Friday, April 01, 2011

கலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்? தமிழருவி மணியன் ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

1. ''இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?'' 

''தேர்தல் கமிஷன் கூடுதல் விழிப்புடன் காரியம் ஆற்றினால், கலைஞர் ஆட்சி கவிழக்கூடும்!''

ரொம்ப சிரமம் சார்...மக்கள் விழிப்புடன் இல்லையே...

2. ''கருணாநிதியை இந்தக் காய்ச்சு காய்ச்சுகிறீர்களே... அப்படி என்ன அவர் மேல் கோபம்?'' 

''20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட போதும், மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் சிதைக்கப்பட்டபோதும், தன் மகன், மகள், பேரனுக்கு மத்திய அமைச்சர வையில் இடம் பெறுவதில் காட்டிய முனைப்பை, நம் இனத்தைக் காப்பாற்றுவதில் காட்ட மறந்த சுயநலம் ஒன்றுதான் என் கோபத்துக்கு முக்கியக் காரணம்!''

 தமிழ் இனம் அழிக்கப்படும்போது கடிதம் எழுதியவர் தன் குடும்பத்துக்கு பதவி வேணும்னதும் டெல்லி விரைந்தாரே.. அதை விட்டூட்டீங்க?

'3. 'பல காலம் கட்சி வளர்த்த வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி, விஜயகாந்த் குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''சினிமாவின் வீச்சு + விஜயகாந்த்தின் துணிச்சல்  +தமிழரின் ரசனை = தே.மு.தி.க -வின் வளர்ச்சி!''

மாற்று சக்திக்காக மக்களின் ஏக்கம்?


4. ''அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!'' 

1. ''பிளேட்டோவின் 'குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் 'அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் 'மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின்  'காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. 'காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. 'இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. 'பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி - தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய 'இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. 'பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. 'இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)


5. ''நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்த காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியே வந்தபோது, தங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 

 ''நான் உயிர் கசிய நெஞ்சில்வைத்து நேசித்தது காந்தியால் வளர்க்கப்பட்டு, காமராஜரால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ்  இயக்கம் காமராஜர் கண் மூடியபோதே, மக்கள் நலனுக்காக இயங்கிய காங்கிரஸ் கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டது.

நான் இந்திரா காங்கிரஸை எதிர்த்து உருவான ஜனதா, ஜனதா தளத்தில்தான் என் இளமை முழுவதையும் செலவழித்தேன். மூப்பனார், காங்கிரஸைக் கைவிட்டு தனியாகத் தமிழ் மாநில காங்கிரஸை நடத்தியபோது, 'காமராஜர் ஆட்சி’ அமைக்க விரும்பி எனக்கு அழைப்பு விடுத்தார்.

'சோனியா காங்கிரஸில் கடைசி வரை இணைய மாட்டேன்’ என்று என்னிடம் அவர் உறுதி அளித்த பின்பே த.மா.கா-வில் சேர்ந்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன்.

அவருடைய மறைவுக்குப் பின், 2001-ல் த.மா.கா, சோனியா காங்கிரஸில் சங்க மித்தது என்னை மீறிய நிகழ்வு.


2009 ஜனவரி வரை எட்டு ஆண்டுகள் நான் தமிழ்நாடு காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடித்தது, என் பொது வாழ்வில் நேர்ந்துவிட்ட மாறாத களங்கம்.

இன்று நான் சிறையில் இருந்து விடுபட்ட பறவை. அரசியல் வானில் சுயேச்சையாகச் சிறகசைத்துச் சுதந்திரமாகப் பறக்கிறேன். சோனியா காங்கிரஸில் இருந்த பாவத்துக்குப் பரிகாரம்தான்... 'இனி, எந்தக் கட்சியிலும் இணைவது இல்லை. இதயத் துடிப்பு நிற்கும் இறுதி நாள் வரை, எந்த ஆட்சி அதிகாரப் பதவியிலும் அமர்வதும் இல்லை’ என்று நேர்ந்து கொண்ட வைராக்கியம்!''

மரத்துக்கு மரம் தாவும் வானரங்களுக்கு மத்தியில் நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்த ஒரு வரம்


'6. 'எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டும் நீங்கள், தற்போதைய நேர்மையான 10 அரசியல்வாதிகளைப் பட்டியலிடுங்கள். அதில் நம் இருவரின் முதல் சாய்ஸ் நல்லகண்ணுவாகத்தான் இருப்பார். மீதி 9 பேரை வரிசைப்படுத்துங்களேன்?'' 

''முதலில் ஒரு திருத்தம். நான் யாரையும் எந்த நிலையிலும் திட்டி, என்னைத் தாழ்த்திக்கொள்வது இல்லை. 'காமம் செப்பாது கண்டது மொழிதல்’ முக்கியம். யாரையும் இச்சகம் பேசி நான் இன்று வரை அடைய விரும்பியது எதுவும் இல்லை. நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுவேன்.

அச்சமின்றி உள்ளம் உணர்ந்த உண்மை எழுதுவேன். இதனால் எனக்கு ஏற்படும் இழப்பு, வலி போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
போகட்டும். தரவரிசைப்படுத்த என்னிடம் எந்த 'அக்மார்க்’ அளவுகோலும் யாரும் வழங்கவில்லை. அதிகப்பிரசங்கியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. நானறிந்து மதிக்கும் அரசியல் நேர்மையாளர் நல்லகண்ணு!''

ஆனா அவரை தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்?நித்யானந்தாவை தெரிந்த அளவு கூட தெரியாது.. ஏன்னா இங்கே பாசிடிவ்வை விட நெகடிவ்க்குத்தான் விளம்பரம் ஜாஸ்தி

'7. 'நீங்கள் கலைஞரோடு சுமுகமாக இருந்த வரைக்கும் அவர் சரியாக இருந்ததாக எண்ணுகிறீர்களா?'' 

''ஐந்தாவது முறை கலைஞர் முதல்வரான பின்பு, அவரிடம் நான் கண்ட அணுகுமுறைகளில் நல்ல மாற்றம் தெரிந்தது. தன்னுடைய வாழ்வின் மாலைப் பொழுதில் அவர் நிறை மனிதராக நல்லாட்சி தரப்போகிறார் என்று நெஞ்சார நம்பினேன்.

வால்மீகியின் ராமாயணத்தை வாசிக்கும்போதும், அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடும்போதும் அவர்களுடைய மூலத்தை ஆராய்வது அறிவுடைமை ஆகாது.

நான் உறுப்பினராக இருந்த திட்டக் கமிஷனுக்கும் ஊழலுக்கும் எள்ளளவு தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லா அரசியல் வாதிகளும் ஊழலில் ஊறித் திளைப்பதால், அவருடைய ஆட்சியில் அரங்கேறிய ஊழல் நடவடிக்கைகள் எனக்கு வியப்பைத் தர வில்லை.

ஆனால், ஈழத் தமிழரை அவர் கைவிட்ட விதம் என்னை ரணப்படுத்தியதால், பதவியை உதறிவிட்டு விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கினேன். அவர் என் மீது பொழிந்த அன்பு அதிகம். இன்று என்னை வாடகை வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான புத்தகங் களுடன் வீதியில் நிறுத்தும் அளவுக்கு என் மீது உமிழும் வெறுப்பு மிக அதிகம்!''

கலைஞர் எப்பவும் அப்படித்தான்.. இந்த ஒரு விஷயத்தில் அவர் எம் ஜி ஆர் மாதிரி.. தனக்கு எதிரி என தெரிந்தால் ......


8. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்காமல்இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?'' 

''அவர் எந்தப் பிரச்னையிலும் வாய் திறக்காமல் இருப்பதற்கு வழங்கப்பட்டதுதான் பிரதமர் பதவி என்பதை அவர் நன்கு அறிவார்!''

டம்மி பீஸ்களிடம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும்...

9. ''பேச்சுக் கலையில் உங்கள் முன்னோடி யார்?'' 

'' 'அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக அவர் பேசியிருக்கிறார்!’ என்று மென்மையான வார்த்தைகளால் மேடை நாகரிகம் காத்த 'சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி.சம்பத்!''

அப்பவும் உங்க கட்சி ஆளை விட்டுக்கொடுக்காம பேசறீங்களே.. பட் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்.. 

10. ''ஓட்டுக்குப் பணத்தை நான் மறுத்தாலும், வீட்டுக்குள் கவரில் பணத்தை வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள் கடந்த தேர்தலின்போது! அந்தப் பணத்தை வீசி எறிய மனம் இல்லாமல் செலவழித்தேன். இப்போதும் பணம் கொடுப்பார்கள் என்கிறார் கள்... நான் என்ன செய்வது?'' 

''தவறான வழியில் வந்த பணத்தைக் கையால் தொடுவதுகூடக் தகாது. உங்களை மீறி யாராவது வீட்டுக்குள் வீசி எறிந்தால், அந்தப் பணத்தை வீதியில் கையேந்தும் ஏழைகள் பசியாறப் பகிர்ந்துகொடுங்கள்.

பாவத்தின் கறை பட்ட பணம் புனிதப்பட அது ஒன்றுதான் வழி. பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் 'சத்தியவான்கள்’ கழுத்தில், நாளை ஊழல் பாசக் கயிறு விழுந்து இறுக்கும்போது, காப்பாற்ற 'சாவித்திரிகள்’ கிடைக்க மாட்டார்கள்!''

நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் காலாக்காயே மேல் என சிலர் நினைக்கிறார்களே.. ? என்ன செய்வது? 


11. ''உங்களைப் போன்றவர்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை?'' 

''ஆட்சியில் பதவியைப் பெறுவதும், பணத்தைப் பெருக்குவதும்தான் வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் தோற்றுவிட்டது உண்மை. 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், நான்கு செப்புக் காசுகளைக்கூட நேர்மைக்கு மாறாகவும், அறத்துக்குப் புறம்பாகவும் சேர்க்காத தூய்மைதான் பெருமைக்குரிய வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் வெற்றியாளர்களே!
பதவியை மறுத்து, பணத்தைத் துறந்தவர்... அரசியலில் தோற்றவரா... ஜெயித்தவரா?''

 காமராஜர், ஜீவா,கக்கன் இவங்க எல்லாம் வாழும் காலத்தில் பிழைக்கத்தெரியாதவர்கள் என பேசப்பட்டாலும் இன்று சரித்திரம் அவர்களை போற்றுகிறதே.. அதே போல் உங்களையும் நாளைய சரித்திரம் அடையாளம் கண்டு கொள்ளும் சார்..

12. ''பாரதி என்றதும் தங்கள் நினைவில் வருவது?'' 

'' 'மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்’ என்று வைர வரி. 'அன்பிற் சிறந்த தவமில்லை’ என்ற வேத வாசகம்!''


13. ''நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட தலித் அமைப்புகள் அரசியல் லாபத்துக்காகத் தடம் புரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''சின்னச் சின்ன சுகங்களுக்காக தலித் தலைவர்கள் சமரசங்களுக்கு ஆட்பட்டுவிடுவதற்காக வருந்துகிறேன். காந்தியைக்கூட சிறிதும் சமரசத் துக்கு இடமின்றி எதிர்த்த அம்பேத்கரைப்போல் இவர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!''


'14. 'அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடும் மாவோயிஸ்ட்டுகள் பற்றி உங்கள் கருத்து?'' 

''அவர்களுடைய இலக்கு புனிதமானது. அதை அடைவதற்கு அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை பயங்கரமானது. வன்முறையில் கட்டப்படும் சமூக மாற்றங்கள் சரிந்து விடும் என்பதுதான் சரித்திரம்!''

15. ''ராகுல் காந்தி பற்றி உங்கள் மதிப்பீடு?'' 

''களை பறிக்காமலேயே விளைச்சலைப் பெருக்க வீண் கனவு காணும் இளம் விவசாயி!''


16. ''மறைந்த அரசியல் தலைவர்களுள் யாரேனும் ஒருவரை உயிர் பிழைக்கவைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. யாரைப் பிழைக்கவைப்பீர்கள்?'' 

''மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றி முடிக்க நான் உயிர் பிழைக்கவைக்கும் ஒரே மனிதர், பெருந்தலைவர் காமராஜர்!''


'17. 'தி.மு.க,  அ.தி.மு.க இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும்விட்டு தமிழக மக்கள் வெளிவரவே முடியாதா?'' 

''நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள். நல்லது தானே நடக்கும்!''

சாரி சார்.. அது மட்டும் எங்களால முடியாது.. ஏன்னா நிழலை நிஜம் என்றும்,வில்லனை ஹீரோ என்றும் நம்பியே பழக்கப்பட்டு விட்டோம்.. 

50 comments:

பாட்டு ரசிகன் said...

ஐ வடை..

பாட்டு ரசிகன் said...

ஐ.. அறுவா..

பாட்டு ரசிகன் said...

ஐ.. முத வெட்டு..

பாட்டு ரசிகன் said...

சார் முதல்ல வர்றவங்க இப்படித்தானே கமாண்ட் போடணும்..

பாட்டு ரசிகன் said...

இன்னும் யாரும் வரல..

பாட்டு ரசிகன் said...

யாராவது இருக்கிங்கீளா..

பாட்டு ரசிகன் said...

அட போங்கப்பா..
ஆட்டத்துக்கு யாரும் வரல..

பாட்டு ரசிகன் said...

கருன் எங்க போன நீயாவது வா..

பாட்டு ரசிகன் said...

இது பத்தாது..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am on line

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am on line

பாட்டு ரசிகன் said...

இது பத்தாவது... கமாண்ட்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

but bc. come later

பாட்டு ரசிகன் said...

///
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am on line///

அதுக்கு என்ன பண்ணலாம்..

Unknown said...

தேவையான நேரத்தில் போடப்பட்ட பதிவு நன்றி நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

பாட்டு ரசிகன் said...

சார் முதல்ல வர்றவங்க இப்படித்தானே கமாண்ட் போடணும்..


அப்படி இல்லை...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

தேவையான நேரத்தில் போடப்பட்ட பதிவு நன்றி நண்பா

ஹி ஹி

Unknown said...

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யாரு.........நடிகனைத்தவிர்த்து பார்ப்போம்!

பாட்டு ரசிகன் said...

////
''அவர்களுடைய இலக்கு புனிதமானது. அதை அடைவதற்கு அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை பயங்கரமானது. வன்முறையில் கட்டப்படும் சமூக மாற்றங்கள் சரிந்து விடும் என்பதுதான் சரித்திரம்!''///

உண்மையான வார்த்தையை சொல்லியிருக்கிறார்..

Speed Master said...

வந்துட்டேன்

பாட்டு ரசிகன் said...

///
'தி.மு.க, அ.தி.மு.க இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும்விட்டு தமிழக மக்கள் வெளிவரவே முடியாதா?''

''நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள். நல்லது தானே நடக்கும்!''

சாரி சார்.. அது மட்டும் எங்களால முடியாது.. ஏன்னா நிழலை நிஜம் என்றும்,வில்லனை ஹீரோ என்றும் நம்பியே பழக்கப்பட்டு விட்டோம்..
/////

இது தமிழகத்தின் தலை எழுத்து

ரஹீம் கஸ்ஸாலி said...

அதற்கிடையில் இரண்டாவது பதிவ....நடத்துங்க நடத்துங்க

சி.பி.செந்தில்குமார் said...

இன்னைக்கு பாட்டு ரசிகன் கலக்கறாரே என்ன மேட்டர்? ஏதாவது ஃபிகர் சிக்கிடுச்சா?

Unknown said...

தலையில் உள்ள எழுத்துக்கள் ஆக்கத்துக்கு மட்டுமே அழிவுக்கு அல்ல நண்பா

பாட்டு ரசிகன் said...

நான் வந்தா அடை மழை தாங்க..

பொன் மாலை பொழுது said...

////நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள்////

உங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறார் :))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லோருடைய கமெண்டுக்கும் பதில் சொல்லாத சி பி யை மென்மையா கண்டிக்கறேன்! ( வன்மையா கண்டிக்க மனசு வரல! நண்பேன்டா )

தமிழ்வாசி பிரகாஷ் said...

naanum present

♥ RomeO ♥ said...

உங்களுக்கு ஹிட்ஸ் வரவேண்டும் என்கிற காரணத்தால் இப்படி ஒரு புத்தகத்தை பிரதி எடுத்தது போல பதிவு போடுவது அநாகரிகம். ஆனந்த விகடனை சுட சுட பிரதி எடுத்ததை போல பதிவேற்றம் செய்வது காபிரைட் சட்டம் படி குற்றமே. உங்கள் மேல் அவர்கள் வழக்கு கூட குடுக்க முடியும். இதை போல பதிவுகள் போடும் முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்கவும்.

பாட்டு ரசிகன் said...

///
தமிழ்வாசி - Prakash said...

naanum present///


பிரசண்ட் போட்டாச்சி..

தமிழ்வாசி பிரகாஷ் said...

actually am sufering from political fever.

தமிழ்வாசி பிரகாஷ் said...

paattu rasigaa... aarambikkalaamaa? idli, vada, saambar, satni.

பாட்டு ரசிகன் said...

ஆட்டத்துக்கு யாரும் வரல நான கிளம்பிட்டேன்..

பாட்டு ரசிகன் said...

///
தமிழ்வாசி - Prakash said...

paattu rasigaa... aarambikkalaamaa? idli, vada, saambar, satni.///


நீயும் மனோ சேர்ந்து வேடந்தாங்கள் பிளாக்-ள ஆடுன ஆட்டத்துக்கு கருண் ரூம் போட்டு அழுதாரு..

இதனால ஆட்டத்துக்கு நான் வரல..
முடிஞ்ச நம்ம பிளாக்கு ஒரு எட்டு வந்துட்டு போ..

பாட்டு ரசிகன் said...

பிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

தெரிந்துக்கொள்ள பின்தொடருங்கள்..
http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_1491.html

செங்கோவி said...

நல்ல மனிதர் தமிழருவி மணியன்..நலல் பேச்சாற்றல்!

பாட்டு ரசிகன் said...

சிபி சினிமாவுக்கு போயிட்டாரா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

bittu padamaa irukkumo

சென்னை பித்தன் said...

//அது மட்டும் எங்களால முடியாது.. ஏன்னா நிழலை நிஜம் என்றும்,வில்லனை ஹீரோ என்றும் நம்பியே பழக்கப்பட்டு விட்டோம்.. //

வருந்த வைக்கும் உண்மை!

MANO நாஞ்சில் மனோ said...

//''தேர்தல் கமிஷன் கூடுதல் விழிப்புடன் காரியம் ஆற்றினால், கலைஞர் ஆட்சி கவிழக்கூடும்!''//

இது நூற்றுக்கு நூறு உண்மை காரணம் கருணாநிதி இப்போது ஜெயலலிதாவை விட்டு விட்டு தேர்தல் கமிஷனையே காராடுகிறார்....

MANO நாஞ்சில் மனோ said...

''அவர் எந்தப் பிரச்னையிலும் வாய் திறக்காமல் இருப்பதற்கு வழங்கப்பட்டதுதான் பிரதமர் பதவி என்பதை அவர் நன்கு அறிவார்!''///

இது பச்சை பிள்ளைக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே...

MANO நாஞ்சில் மனோ said...

//நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் காலாக்காயே மேல் என சிலர் நினைக்கிறார்களே.. ? என்ன செய்வது?//

யாருய்யா கலா [மாஸ்டர்] அக்காவா...?

MANO நாஞ்சில் மனோ said...

//''களை பறிக்காமலேயே விளைச்சலைப் பெருக்க வீண் கனவு காணும் இளம் விவசாயி!''//

ராகுல்கான்....

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆனந்த விகடனும் தமிழருவி மணியனும் வீசிய எலும்பு துண்டுக்கு விசுவாசமாய் வாலாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Ashok said...

ஆனந்த விகடனும் தமிழருவி மணியனும் வீசிய எலும்பு துண்டுக்கு விசுவாசமாய் வாலாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.///

அதே அதே!! சிபி சார்.. நீங்க ஏன் வர வர விகடன்ல வர்றத அப்படியே போடுறீங்க? சீரியசாவே கேக்குறேன்!

ttpian said...

இருந்த வரை கும்மி அடித்துவிட்டு,
இப்போது... குய்யோ முறையோ என்று
ஒப்பாரி பாடுவதை எப்படி ஏற்றுகொள்வேன்

ராஜ நடராஜன் said...

//காமராஜர், ஜீவா,கக்கன் இவங்க எல்லாம் வாழும் காலத்தில் பிழைக்கத்தெரியாதவர்கள் என பேசப்பட்டாலும் இன்று சரித்திரம் அவர்களை போற்றுகிறதே.. அதே போல் உங்களையும் நாளைய சரித்திரம் அடையாளம் கண்டு கொள்ளும் சார்.. //

இடுகைக்கு மகுடம்!வாழ்த்துகள்.

Jana said...

ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

ஜோதிஜி said...

உண்மைத்தமிழனுக்குப் பிறகு வெகுஜன ஊடகத்தில் நான் வாசிக்க முடியாத பல விசயங்களை உங்கள் மூலம் தான் வாசிக்க முடிகின்றது. இந்த இடுகை என்னைப் பொறுத்தவரையிலும் முக்கியமானது. எந்தந்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று தமிழருவி மணியன் சொல்லியிருப்பது முக்கியமானது. நன்றி செந்தில்.

maduraikaran said...

தமிழருவி மணியன் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மடல் எழுதி நாம்ப கேக்க நினைச்ச கேள்விகள் எல்லாம் கேட்பது கொஞ்சம் அறுதல இருக்கு... ஆனா யாரும் அவருக்கு பதில் சொல்லல அது தான் நம்மோட தலை எழுத்து - http://maduraianand.blogspot.com/