Wednesday, September 7, 2011

ஜெவைக்கண்டு விஜயகாந்த் பம்முவது ஏன்? விம்முவது ஜூ வி கட்டுரை

விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?

கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்!
ழுகார் நம்முன் ஆஜராகி செய்திச் சிட்டையைப் பிரிப்பதற்கு முன்னதாக, நாம் முந்திக்கொண்டோம். 

'
''புதிய கவர்னர் ரோசய்யாவை, கருணாநிதி திடீரென்று சந்தித்தாரே! ஏதாவது விஷேசம் உண்டா?''

''ரோசய்யாவுக்கும் கருணாநிதிக்கும் சொல்லிக்கொள்வது மாதிரி நட்பெல்லாம் இல்லை. 'நாங்கள் நெடுநாளைய நண்பர்கள்’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்கிறார். போகட்டும்... மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கருணாநிதி சொன்னாலும், 'கவர்னரை தன் வசம் வைத்துக்கொள்வது நல்லது’ என்று கருணாநிதி நினைத்து, நடந்த காரியபூர்வமான சந்திப்புதான் இது என்கிறார்கள் தி.மு.க-வில். 

 சி.பி - கலைஞர் ஒரு சிறந்த ராஜ தந்திரி, அவரது ஒவ்வொரு மூவ்க்கும் ஒரு அர்த்தம் இருக்கும், ஆதாயம் இல்லாம ஆத்தோட போக மாட்டார்ர்.......



அன்பழகன், துரைமுருகன் ஆகியோருடன்தான் ரோசய்யாவை சந்தித்தார் கருணாநிதி. தான் எழுதிய புத்தகங்களை அவருக்குக் கொடுத்தார். பிறகு துரைமுருகனை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு நிமிஷம் ரோசய் யாவிடம் தனிமையில் பேசினாராம் கருணாநிதி.''


''அது என்னவாம்?''

சி.பி - யோவ், உமக்கு லொள்ளு ஜாஸ்திய்யா, அதான் தனிமைல பேசுனாருன்னு சொல்றாங்க.. அப்புறம் எப்படி அது தெரியும்? ஆனாலும் இப்போ அண்ணன் அளந்து விடுவார் பாருங்க.. பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே?  
''ஜெயலலிதாவின் சில செயல்பாடுகளைச் சொல்லி, கருணாநிதி வருந்தினாராம். 'நில மோசடின்னு சொல்லி கட்சிக்காரங்களைக் கைது செய்றாங்க. எல்லாரையும் குண்டாஸ்ல போடு றாங்க. என் குடும்பத்தையே பழிவாங்கணும்னு நினைக்கிறாங்க. சமச்சீர்க் கல்வி விஷயத்தில் தப்பான முடிவெடுத்து, உச்ச நீதிமன்றம் கண்டிச்ச பிறகு பின்வாங்கிட்டாங்க’ என்று கடகடவென கருணாநிதி கலங்கிவிட்டதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. 


முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் ரோசய்யா கேட்டுக்கொண்டாராம். 


சி.பி - ஏன் அவரு எந்த பாவனாவையும் காட்டலை.? அடச்சே? எந்த பாவனையையும் காட்டலை? மனசுக்குள்ள ராமராஜன்னு நினப்பா? 

அடுத்து, சொற்ப நிமிடங்களிலேயே வெளியே வந்துவிட்டார் கருணாநிதி!''


''இதுபற்றி என்ன நினைக்கிறாராம் ரோசய்யா!''

''இதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று நினைப்பார்!

சென்னைக்கு வருவதற்கு முந்தைய நாள், ஆந்திரப் பத்திரிகையாளர் ஒருவர் ரோசய்யாவை சந்தித்துள்ளார். அப்போது, 'நான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வேன். அந்த மாநில அரசுக்கு உதவியாக இருப்பேன். நான் அரசியல்வாதி மாதிரி கருத்துச் சொல்லமாட்டேன். பப்ளிக் ஸ்பீக்கராக இருக்க மாட்டேன்’ என்று சொன்னாராம். இதை வைத்துப்பார்த்தால் ரோசய்யா... அடங்கிய சமர்த்தராகவே காலத்தை ஓட்டிவிடுவார் என்று நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறதோ...''



சி.பி - காங்கிரஸ் ஃபீமேல் இடம்னு சொல்லுங்க... அப்புறம் கீழே இருக்கற ஃபோட்டோவினைப்பாருங்க.. கேப்டன் மப்புல இருக்காரா?இல்லையா? கண்டுபிடிப்பவர்களுக்கு நயந்தாரா கல்யாண முகூர்த்தம் நேரடி ஒளிபரப்பு வீடியோ லிங்க் அளிக்கப்படும்.. ( ஒன்லி கல்யாண முகூர்த்தம்)

''பர்னாலா உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரா?''

''புதிய கவர்னர் வரும்போது முந்தைய கவர்னர் இருப்பது மரபு அல்லவாம்! எனவே, ரோசய்யா மாலையில் பதவி ஏற்கும் அன்று காலையில் பர்னாலா, அவரது மனைவி மற்றும் ஒரே ஒரு பாதுகாவலர் - ஆகிய மூவரும் ராஜ்பவனில் இருந்து பறந்துவிட்டனர். மகன்கள் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே பொருட்களுடன் போய்விட்டனர். படாடோபமாக வழியனுப்பு விழாக்கள் நடக்காததில் பர்னாலா வருத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் நட்பு சரியாக இல்லை என்பதும் விழா நடக்காததற்குக் காரணமாக இருக்கலாம். 'ஒட்டி உறவாடிய தி.மு.க-வாவது சிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம்’ என்று பர்னாலா வருந்தியதாக வும் சொல்கிறார்கள்.''


சி.பி - இந்த கழுகார்க்கு, நிருபர்களுக்கு இதே தொழில் போல, சொல்கிறார்கள், நினைத்தார்கள், யோசிக்கிறார்கள்னு இவங்க என்ன மைண்ட் ரீடரா?
''விழா கொண்டாடும் நிலைமையிலா இருக்கிறது தி.மு.க.?''

''அதனால்தான் சண்டிகர் போய் இறங்கிய மறுநாளே அங்கு உள்ள நிருபர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து பேசினாராம் பர்னாலா. அடுத்து வரப்போகும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களுள் ஒருவராக பர்னாலா இருக்கப் போகிறாராம். பிரகாஷ் சிங் பாதல் - காங்கிரஸ் ஒரு கூட்டணி அமைக்க, அதற்கு எதிராக பர்னாலா ஒரு கூட்டணியைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டார். முதல்வர் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பிர்சிங் பாதல் இருவரும்தான் இனி அவரது இலக்கு! 'இவ்வளவு ஆக்ரோஷமான மனிதர் இங்கே நடந்த பல விஷயங்களைக் கண்டும் காணாமல் மௌனியாக இருந்தது ஏன்?’ என்பதுதான் பலரது கேள்வி. கருணாநிதியுடனான நட்பு என்கிறார்கள் சிலர். பர்னாலாவின் மகனைச் சிலர் காரணம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பர்னாலா, வெறும் தலையாட்டி பொம்மையாகவே கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் போய்விட்டார்!''

''திடீரென ஸ்டாலின் லண்டன் கிளம்பிவிட்டாரே?''

''மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று வருவதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின். லண்டன் செல்வதற்கு முன்னதாக, இங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று செக்-அப் செய்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, அவர் லண்டன் செல்வதில் ரகசியம் எதுவும் இல்லை! ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த தேதிதான் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது!''


''என்ன?''

''சட்டமன்றத்துக்குள் போவதா வேண்டாமா என்று கட்சிக்குள் பெரும் பிரச்னை நடப்பது அனை வருக்கும் தெரியும். முதலில் போக மாட்டேன் என்றார்கள். ஒரு நாள் போனார்கள். மறுபடியும் பாய்காட் பண்ணினார்கள். மீண்டும் 5-ம் தேதி போகப் போவதாக ஸ்டாலின்தான் அறிவித்தார். சட்டமன்ற தி.மு.க. குழுத் தலைவர் அவர்தானே! அன்றைய தினம் அவர் இல்லாமல் லண்டன் போனது சரியா என்பதுதான் சில தி.மு.க. பிரமுகர்களின் கேள்வி!

'5-ம் தேதி, தான் லண்டனில் இருப்போம் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, அந்த நாளை ஏன் சொல்ல வேண்டும்?’ என்று சிலர் புலம்புகிறார்கள். '

தளபதி இருந்து எங்களை சபைக்கு அழைத்துச் சென்றால்தானே உற்சாகமாக இருக்கும்? சபைக்குள் என்ன முடிவு எடுப்பது என்பதையும் அவர் இருந்தால்தான் உடனடியாகச் சொல்லவும் முடியும்?’ என்பது இவர்களது கருத்து. மேலும், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள கருணாநிதி விரும்புகிறார். ஆனால், அவரது வீல்சேருக்கு வழி இல்லாததால் அவரும் சைலன்ட் டாக இருக்க வேண்டிய நெருக்கடி. மொத்தத்தில் சபைக்கும் தி.மு.க-வுக்கும் ஒட்டவில்லை!''

''சேலம் தி.மு.க. பொதுக் கூட்டத்திலும் ஏதோ கசகசப்பாமே?''

''இத்தனை ஆண்டுகால தி.மு.க. வரலாற்றில் வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமல் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை அவரது எதிரிகள் சேர்ந்து நடத்திக் காட்டிவிட்டார்கள். பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் இதற்கு ஏற்பாடு. ஸ்டாலினின் முழு ஆசியுடன் நடந்த இந்தக் கூட்டத்துக்காக சேலம் போஸ் மைதானத்தில் எக்கச்சக்கமான கூட்டமாம்! 

இதற்கான ஆலோசனை நடந்தபோதே வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவு ஆட்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினார்களாம். 'அண்ணன், அடுத்த வாரம் ஜாமீனில் வெளியே வரப் போகிறார். அவர் வந்ததும் நடத்தலாம்’ என்று வெளிப்படையாகவே சொல்ல... எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கலையமுதன், சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து, 'தளபதி கலந்துகிடுற தேதியை மாத்தணும்’ என்று சொல்லி... 

வீரபாண்டி ஆறுமுகம் இல்லாத காரணத்தையும் அவர் சொன்னாராம். கடுப்பான கருணாநிதி, 'வீரபாண்டியார் இல்லேன்னா கூட்டமே நடத்தக் கூடாதா? நானே இல்லேன்னாக்கூட கட்சி இருக்கும். கூட்டம் நடக்கும்’ என்றாராம் கருணாநிதி. கலையமுதன் ஓடி வந்துவிட்டார். இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர் கோஷ்டி பார்க்கிறது. 'மாவட்டக் கழகத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தும் இதுபோன்ற காரியங்களுக்கு தளபதி உதவி செய்வது சரியா?’ எனச் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்! அதேபோல்...''

''மாநிலம் முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் பல மாவட்டங்களில் கைதாகி வருகிறார்கள். எங்குமே நடக்காத காரியம், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. 'பொன்முடியை விடுதலை செய்’ என்று ஆங்காங்கே தி.மு.க-வினர் மறியல் செய்து கைதாவதுதான் அது. கனிமொழி முதல் எத்தனையோ பேர் கைதான போதெல்லாம் இதுபோல் மறியல் நடத்தாத உடன்பிறப்புகள், பொன்முடிக்காக மட்டும் நடத்துவது சரியா?’ என சிலர் கேட்க ஆரம்பித்த நிலையில்... 'விழுப்புரத்தில் நடந்தது மாதிரி எல்லா ஊர்லயும் நடக்கட்டும்’ என்று தூண்டி விடும் காரியத்தையும் ஸ்டாலின் செய்கிறாராம். '


மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் ஆங்காங்கே ஆர்ப் பாட்டம் நடத்துவது தவறு என்று கண்டிக்காமல் தளபதியே இப்படிச் சொல்வது சரியா?’ என்றும் இவர்கள் கேட்கிறார்கள். மொத்தத்தில் கட்சி கலகலத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது!''


''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இருப்பாரா?''


சி.பி - அண்ணன் பம்பறதே அதுக்குத்தானே? உள்ளாட்சித்தேர்தல் முடிஞ்ச பிறகு பாருங்க சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஜெ வை குறை சொல்லி வெளி நடப்பு பண்ணப்போறாரு.. 
''இருக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் நினைக் கிறாராம். 10 மாநகராட்சியில் 4 இடங்களை தே.மு.தி.க. கேட்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரத்தில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 'ஒரே ஒரு மாநகராட்சியை அம்மா விட்டுக்கொடுக்கலாம்!’ என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

விஜயகாந்த் இதை ஏற்பாரா எனத் தெரியவில்லை. 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்பதற்காக, கூட்டணிக் கட்சிகளுடன் அம்மா சமரசமாகப் போனார். இறங்கிச் சென்று தொகுதி களை விட்டுக்கொடுத்தார். இப்போது ஆளும் கட்சி ஆகிவிட்டதால், அவ்வளவு இறங்கிப் போகமாட்டார்...’ என்றும் அ.தி.மு.க. புள்ளிகள் சொல்கிறார்கள்.''


''விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?''

''ஜெ. ஆட்சியின் 100-வது நாள் விவாதத்தில் கலந்துகொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலி தாவை புகழ்ந்து தள்ளிவிட்டு, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணருங்கள்’ என்று சொன்னார்.


சி.பி - யார் யாருக்கு எத்தனை கோடி? நன்மை? 

ஒன்றாக இருப்பதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது என்பது அவரது வாக்கு. இந்த விழா அன்றுகூட சபைக்கு விஜயகாந்த் வராதது, ஜெயலலிதாவுக்கு மனவருத்தம் கொடுத்துள்ளது. 'சபைக்கு வர விஜயகாந்த்துக்கு ஆர்வம் இல்லையா? அல்லது அவாய்ட் பண்ணுகிறாரா?’ என்று குழம்பிப் போயிருக்கிறார் ஜெயலலிதா. 

'எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசி கமிட் ஆகிவிடக் கூடாது’ என்று விஜயகாந்த் நினைப்பதாகவும் சொல்கிறார்கள். 


சி.பி - அண்ணன் ஹேங்க் ஓவர்ல , வாமிட் ஆகிடக்கூடாதுன்னு நினைச்சிருப்பாரு.. 





1. மன்னர்களை வீழ்த்தியது எது?  


சி.பி - நோ டவுட். ஒன்லி மண்ணாசை, & பெண்ணாசை
 
அந்தப்புரமும் புத்திர பாசமும்!
அக்பர் இதற்கு நல்ல உதாரணம். பிறந்த பையனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் போர்க்களத்தில் இருந்தபடியே அக்பரின் பிறந்த நாளைக் கொண்டாடினார் அப்பா ஹுமாயூன். 'இவன் புகழ் கஸ்தூரி மணம் போல உலகம் முழுக்கப் பரவ வேண்டும்’ என்றார். அதைப் போலவே 69 ஆண்டுகள் வாழ்ந்த அக்பர், 49 ஆண்டுகள் மன்னராகவே இருந்தார். அவரை நொந்து நூலாக்கி மரணப்படுக்கையில் தள்ளியது ரெண்டு பேர். ஒருத்தி, அந்தப்புரத்தில் இருந்த மாஹம் அனாகா. தன் மகன் ஆதம்கானை வளர்க்க வேண்டும் என்பதற்காக அசைக்க முடியாத மாவீரனான பைராம்கான் பற்றி பொய்களைப் புனைந்து அக்பரிடம் இருந்து பிரித்தாள்.


இன்னோர் ஆள், அக்பரின் மகன் சலீம். 'அப்பாவின் ஆயுள் நீடிக்கிறதே’ என்று நித்தமும் புலம்பி, தனி அணி கட்டியவர் சலீம். இவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அக்பர் படுக்கையில் சரிந்தார். இதுதான் பல மன்னர்களுக்கும் நடந்தது!



2. 'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே ஜெ.? 

'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே அ.தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே மு.க. இவர்கள் ரெண்டு பேருக்​குமே வேறு வேலையே இல்லையா?

சி.பி - நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கனும்னா திமுக , அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று சக்தி வரனும்...



3. இலங்கையில் 30 ஆண்டுகளாக இருந்த அவசரகாலத் தடை சட்டத்தை ராஜபக்ஷே வாபஸ் வாங்கிவிட்டது நல்ல விஷயம்தானே? 

இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்பதைக்காட்ட ராஜபக்ஷே நடத்தும் நாடகம் இது!
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி-யான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். 'அவசர கால தடை சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தை ராஜபக்ஷே பலப்படுத்திவிட்டார்!’ என்று சொல்லி​இருக்கிறார். எனவே, சட்டத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது.
அதைவிட யோகேஸ்வரன் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி அதிர்ச்சிக்கு உரியது. '50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா பணம் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரம் வீடுகள் கூட கட்டித் தரப்படவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். இந்தியா இதையாவது தட்டிக்கேட்க வேண்டும்!



'பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூவர் குறித்து தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது’ என்கிறாரே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்? 

ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளும் வழிமொழிந்த தீர்மானம், குடியரசுத் தலைவருக்குத்தான். எனவே, அது ஏற்கத் தக்கதா இல்லையா என அவர்தான் தீர்மானிக்கவேண்டும். மேலும், ஒரு மாநில சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ஓர் அமைச்சர், அதுவும் சட்ட அமைச்சர் கருத்துச் சொல்வது அபத்தமானது. ஜெயலலிதா மீதான எரிச்சல் மட்டுமே அவரது வார்த்தைகளில் தெரிகிறது!

சி.பி - கட்டுப்படுத்தாது, ஆனால் கரைக்க , மனம் மாற்ற உதவலாம்..


5.   அண்ணா ஹஜாரே பற்றி, அருந்ததிராய் எழுதிய கட்டுரையைப் படித்தீரா? 

ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியவர் என்கிற அடிப்படையில் ஹஜாரே ஏற்கத் தக்கவர்தான். ஆனால், அருந்ததி சொன்னதில் மிக முக்கியமான விமர்சனம் இருக்கிறது.

'அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஆனால், ஹஜாரேயின் ஜன்லோக்பால் சட்டம், முற்றதிகாரம் கொண்ட கொடிய சட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆள்கிறது. ஜன்லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.


'காந்திய நெறி சார்ந்ததாக இச்சட்டம் வடிவமைக்கப்​படவில்லை!’ என்று அருந்ததி சொல்​வதற்கு அண்ணாவிடமிருந்து இதுவரை பதில் இல்லை!

சி.பி - துக்ளக் சோ கூட அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லை...நமது பதிவுலகில் அண்ணன்  சேட்டைக்காரன் எடுத்து வைக்கும் அன்னா ஹசாரேவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை.. 

\6. ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? 


'கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளுக்குப் போனதுதான் எனது வேலை. இப்போது தி.மு.க. தோழர்களை சிறை சிறையாகப் போய்ப் பார்ப்பதுதான் எனது வேலை’ என்று உங்கள் ஊரில் தான் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளாரே!

சி.பி - அழகிரியை ஓரம் கட்டுவது எப்படி? அப்பாவின் மனதில் அவசரமாய் இடம் பிடிப்பது எப்படி? என திங்க்கிங்க்.. 



7. 'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே!’ என்று நடிகர் விஜய்யை அவரது ரசிகர் மன்றத் தலைவர் 'வேலாயுதம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே! 


நல்லவேளை! இது அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது! இதைக் கேள்விப்பட்டு அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!

சி.பி - அடப்பாவமே?விஜய்க்கு அவ்வளவு வயசாகிடுச்சா?


8. நிலப்பறிப்பு வழக்கு டல் அடிப்பது போல் தெரிகிறதே? 


இதோ அடுத்து வரப்போகிறது, சொத்துக் குவிப்பு வழக்குகள்!

சி.பி - அது வந்தா அம்மாவுக்கும், அய்யாவுக்கும் சேர்ந்தாப்போல் ஆபத்து


9. கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கும் புதிய சட்டம் வரப் போகிறதாமே? 


ஆமாம்! 'கிரிமினல்கள் இல்லாத அரசியல் _ சட்ட மசோதா’ என்று இதற்குப் பெயர். கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது வேட்பு மனுக்களை இந்தச் சட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்து விடுவார்கள். இன்றைய நாடாளுமன்றத்திலேயே 162 எம்.பி-க்கள் மீது குற்றப்புகார்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால் வரவேற்க வேண்டிய சட்டம் இது. இன்னும் மூன்று வாரத்தில் தாக்கல் ஆகப் போகிறது.


சி.பி - அப்புறம் எலக்‌ஷன்ல நிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுடுமே?


10. பணமா... குணமா... எது முக்கியம்? 


'பணத்தால் அழகான நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால், அதன் வாலை பணத்தால் ஆட்டுவிக்க முடியாது’ என்பார்கள். நல்லவர்களைப் பார்த்தால் நாய் வாலை நளினமாக ஆட்டும். திருடர்களைப் பார்த்தால் வால் வெடைக்கும். எது முக்கியம் என்று தெரிகிறதா?

சி.பி - பொண்ணு வீட்டுக்காரங்க மாப்ளைக்கு சொந்த வீடு இருக்கா? சொத்து பத்து இருக்கா?ன்னு விசாரிக்கறாங்க, அதுக்குப்பிறகுதான் அவர் கேரக்டர் எப்படி?ன்னு விசாரிக்கறாங்க.. ஓவரா சொத்து இருந்து கேரக்டர் முன்னே பின்னே இருந்தாக்கூட அட்ஜஸ் பண்ணிக்கறாங்க.. அப்போ பணம்தானே முக்கியம்? குணம் முக்கியம்னு பேச நல்லாருக்கும், நடைமுறைல ஒத்து வர்றதில்லையே? \


11. கேரளாவில் முதலமைச்சரின் குறை தீர்ப்பு கால்சென்டருக்கு நல்ல வரவேற்பாமே? 

  முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கால் சென்டரை செப்டம்பர் 1-ம் தேதி திறந்தார்கள். முதல் நாளே 2.25 லட்சம் மக்கள் இந்தச் சேவைக்குள் நுழைந்தார்கள். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அன்று மட்டுமே 4 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளன. எல்லாப் புகார்களுக்கும் ஒரு மாதத்துக்குள்  பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உம்மன் சாண்டி. ஜெயலலிதாவும் இதை அமல்படுத்தலாம்!


சி.பி - அந்த சட்டம் அமலுக்கு வந்தா அய்யா, அம்மா 2 பேரும் தானே மாட்டுவாங்க.. ஐ ஜாலி.. 



12. அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை படமாகிறதாமே? 

வில்லன் யார் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?

சி.பி - நோ, 2 பேரும் டம்மி வில்லன்ஸ்.. பாபா ராம்தேவ் தான் மெயின் வில்லன்.. ஹா ஹா , ஏன்னா அவருக்குத்தான் அன்னா மேலே பொறாமை.. எங்கே பொறாமை இருக்கோ அங்கே தான் வில்லத்தனமும் ஜாஸ்தி இருக்கும்.. 

THANX - JU VI 



22 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

அரசியலில் அடைய முடியாத இடத்தை அடைந்து விட்டார் விஜயகாந்த்...

தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கிக் கொண்டுதான் பம்முகிறார்...

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

இல்லையென்றார் ஜெவுக்கும் காந்துக்கும் ஒரு பனிப்போரே உறுவாகியிருக்கும்...

விஜயகாந்த் பிழைக்க தெரிந்த ஆளுங்க...

செங்கோவி said... Best Blogger Tips

அது தான் யாருக்கும் புரியல..

விக்கியுலகம் said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி!என்னதான் சொல்லும் விசய காந்து அளவுக்கு எந்த அரசியல்வாதிக்கும் சாமர்த்தியம் இல்ல....!பொழைக்க தெரிஞ்ச ஆள்!

RAMVI said... Best Blogger Tips

உங்க பதிவில் இருந்து அரசியல் நடப்ப தெரிஞ்சுக்க முடியறது.
12வது கேள்விக்கு உங்க கமண்ட்...சூப்பர்.

யானைகுட்டி @ ஞானேந்திரன் said... Best Blogger Tips

கலக்கல் கரம் மசாலா .....
பதில்கள் ......
வாழ்த்துக்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

மாப்ள வழக்கம் போல உன்னோட கமென்ட் கலக்கல்..

வெளங்காதவன் said... Best Blogger Tips

சிக்ஸ்சர் இன் நோ பால்!

அடுத்த பால் ப்ரீ ஹிட்தான்!

#ஜூப்பரு....

சசிகுமார் said... Best Blogger Tips

என்னதான் ஜுவி இருந்து காப்பி பண்ணி போட்டாலும் அதுக்கு நீங்க கொடுக்குறீங்க பாருங்க ஒரு நக்கல் நையாண்டி கலந்த கமென்ட் அது ரொம்ப தூக்கல் தல

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

அஞ்சு வருசத்துக்கும் டப்பு நிரப்பிட்டாரு... அதான் வாயும் அடைஞ்சு போச்சு.

suryajeeva said... Best Blogger Tips

adra sakka adra sakka adra sakka nnaanaam..

ஜீ... said... Best Blogger Tips

சூப்பர் தம்பி! விஜயகாந்த்.... கண்டிப்பா அதுதான்!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

என்னாது விஜய் தமிழகத்தின் அண்ணா ஹசாரே'வா...?? எலேய் இது ரொம்ப ஓவர்லேய், தமிழ் மக்களை நாடு கடந்து ஓட வச்சிராதீங்கலெய்...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அரசியல்னு வந்துட்டா பம்மி பாயுறது சகஜம்தானே....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

என்னது அடுத்து சொத்து குவிப்பு வழக்கா அவ்வ்வ்வவ்.....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

என்ன இந்த தடவை கழுகாருக்கு சுக்கு காப்பியும் முந்திரியும் தரலையாமே ஏன்...?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எலேய் அண்ணா டேய் அண்ணா, உன் கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கலா இருக்குடா.....!

துஷ்யந்தன் said... Best Blogger Tips

என்னவோ ஏதோ நடக்க போகுதோ......
ஹீ ஹீ,

trichy royal ranger said... Best Blogger Tips

புலி பதுங்குவது பாய்வதற்கு தான் .............. பட் இங்க விஜயகாந்த் பதுங்குறாரா இல்ல தூங்குறாரா ன்றது தான் என்னோட டவுட்டு

ராஜி said... Best Blogger Tips

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

நிரூபன் said... Best Blogger Tips

கழுகாரின் கேள்விகளுக்கு ஏற்றாற் போல, சிபியின் கமெண்டுகளும் வந்து விழுந்திருக்கின்றன,

சூப்பர் அரசியல் பேட்டி பாஸ்..

விட்டால் சைட் கப்பிங்கில் கப்டன் அம்மாவை ஓவர் டேக் பண்ணிடுவார் போல இருக்கே..