Showing posts with label KOVAI. Show all posts
Showing posts with label KOVAI. Show all posts

Sunday, January 20, 2013

கோவை பெண்கள் கட்டுப்பெட்டிகளாக இருப்பது ஏன்? ஷோபா டே லொள் பேட்டி @ விக்டன்

ஷோபாடே ஒரு சந்திப்பு

 http://librarykvpattom.files.wordpress.com/2008/07/ldh1.jpg
ஷோபாடே இதுவரை எழுதியுள்ள நாவல்கள் நான்கு மட்டுமே. எழுதத் துவங்கியது 1988-க்குப் பிறகுதான். வரப்போகிற இவரது ஐந்தாவது புத்தகம் இந்தியக் காதல் மற்றும் செக்ஸ் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. பிரபல மற்றும் பிரச்னைக்குரிய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்குடன் இணைந்து எழுதுகிறார் ஷோபாடே.


 'செக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்’ என்பதுபோன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு. ஆனால், ஷோபாடேக்கு இதுகுறித்து எந்தக் கவலையும் இல்லை. 
''இந்த ஆண்களுக்கு செக்ஸ் எழுதப்படுவதுபற்றி ஓ.கே-தான். ஆனால், போயும் போயும் ஒரு பெண் செக்ஸ் எழுதுவதா என்பதுதான் அவர்களது கோபம். பாரதமாதாவின் பண் பாட்டுப் போர்வை கிழிந்துவிட்டதே எனும் ஆத்திரம்!'' என்கிறார் ஷோபாடே. பரபரப் பான எழுத்துபோலவே ஷோபாடேவின் வாழ்க்கையும் விறுவிறுப்பானது.


பம்பாய் கொலாபா ஏரியாவில் மேல்தட்டு ஃபிளாட் ஒன்றின் ஐந்தாவது மாடியில் வசிக்கிறார் ஷோபாடே.


''சொல்லுங்க... நீங்க எந்தப் பத்திரிகை?''

''ஆனந்த விகடன்.''

''ஓ... உங்க பத்திரிகைபற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கேன். ஒரு அரசியல் ஜோக் வெளியிட்டதுக்காக ஜெயிலுக்குப் போகும்படியா ஆனது உங்க ஆசிரியருக்குத்தானே?''

''ஆமாம்!''

''அராஜகம். சரி... பேட்டிக்கு நான் தயார். நீங்க கேள்விகளைத் தொடங்கலாம்...'' சட்டென்று விஷயம் தொடுகிறார்.


''வேறு எந்த எழுத்தாளருக்கும் இல்லாத  புகழும் பத்திரிகைகள் ஆதரவும் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. இந்த பப்ளிசிட்டிக்குக் காரணம், உங்க பொதுஜனத் தொடர்பா அல்லது நீங்கள் கிளர்ச்சியூட்டும்படியாக செக்ஸ் எழுதுவதா?''


''நான் ஒண்ணும் செக்ஸ் எழுதும் முதல் இந்தியப் பெண் இல்லையே. எனக்கு 20 வருஷங்களுக்கு முன்னாடியே கமலாதாஸ் எழுதிட்டாங்க. அந்தக் காலகட்டத்தில், நான் இப்போ எழுதுறதைவிட அதிகமாவே எழுதியிருக்காங்க. அதனால், கதாபாத்திரங்களோட செக்ஸுவல் நினைப்புகளை மறைக்காமல் எழுதுவது மட்டுமே என் பாப்புலாரிட்டிக்குக் காரணம்னு சொல்லிட முடியாது. நீங்க சொல்ற மாதிரி என் பொதுஜனத் தொடர்பும் ஒரு முக்கியக் காரணம்.


 நான் ஏற்கெனவே ஸ்டார் டஸ்ட், சொஸைட்டி, செலிப்ரிட்டி பத்திரிகைகளுக்கு ஆசிரியரா இருந்திருக்கேன். அதுவும் தவிர, இன்னைக்கும் நாலு வெவ்வேறு பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியா எழுதுறேன். இதனால் பத்திரிகை உலகம் மொத்தமும் எனக்குப் பரிச்சயம்.


பத்திரிகைக்கு வர்றதுக்கு முன்னாடி விளம்பர ஏஜென்ஸியில் கொஞ்ச காலம் காப்பிரைட்டராப் பணிபுரிஞ்சிருக்கேன். அதுக்கும் முன்னாடி மாடலிங்கில் இருந்தேன். இதனால், மீடியாவில் எல்லாருக்கும் என்னைத் தெரியும். நான் எழுதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பதால், 'அட... நமக்குத் தெரிஞ்ச வங்களாச்சே’ங்கிற சந்தோஷத்தோட இவங்க எல்லாம் என்னைச் சந்திச்சுப் பேட்டி எடுக்க வர்றாங்க. இதை நான் எதுக்கு மறுக்கணும்?!''



''நீங்க பத்திரிகையாளராக ஆனது எப்படி?''


''அது ஒரு இனிமையான விபத்து. படிக்கிற காலத்தில் பத்திரிகையாளரா ஆகணும்கிற மாதிரி எந்தக் கனவும் கிடையாது. மெள்ள மெள்ள என் வாழ்க்கை திசைமாறி... பத்திரிகை, எழுத்துனு செட்டில் ஆயிடுச்சு. இது ஒருவகைப் பரிணாம வளர்ச்சி... அவ்வளவுதான்!''


'' 'டைம்’ பத்திரிகையில் பேட்டி வெளிவரும் அளவுக்கு என்ன சாதிச்சுட்டோம்னு நினைக்கிறது உண்டா?''


''சாதிச்சதால்தான் பாராட்டி எழுதினாங்கன்னு திட்டவட்டமா நம்புறேன். எப்படி சத்யஜித்ரே படங்கள் மூலமா இந்தியா என்றாலே வறுமைதான், பட்டினிதான், பிச்சைக்காரர்கள் மட்டுமே இருப்பாங்கங்கிற ஒரு பிரமை வெளிநாட்டவங்க மத்தியில் உருவாச்சோ... அதே மாதிரி இந்தியப் பெண் கள்னாலே அடிமைத்தனம்தான்கிற சிந்த னையை அவங்களுக்கு ஊட்டி, இங்கு உள்ள சில கதாசிரியைகள் புண்ணியம் கட்டிக் கிட்டாங்க.


இதனால் இந்தியப் பெண் எழுத்தாளர்கள்னாலே ஸ்டீரியோ டைப்பா நம் ஊர்ப் பெண்களோட வரதட்சணைப் பிரச்னை, குடிகாரக் கணவன்கிட்ட உதைபடும் கொடுமை, மாமியார் பிடுங்கல்னு சுத்திச் சுத்தி ஒரே மாதிரிதான் எழுதுவாங்கனு ஒரு தியரி அங்கே காலங்காலமா இருக்கு. அதில் இருந்து வித்தியாசப்பட்டு, இந்திய நகரத்துப் பெண்களின் செக்ஸுவல் சிந்தனைகள், சுதந்திரப்போக்குனு நான் எழுதும்போது... வெளிநாட்டவங்களுக்கு அது ஆச்சர்யமா இருக்கு.''


''இந்திய செக்ஸ்பத்தி என்ன நினைக்கிறீங்க?''


''இந்தியாவைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது பெரும்பாலும் கல்யாணத்துக்குப் பிறகுதான். இதில் பிரச்னை என்னன்னா, கல்யாண வாழ்க்கையில் செக்ஸைப் பிரவாகமாக உணரவோ அல்லது அனுபவிக்கவோ இங்கே பலருக்கும் புரிவது இல்லை.''


''அதனால்தான் செக்ஸ்பற்றி அதிகம் எழுதறீங்களா?''


''என்னைச் சுற்றி நடக்கற விஷயங்கள், நான் பார்க்கிறது... அனுபவித்தது... எல்லாத்துலயும் 'செக்ஸ்’ ஒரு முக்கிய அம்சமா இருக்கே... அதனால எழுதறேன். என் முதல் புத்தகமான சோஷியலைட் ஈவினிங்ஸை மூணே மாசத்தில் எழுதினேன். அதில் மேல்தட்டின் கள்ளக்காதல் விவகாரங்களையும், 'போரடிக்குது... இந்த வாழ்க்கை வேணாம்’னு விலகும் பணக்காரப் பெண்களையும் சுட்டிக் காட்டியிருந்தேன். இத்தனைக்கும் அதில் 'செக்ஸ்’ அவ்வளவா கிடையாது. ஆனாலும், அந்தப் புத்தகமேகூட நம் ஊர்ல பலருக்கும் அதிர்ச்சியா இருந்தது.


ஒண்ணு சொல்லட்டுமா... நான் எழுதுறதைப் படிச்சுட்டு யாரும் ரோட்டிலேயே கட்டிப் பிடிச்சுப் புரளப்போறது இல்லே. பின்னே எதுக் காக நான் செக்ஸ் எழுதுறதுபத்தி இவ்வளவு கேள்விகள் எழணும்?’


''பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது விஷ§வல் மீடியாவை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்... உங்கள் ஐடியா எப்படி?''



''ஸ்டார் டி.வி. வந்துவிட்ட பிறகு, விஷ§வல் மீடியாவின் தாக்கமும் மவுசும் அதிகமாகி இருக்கிறது. ஆனால், என்னை மாதிரி குடும்பப் பைத்தியங்களுக்கு எல்லாம் விஷ§வல் மீடியா செட் ஆகாது. ஸ்டுடியோவுக்குப் போவது... பிரத்யேகமாக மேக்கப் போட்டு கேமரா முன் நிற்பது... பல்வேறு இடங்களுக்கும் யூனிட்டோடு அலைவது..


. போன்றவற்றுக்கு எல்லாம் எனக்கு நேரமும் இல்லை... பொறுமை யும் இல்லை. 'அப்படியானால், ஷூட்டிங்கை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே. நீங்களே தொகுத்தளியுங்களேன்!’ என்றுகூட எனக்கொரு அழைப்பு வந்தது. 'நாலாபக்கமும் வயர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டு இருக்க... என் வீடு ஒன்றும் ஸ்டுடியோ அல்ல... ஸாரி!’ என்று பதில் சொல்லிவிட்டேன்.''


'உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு தமாஷ் மொழி உண்டு. இது ஷோபாடேயின் வீட்டில் நிதர்சனம். ஷோபாடேக்கு விவாகரத்து ஆன முதல் கணவர் மூலம் இரண்டு குழந்தைகள். திலீப்டேவுக்கும் தனது முதல் மனைவி (அவர் உயிரோடு இல்லை!) மூலம் இரண்டு குழந்தைகள். பிறகு, ஷோபாவுக்கும் திலீப்டேவுக்கும் திருமணமாக... இருவருக் கும் பிறந்தது இரண்டு குழந்தைகள்.


மொத்தத்தில் ஒரே வீட்டில் ஆறு குழந்தைகளோடும் (நால்வர் டீன் ஏஜில்!) இருக்கிறார்கள், இந்தத் தம்பதியினர்.


கணவர், குழந்தைகள்பற்றி ஷோபா சொன்னார்...


''என் கணவர் டே ஒரு வங்காளி. ஷிப்பிங் கம்பெனி நடத்துகிறார். குழந்தைகளோடு வீட்டில் உட்கார்ந்தபடிக்கே எழுதுவது மாதிரி சொர்க்கம் வேறு எதுவும் இல்லை. குழந்தைகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் நான் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தஸ்து மிக்க பத்திரிகை ஆசிரியர் வேலைக்கே முழுக்குப் போட்டேன். வீட்டில் முழு நேர இல்லத்தரசியாக இருப்பதால், நம் வசதிக்குத் தக்கபடி எழுதுவதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கிச் செயல்பட முடிகிறது. அதை மீறி, கடைக்குட்டிகள் இரண்டும் பக்கத்தில் நின்று தொல்லை கொடுத்தாலும் அதையும் ரசித்துக்கொண்டே எழுதப் பழகிவிட்டது. அதுதான் பிடிச்சும் இருக்கு!'


'
''உங்கள் குழந்தைகள் உங்கள் எழுத்துகளைப் படிப்பது உண்டா? என்ன சொல்கிறார்கள்?''


''என் நாவல்களைப் படித்தால், அதைச் சரியான முறையில் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு இன்னும் வயதோ பக்குவமோ இல்லை. அவர்களாகப் படிக்கவும் இல்லை. மற்றபடி, நான்கு வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் என் பகுதிகளைப் (சிஷீறீuனீஸீs) படிப்பார்கள். 'இது போர்’, 'இது சூப்பர்’, 'இது சுமார்’ என்றரீதியில் எந்தப் பயமும் இன்றி கமென்ட் அடிப்பார்கள்.''


''நாற்பத்தைந்து வயதில் இரண்டு சின்னக் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது சிரமமாக இல்லையா?''


''ஒரு சிரமமும் இல்லை. அவர்களது தினசரி விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேலையாட்கள் இருக்கிறார்கள். மற்றபடி அவர்களுக்குள் என்ன கேள்வி எழுந்தாலும் பதில் சொல்ல வீட்டில்தான் நான்


எப்போதும் இருக்கிறேனே.


இன்னும் சொல்லப்போனால், குழந்தைகளின் பேச்சு எனக்கு ரொம்ப ரசிக்கிறது. என் குட்டிப்பெண், 'நீ ஏன் தாலி அணிவது இல்லை?’ என்று என்னைக் கேட்கிறாள். அதோடு இல்லாமல் 'தாலி அணிந்துதான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்!’ என்கிறாள். அவளுக்கு எங்கள் ஃபிளாட்டில் வசிக்கும் தமிழ்க்காரப் பெண் ஒருத்தி பயங்கரத் தோழி. அதனால்தான் அப்படி!''
''சமைப்பது உண்டா?''


''இல்லை. என் கணவர் வீட்டில் இருக்கும்போது, நான் கிச்சனில் இருப்பதைவிட, அவர் அருகே நான் இருப்பதுதான் அவருக் குப் பிடிக்கும்.''



விடைபெறும் தருணத்தில், ''தெற்குப் பக்கம் வந்தால், உங்கள் கலாசாரம், ரசனை எல்லாம் ரொம்ப அதிர்ச்சிகரமாய் இருக் கிறது!'' என்றார்.


''எங்களுக்கும் உங்கள் ஊர்ப் பக்கம் வந்தால் அப்படித்தான் தோன்றுகிறது!'' என்றோம்.


''அதற்கில்லை... அங்கெல்லாம் வந்தால் நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்கிற அளவுக்கு எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அண்மையில் கோயம்புத்தூருக்குப் போயிருந்தேன்... அங்கே பெண்கள் ரொம்பக் கட்டுப்பெட்டிகளாக இருந்தார்கள். இத்தனைக்கும் நான் பார்த்த பெண்களிடம் பணத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!'' என்றார்.



''பெண்களின் சுதந்திரத்தைப் பணமா நிர்ணயிக்கிறது?'' என்று நாம் கேட்க...
''அதுவும் சரிதான். பெண் தன் நிலையில் தெளிவாக இருந்தால் பொருளாதாரம் அவளை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால், தெளிவான புத்திசாலிப் பெண்கள் சந்தேகத்துக்கிடமானவர்கள் என்பதுதான் இந்திய லாஜிக் ஆயிற்றே!'' என்றார் ஷோபாடே அழுத்தமான புன்னகையோடு.



- சுபா வெங்கட்

நன்றி - விகடன்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjqO65j9XS7wQjKwRsEfcnd3qkrP93HvZl7eBArC8aDcpcghcMIqXRToO4Ge4ZtHMQ1iaqKAKOWpCdc8OEYwYZE20fvonHLUAjRoyKr9DDfrNABLle3_J4vHThpIOxaiS4XIYoRGe_3hid/s1600/shobha+de.jpg

Thursday, November 01, 2012

கோவை இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு , கேஸ் விபரம்

 மாலை மலர் செய்தி

கோவை, அக். 29-
கோவை ரங்கே கவுடர் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளின் செல்ல மகள் முஸ்கின் (வயது 10). அருமை மகன் ரித்திக் (7).
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர். அவர்களை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ் தனது திட்டப்படி கால் டாக்சியில் அவர்களை கடத்திச் சென்றான்.
திட்டத்தை அரங்கேற்ற பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோகரனையும் சேர்த்துக் கொண்டான். உடுமலையை அடுத்த தீபாலப்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர்கள் சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
எங்கே நாம் செய்த தவறு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முஸ்கின், ரித்திக்கை கால்வாயில் தள்ளி கொன்றனர். இந்த கொடூரங்களை செய்த மோகன்ராஜ், மனோ கரனை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.
கொலை நடந்தது எப்படி என்று விசாரிக்க 2010 நவம்பர் 9-ந்தேதி கோவையில் இருந்து வேனில் அழைத்து சென்றனர். வேன் செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான். அவனை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
இதைத் தொடர்ந்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை 2011 ஜூன் மாதம் 23-ந் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கு கோவை மகளிர் கோட்டுக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 47 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.எதிர் தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தொடர்ந்து 3 நாட்கள் சாட்சியம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம் வழக்கு தொடர்பாக 155 கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்தார்.
கடந்த 15-ந்தேதி சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கர நாராயணனும், 22-ந்தேதி எதிர்தரப்பில் வக்கீல் சர்மிளாவும் வாதாடினர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (29-ந்தேதி) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட இருந்ததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மனோகரன் இன்று காலை 10 மணி அளவில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 10.30 மணி அளவில் நீதிபதி சுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்தார். முதல் வழக்காக முஸ்கின்- ரித்திக் கொலை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம், உன் மீது கூட்டு சதி, குழந்தைகளை கடத்துதல், கூட்டாக சேர்ந்து கற்பழித்தல், கொலை செய்தல், பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உனக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்து தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு மனோகரன் தெரியாது என்றார். அதைத் தொடர்ந்து மனோகரனின் வக்கீல் ஷர்மிளாவிடம் நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு ஷர்மிளா இல்லை என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.

 

 தினமணி

கோவையில் இரட்டைக் கொலை: மனோகரனுக்கு தூக்கு தண்டனை


கோவையில், இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.


கோவையில் 2010ஆம் ஆண்டு முஸ்கான், ரித்திக் ஆகிய குழந்தைகளைக் கடத்திச் சென்று, முஸ்கானை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு இருவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து அக்டோபர் 29ம் தேதி, இந்த வழக்கில் மனோகரன் என்பவர் குற்றவாளி என்று நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் தீர்ப்பளித்திருந்தார். குற்றவாளிக்கான தண்டனையை இன்று அறிவித்த நீதிபதி, மனோகரனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தார்.




கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், 2010 அக்டோபர் 29-ஆம் தேதி குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.



இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி, அங்கலங்குறிச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2010 நவம்பர் 9-ஆம் தேதி குழந்தைகளைக் கொலை செய்த இடத்தைக் காட்டுவதற்காக மோகனகிருஷ்ணனை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர். கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் வேன் சென்றபோது, தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்; மனோகரன் சிறையிலடைக்கப்பட்டார்.



மனோகரன் மீதான இந்த வழக்கு விசாரணை 2011 ஜூன் 23-ஆம் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் மொத்தமாக 121 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருள்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.



7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பில் 47 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. எதிர்த்தரப்பில் 6 பேர் சாட்சிகளாக அனுமதிக்கப்பட்டு 5 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.



அக்டோபர் 22-ஆம் தேதியுடன் அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன், அக்டோபர் 29-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் நீதிபதி முன், மனோகரனை போலீஸார் ஆஜர்படுத்தினர். அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சங்கரநாராயணன் ஆஜரானார். எதிர்த்தரப்பில் வழக்குரைஞர் ஷர்மிளா ஆஜரானார்.



இந்த வழக்கில் ஆள் கடத்தல், கூட்டுச் சதி, கற்பழித்தல், கொலை செய்தல், சாட்சியங்களை சிதைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ், சாட்சிகளின் விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மனோகரனைக் குற்றவாளி என்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இத் தீர்ப்பு குறித்து தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என நீதிபதியைப் பார்த்து மனோகரன் கூறினார்.



மனோகரனுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.



அரசு வழக்குரைஞர் சங்கர நாராயணன், ஏற்கெனவே இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி, கற்பழித்துக் கொலை செய்த 2 வழக்குகளில் உயர் நீதிமன்றமும், 5 வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்துள்ளது. மேலும், இதேபோல் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை, உச்ச நீதிமன்றம் விசாரித்து தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது என்றார்.

நன்றி - தினமணி , மாலை மலர் 

Sunday, October 28, 2012

கோவை - மூங்கில் கூடை தொழிலாளர்கள்

வெளிச்சத்துக்கு வரும் வித்தியாச வாழ்வுகள்!

காய்ந்து போன மூங்கில் வாழ்வு!

கோவை ஆர்.பாலா

மூங்கிலுக்கு உரித்தான அடர்ந்த வனத்தை நினைவுபடுத்தும் இயற்கை மணம். நாம் சென்ற கோவை முத்தண்ணன் குளப் பகுதியைச் சூழ்ந்து இம்மணம் நம்மை வரவேற்க, ஒரு பக்கம் மூங்கிலிலிருந்து நாரெடுப்பது, சின்னச் சின்னத் தப்பைகளாகக் கிழித்துக் கூடைகள் முடைதல், தட்டிகள், பாய்கள் செய்தல்... என ஏரியாவே கலகலத்துக் கொண்டிருந்தது. ஆனால், காய்ந்த மூங்கில்களாகக் காட்சித் தருகின்றன கோவை முத்தண்ண குளம், ஆர்.எஸ்.புரம், இரத்தின சபாபதித் தெரு, தாமஸ் வீதி, கிரிக்ரி ரோடு என்ற பகுதிகள். சுமார் 1500க்கும் அதிகமான குடும்பங்களில் கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்கிறார்கள்.

எண்பத்தைந்து வயதான காளியப்பனிடம் பேசினோம். நான் இங்கே வாழ்ந் துட்டு இருக்கிற அஞ்சாவது தலைமுறை. இருநூறு வருஷங்களுக்கு முன்னால் மைசூரில் இருந்து இங்கு வந்து குடியேறினாங்க எங்க முன்னோர்கள். தாய்மொழி கன்னடமாக இருந்தாலும் 200 வருடப் பேச்சு, மற்ற பழக்க வழக்கங்கள், சுத்தமான கொங்கு மட்டலத்துக் காரங்களா எங்களை மாத்திடுச்சு. பத்து வார்த்தைகள் பேசினா அதுல நாலு கன்னட வார்த்தைகள் ஆறு தமிழ் வார்த்தைகள் இருக்கும். அதுவும் கொங்குத் தமிழ்" என்று பூரிக்கிறார்.

தலைவர்தான் (எம்.ஜி.ஆர். படத்தைக் காட்டுகிறார்) எங்களை வாழ வெச்ச தெய்வம். இப்போஅம்மா’. அம்மா முதல் முதல்ல ஆட்சியில அமர்ந்தப்ப எங்களுக்கு இலவசமாக இப்ப இருக்கற வீடுகளைக் கட்டிக் கொடுத்து, கூட்டுறவு சங்கம் அமைச்சுக் கொடுத்தாங்க. அதற்கு முன்னாடி வரைக்கும் மண் சுவரும், ஓலைக் குடிசைகளிலும்தான் எங்க வாழ்க்கை! இப்ப எங்களுக்கு ரேஷன் கார்டு, கார்ப்பரேஷன் தண்ணின்னு எல்லாம் இருக்கு. புள்ளைங்க படிக்க பக்கத்திலேயே மாநகராட்சிப் பள்ளிகள் எல்லாம் இருக்கு. ஆனால் தொழில் தான் இல்லை சுபிட்சமா" என்ற வரை இடைமறித்து ஐம்பது வயதான முருகேசன் தொடர்ந்தார்.

ஒரு காலத்தில் கோயமுத்தூரைச் சுற்றிலும் இருக்கிற கிராமத்து விவசாயிகளுக்கெல்லாம் தண்ணி இறைக்க கிணத்து மக்கிரி, நாத்துக்கூடை, மக்கிரி முறங்கள், தானியங்கள் சேமிக்க குதிரு, சாடு, செடிக் கூடை, பஞ்சாரம் தட்டிகள், வீட்டு விசேஷங்களுக்கு பொட்டிக் கூடை, சீர்ப்பேழை, போனை மூடி, தட்டிகள், பாய்கள்... என செஞ்சு மாளாதுங்க. இப்ப எல்லாம் எங்கும் எதிலும் பிளாஸ்டிக் வந்துடுச்சு. கூடவே பஞ்சாலைகள் எல்லாத்தையும் இழுத்து மூடின உடன் ஆயிரக்கணக்கில் வருமானம் தந்த பஞ்சுக் கூடைகள் உற்பத்தியும் நின்னு போச்சு. இதெல்லாம் எங்க வாழ்க்கையைத் தலைகீழா புரட்டிப் போட்டுடுச்சு. ஒரு கூடை வித்தால் இரண்டு ரூபாய் கிடைப்பதே அதிகம். மூங்கில்கள் வெட்டறப்பவும், கிழிக்கறப்பவும் அடிக்கடி ஏற்படற ரணங்களின் வலியைவிட, எங்கள் தலைமுறை தலைமுறையான வாழ்வாதாரம் திசைமாறிப் போனதுதான் அதிகமா வலிக்குது" என்கிறார் பெருமூச்சுடன்.

எங்களைச் சேர்ந்தவங்க கிட்டயே நாங்க தினக்கூலிகளா வேலை செய்றோம். இந்தக் கூட்டுறவு சொஸைட்டி ரொம்ப காலமாய்ப் பூட்டிக் கிடக்குது. எங்க பேப்பர்கள் எல்லாம் இன்னும் இதுலதான் இருக்கு. இதைத் திறந்து எங்கள் தொழிலுக்குக் கடனுதவி செஞ்சு அரசாங்கமே பொருள்களை விற்க ஏற்பாடு செய்தால் பிழைச்சுக்குவோம்" என்றார் மூடப்பட்ட சொஸைட்டி கதவுகளை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே.
தங்கமணி, புஷ்பா, ஜோதிமணி, ராஜேஸ்வரின்னு ஏகப்பட்ட பெண்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டார்கள்.
எங்க ஆம்பிள்ளைங்க நெலமையே இப்படின்னா எங்களைப் பத்திச் சொல்லவே வேண்டாம். வீட்டு வேலைகளுக்குக்கூட எங்களை உள்ளே விடமாட்டறாங்க. ஏதோஅம்மாமனசு வெச்சா எங்களுக்குக் கைவினைப் பொருள்கள் செய்யத் தொழிற் பயிற்சியும் பேங்க் லோனும் கொடுத்தா முன்னேறிக்குவோம்" என்று நம்பிக்கையுடன் பேசுகின்றனர்!

குடும்பச் சுமைகளுக்குத் தோள் கொடுக்க வழி தேடும் அந்தப் பெண்கள் ஆதங்கம், ‘கடவுள்தான் வழி காட்ட வேண்டும்என்ற முணுமுணுப்பாக மாறுகிறது.
எங்க பசங்களுக்குக் கூடை முடையற தொழிலே என்னன்னு தெரியாது. யாரும் இதைக் கத்துக்க முன்வரல. ஏதோ கொஞ்சம் படிக்கிறாங்க. கொஞ்சம் வளர்ந்த உடனே சாரம் கட்டறது, பெயின்டிங், ஒர்க்ஷாப், கரண்ட் வேலைன்னு போயிறடாங்க. எங்களுக்கு அப்புறம் இந்தத் தொழிலை யாரும் கண்டுக்கப் போறதில்லை. இது எவ்வளவு வேதனை தெரியுமா?
இப்போதைக்கு அதிகமாப் போற பொருள்கள்னு பார்த்தீங்கன்னா, பழம், காய்கறிகள் அடைத்து அனுப்பும் கூடைகள் தான். பிளாஸ்டிக்கில் பார்சல் செய்தால் வெம்பிப் போகும். இந்தக் கூடைகள் என்றால் குளிர்ச்சியாவே பல நாட்களுக்குத் தாங்கும். ஊட்டி, ஈரோடு, சென்னை இங்கெல்லாம் இந்தக் கூடைகளை அதிகமாவே வாங்கிட்டுப் போறாங்க. ஆனா, அடிமாட்டு விலைக்குக் கேட்பாங்க. அப்புறம் கான்கிரீட் தட்டிகள், ஸ்கிரீன் தட்டிகள் என ரெகுலரான ஆர்டர்கள் கிடைக்கும். எங்கள் தயாரிப்பில் வீட்டு உபயோகப் பொருள்களுக்குச் சுத்தமாவே அடிதான்" என்கிறார்கள் அன்புவும், சந்திரனும்.

ஹிந்துஸ்தான் கல்லூரியில் BBM படிக்கும் மாணவன் அசோக்குமாரிடம் பேசினோம். நான் நிறையப் படிச்சு பெரிய வேலைக்கு வரணும். அரசாங்கத்தை அணுகி என் பகுதி இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் தகுதியான உதவிகளைப் பெற்றுத் தரணும். படிப்பின் அவசியத்தை வற்புறுத்தி நிறையப் பேரை படிக்க வைக்கணும். இதுதான் என் இலட்சியம்" என்றார்.
இந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் செல்வராஜ், என் அப்பா, அம்மாவே இந்தத் தொழில் உனக்கு வேண்டாம்; வேற எதையாவது செஞ்சு பொழச்சுக்கோன்னு சொன்னாங்க. நான் ஆட்டோ ஓட்டறேன். என் தம்பி டாக்ஸி ஓட்டறான். இங்கிருக்கிற இளைய தலைமுறைகள் இப்ப வேலைக்குப் போறதைத்தான் விரும்பறாங்க" என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தைக் காட்டினார். அவர்களை அணுகினோம்.

ஏன் நீங்க உங்க தாத்தா, அப்பா செய்யற வேலை செய்தால் என்ன" என்று கேட்டால், அவங்களைவிட நாங்க நல்லாவே சம்பாதிக்கிறோம். இன்னைக்கு யாராவது வருவாங்களா? பொருள்களை வாங்குவாங்களான்னு ஏக்கத்துடன் அவங்க காத்திட்டு இருக்காங்க. ஆனா, எங்க நிலைமை அப்படி இல்லை. வேலைக்கு ஆள் வர மாட்டாங்களான்னு தேடிட்டு இருக்கற கம்பெனிகளில் கடுமையா உழைச்சுச் சம்பாதிக்கிறோம். செய்யற தொழிலை நல்லாக் கத்துக்கறோம். சொல்ல முடியாது நாங்களே எதிர்காலத்தில் சொந்தமாகத் தொழில் செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்துவோம்," என்கின்றனர்.
அருகே இருக்கிற கோயிலைக் காட்டி இது உங்களுக்குச் சொந்தமான கோயிலா என்று கேட்டதுதான் தாமதம், ஆரம்பத்தில் நம்மிடம் பேசிய காளியப்பன் உற்சாக மானார். எங்க முன்னோர்கள் 200 வருஷங்களுக்கு முன்னாடி மைசூரை விட்டுக் கிளம்பறப்போ இந்த அம்மனும் எங்களுக்குக் காவலாய் புறப்பட்டு வந்துடுச்சு. இங்கேயே இருந்து எங்களைக் காத்து அருள் பாலிக்கறாள். இவள் அனுமதி இல்லாமா இங்க எதுவும் நடக்காது. அம்மன் இங்க வந்து ஐக்கியமானது தை மாதமாம். அதனால் ஒவ்வொரு தை மாதமும் ஒரு வாரம் இந்த அம்மனுக்கு பொங்கலும், கிடா வெட்டும் எங்க ஜனங்க ஒண்ணாச் சேர்ந்து பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவோம்" என்கிறார்.

மேட்டுப்பாளையம், ஊட்டி, பொள்ளாச்சி, உடுமலைன்னு பரவி இருக்கிற எங்க சொந்தங்கள் எல்லாம் ஜேஜேன்னு வந்துடுவாங்க. பல திருமணங்கள் அப்போ நிச்சயமாகும். சொந்தங்களில் மட்டும்தான் திருமணம் என்பது காலம் காலமாக நாங்கள் செய்து வருகிறோம். மாப்பிள்ளை அழைப்பு ரொம்பவும் விசேசம். மற்றபடி சாதாரண முறையில்தான் திருமணங்கள். வரதட்சணை அது இதுன்னு எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார்.
அழகான கூடைகளை கலைநயத்தோடு முடையும் இவர்களது வாழ்வை காலம்தான் கன்னாபின்னாவென்று முடைந்து விட்டது. அவர்களிடமிருந்து நாம் விடைபெறும் போது ஒரு பெரியவர் சொன்னார், ‘கூட்டுறவு சொஸைட்டியைத் திறக்கறது போல எழுதுங்க. அதுதான் எங்களுக்கு நீங்க செய்யற உதவிஎன்றார்.
படங்கள் : .சுந்தரராஜன்
நன்றி - கல்கி , புலவர் தருமி