரைப் பார்த்து விட்டு எதிர்க்க வேண்டாம். கமல் பேசத் தயாராக இருக்கிறார்’ என்றார். படத்தை சென்சார் செய்வதோடு ஜின்னாவின் வேலை முடிந்து விட் டது. அவர் எதற்காக கமலுக்கு ஆதரவாகப் பேச வேண்டும்? அப்படிப்பட்டவர் எப்படி படத்தை சென்சார் செய்திருப்பார்?'' என்கிறார்.


தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''படத்தின் சேலம் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். சென்சார் போர்டில் தி.மு.க-வைச் சேர்ந்த ஜின்னா, ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியோடு கமல் மேடை ஏறியது, இவற்றை எல்லாம் ஆளும் கட்சி ரசிக்கவில்லை. அதன்பிறகுதான், கமலுக்குப் பிரச்னைகளும் ஆரம் பம் ஆனது'' என்கிறார்கள்.



ஜின்னா என்ன சொல்கிறார்? ''எந்த மதத்தின் உணர்வும் புண்படுத்தப்படுவதை தணிக்கைத் துறை விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை. வழி காட்டும் முறைகளின்​படிதான் தணிக்கை நடக்கிறது. சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகை யிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்த​தாகவோ காட்சிகள் இருப்பின், அவை நீக்கப்படுகின்றன. ஒரு படத்துக்கான தணிக்கை முறைகளில் அதில் பங்கு பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது. நான் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை, இஸ்லாத்துக்கு எதிராக மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் எதிரான தவறான உள்நோக்கம் கொண்ட சித்திரிப்புகளை பலமாகவே எதிர்த்து இருக்கிறேன்'' என்கிறார்.  


சேட்டிலைட் நிழல் யுத்தம்!


'விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு  டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று  டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. 



கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம். இந்த நடவடிக்கை அந்த டி.வி. தரப்பை கொந்தளிக்க வைத்து விட்டதாம். ''சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, 'விஸ்வரூபம்’ படத்துக்கு எழுந்த தடை'' என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார்.



'விஸ்வரூபம்’ பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனதும் நீதிபதி வெங்கடராமன் படத்தைப் பார்க்க முடிவு செய்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் 'விஸ்வரூபம்’ ஸ்பெஷலாகத் திரையிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் நீதிபதிகளுடன் படம் பார்த்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகளுடன் கமலைப் பேசச் சொன்னது நீதிமன்றம். அநேகமாக, இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கும்.


''நாங்கள் தேசத் துரோகிகளா?''


'விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து கமல் வெளியிட்ட அறிக்கையில், ''நியாயமான தேசப்பற்றுமிக்க முஸ்லிம் யாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் பெருமைப்படுவார்கள்'' என்று சொல்லி இருக்கிறார். இதுவும் முஸ்லிம் கூட்டமைப்பினரை கொதிக்க வைத்திருக்கிறது. ''சிறு குழு எனச் சொல்லி எங்களை தேசப்பற்று இல்லாதவர்களைப்போல் சித்திரித்து இருக்கிறார். கூடங்குளம் தொடங்கி தர்மபுரி கலவரம், எல் லையில் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் வரை குரல் கொடுக்கும் நாங்கள் தேசத் துரோகிகளா?'' என கேள்வி எழுப்பும் அவர்கள், ''படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படை தாலிபான்களை சுடும் காட்சி வரும்.



 அதில் அப்பாவியான பெண் ஒருவர் பலியாவார். இதற்காக அமெரிக்க வீரர்கள் பரிதாபப்படுவார்கள். தாலிபான்கள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தப்பி ஓடும் காட்சியில் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடுவார்கள். அப்போது ஒரு தாலிபான், 'குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு தப்பிச் செல்லலாம்’ என்பார். அதற்கு இன்னொரு தாலிபான், 'அமெரிக்கர்கள் பெண்களை குழந்தைகளை கொல்ல மாட்டார்கள்’ என டயலாக் பேசுவார். இப்படி படம் முழுவதும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல காட்சிகளை அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றனர்.


சினிமா மோதல்!
கமலுக்கு ஆதரவாக திரையுலகத்தினரும்அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர். ரஜினி, பாரதிராஜா, பார்த்திபன், அஜித் ஆகியோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ம.க-வும் 'விஸ்வரூபம்’ படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் அமீர் ''யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவிக்கலாம்'' என்று சொல்லி இருப்பதை கோலிவுட் ரசிக்கவில்லை.



'கமலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு திரையுலகம் மௌனமாக இருப்பது ஏன்?’ என்று பாரதிராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு இன்னொரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. ''ஈழத் தமிழர்களின் வலியைச் சொல்லும் 'காற்றுக் கென்ன வேலி’ படத்துக்கும் இதேபோல் தடை வந்த போது அந்தப் படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜும் தயாரிப்பாளர் வெள்ளையனும் மட் டுமே போராடினர். அப்போது, இந்த பாரதிராஜா எல்லாம் எங்கே போனார். மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது அநியாயம்'' என்று குமுறுகிறது கோலிவுட்டின் ஒரு பிரிவு.


''இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!''


கமல் ரசிகர்களும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப் பவர்களும் சொல்லும் வாதம் இதுதான்...


''நடப்பு விஷயத்தை படமாக எடுக்கும்போது தாலிபான் தீவிரவாதிகளை வேறு மதத்தின் அடையாளமாக எப்படிக் காட்ட முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரத்தை இங்கே இருக்கிற முஸ்லிம்கள் தங்களோடு ஏன் தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான் தீவிரவாதம் பற்றி எத்தனையோ ஆங் கிலப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தக் காட்சிகள் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் இந்தப் படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. 




படத்தை தடை செய்வதைவிட, அந்தப் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்பது அதைவிட பெரிய தண்டனைதான். அந்த வழியில்தான்  முஸ்லிம்கள் படத்தை எதிர்த்து இருக்க வேண்டுமே தவிர, தடை செய்யச் சொல்வது சரி அல்ல. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஆங்கில அரசு பறித்ததால்தான், சுதந்திரப் போராட்டமே நடந்தது. அப்படிப்பட்ட தேசத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போர்க்​கொடி தூக்குவது ஜனநாயகம் அல்ல'' என்கிறார்கள்.



நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடக்கும் விஷயங்​கள் என்ன அதிர்வலைகளை உண்டாக்கப்​போகிறதோ?


- ஜூ.வி. டீம்





மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன்: கமலஹாசன் குமுறல் 
 
 
Posted Date : 11:45 (30/01/2013)Last updated : 18:08 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று படமெடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகர் கமலஹாசன்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தால், கடன் கொடுத்தவர் வசம் தமது சொத்துக்கள் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கமல்,  " இந்த படத்திற்காக நான் மிகுந்த பொருட் செலவு செய்துள்ளேன். நான் நின்று கொண்டிருக்கும் இந்த வீடு உட்பட என்னுடைய அனைத்து சொத்துக்களையும் இந்த படத்திற்காக அடமானம் வைத்திருக்கிறேன்.
படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகப் போக நான் நிற்கும் இந்த கட்டடம் கூட எனக்கு சொந்தமில்லாமல் போகும். அநேகமாக இதுவே கூட நான் இங்கிருந்து அளிக்கும் கடைசி பேட்டியாக அமையலாம்.

நாட்டின் ஒற்றுமையா இல்லை என்னுடைய சொத்தா என்ற கேள்வி வரும் போது, நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நான் கருதுகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக சொத்துக்களை இழக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமல்ல. நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.


எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டதாக கருதுகிறேன்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.  இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.


எனது திரைப்படத்திற்கு தடை, தடைக்குதடை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான் தமிழகத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருக்கிறேன். மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனாமல் வேற மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன். தமிழகம் முதல் காஷ்மீர் வரை வேறு மதச்சார்பற்ற மாநிலம் இல்லை என்றால் மதச்சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன்.


விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான். எனக்கு மதம், அரசியல் சார்பு இல்லை. ஆனால் என் திறமை என்னுடன் இருக்கும்.


விஸ்வரூபம் படம் நடக்கும் களம் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இது இஸ்லாமியர்களை கேலி செய்யும் படமல்ல. எனக்கு மதம் இல்லை. மனிதம்தான் உண்டு" என்றார்.

விஸ்வரூபம்: குரான் காட்சியை நீக்க கமல் சம்மதம் 
 
 
 
Posted Date : 15:32 (30/01/2013)Last updated : 16:13 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தில் குரான் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க நடிகர் கமலஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம்  செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம்  காரணமாக இருக்க விரும்பவில்லை என்றார்.

விஸ்வரூபம் பட தடை விவகாரத்திற்கு பிறகு கமல் இன்று காலை பேட்டி அளித்தார்.  அவருடைய பேட்டி தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. கமலை  அடுத்தடுத்து வி.ஐ.பி.கள் சந்தித்து வருகின்றன.  காங்கிரஸ் எம்.பி. ஆரூண், தேசிய லீக்  கட்சி தலைவர் பஷீர் ஆகியோர் கமலை சந்தித்தார்.


 பின்னர் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது  'விஸ்வரூபம் படத்தில் குரான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் தொடர்பான சில காட்சிகளை  நீக்க முடிவெடுத்துள்ளதாகவும்,  'ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  22 முஸ்லிம் கட்சிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு   நிர்வாகிகள் யாரும் கமலை சந்திக்காத நிலையில் ஆருணும் பஷீரும்  சந்தித்திருக்கிறார்கள்.

இதுபற்றி கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்  ரீபாயி ''படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற எங்கள் கோரிகையில் உறுதியாக  இருக்கிறோம். தமிழக அரசின் முடிவை ஆதரிக்கிறோம். அரசு மேல் முறையீடு  செய்திருக்கிறது. அதனை வரவேற்கிறோம். ஆருணும், பஷீரும் கமலை பார்த்ததற்கும்  எங்கள் கூட்டமைப்புக்கும்  எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

ஆருண் பேசும் போது, காட்சிகள் நீக்கப்படும் என்கிற கமலின் முடிவை கூட்டமைப்பிடம்  தெரிவித்து அவர்களின் ஒப்புதலை பெறுவோம்" என்றார்.



விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை; உச்ச நீதிமன்றத்தை நாட கமல் முடிவு! 
 
 
Posted Date : 15:53 (30/01/2013)Last updated : 16:48 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்துள்ளார்.


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு பிறப்பித்த தடையை நீதிபதி வெங்கடராமன் நேற்றிரவு நிறுத்தி வைத்ததார். 

இதனால் இன்று படம் வெளியாகும் என்கிற சுழ்நிலையில் விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல் முறையீடு செய்தது. அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், நீதிமன்றம் தொடங்கியதும்  முதல் வழக்காக ப‌திவு செய்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி

அருணா ஜெகதீஷன் அடங்கிய பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கை விசாரிப்பதாகக் கூறியுது.

இதன்படி வழக்கு விசாரணைக்கு வந்ததும் தமிழக அரசின் கோரிகையை ஏற்று தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது.வருகிற திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.


இதனால் படம் வெளியாவது மேலும் தாமதம் ஆகியிருக்கிறது
இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து கமலஹான உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கமலஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்! 
 
 
Posted Date : 12:26 (30/01/2013)Last updated : 12:27 (30/01/2013)
சென்னை: நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டபோதிலும், காவல்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்  இன்று காலை திரையிடப்பட்ட விஸ்வரூபம், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தமிழகத்தில்  விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

விஸ்வரூபம் திரைப் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நேற்று சென்னை  உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று பல இடங்களில்  விஸ்வரூபம் காலையிலேயே திரையிடப்பட்டது. ஆனால், படம் ஓடத் தொடங்கிய சில  நிமிடங்களில் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்  படத்தை நிறுத்த சொல்லி தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும்  அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதால்,தியேட்டர் உரிமையாளர்கள்  படத்தை நிறுத்தினர்.

தூத்துக்குடி, கோவை, ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் பத்து நிமிடத்திலேயே  விஸ்வரூபம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள்  சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின்  பல இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் திரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், சென்னை தேவி தியேட்டர் எதிரில்  வைக்கப்படிருந்த விஸ்வரூபம் பேனரை தீ வைத்து எரித்தனர்.

கோவையில் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  விஸ்வரூபம் திரையிட இருந்த தியேட்டர்களில் வீச பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற  கோணத்தில்; காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நன்றி - விகடன்


Kamal hasan's emotional speech - Ananda Vikatan 

 

 

 மக்கள் கருத்து



1.இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....ஜெயா செய்துள்ளது அப்பட்டமான மிரட்டல் வேலை. ஆனால், அதே சமயம் பாட்சா, ரஜினி .... விஸ்வரூபம், கமல் ........வாய்ஸ் வரும் அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று கணக்கு போட வேண்டாம். ஏற்கனவே, இந்த மாதிரி வாய்ஸ் கொடுக்கப் போய்தான் தி.மு.க. திரும்ப ஆட்சிக்கு வந்து.........டில்லி வரைக்கும் கொடி கட்டி பறந்து, லட்சம் கோடிகளில் ஊழல் என்று புதிய பரிணாமத்தை அரசியல் வானில் புகுத்தினர்.........ஜெயா செய்த தவறுக்கு, இந்த லட்சம் கோடிகளில் புரளும் கேடிகளை திரும்பவும் வாழ வைக்க வேண்டாம். தவிர, கமல் என்ற கலைங்கனை பிடிக்கும் தமிழக மக்களுக்கு, கமல் என்ற தனிப்பட்ட மனிதனை, அவரின் குழப்பத்தனமான சிந்தனைகளை அறவே பிடிக்காது.

 

2. இந்த தீர்ப்பு விஸ்வரூபத்திற்கு கிடைத்த வெற்றி, கமலஹாசன் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த தோல்வி.

 

 3.உண்மையிலேயே ஜாதி மதம் மொழி என்று எதையாவது இழிவு படுத்தினால் தடை செய்யலாம் அமெரிக்கா விற்கு கமல் வக்காலத்து வாங்கினால் நம்ம ஊரு பாயுக்கு ஏன் வலிக்குது?

 

4. ஜெஜெ இந்த விஸ்வரூபம் படத்தால் தமிழ் சினிமாவை பகைத்துக்கொண்டார். தமிழ் இனிமாவை பகைதவர்களின் கதி ... கஸ்டம் தான். ஜெஜெவின் துவேசம் இதில் தெறிகிரது.இதுவே இவருக்கு தோல்வியை தரும். 

 

 

5. உயர்நீதிமன்றம் தேவையில்லாத தாமதத்துக்கு பிறகு தடையை நீக்கி இருக்கிறது. முதலில் தணிக்கைக்குழு சான்று வழங்கிய படத்தை ஏன் நீதிபதி பார்க்க வேண்டும் என்பதே புரியவில்லை. போகட்டும்.

முஸ்லிம்கள் மனம் புண்படுகிறது என போராடும் இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளா? ஏன் அனைத்து மசூதிக்கூட்டங்களிலும் இவர்களைப் போல யாரும் முடிவுகள் அறிவிக்கவில்லை? இவர்கள் மனம் எதனால் புண்பட்டது என்பதை படம் வெளியிட்ட பின் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து அதற்கு தடை வாங்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு மதத்தை அரசியலோடு கலந்து செயல்படுவது ஏன்?

எதிர்ப்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? "பேர்ள்" என்ற பத்திரிகை நிருபரை கட்டிவைத்து குரான் வாசகம் படிக்கும்போதே கழுத்தை அறுத்து அதை வீடியோ எடுத்து காட்டி தங்கள் வீரத்தை ஒளிபரப்பியது உண்மைதானே. அமெரிக்க இரட்டை கோபுரத்தை தகர்த்து 4000 பேரை கொலை செய்யும் முன் குரான் ஓதிவிட்டு சென்றது உண்மைதானே. பம்பாயில் வந்து இறங்கி துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவரை கொன்றவர்கள் குரானை ஓதியபின் தானே அதை செய்தார்கள்? அவர்களை கொடூரர்களாக காட்டினால் இங்கே உள்ளவர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள், கொதிக்கிறார்கள்? இவர்களும் அவர்களோடு தொடர்பு உடையவர்களா?

பல டி.வி.சேனல்களில் விலை கொடுத்து வாங்கி மதப்பிரச்சாரம் செய்யும் இவர்கள் அந்த நேரங்களில் ஒரு முறையாவது தாலிபான் செயல்பாடுகள் தவறானவை என சொல்லி இருப்பார்களா? எங்கோ இருந்த ஒரு பாழ்மண்டபத்தை இடித்ததற்காக அது இருக்கும் இடம் கூட தெரியாத இவர்கள் நாடு முழுதும் வன்முறையில் இறங்கவில்லையா? இவை எதையேனும் இவர்கள் கண்டித்ததுண்டா?


மொத்தத்தில் தங்களுக்குள்ள 15 சதவீத ஓட்டு வங்கியை வைத்து இந்திய அரசையே பணியவைக்க முடியும் என நம்புவதாலேயே இவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இதில் "வெளியிட்டால் விபரீதமாகும்" என அரசுக்கே எச்சரிக்கை வேறு. வன்முறையை கையாள வக்கில்லாத ஒரு அரசு இவர்களுக்கு ஆதரவு. காரணம் பண வெறி.

முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும் எனவும் கமல்ஹாசன் படத்தை வாங்கிய மற்றையோர் நஷ்டமடைய வேண்டும் எனவும் கணக்கு போடும் ஜெயலலிதா தனக்கு இந்து வோட்டுக்கள் கணிசமாக குறைந்தால் என்ன நடக்கும் என சீக்கிரமே தெரிந்துகொள்வார். 

 

 6.காற்றில்லாமல் புகையாது. முஸ்லீம தப்ப சித்தரிக்கிக்கராங்க அப்படின்ர காரனாத்துக்காக இவ்வளவு முஸ்லீம் பிரமுகர்கள் போராட்டம் பண்ரபோது அரசு சும்மா இருக்க முடியாது. முன்பு சண்டியர்ன்னு ஒரு படத்துக்கு பேர் வைச்சதுனால தலித் பிரச்சனை பண்னங்க அது மாதிரி தான் இதுவும். டிவிக்கு படம் தரலை அது இதுன்னு வெட்டியான காரணம். அது இலவசமா டிவில் காட்டரதுக்கான உரிமை விளம்பரங்கள் மட்டும்தான் வருமானம். ட்டிஎச்ல 1000 ரூபா குடுத்து எவ்வளவு பேர் பாப்பாங்க. இது அந்த டிவிக்கு தெரியாத என்ன (நமக்கே தெரியும்போது)

7. இந்தப் படத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், உண்மையான இஸ்லாமியர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, படத்தையே தடை செய்ய சொல்வது அறமல்ல.. 

 

 

8
விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம்

படத்தை வீடு, வாசல் விற்று செலவிட்டு எடுத்தவன் எங்கு அதிக விலைக்கு விற்கலாம் என்று தானே பார்ப்பான். காய்கறி விவசாயி ஒரு கடையை விட அடுத்த கடை கூட விலை தருகிறேன் என்றால் அங்கு தான் விற்பான், 90 கோடி செலவழித்தவர்க்கு அந்த உரிமை இல்லையா? அர்சாங்கம் தன் கையிலிருக்கு என்பதால் அடி மாட்டு விலைக்கு கொடுக்கனும்னு சட்டமா?

 

 

9. தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

ஆக பாட்டியே லெட்டர்பேடு ஆட்களை கூப்பிட்டு தூண்டியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது, இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும், இதிலே பாட்டி பிரதமர் கனவு வேறே

 10.தலைமை நீதிபதியிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்கள், காலை 10.30 வரை திரையிடக் கூடாதென்று... தற்போது உண்மை வெளி வந்து விட்டது.

இது ஜெயலலிதாவின் பழிவாங்கல் நடவடிக்கை, பகடைக்காயாக்கப்பட்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்.

அப்பாவிகளிடையே பிளவைத்தூண்டி அரசியல் குளிர் காய்வது கட்சிகளின் வழக்கம் என்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

டேவிட் படம் மார்னிங் ஷோ மேட்னி ஷோ மட்டுமே .நைட் ஷோ நோ.ஜட்ஜ் அதிரடி உத்தரவு

1. சரிநிகர் சமமாய் சரக்கு அடிக்கும் டப்பு உள்ள மப்பு தம்பதி பாரில் ஆர்டர் செய்தபோது பின்னணி பாடல் - நீ பாதி நான் பாதி ஜின் னே




----------------------------



2. ஒரு டூயட்ல கமல் ஆண்ட்ரியா செம கில்மா வாம்.சென்சார்ல கட்டாம்.நக்கீரன் தகவல். # கமலா? கொக்கா? ஆனா நமக்கு வட போச்சே



------------------

3. ஒருவரின் பர்சனல் மேட்டரை சம்பந்தம் இல்லாமல் இழுக்கக்கூடாது.கமல்,புரட்சித்தலைவர்கள் ,தலைவிகள் அனைவர்க்கும் இது பொருந்தும்




-----------------------



4. சுஹாசினி க்கு கமல் சித்தப்பா முறை .சினிமாதானே? ஒரு படத்துல ஜோடியா நடிச்சா என்ன என கே பி யே கேட்டபோதும் அது தவறு என மறுத்தவர் கமல்.




-----------------------


5. டியர்.உன் இடுப்பு வெல்வெட் மாதிரி இருக்கு.




 ம்க்கும் நீ கை வெச்சிருக்கறதே வெல்வெட் சேலைதான். 



-----------------------



6. காதல் உறவைக்காத்த கிளியே! உன் முகம் பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிலியே!




----------------------



7. ஸார்.உங்க படத்தை முத நாள் முத ஷோவே பார்த்துடுவேன்.


 ஏன்? அவ்ளவ் ஆர்வமா?

ஏன்னா டக்னு படத்தை தியேட்டரை விட்டே  எடுத்துடறாங்க. 



-------------------------



8. யுவர் ஆனர்.நாங்க கேரளா போய் படம் பார்ப்பதா? தமிழ்நாட்லயே பார்த்துக்கலாமா? என முடிவு எடுப்பது உங்க கைலதான.பார்த்து பண்ணுங்க்



--------------------------



9. ஜட்ஜ் - ஓ ஸி ல படம் காட்ன நன்றிக்காகவாவ்து சாதகமா தீர்ப்பு சொல்லிடனும்





--------------------------



10. விஜயின் தலைவா பட அறிவிப்புக்குப்பின் அஜித் ரசிகரான சிம்பு தன் பட டைட்டிலை வாலுபோ என மாற்றினார் # சும்மா




-----------------------


11. அன்பே.உனக்கு பொஸஸிவ்னஸ் ஜாஸ்தி.அதை விட போஸ் ஜிவ் நெஸ் இன்னும் ஜாஸ்தி



------------------


12. 3 பேர் 3 காதல் டைட்டில் கலாச்சார சீர்கேடு.க்ரூப் லவ்வா? க்ரூப் ஸ்டடி பண்ண ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்க






-----------------------



13. நமீதாவுக்கு சேலை கட்டத்தெரியாது.மீறி யாராவது கட்டி விட்டா நமக்கு ஏதும் தெரியாது




---------------------------


14. திருச்சி சிவா மகள் திருமணத்தில் கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு...# கருப்பு எம் ஜி ஆரும் ,எம் ஜி ஆருக்கு கறுப்புக்கொடி காட்னவரும்





------------------



15. முதல்வராக இருந்த கலைஞரை திட்டினேன்,இப்போது முதல்வராக இருக்கும் ஜெவை திட்டுகிறேன் -விஜயகாந்த்# திட்டுப்பாறை கேப்டன் பாறைகள்




-------------------------


16. இறைவனின் திருப்பெயரால் விஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது -த.நா தவ்ஹீத் ஜமாஅத் # அல்லா! இவரை மன்னித்து விடு.நம்மவர் தான் - கமல்



-------------------------


17. நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னா, உங்க தோஷ்மா இருக்கும் உங்க சம்சாரம் ஊர்ல இல்லைனு அர்த்தம் :-)




-------------------


18. ஜட்ஜ் - எப்படியோ இந்த வருச்ம் வாரம் ஒரு புதுப்படம் டியூட்டி டைம்ல பார்த்துக்கலாம்.ஐ ஜாலி




-----------------------------



19.  அமீரின் ஆதி பகவானுக்கு எதிரா புகார் # விஜய் நடிச்ச ஆதியே அடி வாங்கிடிச்சு




-------------------


20. ஜட்ஜோட சம்சாரம் - யோவ்.ஊருக்கு நீதிபதி.ஆனா எனக்கு நீ பதி.என்னை விட்டுட்டு நீ மட்டும் எதுக்காக சினிமா பார்த்தே?2 மாசம் திண்ணைல படு




---------------------



21. ரஜினி - நல்லவேளை ஜக்கு பாய் டிராப் ஆச்சு.நம்மளை ஜக்கு தூக்க வெச்சிருப்பாரு ரவிக்குமார்



----------------------------



22. ஹீரோவுக்கு சாதியே கிடையாது.எதுக்கு வம்பு? அவ்ளவ் ஏன்? அவருக்கு பொஞ்சாதியும் கிடையாது





----------------------------



23. டேவிட் படம் மார்னிங் ஷோ மேட்னி ஷோ மட்டுமே .நைட் ஷோ நோ.ஜட்ஜ் அதிரடி உத்தரவு விட்




---------------------



26. சீடன் படத்துல தனுஷ் முருகப்பெருமானா நடிச்சது நல்ல வேளை முருகனுக்கு இன்னும் தெரியலை





-----------------------



27. ஜட்ஜ் - மொத்தமா உனக்கு எத்தனை சம்சாரம் ?



 எசமான்.மொத்தமா.1 ஒல்லியா 2 ஆக மொத்தம் 3 




-------------------



28. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா




-------------------


29. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா




-----------------------


30. ஜட்ஜ் - பிரச்சனையை பேசித்தீர்க்க முடியாதா ?



,யுவர் ஆனர்.பிரச்சனையே என் சம்சாரம் என் கிட்டே பேசமாட்டேங்கறா அப்டினுதான் 



----------------------------






24. சார்.கடல் ஹிட் ஆகிடுமா ? 




ரிலீஸ் ஆனா ஹிட் ஆகிடும்.ஹி ஹி 



------------------------



25. சீடன் படத்துல தனுஷ் முருகப்பெருமானா நடிச்சது நல்ல வேளை முருகனுக்கு இன்னும் தெரிய




---------------------------------------