Showing posts with label cine critics. Show all posts
Showing posts with label cine critics. Show all posts

Thursday, March 08, 2012

சங்கர் ஊர் ராஜபாளையம் - வள் வள் வழா வழா - சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2012/02/ShankarOorRajapalayamMovieOnline-1.jpg 

நான் எல்லாம் டீன் ஏஜ் ல இருந்தப்ப  யார் வீட்டுக்காவது போனா “இங்கே எல்லாம் என்ன வேலை? பொண்ணுங்க இருக்கற இடம்னு விரட்டி விட்டுடுவாங்க.. இந்தப்படத்துல செம காமெடியான நம்பவே முடியாத சீன் இருக்கு.. உஷ் அப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. படத்தோட கதை கண்றாவி எல்லாம் அப்புறம்.. முதல்ல அந்த சீனை சொல்றேன் ..

ஹீரோ எலட்ரிகல் கடை மாதிரி ஏதோ வெச்சிருக்கார்.. ஹீரோவோட ஃபிரண்ட் எலக்ட்ரீசியன்.. ஹீரோயினோட அம்மா அவங்க வீட்ல ஃபேன் ஓடலைன்னு சொல்லி வர சொல்றாங்க.. ஹீரோவும் , ஹீரோவோட ஃபிரண்டும் வீட்டுக்கு போறப்ப ஹால்ல அந்தம்மா இருக்காங்க.. மாடில போய் ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வாங்க.. ஃபேனை ரெடி பண்ண அப்டின்னு அந்தம்மா சொல்லுது... 

ஹீரோ போறாரு.. அங்கே ஹீரோயின் டிரஸ் பண்ணிட்டு இருக்கு.. யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. பாவாடை   ஜாக்கெட் எல்லாம் போட்டுத்தான் இருக்கு. சரியா சேலை கட்டறப்ப  ஹீரோ தெரியாத்தனமா அங்கே எண்ட்டர் ஆகிடறார். நல்லா பாருங்க ( ஹீரோயினை அல்ல .. சிச்சுவேஷனை)

 இந்த மாதிரி டைம்ல ஒரு பொண்ணு என்ன பண்ணனும்? முன்னெ பின்னே அட்லீஸ்ட் சைடுல கூட பார்க்காத ஒரு ஆம்பளை டிரஸ் மாத்துறப்ப வந்துட்டானேன்னு பதறனும்.. அதை விட்டுட்டு பாப்பா வெட்கமா  ஹீரோவை பார்த்து சிரிக்குது.. ஹய்யோ அய்யோ 

ஹீரோயினை விடுங்க.. ஒரு வயசுப்பெண்ணை மாடில டிரஸ் மாத்த வெச்சுட்டு எந்த அம்மாவாவது அப்படி ஆள் அனுப்புவாளா? அவ்வ் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3Y0ridCcbQTwmzeSCkeQ1vfZ6R-htw768d9XuMtTtY-_CdqRftDXeb-Bxfrcq1XByppWhGJV2wOhK1D6q4RNV4DgmYht_y_DZuPwDNQLvycj3QbjAsEGGbCpgnjFwQxjDYc1PYMHHZb8/s320/shankar_oor_rajapalayam_01.jpg
 ஓக்கே கதைக்கு வருவோம்.. முன்ஜென்மத்தின் பிரதிபலிப்புதான் இந்த ஜென்மத்தில் நடக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் அமைந்ததுதான் இக்கதை. 700 ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு உயிர், பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறது. அடுத்த ஜென்மத்தில் அந்த உயிர் மனிதனாக பிறந்து அதே பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறது..

ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. ஹீரோயின் அண்ணன் ஒரு தாதா ( அட போங்கப்பா ) அண்ணன் கண்டிப்பானேன்னு பயந்து சொல்லாம அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணம் பண்ணிக்கறாங்க .. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லாதப்ப ஹீரோவுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்றா.. எதுக்கு? தாயக்கரம் விளையாடவா கூப்பிடுவா? எல்லாம் கில்மாக்குதான்.. மேட்டர் முடிச்சுட்டு ஹீரோ கிளம்பறப்ப வில்லன் கரெக்டா வந்துடறான் .. 

 அப்புறம் என்ன? ஒரே சேசிங்க் தான்.. க்ளைமாக்ஸ்  அவங்க 2 பேரும் சேர்ந்தாங்களா? இல்லையா?ன்னு வெண் திரையில் தில் உள்ளவங்க பாருங்க.. முழுக்கதையையும் சொன்னவன் ஏன் அந்த க்ளைமாக்ஸ்  மட்டும் சொல்லலைன்னு கேட்கறவங்களுக்கு மட்டும் ரகசியமா ஒரு வார்த்தை.. நான் தூங்கிட்டேன் ஹி ஹி 

ஹீரோ கந்தேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். என் உயிர்த்தோழன் பாபு சாயல்ல தாடியோட இருக்கார்..பஞ்ச் டயலாக் எல்லாம் பேசாம அமைதியா வந்து டைரக்டர் சொன்ன படி கேட்டு பொடுவாட்ட ( அடக்கமா) நடிச்சிருக்கார்.. ஓக்கே பாஸ் மார்க்.. 

 அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார்.இந்த பட நாயகி ஹாசிகா ஆந்திர வரவு.தென்னிந்திய அழகி பட்டம் "பெற்றவர் ".இவர் அறிமுகமான் படம் 'மலர் மேல் நிலை பள்ளி '.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.(அநேகமா ஆக வாய்ப்பு கம்மி)

 நடிப்பு ஓக்கே .. மிதமான மேக்கப், அளவான புன்னகை. இவருக்கு ஆடை வடிவமைப்பு மற்றி பர்சனலா ஒண்ணு சொல்லிக்கறேன்.. எப்பவும் ஒரே மாதிரி ஆடைகளை யூஸ் பண்ணனும். சில காட்சிகள்ல நமீதா மாதிரி கும்முன்னு இருக்கீங்க.. பல காட்சிகள்ல கவுசல்யா மாதிரி, கவுதமி மாதிரி சப்புன்னு இருக்கீங்க.. புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கவும் .. 

படத்துல குறிப்பிட்டு சொல்ல வேற யாரும் இல்லை.. இயக்குநர் பாராட்ற அளவு பெருசா எதுவும் செய்யல.. ஒரு கனவா உயிர் வரையா பாட்டு மட்டும் கேட்கற மாதிரி இருக்கு.. 


http://www.indiancinemagallery.com/Gallery2/d/767203-1/Shankar+Oor+Rajapalayam+stills+_4_.jpg

 இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ் 

1.  ஹீரோயின் ஹீரோ கிட்டே ரோட்ல ஒதுக்குப்புறமா நின்னு பேசிட்டு இருக்கா.. அப்போ ஹீரோயினோட கிளாஸ் மேட் வர்றா.. உடனே  ஹீரோயின் பதறி “அய்யய்யோ அவ வந்தா காலேஜ் பூரா பரப்பிடுவா” அப்டிங்கறா.. இந்தக்கதை நடக்கறது 2012.. தானே? 1980ல தான் அப்படி பயந்தாங்க.. இப்போ எல்லாம் பாய் ஃபிரண்ட்ஸ் வெச்சிருக்கறது கவுரவமா நினைக்கறாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எதிர் பாலிடம் பேசுவது சர்வ சாதாரணம்

2.  ஹீரோயின் காலேஜ் கிளாஸ் பிளாக் போர்டுல வருகை - 30 பேர்னு எழுதி இருக்கு .. ஆனா க்ளாஸ் ரூம்ல இந்தப்பக்கம் 3 வரிசை 4 சேர் =12 பேர்.. அந்த பக்கம் 3 வரிசை 4 சேர் =12 பேர்.. ஆக மொத்தம் 24 பேர் தான் இருக்காங்க.. 

3.  ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை,ஹீரோவை ராமாயணம் படிச்சுக்காட்ட ஹீரோயின் வரச்சொல்றா (ஆனா அவன் வந்து காமாயணம் தான் பண்றான்) வர்றவன் நேரா வாசல் வழியா வந்தா வேலை முடிஞ்சுது.. எதுக்கு கஷ்டப்பட்டு சுவர் ஏறிக்குதிச்சு திருட்டுத்தனமா வரனும்? 

4. ஊரை விட்டு ஓடிப்போற ஹீரோயின் ஒரு சின்ன பேக் வெச்சிருக்கா , அதுக்குள்ள அதிக பட்சம் 2 செட் டிரஸ் தான் போட முடியும்,.,. ஆனா ஹீரோயின் அம்மா பீரோவை திறந்து பார்த்து அய்யய்யோ பீரோ காலி, கப்போர்டு காலி எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டான்னு சொல்றா.. அது எப்படி?

5. ஹீரோயின் அண்ணன் தன் தங்கை ஒருத்தன் கூட ஓடிட்டான்னு தெரிஞ்சதும் தங்கச்சியை கொலை பண்ணிடறான்.. அவ்ளவ் கோபம் இருக்கறவன் ஏன் தங்கச்சி காதலனை கொலை பண்ணலை? ஜஸ்ட் அடி மட்டும்? அவன் வந்து மறுபடி வில்லனை பழி வாங்குவான்னு தெரியாதா?

http://www.lateststills.com/wp-content/uploads/2011/06/shankar-oor-rajapalayam-movie-stills-_40_-300x300.jpg


யாம் பார்த்த மொக்கைகளில் இந்த மொக்கை போல் கடிதானது எங்கும் காணோம் அவ்வ்வ்வ்

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - எல்லா செண்ட்டர்லயும் 5 நாள் ஓடும் ஹி ஹி 

http://1.bp.blogspot.com/-Imz7dw1ScEU/TeWe2UmclUI/AAAAAAAACPw/yx0JHYWsRIU/s1600/24x12+2+%252B0.jpg

Tuesday, January 10, 2012

சிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார்வை

ஆரோக்யமான சினிமாக்கள் தமிழில் அபூர்வமாகத்தான் வருகின்றன. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அளவு புதிய  கண்ணோட்டத்தில், வித்தியாசமான கதை அம்சத்தில் வந்த படங்கள் எவை என ஒரு லிஸ்ட் எடுத்தால் 14 படங்கள் 2011-ல் தேறியன.. 

அவற்றைப்பற்றி பார்க்கும் முன் அஜித், விஜய் போன்ற மசாலா ஹீரோ ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை. கமர்ஷியல் சக்சஸ் படங்கள் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.. அதற்காக எதிர்பாராத வெற்றி பெற்ற படங்களை விட்டு விடவும் இல்லை.. மசாலா சேர்ப்புகள் அதிகம் இல்லாத , நவீனமான கோணத்தில் கதை சொன்ன படங்கள் மட்டுமே  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.. 

முதல் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்த 4 படங்கள் முதலில் வெங்காயம். சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய வெங்காயம்- சிறந்த சமூக சீர்திருத்தப்படம்.. விழிப்புணர்வுப்படமான இதில் நரபலி எதிர்ப்பு,மூட நம்பிக்கை,ஜாதகப்பைத்தியங்களால் நேரும் இழப்புகள், வலிகள் பற்றி எந்த விதமான கமர்ஷியல் நோக்கு இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.. ஆனால் கதையின் மைய இழையில் 8 வயசு சிறுவர்கள்  ரமணா ரேஞ்சுக்கு ஆள் கடத்தல், கொலை மிரட்டல் விடுதல் போலீஸ்க்கு தண்ணி காட்டல் என்று திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம்..


அடுத்து தேசிய விருது பெற்ற ஆடுகளம்.. கமர்ஷியலாகவும் இந்தப்படம் நல்லா போச்சு. சேவல் சண்டை பற்றி முழுதான முதல் பதிவாக இந்தப்படம் அமைந்தது. ஆனால் படத்தில் வன்முறை அதிகம்.. பார்க்கும் ஜனங்களுக்கு மென்மையான உணர்வுகளை தூண்டுவதே நல்ல படம் என்று நான் நினைப்பதால் இந்தப்படம் தகுதி இழந்தது..ஆனாலும் வெள்ளாவி வெச்சுத்தான்
  வெளுத்தாங்களா? பாடல் காட்சி உட்பட பல இடங்களில் தனுஷ் நடிப்பு கன கச்சிதம்.. அவர் லுங்கியை முகத்துக்கு நேர் மறைத்து ஆடிய துள்ளாட்டம் திருடா திருடி மன்மதா ராசா பாட்டுக்கு கிட்டே வந்தது.. 


விக்ரம்-ன் தெய்வத்திருமகள் - சாராவின் நடிப்பு டாப்.. விக்ரம் நடிப்பு க்ளைமாக்ஸில் கண் கலங்க வைத்தது. இருந்தாலும் இது 2 காரணங்களுக்காக தகுதி இழக்கிறது 1. விக்ரமின் நடிப்பில் ஆங்காங்கே செயற்கை இழை தட்டியது..2 படத்தின் பின் பாதியில் பல லாஜிக் ஓட்டைகள் , இருந்தாலும் இது பார்க்க வேண்டிய படமே..


ஆண்டின் கடைசியில் வந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அளித்தது.மகான் கணக்கு தனியார் வங்கிகள்-ன் அபத்தங்களை, முறைகேடுகளை சவுக்கடி அடித்து கேள்வி கேட்டது.. வசனங்கள்  செம.. ஆனால் தேவை இல்லாமல் காதல், ஊடல் எல்லாம் கொஞ்சம் புகுத்தி கொஞ்சம் சொதப்பிட்டாங்க.. இந்தப்படத்தில் சீமான் ஹீரோவாக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. 


http://www.koodal.com/cinema/koodal_reel/Payanam-reel-5.jpg

10.  பயணம் - ராதாமோகன் அழகிய தீயே , அபியும் நானும் என்று வரிசையாக மென்மையான படங்களில்  கவனம் செலுத்தி வெற்றி கண்டவர்.. இவர் பார்வையில் எல்லோரும் நல்லோரே எனும் கான்செப்ட் ரொம்ப பிடிக்கும்.. பிரகாஷ் ராஜ் நல்ல சினிமா ரசிகர். அவர் தயாரிப்பில் நடிப்பில் வந்த  படம், விமானக்கடத்தல் தான் படம் என்றாலும் அதிலும் முடிந்த வரை காமெடி கலந்து கொடுத்தது சாமார்த்தியம்.. ஒரே குறை 1998-ல் வந்த பட்டுக்கோட்டை பிரபகர் எழுதிய ஒரு நாவலின் காப்பி என்று குற்றம் சாட்டப்பட்டதே.. ( எ நாவல் டைம்)



 http://www.mysixer.com/wp-content/gallery/vaagai-soodava-audio-launch-invitation/vaagai-soodava-audio-launch-invitation.jpg
9.  வாகை சூடவா -   பீரியடு ஃபிலிம் எடுப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. கிராமத்துக்கல்வியின் தேவையை உணர்த்தும் படம்.. முடிஞ்ச வரை பிரச்சார நெடி இல்லாமல் இருந்தது.. விமல், இனியாவின் நடிப்பு மிக யதார்த்தம்.. சாரக்காத்து வீசும்போது பாட்டு யூ டியூப்பில் சக்கை போடு போட்டது.. கே பாக்யராஜ்-ன் முந்தானை முடிச்சு, சத்ய ராஜ் நடித்த திருமதி பழனிச்சாமி இவற்றின் கலவையாக திரைக்கதை இருந்தது ஒரு குறை. ஆனாலும் ஒளிப்பதிவு, மண் வாசனைக்காக பார்க்க வேண்டிய படம்.. 




 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheIF4GYjLU-k2epbfO4E90mKlPC_yvQmg7H35uB2C6XkwPPvTMqo1h1LbC_m6LrSMqGE3XbF6FW-LdXd7t6Jf2XQqnEsF7O7NNCaEkteQa-6w6T2uFqC8LprvEPo3W3yS4MAas15Pv_4mO/s400/kullanari_koottam_movie_posters1.jpg

8. குள்ளநரிக்கூட்டம் -   போலீஸ் செலக்‌ஷனில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய படம்.. இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் இவ்வளவு டீட்டெயிலாக போலீஸ் செலக்‌ஷன் காட்டப்படவே இல்லை.. கமலின் காக்கி சட்டையில் கோடி காட்டினார்கள்.. தில் படத்தில் கொஞ்சம்.. சத்தம் இல்லாமல் வந்த படம்.. ஆனால் டைட்டில் இந்தப்படத்துக்கு மகா மைனஸ்.. ஒரு படத்துக்கு டைட்டிலும், போஸ்டர் டிசைனும் எவ்வளவு முக்கியம் என்பது இந்தப்படம் எடுபடாமல் ( எதிர்பார்த்த  அளவு)போனதில் இருந்து தெரிந்தது.. படத்தின் முன் பாதியில் சும்மா ராங்க் கால் வெச்சே ஹீரோ ஹீரோயின் லவ் டெவலப் ஆவது செம ஸ்பீடு திரைக்கதை வித்தை.. ஆனால் சில பத்திரிக்கைகள் அது சுமார் ஐடியா தான் என சொன்னது எனக்கு ஆச்சரியம்.. காதல் காட்சிகள் மிக கண்ணியமாக இருந்தன..


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgO2KEQp8rURKoTLMXIve7EOUcXmnP2wyN_EzXv1e0fzkazqlbKCZH7zfLEMGSbFm2cf86N2aTExGmjhmspL0ISJVHF1GX1NZKwaVabusBB9Dgjoq7Ccx29RaRgdocn51XaXO6tKl3vD8/s320/mmm.jpg

7. முரண்  - தமிழ் சினிமாவில் அழகிய வில்லன்களே வருவது இல்லை.. முகத்தில் அம்மைத்தழும்புகளுடன் கர்ண கடூரமாக வந்தாத்தான் அவன் வில்லனா? என்று பலர் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.. பிரசன்னா அவர்கள் வருத்தம் களைய வந்த அழகிய வில்லன்.. இரு மாறுபட்ட குணங்கள் உடைய  அறிமுகம் இல்லாத நபர்கள் ஒரு நெடுஞ்சாலைப்பயணத்தில் சந்திப்பதும், அதில் ஒருவன் மட்டும் தன் சுயநலத்துக்காக மற்றவனை தன் தந்தையை கொலை செய்ய சொல்வதும் ஆக வித்தியாசமான ட்ரீட்மெண்ட்.. STRANGERS IN THE TRAIN என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றாலும் தமிழில் இது வர்வேற்கத்தக்க முயற்சியே.. 


 http://myms.in/wp-content/uploads/2011/07/Kanchana-Tamil-Movie-Online.jpg


6.  காஞ்சனா (முனி -2 ) -  ஒரு திகில் படத்தில் பெரும்பாலும் பயப்படத்தான் வைப்பார்கள்.. ஆனால் இதில் காமெடி மிகச்சிறப்பான அளவில் சேர்க்கப்பட்டிருந்தது .. பொதுவாக எந்தப்படமும் முதல் பாகத்தை விட 2ம் பாகம் ஒரு மாற்று கம்மியாத்தான் இருக்கும். இது விதி விலக்கு.. முதல் பாகம் மாமூல், இது செம ஹிட் ஃபார்முலா..  தமிழ் சினிமாவில் வந்த பேய்ப்படங்கள் லிஸ்ட்டில் இதற்கு முக்கியமான இடம் உண்டு.. பலரது கணிப்பையும் மீறி இந்தப்படம் மாபெரும் ஹிட் ஆனது.. திரைக்கதையில் செம விறுவிறுப்பு
 
 
 http://www.envazhi.com/wp-content/uploads/2010/04/yutham-21.jpg
 
 
5. யுத்தம் செய்  - மிஷ்கின் எடுத்த இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் விறுவிறுப்பான திரைக்கதையுடன், சேரனின் யதார்த்தமான நடிப்புடன்  வெற்றி பெற்ற படம்.. இந்தப்படத்தில் ஒய் ஜி மகேந்திரனின் வில்லன் நடிப்பும், அவரது மனைவியாக வந்தவரின் க்ளைமாக்ஸ் கோபமும் செம.. பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம்

 
 http://www.kollytalk.com/wp-content/uploads/2011/11/Mounaguru-Arulnidhi.jpg
 
4.  மவுன குரு  - எந்த வித ஆரவாரமும் இன்றி டைட்டில்க்கு தகுந்தாற்போல அமைதியாக வந்து செம கலக்கு கலக்கிய படம் இது.. ஒருசாதாரண 2 வரிக்கதை.. அதை வாய்ப்பு இருந்தும் எந்த விதமான ஹீரோயிஸமும் சேர்க்காமல் விறு விறுப்பாக திரைக்கதை அமைத்து படம் எடுத்த விதம் மெச்சக்கூடியது.. 
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdnN9iijk6UFXDyTrlktTMaZ_aFX5cec6V7b63fsUxmFxhvV8dZNCoBLDu0Lq0-tbXTgmBAOTtem_fKCGE3EP2xGBGEwtc93UvVZQ2MhYKwRBwzH_7k4dnGxQ8Yc0CjpjLg1GfgD3Cm18/s1600/AaranyaKandamTamilMovie.jpg
3.  ஆரண்ய காண்டம் - டைட்டிலிலேயே இயக்குநர் இது ஆண்களுக்கான படம் என உணர்த்தி விடுகிறார்.. இந்தப்படம் எடிட்டிங்க், காமரா ஆங்கிள், நறுக் சுறுக் வசனம் என உலகப்பட ரேஞ்சுக்கு இருந்தது.. நல்ல கம்பெனி சன் டி வி மாதிரி யாராவது மார்க்கெட் பண்ணி இருந்தால் இதன் லெவெலே வேற..  ஜாக்கிஷெராப் வரும் சில காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இது அனைவரும் பார்க்க வேண்டிய படமே.. 

 
http://yarlosai.com/wp-content/uploads/2011/06/ko-tamil-movie.jpg
 
 
2.  கோ - கே வி ஆனந்த் இயக்கிய இந்தப்படம் பாலைவன ரோஜாக்கள்க்கு பிறகு பத்திரிக்கைத்துறை அடிப்படையில் எடுக்கப்பட்டு ஹிட் ஆன ஒரு படம்.. ஒளிப்பதிவு, இசை செம.. என்னமோ ஏதோ மின்னி மறையுது.. பாட்டு இந்த ஆண்டின் கலக்கல் பாட்டு.. படத்தில் காட்டப்பட்ட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது.. ஜீவாவின் ஸ்டைலிஸ் ஆக்டிங்க்..படத்துக்கு பலம்.. திரைக்கதையில் தொய்வில்லாத படம். 

 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJYZxhgspSzgl-D2a5cNxQW8tKDlf8v596PTK8OMVE6svizOcTUmXUzKkDW112DnrDKRQCca15X0CeNxy-RdPLKG8ORrz6xNzQBgC9DwdjKbpqVoolfRGTfNQCtkBORVTI2V9nt6BdjSw/s1600/Engeyum+Eppothum+Release+on.jpg
 
1. எங்கேயும் எப்போதும் -   இரண்டு மாறுபட்ட லவ் ஜோடிஸ்.. துடுக்குத்தனமான அஞ்சலி, காதலியிடம் பம்பும் ஜெய் இது ஒரு ஜோடி.. அநியாயத்துக்கு உஷார் பார்ட்டியாக வரும் கிராமத்து அநன்யா -சர்வா ஜோடி இரு காதல் கதைகளை பேலன்ஸ் செய்து காட்சிகளை நகர்த்திய விதம் அபாரம்.. வேகமாக போகும் வாகங்களால் ஏற்படும் விபத்து பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்த எந்த விதமான டாக்குமெண்ட்ரி ஃபீலிங்க்கும் இல்லாமல் திரைக்கதை அமைத்த விதம் செம.. படம் பார்த்த அனைவருமே அந்த பாதிப்பில் இருந்து வர கொஞ்ச நாள் ஆனது.. 
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS5pkwG7Gg5dJdXNTxhu7byJQGzg8l8OYBypArex6sqSrSg_oZcUM7QQIGhEcudaa6fBxKmrtIJSrSoh0wB-mOa40QWgPldI7YOlPDpR-AQYDRHA7B3ygmvYMityHAjT3GHuEyYlEknmE/s1600/engeyum_eppothum_movie_stills_1008110415_036.jpg
படம் பார்த்து வெளி வந்த மக்கள் கொஞ்ச நாள் கண்டிப்பாக வாகனங்களில் மித வேகம் கடை பிடித்திருப்பார்கள்.. அதுவே படத்தின் வெற்றி.. கதையின் டெம்ப்போவை எங்கு எப்படி ஏற்ற வேண்டும் என்ற டெக்னிக்கை மிக பிரமாதமாக கையாண்டதால் இந்த ஆண்டின் சிறந்த படமாக இது அமைகிறது.. 
 

Saturday, November 12, 2011

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/May/20-5-11/naan-sivanagien-preview.png 

ஒரு புது முக ஹீரோ, ஹீரோயினை வைத்து லோ பட்ஜெட்டில் ஒரு சைக்கோ த்ரில்லர் கொடுக்கும் எண்ணம் வந்ததற்காகவே இயக்குநர் வி.கே.ஞானசேகர். அவர்களை தாராளமாக பாராட்டலாம்...

சிட்டில அடுத்தடுத்து 14 கொலைகள் நடக்குது. கொலை செய்யப்படும் பெண்கள் எல்லாம் மேரேஜ் ஆனவங்க.. வயசு 30 டூ 35 அந்த ரேஞ்ச்ல.. அதாவது ஆண்ட்டீஸ்.. இதை விசாரிக்க வர்ற போலீஸ் ஆஃபீசர் மனைவியையே ஒரு கட்டத்துல ஹீரோ போட்டுத்தள்ளிடறாரு.. 

ஹீரோ ஏன் அப்டி பண்றாரு? ஒரு ஃபிளாஸ்பேக்.. ஹீரோவோட அம்மா எப்ப பாரு பிஸ்னெஸ் பிஸ்னெஸ் என அலைந்து கொண்டே இருக்கும் தன் கணவர் அதாவது ஹீரோவோட அப்பா தன்னை “ கவனிக்கறதில்லை” என்பதற்காக படி தாண்டறார்.. கள்ளக்காதலனை கணவன் போட்டுத்தள்ள, கணவனை மனைவி போட்டுத்தள்ளி மகனையே கொலையாளி ஆக பொய்க்குற்றம் சாட்டி ஜெயிலுக்கு அதாவது சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புகிறாள்...

அதான் தப்பு பண்ற பெண்கள் மீது ஹீரோவுக்கு வெறுப்பு. வரிசையா கொலை.. 

ஹீரோயினுக்கு என்ன வேலை? ஹீரோவுக்கு வேலை போட்டு குடுத்து டைம் கிடைக்கறப்ப லவ் பண்ணி , உண்மை தெரிஞ்சதும் சிம்புவை வை 9தாரா டபக்னு கழட்டி விட்ட மாதிரி எஸ் ஆகும் ரோல்.. 

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=7894&option=com_joomgallery&Itemid=50

புதுமுகம் உதய்கார்த்திக்குக்கு இயக்குநர் செல்வராகவனின் காதல் கொண்டேன் பட டி வி டியை குடுத்து இதுல தனுஷ் எப்படி நடிக்கறார்னு ஒரு உதாரணத்துக்கு பார்த்துக்கோன்னு ஃபார்மாலிட்டிக்கு சொன்னது தப்பில்லை.. அதுக்காக தாடி , கெட்டப். சட்டை நெக் பட்டன் போடறது முதல் அப்படி அட்டக்காப்பி அடித்திருக்க வேண்டாம்..அவருக்கு சிவ தாண்டவ போஸ் நல்லா வருது.. ஆனா போலீஸ் ஆஃபீசர் மேல பாம்பை ஏவி விடுவது எல்லாம் ரொம்ப ஓவர்,.. 

ஹீரோயின் வர்ஷா  ரொம்ப குண்டு முகம் , தேறாது.. இந்த ஒரு படத்துக்கு ஓக்கே.. அவரை க்ளோசப்ல பார்க்கறப்ப. ஹி ஹி முடியல.. அவ்வ்வ் 

காதல் சுகுமார்  ஓவர் ஆக்டிங்க்.. ஹீரோவின் அம்மாவாக வருபவர் இனி மலையாள கில்மா படங்களீல் நடிக்க சான்ஸ் நிறைய கிடைக்கலாம்.. 

 http://cinema.natpu.in/thiraippadam/padakaachikal/flims_list/naansivanakiren/2_full.JPG

படத்தில் ரசித்த வசனங்கள்

1.  டேய்.. மிஸ்டர் பீன் படம் ஓடுனா உம்முனு இருக்கான்.. சன் நியூஸ் கேட்கறப்ப சிரிக்கறான்.. இவன் சரியான கிறுக்கு போல..

2.  அய்யய்யோ.. டேய்.. அந்த புது டி வி யை அந்த லூஸ் போட்டு உடைச்சுட்டானே..

3. கூர்க்காவுக்கு லொள்ள பாரு.. 

அவனைத்தூக்கி உள்ளே போடு.. 

டேய்.. போலீஸ்டா..

4. லவ் பண்றப்ப என்னை ஒரு மணி நேரம் மிஸ் பண்ணி இருப்பியா?மேரேஜ்க்கு முன்னால ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை ஃபோன் செய்வே.. இப்போ?

5. பெட்ரூம்ல கூட உன் திருப்தியை மட்டும் தானே நீ பார்க்கறே,.? லவ் பண்ணும்போது எத்தனை தடவை என் கிட்டே நீ அழகா இருக்கே?ன்னு சொல்வே? ஆனா மேரேஜ் ஆன பின் ஒரு தடவை கூட சொல்லலையே ஏன்? ( ஏன்னா நாங்க மேரேஜ் ஆன பின் பொய் சொல்றதில்லை)

6.  பொண்ணுங்க மேரேஜ் ஆனதும் புருஷன் கிட்டே நகை வேணும், புடவை வேணும்னு கேட்டு கேட்டு வாங்கிக்கறீங்களே, தாம்பத்யத்துலயும் இப்படி வேணும்னு கேளுங்க.. ஏன் கண்டவன் கிட்டே கேட்கறீங்க? ( ம்க்கும், அப்படியே நீங்க குடுத்துட்டாலும்.... ஃபேமிலி கேர்ள் அதை பத்தி பேசக்கூடாதுன்னு பூட்டு போட்ருவீங்க..)

7.  ஏண்டி.. 10 நிமிஷ சுகத்துக்காக  10 தலைமுறையையே ஏன் ஸ்பாயில் பண்றீங்க?

8.  போலீஸ் தப்பு பண்றவங்களை தண்டிக்கட்டும் , உனக்கு எதுக்கு இந்த வேலை?

போலீஸ் இந்த மாதிரி கள்ளக்காதலை எப்படி தண்டிப்பாங்க?


http://www.koodal.com/cinema/gallery/movies/naan_sivanagiren/naan_sivanagiren_35_111201155720123.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய விஷயங்கள்

1. ஹீரோயின் ஸ்கூட்டி வெச்சிருக்கார், ஆனா அடிக்கடி மிட் நைட்ல மெயின் ரோட்ல ஆஃபீஸ் டூ வீடு நடந்து போறார்.. ரவுடிங்க கிட்டே மாட்டிக்கறார்.. வேண்டுதலா? பஸ் ஸ்டாப்ல டவுன் பஸ்க்காக நிக்கறார்.. வீட்டுக்கு வர்றப்ப ஸ்கூட்டி அங்கே தான் இருக்கு.. நோ ரிப்பேர்.. 

2.  மிட் நைட்ல காதல் சுகுமாரன் ரூம் கதவை வந்து ஹீரோயின் தட்றார்.. டக்னு கதவு திறக்குதே,... கதவுக்குப்பக்கத்துலயே படுத்து தூங்குவாரோ?

3.  ஹீரோ சுகுமாரனோட டி வி யை திருடி வித்துடறாரு.. யாருமே அதை என்ன ஏதுன்னு கண்டுக்கலை.. மேன்ஷன் வாட்ச்மேன் கண்டுக்காதது கூட ஓக்கே, சுகுமாரனே ஏன் இப்படி செஞ்சே?ன்னு ஹீரோவை திட்டலை..

4. சினிமா தியேட்டர் ல ஹீரோவால் தாக்கப்படும் ஹீரோயினின் தோழியின் காதலன் ஏன் போலீஸ்ல புகார் சசெய்யலை ? ( செஞ்சா க்ளூ கிடைச்சிருக்குமே?)

5. ஸ்கூட்டில 45 கிமீ வேகத்துல போற ஹீரோயினை ஹீரோ 5 நிமிஷம் கழிச்சு துரத்த ஆரம்பிச்சு 3 நிமிஷத்துலயே கிட்டே வந்துடராரே? அவர் என்ன இளைய தளபதி விஜய்யா?

6.   போலீஸ் - பிரஸ் மீட்டிங்க்.. எல்லாரு கூடி இருக்கறப்ப இன்னும் மீட்டிங்கே ஸ்டார்ட் ஆகலை, ஆனா ரொம்ப சின்சியரா 2 ஃபிகருங்க நோட்ஸ் எழுதுதுங்களே..? ஏன்?  ( எடிட்டிங்க்ஃபால்ட்டா?)

7.  மாபெரும் மைனஸ்.. செகண்ட் ஆஃப்ல வர்ற ஃபிளாஸ்பேக் கதையை ஹீரோ தன் பார்வைல சொல்றார், ஆனா அந்த காட்சிகளில் ஹீரோ இடம் பிடிக்காத , அவர் கண்ணால் காணாத பல காட்சிகள் வருது.. உதாரணமா ஹீரோவின் அம்மா, கள்ளக்காதலன் சம்பந்தப்பட்ட கில்மா காட்சிகள்... அது எப்படி? அதை யாரும் ஹீரோ கிட்டே சொல்லி இருக்கவும் வாய்ப்பில்லை..

8.  ஹீரோ 28 வயசுல போட்டிருக்கற  அதே சோடா புட்டி கண்ணாடியைத்தான் ஃபிளாஸ்பேக்ல 12  வயசு சிறுவனா இருக்கறப்பவும் போட்டிருக்காரே.. அது ஏன்? ரொம்ப லோ பட்ஜெட் படமா?

9.  ஹீரோவின் ஃபிளாஸ்பேக் கதைல  ஹீரோவின் அம்மா தன் கள்ளக்காதலனுடன் அவன் அபார்ட்மெண்ட்டுக்கு போறா.. ஹீரோவின் அப்பா அவளை ஃபாலோ பண்ணிட்டு  போறார்.. 10 நிமிஷம் கழிச்சு கரெக்ட்டா அந்த வீட்டை எப்படி கண்டு பிடிக்கறார்?

10. ஹீரோயினை  7 பேர் கொண்ட வில்லன் குரூப் ரேப் பண்ணிடறாங்க.. ஹீரோயின் பருத்தி வீரன் பிரியா மணி ரேன்ச்ஜுக்கு டேமேஜாகி டயர்டா இருக்கா.. ஹீரோ அவரை வீட்டுக்கு அழைத்துப்போறார்.. ஹாஸ்பிடல் போகாம அப்பவே 2 பேருக்கும் லவ் வந்துடுது.. என்ன கொடுமை சார் இது? அவளுக்கு வலி இருக்குமா? லவ் ஃபீலிங்க் இருக்குமா?

11. சைக்கோ ஹீரோ தன் ரகசிய ரூம்ல எல்லா எவிடன்ஸ், ஃபோட்டோ எல்லாம் வைச்சுட்டு அந்த வீட்டு சாவியை வாட்ச் மேண்ட்ட குடுக்கறார்.. ஏன்?

12. போலீஸ் ஆஃபீசரோட சம்சாரம் ரெஸ்டாரண்ட்ல தன் கணவர் கூட சாப்பிட வர்றப்ப அவளோட காதலன் வந்து சிக்னல் தர்றான்.. உடனே அவ பாத்ரூம் போறேன்னு புருஷன் கிட்டே சொல்லிட்டு வந்து ரொமான்ஸ் பண்றா..  ஹாலிவுட் படமான அன் ஃபெயித் ஃபுல்,  பாலிவுட் படமான மல்லிகா ஷெராவத்தின் மர்டர் படத்துல இருந்து சுட்டிருக்கீங்கனு தெரியுது.. ஆனாலும் ஓவர்.. நம்ம தமிழ் நாட்ல அப்படி பயம் இல்லாம போவாங்களா? புருஷன் போலீஸா இருக்கறப்ப..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYNQL3zDbWIJt2Ke-rCCKEmju1FNksQaVtFAUYlnbrLe352z2mD63eo_toFGIUWIZjTcqpJwyf5MRk5EyblWumTePqkoqg2cVmGF-SRSiPzGqeX1cFov-AgSt_lIqvw9N1bOVAN9EO27Ht/s320/738a2edf-0d00-4ed2-8435-c406704417fd_S_secvpf.gif
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

 1. படத்தின் கருவும் , கதையும்  நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் என்பதால் அவருக்கு, அவரது நல்ல உள்ளத்திற்கு பூங்கொத்து

2.  ஹீரோவை எழுப்பும் சுகுமாரன் அவர் திடுக் என விழிப்பது கண்டு அதிர்ச்சி அடையும் சீன் செம த்ரில்லிங்க்.. 

3.  காதல் இல்லை காமம் இல்லை பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம்.. 

4. ஹீரோவுக்கு அப்பா பாசம் எப்படி ஏற்பட்டது என்பதற்கான விளக்கம் கவிதை.. 

எல்லா செண்ட்டர்களிலும் ஆவரேஜாக 15 நாட்கள் ஓடினாலே படம் வெற்றி தான்... ஏன்னா படத்துல செலவு இல்ல லோ பட்ஜெட்.. அந்த வகையில் படம் வெற்றிப்படமே.. 

ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம்  மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - தம்பதிகள் பார்க்க வேண்டிய படம்


டிஸ்கி - 1  

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

File:Immortals poster.jpg 

தமிழன் கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருக்கு.. அம்புலிமாமா, பால மித்ரா, பூந்தளிர் புக்ஸ் எல்லாம் குடுத்து நல்ல மாயா ஜாலக்கதைகள் இருக்கு ,படிடான்னா படிக்க மாட்டான்.. எளக்காரமா பார்ப்பான்.. ஆனா  ஃபாரீன் புக்ஸ்ல செம சேல்ஸ்னு ஹாரி பாட்டர் மாதிரி இங்கிலீஷ் புக் வந்தா மட்டும் அரை குறை இங்கிலீஷ் நாலெட்ஜை வெச்சு ஒப்பேத்தி ஆஹா ஓஹ்ஹோ பேஷ் பேஷ்ம்பான்..

அதே மாதிரிதான் உலகின் சிறந்த , கலப்படம் இல்லாத குளுமை பானம் இளநீர்னா கேட்க மாட்டான்.. குடிக்க மாட்டான், கண்டுக்க மாட்டான்.. ஆனா பூச்சிக்கொல்லி மருந்து மாதிரி இருக்கற , உடல் ஆரோக்யத்துக்கு பாதிப்பே வந்தாலும் பரவால்ல, நமக்கு ஸ்டேட்டஸ்ஸூம், பந்தாவும் தான் முக்கியம்னு 50 ரூபா செலவு பண்ணி பெப்ஸி, கோக்கோ கோலா இப்டி குடிச்சு உடம்பை கெடுத்துக்குவான்..

அந்த மாதிரிதான் நம்மூர்ல மாயாஜாலப்படம் வந்தா கிண்டல் பண்ணுவான், இதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லம்பான்... ஆனா ஃபாரீன் படத்துல அது வந்தா மட்டும் ரசிச்சு பார்ப்பான்.. அந்த மாதிரி குழந்தைப்பசங்க ரசிக்கற ஒரு மாயா ஜாலப்படம்தான் இது.. காதுல பூக்கூடையையே சுத்துனாலும் , கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் , ஹீரோயின் கிளாமர் இந்த 3 க்காக எப்படியும் ஆடியன்ஸ் வந்துடுவாங்க அப்டிங்கற தைரியத்துல எடுக்கப்பட்ட படம்.. 

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/05/Freida-Pinto-Immortals-hot-pics.jpg


படத்தோட கதை என்ன? லைப்ரரியை அழிக்க அம்மா ஜெ முயற்சி பண்ற மாதிரி மனிதர்களை அழிக்க ஒரு தீய சக்தி முயற்சி பண்ணுது.. ஆனா அது கலைஞர் இல்ல.. அந்த தீய சக்தியை கடவுளால கூட தடுக்க முடியலை.. வெறும் பர்வையாளனா மட்டுமே வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை.. இப்போ நம்ம பிரதமர் மாதிரி.. தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஹீரோ தான் அதை செய்யறார்.. அவரோட அம்மா வை கொலை பண்ணிடறாங்க.. ஹீரோ அம்மாவை கொலை செஞ்ச வில்லனை யும், உலகத்தை அழிக்க நினைக்கிற ஆளையும் பழி வாங்கனும்.. 2 வேலையா? நோ நோ ஒரே வேலை.. 2ம் ஒரே ஆள் தான்.. 

சரி ஹீரோயினுக்கு என்ன வேலை? அவங்க தான் கடவுளோட தூதர்.. கன்னித்தன்மை மிக்கவங்க.. (!!!!!!) அவங்க கண்ணுக்கு எதிர்காலத்துல என்ன நடக்குதுன்னு பார்க்க முடியும்.. ஆனா தெய்வ வாக்கு ரேவதி மாதிரி தான் ஆக பாப்பா விரும்பல.. அதனால  ஒரு டெக்னிக்.. இந்தியாவுல இதுவரை யாருமே கண்டுபிடிக்காத டெக்னிக்.. அதாவது ஹீரோ கிட்டே சொல்றாரு.. நீங்க என்னை கெடுத்துடுங்க... (!!!!!!) அப்போதான் நான் சராசரி மனுஷி ஆவேன்கறா.. 

நம்மாளுங்க சும்மாவே  பிட்டை போடுவானுங்க.. எக்ஸாம் ஹால்ல சூப்பர்வைசரே நோட்சை எடுத்து கைல கொடுத்தா? ஹீரோவும் அந்த கஷ்டமான வேலையை செய்யறார்.. ( வில்லன் கிட்டே கேட்டிருந்தாக்கூட அதை செஞ்சிருப்பாரே?)

யாரும் கிளு கிளுப்பு அடைய வேண்டாம்.. அந்த சீன் ரொம்ப நாசூக்காதான் படத்துல சொல்லப்பட்டிருக்கு.. ( சென்சாரின் நாசூக்கில் இடி விழ,.,. )

ஆனா ஒரிஜினல் படத்துல கில்மா சீன் இருக்காம்.. இந்தியாவுக்கு மட்டும் அது கட்டாம்.. ஹீரோயின் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டாராம்.. எனக்கு இந்தியாவுல மரியாதை ,அந்தஸ்து , கவுரவம் எல்லாம்  இருக்கு.. அதனால ஃபாரீன்ல எவ்ளவ் கேவலமாவேணாலும் சீன் காட்றேன்.. ஆனா இந்தியாவுல மட்டும் அதை காட்ட மாட்டேன் அப்டினு சொன்னாராம்.. ( ஆதாரம் - விக்கி உலகம் என்சைக்ளோ பீடியா)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhif-qQyRjM_UtcRYt9O4DfNKZD1NX7zqZvhN5EzGXhT0fd63MXlMPau4Jgfu2UwQLvd2XmSUtg6YQIpFDmmCNwp8ygk7Stja5ebeS7PIdxUvVK0-njGOeBO4dJWOJgOKWG4ZGoHV28u3s/s1600/Immortals+3.jpg

ஒரு மந்திர வில் இருக்கு... அதை கைப்பற்றிட்டா உலகத்தையே வசம் ஆக்கிடலாம்.. அதை கஷ்டப்பட்டு ஹீரோ கைப்பற்றிடறார்.. அப்புறம் லூஸ் மாதிரி  அதை வில்லன் கிட்டே விட்றாரு.. 

வில்லன் அதை யூஸ் பண்ணி போர் புரியாம கைல வெச்சுக்கிட்டு வேடிக்கை பார்க்கறான்..
கடவுளோட தேவ தூதர்கள் கடவுளுக்கே தெரியாம கட் அடிச்சுட்டு பூமிக்கு வர்றாங்க ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ண.. ( அது கூட தெரியலைன்னா அவர் என்ன கடவுள்?னு கேள்வி யாரும் கேக்காதிங்க.. எனக்கு பதில் தெரியாது,, )

கடவுளோட தேவ தூதர்கள்க்கு என்ன அடையாளம்? கலைஞர் போட்டிருக்கற மஞ்சள் துண்டு மாதிரி உடம்பு பூரா மஞ்சள் பெயிண்ட் அடிச்சிருப்பாங்க.. ஆனா பாருங்க அவங்களையும் வில்லன் அழிச்சிடறான்..

 வில்லன் கோஷ்டிக்கு என்ன அடையாளம்னா அவங்க முகத்துல இந்தப்பக்கமா 3 கீறல். இடம் இருந்து வலம்.. அந்தப்பக்கமா 3 கீறல் இடம் இருந்து வலம்.. மொத்தமா 6 கீறல் முகத்துல இருந்தா அவன் வில்லன் கோஷ்டி.. இலைன்னா ஹீரோ கோஷ்டி.. எப்பூடி? இந்த ஐடியா எதுக்குன்னா ஷூட்டிங்க் ட்டைம்ல அவங்களுக்குள்ள குழப்பம் வந்துடக்கூடாதே.. அதுக்குத்தான்.. 

http://www.bollywood-actress-wallpapers.com/wordpress/Freida-Pinto/Freida-Pinto-40.jpg

எல்லா எதிர்ப்புகளையும் சமாளிக்க வில்லன் ஹீரோவுக்கு  தூது அனுப்புறான் என் கூடவே சேர்ந்துக்கோன்னு.. அதாவது கூடன்குளம் பிரச்சனைக்கு அப்துல்கலாமை காங்கிரஸ் அனுப்பிச்ச மாதிரி.. ஆனா பப்பு வேகலை..

போர் புரிந்து ஹீரோ ஜெயிக்கறாரு.. அவ்ளவ் தான் கதை முடிஞ்சுது.. எல்லாம் அவங்கவங்க வீட்டுக்குப்போய் அவங்கவங்க பொண்டாட்டிங்க கூட சண்டை போடுங்கன்னு  டைரக்டர் சொல்லிடறாரு..


ஹீரோ ஆள் செம பாடிபில்டப்.. கட்டுமஸ்தான உடம்பு.. ஃபைட் போடும் லாவகம்.. எல்லாம் அசத்தல்.. மேன் ஆஃப் ஸ்டீல் அப்டினு ஒரு சூப்பர் மேன் படம் அடுத்த வருஷம் வருது.. அதுல அண்ணன் தான் ஹீரோ..  ஆல்ரெடி இவர் கவுண்ட் ஆஃப் மாண்டோ கிறிஸ்டோ, பிளட் க்ரீக் போன்ற மெகா ஹிட் படங்கள்ல நடிச்சவர் தான்.. ஹீரோவைப்பற்றி இன்னும் நிறையா சொல்லலாம், ஆனா ஆம்பளைங்களை புகழக்கூடாதுங்கற அடிப்படை நாகரீகம் (!!!)_ கருதி இத்தோட அதை ஸ்டாப்பிக்கறேன்.. ஏன்னா ஃபிகர்களை புகழவே இடம் பற்ற மாட்டேங்குது..

300 அப்டினு ஒரு ஹாலிவுட் படம் வந்ததே தமிழ்ல கூட நம்மாளுங்க கேவலமா 300 பருத்தி வீரர்கள்னு டைட்டில் குடுத்து ரிலீஸ் பண்னாங்களே.. அந்தப்பட தயாரிப்பாளர் தான் இந்தப்பட தயாரிப்பாளர்.. 

த செல் , தி ஃபால் படங்களை இயக்கிய டார்செம் தண்ட்வார் சிங்க் தான் இதன் இயக்குநர்... இவர் முழுக்க முழுக்க ஒரு இந்தியர்..

 அப்புறம் ஹீரோயின் - ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரீட்டா பிண்டோ.. பாப்பா ஷோக்காத்தான் கீது.. உதட்டழகு செம.. நடிப்பு கொஞ்சம் கொஞ்சம் வருது... பொதுவா நடிகைங்க கிட்டே நடிப்பை எதிர்பார்ப்பது அகில உலக ஜொள்ளர்கள் சங்கத்துல தடை செஞ்சதால அதை நான் கண்டுக்கல.. 


http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/05/Freida-Pinto-Immortals-hot-pictures.jpg


படத்தில் ஹீரோயின் கிளாமரையும் தாண்டி ரசிக்க வைத்த வசனங்கள்

1.  மத போதகர் -கடவுளை நம்பு.. அவர் உனக்கு மோட்சத்தை தருவார்...

வில்லன் - இப்போ நான் உனக்கு அதை தர்றேன்... 


2. ஒரு வீரன் தன் வாழ்நாள்ல எத்தனை பேரை அழிச்சான்கறது முக்கியம் இல்ல..  வாளை எதுக்காக கையில் எடுக்கறான்கறது தான் முக்கியம்.. ( அண்ணே, அழகிரி அண்னே நோட் இட்)

3. கடவுள்ட்ட கருணையை எதிர்பார்த்தேன், மவுனம் தான் பதிலா கிடைச்சது

4. புனிதமான உங்களுக்கு என் கடைசி வணக்கங்கள்

5.  கடவுளை ஏன் நீ நம்பலை..?

இல்லாத ஒண்ணு கிட்டே நடக்கக்கூடாத ஒண்ணை வேண்டிக்கறது வேஸ்ட்... நோ யூஸ் ( 2ம் ஒண்ணுதானே?)

. 6. எந்த சூழ்நிலையிலயும் ஒரு சந்நியாசி எந்த உயிரையும் எடுக்க மாட்டான் , அதுக்கு அவனுக்கு உரிமையும் இல்ல.. ஏன் அவன் தன் உயிரையும் எடுக்க மாட்டான்.. ( தற்கொலை செஞ்சுக்க மாட்டான்)

7. கோபம் தான் ஒரு மனுஷனை தோல்வியை நோக்கித்தள்ளுது.. 

8.  ஃபிகரு - நீங்க திருடனா?

ஆமா... உங்களை தூக்கிட்டுப்போக வந்த திருடன்.. 

9. நீ நடந்த துக்கத்துக்காக வருத்தப்படறே.. நான் நடக்கப்போற துக்கத்துக்காக வருத்தப்படறேன்.. 

10.  டேய்.. ஃபிகர் கூட நைட் தங்குனியே என்னாச்சு?

மருந்து குடுத்தா.. 

பார்த்தா மருந்து  மட்டும் குடுத்தா மாதிரி தெரில்யே கண்ணா./.. 

http://www.bollywoodface.com/wp-content/uploads/2011/02/freida-pinto-hot.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க்  ஃபைட் சீனில் ஹீரோ தன் அம்மாவைக்காப்பாற்ற போடும் ஃபைட் சீன் செம ஸ்பீடு.. தியேட்டரே செம அப்ளாசில் மூழ்குது.. 

2. ஒளிப்பதிவு செம.. ஒரு சீன்ல லாங்க் ஷாட்ல ஏதோ ஒரு புள்ளியை காட்டி அது கடல்ல வர்ற ஒரு போட்னு  ( BOAT)காட்ற சீன் கலக்கல்.. 

3. க்ளைமாக்ஸ் போர் - பிரம்மாண்டம்.. கிராஃபிக்ஸ்..ஒளிப்பதிவு எல்லாம் செம.. 

4. ஹீரோயின் பக்கத்துல இருக்கற அந்த 4 ஃபிகர்ஸ் ஹி ஹி .... படத்தோட கதைக்கு தேவையே இல்லைன்னாலும் அடியன்ஸ் கண்கள் குளுமைக்காக ஹீரோயினை ஹீரோ கூடவே சுத்த விட்டது அழகு,. 

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள் ( எப்படியும் அவர் தமிழ் படிக்க மாட்டாரு. கண்டபடி கேட்கலாம்)

1.  கடவுள் பூமிக்கு வர்றப்ப அவரோட தேவ தூதர்கள் 3 பேரு போர்ல இறந்துடறாங்க.. அவங்களை காப்பாத்த முடியாதா? அவங்களும் சராசரி மனுஷன் போலவே ஏன் சாகறாங்க?

2. வில்லன் ஹீரோவை படம் ஆரம்பிச்ச 2 வது ரீல்லயே பிடிச்சிடறான்,  ஆனா அப்பவே அவனை கொல்லாம சுரங்கத்துல வேலை பார்க்கட்டும்னு விட்டுடறான். வில்லன் என்ன வேலை வாய்புத்துறை அமைச்சரா? அப்பவே போட்டுத்தள்ள வேண்டியதுதானே?

3. ஹீரோயின் ஃபிரண்ட்ஸ் 4 பேரை வில்லன் ஒரு பொம்மை காலை மாட்டுக்குள்ள அடைச்சு வைச்சு நெருப்பு மூட்டி  4 மாசம் (!!!) சித்திரவதை பண்றான்.. 4 மாசமா வேகாம இருக்கற அந்த ஃபிகர் ஹீரோ வந்து காப்பாத்தறப்ப செத்துடறாங்க.. ஹீரோவுக்கு யாரை தொட்டாலும் சாகடிக்கற சக்தி இருக்கா?

4. கடவுள் க்ளைமாக்ஸ்ல வந்து என்னமோ பண்ணி எல்லாத்தையும் இடிக்க வைக்கறாரு.. அதே வேலையை அவர் அங்கே இருந்தே பண்ண முடியாதா? டவர் கிடைக்காதா? பவர் பத்தாதா?

5. தமிழில் வந்த விட்டலாச்சாரியார் படங்கள் ல பார்த்து ஏன் கேவலமா காபி அடிக்கறீங்க?

http://images.indiascanner.com/image/2010/12/Hot-Freida-Pinto-GQ-Magazine-Photos.jpg


ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

சி.பி கமெண்ட் - படம் எல்லாருமே பார்க்கலாம்.. மோசம் இல்ல.. ஜாலியா பொழுது போகுது.. 


டிஸ்கி -1 இந்தப்படத்துல பெரிசா சீன் எதுவும் இல்ல.. ஆனாலும் ரசிகர்கள் ஏமாறக்கூடாதுங்கறதுக்காக சில ஸ்டில்களை போடறேன்.. இதெல்லாம் ஃபாரீன்ல மட்டுமே இருக்கு.. படத்துல இல்லை.. 


டிஸ்கி 2 - 

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி - 3

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

Tuesday, August 16, 2011

சகாக்கள் - சினிமா விமர்சனம்


http://www.ariviththal.net/events/uploads/4816.jpg

சூர்யா காதலே நிம்மதின்னு ஒரு படம் பண்ணுனார். ஹீரோ ஹீரோயின் 2 பேரும் காதலிக்கவே மாட்டாங்க, ஆனால் மத்தவங்க எல்லாம் அவங்க 2 பேரும் காதலிக்கறதா நினைச்சுக்குவாங்க,வெறுத்துப்போய் 2 பேரும்  நிஜமாவே காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. அதே கதையை கொஞ்சம் தூசு தட்டி இயக்குநர் ஒரு படம் பண்ணி இருக்கார்.அந்தப்படமே ஓடலை! இது மட்டும் ஓடவா போகுது?

ஹீரோ ஹீரோயினை பஸ் ஸ்டாப்ல பார்க்கறார், உடனே லவ்வாகுது, ஆனா ஹீரோயின் அவரை கண்டுக்கவே இல்லை. ஃபிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் லவ்வற மாதிரி இவரே வாலி அஜித் சிம்ரன் கிட்டே சோனா கதையை எடுத்து விடுவது மாதிரி இவரும் கற்பனையா சம்பவங்களைஅள்ளி விடறாரு, இந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிய வரும்போது. இடைவேளை

http://www.thedipaar.com/pictures/resize_20110615040616.jpg

அப்பத்தான் டைரக்டருக்கு நாம சகாக்கள்னு டைட்டில் வெச்சது நினைவு வருது, உடனே ஹீரோ ஹீரோயின் காதலுக்கு எப்படி உதவறாங்க, காதலர்கள் சேர்ந்தாங்களா? சோர்ந்தாங்களா? என்பதை தில் உள்ளவங்க டி வி ல பார்த்து தெரிஞ்சுக்கோங்க.....

ஹீரோ புதுமுகம் மீசை தாடி வெச்ச அப்பாஸ் கணக்கா  இருக்கார்.. தேறுவது ரொம்ப கஷ்டம்.  ஹீரோயின் அத்வைதா (அழகர்சாமியின் குதிரை)லட்சணமா, குடும்பப்பாங்கா இருக்கார். சான்ஸ் இருக்கு..




http://www.cinemaexpress.com/Images/article/2011/3/1/sagakkal.jpg

பாஸ்கர் சக்தியின்  பேனாவில் மனதில் பதிந்த வசனங்கள்

1.  சார்.. வாங்க , என்ன சாப்பிடறீங்க?

வெண்ணிற ஆடை முர்த்தி - அதை விடுங்க, நான் எதை கொடுத்தாலும் சாப்பிடுவேன். 


2.  வெண்ணிற ஆடை முர்த்தி - நானும் அந்தக்காலத்துல பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கேன்.பாதாளப்பேட்டை பைரவில இருந்து,கன்னிச்சுரங்கம் காஞ்சனா வரை பல பேரை புதுசா ..

 3. கண்டக்டர் சார். ஆலமரம் 1.

ஆலமரம் நிக்காது.. 

ஆலமரம் அங்கேயே தான் நிக்கும் பஸ் தான் அங்கே நிக்கனும்.. 

ஏம்மா, உன் கூட ரோதனையா போச்சு.. 

யூ ஆர் எ பப்ளிக் சர்வெண்ட் யூ நோ?

ஆமாம்மா, உன் பாவாடை , தாவணியை கழட்டிக்குடு, துவைச்சு பப்ளிக் சர்வீஸ் பண்றேன்.. 

4.  பொண்ணு நிறைய யோசிக்குதே..?

ஏன் இந்த இத்துப்போனவனை செலக்ட் பண்ணுனோம்னா?

5. ஆணின் காதல் இன்ஸ்டண்ட் காஃபி மாதிரி,டேஸ்ட் சீக்கிரம் போயிடும்,பெண்ணின் காதல் மலைத்தேன் மாதிரி 50 வருஷம் ஆனாலும் கெடாம இருக்கும்





http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/08/saghakkal-9-300x199.jpg
6. வெண்ணிற ஆடை முர்த்தி - இந்தப்பொண்ணுக்கு மட்டும் அழகு ஏன் இப்படி பீறிட்டிக்கிட்டு வருது?!!!!!!!!

7. உங்க ஊர்ல சாப்பாடு எப்படி இருக்கும்..?

ஓ. பிரமாதமா.....


அது உங்க முகத்தைப்பார்த்தாலே தெரியுதுங்க. 

8.  நம்ம ஊர்ல மேரேஜ்க்குப்பிறகு தன் மனைவியை லவ் பண்ணும் ஆளே கிடையாதுங்க. 

9. ஏண்டா என்னை காட்டிக்குடுத்தே?

 தனியா அடி வாங்க பயமா இருந்துச்சு

10. காதலிக்கற மனசு காதலை மட்டும் தான் யோசிக்கும் , மத்த எதைப்பற்றியும்  அதுக்கு கவலை இல்லை.. 

11.  டேய், நீ கேட்கறப்ப எல்லாம் 50,   100ன்னு குடுத்துட்டுத்தானே இருந்தேன், ஏண்டா கட்சி மாறுனே?

இயக்குநர் பல காட்சிகளில் நாடோடிகள், காதல், சுப்ரமணிய புரம் என கலந்து கட்டி அடிக்கிறார்.யுகபாரதியின் பாடல்களில் நீ எனை நினைக்கையிலே புரை ஏறுது, நான் உன்னை நினைக்கையிலே மனம் தடுமாறுது அழகு கவிதை வரிகள்



http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/17221789149.jpg

இயக்குநரிடம் பொதுவா விமர்சனம் எழுதும்போது ஏன் இந்த காட்சிகள்னு 5 கேள்விகள் கேட்பது பழக்கம். இந்தப்படத்துல அதுக்குப்பதிலா ஏன் இந்த மாதிரி படம்?ன்னு கேட்கலாம்..


 லாஜிக் மீறல்கள்


1. ஹீரோ தனது காதலியை எங்கே முதல் முறை மீட் பண்ணேன் என ஒரு கற்பனை கதை  சொல்வார், அதில் ஹீரோயின் ஆண் டாய்லெட்டில் தெரியாமல் போவது போலவும், இவர் வெளியே காவலுக்கு நிற்பது போலவும் ஒரு சீன் வருது, மகா மட்டம்.. எந்த ஊரில் ஹை க்ளாஸ் ஃபிகர்  இலவச பப்ளிக் டாய்லெட் போகுது? அப்டியே போனாலும் ஆண், பெண் வித்தியாசம் தெரியாம போயிடுமா?


2. ஹீரோ  காதலை சொல்லும்போது ஹீரோயின் வேண்டா வெறுப்பாய் யோசிப்பவர், பின் ஓக்கே சொல்லி அடுத்த செகண்டே ஆரத்தழுவுவது எப்படி?

3. ஹீரோவுக்கு தேவை இல்லாமல் எப்போதும் 2 ஃபிரண்ட்ஸ் கூடவே இருக்காங்களே? எதுக்கு ? ( நல்ல வேளை டூயட் பாடறப்ப நைஸா கழட்டி விட்டுடறாங்க )

4. ஹீரோவுக்கு 20 வயசு போலவும் , ஹீரோயினுக்கு 28 வயசு போலவும்  முகங்கள் சொல்லுது.. ஹீரோ செலக்‌ஷன் ல கோட்டை விட்டுட்டீங்களா?

5. ஹீரோயின் தன் தோழியை ஹாஸ்பிடலில் சேர்த்து நைட் வீட்டுக்கு வர லேட் ஆகும் என அப்பாவுக்கு ஏன் ஃபோன் பண்ணி சொல்லலை?




http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/sagakkal.jpg

 இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் தான் ஓடும்..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 34

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க்  - ம்ஹூம்

சி .பி கமெண்ட் - அய்யய்யோ...

ஈரோடு மாணிக்கம் தியேட்டர்ல இந்த குப்பைப்படத்தை பார்த்தேன்

http://3.bp.blogspot.com/-xrmh_YClcuM/TfTs_JedZTI/AAAAAAAAFec/SBtZOs9n7FM/s1600/26.jpgடிஸ்கி - அத்வைதாவிடம் பர்சனலா ஒரு கேள்வி, லிப்ஸ்டிக் போடாமயே உங்க உதடு நல்லாத்தான் இருக்கு, எதுக்கு வாடாமல்லி கலர்ல கேவலமான டார்க் ஷேடோல போடறீங்க? 

Monday, June 27, 2011

உதயன் -சந்தானத்தின் காமெடிக்காக - சினிமா விமர்சனம்

http://indiatheatres.com/MovieStills%5CUdhayan(1).jpga

10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே நடிக்கும் ஹீரோ,20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் ஓவர் ஆக்டிங்க் ஹீரோயின்  இவங்க ரெண்டு பேரும் இணைந்தா எப்படி இருக்கும்?அது தான் உதயன்.. அரசியல் வாழ்வில் மட்டும் அல்ல, சினிமா வாழ்விலும் கலைஞருக்கு ,அவர் குடும்பத்தார்க்கு இறங்குமுகம் ஸ்டார்ட்டட் என்பதை உணர்த்த வந்த படம்....

சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத்தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்‌ஷன்.. அண்ணன் தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்தறார்... 2 கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார்.. சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்.. ஹி ஹி ..


படத்தோட கதை என்னான்னா.. 2 தாதா கோஷ்டி... (அய்யய்யோ.. மறுபடி தாதா கதையா? வுடு ஜூட்.. )  ஒரு தாதா கோஷ்டில ஹீரோயின் அப்பா கணக்குப்பிள்ளை... இன்னொரு தாதா கோஷ்டில ஹீரோவோட அண்ணன் (இவரும் ஒரு ஹீரோ தான் )2 கோஷ்டியும் மாற்றி மாற்றி அடிச்சுக்குது.. இதெல்லாம் இடைவேளைக்குப்பிறகுதான்.. அதுவரை ஹீரோ ஹீரோயின் லவ் காட்சிகள், சந்தானம் காமெடி காட்சிகளை வெச்சு ஒப்பேற்றப்பார்த்திருக்காங்க.. ..ஹூம்... 

60 மார்க் ஃபிகரை 80 மார்க் ஃபிகர் ஆக்கும் ரசவாத வித்தையை ஆடை வடிவமைப்புக்கலைஞரும்,முக ஒப்பனைக்கலைஞரும் பிரமாதமாக கற்றுத்தேர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஒரு சபாஷ்.. ..ஹீரோயின் முகத்தைபார்த்துக்கொண்டே இருக்கலாம்.. சோ க்யூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்‌ஷன் தான் வருது.. 

டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது நம்ம சந்தானம் தான்.. பாம்பு பிடிப்பவராக  டி வி கேமராமேன்களோட அவர் அப்பார்ட்மெண்ட்க்கு வரும் பில்டப் சீன்கள் செம காமெடி ரகளை கச்சேரி.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Tz5rh9HRS-3PBw_FWJZnEyQq_NPyq3Pn1EqbVJMlHdl8oONmQaEBbKD0AIbqTMXcUYtEH36zq_uVMXq7QImVfZYM6fGplElBaEL9QP_s8L4LMNIrUxNEpv_SfatCchxePUWLdrZ-EfSt/s1600/Pranitha-+Cute-+Stills+-In-+Udhayan-+Movie-008.jpg



சந்தானம் காமெடியில் பின்னிப்பெடல் எடுத்த காட்சிகள்..

1. எதுக்காக மறுபடியும் அங்கே போய் திரும்பி எண்ட்ரி கொடுக்கறீங்க?


சந்தானம் -  ஹி ஹி பில்டப்ல பேண்ட் ஜிப் போட மறந்துட்டேன்..

2. சந்தானம் - பாம்பை பிடிக்க பரபரப்பா போறேன்.. எதுக்கு கேமராவை முன்னால கொண்டு வர்றீங்க?.. இந்த கீரித்தலையனை கூடவே கூட்டிட்டு போறேன்.. பாம்பை பயமுறுத்த உதவுவான்..

3. சந்தானம் -  அவன் என்ன அபிஷேக் பச்சனா?க்ளோஷப்ஷாட் வைக்க?

4. சந்தானம் -  அடேய்.. பாம்புக்கு எதுக்கு பால், முட்டை இதெல்லாம்? அதென்ன ஜிம்முக்கா போகுது?

5. சந்தானம் -  அடப்பாவிகளா.. இந்நா வரைக்கும் பூட்டாத கதவையா நம்பிட்டு இருந்தீங்க..?நீங்கள்ளாம்......

6. ஹீரோ- சாரி. மிஸ்.. நீங்க ரொம்ப அழகு.. வண்டியை இடிச்சா திரும்பி பார்க்கறீங்க.. அதுக்குத்தான் அடிக்கடி இடிச்சேன்.. அடிக்கடி உங்க முகத்தை பார்க்கலாமே..?

7. ஹலோ.. இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க?

சந்தானம் - ம் ,அழுக்கு பனியனும்,கிழிஞ்ச லுங்கியும் போட்டிருக்கேன்.. பேசுதுங்க பாருங்க.. ஃபோன்ல..

8. சந்தானம் -  சரி சரி.. போடா.. பேண்ட் சர்ட் உனக்கு ஓசி கொடுத்தவன் உன்னை தேடுவான்.. இவரு பெரிய மிஸ்கின் பாரு.. கூலிங்க் க்ளாஸ் போடாம வெளீல வரவே மாட்டாரு.. 

9. ஹீரோ -  இது யாரு ஆண்ட்டி..? உங்க தங்கச்சியா? ஓ சாரி உங்க மகளா?

10. ஹீரோயின் - ஆம்பளைங்களூக்கு உடனே கிடைச்சுட்டா அதனோட அருமை தெரியாது.. ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்க.. 

11. மிஸ்.. உங்க பேரென்ன? 

------------------------

ஓ , ஊமையா? சாரிங்க... 

அய்யோ.. என் பேரு பிரியா.. 

12. இப்போ பாருடி.. என் சர்ட் பட்டன் மேல் பட்டனை ஒண்ணு மட்டும் கழட்றேன்.. லோன் சாங்க்‌ஷன் ஆகிடும் பாரு.. ( ஓப்பன் யுனிவர்சிட்டி ஓமனா வாழ்க)

13. சந்தானம் -  மேடம், உள்ளே ஏ சி ஒர்க் ஆகலையா? ஏன் பட்டனை கழட்டி விட்டிருக்கீங்க?

ஸ்டுப்பிட்.. 

டவுட் கேட்டா ஏன் திட்டறீங்க?
14.  என்னப்பா இது சொல்லாம கொள்ளாம வந்திருக்கே?

சொல்லாம வந்தா சர்ப்பரைஸ்.. சொல்லிட்டு வந்தா அது மீட்டிங்க்.. 

15. அவ பேரு கூட என்னமோ வர்றியா? போறியா?ன்னு வருமே.. ம் பிரியா.... 


http://movies.vinkas.in/files/2011/06/pranitha-stills.jpg

16. சின்னப்பையன் - அங்க்கிள், எங்க கூட விளையாட வர்றதா சொன்னீங்க?

சந்தானம் -  அது உங்கக்கா கூட இருக்கறப்ப சொன்னது.. இப்போ நீ தனியாத்தானே இருக்கே?

17. சந்தானம் -  கோணியை திட்டுனா சாணிக்கு ஏன் கோபம் வருது?

18. சந்தானம் -  இந்த பொண்ணுங்க எல்லாம் சாக்கு மூட்டைல கால் விட்டு தத்தி தத்தி வர்றாங்க பாருங்க.. இந்த கேமை நிமிர்ந்து பார்த்தா  தெரியாது.. குனிஞ்சு பார்த்தாதான் தெரியும்.. 

19. எத்தனை  பேர் இருந்தாலும் அந்த கூட்டத்துல  பொண்டாட்டி வாசனை புருஷனுக்கு தெரிஞ்சிடும்.. 

20. ஸாரி.. மேடம்,,. நான் வேணும்னு பண்ணலை.. தெரியாம இடிச்சுட்டுது..

இல்லை.. நான் வேணும்னுதான் இடிச்சேன்... ( ஆஹா பெண்ணுக்கு சம உரிமை)

21. சாரி சார்.. யாரும் சாகலை.. சுடுகாடு காலி.. அதனால டியூ கட்ட முடியல.. 

22. ஏய்.. வசந்த்.. நீயா!!!!!!!!!!!

ஏன்? வேற யாரையாவது எதிர்பார்த்தியா?

அது இல்ல.. வீட்டுக்குள்ள எப்படி வந்தே?

வாசல் வழியாத்தான்... 

23. ஹலோ.. பூசாரியா? நீங்க மந்திரிச்சதுல இருந்து என் பொண்ணு ராத்திரில உளர்றதில்லை.. 

வெரிகுட்..
பகல்லயே உளற ஆரம்பிச்சுட்டா.. 

24. சந்தானம் -  வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களைவிட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போறபொண்ணுங்க அதிகம்

25. வோட்கா சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 


சந்தானம் -  மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்தெரியுமா உங்களுக்கு? 

26.  சந்தானம் -  நீயும் சிங்கிள்,நானும் சிங்கிள்.. ஒய் டோண்ட் வீ  கெட் மிங்கிள்?

27. சந்தானம் -  கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு கேட்டதுக்கு ஏன் இந்த கத்து கத்தறா?கற்பழிச்சிருந்தாக்கூட இப்படி கத்தி இருக்க மாட்டா.. போல.. 

28. ஹீரோ - ஹாய்.. ப்ரியா.. நீ பக்கத்துல இருந்து பார்க்கறதை விட தூரத்துல இருந்து பார்க்கறப்பத்தான் அழகா தெரியறே!!


அப்படியா? அப்போ நான் கிளம்பறேன்.. என்னை தூரத்துல இருந்தே ரசிச்சுக்கோ..

29. சந்தானம் - எதுக்கு இத்தனை பொண்ணுங்க? இவங்க எல்லாம் யாரு?

எல்லாரும் என் ஒயிஃப்ங்க தான்.. ஹவுசிங்க் லோன் வாங்கி கட்னதால எல்லாரும் ஹவுசிங்க் ஒயிஃப் ஆகிட்டாங்க.. 

30. சந்தானம் -  டேய்.. உன் கிட்டே கரண்ட் இருக்கறதால தானே லோன் வாங்கி லோன் வாங்கி வீடு கட்டறே..?ஃபீஸ் பிடுங்கிட்டா?

எப்படி பிடுங்குவீங்க..?

இப்படி உதைச்சுத்தான்

அய்யோ.....




http://telugu.go4wallpapers.com/bollywood_babes33/P/Praneetha/PRANEETHA151110a.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது சோ க்யூட் சீன்.. 

2. ஹீரோயின் காதல் வசப்பட்ட முதல் நாள் ஹீரோவின் ரூமில் உடை மாற்றும்போது ஹீரோவின் ஃபோட்டோவை தன் துப்பட்டாவால் மூடும் இடம் கவிதை.. 

3.  இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும் , ஹீரோயின் முக அழகை 100%  மெருகேற்றி காட்டியதும்.. 

4. அபார்ட்மெண்ட்சில் ஹீரோ,ஹீரோயின், சிறுவர் ,சிறுமிகள் கண்னாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை

5. டூயட் சாங்க்ஸ் தவிர ஹீரோயினை பிரமாதமான அழகுடன் கண்ணியமான உடைகளில் காட்டியது..  ( டூயட் சாங்க்ஸில் தடார் என கவர்ச்சி டிரஸ்ஸில் ஹீரோயின் வரும்போது மொத்தப்படத்திலும் மெனக்கெட்டு காட்டிய கண்ணியக்காதல் களங்கம் அடைகிறது)





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9cj6niB9z9RrfJSauXmGlKZjIfEkaXdyfrk494h8fzQveXcskW5mp03g96WCI6d1JHTcOHbRSmoycB3sQeSHjdfLbD8XdlqpCbcU1FAGsolZnMEOwsM1SeV53DgX3-uvouXFUnSUfCBc/s1600/Pranitha+new+Hot+Photo+Stills+%25285%2529.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும் ,டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? THE DRESSING SENSE OF THE HERO IS VERY BAD


2. டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடி ரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே  . அது எப்படி? எந்தப்பெண் அப்படி போடுது?

 3. ஹீரோவுக்கு முக உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தத்தெரிவதில்லை என்பதற்காக அவருக்கு படம் பூரா கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டது.. 


 4. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்தவர் திடீர் என யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல என்ற மோசமான டப்பாங்குத்துப்பாடலை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்தது..




http://www.imageboxoffice.com/photos/1024-768/simg34d53c99263536.jpg

இடைவேளைக்குப்பிறகு வன்முறை  ஜாஸ்தி.. 

ஏ , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி .பி .கமெண்ட் - சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம் என நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்

பலரது வேண்டுகோளுக்கிணங்க  நாட்டுக்கு முக்கியமான தகவல்  ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)

டிஸ்கி - 1 வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்

டிஸ்கி 2 கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது ... 



Monday, June 13, 2011

ஆரண்ய காண்டம்-எம கண்டம் - சினிமா விமர்சனம்



படத்தோட ஓப்பனிங்க்லயே ஒரு கில்மா சீன்.60 வயசு தாத்தாவான ஜாக்கி செராஃப் 20 வயசு ஃபிகர் யாஅஸ்மின் பொன்னப்பாவை அஜால் குஜால்க்கு அழைக்கிறார்..(அழைக்கவில்லை ,வலுக்கட்டாயமாக இழுக்கிறார்- பெஞ்ச் ரசிகன்)ஆனா அவர்னால முடியல.. உடனே பளார்னு ஒரு அறை விடறாரு.. அதுக்கு இந்த ஃபிகர் சவுக்கால அடிச்ச மாதிரி ஒரு கேள்வி கேட்கும் பாருங்க.. ஹா ஹா செம .. அந்த கலக்கல் வசனம் எது என்பதை வசன பகுதியில் காண்க.. 

2 தாதாக்கள் குரூப்..ஏதோ ஒரு சரக்கை கடத்தறப்ப தகராறு.. அந்த சரக்கை கைப்பற்ற நடக்கும் போராட்டம் தான் கதை.. கதையோட ஒன் லைன்  ரொம்ப சாதாரணம் தான், ஆனா திரைக்கதை பின்னி பெடல் எடுக்குதே.. ஆனா ஒரு வார்னிங்க்,படம் ஒன்லி ஃபார் ஜெண்ட்ஸ்.. 

இயக்குநர் புத்திசாலி என்பதை எப்படி நிரூபிக்கிறார்னா அடி தடி வெட்டு குத்து மட்டுமே நடக்க வாய்ப்பு இருக்கும் இந்த மாதிரி தாதா கதைல நைஸா ஒரு கள்ளக்காதலையும்,அதனால ஏற்படும் விளைவுகளையும், ஒரு பெண் எப்படி ஆணை இளிச்சவாயனாக்கி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கறதை செமயான த்ரில்லிங்கோட காட்டினது தான்.. 

ஜாக்கிசெராஃபின் (ரங்கீலா ஹிந்திப்பட புகழ்) பாடி லேங்குவேஜ் ஓக்கே.. அவர் அடிக்கடி க்ளோசப்பில் ஈ காட்டுவது உவ்வே.. அதே போல் பல் துலக்கும் காட்சிகளில் கொடூரமான க்ளோசப் காட்சிகள்  ஓவர்

சப்பை எனும் கிட்டத்தட்ட திருநங்கை கேரக்டரில் கேடி ரவி கிருஷ்ணா.. அவரது குரலும் பாடி லேங்குவேஜும்\ செம, கள்ளக்காதலியாக வரும் யா அஸ்மின் மாநிறமான ஃபிகர் தான் என்றாலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறது,, அப்பாவி போல் சப்பையிடம் குழைவதும், க்ளைமாக்ஸில் திடீர் வில்லி ஆவதும் செம நடிப்பு.. 

சம்பத்தின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறுகிறது.. சோமசுந்தரம்,கொடுக்காப்புளியின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.. 


செண்டம் அடித்த வசனங்கள்(வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.)


1. டீன் ஏஜ் கீப் - உங்களால முடியல..... ஏன் என்னை போட்டு அடிக்கறீங்க?

கிழடு - பளார்....


2. ஆண்ட்டிங்களை கவுக்கறது ரொம்ப ஈஸி.. அவங்க ரஜினி ரசிகையா? கமல் ரசிகையா?ன்னு கேள்.. கமல் ரசிகைன்னா  ஈஸியா கவுத்துடலாம்..

3.  மேரேஜ் ஆகிடுச்சான்னு ஆண்ட்டிகள்ட்ட பேச்சு குடு.. உன்னை அவளுக்கு பிடிச்சிருந்தா இன்னும் மேரேஜ் ஆகலைனு வாய் கூசாம பொய் சொல்வா..

4. இந்த மேட்டரை வெளில சொல்லிடாதே... 

ஓக்கே.. ஏன் கட்டை விரலை கட் பண்றீங்க?



வெளில சொன்ன பிறகு கட் பண்ணி பிரயோசஜனம் இல்லையே?

5.  என் மனைவி மேலே அழுதுட்டு இருக்கா.. இந்தா பணம், அவளுக்கு ஏதாவது வாங்கிக்குடுத்து அழுகையை நிறுத்து.. அவ முகத்தை பார்க்க சகிக்கலை..முகத்தைப்பார்த்தாலே மூடு வர மாட்டெங்குது.. ( முகத்தை பார்த்தா எங்காவது மூடு வருமா? #டவுட்டு)

6.  ஏண்டி.. உன் வீட்டுக்காரரு நல்ல மனுஷனா?


போடா லூஸ்.. அவர் பேத்தி வயசு ஆகுது எனக்கு. என்னைத் தூக்கிட்டு வந்து அழிச்சியாட்டம் பண்ணிட்டு இருக்காரு..

7. ஆண்ட்டிகளை பற்றி தப்பா பேசாதே..

அப்போ ஸ்பீக்கர் ஃபோன் போட்டு அவங்க கிட்டே பேசு பார்க்கலாம்..

8.  ஹலோ.. பிஸியா?

ஆமா..

அப்புறம் ஏன் ஃபோனை எடுத்தே? அந்த வேலையையே பார்த்துட்டு இருக்க வேண்டியதுதானே?


9. எங்கே போறீங்க எல்லாரும்?

பாண்டிச்சேரிக்கு சார்..

எங்கே ஊது பார்ப்போம்..?

சார்.. இப்போ தான் போறோம்..

10. மேடம்.. உங்களுக்கு கமல், ரஜினி யாரை பிடிக்கும்?

ம்.. கமல்னு சொன்னா என்னைப்பற்றி என்ன நினைப்பேன்னு தெரியும்.. எனக்குபிடிச்சவரு விஜய்காந்த் தான்.. அவர் தானே பாகிஸ்தான் தீவிரவாதிங்க கிட்டே இருந்து நம்ம நாட்டை காப்பாற்றினாரு?



http://www.celluloidtamil.com/wp-content/gallery/aaranya-kaandam-press-meet/aaranya-kaandam-press-meet12.jpg


11.  டேய்.. பயப்படாதே.. அப்பா நான் இருக்கேனில்லை..?

போப்பா.. நீ வேஸ்ட்..

நீயும் அப்படி சொல்லக்கூடாதுடா என் கண்ணு..


12. சாராயம் வாங்கிக்குடுத்தவன் சாமி மாதிரிடா....

13.  நீ மட்டும் உயிரோட இருந்திருந்தே.. உன்னை கொலை பண்ணி இருப்பேன்..

14.  நீ ஆம்பளையா இருந்தா அவனை போட்டுத்தள்ளு உனக்கு லாலிபாப் வாங்கித்தாரேன்..

15. இப்போ நான் மட்டும் ஓடலை.. என் சாவும் என் கூடவே வந்துட்டு இருக்கு..


16. நீ ஏன் எனக்கு சமோஷா வாங்கித்தந்தே?


ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்..


17. நான் வேணா ஹிந்தி சினிமா ஹீரோயின் ஆகிடறேன்.. நீ என் மேனேஜர் ஆகிடறியா?

வேணாம்..

ஏன்? பொறாமையா?

நோ.. போஸ்டர்ல உன் முகத்தைப்பார்த்தா அய்யா கண்டு பிடிச்சுடுவாரே?

18. டேய்.. மவனே.. ஒத்துகோடா.. எங்கப்பனை விட உங்கப்பன் புத்திசாலி..

19. அண்ணே.. நீங்க மனசுக்குள்ளே 2 பூ நினைச்சுக்குங்க.. அவை என்ன?னு நான் சொல்றேன்.. ம் ம் மல்லிகையும் ,ரோஜாவும் தானே?

இல்லை பிரபூ, குஷ்பூ

20. புழுவை மீன் தின்னுது, மீனை மனுஷன் தின்னுவான். இது தான் ரூட்டு

21. யோவ் போய்யா.. நீ கட்டுன பொண்டாடியை காப்பாத்த உனக்கு துப்பில்லை.. நீ எப்படி எங்கப்பாவை காப்பாத்துவே?

22. உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?



அப்படி இல்லை.. ஆனாலும் அவர் எங்கப்பா.. ( என்னா கலக்கல் வசனம்?)

23. என்னைப்பொறுத்தவரை என் தற்காலிக காதலன் சப்பையும் ஒரு ஆம்பளை தான், எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்








 இயக்குநர் சபாஷ் வாங்கிய இடங்கள்

1. கொடுக்காப்புளியாக வரும் சிறுவனின் பாத்திர வடிவமைப்பும்,நேர்த்தியான நடிப்பை வர வைத்த விதமும்+ அதே போல் அந்த சிறுவனின் அப்பா கேரக்டர்


2. எதேச்சையாக செல் ஃபோனை ஸ்பீக்கர் ஃபோன்ல போட்டு பேசு என்று சம்பத் சொல்ல வில்லன் அவனை போட்டுடு என ஆர்டர் பண்ண வேனுக்குள் பர பரப்பாகும் திரைச்சூழல்..

3. தன்னை போட்டுத்தள்ளப்போகிறார்கள் என்று தெரிந்ததும் செக் போஸ்ட் போலீஸ் உடன் வீண் வம்புக்கு இழுத்து போலீசிடம் மாட்டுவது போல் நடித்து வில்லன் ஆட்களிடம் உயிர் தப்பும் சீன்..

4. வில்லன் ஆளை வெட்டுவது  போல் காட்டி கோழியைத்தான் வெட்டினான் என பில்டப் சீன்

5. படத்தில் வரும் காட்சிகள் பாமர ஜனங்களுக்கு புரிய வேண்டுமே என்பதற்காக தேவை இல்லாத விளக்கங்கள் எதுவும் கொடுக்காமல் பர பர என காட்சிகளை நகர்த்திய விதம், பக்கா எடிட்டிங்க்.

6. படத்தின் திரைக்கதை காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதைஎன அமைத்தது..

7. படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும்  யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. பாடல்களே இல்லை என்பது படத்துக்கு கூடுதல் பிளஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMf_I9EG9rscGlEuicZnQfTPLgxnbldAh1S2ZRjoPz5dulz9eR4RBHZqm9yRxG0yIm-nQi9jusTHtVxJ1AbhhIK0hVttBd6PPIkx4EsIWJSqe6b5aGG3oOmN62SqGZF0mYxMUUbr-D_PXJ/s400/Aaranya-Kaandam-Stills-001.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பல காட்சிகள் இயக்குநர் மணி ரத்னம் படம் போல் இருட்டுக்குள் இருப்பது..

2. நிர்வாணமாக வரும் ஜாக்கி செராஃப்க்கு ஆயில் மசாஜ் செய்யும் சீன்

3.சம்பத் உயிர் பிழைக்க ஓடும்போது வசனம் பின்னணியில் வர அவர் கதை சொல்வதாக அமைத்தது..

4.க்ளைமாக்ஸில் சுபா கதைகளில் வருவது போல் ஹீரோயினின் கேரக்டரை ஆண்ட்டி ஹீரோயின் ஆக்கியது..


5.வன்முறைக்காட்சிகள்,ரத்தம் சிந்தும் காட்சிகளில் கொடூரம்


இந்தப்படம் ஆண்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்,

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ஏ செண்ட்டரில் 25 நாட்கள்,பி சென்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 7 நாட்கள் ஓடும்

ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்

Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா? ஜொள்மாவா?- சினிமா விமர்சனம்

https://lh5.googleusercontent.com/-aJAYqxRnmMI/TX0R8BDHflI/AAAAAAAAtbs/ONtvS0NQfL0/s1600/shanthi-appuram-nithya-hot-romancing-stills%25286%2529.jpgபடத்தோட டைட்டிலைப் பார்த்ததும் விக்கி தக்காளி மாதிரி ஒரு சபலிஸ்ட் பேர்வழி சாந்திங்கற ஃபிகரை முதல்ல கரெக்ட் பண்ணி நெல்லை அல்வாவை குடுத்துட்டு நெக்ஸ்ட் டார்கெட்டா நித்யாவுக்கு பிட் போடற கதைன்னு யாராவது எதிர்பார்த்தா ஏமாந்தே போனீங்க.. 

2 கதை படத்துல.. முதல் ட்ராக் நாஞ்சில்மனோ மாதிரி ஒரு சின்சியர் லவ்வர் தன் காதலை ஒரு சுமாரான ஃபிகர்ட்ட சொல்றான்,அவ ஆள் பார்க்க படு திராபையா இருக்கா.. படத்துல 13 தடவை 13 வெவ்வேற லவ் லெட்டரை தர்றான் ( சொல்ல முடியாது, 13 தடவையும் ஒரே பேப்பரை தர்றானோ என்னவோ?)அவ கடைசி வரைக்கும் அவனுக்கு ஓக்கே சொல்லாம ஒரு புரோக்கர்ட்ட, லேடி புரோக்கர்ட்ட (மாமா) வாழ்க்கையை தொலைக்கறா..

இந்த கதையை அப்படியே தொடர்ந்தாற் போல அரை மணி நேரம் காட்னாக்கூட கல்லடி அபாயம் இருக்கறதால மெயின் கதைல கில்மா உண்டு,, அது என்னான்னா விக்கி தக்காளி மாதிரி ஒரு ப்ளே பாய் ஹாஸ்பிடல்ல இருக்கற நர்ஸூக்கு ( ஹாஸ்பிடல்ல இருந்தாத்தானே அது நர்ஸ்?) ரூட் போடறான்,பட்சி சிக்கிடுது..ஆனா தக்காளி மேட்டர் முடிச்சதும் குவாட்டர் அடிச்சுட்டு கிளம்பிடறான், (பின்னே இருந்து 10 நாள் விருந்து சாப்பிட்டு இருப்பானா?)


படத்தோட நீதி என்னான்னா பொண்ணுங்க சின்சியரா லவ் பண்ற ஆம்பளையை நம்ப மாட்டாங்க.. ஏமாத்திட்டு அல்வா குடுக்கற அயோக்கியனை நம்புவாங்க.. 

http://www.celluloidtamil.com/wp-content/gallery/shanthi-movie/shanthi-movie32.jpg
இந்த கேவலமான படத்திலும் வந்த கில்மா வசனங்கள்

1.  மகா ஜனங்களே.. இவன் என்ன தொழில் பண்றான் தெரியுமா?அவன் பண்ற தொழில் ரெண்டே எழுத்து.. ரெண்டும் ஒரே எழுத்து..  ( மாமா)

2. அடேய் பாவி.. இப்போ எல்லாம் இதுலயும் அக்கவுண்ட் வைக்க ஆரம்பிச்சுட்டீங்களாடா?

3. இவன் என்ன கேரக்டர்னா பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி கீழே போட்டா  போதும், பையன் பேப்பர் பின்னாலயே போயிடுவான்..


4. எனக்கு 2 ரூபா தேவைப்படுது.. 

இவ்ளவ்தானா? உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?இந்தா 2 ரூபா...


அடப்பாவி.. நான் கேட்டது ரெண்டாயிரம் ரூபா.. 


5. பச்சை ( டஞ்சன்) ஃபிகர் கிடைச்சாலே பம்முவான்,இப்படி பச்சைக்கிளி மாதிரி பொண்ணு கிடைச்சா...?

6. காலம் கெட்டுக்கிடக்கு மேடம்.. அதனால தான் எலக்ட்ரீசியனைக்கூட நம்பாம நானும் உங்க பாதுகாப்புக்கு வந்தேன்

ஆமாமா , எல்லாம் பொறுக்கிப்பசங்களா இருக்காங்க.. 

7.  டேய். உனக்கு தண்ணி வேணுமா?


இருந்தா குடு.. 

இரு , பார்த்துட்டு வர்றேன்.. 

ம் ம் , நல்லா பார்த்துட்டு வா.. அவ டிரஸ் மாத்தறதை.. 

8. காஃபி சாப்பிடறீங்களா?

வேணாம் மேடம், வழில தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க சாப்பிடுங்க.. 

அடப்பாவி, இவன் பால் சாப்பிட ஆசைப்பட்டு நமக்கு கிடைக்க இருந்த காஃபில கை வெச்சுட்டானே.. 

9. நான் தப்பு பண்றேனா?ன்னு செக் பண்ண அவரு நிறைய தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு... 

10. நீ செம அழகுடி.. நான் பார்த்த ஃபிகர்லயே நீ தான் செம அழகு.. 

அட நீ கூட இப்படி பேசுவியா?

ஹூம், அதான் வருத்தம்.. பேச மட்டும் தான் முடியுது.. 

11. என்னடா? ரத்தத்தாலயே எழுதி இருக்கே? வலிக்கலை?

அவ குடுத்த வலியை விட இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

12.  நீ வர மாட்டேன்னு நினைச்சேன்.. 

ஏன்?

2 மாசத்துல வேற எவ பின்னாலயாவது சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. 

அடிப்பாவி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s400/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg
இந்த கில்மா படத்துல இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிகள்

1. ஒரு ஃபிகர் வீட்டுக்கு போறப்ப நாம அவளை கரெக்ட் பண்ண ட்ரை பண்றோம்னு அவளுக்கு தெரிஞ்சிட்டா அவ கிச்சன் ரூம்ல இருந்து ஹால்க்கு அடிக்கடி எட்டி பார்ப்பா.. 

2. நீங்க வர்ற நேரம் பார்த்துத்தான் பாத்ரூம்ல குளிப்பா.. (கதவை தாழ் போடாம)

3. நீங்க காலிங்க் பெல்லை அடிச்சா.. வெயிட் பண்ணுங்க அப்டின்னு சொல்லி நல்லா டிரஸ் பண்ணிட்டு வர மாட்டா.. அப்டியே ஓடி வருவா.. (வித் டர்க்கி டவல்)

4. ஹால்ல அவ உங்க கூட இருக்கறப்ப நீங்க எதுவும் ட்ரை பண்ண வேணாம். ஏன்னா முகத்தை முகம் நேருக்கு நேரா பார்க்க வேண்டி இருப்பதால் தயக்கம் வரும், அதனால கிச்சன் ரூம்ல அவ சமையல் பண்றப்ப நைசா பின்னால இருந்து மெதுவா கட்டிப்படிக்கலாம்.. ( ஏன்னா செருப்பு வாசலுக்கு வெளில இருக்கும், விளக்குமாறு வாசலுக்கு உள்ள ஹால்ல இருக்கும் ,சேஃப்டி.. )

5. கரெக்ட் பண்ணுன ஃபிகரை கடைசி வரை கரெக்ட் பண்ணிட்டே இருக்கனும் ,கழட்டி விட்றக்கூடாது.. பாவம் செஞ்சாக்கூட அதுக்குள்ள சப் டிவிஷன் பாவம் தான் கரெக்ட் பண்ணுன பிறகு அந்த ஃபிகரை கழட்டி விடறது..

6. ஒரு ஃபிகருக்கு லவ் லெட்டர் குடுக்கறப்ப அவ தூன்னு துப்பிட்டா விடு கழுதைன்னு அடுத்த ஃபிகரை பார்க்க கிளம்பிடனும்.. அதே ஃபிகரை துரத்திட்டே இருக்கக்கூடாது.. ..

7, க்ளினிக் போறப்ப டாக்டர் இல்லாதப்ப & நர்ஸ் இருக்கும்போது போகனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilgbGJk9ZhVLTBXGkEhx9-f_yZKYeob3vSNNAL7TNkFfrQoNPq_e3_0T73rKzOeTBt_OmrE380vdJw7eEFXxFTCI_f2aZsWJt8dIOtW-XzyN-3-To1jG06oF7bzgwt_q6LTLj9bT9Hfws/s1600/shanthi-movie-stills-020.jpg
ஜிக் ஜாக் கதை சொன்ன படத்திலும் சில லாஜிக் இல்லா மேஜிக்..


1. எந்த ஊர்ல நர்ஸ் வெள்ளை யூனிஃபார்ம் போடாம சேலை கட்டி இருகு? அதுவும் பேக் லோ யூ நெக் ஜாக்கெட் போட்டுட்டு?


2. நர்சோட வீடு-  சாரி பங்களா அவ்வளவு ஆடம்பரமா இருக்குமா?

3. கில்மா படத்துல வர்ற ஹீரோயின்கள் எல்லாம் டெஸ்ட் டியூப் பேபிஸா இருக்காங்களே? எப்படி? அம்மா, அப்பா, புருஷன் யாருமே இருக்க மாட்டாங்களா?

4. இந்த காலத்துல கால் லிட்டர் பால் பாக்கெட் முதல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் வரை வந்தாச்சு.. அப்பப்ப பால் வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.ஆனா ஹீரோயின் ஒரு பாட்டில்ல பால் சேமிச்சு வைச்சிருக்கு.. அது ஏன்? ( ரொம்ப முக்கியம்..)

5. நெற்றில காயம்னு வந்த பேஷண்ட்டை நெற்றியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் அந்த கில்மா நர்ஸ் தொடுதே அது ஏன்? ( ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை-நன்றி எம்.ஜி .ஆர்@ஆயிரத்தில் ஒருவன்)

6. ஒரு ஃபிகருக்கு ஒருத்தனை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு ஓப்பனா சொல்வா. எந்த கேனக்கிறுக்கியாவது ( நிஜமான கேனக்கிறுக்கிகள் மன்னிக்க) 2 மாசம் என்னை பார்க்காம இருந்தா உன்னை லவ் பண்றேன்னு சொல்வாளா?


7. மாமா வேலை பார்க்கும் ஆள் இன்னும் கல்யாணமே ஆகாத தன் வருங்கால மனைவியை கூட்டிக்குடுக்க நினைப்பானா?
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின் செலக்‌ஷன், அவரை கண்ணியமாக காட்டியது..

2. ஒரு சீன் கூட மருந்துக்கு கூட  இல்லாத படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.. 

3. யூ டியூப்ல சில க்ளிப்பிங்க்ஸை காட்டி பரபரப்பு ஏற்படுத்தியது.. 

4. ஒவ்வொரு ஊர்லயும் 2க்கும் மேற்பட்ட தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி செம படம் போல எனும் மாயையை ஏற்படுத்தியது..

5.போஸ்டர் டிசைனை கிளாமராக வடிவமைத்தது.. 

மொத்தத்துல படத்துல சீன் கிடையாது.. ஆனா தக்காளி மாதிரி ஃபிகரை மடக்கற டைப் பசங்களுக்கு பாடம் எடுக்கறாங்க ஜனங்களே.. கண்டு ரசியுங்கள்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க.. 

இந்த கில்மா படம் ஈரோடு அன்ன பூரணி, ஸ்டார் 2 தியேட்டர்ல ஓடுது..