Tuesday, January 29, 2013

படத்தின் தடைக்கு கமல் மீது ஜெ வின் பகை காரணமா? மக்கள் அலசல்

Posted Date : 16:32 (29/01/2013)Last updated : 16:42 (29/01/2013)
பெங்களூரு: விஸ்வரூபம் படத்தைத் திரையிட, கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.முழுப் பாதுகாப்புக்கு அம்மாநிலக் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்காரஜூ அளித்த பேட்டியில், "பெங்களூருவில் உள்ள 17 தியேட்டர்கள் உள்பட கர்நாடகாவில் 40 திரையரங்குகளில் விஸ்வரூபம் இன்று மேட்னி ஷோ முதல் வெளியாகியுள்ளது. அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக உள்ளது.

கர்நாடகாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ள அனைத்துத் திரையரங்கிலும் முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது" என்றார் அவர்.


 மக்கள் கருத்து

1. கடைசியாக செய்தது கமலின் படத்தை பார்க்க விரும்பாதவர்களையும் பார்க்க வைத்த ஒன்று மட்டுமே! படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டப் போகிறது.




2. இந்த படத்தைற்கு ஏ.ஆர்.ரஹமான் இசை அமைத்திருந்தால் முஸ்லிம்கள் போராடுவார்களா???????????





3. அருமை..... இப்போது புரியுதா??? தப்பு படத்துல இல்ல. கேடுகெட்ட மதவாத அரசியலில் உள்ளது...



----------


விஸ்வரூபம் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு
Posted Date : 13:56 (29/01/2013)Last updated : 18:13 (29/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது.



அரசு புதிய வாதம்...


அப்போது, கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.



 மக்கள் கருத்து


1. சகிப்பு தனமை தெவை. ஓரு படத்தால் ஒரு மதம் பாதீக்க படும் என்றால் அது அந்த மதம் சார்ந்த பிரஷனை. நான் என்ன படம் பார்க்க வேண்டும் என்பதை அடுதவர் முடிவு செய்வது கூடது. இது ஒரு தவறான முன்னுதாரனம் .எந்த மதமும் அவர் அவர் வீடு மட்றும் வழிபாடு செய்யும் இடத்தோடு இறப்பது நலம்.




2. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. தலிபான், அல் கொய்தா, லஷ்கர் எ தொய்பா போன்றவை தீவிரவாத கூட்டம் இல்லை என்று வாதிடுகிறார்கள? அவை தீவிர வாத கூட்டம் என்று ஒத்து கொள்ளும் பட்ச்சத்தில், அவர்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்? விடுதலை புலி பற்றி இம்மாதிரி படம் எடுத்தால், இங்குள்ளோர் ஏற்று கொள்வார்களா என்று ஒரு ஜீவி கேட்டுள்ளார்.




அதை பற்றி எடுத்தால், எதிர்பவர்கள் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று ஒத்து கொள்வதே இல்லை - அதை போல் இவர்களையும் மேற் கூறிய கூட்டம் தீவிரவாத கூட்டம் இல்லை என்று வாதிட சொல்லுங்கள். இதில் தேவை இல்லை ஜாதியை நுழைத்து கொண்டு... இவர்கள் ஆட்சேபிக்கும் அத்தனை விஷயமும் அந்த தீவிரவாதிகள் செய்வது தான் - செய்வதை செய்வதாக சொன்னால், என்ன தவறு?




3,. . அமைப்பினரிடம் பேசியும் பயனில்லை, அரசிடம் பேசியும் பயனில்லை என்றுதான் நீதிமன்றத்திடம் கமல் வந்தார். தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிகளோ மறுபடியும் அரசிடமும், அமைப்பினரிடமும் பேச சொல்வது புரிந்த புதிர்...




அய்யா கமல் அவர்களே! உங்களால் முடியும் என்றால் விஜய் டீவியிடம் இருந்து ஜெயா டீவிக்கு கொடுத்துவிட்டு வழக்கை முடித்து விடுங்கள்... அவங்கள மறுபடியும் பழைய மாதிரி ஆக்கிடாதிங்க... இதை சொல்வதற்க்கு கேவலமாதான் இருக்கு..



4. எம்.ஜி.ஆர் சமாதியில் வைத்தது குதிரை இரக்கை என்பது உன்மை எனில் முறைகேடுகள் நடந்துள்ளது என நம்பலாம். இதில் இருந்தே தெரிகிறது போகாத ஊருக்கு வழி சொல்லுகிற பாடம், அம்மாவின் கன்னசைவில் நடக்கும் வேலை. பாவம் இஸ்லாமியர்கள்





5. இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி,




6. ஜெயலலிதா இதற்குக் காரணம் என்றால், வெட்கித் தலை குனிய வேண்டும்.. அவரல்ல.. அவருக்கு ஓட்டுப் போட்டு அரியணையில் அமர்த்திய நாம் தான்... ஜெயலலிதா மக்கள் ஓட்டுப் போட்டுத்தான் நாம் பூனைப்படை புடை சூழ வலம் வந்து கொண்டிருக்கிறோம் என்று உணர வேண்டும்... முதலமைச்சருக்கு எத்தனையோ பணிகள் இருக்கையில், ஓர் நடிகனின் படத்தைத் தடை செய்து ரசிக்கும் குரூர மனப்பான்மை மிகுந்த அதிர்ச்சியை விளைவிக்கிறது...




7. இந்தியாவை அவமானப்படுத்திய எத்தனை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் சக்கை போடு போட்டிருக்கிறது! இது ஆப்கானை பற்றிய படம். இதை பற்றி இந்தியர்கள் ஏன் கவலைபட வேண்டும்? மதவாதம் தேசவாதத்தால் தோற்கடிக்கபட வேண்டும்.( இனவாதம் தேசவாதத்தால் தோற்கடிக்கபட்டது போல்).சினிமாவில் கொலை செய்வதற்கு முன் குரான் படிப்பதை கேள்வி கேட்பவர்கள் ஆப்கானிலும் சென்று கேள்வி கேட்க வேண்டும்.




8. சென்சார் போர்ட் அனுமதித்த பிறகு ஏதவது அமைப்புக்கள் தடை உத்தரவு கோரினால்.. அந்த படம் தடை செய்யப்படும் நாட்களுக்குரிய வருமானத்தை அவ் அமைப்புக்கள் கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிடவேண்டும்.




9. இதுல ஜெயலலிதாவ ஏன் குற்றம் சொல்ராங்க? இவ்வளவு முஸ்லீம்கள் வந்து முறையிடும்போது நடவடிக்கை எடுத்துத்தான் ஆகணும். ஆனா ஆப்கானிஸ்தான்ல உள்ள் தாலிபன், அல் கைடா கும்பல பத்தி படம் எடுத்தா இங்க ஆம்பூர், காயல் பட்டினத்தில் உள்ல் முஸ்லீம்களுக்கு ஏன் கோவம் வருதிங்கரதுதான் புரியாம இருக்கு. சதாம் உசேன துக்கில போட்டதுக்கும் போராட்டம் இங்க லெப்பைகுடிகாடு, வாணியம்பாடில பண்ணினாங. ஏன்னு கேட்டா சதாம் ஒரு முசுலீமாம் ஒரு முசுலீம கொன்னது தப்பாம். சதாம் உசேன் எத்தனை முஸ்லீம்களா வீஷ வாயு போட்டு கொன்னிருக்கான்னு தெரியுமா இவிகளுக்கு? அட இந்த தாலிபன் கும்பல் எத்தனை முஸ்லீம்களை கொன்னிருக்காங்கன்னு தெரியுமா?



10. நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதா. என்ன அபாண்டமா பொய் சொல்கிறார். நிருபிக்க முடியுமா இவரால்.


11. படம் அருமை! ஒவ்வொரு சீனும் உலகத்தரம்! இந்திய முஸ்லிமின் நாட்டுபற்று யாருக்கும் குறைந்தது அல்ல என எடுத்துகாட்டும் தரமான படம்!



12. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம்.<< இந்த படத்தினால் நாட்டின் ஒற்றுமைக்கு ஒன்றும் ஆகிவிட போவதில்லை. தமிழகத்தை தவிர அனைத்து இடங்களிலும் படம் வெளியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே படம் பார்த்த அனைத்து இந்து, முஸ்லீம் சகோதரர்களும் எந்த தவறையும் செய்யவில்லை, அமைதிக்கு எந்த குந்தகமும் விளைவிக்க வில்லை. பரபரப்புக்காகவும், பஞ்சம் பிழைக்கவும் இந்த அமைப்புகள் தண்டால் எடுத்துள்ளன.



நன்றி - விகடன்



டிஸ்கி - கடைசியாக வந்த தகவல் படி தீர்ப்பு @ 10 PM

விஸ்வரூபம் வழக்கின் தீர்ப்பு இன்று இரவு 10 மணிக்கு தள்ளிவைப்பு


சென்னை: விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 10 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.


இந்த வழக்கில் இன்று காலை 11 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நீண்ட நேரம் வாதங்கள் நடைபெற்றதால், இருதரப்பு வாதங்களையும் அலசி ஆராய்வதற்காகவே தீர்ப்பை 10 மணிக்குத் தள்ளிவைத்திருக்கிறார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி.


முன்னதாக, விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது.



அரசு புதிய வாதம்...


அப்போது, கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். பின்னர், தீர்ப்பு இரவு 10 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.