Monday, November 01, 2010

ச்சே,நீ எல்லாம் ஒரு பதிவரா?

பதிவுலகில் யாராவது யார் கூடவாவது சண்டை போட்டால் தான் சுவராஸ்யம் என சிலர் சொல்கிறார்கள்.எனக்கென்னவோ அது சரியாகப்படவில்லை.எல்லோரும் ஒரே குடும்பம் போல் பழக வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

முதலில் எனக்கு ஒரு மெயில் வந்தது,உங்கள் பேட்டி வேணும் என.நான் சொன்னேன் நல்லா விசாரிச்சுக்குங்க,நான் பிரபல பதிவர்தானா?என நல்லா தெரியுமா? என தயங்கி தயங்கி தான் பேட்டி குடுத்தேன்,

பதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை பேட்டி கண்டா ( எடக்கு மடக்கா கேள்வி கேட்டா ) அவங்க என்ன செய்வாங்கன்னு பாக்கறதுதான் இந்த "பதிவர்கள் பேட்டி " பகுதி. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது சி.பி.செந்தில்குமார்....."அட்ரா சக்க" என்ற வலைப்பூவில் சக்கை போடு போடுபவர் தான் சி.பி.செந்தில்குமார்... சி.பியின் ஸ்பெஷாலிடி... ஜனரஞ்சக ஸ்டைல்... டீக்கைடை பெஞ்சு தலைப்புகள்.... பிட்டு படம் முதல் அட்டு ஃபிகர் வரை புட்டு புட்டு வைக்கிறார்...இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்.

.1. ஹைக்கூலேர்ந்து ஹாலிவுட் வரை எல்லாம் தெரிஞ்ச மாதிரியே எழுதறீங்களே , அது எப்படி பாஸ் ?

எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.


2. ப்ரொஃபைல்ல பத்திரிக்கை துறைன்னு போட்டிருக்கே என்ன பத்திரிக்கை?

ஹி ஹி எல்லா பத்திரிக்கைக்கும் எழுதறேன்,நான் ஒரு ஃபிரீலேன்ஸ் எழுத்தாளன் (ஆனா காசு குடுத்தா வாங்கிக்குவேன்).என் படைப்புகள் அதிகமா வந்தது பாக்யா,ஆனந்த விகடன் (இது நாங்க கேட்டமா?னு கேக்கக்கூடாது ஒரு ஃபுளோவுல வந்துடுச்சு.


3. தேவ லீலை பட விமர்சனம் உங்க ப்ளாக்லயே படிச்சுட்டோம்.. படம் பார்த்த அனுபத்த எங்ககிட்ட சொல்லுங்க...

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்,ஆஃப் த ரெக்கார்டா சொல்றேன்,வெளியிட்டு மானத்தை வாங்கிடாதீங்க.ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல அந்த படம் பார்த்தேன்.பொதுவா இந்த மாதிரி படம் நைட் ஷோ தான் போறது,எல்லாம் யாரும் பார்த்துடக்கூடாதுனு ஒரு பயம்தான்.முதல்லியே போயிட்டாலும் படம் போட்டு 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே ;போகனும்,இது சீன் படம் பாக்கறதுக்கான எழுதப்படாத ரூல்.ஓப்பனிங்க்ல சீன் இருந்தா முதல்லியே போயிடனும்,டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே கேட்டா விபரம் சொல்லிடுவார்.மத்த படம் செகண்ட் கிளாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான் போவோம் ஆனா இந்த மாதிரி படத்துக்கு அது ஆபத்து,பின்னால இருந்து யார் நம்மை பாக்கறாஙகனு தெரியாம போயிடும்.சோ பால்கனில கடைசி ரோ.பெரிசா சீன் இல்லைன்னாலும் இந்த மாதிரி படத்துக்கு சுவராஸ்யமே படத்துல சீன் இருக்கா ?இல்லையா?இருந்தாலும் கட் பண்ணாம போடுவாங்களா?பிட் ஏதாவது சேத்துவாங்களா?இப்படி பல எதிர்பார்ப்புகளோட போவோம்.பி பி எகிறிடும்.இடைவேளை விட்டதும் லைட் போடறப்ப ஒரு புக்கை வெச்சு முகத்தை மூடிக்கனும் (படிக்கற மாதிரி).படம் விடறதுக்கு 10 நிமிஷம் முன்னால கிளம்பிடனும்.பைக் எடுக்கனுமே?பெரும்பாலும் இந்த மாதிரி படத்துல கிளைமாக்ஸ்ல சீன் இருக்காது. (விதி விலக்கு ஏ மேன் அன்ட் டூ விமன்).

4. அந்த ஏடாகூடா ஜோக்குங்களையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க நண்பா ?

பெரும்பாலும் சொந்த சரக்கு தான்,சரக்கு இல்லைன்னா இங்கிலீஷ்,ஹிந்தி புக் படிப்பேன்.எம் ஏ ஹிந்தி படிச்சது இதுக்குதான் உதவுது.ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்


5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.


6. கலாய்ப்பதற்கு ரொம்ப வாட்டமா இருக்கற ஹீரோ யாரு ? தலயா தளபதியா?

சந்தேகமே வேணாம்,தளபதிதான்


7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி


8. ப்ரொஃபைல்ல பி.எஸ்.ஸீ மேத்சுன்னு போட்டுட்டு ஆனா கணக்கெல்லாம் 18 + ஆகவே இருக்கே... அதப்பத்தி..

பிளஸ் டூ படிக்கறப்ப சயின்ஸ் டீச்சர் செந்தாமரை செல்வி,தேவி டீச்சர் இவங்களை மேத்தமேட்டிக்ஸ் பண்ண நினைச்சேன்,நடக்கலை,நாம் கணக்குல இவ்வளவு வீக்கான்னு கோபத்துல அந்த சப்ஜெக்ட் எடுத்தேன்.


9. தொடங்கி சில மாதங்கள்ளயே உங்க வலைப்பூவோட அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்குது ? புது பதிவர்களுக்கு அட்வைஸ்...

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.

அப்புறம் நான் ஒண்னு கவனிச்சேன்,பெரும்பாலும் எல்லாரும் நேரம் கிடைக்கறப்ப பதிவு போடறாங்க.ரெகுலரா ஒரு டைம் வெச்சுக்கனும்.தினமும் காலை 7 டூ 8 நான் பதிவு போட்டுடுவேன்.ஆஃபீஸ் ல இருந்து வந்து பார்ப்பேன் விசிட்டர்ஸ் டு டே 500 தாண்டிடுச்சுன்னா விட்டுடுவேன்.குறைஞ்சிருந்தா பதிவு ஊத்திக்குச்சுனு அர்த்தம்,மாலை அல்லது இரவு இன்னொரு பதிவு போட்டுடுவேன்

10. உங்க பதிவுகள்ள உங்களுக்கு பிடிச்ச மூணு லிங்க் கொடுங்க...

கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?
கேனை டிவி வழங்கும் கெக்கெக்கே பிக்கெக்கே விருதுகள்
கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை

இது போக கடும் எதிர்ப்பை சந்தித்த பதிவு
அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.



மூன்றாம் கோணத்திற்கு பேட்டியளித்த சி.பி.க்கு நன்றி. இந்த ஈரோட்டுப் பதிவர் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

டிஸ்கி - டைட்டிலுக்கு விளக்கம் என்னன்னா நான் கண்ணாடியைப்பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என.

88 comments:

priyamudanprabu said...

who is சி.பி??
?!?!?

doubt..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்//

Nerma ..Nerma...!! (?)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்//

Office Phone Number Please...

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்

கண்ணாடி
முன் நின்று
நின் முகத்தை
பார்த்து கேட்டாயோ
கேள்வி
நின் அகத்தை
பார்த்து என்று
கேட்க்கப்போகிறாய்........

பாஸ் ஏதோ சட்டுன்னு வந்துச்சு எழுதிபுட்டேன் மன்னிச்சிடுங்க பாஸ்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என.//

அப்படியே நடந்து ஆந்திரா போயிடுங்க. நாங்க நிம்மதியா இருப்போம் . யோவ் இந்த பதிவுக்கு நான் திரும்பி கமெண்டும் ஓட்டும் போடணுமா?

அன்பரசன் said...

//இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்.//

சிபின்னா யாருங்க...
சத்யராஜ் மகனா?

சிவராம்குமார் said...

தலைப்பிலே தன்னடக்கம்!!! இப்படி தலைப்பு வெச்சா அவல் கிடைக்கும்னு யாராவது வருவாங்க... அதான :-)

Riyas said...

நல்லாயிருக்கு.. பேட்டி எடுத்தவருக்கு எவ்வளவு கொடுத்தீங்க..

Unknown said...

/// ச்சே,நீ எல்லாம் ஒரு பதிவரா? ///

-அப்படியெல்லாம் பீதிய கிளப்ப கூடாது...


அலெஸ்கா ரேங்கில் ஒரு லட்சம் ஹிட்ஸ் அடைந்த நண்பர்/தல சிபிக்கு வாழ்த்துக்கள்..

வழக்கம்போல கலக்கல் தல.

மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !


நல்லா இருங்க...

GAJA.

Chitra said...

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.

......136 posts in 105 days!!!!! cool!!!

மதுரை சரவணன் said...

இப்படி தலைப்பு பார்த்தாலே ஓடிடுவேன் இருந்தாலும் ... படிக்காலாம்ன்னு படிச்சா...சி. பி. கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்

கதிர்கா said...

நான் தினமும் வந்து செல்லும் சில ப்ளாக்-களில் உங்களின் ப்ளாக் ஒன்று. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

பிரியமுடன் பிரபு said...

who is சி.பி??
?!?!?

doubt..


இப்படிக்கு லொள்ளுடன் பிரபு

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்//

Nerma ..Nerma...!! (?)


எருமை எருமை இப்படி உளறி சரவணன் கிட்டே மாட்டிக்கிட்டியே

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்//

Office Phone Number Please...

எதுக்கு?போட்டுக்குடுக்கவா?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

வணக்கம் பாஸ்

கண்ணாடி
முன் நின்று
நின் முகத்தை
பார்த்து கேட்டாயோ
கேள்வி
நின் அகத்தை
பார்த்து என்று
கேட்க்கப்போகிறாய்........

பாஸ் ஏதோ சட்டுன்னு வந்துச்சு எழுதிபுட்டேன் மன்னிச்சிடுங்க பாஸ்....

என்னய்யா இது பாஸ்னு சொல்லி இப்படி பட்டாசை பத்த வெச்சா என்ன அர்த்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என.//

அப்படியே நடந்து ஆந்திரா போயிடுங்க. நாங்க நிம்மதியா இருப்போம் . யோவ் இந்த பதிவுக்கு நான் திரும்பி கமெண்டும் ஓட்டும் போடணுமா?

ஹி ஹி ஹி கேரளா போலாமா?பதிவர்கள் டூர்?(அங்கே தான் ஃபிகர் ஜாஸ்தி

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்.//

சிபின்னா யாருங்க...
சத்யராஜ் மகனா?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Riyas said...

நல்லாயிருக்கு.. பேட்டி எடுத்தவருக்கு எவ்வளவு கொடுத்தீங்க..

ஹி ஹி ஹி மேட்டர் எப்படியோ வெளில வந்துடுச்செ?

சி.பி.செந்தில்குமார் said...

thangaraju said...

/// ச்சே,நீ எல்லாம் ஒரு பதிவரா? ///

-அப்படியெல்லாம் பீதிய கிளப்ப கூடாது...


அலெஸ்கா ரேங்கில் ஒரு லட்சம் ஹிட்ஸ் அடைந்த நண்பர்/தல சிபிக்கு வாழ்த்துக்கள்..

வழக்கம்போல கலக்கல் தல.

மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !


நல்லா இருங்க...

GAJA.

நன்றி சார்,உங்க விரதத்தை எனக்காக மீறியத்ற்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.

......136 posts in 105 days!!!!! cool!!!

நன்றி சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

மதுரை சரவணன் said...

இப்படி தலைப்பு பார்த்தாலே ஓடிடுவேன் இருந்தாலும் ... படிக்காலாம்ன்னு படிச்சா...சி. பி. கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்

நன்றி சரவணன்

சி.பி.செந்தில்குமார் said...

கதிர்கா said...

நான் தினமும் வந்து செல்லும் சில ப்ளாக்-களில் உங்களின் ப்ளாக் ஒன்று. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி சார் என்னால உங்களுக்கு அந்த அளவு பதில் மரியாதை செய்ய முடியல,மன்னிச்சுக்குங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சிவா said...

தலைப்பிலே தன்னடக்கம்!!! இப்படி தலைப்பு வெச்சா அவல் கிடைக்கும்னு யாராவது வருவாங்க... அதான :-)


ஹி ஹி ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படில்லாம் யோசிக்கிறாங்க ப்ப ........முடியலை ....சரி அது எல்லாம் மூளை இருக்குறவங்க போடுறது ......நமக்கு தன இல்லையே

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு செந்தில் இருந்தாலும் மித வேகம் மிக நன்று ..யாராவது வயிற்று எரிச்சல்ன்னு சொன்ன பிச்சு புடுவேன் ......

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படில்லாம் யோசிக்கிறாங்க ப்ப ........முடியலை ....சரி அது எல்லாம் மூளை இருக்குறவங்க போடுறது ......நமக்கு தன இல்லையே


பாபு,அப்படி எல்லாம் சொல்லாதீங்க,உங்களைப்பாத்து நான் கத்துக்கிட்டிருக்கேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு செந்தில் இருந்தாலும் மித வேகம் மிக நன்று ..யாராவது வயிற்று எரிச்சல்ன்னு சொன்ன பிச்சு புடுவேன் ......

நன்றி பாபு,உங்களை யாராவது எதிர்த்துப்பேசிடுவாங்களா?

புதிய மனிதா. said...

கல கல பதிவுக்கு நீங்க தான் தல ..

புதிய மனிதா. said...

கல கல பதிவுக்கு நீங்க தான் தல ..

சௌந்தர் said...

5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.////

பப்ளிக் பப்ளிக்.....உண்மையை எல்லாம் இப்படி வெளியே சொல்ல கூடாது

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாருங்க இந்த சிபி.?????

சௌந்தர் said...

7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி////

மாத்திரை வேண்டுமா வெளியே போய் ஒரு தம் அடிச்சிட்டு வாங்க

karthikkumar said...

டைட்டிலுக்கு விளக்கம் என்னன்னா நான் கண்ணாடியைப்பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என////
கைல வேற சரக்கு இல்லைன்னு சொல்லுங்க

karthikkumar said...

இருந்தாலும் உங்க டைட்டில் எதிர்பார்ப்பு கொடுக்குற மாதிரி நல்ல செலக்ட் பன்னிருகீங்க

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...

வணக்கம் பாஸ்

கண்ணாடி
முன் நின்று
நின் முகத்தை
பார்த்து கேட்டாயோ
கேள்வி
நின் அகத்தை
பார்த்து என்று
கேட்க்கப்போகிறாய்........

பாஸ் ஏதோ சட்டுன்னு வந்துச்சு எழுதிபுட்டேன் மன்னிச்சிடுங்க பாஸ்....

என்னய்யா இது பாஸ்னு சொல்லி இப்படி பட்டாசை பத்த வெச்சா என்ன அர்த்தம்?

பாஸ் நான் சொன்னது கண்ணாடி முகம் ரெண்ட வச்சு சும்மா எழுதினேன் பாஸ் சத்தியமா உங்கள சொல்லலை.......

மனச தைரியமா வச்சுக்குங்கோ பாஸ் .........

THOPPITHOPPI said...

கலக்கல் பதிவு

ஆர்வா said...

பதிவுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி. தொடருங்கள் செந்தில் சார். தினம் ஒரு பதிவு போடும் உங்கள் வேகம் ஆச்சர்யபட வைக்கிறது. நான்தான் கொஞ்சம் சோம்பேறி

ரிஷபன்Meena said...

விவேக் ஒரு படத்தில் சொல்வாரே! டாக்டர் போய் மறுபடியும் படிச்சிட்டு வந்து வைத்தியம் பாருங்க என்று அது போல சொல்லத் தோனுது.

இதெல்லாம் நகைச்சுவையா கொடுமை!

மஹா அறுவை!

Anonymous said...

முன்றாம் கோணத்தை விட இங்கதான் செம ஹிட்டு போல

Anonymous said...

நல்ல இண்டர்வியூ..எற்கனவே படிக்காதவங்களுக்கு ஒரு வாய்ப்பு..பிட்டு படம் பார்க்க கத்துகொடுத்த சிபி வாழ்க..

Anonymous said...

அப்படியே நடந்து ஆந்திரா போயிடுங்க. நாங்க நிம்மதியா இருப்போம் . யோவ் இந்த பதிவுக்கு நான் திரும்பி கமெண்டும் ஓட்டும் போடணுமா//
ஹஹா

NaSo said...

//
ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.

//

பன்னிகுட்டி மாம்ஸ் இங்க பாருங்க ஒரு நம்ம கூட்டத்தில ஒரு கருப்பு ஆடு.

NaSo said...

//டைட்டிலுக்கு விளக்கம் என்னன்னா நான் கண்ணாடியைப்பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என. //

பட் உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா.ஹா

எஸ்.கே said...

NICE!!!

Thoduvanam said...

ஜனரஞ்சகமான பதிவுகள்.
மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
காளிதாசன்.

சசிகுமார் said...

Nice Post

தேவா said...

//பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என.//


அய்யய்யோ அப்ப நீங்களும் அரசியல்ல குதிக்க போறீங்களா?

karthikkumar said...

50

karthikkumar said...

50 போட்டுட்டேன் 90 வாங்கி தருவீங்களா

Unknown said...

NICE....

Unknown said...

NICE....

மங்குனி அமைச்சர் said...

நண்பரே , மிகப்பெரிய வளர்ச்சி உங்களுடையது , நிச்சையம் மேலும் அதிக வளைச்சி அடைவீர்கள் . வாழ்த்துக்கள்

ஷஹி said...

Mr.CP என்னுடைய "தொலைந்ததெல்லாம்" கவிதைக்கு தங்கள் பின்னூட்டம் கண்டேன்..நன்றி..ஆனா..'பின்னல் போட்டிருந்தேன்,ரிப்பன் கட்டியிருந்தேன்னு' எல்லாம் எழுதியிருந்தும், "சார் சார்"ன்னு அட்ரெஸ் பண்ணியிருக்கீங்களே!!! என்ன கொடும சார் இது?

செல்வா said...

//எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.//

இத படிச்சதுமே எனக்கு மயக்கம் வந்துடுச்சு .. அதனால மீதிய நாளைக்கு வந்து படிச்சிட்டு வெட்ட வரேன் ..!!

Unknown said...

கலக்கலா இருக்கு அப்பு

sasibanuu said...

Nice :) :)

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

கல கல பதிவுக்கு நீங்க தான் தல ..


நன்றி சார்.கலகல்ன்னும் இருக்கனும் ,கலக்கலாவும் இருக்கோனும்,அதான் என் லட்சியம்

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.////

பப்ளிக் பப்ளிக்.....உண்மையை எல்லாம் இப்படி வெளியே சொல்ல கூடாது


ஓக்கே தாத்தா

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

யாருங்க இந்த சிபி.?????

தம்பி சி பி ,இதுக்கு மேலயும் நீ பதிவு போடனுமா?

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி////

மாத்திரை வேண்டுமா வெளியே போய் ஒரு தம் அடிச்சிட்டு வாங்க


ஹி ஹி உங்கலை மாதிரி எனக்கு அந்தப்பழக்கமெல்லாம் இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி////

மாத்திரை வேண்டுமா வெளியே போய் ஒரு தம் அடிச்சிட்டு வாங்க

November 2, 2010 9:59 AM
Delete
Blogger karthikkumar said...

டைட்டிலுக்கு விளக்கம் என்னன்னா நான் கண்ணாடியைப்பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என////
கைல வேற சரக்கு இல்லைன்னு சொல்லுங்க

ஹி ஹி ஆமா அதை பப்ளிக்கா சொல்லனுமாப்பா>?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

இருந்தாலும் உங்க டைட்டில் எதிர்பார்ப்பு கொடுக்குற மாதிரி நல்ல செலக்ட் பன்னிருகீங்க

நம்மகிட்டா உள்ள ஒரே பிளஸ் டைட்டில்தான்னு சொல்றீங்கலா?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் இன்சிடெண்ட் கவிஞா ,தினேஷ்,வேனாம்

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

கலக்கல் பதிவு

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரிஷபன்Meena said...

விவேக் ஒரு படத்தில் சொல்வாரே! டாக்டர் போய் மறுபடியும் படிச்சிட்டு வந்து வைத்தியம் பாருங்க என்று அது போல சொல்லத் தோனுது.

இதெல்லாம் நகைச்சுவையா கொடுமை!

மஹா அறுவை!

ஓக்கே சார்,இன்னும் நல்லா உழைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கவிதை காதலன் said...

பதிவுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி. தொடருங்கள் செந்தில் சார். தினம் ஒரு பதிவு போடும் உங்கள் வேகம் ஆச்சர்யபட வைக்கிறது. நான்தான் கொஞ்சம் சோம்பேறி


நன்றி சார்.நீங்க சினிமாவுல கல்க்குவீங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

முன்றாம் கோணத்தை விட இங்கதான் செம ஹிட்டு போல

குரு,எல்லாம் அண்ணன் நீ காட்டிய வழிதான்,டைட்டில்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல இண்டர்வியூ..எற்கனவே படிக்காதவங்களுக்கு ஒரு வாய்ப்பு..பிட்டு படம் பார்க்க கத்துகொடுத்த சிபி வாழ்க..

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்படியே நடந்து ஆந்திரா போயிடுங்க. நாங்க நிம்மதியா இருப்போம் . யோவ் இந்த பதிவுக்கு நான் திரும்பி கமெண்டும் ஓட்டும் போடணுமா//
ஹஹா

என்ன சிரிப்பு?அவரு என்னை நக்கல் பண்ணுனா உனக்கு என்ன கொண்டாட்டம்?

அமைதி அப்பா said...

நீங்க போற ஸ்பீட பார்த்தா, பிளாக்க ஒரு வழி பண்ணிடுவீங்க போல இருக்கே:-))!

சி.பி.செந்தில்குமார் said...

டாடி டாடி ஓ மை டாடி ,உங்க கமெண்ட்டை படிச்சாலே ஆனந்தமே..

சி.பி.செந்தில்குமார் said...

ஷஹி said...

Mr.CP என்னுடைய "தொலைந்ததெல்லாம்" கவிதைக்கு தங்கள் பின்னூட்டம் கண்டேன்..நன்றி..ஆனா..'பின்னல் போட்டிருந்தேன்,ரிப்பன் கட்டியிருந்தேன்னு' எல்லாம் எழுதியிருந்தும், "சார் சார்"ன்னு அட்ரெஸ் பண்ணியிருக்கீங்களே!!! என்ன கொடும சார் இது?


hi hi saari நாங்க ஆண் பெண் என பிரிச்சு பாக்க மாட்டோம் பெண்ணுக்கும் சம உரிமை கொடுப்போம் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

//
ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.

//

பன்னிகுட்டி மாம்ஸ் இங்க பாருங்க ஒரு நம்ம கூட்டத்தில ஒரு கருப்பு ஆடு.

ஹி ஹி ம்மே ,ம்மே,ம்மே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

//டைட்டிலுக்கு விளக்கம் என்னன்னா நான் கண்ணாடியைப்பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என. //

பட் உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!

நன்றி நாகா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பட்டாபட்டி.. said...

ஹா.ஹா

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

NICE!!!

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

NICE!!!

November 2, 2010 12:44 PM
Delete
Blogger Kalidoss said...

ஜனரஞ்சகமான பதிவுகள்.
மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
காளிதாசன்.

மிக்க நஃன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

Nice Post

நைஸ் கமெண்ட்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தேவா said...

//பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என.//


அய்யய்யோ அப்ப நீங்களும் அரசியல்ல குதிக்க போறீங்களா?

ஹி ஹி ஹி நோ நோ

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

50 போட்டுட்டேன் 90 வாங்கி தருவீங்களா

அருண் அஈச் கிரீம் வேணா வாங்கித்தர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

NICE....

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

தனி காட்டு ராஜா said...

:)

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மங்குனி அமைசர் said...

நண்பரே , மிகப்பெரிய வளர்ச்சி உங்களுடையது , நிச்சையம் மேலும் அதிக வளைச்சி அடைவீர்கள் . வாழ்த்துக்கள்

மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

//எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.//


ஹி ஹி ஹி
இத படிச்சதுமே எனக்கு மயக்கம் வந்துடுச்சு .. அதனால மீதிய நாளைக்கு வந்து படிச்சிட்டு வெட்ட வரேன் ..!!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கலக்கலா இருக்கு அப்பு

wanRi saarநன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

sasibanuu said...

Nice :) :)

நன்றி சசி