Thursday, May 12, 2011

யார் சொல்றதையும் என்னால கேட்க முடியாது - சிம்பு கலக்கல் பேட்டி VS விகடன் - காமெடி கும்மி



ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
http://farm4.static.flickr.com/3286/2934575860_8f190f4d69.jpg 

காதல், திருமணம், குடும்பம், தனுஷ், நயன்தாரா, அனுஷ்கா... எந்தக் கேள்விக்கும் பளிச் பதில்தான்... சிம்பு ஸ்பெஷல். 'வானம்’ படத்தின் வாழ்த்துகளுக்கு நடுவில் சிம்பு ஸ்பெஷல் அரட்டை!    

சி. பி  - என்னது? வானம் படத்துக்கு வாழ்த்தா? ஹா ஹா செம காமெடி.. ஊத்திக்கிட்ட படத்துக்கு எதுக்குங்க வாழ்த்து? செத்துப்போன கிளிக்கு சிங்காரம் எதுக்கு? 




 '' 'விண்ணைத்தாண்டி வருவாயா’ ஹிட்டுக்குப் பிறகு, வேற மாதிரி படம் பண்ணணும்னு கிட்டத்தட்ட நாலு மாசம் காத்திருந்தேன்.

 சி. பி  -வேற மாதிரின்னா அந்த மாதிரி படமா? மலையாளத்துல தானே அது சரி வரும்?

வசமா, 'வானம்’ வந்தது. நல்ல படம், திறமையான நடிப்புக்கு, தமிழ் ரசிகர்கள் மரியாதை கொடுத்ததில் மகிழ்ச்சி.

சி. பி  - ஆமாமா செம மரியாதை.. 1300 பேர் உட்கார்ற தியேட்டர்ல 289 பேர் இருந்தாங்களே... பார்த்தேன். ஈரோடு அபிராமில ரிலீஸ் ஆன வானம் செம ஹிட் ஆனதால கூட்டத்தை சமாளிக்க முடியாம இன்னைக்கு அதை தூக்கிட்டு அழகர் சாமியின் குதிரை ரிலீஸ் பண்றாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqV0VCL9C1k3J54sR_kSPDwjFvi80i5h3o_IEfzDiHlTg-95JQ7bIQ7315IUZbcQ8MTGJFZq-9lmSR2HQ-QebY76XtIxZZq0_OZiKz2vKILjqDO23N10kAssr7_f5D4RTrj7Q5JCEwY8A/s400/Nayantara-Photos-074.jpg
அடுத்து,
இந்தியில் சல்மான்கான் பண்ணின 'தபாங்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறேன்.

சி பி -  யபாங்க்  -- குபாங்க்-- சபாங்க்.. பப்பாங்க்...


தரணிதான் டைரக்டர்.

சி பி -  யாரு.. குருவி அப்டின்னு ஒரு சூப்பர் ஹிட் படம் குடுத்து விஜய்யை தூக்கி விட்டாரே அவரா? ஏஹே ஹே ஹே 


ஹை டெசிபலில் கத்தி, மீசையை முறுக்கி முறுக்கிவிட்டுட்டு, பஞ்ச் டயலாக் பேசும் வழக்கமான போலீஸ் சினிமாவா இருக்காது.  யதார்த்தமான கேரக்டர். இனி, சென்சிபிள் சினிமாதான் என் சாய்ஸ்!''

சி பி - சென்சிபிளா? செக்ஸிபிளா? #டவுட்டு



1. ''பக்குவமாப் பேசுறீங்க. ஆனால், 'கோ’, 'நண்பன்’, 'வேட்டை’ன்னு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விலகுவதில், அந்தப் பக்குவம் தெரியலையே பிரதர்?''

சி. பி - ஆமாமா அண்ணன் நயன் தாரா கிட்ட கூடத்தான் கமிட் ஆனாரு.. ஆனா அவரா விலகலை.. விலக்கிட்டாங்க அண்ணி.. அவர் என்ன பண்ணூவாரு பாவம்?  


''ஒரு படத்தில் நடிப்பதும், நடிக்காததும் என் தனிப்பட்ட விஷயம். அதுக்குக்கூட எனக்குச் சுதந்திரம் கிடையாதா பிரதர்?  நீங்கள் சொல்லும் அந்தப் படங்களைப் பண்ணாததற்குப் பல காரணங்கள் இருக்கு. யார் என்ன சொன்னாலும், என்னால் அதைக் கேட்டு நடிக்க முடியாது!''

பின்னே.. அண்ணன் பஞ்ச டயலாக் பேசாம குத்தாட்டம் போடாம நடிக்க சொன்னா கோபம் வராது? விண்ணைத்தாண்டி வருவாயோ மாதிரி டீசண்ட்டா நடிக்க தன்மானம் தடுக்குதாம்.. ஹி ஹி 


2. '' 'கோ’ படத்தின் ஜீவா கேரக்டரில் உங்களைத்தான் முதல்ல கமிட் பண்ணாங்க. இப்போ படம் பார்த்துட்டு, 'ஆஹா! மிஸ் பண்ணிட்டோமே’ன்னு நினைச்சீங்களா?''

''இல்லை. என் படம் 'வானம்’ ஹிட்டா இல்லையா என்பதில்தான் நான் கவனம்செலுத்து வேன். நான் செலக்ட் பண்ணிய விஷயம் சரியா, தப்பான்னுதான் பார்ப்பேனே தவிர, வேணாம்னு ஒதுக்கியதை, வேடிக்கை பார்க்க மாட்டேன்.  அது எனக்குத் தேவை இல்லாத விஷயம். பட், நான் இன்னும் 'கோ’ பார்க்கலை!''

 சி பி - வேணாம்னு ஒதுக்கியதை, வேடிக்கை பார்க்க மாட்டீங்களா? அன்னைக்கு நயன் தாரா பக்கத்துல உக்காந்து ஸ்டேடியத்துல அத்தனை பேரும் கிரிக்கெட் பார்த்தப்ப நீங்க ஹி ஹி பம்புனீங்களே? மறந்தாச்சா? 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDGm2-3v-fPl-ZXocVc9YsGOM6RY6VqcnmQMPp6AOKRrAigxyvGQT9hWVNyI-VhWgYc8hmEpKNTPnHQ1rbs1C6NaDe9wcfQuUA2onjGuywVtEr_I3uUnuJ__868R75teziU_okWcaj-g/s400/lekha_washington.JPG

3. ''அப்பாவைப்பத்தி சின்னதா ஜோக் பண்ணாலே, கொந்தளிப்பார். ஆனா, 'வானம்’ படத்தில் நீங்களே அவரை இமிடேட் பண்ணி இருக்கீங்க. என்ன சொன்னார்?''

சி .பி - என்ன சொல்லி இருப்பார்? போறவன் வர்றவன் எல்லாம் கும்மி அடிக்கிறான்.. நீ அடிச்சுக்கோ.. ஒண்ணும் தப்பில்லைன்னு சொல்லி இருப்பார்.

''அப்பாவைக் கிண்டல் பண்ற மாதிரி, படத் துல எந்த விஷயமும் பண்ணலை. அது சும்மா ஜாலிக்காக. அப்பா, படம் பார்த்தார். அவருக்குப் பிடிச்சிருந்தது!''

 சி பி - என்னது? அவரும் ஃபுல் படத்தை பார்த்துட்டாரா? உடம்பு பரவால்லியா இப்போ.. எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்கன்னு நீங்க அப்பாவை கண்டிக்கலை? வாட் எ சன் யூ ஆர்..?


'4. 'அதே படத்தில், தனுஷ், நயன்தாராவைச் சீண்டுற மாதிரியான வசனங்கள்... இன்னும் கொஞ்சம் வம்பு மிச்சம் இருக்கோ?''

''தனுஷ§ம் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இந்த மாதிரி வசனம் வருதுன்னு அவருக்கு முன்னாடியே தெரியும். ஏன்... அவரைப்பத்தி நல்லாத்தானே சொல்லி இருக்கேன். அதுக்கு ரசிகர்களும் கை தட்டி ரசிச்சாங்களே! இதை அவர் தப்பா எடுத்துக்க மாட்டார். நீங்களும் தப்பா எடுத்துக்காதீங்க. 'ஈவினிங் நயன்தாரா பேட்டி இருக்கு’ன்னு சந்தானம் சொல்றதுல, என்ன தப்பு இருக்கு? நீங்க எதிர்பார்க்கும் எந்த ரியாக்ஷனும் அவங்ககிட்ட இல்லை... இருக்காது!''

 சி பி - அவங்க முகத்துல ரீ ஆக்‌ஷன் எப்ப்போ வந்திருக்கு இப்போ வர..? சரி சரி விடுங்க..

5. ''தம்பி குறளரசனும் சினிமாவில் நடிக்க வர்றாராமே?''

''உண்மை! அடுத்த வருஷம், படம் பண்ணுவார். அதுக்காக பரபரப்பா தயார் ஆகிட்டு இருக்கார். நிச்சயமா, அவரை நான் கைடு பண்ணுவேன். ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூட வாய்ப்பு இருக்கு!''

சி பி - என்னது ? நீங்க அவரை கைடு பண்ணுவீங்களா? நயனுக்குத்தங்கச்சி இருக்கா? சொல்லவே இல்ல? ஹா ஹா 

6. ''உங்க தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்து உங்களுக்குத்தானே... எப்போ, ஜோடி யார்னு தெரிஞ்சுக்கலாமா?''

''உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லைங்க.

 சி பி - அதானே பார்த்தேன். கல்யானம் பண்ணிக்கிட்டா ஒண்ணு.. பண்னலைன்னா ஊரெல்லாம் பொண்ணு.. 


இப்போதைக்கு நாட்டுல கல்யாணங்களைவிட, விவாகரத்துதான் ஜாஸ்தியா இருக்கு.

 சி .பி - அதெப்பிடிங்க.. 100 கல்யாணம் நடந்தா 110 விவாகரத்து வருமா? லாஜிக் மிஸ்ஸிங்க்.. உங்க படத்துல மட்டும் இல்ல.. பேட்டிலயும் இருக்கு.. 

முன்னாடி மாதிரி  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யார்கிட்டயும் இல்லை.

சி பி - ஹா ஹா பிரபு தேவாகிட்டா பேசிப்பார்த்துட்டீங்களா? ஹா ஹா 

சந்தோஷமா இருக்கும் மிகச் சில குடும்பங்களைப் பார்த்தால், யாராவது ஒருத்தர் தன் ஜோடியை நல்லாப் புரிஞ்சவரா, விட்டுக்கொடுத்துப் போறவரா இருப்பார். அந்த மனப்பொருத்தம்தான், ஒரு கல்யாணத்தின் சக்சஸ். அந்த லெவலுக்கு நான் எப்ப வர்றேன்... அல்லது வருவேனான்னுகூடத் தெரியலை!''

 சி பி - அண்ணே .. உங்க லெவலே வேற.. இப்படிக்கு உசுப்பேத்தி விடுவோர் சங்கம்.. 

7. ''முந்தைய காதல் அனுபவங்கள்தான் இவ்வளவு தூரம் உங்களை யோசிக்கவைக்குதா?''

''காதலில் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு, எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்கணும் என்பதில், தெளிவா இருக்கேன். சும்மா ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. வாழ்க்கை முழுக்க அந்தப் பெண்ணை நமக்குப் பிடிக்குமாங்கிற கேள்விக்கு பாசிட்டிவ் பதில் கிடைச்சால்தான், அடுத்து என்னன்னு யோசிக்க முடியும். வீட்ல சொல்றாங்க, வயசாகுதுன்னுலாம் ஒரு கடமையை முடிக்கிற மாதிரி, கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படி ஒரு கல்யாணம் நடந்து, அந்தப் பொண்ணுக்கு எதுவும் புரியாம, பிறகு பிரச்னையாகி பிரியுறதுக்குப் பதிலா... சும்மா இருப்பதே சுகம்!''

சி பி - அண்ணன் 2 லவ் ஃபெயிலருக்கு அப்புறம் தான் லைஃபை நல்லா புரிஞ்சிருக்காரு.. 

8. '' 'ஜோதிகாவுக்கு அடுத்து நடிப்பில் அனுஷ்காவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’ன்னு சொன்னீங்க. இப்போ வந்திருக்குற ஏகப்பட்ட புது ஹீரோயின்கள் அந்த லிஸ்ட்டில் அப்டேட் ஆகி இருக்காங்களா?''

''அனுஷ்காவை 'அருந்ததி’ன்னு ஒரே படத்திலேயே, அவ்வளவு பிடிச்சது. ஆனா, இப்போ என்கூட நடிச்சவங்க, நடிக்காதவங்கன்னு ஹீரோயின்ஸ் எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ஜோதிகா, அனுஷ்கா லிஸ்ட்டில் சேரும் அளவுக்கு, யாரும் இதுவரை என்னை ஈர்க்கலை!''

சி பி -  யாரும் ஈர்க்கலையா? சும்மா கதை விடாதீங்க.. கெட்டவன் பட ஹீரோயினுக்கு ரூட் விட்டதை மறந்துட்டீங்களா? லேகா வாஷிங்க்டன் கிட்டே உங்க நடிப்பு செமங்க.. அப்படின்னு சொன்னது  என்னாச்சு? இப்படிக்கு விடாம ஃபாலோ பண்ணி நோட் பண்ணூவோர் சங்கம்.. 



9. ''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைச்சிருக்கார். அஜீத் ரசிகரான நீங்க என்ன ஃபீல் பண்றீங்க?''


சி பி -  ஃபீல் பண்ண என்ன இருக்கு? அவருக்கு ரசிகர் மன்றம் இருந்தது,. கலைச்சாரு.. இவருக்கும் அப்படி இருந்தா கலைப்பாரு..  இவருக்கு அதைக்கலைக்க எல்லாம் எங்கே நேரம் இருக்கு..? ஹி ஹி 




''அதுபத்தி எனக்கே ஏகப்பட்ட மெயில், மெசேஜ்னு ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறாங்க. அஜீத், எதனால் அப்படி ஒரு முடிவு எடுத்தார்னு தெரியாமல், அதைப்பத்தி என்னால் எதுவும் பேச முடியாது. அவர் பேரைப் பயன்படுத்தி, வேற யாராவது, ஏதாவது பண்றாங்களான்னு தெரியலை. அவரால், எத்தனை பேரை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்க முடியும்? அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்னு நினைக்கிறேன். நிச்சயம், இதுபத்தி 'தல’கிட்ட நான் பேசுவேன்!''

சி பி - அது மரியாதை நிமித்தமான சந்திப்பா இருக்குமா? #டவுட்டு

http://s.chakpak.com/se_images/39048_-1_564_none/mandira-bedi.jpg

18 comments:

Unknown said...

அண்ணே வணக்கம்னே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி. பி -வேற மாதிரின்னா அந்த மாதிரி படமா? மலையாளத்துல தானே அது சரி வரும்?

யோவ் அது வேற மாதிரி யான வேறமாதிரி! இந்த வேற மாதிரி வேற அந்த வேற மாதிரி வேற!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி .பி - என்ன சொல்லி இருப்பார்? போறவன் வர்றவன் எல்லாம் கும்மி அடிக்கிறான்.. நீ அடிச்சுக்கோ.. ஒண்ணும் தப்பில்லைன்னு சொல்லி இருப்பார்.///

ஆஹா இது உண்மைதான் பாவம் அந்த மனுஷன் ரொம்ப நொந்து போய் கிடக்காரு!

Unknown said...

ப்ரியா(அம்)மணியை சேலையில் இவ்வளவு சூப்பரா காட்டமுடியுது உங்களால் மட்டுமே CPS !
wait i'll come there after reading !

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
Share

Unknown said...

கலக்கல் காமெடி கும்மி !

வினாயகர் with STR படம் ரெண்டு தடவ போட்டிருக்கீங்க...
நீங்க புள்ளையார் பக்தன் தான்னு நிருபிக்கவோ ?

Speed Master said...

இந்த பதிவில் டி ஆர் படம் போடததை கண்டிக்கிறேன்
=+=+=+=+=+=+=+=+=+=+=+
காலம் செய்த கோலம்

http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html

சென்னை பித்தன் said...

சிபி கமெண்ட்ஸ் அருமை!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிம்பு வழி தனி வழி...

தலைவர் சினிமாவுக்கு கிளம்பிட்டாரா..

NKS.ஹாஜா மைதீன் said...

சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு..# டவுட்டு...

Anonymous said...

அனைத்தும் கலக்கல் ...

Anonymous said...

////சி பி - யாரு.. குருவி அப்டின்னு ஒரு சூப்பர் ஹிட் படம் குடுத்து விஜய்யை தூக்கி விட்டாரே அவரா? ஏஹே ஹே ஹே /// ஹிஹிஹிஹி விஜயை காமெடி நடிகராக்கிவிட்டவர்.

தனிமரம் said...

வானம் பார்த்த கடுப்பு இன்னும் தீரல நீங்கவேறு கடாய்க்கிறீங்களா இருங்க ஆட்டோ அனுப்புறன்.

Unknown said...

you are jealous of SIMBU.

Unknown said...

//Prasanna Kumar said..
you are jealous of SIMBU.//
யார் சொன்னா ?
அவருக்கு நயன்தாரா மேலயும் தான் jealousu

செங்கோவி said...

செம கும்மு கும்மி இருக்கீங்க..அதுவும் கல்யானம்-விவாகரத்து லாஜிக் சூப்பர்.

Unknown said...

உங்கள் கவுண்டர் அட்டாக் நல்லா இருக்குங்க சிபி.

மர்மயோகி said...

ஒரு ஆபாச பத்திரிக்கைல வர்றத மெனக்கெட்டு டைப் பண்ணி அதற்கு இலவச விளம்பரம் கொடுக்கும் நீ ஒரு ஆபாச வியாபாரிடா ..இதுக்கு இன்னொரு பேரும் இருக்கு..த்தூ