Showing posts with label HEALTH TIPS. Show all posts
Showing posts with label HEALTH TIPS. Show all posts

Monday, December 07, 2015

கருகரு கூந்தலுக்கு உதவும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

ணவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் கறிவேப்பிலை. கொசுறாக வாங்கினாலும் அதன் பலன்களோ மிக மிக அதிகம். தமிழர்கள் இதன் பெருமையை அறிந்திருப்பதால்தான் குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், நீர் மோர் என அனைத்திலும் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர். கறிவேப்பிலை மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது;  தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது.
உலர்ந்த கறிவேப்பிலையை நன்றாகப்  பொடிசெய்து, மிளகாய் வற்றல் பொடி அல்லது மிளகுத் தூளுடன் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, சீரகம், சுக்குப்பொடி ஆகியவற்றைத்  தேவையான அளவு சேர்த்து, நன்றாக அரைத்துப் பொடித்து, சிறிதளவு நெய் விட்டு இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், மந்தம், மலக்கட்டு ஆகியவை சரியாகும்.
கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் கலந்து சாப்பிட, சுவையின்மை, கழிச்சல், பித்த வாந்தி, செரிமானப் பிரச்னை போன்றவை குணமாகும்.
சித்த மருத்துவமுறையில் தலைமுடிக்குத் தயாரிக்கும் தைலத்தோடு, கறிவேப்பிலையைச் சேர்த்துக் காய்ச்சித் தடவினால், தலைமுடி நன்றாக வளருவதோடு கருமையாகவும் இருக்கும்.
அரிசியோடு கறிவேப்பிலையைச் சேர்த்து உரலில் குத்தி, நன்றாகப் புடைத்து, பழுத்து உலர்ந்த ஒரு மிளகாயைச் சேர்த்துக் கருக்கி, வசம்புச்சாம்பல், சிறுநாகப்பூ, அதிவிடயம் சேர்த்து, நீர்விட்டு, சுண்டக்காய்ச்சிக் குடித்தால், அஜீரணம், வயிற்றுப்போக்கு குணமாகும்.
இரண்டு கைப்பிடி கறிவேப்பிலை இலைகளை காம்பு நீக்கி, ஒரு பாத்திரத்தில் சுமார் 400 மி.லி நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, நீர் பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டி, மூன்று வேளையும் சுமார் 50 மி.லி குடித்துவந்தால், சளி, இருமல் குணமாகும்.

பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது கறிவேப்பிலை. கறிவேப்பிலைக்கு நல்ல மணம் உண்டு. வீட்டின் முன்புறம், பின்புறம் என ஏதாவதோர் இடத்தில் கறிவேப்பிலைச் செடி வளர்ப்பது நல்லது.
- பு.விவேக் ஆனந்த், படம்: தே.தீட்ஷித்

thanks vikatan

Saturday, November 28, 2015

டாட்டூ (பச்சை குத்திக்கொள்வது) நல்லதா?

டாட்டூ நல்லதா?
டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்திக்கொள்ளுதல், இப்போது இளைய தலைமுறை மத்தியில் ஃபேஷன்! சில மணி நேரங்களில் விதவிதமான டிசைன்கள், பெயர்களை டாட்டூவாகக் குத்திக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாகப் பலரும் கருதுகிறார்கள்; நாகரிக மோகத்துக்காக டாட்டூஸ் குத்திக்கொள்கிறார்கள். சிலரோ, மற்றவர்களிடம் இருந்து தன்னை  வேறுபடுத்தி, ஸ்பெஷலாகக் காட்டிக்கொள்வதற்கும், ஒரு செய்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் டாட்டூஸ் குத்திக்கொள்கின்றனர். இந்த டிசைன்கள் சருமத்தில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை; சமயத்தில் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதுதான் பிரச்னையே!
டாட்டூஸ் குத்திக்கொள்வது புதிய விஷயம் இல்லை. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்தக் காலத்தில் இருந்தே காணப்படும் ஒரு முறை. பொதுவாக, முன் கைகள், புஜம், மார்பு, பெருவிரல், புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தாங்கள் விரும்பும் தெய்வம் அல்லது விலங்குகளின் படங்களையோ அல்லது தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களையோ வரைந்துகொள்வார்கள். பச்சை குத்திக்கொள்பவர்களில் 10-ல் ஒருவருக்கு அரிப்பு, வீக்கம், நோய்த்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பச்சை குத்தும் முறைமருந்துப் பொருட்களை கூரிய ஊசி முனையில் வைத்து, தோலின் மேல்புறத்தில் தீட்டுவார்கள். இது, மருந்துப் பொருட்களுக்கு ஏற்ப நிறம் மாறும். அந்த நிறமானது மேல் தோலின் உட்பகுதியை அடைந்ததும், நிலையாக அப்படியே இருக்கும். இன்னும் சற்று ஆழத்தில் உட்தோலில் ஊசியைச் செலுத்தினால், எந்தக் காலத்திலும் அழியாமல் நிலையாக இருக்கும். டாட்டூஸ் வரைவதில் தேர்ந்த கலைஞர்களிடம் பச்சை குத்திக்கொள்வது நல்லது. அங்கு, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஊசியைக்கொண்டு பச்சை குத்தப்படுகிறதா, பச்சை குத்தும் கலைஞர் கையில் பாதுகாப்பு கையுறை அணிந்திருக்கிறாரா, ஒருமுறைக்கும் மேல் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
சிலர், உடலின் எல்லா இடங்களிலும் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். இதனால், மெல்லிய ரத்தக் குழாய்கள், நரம்புகள் மீது ஊசி படுவதால், ரத்தக்கசிவு ஏற்பட்டு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. சிவப்பு வண்ண டாட்டூவில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், சருமப் பாதிப்பு உண்டாகலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், டாட்டூ இருக்கும் இடத்தில் ஸ்கேன் தெளிவாகத் தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. மிக அரிதாகச் சிலருக்குத் தோல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.
பச்சை குத்தியதை அழித்தல்
சித்ரமூல வேரை அரைத்துப் பச்சை குத்திய இடத்தில் பற்றிட்டால், அந்த இடத்தில் புண் உண்டாகும். அந்த புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை வைத்துவந்தால் சரி செய்யலாம். குன்றிமணி விதையை அரைத்தும் தடவலாம். சிரட்டைத் தைலம் என்ற மருந்தை பஞ்சில் வைத்துப் பற்றிட்டால், அந்த இடத்தில் புண் உண்டாகும். அந்தப் புண்ணில் தேங்காய் எண்ணெய் அல்லது புங்கன் தைலம் வைத்து வந்தால், விரைவில் குணமாகும். இந்த மூலிகைகளால் தோலில் மேற்பகுதியில் பச்சை குத்திய அடையாளங்கள் மட்டுமே ஓரளவு மறைய வாய்ப்பு உள்ளது. இந்த சிகிச்சை புண்ணினை உண்டாக்கும் முறை. எனவே, சித்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி செய்வது பாதுகாப்பானது.
- ர.ரஞ்சிதா
பச்சை அபாயம்
ஊசியை சரியாகத் தூய்மை செய்யாமல், அதை மற்றவர்களும் பயன்படுத்துவதால் தடிப்பு, புண், கட்டி, பச்சை குத்தும் பகுதி அழுகுதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்தினால், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, காசநோய், பால்வினை நோய்கள் போன்ற பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
பச்சை குத்தப் பயன்படும் பொருட்கள்
கரித்துண்டு (கார்பன்), சைனா மை, இந்தியா மை போன்ற மைகளைப் பயன்படுத்தி கருமை அல்லது கருமை கலந்த செம்மை நிறத்தில் தீட்டுகிறார்கள்.
குரோமிக் ஆக்சைடு பயன்படுத்தி பச்சை நிறத்தில் தீட்டுகிறார்கள். மெர்குரி (பாதரசம்), காட்மியம், டின், அயன் ஆக்சைடு, ஆன்டிமணி, பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் ஆகிய ரசாயனங்களும் கலக்கப்படுகின்ற

thanks vikatan

Tuesday, November 17, 2015

மழைக் காலத்தில் என்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாது!

ழை காலத்தில் மக்கள் சில முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழ்நாட்டு தீயணைப்பு மீட்பு பணி துறை, இணை இயக்குநர் விஜயசேகர் அறிவுறுத்துகிறார்.

* தேவையில்லாத பயணங்களை தவிர்க்கலாம். இதன் மூலம் மழை கால தொற்று நோய்களை தவிர்க்கலாம். மேலும் வாகனத்துக்கும் நல்லது.

* தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

* தேங்கி கிடங்கும் தண்ணீரில் நடப்பதை தவிர்க்கவும். அங்கு பள்ளம், கரண்ட் ஒயர், பூச்சிகள் என எதுவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

* பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் வீட்டில், மெடிக்கல் கிட் மற்றும் டிரை புரூட்ஸ் போன்றவற்றை எந்நேரமும் வைத்து இருப்பது நல்லது.

* மழை காரணமாக எப்பவேண்டுமானலும் கரண்ட் கட் ஆகலாம். அதனால் ஒரு டார்ச் லைட், ரெயின்கோர்ட், பிளாங்கெட், ரெகுலர் சாப்பிடும் மருந்துங்கள் போன்றவற்றை கூடவே வைத்திருப்பது சிறந்தது.

* நமது வீடுதான் என்றாலும், மழைநேரம் என்பதால்... வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். எந்நேரம் வேண்டுமானாலும் ஷாக் அடிக்கலாம். இதில் அலட்சியம் வேண்டாம்.

* மழை நேரங்களில், அசுத்தமாக இருக்கிறது என சிலர் காலை தரையில் சரியாக ஊன்றாமல் நடப்பர், தாவி செல்வர். இதுப்போன்ற நேரங்களில் வழுக்கி விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

* அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் இருப்பவர்களின் வீடுகளில், பள்ளமான பகுதியில் இருக்கும் வீடுகளில் தான் மழை நீர் வீட்டுக்குள் வர வாய்ப்புகள் அதிகம். குழந்தைகள் தண்ணீரில் இறங்கி விளையாடுவார்கள். அதை அனுமதிக்க கூடாது.

* வானிலை அறிக்கையை கேட்டபின், பயணங்களை திட்டமிட்டுவது சிறந்தது.

* சாலை அமைப்பு சரியில்லாததால், மரங்களில் வேர்கள் வழுவிழந்து இருக்கிறது. அதனால், மரத்துக்கு கீழ் நிற்பது, வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை தவிர்க்கவும்.

* தெருவில் கரண்ட் ஒயர் அறுந்துகிடந்தால், முதலில் மின்துறைக்கு போன் பண்ணனும். தனியாக போய் அதை சரிசெய்ய கூடாது.

வீட்டுக்குள் மழைநீர் புகுந்து, அவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால், ரோட்டில் மரம் விழுந்து கிடந்தால், அதை அப்புறப்படுத்த, கரண்ட் ஒயரை அப்புறப்படுத்துவதற்கென தீயணைப்புத் துறையை 101, 102, 108 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

-கே. அபிநயா

Monday, April 25, 2011

”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா....

''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''


வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.


''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

 இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது. எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும்.

 மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன.

 இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.


அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும்.

 அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு  இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்..

.

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது.

 இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம்.

 சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? 

காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்... 

''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.

 சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''

நன்றி டாக்டர் விகடன்