Wednesday, November 10, 2010

வல்லக்கோட்டை -குப்பைப்படத்தை கும்மி அடிக்கும் காமெடி விமர்சனம்


ஆக்‌ஷன் போங்கு அர்ஜூனும் பொணரஞ்சக இயக்குநர் வெங்கடேஷும்

வாங்க ,வெங்கடேஷ்,வாடா உலகத்தரமான படத்தை இயக்கியதற்குப்பிறகு அடுத்த உலகப்படம் இதுதானா சார்

அர்ஜூன்,சும்மா நக்கல் அடிக்காதீங்க.அங்கே மட்டும் என்ன வாழுதாம்?திருவண்ணாமலைனு ஒரு டப்பா படத்தை குடுத்தவர்தானே நீங்க?

ஏன்?வந்தே மாதரம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

அதுல நீங்க ஹீரோ கிடையாதே?மம்முட்டிதானே ஹீரோ.நீங்க செகண்ட் ஹீரோ,டம்மி பீசு.

சரி,இப்படி 2 மொக்கைகளை ஒண்ணு சேர்த்து ஒரு படம் பண்ணனும்னு புரொடியூசருக்கு ஐடியா வந்தது எப்படி?

அதுவா,புரொடியூசரு பி எஸ் சி மேத்ஸ் படிச்சவராம்.மைனஸ் இண்ட் மைனஸ் = பிளஸ் அப்படினு படிச்சிருக்காராம்.2 உதவாக்கரைகளை இணைச்சா ஏதோ தேறும்னு தப்பு கணக்கு போட்டிருக்கார்.

சரி படத்துக்கு ஏன் வல்லக்கோட்டைனு கேவலமா டைட்டில் வெச்சிருக்கீங்க?அடிக்கடி வாயு புத்திரன்னு படம் பூரா பில்டப் குடுத்தீங்களே,அதையே டைட்டில் ஆக்கி இருக்கலாமே?

அப்படித்தான் முதல்ல வெச்சோம்,அது தூய தமிழ் டைட்டில் இல்லைனு சொல்லிட்டாங்க,சரி வரி விலக்குக்கு ஆசப்பட்டு தூய தமிழ்ப்பெயரா வெச்சுட்டோம்.



அட
சார்,நடிக்கறப்பத்தான் கதை என்னன்னு சொல்லலை,இப்பவாவது சொல்லுங்களேன்.

சந்தடி சாக்குல நடிச்சேன்னு எல்லாம் ரீல் விடாதீங்க,கதை என்னன்னா....
சிறைக்கைதி ஒருத்தன் சக கைதியின் தம்பியை காப்பாத்த வாக்கு தர்றான்.அவனோட தம்பி ஹாஸ்பிடல்ல.அவனை காப்பாத்த எடுக்கும் முயற்சில அவன் பல சிக்கல்ல மாட்டி இருக்கறதா தெரிய வருது.இதுக்குள்ள ரிலீஸ் ஆகி வர்ற சக கைதி பணத்துக்காக ஆசைப்பட்டு தம்பிக்கு எதிரா வேலை செய்யறான்.ஹீரோ அப்பப்ப வாயு புத்திரன் அவதாரம் எடுத்து அந்நியன் ரேஞ்சுக்கு அநியாயத்தை தட்டி கேக்கறார்.(தட்டாம கேக்கக்கூடாதா?)
சக கைதி தாந்தான் வாயுபுத்ரன்னு ஊரை நம்ப வெச்சு ஏமாத்தறார்......

சார்..தலையை சுத்துது,ஒண்ணும் புரியலை...இதுக்கு கதை என்னனு கேக்காமயே இருந்திருக்கலாம்.ஹீரோயின் புதுசு போல,ஃபிகர் நல்லாத்தான் இருக்கு...?

ஃபிகர் நல்லாருக்கு..ஆனா டூயட் சீன்ல உங்க பக்கத்துல நிக்கறப்ப அப்பா ,பொண்ணு மாதிரி இருக்கு...

சரி சரி.. பப்ளீக் .பப்ளிக் 


அட
குப்பையில் கிடைத்த மாணீக்க வரிகள்


1.டெரர் தென்னரசாக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி - யோவ் நான் ஒரு ஜெயிலர்யா,ஜெயிலர்ட்ட பேசற மாதிரி பேசுங்க ,என்னவோ டெயிலர்ட்ட பேசற மாதிரி பேசறீங்களே..?

2.நல்ல நடத்தை இருந்தா ரிலீஸ் பண்ணுவாங்களாமே. /நான் நல்லா நடப்பேன் பார்க்கறீங்களா?

 எங்கே நட...

அட மூதேவி ,இப்படி நடந்தா ரிலீஸ் ஆனாக்கூட நீ ஊர் போய்ச்சேர ஒரு வாரம் ஆகுமேடா..

3.சார், எனக்குப்பதிலா அவரை ரிலீஸ் பண்ணுங்க,ஊர்ல ஏதோ முக்கிய வேலை இருக்காம்.

இது என்ன டி வி சீரியல்னு நினைச்சியா?யாரோட கால்ஷீட்டாவது கிடைக்கலன்னா இனி இவருக்குப்பதில் இவர்னு டைட்டில்ல காண்பிச்சு மாத்த?

4. வில்லன் சார்,உங்க பேரை சொல்லுங்க...

எதுக்கு?

இல்லை ,உங்க பேரை கேட்டா உச்சா போயிடுவாங்கனு எல்லாரும் பில்டப் குடுத்தாங்க..எனக்கு இப்போ உச்சா போகனும்..

5.டே நாயே இது ஜெயில்,பிரைவேட் பாத்ரூம் கிடையாது..உலகத்துலயே ஜன்னல் வெச்ச ஜட்டி போட்டிருக்கறது நீ ஒருத்தன் தாண்டா.

6. சார் நீங்க எனக்குத்தாத்தா மாதிரி...

அடப்பாவி ஊர்ல தாதா மாதிரி பில்டப் குடுத்து வெச்சிருக்கேன்,என்னை தாத்தா ஆக்கீட்டியே..

7.நான் இந்த ஜெயில்ல சப்பற வயசரா இருக்கேன்.

என்னடா உளர்றே.. ஓ சூப்பர்வைசரா இருக்கியா?உனக்குதான் இங்கிலீஷ் வர்லையே விட்டுட வேண்டியதுதானே,,

8.இப்படியே நீந்திப்போனா கரை வந்துடுமா?

அந்தப்பக்கம் போனா கரை வராது,ரத்தக்கறைதான் வரும் .அது வில்லன் ஏரியா.

9. ஏப்பா,அவனா உன்னை தண்ணில தள்ளி விட்டான்?

நான் என்ன மானங்கெட்டவனா?அவன் தள்ளி விடறவைக்கும் வேடிக்கை பார்க்க,நானே குதிச்சுட்டேன்.

10.

ஷகீலா தோளில் கை வைத்து கஞ்சா கருப்பு  - இதை மெயிண்டைன் பண்ணறது ரொம்ப சிரமமா இருக்கே....

ஓகே வெங்க்டேஷ் சார்,எப்படியோ கஷ்டப்பட்டு 10 வசனம் சொல்லீட்டீங்க.14 ரீல் படத்துல நீங்களே 10 வசனம்தான் ரசிச்சா சராசரி ஜனங்க எத்தனையை ரசிக்கப்போறாங்க.. சார் ஒரு டவுட்,அந்த பக்கெட் ஃபைட் ரொம்ப கேவலமா இருக்கு....

நீங்க போடற எல்லா ஃபைட்டுமே கேவலமாத்தான் இருக்கு அதுக்காக எல்லாத்தையும் கட் பண்ண முடியுமா?

அது சரி சார்,ஒரு சீன்ல போலீஸ் ஹீரோயின் கிட்டே “என் கூட ஒரு நைட் படுத்துடு,இல்லைன்னா பொய்க்கேஸ் போட்டுடுவேன்”னு  சொல்ற மாதிரி கேவலமா ஒரு வசனம் வருதே ,மாதர் சங்கங்கள் எதிர்க்க மாட்டாங்களா?

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி அர்ஜூன்,என்னமோ உங்க படத்துக்கு  லேடீஸ் கூட்டம் அலை மோதற மாதிரி பில்டப் குடுக்கறீங்களே...

சரி சரி சரக்கு ரெடியானு  ஒரு டப்பாங்குத்து பாட்டு வெச்சிருக்கீங்களே,அது வேணா பாக்கற மாதிரி இருக்கு.கடைசியா ஒரு கேள்வி, இந்தப்படத்தை என்ன தைரியத்துல தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுனீஙக?

ஏதோ ,லீவ் டைம்ல ரிலீஸ் ஆனா வெள்ளீ சனி ஞாயிறு அப்படினு 3 நாளாவது ஓடும்னுதான்.

ஆனந்த விகடன்,குமுதம் மதிப்பீடு எப்படி இருக்கும்?

இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?வீணாப்போன படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடற அட்ராசக்க வேணா போடும்.

டிஸ்கி  - ராம்சாமி - டேய் நாயே,இங்கே வா உன் பேர் என்ன?

சி பி  - என் பேரு சி பி எஸ் .

ராம்சாமி - என்னவோ பெருசா ஐ பி எஸ் படிச்ச மாதிரி பில்டப் எதுக்கு?இந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதுன்னு யாரவது கேட்டாங்களா?

இல்லைண்ணே...

ராம்சாமி - அப்புறம் என்ன இதுக்கோசரம் எழுதுனே,நீயே டைட்டில்ல குப்பைன்னு சொல்லிட்டே இல்ல..இனிமே எந்தப்படத்துக்கும் விமர்சனமே எழுதக்கூடாது,.. புரிஞ்சுதா..

சரிங்கண்ணே... 

ராம்சாமி - இன்னைக்கு ஒரு அடிமை சிக்கீட்டான்யா

87 comments:

Anonymous said...

இத..இத ..இதத்தான் எதிர்பார்த்தேன்..செம டச்சிங் பதிவு..முத வடை எனக்கே

Anonymous said...

அர்ஜூன் உலக மஹா நடிகர்தான்...ஆனா வெங்கடேஷ் ,விஜய் அருணுக்கே வாழ்க்கை கொடுத்தவராச்சே

Anonymous said...

ஒரு சீன்ல போலீஸ் ஹீரோயின் கிட்டே “என் கூட ஒரு நைட் படுத்துடு,இல்லைன்னா பொய்க்கேஸ் போட்டுடுவேன்”னு சொல்ற மாதிரி கேவலமா ஒரு வசனம் வருதே ,மாதர் சங்கங்கள் எதிர்க்க மாட்டாங்களா//
இது என்ன ரஜினி படமா?எதிர்த்து புகழ் அடைய...?
அவங்க பார்க்கிரதுக்குள்ள தான் படப்பெட்டி புரடியூசர் வீட்டுக்கு போயிடுமே

Anonymous said...

டே நாயே இது ஜெயில்,பிரைவேட் பாத்ரூம் கிடையாது..உலகத்துலயே ஜன்னல் வெச்ச ஜட்டி போட்டிருக்கறது நீ ஒருத்தன் தாண்டா.//
எல்லாம் சிபி ஜோக் மாதிரி மொக்கையா இருக்கு

Anonymous said...

வீணாப்போன படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடற அட்ராசக்க வேணா போடும்.//
நாங்க மண்ணை அள்ளும்போதே நீங்க மண்ணை அள்ளி தலையில போட்டுகிட்டீங்களே

Anonymous said...

இப்படி கூட விமர்சனம் எழுதலாம் நு உலக விமர்சகர்களுக்கே வழிகாட்டிய சிபி வாழ்க..

Anonymous said...

ஆனந்த விகடன்,குமுதம் மதிப்பீடு எப்படி இருக்கும்//
ஒரு பக்கத்தை வீண் பண்ணிட்டாங்க

Anonymous said...

இல்லை ,உங்க பேரை கேட்டா உச்சா போயிடுவாங்கனு எல்லாரும் பில்டப் குடுத்தாங்க..எனக்கு இப்போ உச்சா போகனும்..//
ஹஹா

Anonymous said...

சார்..தலையை சுத்துது,ஒண்ணும் புரியலை...இதுக்கு கதை என்னனு கேக்காமயே இருந்திருக்கலாம்.ஹீரோயின் புதுசு போல,ஃபிகர் நல்லாத்தான் இருக்கு...?
//
அதை பேசுய்யா..கதை கிதை அசிங்கமா பேசிகிட்டு..?

அன்புடன் மலிக்கா said...

ஆகா நல்ல காமெடியாவுல்ல இருக்கு..

Anonymous said...

மலிக்கா..உங்களுக்கே நியாயமா..இவரு சினிமா விமர்சனம் எழுதி இருக்காரு...காமெடியா இருக்குன்னு படத்துக்கு போயி பேதி ஆயிடாதீங்க

Anonymous said...

சீன் படம் எதுவும் தீபாவளிக்கு வர்லியா

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இத..இத ..இதத்தான் எதிர்பார்த்தேன்..செம டச்சிங் பதிவு..முத வடை எனக்கே


அடேங்கப்பா...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

அர்ஜூன் உலக மஹா நடிகர்தான்...ஆனா வெங்கடேஷ் ,விஜய் அருணுக்கே வாழ்க்கை கொடுத்தவராச்சே

அங்காடித்தெரு வில்லனா வந்து உன் ஆள் அஞ்சலியை.....

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒரு சீன்ல போலீஸ் ஹீரோயின் கிட்டே “என் கூட ஒரு நைட் படுத்துடு,இல்லைன்னா பொய்க்கேஸ் போட்டுடுவேன்”னு சொல்ற மாதிரி கேவலமா ஒரு வசனம் வருதே ,மாதர் சங்கங்கள் எதிர்க்க மாட்டாங்களா//
இது என்ன ரஜினி படமா?எதிர்த்து புகழ் அடைய...?
அவங்க பார்க்கிரதுக்குள்ள தான் படப்பெட்டி புரடியூசர் வீட்டுக்கு போயிடுமே


எந்தப்பதிவிலும் ரஜினி பேரை உள்ளே இழுப்பது எப்படி?அணுகவும் நல்ல நேரம் சதிஷ்

Anonymous said...

தமிழ்மணத்துல இணைச்சி ஓட்டும் போட்டாச்சு...

Anonymous said...

எந்தப்பதிவிலும் ரஜினி பேரை உள்ளே இழுப்பது எப்படி?அணுகவும் நல்ல நேரம் சதிஷ்//
என் பிளாக் பெயரை பிரபல படுத்தியதற்க்கு நன்றி

Anonymous said...

அங்காடித்தெரு வில்லனா வந்து உன் ஆள் அஞ்சலியை....//
புரியலையே என்னது இது?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

டே நாயே இது ஜெயில்,பிரைவேட் பாத்ரூம் கிடையாது..உலகத்துலயே ஜன்னல் வெச்ச ஜட்டி போட்டிருக்கறது நீ ஒருத்தன் தாண்டா.//
எல்லாம் சிபி ஜோக் மாதிரி மொக்கையா இருக்கு

அடப்பாவி,சந்தடி சாக்குல என்னை வாரீட்டியே? (சந்தடின்னா என்ன?)

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

வீணாப்போன படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடற அட்ராசக்க வேணா போடும்.//
நாங்க மண்ணை அள்ளும்போதே நீங்க மண்ணை அள்ளி தலையில போட்டுகிட்டீங்களே

ஹி ஹி ஹி அடி வாங்க தெம்பில்லை

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அங்காடித்தெரு வில்லனா வந்து உன் ஆள் அஞ்சலியை....//
புரியலையே என்னது இது?


அங்காடித்தெரு வில்லனா ஏ வெங்கடேஷ் நடிச்சாரே பாக்கலை?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

இப்படி கூட விமர்சனம் எழுதலாம் நு உலக விமர்சகர்களுக்கே வழிகாட்டிய சிபி வாழ்க..


பாராட்டறியா?கோர்த்து விடறியா?ஒண்ணூம் புரியல.

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆனந்த விகடன்,குமுதம் மதிப்பீடு எப்படி இருக்கும்//
ஒரு பக்கத்தை வீண் பண்ணிட்டாங்க

இல்லையே ,அவங்க போடலையே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சார்..தலையை சுத்துது,ஒண்ணும் புரியலை...இதுக்கு கதை என்னனு கேக்காமயே இருந்திருக்கலாம்.ஹீரோயின் புதுசு போல,ஃபிகர் நல்லாத்தான் இருக்கு...?
//
அதை பேசுய்யா..கதை கிதை அசிங்கமா பேசிகிட்டு..?




ஹி ப்ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

அன்புடன் மலிக்கா said...

ஆகா நல்ல காமெடியாவுல்ல இருக்கு..

நன்றி சார்,படம் தான் கடி விமர்சனமாவது காமெடியா இருக்கட்டும்னுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

மலிக்கா..உங்களுக்கே நியாயமா..இவரு சினிமா விமர்சனம் எழுதி இருக்காரு...காமெடியா இருக்குன்னு படத்துக்கு போயி பேதி ஆயிடாதீங்க


யோவ்,அவரு சொன்னது என் எழுத்து நடையை.... (ஆ இவரு பெரிய எழுத்தாளரு...நடை ஜடை பற்றி பேசறாரு,..)

Anonymous said...

இல்லையே ,அவங்க போடலையே.//
அவங்களே போடலையே அப்புறம் எதுக்கு நிங்க போட்டீங்க..படம் பார்த்தது வீணா போக கூடாதுன்னு எங்களை நோகடிக்கிறீங்களே ..உங்களை நாலு அர்ஜூன் படம் பார்க்க வைக்கணும்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணத்துல இணைச்சி ஓட்டும் போட்டாச்சு...

தான்க்ஸ்பா

Anonymous said...

யோவ்,அவரு சொன்னது என் எழுத்து நடையை.... (ஆ இவரு பெரிய எழுத்தாளரு...நடை ஜடை பற்றி பேசறாரு//
ஆமா இவரு பெரிய சாரு...இவர் நடைய கூர்ந்து கவனிக்கறாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இல்லையே ,அவங்க போடலையே.//
அவங்களே போடலையே அப்புறம் எதுக்கு நிங்க போட்டீங்க..படம் பார்த்தது வீணா போக கூடாதுன்னு எங்களை நோகடிக்கிறீங்களே ..உங்களை நாலு அர்ஜூன் படம் பார்க்க வைக்கணும்


ஹி ஹி ஹி மறுபடியும் 4 அர்ஜூன் படமா?ஆளை விடப்பா நான் எஸ்கேப்

Anonymous said...

என்ன உங்க வாசகர்கள் ஒருத்தரையும் காணோம் போன பதிவு அப்படி ஒண்ணும் மட்டம் இல்லையே..வழக்கத்தை விட..?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோவ்,அவரு சொன்னது என் எழுத்து நடையை.... (ஆ இவரு பெரிய எழுத்தாளரு...நடை ஜடை பற்றி பேசறாரு//
ஆமா இவரு பெரிய சாரு...இவர் நடைய கூர்ந்து கவனிக்கறாங்க


சாரு,ரஜினி இந்த 2 வார்த்தையும் வராமல் சதிஷ் உடன் அரை மணீ நேரம் யாராவது பேசினால் 1000 பொற்காசுகள் பரிசு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன உங்க வாசகர்கள் ஒருத்தரையும் காணோம் போன பதிவு அப்படி ஒண்ணும் மட்டம் இல்லையே..வழக்கத்தை விட..?

என்ன ஒரு எகத்தாளம்?அப்போ என் பதிவுகள் மட்டமா>/? அடுத்த பதிவுலக சண்டைக்கு நான் ரெடி.. நீ ரெடியா?

Anonymous said...

என்ன ஒரு எகத்தாளம்?//
ஹஹாஹா..விரைவில்...நான் ஒண்ணு எதிர்பார்க்கிறேன்..அந்த கோட்டை நீங்க மிதிச்சிட்டா பதிவுலகமே நடுங்குறா மாதிரி ஒரு பதிவு சண்டை ரெடி

Anonymous said...

கமெண்ட் போதுமில்ல...கடைய மூடி வெச்சிட்டு உருப்படியா இன்னொரு பதிவ போடுங்க...

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன ஒரு எகத்தாளம்?//
ஹஹாஹா..விரைவில்...நான் ஒண்ணு எதிர்பார்க்கிறேன்..அந்த கோட்டை நீங்க மிதிச்சிட்டா பதிவுலகமே நடுங்குறா மாதிரி ஒரு பதிவு சண்டை ரெடி



adhu அது என்ன ராமர் கோடா?லக்‌ஷ்மணன் கோடா?சொல்லு மிதிச்சுடலாம்.பதிவுலகில் இப்போ பரபரப்பே இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

கமெண்ட் போதுமில்ல...கடைய மூடி வெச்சிட்டு உருப்படியா இன்னொரு பதிவ போடுங்க...

மறுபடியும் ஒரு பதிவா?ஆளை விடு சாமி,இன்னும் 12 மணி நேரத்துக்கு நோ பதிவு

Praveenkumar said...

வணக்கம் தல..! அசத்துங்க..!! எங்க கடமையை செவ்வனே செஞ்சாச்சு..!! அதாங்க ஓட்டும் கருத்தும்..!!!

Anonymous said...

adhu அது என்ன ராமர் கோடா?லக்‌ஷ்மணன் கோடா?சொல்லு மிதிச்சுடலாம்.பதிவுலகில் இப்போ பரபரப்பே இல்லை//
எல்லாம் பதுங்கி இருக்காய்ங்க..எப்ப வேணா பாய்வாங்க..

எஸ்.கே said...

இந்த படமெல்லாம் தியேட்டர் போய் பார்க்க வேணாம். கொஞ்ச நாளில் டிவியிலேயே போட்ருவான். அப்ப வேணா பார்க்கலாம்(வேற வேலை இல்லன்னா)

சி.பி.செந்தில்குமார் said...

பிரவின்குமார் said...

வணக்கம் தல..! அசத்துங்க..!! எங்க கடமையை செவ்வனே செஞ்சாச்சு..!! அதாங்க ஓட்டும் கருத்தும்..!!!


வணக்கம் பிரவீண்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வணக்கம் தல..! அசத்துங்க..!! எங்க கடமையை செவ்வனே செஞ்சாச்சு..!! அதாங்க ஓட்டும் கருத்தும்..!!!

November 10, 2010 8:24 PM

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

adhu அது என்ன ராமர் கோடா?லக்‌ஷ்மணன் கோடா?சொல்லு மிதிச்சுடலாம்.பதிவுலகில் இப்போ பரபரப்பே இல்லை//
எல்லாம் பதுங்கி இருக்காய்ங்க..எப்ப வேணா பாய்வாங்க..

எனக்கென்ன ஆசைன்னா ஏதாவது ஒரு பிரபல பதிவருடன் நீ சண்டை போடனும் பரபரப்பை கிளப்பனும்.ஆளை செலக்ட் பண்ணி சொல்லு,கதையை முடிச்சிடலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

இந்த படமெல்லாம் தியேட்டர் போய் பார்க்க வேணாம். கொஞ்ச நாளில் டிவியிலேயே போட்ருவான். அப்ப வேணா பார்க்கலாம்(வேற வேலை இல்லன்னா)


பார்த்தீங்களா?எனக்கு வேலை வெட்டி இல்லைனு நாசூக்கா சொல்றீங்க.. அவ் அவ் அவ்

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கு நன்றி யாதவன்

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அர்ஜுன் நடிச்சு ஓடிய கடைசி நல்ல படம் வானவில்.
அதுக்கு அப்புறம் அவரும் பாக்கு தலையன் சுந்தர் மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

சி.பி.செந்தில்குமார் said...

பாக்குத்தலையனா? பேரு சூப்பரா இருக்கே?

வெங்கட் said...

@ சி.பி.,

இனிமே இந்த மாதிரி மொக்கை
படத்துக்கு விமர்சனம் எழுதுனா..
நம்ம போலீஸ்கிட்ட சொல்லி
என்கவுண்டர் பண்ண சொல்லிடுவேன்..

பாத்து சூதானமா நடந்துக்கோங்க..!!

தினேஷ்குமார் said...

இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?வீணாப்போன படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடற அட்ராசக்க வேணா போடும்.

பாஸ் வேண்டாம் பாஸ் விட்ருங்க பாஸ்

Thanglish Payan said...

Boss .appadi oru padam vanthucha?

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,....

அன்பரசன் said...

//ராம்சாமி - இன்னைக்கு ஒரு அடிமை சிக்கீட்டான்யா//

ஹே ஹே

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

@ சி.பி.,

இனிமே இந்த மாதிரி மொக்கை
படத்துக்கு விமர்சனம் எழுதுனா..
நம்ம போலீஸ்கிட்ட சொல்லி
என்கவுண்டர் பண்ண சொல்லிடுவேன்..

பாத்து சூதானமா நடந்துக்கோங்க..!!


ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?வீணாப்போன படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடற அட்ராசக்க வேணா போடும்.

பாஸ் வேண்டாம் பாஸ் விட்ருங்க பாஸ்

m m m நற நற

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,....

அப்பாடா ,நீங்களாவது சிரிச்சீங்களே,பதிவு ஊத்திக்கிச்சோனு கவலையா இருந்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//ராம்சாமி - இன்னைக்கு ஒரு அடிமை சிக்கீட்டான்யா//

ஹே ஹே

என்ன சார் ,என்னை ஓட்டறீங்ளா?மாடு ஒட்டறீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னமோ சிபி உலகப்படம் பாக்குற மாதிரித்தான். யோவ் நீ புடுங்குற எல்லா ஆணியும் தேவை இல்லாததுதான். எதுக்கு இந்த விமர்சனம்..

தினேஷ்குமார் said...

பாஸ் வணக்கம் என்ன வதம் வந்து பாக்கலையா

'பரிவை' சே.குமார் said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு...
நா படத்தைச் சொல்லலை... விமர்சனத்தைச் சொன்னேன்...

அதுக்குள்ள ஆளாளுக்கு என்னமா லுக்கு விடுறாங்க... ஸ்... அப்பா...
இப்ப நா போறேன்... ஏன்னா... வாரக் கணக்குல இல்ல தூக்கிக்கிட்டு போயி அடிப்பாங்க... முடியலை.... வரட்டா...

நல்லா இருக்கு உங்க விமர்சனம்.

சௌந்தர் said...

இந்த படத்தை ஆர்.கே.சதீஷ்குமார் மட்டும் தான் பார்த்தார் போல

செல்வா said...

//சரி,இப்படி 2 மொக்கைகளை ஒண்ணு சேர்த்து ஒரு படம் பண்ணனும்னு புரொடியூசருக்கு ஐடியா வந்தது எப்படி//

அவருக்கு ஏழரை நடக்குதாம்ல ..

செல்வா said...

//தட்டாம கேக்கக்கூடாதா?)/

நல்ல கேள்வி ..!!

செல்வா said...

//அட மூதேவி ,இப்படி நடந்தா ரிலீஸ் ஆனாக்கூட நீ ஊர் போய்ச்சேர ஒரு வாரம் ஆகுமேடா..//

இது நல்ல காமெடி ..?!

செல்வா said...

//இல்லை ,உங்க பேரை கேட்டா உச்சா போயிடுவாங்கனு எல்லாரும் பில்டப் குடுத்தாங்க..எனக்கு இப்போ உச்சா போகனும்..///

இதுவும் நல்ல காமெடிதான் ..

சி.பி.செந்தில்குமார் said...

Thanglish Payan said...

Boss .appadi oru padam vanthucha?


hi hi ஹி ஹி ஹி இந்த நக்கல் தானே வேணாம்கரது?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னமோ சிபி உலகப்படம் பாக்குற மாதிரித்தான். யோவ் நீ புடுங்குற எல்லா ஆணியும் தேவை இல்லாததுதான். எதுக்கு இந்த விமர்சனம்..


ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் வணக்கம் என்ன வதம் வந்து பாக்கலையா

இதோ வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பாஸ் வணக்கம் என்ன வதம் வந்து பாக்கலையா

November 11, 2010 12:10 PM
Delete
Blogger சே.குமார் said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு...
நா படத்தைச் சொல்லலை... விமர்சனத்தைச் சொன்னேன்...

அதுக்குள்ள ஆளாளுக்கு என்னமா லுக்கு விடுறாங்க... ஸ்... அப்பா...
இப்ப நா போறேன்... ஏன்னா... வாரக் கணக்குல இல்ல தூக்கிக்கிட்டு போயி அடிப்பாங்க... முடியலை.... வரட்டா...

நல்லா இருக்கு உங்க விமர்சனம்.

அவ்வலவு பயமா கும்மிக்கு? குமார் உங்களை யார் கை வைக்க முடியும்.சவால் விடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

இந்த படத்தை ஆர்.கே.சதீஷ்குமார் மட்டும் தான் பார்த்தார் போல

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//சரி,இப்படி 2 மொக்கைகளை ஒண்ணு சேர்த்து ஒரு படம் பண்ணனும்னு புரொடியூசருக்கு ஐடியா வந்தது எப்படி//

அவருக்கு ஏழரை நடக்குதாம்ல ..


அதே எப்படி தெரியும்?

Philosophy Prabhakaran said...

// புரொடியூசரு பி எஸ் சி மேத்ஸ் படிச்சவராம்.மைனஸ் இண்ட் மைனஸ் = பிளஸ் அப்படினு படிச்சிருக்காராம்.2 உதவாக்கரைகளை இணைச்சா ஏதோ தேறும்னு தப்பு கணக்கு போட்டிருக்கார். //

இந்த லைன் செம சூப்பர்... (அப்போ மத்த வரிகளெல்லாம் மொக்கையான்னு கேக்காதீங்க...)

Philosophy Prabhakaran said...

யாருங்க ஆர்.கே.சதீஷ்குமார்.... இந்த குத்து குத்தியிருக்கார்...

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// புரொடியூசரு பி எஸ் சி மேத்ஸ் படிச்சவராம்.மைனஸ் இண்ட் மைனஸ் = பிளஸ் அப்படினு படிச்சிருக்காராம்.2 உதவாக்கரைகளை இணைச்சா ஏதோ தேறும்னு தப்பு கணக்கு போட்டிருக்கார். //

இந்த லைன் செம சூப்பர்... (அப்போ மத்த வரிகளெல்லாம் மொக்கையான்னு கேக்காதீங்க...)


பிரபா ,நான் எதுவும் கேக்கலை.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

யாருங்க ஆர்.கே.சதீஷ்குமார்.... இந்த குத்து குத்தியிருக்கார்...

1. என் பதிவுலக குரு

2.என் நண்பன்

3.எங்க ஊர்க்காரர்

ஹேமா said...

அர்ஜுன் படம் அலுப்பில்லாமல் நாட்டுப்பற்று,மண்பற்றோடு பார்க்கலாம்.ஆனாலும் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டுபாக்கூரு பட்மா இருந்தாலும், டிக்கட்டு நல்லா இருக்குமா! ஆனா அது பேர போடாம இப்படி இருட்டடிப்பு பண்ணது சரியில்லீங்கோ..! அது பிக்சராவது இன்னும் 2-3 போட்ருக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///5.டே நாயே இது ஜெயில்,பிரைவேட் பாத்ரூம் கிடையாது..உலகத்துலயே ஜன்னல் வெச்ச ஜட்டி போட்டிருக்கறது நீ ஒருத்தன் தாண்டா.////

தப்பு தப்பு, நானும் முன்னாடி ஒரு தடவ ஜன்னல் ஜட்டி போட்டிருக்கேன்...ஹி.. ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ராம்சாமி: ங்கொக்கா மக்கா.. குப்ப படமா இருந்தாலும், மொக்க படமா இருந்தாலும், பிட்டு படம் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க வேண்டியது, அப்புறம் படம் சரியில்லேன்னு வழிய வேண்டியது, படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

ம.தி.சுதா said...

வல்லக் கோட்டையை வலசுக் கோட்டை என்று வைத்திருக்கலாமோ...

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா said...

அர்ஜுன் படம் அலுப்பில்லாமல் நாட்டுப்பற்று,மண்பற்றோடு பார்க்கலாம்.ஆனாலும் !


சாரி ஹேமா,நீங்க அர்ஜூன் ரசிகையா?இது தெரியாம கும்மீட்டனே...இப்போ என்ன பண்றது?வாபஸ் வாங்கவும் முடியாதே

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டுபாக்கூரு பட்மா இருந்தாலும், டிக்கட்டு நல்லா இருக்குமா! ஆனா அது பேர போடாம இப்படி இருட்டடிப்பு பண்ணது சரியில்லீங்கோ..! அது பிக்சராவது இன்னும் 2-3 போட்ருக்கலாம்!

அண்ணே,ஏற்கனவே 4 இருக்கு போதாதா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///5.டே நாயே இது ஜெயில்,பிரைவேட் பாத்ரூம் கிடையாது..உலகத்துலயே ஜன்னல் வெச்ச ஜட்டி போட்டிருக்கறது நீ ஒருத்தன் தாண்டா.////

தப்பு தப்பு, நானும் முன்னாடி ஒரு தடவ ஜன்னல் ஜட்டி போட்டிருக்கேன்...ஹி.. ஹி..

ஒவ்வொரு உண்மையா வெளில வருது

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ராம்சாமி: ங்கொக்கா மக்கா.. குப்ப படமா இருந்தாலும், மொக்க படமா இருந்தாலும், பிட்டு படம் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க வேண்டியது, அப்புறம் படம் சரியில்லேன்னு வழிய வேண்டியது, படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

வல்லக் கோட்டையை வலசுக் கோட்டை என்று வைத்திருக்கலாமோ...

வலசுன்னா என்னா?

சி.பி.செந்தில்குமார் said...

பிரியமுடன் பிரபு said...

NICE

நன்றி பிரபு

Azhagan said...

This is a Malayalam film... Mamooty's "Mayavi". Wonder if the malayalam film producer is aware of this tamil copy

முத்தரசு said...

இந்த படத்துக்கு விமர்சனம் ஒரு கேடா? மலையாளத்தில் வந்த மம்மூட்டி நடித்த மாயாவி ஒரு சீன் கூட மாறாமல் வந்துள்ளது. சொந்த புத்தியே இல்லையா?