Friday, April 29, 2011

கோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வை

 http://www.lordmurugan.com/images/parankundram_moolasthan.gif
திக்கெட்டும் அருள் பொங்கும் கொங்குநாட்டு கோயில்கள்!

அருள் தரும் ஆலயங்கள்

கோவை- கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் இந்தப் பெருநகரம், தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவதற்குக் காரணம், இங்கு அமைந்திருக்கும் கோயில்களும், மக்களின் குறைதீர்க்கும் தெய்வங்களுமே!

1. தண்டுமாரியம்மனுக்கு நெய் விளக்கு! 
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த திப்புசுல்தானின் பெரும்படைகள் கோவைக் கோட்டையில் முகாமிட்டிருந்தன. படை வீரர்களில் ஒருவன், அம்பாள் உபாஸகன். அவன் கனவில் தோன்றிய அம்பிகை, தான் யுகம் யுகமாக இந்த இடத்தில் வசிப்பதாகவும், நீர்ச் சுனைக்கு அருகில், வேப்ப மரங்களும் செடி- கொடிகளும் நிறைந்த இடத்தில் வீற்றிருப்பதாகவும் கூறினாள்.

மறுநாள் காலையில், அம்பிகை குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றான் படைவீரன். அங்கே, தெய்வீகம் பொங்கும் விக்கிரக ரூபமாகக்காட்சி தரும் அம்பாளைக் கண்டு மெய்சிலிர்த்தான். நல்லதொரு சுபமுகூர்த்த தினத்தில், சின்னதாக மேடை அமைத்து, அதில் அம்பாளை எழுந்தருளச் செய்தான். கூடாரத்தில் தங்கியிருந்த படைவீரனின் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்தியதால், இந்த அம்பாளுக்கு ஸ்ரீதண்டுமாரியம்மன் என்று பெயர் வந்ததாம் (வீரர்கள் தங்கும் கூடாரத்தைத் 'தண்டு’ என்பர்). 

தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து, ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட, திருமணத் தடைகள் நீங்கும்; குழந்தை உருவ பொம்மையைக் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்துகொண்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.


2. காமதேனு அருள்பெற்ற பட்டீஸ்வரம்! 

காமதேனுவுக்கு அருள்புரிந்த சிவப் பரம்பொருள், அந்தத் தெய்வப் பசுவுக்கு ஏற்றம் தரும் வகையில், தனது லிங்கத் திருமேனியில் கொம்பு மற்றும் கால்குளம்பின் சுவடுகளுடன் காட்சி தரும் அற்புதத் திருத்தலம்- பேரூர் பட்டீஸ்வரம். காமதேனுபுரி, பட்டிபுரி என்றும் போற்றுவர். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசனுக்கு, ஸ்ரீபட்டிஸ்வரர் என்பது திருநாமம். அம்பாள்- ஸ்ரீபச்சைநாயகி.

இங்குள்ள ஸ்ரீநடராஜப் பெருமானின் திருமேனி, கொள்ளை அழகு! இதனாலேயே, கொங்குச் சோழர்கள் இந்தக் கோயிலை 'மேலைச் சிதம்பரம்’ என்று போற்றியுள்ளனர். பேரூர் ஆலயம் வந்து ஆடல்வல்லானைத் தரிசித்து வழிபட, கல்வி-கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. ஸ்ரீபட்டீஸ்வரரிடம் வந்து முறையிட்டால் காணாமல் போன பொருள்கள் விரைவில் திரும்பக் கிடைக்கும் என்கின்றனர்.


3. பண்ணாரி மாரியம்மன்! 

கோவை- மைசூர் பாதையில், சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபண்ணாரி மாரியம்மன். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், அம்மன் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலம் இது என்கின்றனர்.

தினமும் இந்தத் திருவிடத்துக்கு வரும் பசு மாடு ஒன்று, இங்கே வேங்கை மரத்தடியில் இருந்த புதரின் மீது பால் சொரியுமாம். இதைக் கண்ட கிராமத்தவர்கள், ஒருநாள் அந்தப் புதரை விலக்கிப் பார்க்க, அம்பிகையின் சுயம்பு விக்கிரகத்தைக் கண்டு சிலிர்த்துப்போனார்கள். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் அருளாக வந்திறங்கிய அம்மன், ''இங்கே குடியிருக்கும் நான் எல்லோருக்கும் பாதுகாவலாக இருப்பேன்.

கேரளா மற்றும் கோவையில் இருந்து மைசூர் செல்லும் வணிகப் பெருமக்களுக்கு உறுதுணையாக இருந்து அருள்பாலிப்பேன்'' என்றாளாம்.
தினமும் 4 கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா விசேஷம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க வருகிறார்கள். 

இதனால், வேண்டியது நிறைவேறும், நோய்நொடிகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை. தங்க ரதம் வடம் பிடித்தல் மற்றும் ஆடி நோன்பு முதலான வழிபாடுகளும் இங்கே பிரசித்தம்.


4. முதல் அழைப்பு கோணியம்மனுக்கு! 

கோவை- ஸ்ரீகோணியம்மன் ஆலயம், 13-ஆம் நூற்றாண்டில் இருளர்களால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.

எதைச் செய்தாலும் இந்த அம்மனை வழிபட்டு விட்டுத் தொடங்குவதே கொங்கு மன்னர்களின் வழக்கமாம். இன்றும் இந்த அம்மனிடம் ஆசிபெற்ற பிறகே முக்கிய காரியங்களில் இறங்குகிறார்கள் கோவை மக்கள். கல்யாணம் முதலான சுபச் சடங்கு களின்போதும், முதல் பத்திரிகை கோணியம்மனுக்கே. துயரங்கள் தீரவும், நோய்கள் விலகவும், எண்ணியது நிறைவேறவும் வேண்டி, கோணியம்மனை மனதார வழிபடுகின்றனர்.


இங்கு வந்து மஞ்சள்காப்பு சாத்துவது, உப்பு இடுவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வதன் மூலம் அம்மனின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோணியம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமாம். மேலும் நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு ஆகிய விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன. கோவை சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகோணியம்மன் திருக்கோயில்.


5. மருதமலைக்கு வந்து பாருங்க..! 

முருகப்பெருமானின் படைவீடுகள் அமைந்திடாத மாவட்டம் கோவை என்றாலும், படை வீடுகளுக்கு இணையான மருதமலையைப் பெற்றுத் திகழ்கிறது. மருத மரங்கள் நிறைந்திருப்பதால் மருதமலை எனும் பெயர் வந்தது என்கிறார்கள்.

இந்த மலைக்கு வந்த சித்தர் ஒருவர் தாகத்தால் தவித்தாராம். தாகம் தணிக்கத் தண்ணீர் தரும்படி முருகப் பெருமானிடம் வேண்டினாராம். மறுகணம், சுற்றிலும் இருந்த மருத மரங்களில் இருந்து தண்ணீர் கொட்டியதாம். சித்தரின் தாகம் தணிந்தது. இந்த அருளாடலால் மகிழ்ந்த அந்த சித்தர், 'மருதாஜலபதி’ என முருகனைப் போற்றினாராம். இதுவே பின்னர் மருதாசலபதி ஆனதாகச் சொல்வர் (சலம் என்றால் மலை; மருதமலையில் வீற்றிருப்பதால் மருதாசலபதி என்றும் சிலர் விவரிப்பர்). அற்புதமான இந்த ஆலயம் தோன்றியது கி.பி.12-ல் என்கிறார்கள்!

தெய்வப்பசுவாம் காமதேனுவும் இங்கு வந்து வழிபட்டுள்ளதாகப் புராணங்கள் கூறும். தைப்பூசம், திருக்கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தமிழர் திருநாள் ஆகிய விழாக் காலங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாற்குடம், காவடிகள் சுமந்து வந்தும், முடி காணிக்கை செலுத்தியும், படி பூஜை செய்தும் முருகப் பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.

இங்கு அருள்பாலிக்கும் தான்தோன்றிப் பிள்ளையா ரும் வரப்பிரசாதியானவர். பாம்பாட்டிச் சித்தர் தவமிருந்து முக்தி பெற்ற இந்தத் தலத்தில், சித்தரின் குகைக்குச் சென்று வழிபட, அவரின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். மருதமலை முருகனை தனது இஷ்டதெய்வமாகப் போற்றிய, சாண்டோ சின்னப்பா தேவர் இந்தக் கோயிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்திருக்கிறார். கோவையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது மருதமலை. நீங்களும் ஒருமுறை மருதமலை முருகனைத் தரிசித்து வாருங்கள்; உங்களின் தீராத வினைகளும் தீரும் பாருங்கள்!

6. ஈச்சனாரி பிள்ளையார்! 

பேரூர், ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயத்துக்காக விநாயகர் விக்கிரகம் ஒன்று வடிக்கப்பட்டு, மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டது. சிலையைச் சுமந்து வந்த வண்டி, ஈச்சனாரி அருகில் வரும்போது நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் வண்டியை நகர்த்த முடியவில்லை. 'பிள்ளையார் இந்த இடத்திலேயே தங்க விரும்புகிறார்போலும்’ என முடிவு செய்த மக்கள், ஈச்சனாரியில் பிள்ளையாருக்கு கோயில் எழுப்பினராம் (கி.பி. 1500-ல் கட்டப்பட்டது என்கின்றனர்).

பிரணவ சொரூபமாகக் காட்சி தருகிறார் ஈச்சனாரி பிள்ளையார். எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் தரிசனம் தெளிவாகக் கிடைக்கும்படி மூலவரை அமைத்துள்ளது சிறப்பு. கல்வி, கலை மற்றும்தொழிலில் சிறக்க, இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை, சரஸ்வதி பூஜை மற்றும் திருக்கார்த்திகை தீப விழா இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சனாரி பிள்ளையார் திருக்கோயில்.


7. குழந்தை வரம் அருளும் கோதண்டராமர்! 

கோவையில் ஸ்ரீராமனுக்கு ஓர் ஆலயம் வேண்டும் எனும் விருப்பத்துடன் பக்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி ஆலயம், சுமார் 77 வருடங்கள் பழைமை வாய்ந்தது. சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே கோயில்கொண்டிருக்கிறார் இந்த கோதண்டராமர்!

இங்கே சீதாதேவி மற்றும் தம்பி லட்சுமணனுடன் ஸ்ரீராமன் தெற்கு நோக்கிச் சந்நிதி கொண்டிருப்பது விசேஷ அம்சம். இவரின் சந்நிதிக்கு நேர் எதிரில் அனுமன் சந்நிதி. மேலும் இங்கு ஸ்ரீவிநாயகர், நவக்கிரக சந்நிதிகளையும் தனிச் சந்நிதியில் அருளும் லிங்க மூர்த்தத்தையும் தரிசிக்கலாம்.

ஐந்து நிலை கோபுரத்துடன் அழகுறத் திகழும் ஸ்ரீராமர் ஆலயத்தில், தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீராமநவமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில்...
கஷ்ட நிவர்த்திக்காக ஸ்ரீமகா சுதர்சன ஹோமம், வியாதி நிவர்த்திக்காக ஸ்ரீதன்வந்திரி ஹோமம், குழந்தைகளின் கல்வி சிறக்க ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் ஆகியன நடைபெறுகின்றன.

கலியுகத்தில் அனைத்து நன்மைகளையும் பெற்றுச் சிறக்கும் மார்க்கமாக, ஸ்ரீமந் நாராயணரால் நாரத முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட வழிபாடு- ஸ்ரீசத்ய நாராயண பூஜை. பௌர்ணமி தினங்களில் மாலை வேளையில் மிக அற்புதமாக நடைபெறுகிறது இந்த பூஜை. குழந்தை வரம் அருளும் தெய்வமான ஸ்ரீகோதண்டராமருக்குச் துளசி மாலை சமர்ப்பித்து வழிபட, துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
 http://www.namadwaar.org/images/kalyanasrinivasaperumal.jpg
8. பிணி தீர்க்கும் காரமடைப் பெருமாள்! 

கோவையிலிருந்து சுமார் 29 கி.மீ. தூரத்தில் உள்ளது காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயம். இந்தப் பெருமாளுக்கு ஸ்ரீஅரங்க வேங்கடேசன், ஸ்ரீஅச்சுதன் ஆகிய திருநாமங்களும் உண்டு. உற்ஸவர் ஸ்ரீவேங்கடேசபெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் அருள்கிறார். தாயார் அரங்கநாயகி; மலையில் குடிகொண்டிருப்பதால், 'பெட்டத்து அம்மன்’ என்றும் திருப்பெயர் உண்டு. கோதை நாச்சியாரும் வரமருளும் நாயகியாய் இங்கு சந்நிதி கொண்டிருக்கிறாள்.

மூலவர் சுயம்புவாக, கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாகிய இங்கு, வைணவ சம்பிரதாயப்படி பஞ்ச சம்ஸ்காரங்களை இந்தத் தலத்தாரிடம் (பட்டர்களிடம்) பெற்று, அரங்கனுக்கு அடிமைப் பணி செய்யும் தாசர்களின் பந்த சேவை, தண்ணீர் சேவை, கவாள சேவை ஆகியன பாரம்பரியமானவை. நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, திருத்தேர் விழா ஆகியன இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. 

திருக்கல்யாண உற்ஸவத்தையட்டி, பெட்டத்து அம்மன் மலைக்குச் செல்லும் அர்ச்சகரே தாயாராக பாவிக்கப்பட்டு அழைத்து வரப்படுவார். பிறகு, ராமபாணம் சுழற்றும் வைபவமும், அவர்கள் கோயிலை அடைந்ததும் திருக்கல்யாணமும் சிறப்புற நடைபெறும்.

சுமார் 1,600 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம்; சுயம்புவாகத் தோன்றிய பெருமாளுக்குத் திருமலை நாயக்கர் கட்டிய கோயில் இது! கரிகால் சோழன், மைசூர் மன்னர், கிருஷ்ணதேவ உடையார் ஆகியோரும் இங்கு வழிபட்டுள்ளனர்.

திருமலைநாயக்கரின் ராஜபிளவை நோய் தீர அருளியவர் இந்தப் பெருமாள். இவரை வழிபட, பக்தகோடிகளின் பிணிகளையும் நீக்கி அருள்புரிவார் என்பது நம்பிக்கை.


நன்றி - சக்தி விகடன்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி

https://lh4.googleusercontent.com/-FWnZ8RSOqsM/TXj1XVoGkqI/AAAAAAAAtNA/1h_Xwms2ijU/s1600/anushka-hot-vaanam-movie-stills%25281%2529.jpg

1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?

---------------------------

2. பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?

 --------------------------------
 3. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை-நடிகை கரண்#40 வயசு ஆன பின்னும் அப்படி ஐடியா இல்லையா? இப்போ இல்லாட்டி எப்போ?

-----------------------------

4.பிரான்ஸ் செல்கிறது திருத்தனி டீம்-இயக்குநர் பேரரசு#மொட்டை போட திருப்பதியோ பழநியோ போனா பத்தாதா?

--------------------------

5.ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்# உங்க கல்யாண வாழ்க்கையில்” ஜெயம்” கிடைக்க வாழ்த்துக்கள்

----------------------
http://2.bp.blogspot.com/_YcU7A6403D0/TUHOrQ1qX6I/AAAAAAAAASo/SDA7_5aiZfU/s1600/kiran003.jpg
6.ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்

-------------------------------

7.கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்-கருணாநிதி#உங்க குடும்பத்துல யார் யார் இருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுமே? நீங்க சொல்லனுமா? தலைவரே,.

----------------------

8.தங்கபாலு-வேட்பாளர் தேர்வு, நான் மட்டும் முடிவு செய்வது அல்ல#ஆமா சம்சாரத்தைக்கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாரு,ஆனா கவுத்துடுவாரு

------------------------

9.உதயநிதி தனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்.#ஜெயான்னு வைங்க.அப்பவாவது அய்யா ஜெ த்வேஷத்துல இருந்து மாறட்டும்
 http://mimg.sulekha.com/sherin/stills/sherin-newhot06.jpg
_-----------------------------

10. சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?


-----------------------------

Thursday, April 28, 2011

ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாயம்????


http://www.foothillhydroponics.com/07-01-05-gardening-3.jpg
புல்தரையும் நீர்ப்பூங்காவும் நமக்கு அவசியமா?

ஓவியம்:சிவபாலன்
சு.தியடோர் பாஸ்கரன்


உலகின் பல நாடுகளில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்குக் கடுமையானச் சட்டங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதாக இருந்தாலும், ஆழ்துளைக்கிணறு அமைப்பதாக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால்தான் செய்ய முடியும். நம் நாட்டில்... நிலைமையே தலைகீழ்.

 இங்கே... நிலத்தடி நீர் என்பது பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும், எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விற்பனை செய்யலாம். எந்த வரைமுறையும் கிடையாது. சுதந்திரம் கிடைத்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களுக்கெல்லாம் மின்வசதி கொடுக்கப்பட்டது. அதனால்தான் தோட்டங்களில் எல்லாம் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரை எடுக்க ஆரம்பித்தனர். விளைவு... அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போக ஆரம்பித்தத்து.



ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி என்று பல மாவட்டங்களில் ஆயிரம் அடி வரை தோண்டினால்கூட தண்ணீர் கிடைக்காத பகுதிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஒருபுறம், காடுகள் அழிப்பு; இன்னொரு புறம், ஏரிகள் அழிப்பு. அதனால் நிலத்தின் மேல்மட்ட ஈரம்கூட முற்றிலும் காய்ந்து போய் விட்டது. கிடைக்கும் மழையைத் தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. ஆண்டுதோறும் மழை பெய்தாலும், தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு கிடையாது.

இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவினாலும், பாறைக்கடியில் பொக்கிஷமாக இருக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, இன்னமும் நாம் அக்கறை காட்டாமல்தான் இருக்கிறோம். கொஞ்சம்கூட யோசிக்காமல் சாயக்கழிவு உள்ளிட்ட இன்னபிற விஷயங்களால், நிலத்தடி நீரை முடிந்தளவு மாசுபடுத்தி விட்டோம். நீர் மாசுபடுவதையோ, குறைவதையோ நாம் உணர முடியாது.
http://www.dinamani.com/Images/article/2011/1/30/30ko1.jpg
மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களை நாகரிகம் என்று கருதி, அப்படியே நாம் கடைபிடிப்பது இன்னமும் கொடுமையான விஷயம். நீர்ப்பூங்கா, புல்தரை) போன்றவை இப்படிப்பட்ட நாகரிகத்தின் எச்சங்கள். நீர் எளிதாகக் கிடைக்கக்கூடிய வெப்பமில்லாத, குளிர்மிகுந்த மேலை நாடுகளில் இவற்றை ஏற்படுத்தி பராமரிப்பது சுலபம். குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், அல்லாடிக் கொண்டிருக்கும் வறண்ட பூமியில் இவை அவசியமா?

 இதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், காசை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பூமியைக் குடைந்து நீர் எடுப்பது எந்த வகையில் நியாயம்? ஆஸ்திரேலியாவில் இப்படிப் புல்தரைகள் பாவுவதற்குக் கட்டுப்பாடுகள் உண்டு. அதேபோல மழைநீர் சேமிப்பும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  

சூழல்கேடுகளுக்கு முதலில் துணைபோவது வசதி படைத்தவர்கள்தான் என்பதற்கு உதாரணம்... வறண்ட பகுதிகளில்கூட பல்லாயிரம் சதுரடிப் பரப்பளவில் கோல்ஃப் விளையாட்டுக்காக புல்வெளி திடல் அமைப்பதுதான். இது, இந்தியச் சுற்றுச்சூழலின் சிதைவுக்கு மிகமுக்கியமானதொரு எடுத்துக்காட்டு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn4dfIbaxRSUKUyoa5kn3EYiiwKKGTrwTPPDRURHrNH4BY5_ZjlOvU_5gPMjwTtXrVg_MXj2b5bfV-B3LeCcO4qqOebI4_8FUzwGYeQUoo49EW-uU4c3uPBVEKgcF7vnKMHFG4RkQ_vjCo/s1600/0512+mdp+3+tn+ex.JPG
 இம்மாதிரியான காரியங்களுக்குப் பதிலாக, மனிதனின் அத்தியாவசியத் தேவைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முன் வர வேண்டும். அதேப்போல எதற்கெல்லாம் நீரைப் பயன்படுத்துகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். அரிதான நீரைச் செலவழித்து ஆளைக் கொல்லும் புகையிலை போன்ற பயிர்களை நாம் பயிரிடுவது சரியா?

நமது தேசியக் கொள்கைப்படி, நீர்ப்பயன்பாட்டில் குடிநீருக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், நடப்பது? பணக்காரத் தொழிலதிபர்கள் பலர் தங்கள் ஆலைகளுக்குப் பெருமளவில் நீரை உறிஞ்சிக் கொள்கிறார்கள். அதோடு கழிவுநீரை ஆற்றில் கலந்து விடவும் அவர்களில் பலர் தயங்குவதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சியதால், கேரளாவில் 'பிளாச்சிமாடா’வில் கோகோகோலா குளிர்பான ஆலைக்கு எதிராக நடந்த போராட்ட நிகழ்வு, இதற்கு ஒரு சாட்சி.

ஆற்றுக்கு குறுக்கே அணைகளைக் கட்டினால் தமிழ்நாட்டின் வேளாண்மைப் பிரச்னைகள், குடிநீர்ப் பிரச்னை, மின்சாரத் தட்டுப்பாடு போன்றவை சரியாகி விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? அமராவதி போன்ற நதிகள் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அணைப் படுகைகளில் வண்டல்தான் நிரம்பியுள்ளது.

பெரிய அணைத் திட்டங்களைப் போல், இன்று நதிகள் இணைப்பைப் பற்றிய பேச்சு அடிபடுகிறது. இதுவும் ஒரு கனவுதான். நம்பிக்கையின் பேரிலும், யூகத்தின் பேரிலும் இயற்கையை, மனிதர்கள் திருத்தி அமைக்க முயல்வது பேதமை. அண்ணா ஹஜாரே தனது கிராமத்தில் செய்ததைப் போல உள்ளூர் முயற்சிகளை ஊக்குவித்தாலொழிய 'நீர் சேமிப்பு’ என்பது நம் நாட்டில் சாத்தியமில்ல

நன்றி - பசுமை விகடன்

என்னது? என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா?

http://s.chakpak.com/se_images/14400_-1_564_none/hansika-motwani-wallpaper.jpg 

1.கூட இருந்தே குழி பறிக்கறதுல நம்ம தலைவர் தான் நெம்பர் ஒன்.. 

எப்படி சொல்றே..?

வாக்கிங்க் ஸ்டிக்கா கடப்பாரையை யூஸ் பண்றாரே..?


-------------------------------------

2. ஹன்சிகா மோத்வானி முன்னால பார்க்க அழகா இருக்காங்க.. ஆனா பின்னால பார்க்க சுமாரா தான் இருக்காங்க..

 முன்னுக்குப்பின் முரணாப்பேசாதே... 

-----------------------------------

3.  மிஸ் மோஹனா.. நான் உங்க வீட்ல எடுபுடி வேலை செய்ய ஆசைப்படறேன்.. 

 சாரி,, மிஸ்டர்.... என்னை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டா என் அப்பா கிட்டே போய் பேசுங்க.. 

------------------------

4.டைரக்டர் சார்.. எதுக்காக உங்க வீட்லயே சாராயம் காய்ச்சறீங்க?

என் கிட்டே சொந்த சரக்கே இல்லைன்னு ஊர் பூரா பேச ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க வாயை அடைக்கத்தான்.

-----------------------

5. பால் விலை உயர்வு தனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணனும்னா கோட்டைக்குத்தான் போகனும்.. தலைவர் எதுக்கு கோடம்பாக்கம் போறாரு?

அட நீங்க வேற.. அவரோட டார்கெட் ஆவின் பால் அல்ல.. அமலா பால்.. அவங்க ஜாஸ்தி சம்பளம் கேட்கறாங்களாம்..

--------------------------
http://tamil.koodal.com/cinema/gallery/actress/amala_paul/amala_paul_57_411201170910123.jpg
6. இந்த மேட்ச்ல இந்தியா தான் ஜெயிக்கனும்னு சாமி கிட்டே வேண்டிக்கறியே..?நாட்டுப்ப்ற்றா?

அதெல்லாம் இல்ல.. இந்த மேட்ச் ல இந்தியா ஜெயிச்சுட்டா ஒட்டுத்துணி  கூட இல்லாம் ஒரு பிட்டுப்படத்துல நடிப்பேன்னு நடிகை பேட்டி குடுத்து இருக்காங்களே?

---------------------------

7. நடிகை ரத்னா தேவி வெளி நாடு ஷூட்டிங்க்குக்கு வர மாட்டேங்கறாங்களா? ஏன்? 

 பாரத ரத்னா  விருது மிஸ் ஆகிடும்னு யோசிக்கறாங்களாம்.

-------------------------

8. ரசிகர் மன்றம் முன்னால ஏகப்பட்ட கூட்டம் நிக்குதே.. ஏன்?

நடிகையோட ரசிகர் மன்றத்துக்கு அமலாபால் பூத் அப்படின்னு பேர் வெச்சு இருக்காங்களாம்.. கண்டிச்சு போராட்டம் நடக்குது...

---------------------------

9. நீங்க காஃபி அல்லது பூஸ்ட் தான் குடிக்கறீங்க.. அது ஏன்?

காப்பி பேஸ்ட் எழுத்தாளன்னு ஒரு பேர் வந்துடுச்சு.. அதனால அதை டைவர்ட் பண்றேன்.. இப்போ பாருங்க காப்பி பூஸ்ட் எழுத்தாளன்னு சொல்வாங்க.. ஹி ஹி

---------------------------

10.  கல்யாண மண்டபத்துல எந்தப்பக்கம் மொய் எழுதறாங்க..?

ஏன் கேட்கறே,?

 அந்த ஏரியா பக்கம் தலை காட்டாம நைசா எஸ்கேப் ஆகத்தான்.. 

-----------------------
டிஸ்கி 1 - என்னை தாக்கி தினசரி 3 பதிவுகள் வந்துட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லலைன்னு நண்பர்கள் கேட்கறாங்க.. இலங்கைல ஒரு இனமே தாக்கப்பட்ட போதும் நாம் கையாலாகாம சும்மா பார்த்துட்டுதானே இருந்தோம்.. ஒரு இனம் தாக்கப்பட்ட போதே கண்டுக்காத நாம ஒரு தனி மனிதன் தாக்கப்பட்டா மட்டும் ஏன் பொங்கி எழனும்?

டிஸ்கி 2 - இது என் 445 வது போஸ்ட்.இதுல காப்பி பேஸ்ட் போஸ்ட் 44. மீதி எல்லாம் சொந்த சரக்கு தான்.அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும்ல தான் படிச்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கற மாதிரி நானும் படிச்ச நல்ல விஷயங்கலை ஷேர் பண்ணிக்கறேன்.. 

டிஸ்கி 3 - சிலர் சொல்றாங்க.. ஆனந்த விகடனின் சேல்ஸ் என்னால பாதிக்கப்படுதுன்னு.. விகடனின் சேல்ஸ் 8லட்சத்துக்கு மேல்.. ஆனா என் போஸ்ட்டை படிக்கறவங்க ஜஸ்ட் 1000 டூ 2000. இதுல என்ன பாதிப்பு?

ஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி

http://www.hope.ac.uk/thebighope/images/content/abdul%20kalam.jpg 
விகடன் மேடை - அப்துல்கலாம்

 'நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும்.

'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''

 - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
எஸ்.சங்கரன், காரைக்குடி.

1.''உங்கள் ரோல் மாடல் யார்?''

''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''

கே.மாலதி, நாச்சியார்புரம்.

2. ''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''

''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த்.

அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!

அந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள  MIT-ல் கல்வி கற்பதாகும்.

முதன்முறையாக  MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார்.

அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''

இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.

3.''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''

''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.

4.''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''

''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''

பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.

5.''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''

''அறிவுத் தாகம்!''
ஆ.சங்கர், திருப்பூர்.

'5. B. 'உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''

''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''

ப.சிவராமன், பழநி.

'6. 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''

''ஆசிரியர்!''

ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.

7. ''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''

''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''
 http://robinindia2020.com/abdulkalam.jpg
எஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.

8.''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''

''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.

எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''

சே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.

9.''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''

''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!'' 

Wednesday, April 27, 2011

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்கா?




புது காரில் புகை! என்ன செய்வது?

1. அடகுக் கடைகளில் ஆங்கிலத்தில் கண்டிஷன் களை எழுதி கையெழுத்து வாங்குகிறார்கள். இதை தமிழில் எழுதித் தரவேண்டும் என்று கேட்க முடியுமா?

-ஆனந்த் ராஜ், போரூர்
.
''நிச்சயம் கேட்க முடியும். காரணம், இன்றைக்கு பட்டித்தொட்டிகளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன அடகுக் கடைகள். கடைகளின் எண்ணிக்கை உயர்ந்ததற்கேற்ப அடகு வைக்கிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

 பான் புரோக்கர் என்று சொல்லப்படும் சிறிய அடகுக் கடைகளாகட்டும் அல்லது பல்வேறு நகரங்களில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் ஆகட்டும், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பேப்பரில்தான் கையெழுத்து வாங்குகிறார்கள்.
நம் மக்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது.

பெரும்பாலும் ஏழை மக்கள்தான் இது மாதிரியான அடகுக் கடைகளை அதிகம் நாடுகிறார்கள். அவர்கள் எளிதில் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் விதிமுறைகளைத் தமிழில் அச்சடித்துத் தந்தால், பிற்பாடு ஏற்படும் சச்சரவுகள் உருவாகாமலே தடுக்க முடியும். மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் விதிமுறைகள் இந்தியில் அச்சடிக்கப்பட்டு கொடுக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழில் அச்சடித்துக் கொடுக்க முடியாது? ஆனால், அடகு வைக்கிறவர்கள் இதை வாய் திறந்து கேட்டால் மட்டுமே கிடைக்கும்.''


2. வாஷிங்மெஷின் ரிப்பேராகி விட்டது. இப்போது கேட்டால் அந்த மாடலை நிறுத்திவிட்டோம் என்கிறார்கள். ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காது என்கிறார்கள். இவர்கள் மாடலை நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக நான் பாதிப்படைய முடியுமா?

-பிரபாகர், காரைக்கால்
.
''உங்கள் வாதம் சரியானதே. வாஷிங்மெஷினில் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட தங்களுடைய இஷ்டத்துக்கேற்ப பல மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்கின்றன. சில மாடல்கள் மிகப் பெரிய வெற்றி கண்டு நிறைய விற்பனையா கின்றன. இன்னும் சில மாடல்கள் கன்ஸ்யூமர் களிடம் போதிய அளவு வரவேற்பு கிடைக்காததால் அதை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகிறது.

 ஆனால், திடீரென  உற்பத்தி செய்வது நிறுத்தப்படும் பட்சத்தில் அதற்கான ஸ்பேர்பார்ட்ஸ்களை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால், பழைய வாஷிங்மெஷினையோ, வாகனத்தையோ வாங்கிக் கொண்டு புதியதை கொடுக்கும்படி கேட்கும் உரிமை கன்ஸ்யூமர்களுக்கு நிச்சயம்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.''


3. கடந்த ஜூலை மாதம் முதல் எனது செல்போனில்  நெட்வொர்க் பிராப்ளம் என்று வருகிறது. இது தொடர்பாக எத்தனையோ முறை புகார் செய்தும், மெயில் அனுப்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை. என் குறை தீர என்ன செய்வது?

-அன்பு, கும்மிடிப்பூண்டி
.
''டிராய் என்று சொல்லப்படுகிற தொலைதொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாநிலத்திலும்  நோடல் ஆபீஸர் என்று ஒருவரை நியமித்திருக்கிறது. இந்த நோடல் ஆபீஸர்களின் வேலையே செல்போன் நிறுவனங்கள் தொடர்பாக வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதே. ஏர்டெல் நிறுவனத்துக்கு சென்னை சாந்தோமில் அலுவலகம் இருக்கிறது.

 ஏர்செல் நிறுவனத்துக்கு கோவை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி என பல நகரங்களில் நோடல் ஆபீஸர்கள் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் இணையதளத்தில் புகுந்து தேடினாலேயே இந்த நோடல் ஆபீஸர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் முகவரி, அவர்களின் போன் நம்பர் என அனைத்தும் கிடைத்துவிடும். செல்போன் சர்வீஸ் தொடர்பான எந்த குறையாக இருந்தாலும் இந்த நோடல் ஆபீஸரிடம் தாராளமாக தெரிவிக்கலாம்.''


4. சமீபத்தில் புது கார் ஒன்றை வாங்கினோம். வாங்கிய மறுநாளே காரிலிருந்து புகை வந்தது. இதுபற்றி புகார் செய்து, பத்து நாளைக்குப் பிறகுதான் வந்து பார்த்தார்கள். இதோ, அதோ என்று நான்கு நாட்கள் இழுத்தடித்துதான் சரி செய்து கொடுத்தார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு புது காரை வாங்கினோம் என்கிற மகிழ்ச்சியே எங்களுக்கு போய்விட்டது. நாங்கள் என்ன செய்ய?
-லலிதா, வளசரவாக்கம்
.
''இது மாதிரியான விஷயங்களில் நம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது முக்கியமான விஷயம். புத்தம் புதிய காரை முதல் முறையாக வெளியே எடுத்துச் செல்லும்போதே அதிலிருந்து புகை வருகிறது என்றால் காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, கார் வாங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து, உடனடியாக வந்து காரை சரி செய்து கொடுக்கும்படி சொல்ல வேண்டும்.

 அவர்கள் வந்து சரி செய்து கொடுக்கும்வரை காரை அந்த இடத்திலிருந்து எடுக்க மாட்டேன் என்று சொன்னால், வேறு வழியில்லாமல் ஓடிவருவார்கள். அப்படி வந்து சரி செய்து கொடுப்பதோடு பிரச்னையை விட்டுவிடக்கூடாது.

'காரிலிருந்து மீண்டும் புகை வராது என்பதை உறுதிப்படுத்த 100 கி.மீட்டருக்காவது தன்னோடு பயணம் செய்ய வேண்டும்’ என்று கேளுங்கள். அதெல்லாம் முடியாது என்று சொன்னால், இந்த காரை எடுத்துக் கொண்டு புது காரை கொடுக்கும்படி கேளுங்கள். இப்படி கேட்பது கார் நிறுவனம் வேண்டுமானால் அநியாயம் என்று நினைக்கலாம்.

 ஆனால், கன்ஸ்யூமரை பொறுத்தவரை, இதெல்லாம் நியாயமான கோரிக்கைகளே. இந்த விஷயத்தை நீங்கள் இப்படி டீல் செய்யும் பட்சத்தில் நீங்கள் புகார் செய்தவுடன் உங்களைத் தேடி வந்து பிரச்னையை சரி செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அநாவசியமாக நீங்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது!''

நன்றி - மோட்டார் விகடன்

ஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா?

http://www.filmyfriday.com/wp-content/uploads/2009/07/anjali-abrol.jpg 

1.சிம்பு கோ படத்தை திட்டினாரா? என்பது எனக்குத்தெரியாது- ஜீவா#ச்சே ,ச்சே இருக்காதுங்க.. அவர் நயன் தாராவை மட்டும் தான் திட்டுவாரு

-------------------------------
2.சிறந்த படம் மைனா ; நார்வே விருதுகள் அறிவிப்பு!#மைனாவுக்கே குடுக்கறப்ப குருவிக்கு ஏன் குடுக்கலைன்னு விஜய் போராட்டம் பண்ணுவாரோ?

-------------------------------------
3.இன்றும் வசூலில் சாதனை படைக்கும் எம்.ஜி.ஆர்., படங்கள்#அவரை வெச்சு ஓட்டு வேட்டையே நடக்குது,வசூல் வேட்டை நடக்காதா? என்ன/


----------------------------
4.கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி கேள்வி#தலைவா!கண்ணுக்கெட்டுன தூரம் வரை உங்க குடும்பம் மட்டும் தான் தெரியுது...

---------------------------------
5.மும்பை பெண் நிருபரை கரம்பிடித்தார் நடிகர் பிருத்விராஜ்#பேட்டி எடுக்க வந்த பொண்ணு கூட லூட்டியா?

-----------------------------
6.செம்மொழி ஆகிய தமிழ்மொழியாம்-சம்மன் வாங்கிய கனிமொழியாம் #பத்திரிக்கை செய்தி அடடா என்னா ஒரு ரைமிங்க்.

----------------------------------
7.ராமகிருஷ்ணன் -மனிதனின் வாழ்க்கை திசையை மாற்றும் திறன் புத்தகத்திற்கு உண்டு# ஃபேஸ்புக் ஆரம்பிச்சு 2மாசம் ஆகுது ஒரு ஃபிகர் கூட மாட்டலையே

-------------------------------
8. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்# அப்ப உடனடியா ஆஃபீஸ்ல பெட்ரோல் அலவன்ஸ் ஹைக் பண்ண சொல்லி கேட்க வேண்டியதுதான்,மாட்னாரு மேனேஜர்

-----------------------------
http://cinespot.net/gallery/d/433242-2/Anjali+Tamil+actress+in+Payyan+Malayalam++photos+Stills.jpg
9. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை#ரொம்ப சின்ன பேருதானே.. ஏன் சேர்த்தாம விட்டாங்க?

--------------------------
10.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்-செய்தி#மக்களை தினமும் வாக்கிங்க் போக வைக்க எங்கள் அரசு கொண்டு வந்த திட்டம் தான் இது.

------------------------
11. தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு#நீங்க கூடத்தான் தமிழை கொன்னேடுத்தீங்க படத்துல நாங்க சகிச்சுக்கலையா?

-------------------------------
12. பருத்தி, நூலிழை விலை சரிவு; துணி விலையும் குறைந்தது:ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை#பருத்தி விலையை படுத்தி எடுக்கப்போறீங்களா?

----------------------------
13. கூத்தாடிகளுக்கு அரசியல் தர்மம் உண்டா?- சுப்பிரமணியன்சாமி#அதெல்லாம் எதுக்கு.. நடிக்கத்தெரிஞ்சா போதாதா?

-------------------------
14.ரூ.50க்கு குழந்தை : கோவையில் புது பிசினஸ்: அதிர்ச்சி தகவல் அம்பலம்#மீண்டும் அய்யா ஆட்சி அமைந்தால் இலவச குழந்தை திட்டம் அமல் ஆகும் கபர்தார்

--------------------------
15. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இலவசங்களை அறிவித்து, மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லை-சீமான் #அப்போ கலைஞரை பெக்கர் மேக்கர்ங்கறீங்களா?.

-------------------------
16. ரியாலிட்டி ‌ஷோ மூலம் கலக்க வருகிறார் பூனம் பாண்டே# நிகழ்ச்சி ஹிட் ஆனா பிட் உண்டா?
 http://www.glamour.raafatrola.com/sites/default/files/Poonam_Pandey_300.jpg?1301675101
-----------------------
டிஸ்கி -1  கமெண்ட் போட வர்றவங்க பதிவை படிச்சுட்டு ஏதாவது கருத்து கூறவும்.அதை விட்டுட்டு சாப்டாச்சா? வீட்ல திட்டா? ஆஃபீஸ்ல மேனேஜர்ட்ட தகராறா? என சம்பந்தமில்லாமல் கேட்டு கடுப்படிக்க வேண்டாம்..ஹி ஹி 

டிஸ்கி 2 - கண்ணியமான பதிவர் நடத்தும்  கவுரவமான வலைத்தளம் இது என்பதால் டீசண்ட்டான கமெண்ட்ஸ்சை போடவும். இப்படிக்கு மானமிகு பதிவர் சி பி. ஹி ஹி  

டிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.சரியான பதில் அளிக்கவில்லை எனில் அவர்கள் தளத்தில் மைனஸ் ஓட்டு போடப்படும் ஹி ஹி 

Tuesday, April 26, 2011

அழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி

http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/SjfoH-BxzfI/AAAAAAAABkY/9fozEEn9lk8/s400/beauty_parlour_mumbai_PE_1_20061106.jpg

 தரமான பியூட்டி பார்லர்களுக்குப் போக வேண்டுமென்றால்... ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் வளாகத்தில் இருக்கக்கூடிய பார்லர்களுக்குத்தான் போக வேண்டும் என்றிருந்த காலகட்டத்தில், 'எல்லா தரப்புப் பெண்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில், ஐந்து நட்சத்திர பார்லர்களின் சர்வீஸை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்!’ என்ற கனவோடு பத்து ஆண்டுகளுக்கு முன் வீணா சென்னையில் ஆரம்பித்ததுதான், 'நேச்சுரல்ஸ்!’ இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களையும் தாண்டி, இந்தியாவின் பல பாகங்களிலும் படர்ந்திருக்கிறது!

'சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அதுபோல உடம்பு, சருமம், முடி... இந்த மூன்றும் பூரண ஆரோக்கியத்தோடு பொலிவாக இருந்தால்... அதுதான் பேரழகு. இந்த மூன்றையும் மாசு மருவில்லாமல் எப்படி பொலிவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதுதான் எங்கள் பிரதான வேலை!'' என்று சொல்லும் வீணா, 'என்ன அழகு... எத்தனை அழகு..!’ எனும் இத்தொடரை படைக்கிறார்.

இதைப் படிக்கப் போகும் உங்களின் அழகையும் பொலிவையும் கூட்டுவதோடு அவர் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை... உங்களை அழகுக்கலை நிபுணராகவே மாற்றப்போகிறார்... பின்னே... உங்களின் கணவர், அம்மா, அப்பா, மாமியார், மாமனார், மகள், மகன், நாத்தனார், சகோதரிகள் என்று குடும்பம் மொத்தத்தையும் நீங்கள் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமே!ஓவர் டு வீணா!

 http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/Sjfo3PqHt5I/AAAAAAAABkg/DmmZ_umo9uQ/s400/chd5.jpg
''வெறும் மஞ்சளும் சந்தனமும் மட்டுமே அழகு சாதனங்களாக இருந்த அந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகு சாதனங்களுக்கென்று பிரத்யேக சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படும் இந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகுக்கான இலக்கணம் மட்டும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது!


'மீனை ஒத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’ என்று எண்ணத் திரையில் கற்பனை செய்து வைத்திருக்கும் எல்லாமும் ஒரு பெண்ணிடம் இருக்கிறது. ஆனால்... அந்தப் பெண் கூன் வீழ்ந்த முதுகோடும், சோர்வான முகத்தோடும் பொலிவிழந்து காணப்பட்டால்... நிச்சயம் அது அழகில்லைதானே! ஆகவே, ஒளிபடைத்த கண்களும், உறுதி படைத்த உடலும் நெஞ்சமும்தான் அழகுக்கான அடிப்படை தேவை.

அழகுக்கு பல பரிமாணங்கள் உண்டு. நமது உடம்பின் மிகப் பெரிய அவயம்... ஸ்கின் எனப்படும் சருமம். வெளி உலகத்தோடு நேரடியான தொடர்பில் இருப்பதும் இந்த ஸ்கின்தான். புறத்தின் அழகை மட்டுமல்ல... உடல் ஆரோக்கியம் எனும் அகத்தின் அழகையும் முகத்தில் இருக்கும் ஸ்கின் காட்டிவிடும்.

அந்த ஸ்கின்னுக்கு போடுவதுதான் 'மேக் - அப்’ (Make-up). இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், சமாளித்தல்! எதைச் சமாளித்தல்? ஒரு முகத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை தூக்கலாக காட்டிச் சமாளிப்பது!
 http://tym.dinakaran.com/Ladiesnew/L_image/ld521.jpg
வறவறவென்று இருக்கும் 'ட்ரை ஸ்கின்’, எண்ணெய் பிசிறுள்ள 'ஆய்லி ஸ்கின்’, அதுவாகவும் இல்லாமல்... இதுவாகவும் இல்லாமல் இருக்கும் 'காம்பினேஷன் ஸ்கின்’, 'நார்மல் ஸ்கின்’ என்று சருமத்தின் வகைகளை நான்கு விதமாகப் பிரிக்க முடியும். யாருக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்று கண்டுகொண்டால்தான் அவருக்கு என்ன மாதிரியான மேக் - அப் சரி வரும் என்பதை முடிவு செய்ய முடியும். - தொடரும்

நன்றி - அவள் விகடன்

 டிஸ்கி- இந்தப்பதிவுக்கு உண்மையான டைட்டில் -  மேக்கப் போடுவது எப்படி?
( ஒன்லி ஃபார் லேடீஸ்) என்பது தான்.. ஆனால் எனக்கு இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளதால் தலைப்பை மாத்தீட்டேன் ஹி ஹி

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விமர்சனம்


இந்த வாரம் 24.4.2011 ஞாயிறு அன்று கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சி எப்பவும் போல கொண்டாட்டத்தோட தொடங்குச்சு,,ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேருமே இப்பவெல்லாம் நல்லா உற்சாகமா பேசறாங்க..  அப்பப்ப விட் அடிக்கறாங்க.. அது சூழ்நிலையின் இறுக்கத்தை தணித்து கலகலப்பாக்குது.. குட் சேஞ்ச்... 

1.அப்துல்லா,சிவா, டேனியல் - ரவிக்குமார்

ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ கார்ல போறப்ப அவரை வில்லன் போட்டுத்தள்ள பிளான் பண்றான். 2 பேருக்கும் என்ன பிரச்சனை? எல்லாம் பொம்பள சமாச்சாரம் தான்.. ( அதானே பார்த்தேன்)ஹீரோயினை வில்லன் லவ்வறான்.. ஆனா அவ ஹீரோவைத்தான் லவ்வறா.. ( அப்பத்தானே ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகும்?)ஹீரோ. வில்லன் 2 பேரும் கடத்தல் பிஸ்னெஸ் தான் பண்றாங்க.. (பின்னே சமூக சேவையா பண்ணப்போறாங்க)

ஹீரோ பணத்தை எடுத்துட்டு எஸ்கேப் ஆக திட்டம் போடறப்ப வில்லன் அவரை போட்டுத்தள்ள வழில வெயிட்டிங்க்..

ஹீரோ கார்ல போறப்ப ஒரு ஆள் வேகமா பின்னால துரத்திட்டே வர்றான்.. என்னமோ சொல்ல வர்றான்.. ஆனா ஹீரோவுக்கு பயம், வில்லன் தான் ஆள் அனுப்பி இருக்கான்னு நினச்சு காரை வேகமா ஓட்டி கரெக்ட்டா வில்லன் வெயிட் பண்ணிட்டு இருக்கற இடத்துல கொண்டு போய் சாத்தி அவனும் அவுட், வில்லனும் அவுட்.. ( ஹீரோ,வில்லன் 2 பேருக்கும்  சம்பளம் தர வேண்டியதில்லை.. டைரக்டருக்கு சவுகர்யம்..) 

அப்புறம் பார்த்தா துரத்திட்டு வந்தவன் ஹீரோவோட கார் டிக்கி ஓப்பன் ஆனதை எச்சரிக்க வந்தானாம்... அவன் ஆக்சிடெண்ட் ஆன காரை செத்துப்போன 2 பேரை பார்த்துட்டே ஹீரோ வெச்சிருக்கற லட்சக்கணக்கான பணத்தை லபக்கிடறான்.. அவ்வளவு தான் கதை..

லாஜிக் சொதப்பல்கள்

1. இந்தக்காலத்துல கார் பேனட் திறந்திருக்குன்னு பைக்ல போறவன் சொல்றதே அதிகம்.. அதுல 160 கி மீ வேகத்துல போற காரை துரத்திட்டு வந்து சொல்ல அவன் என்ன கேனயா?அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். நிஜ வாழ்வுல.. 

2.ஹீரோவோட கார் வர்றதைப்பார்த்த பின்பு வில்லன் கல்லை எடுத்து ரோட்ல குறுக்கே போடறான்.. 4 கல்லை எடுத்து போடவே 2 நிமிஷம் ஆகுமே.. 160 கிமீ  வேகத்துல வர்ற கார் அந்த 20 மீட்டர் தூரத்தை 3 செகண்ட்ஸ்ல கடந்துடுமே..?முதல்லயே எடுத்துப்போட்டா என்ன?

மேஜிக் கலக்கல்கள்

1. படத்துல கார் ஆக்சிடெண்ட் ஆகற சீன் நல்ல சவுண்ட் எஃபக்ட்டோட  கிராஃபிக்ஸ்னு தெரியாத அளவு நீட்டா பண்ணி இருந்தாங்க.. எடிட்டிங்க்கும் பக்கா.. 

2. படத்துல யாருக்கும் வசனமே இல்லை.. எல்லாம் பேக் டிராப்ல கதை சொல்லும் உத்தி தான்.. நல்லா திங்க் பண்ணி எடுத்திருக்காங்க..


ஹாய் மதன் கமெண்ட் - இந்த படத்துல வர்ற கார் நல்லா பிடிச்சிருந்ததுன்னு சொன்னீங்களே.. பிரதாப் ஜி அந்த பிராண்ட் பிடிச்சதா? சீன் பிடிச்சதா?

 2. ஆட்டம் - ராஜேஷ் குமார்

ஜீன் கிளாட் வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,விஜய்-ன் பத்ரி படம் பார்த்த எஃபக்ட்ல இந்த படம் எடுத்திருப்பாங்க போல.. குத்துச்சண்டை தான் கதைக்களன் கூடவே தொட்டுக்க ஊறுகாயாய் காதல்.. 

ஹீரோ ஹீரோயினை லவ்வறாரு ஜிம்ல பார்த்து வந்த பழக்கத்துல... ஹீரோயின் அப்பா காதல் கல்யாணத்துல முடிய ஒரு கண்டிஷன் போடறாரு.. பாக்சிங்க் டோர்னெமெண்ட்ல அவரோட சிஷ்யன் ஜெயிக்கனும்.. அதுக்கு ஹீரோ தோக்கனும்.. அவரு அதை விட்டுக்குடுத்தா இவரு இதை விட்டுக்குடுப்பாராம்.. ( வடிவேலு மாதிரி கேவலமான அப்பா போல)

ஆனா ஹீரோ என்ன முடிவெடுக்கறாரு?( என்னத்தை பெரிசா எடுப்பாரு?)பாக்சிங்க்ல ஜெயிச்சுட்டு அதே மேடைல பொண்ணை தூக்கிட்டு போறாரு.. போறப்ப ஒரு பஞ்ச டயலாக் வேற.. “ அந்த விளையாட்ல ஜெயிச்சாச்சு.. இனி வாழ்க்கை ஆட்டம்..இதுலயும் ஜெயிப்போம் இல்ல?

அப்பா கண் முன்னாலயே பொண்ணை தூக்கிட்டு (நிஜமாவே ) போறாரு.. அந்த இங்கிதம் தெரியாத ஹீரோயினும் சிரிச்சுக்கிட்டே அவன் கூட போயிடறா ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல.. )

லாஜிக் சொதப்பல்கள் 

1. ஆர்ட்டிஸ்ட்ஸ் செலக்‌ஷன் சரி இல்லை.. ஹீரோ வில்லன் 2 பேரும் பாக்சிங்க் சேம்ப்பியன் என்றால் விக்ரம் ,சரத்குமார் ரேஞ்சுக்கு இல்லைனாலும்  ஓரளவாவது பாடி வேணாமா? ராமராஜன் மாதிரி, அப்பாஸ் மாதிரி சோப்ளாங்கிகளை போட்டது தப்பு.. 

2. சர்வ தேச டோர்னமெண்ட் நடக்கையில் ஒரே ஆரவாரம், மக்கள் கூட்டம் காட்டனும்.. அட்லீஸ்ட் கிராஃபிக்ஸ்லயாவது.. ஆனா நிஜத்துல சும்மா ஏதோ சாவடில செட் போட்டு எடுத்து நம்மை சாவடிக்கறாங்க.. 

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )

1. ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்மேன் லைஃப்லயும் மறக்க முடியாத கேம் ஒண்ணு உண்டு

2.. டியர்... ஏதாவது பேசேன்... 

 எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிர்.. பாக்சிங்க்ல ஏதாவது சாதிக்கனும்.. ப்ளா..ப்ளா
.....

 நீ ரொம்ப மொக்கை போடறே,, நானே சொல்லிடறேன்.. ஐ லவ் யூ

3.  யூ நோ வாட்..? யூ லுக்கிங்க் சோ ஸ்மார்ட்.. 
 3. ----------------------------- -திருப்பூர் ராம்

 நிகழ்ச்சித்தொகுப்பாளினி படத்தோட டைட்டில் என்ன?னு கேட்டதுக்கு ராம் அதை சஸ்பென்சா படத்தோட கடைசில சொல்றேன்னார்.. நான் கூட எதுக்கு இந்த பில்டப்பு என நினைச்சேன்.. ஆனா க்ளைமாக்ஸ்ல அவர் சொன்னது கரெக்ட் தான்னு தோணுச்சு.. 

ஒரு கடத்தல் குரூப்.. பணம் வேணும்னு கேட்டு ஒரு ஆண், ஒரு பெண் (அவங்க 2 பேருக்கும் இதுக்கு முன்னே அறிமுகம் இல்லை) 2 பேரையும் கடத்திட்டு வந்து அடைச்சு வெச்சிருக்காங்க.. அவங்க தான் ஹீரோ, அண்ட் ஹீரோயின்னு கெஸ் பண்ணாம இருந்தா நாம படம் பார்க்கவே லாயக்கில்லை.. 

இதுல ஹீரோ ஹீரோயின் ஒரு கட்டத்துல லவ்வறாங்க.. ஹீரோவை விடுவிக்க பணயத்தொகை வந்துடுது.. ஆனா ஹீரோயினை விடுவிக்க பணம் வர்லை.. பணம் இல்லைன்னு ஹீரோயினோட அப்பா கையை விரிச்சுடறாரு.
 ( தத்தி வில்லனுங்க.. கடன் இல்லாத தொழில் அதிபர் மகளை கடத்த மாட்டாங்க.. ?) இப்போ ஹீரோ ரன்னிங்க்ல கார்ல ஃபைட் போட்டு 3 வில்லன்களையும் போட்டு ஹீரோயினை காப்பாத்தறாரு.. அவ்வளவுதான். கதை.

 லாஜிக் சொதப்பல்கள் 

1. ஒரு பணக்கார வீட்டுப்பையன் திடீர்னு 3 பேரை ரிவால்வரால சுடுவது எப்படி?அவன் என்ன ஜேம்ஸ்பாண்டா?

2.கடத்தப்பட்ட அந்த பொண்ணும், பையனும் அதிகபட்சமா 8 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்காங்க.. அதுக்குள்ள லவ் வருமா? ( அதுக்குள்ள வர்லைன்னா வேற எதுக்குள்ள வரனும்னு எதிர்பார்க்கறே..?) 

3. கடத்தப்பட்டவங்களை எந்த மாங்கா மடையனா இருந்தாலும் ( நிஜமான மாங்கா மடையர்கள் மன்னிக்க) தனித்தனி ரூம்ல தான் அடைச்சு வைப்பான்.. எதுக்கு 2 பேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வைக்கனும்? ( அடேய் சி பி நீ தாண்டா மாங்கா மடையன்.. ஒரே ரூம்ல அடைச்சு வெச்சாத்தானே 2 பேரும் லவ்வர்ஸ் ஆக முடியும்?)

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )


1. எந்தப்பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்கறதுதான் முதல் தேவைன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. ( உங்கப்பா மட்டும் இல்ல.. எல்லாரோட அப்பாவும் தான் சொல்வாங்க.. ஆனா அதை ஃபாலோ பண்ணனுமே..?)

2. மிஸ்.. உங்க பேரென்ன?

 உயிரோட இருந்து மறுபடி நாம சந்திக்கும் வாய்ப்பு வந்தா பேர் சொல்றேன்..




3. ம் ம் இப்போ உங்களை காப்பாத்திட்டேன்.. இப்பவாவது பேர் சொல்லுங்களேன்.. 

 தேன் மொழி..  ( இதுக்குத்தான் இந்த பில்டப்பா? நான் கூட சொப்பன சுந்தரின்னு நினைச்சேன்)


செமி ஃபைனலுக்கு 3 பேரும் செலக்ட் ஆகிட்டாங்க.. 3வதா வந்த ராம் படம் பிரைஸ் வாங்குச்சு.. ஹீரோ ,ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துனாங்காட்டி அது செலக்ட் ஆச்சாம்.. ஓக்கே.. 

 ஒரு முக்கியமான விஷயம்.. 3 குறும்படங்கள்லயும் ஹீரோயின்ஸ் அழகு ஃபிகர்கள் தான் .. லாங்க்‌ஷாட்ல பளிச்னு மின்ன்னல் மாதிரி காட்டிட்டதால ( அதாவது சரியா காட்டாததால) அவங்களை சரியா வர்ணிக்க முடில.. ( ஆமா.. இவரு பெரிய சாண்டில்யன். வர்ணிச்சுட்டுத்தான் மறு வேலை)

 அதனால நாளைய இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை ஹீரோயின்ஸ்க்கு க்ளோசப் ஷாட் வைங்க.. நீங்க மட்டும் ரசிச்சா போதுமா? ஹி ஹி 

Monday, April 25, 2011

”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா....

''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''


வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.


''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

 இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது. எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும்.

 மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன.

 இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.


அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும்.

 அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு  இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்..

.

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது.

 இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம்.

 சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? 

காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்... 

''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.

 சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''

நன்றி டாக்டர் விகடன்

விகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சனம்

http://i.indiaglitz.com/tamil/news/vikatakavi220411_1.jpg
ஆடிமாசம் குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு ஆகாது என்ற நெகடிவ் வசனத்தோடும்,அதே கருத்து உள்ள பாட்டோடும் படம் தொடங்குது.. பத்தாம்பசலித்தனமான இயக்குநரோ என கவலைப்பட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன்.. ..

படத்தோட ஓப்பனிங்க்ல ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி சிறார்கள் செய்யும் சில்மிஷங்களை காமெடி கலாட்டாவாக 40 நிமிடங்கள் காட்டும்போதே நினைச்சேன்.. அண்ணன் கிட்டே சரக்கு கம்மி போலன்னு.. மெயின் கதைக்கு வந்ததும் படம் பிரேக் அடிச்ச தேர் மாதிரி டக்குன்னு நிக்குது.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அதுல சின்ன வயசுல இருந்தே ஒண்ணா படிச்ச 2 பொண்ணுங்க, 3 பசங்க அதுல ஒரு பையனும் ,பொண்ணும் லவ் பண்ணறாங்க.. ( வேற என்ன பண்ணுவாங்கன்னு நாம எதிர்பார்க்கமுடியும்?)பொண்ணோட அப்பா வில்லன்.. நரி மாதிரி திட்டம் போட்டு காதலர்களை பிரிக்க நினைக்கறான்.. எப்படி காதலர்கள் ஒண்ணு சேர்றாங்க என்பதுதான் படம். 

 25 வருஷங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம். அமலா பால் இந்தப்படத்தில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார்.. ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...

http://kollyworld.com/images/stories/news/102009/Vikatakavi_movie.jpg



இங்கிலீஷ் டீச்சருக்கும்,தமிழ் வாத்தியாருக்கும் லவ் ஏற்படுவதையும் அதை மாணவர்கள் கிண்டல் அடிப்பதையும் செம காமெடியாக எடுத்திருக்கிறார்கள் என்றால்.. அடி ஆத்தாடி நீ போகும் பாதை.. பாட்டைப்போட்டு டைமிங்க் அடித்தது தூள்.. 

குட்மார்னிங்க்  என்று மட்டும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி டீச்சர் மாணவியை தூதாக அனுப்பி வாத்தியாரிடம் குடுப்பது நம்பவே முடியலை.. அவர் என்ன சீமைலயா இருக்கார்? அடிக்கடி 2 பேரும் சந்தித்துக்கொண்டு தானே இருக்காங்க.(.# மொக்கைப்படத்திலும் லாஜிக் பார்ப்ப்மில்ல?)

படத்தில் தென்பட்ட நல்ல வசனங்கள்


1.  அப்பா - டேய்.. போய் புக்கை எடுத்துப்படி.... 

 மகன் - ஹூம்.. ஆடு மாடு மேய்க்கிறவன் எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. 

2. இந்த ரன்னிங்க் ரேஸ்ல நானும் கலந்துக்கறேன்.. 

 தம்பி நீ செம சோம்பேறி ஆச்சே..இது ஜாக்கிங்க் போட்டி இல்ல தம்பி.. ரன்னிங்க் போட்டி.
http://icdn1.indiaglitz.com/malayalam/news/amala171210_1.jpg
-- 
3.  அப்பா - டேய்.. எங்கேடா போய்ட்டு வர்றே..?

மகன் - வம்பை விலை குடுத்து வாங்கறே,. ம் ம் 

4. கட்டப்பஞ்சாயத்துல என்ன இம்புட்டுக்கூட்டம்?

என் பொண்டாட்டி கேஸ் நடக்குதே... ( அவன் பொண்டாட்டி ஒரு கேஸ்.. கேஸ் நடத்தும் கேஸ் ஹி ஹி )

5. இப்போது நேரம் நெருங்கி விட்டதால் நமது மாண்பு மிகு கலெக்டர் அவர்கள்..... ( டமால்.. வெடி.. )

நிஜமாவே கலெக்டருக்கு நேரம் நெருங்கிடுச்சு..

6.இப்போ என்ன நடந்ததுன்னு டைனோசர் மாதிரி கத்தி ஊரைக்கூட்டறே..?

7. இன்னைக்கு என்ன நாள்?

சனிக்கிழமை..

 அட.. ஞாபகம் வெச்சுக்கரெக்ட்டா சொல்லீட்டியே.. செம மூளை தான்..

8. டியர்.. ஏதாவது பேசுங்க..

ஐ லவ் யூ... 

 வெறும் காத்து தாங்க வருது.. 

9. எனக்கு லவ் மூடு வந்துடுச்சு.. இம்மீடியட்டா என்னை லவ் பண்ணு .. 

 அய்யோ என்னை வீட்ல வைவாங்க.. 

http://1.bp.blogspot.com/-PcS2SljOfq0/TavojdzdPuI/AAAAAAAABFM/8tKW4RQoq_w/s1600/kungumam_75.jpg


படத்தில் ரசனையான காட்சிகள்

1. செம காமெடியான ஆனால் ஏகப்பட்ட குறும்புகள் செய்து ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் 5 பேரையும் விரட்ட அநாதை விடுதிக்கு நிதி திரட்டி குடுக்கும் சீன்...

2. கேஸ் சிலிண்டரை குக்கர் என நினைத்து விறகு அடுப்பில் அதை வைக்கும் மாணவியின் அப்பாவித்தனம்... சத்துணவு  ஆயா டமால் ஆவது... ( அந்த அளவுக்கு மடச்சியா இருப்பாங்களா? யாராவது என எண்ண வைத்தாலும் சீனில் தெறிக்குது காமெடி)

3. பொண்ணுங்க 4 பேரு நடந்து வரும்போது பசங்க கூட்டம்ல ஒருத்தன் ஒரு பேனாவைப்போட்டு யார் இந்தப்பேனாவை எடுக்கறாங்களோ அவ தான் என் ஆள் என உதார் விட ஸ்கூல் கக்கூஸ் காரம்மா அதை எடுப்பது .. 

4. ஏதோ ஒண்ணு சொல்ல நினைச்சேன்  பாடல் காட்சியில் திராட்சைத்தோட்டத்தை அழகு ரசனை பொங்க காட்டியதும்.. அந்தப்பாடலில் அமலா பாலின் அழகு முக பாவனைகளும்.. 

5. அமலாபாலின் மாமா அவரை காதலிக்க சொல்லும்போது உப்பு மூட்டை தூக்கத்தெரியுமா? என விளையாட்டாக கேட்கையில் அமலாபாலை உப்பு மூட்டையாக தூக்காமல் மளிகைக்கடையில் உப்பு மூட்டை தூக்கி பயிற்சி எடுப்பது..  ( அம்புட்டு அப்பாவியா அவரு.. சின்னத்தம்பி பிரபு தோத்தார் போ)


இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

1. சொத்துக்காக ஆசைப்பட்டு அக்கா கணவரையே போட்டுத்தள்ளும் வில்லன் அடுத்த சீனே சாமான்யன் போஸ்ட்டில் இருந்து ஜமீன் தாரர் ஆவது எப்படி?

2. தன் அப்பாவின் கபட நாடகம் புரியாமல்  ஹீரோயின் காதலனை வெறுப்பது ஓக்கே.. ஆனால் எனக்கு உங்களை விட அப்பா தான் முக்கியம் என பஞ்ச டயலாக் பேசி கொல்வது எதற்காக? 

3. அமலாபாலும், ஹீரோவும் ஒரு பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ( அடச்சே வெறும் பேச்சுத்தானா? )அப்போ ஹீரோ ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் இருக்கிறார்.. அப்போ ஃபிரண்ட்ஸ் வர்றாங்க.. கூப்பிட்டதும் அவர் பாறையை விட்டு இறங்கி வர்றார்,, இப்போ அவருக்கு அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி தாடி..???? ( கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்)

படத்தில் ஒரே ஒரு ஆறுதலான அம்சம் அமலாபால் 18 3/4 வயசுல இருந்தப்ப எடுத்த படம்.. அவரது அபார இளமை கொள்ளை அழகு.. 

பாடல்கள் சுமார்.. எல்லா டெக்னிக்கல் அம்சங்கள் ரொம்ப சுமார்.. திரைக்கதை ஜவ்வு.. படம் எல்லா செண்ட்டர்களிலும் ஒரு வாரம் தான் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் - 35

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - அமலாபாலின் கன்னிப்படம் என்றால் முதல் படம் என அர்த்தம்.. ஹி ஹி .