Showing posts with label அமலா பால். Show all posts
Showing posts with label அமலா பால். Show all posts

Saturday, July 20, 2019

ஆடை - சினிமா விமர்சனம்

aadai movie માટે છબી પરિણામஆடை படத்தோட டீசர், ட்ரெய்லர் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதெல்லாம் பார்த்துட்டு பெரிய லார்டு லபக் தாஸ் மாதிரி நான் ஒரு கதை கற்பனை பண்ணி வெச்சிருந்தேன் .


 அதன் படி ஹீரோயினும் , தோழியும் ஏதோ ஒரு ஐ டி கம் பெனில ஒர்க் பண்றாங்க ., வீக் எண்ட் பார்ட்டில 4 மொள்ளப்பாரி பசங்க மப்புல  இருக்கற மாந்தோப்புக்கிளிகள் 2 பேரையும்  கில்மா பண்ணிடறாங்க . வெகுண்டெழுந்த அந்த 2 பேரும் 4 பேரையும் எப்படி பழி வாங்கறாங்க அப்டிங்கறதுதான் கதைனு யூகிச்சு வெச்சிருந்தேன்


 அது எவ்ளோ கேவலமான கற்பனைனு இயக்குநர்  புரிய வெச்சுட்டார் . கதை வேற


இடைவேளை  வரை மீடியால ஒர்க் பண்ற ஆண்கள் , பெண்கள் , ஜாலி , கலாட்டா , ஷோ ரெடி பண்றது இபடி பொழுது போக்கு அம்சமா போகுது


 இடைவேளைக்குப்பிறகு தான் மெயின் மேட்டர்,. மேட்டர்னதும்   நிமிர்ந்து உக்காராதீங்க , இது ஒரு சமூக விழிப்புணர்வுக்கதை, டீசண்ட்டாதான் காட்சிகள் , நகருது , ஒரு நல்ல  ஓப்பனிங் கிடைக்கனும்கறதுக்காக அமலா பால் கிளாமரை யூஸ் பண்ணிக்கிட்டாங்க , பெரிய தப்பில்லைனு தோணுது ., இதே போல் அனைத்து பிரபல நடிகைகளையும் எல்லா இயக்குநர்களும்   யூஸ் பண்ணா நல்லது  


 ( இப்பவே நம்ம ஆளு க்க அமலா பால்க்கு மென்ஷன் போட்டு போல்டு அட்டெம்ப்ட் மேடம், நட்டு அட்டெம்ப்ட் மேடம், பின்னீட்டீங்க அப்டினு போட்டுத்தாக்கிட்டு இருக்காங்க) 


 இந்தப்படத்துக்குக்கிடைக்கப்போகும்  வரவேற்பைப்பார்த்து எல்லா நாயகிகளும் இதே [போல் ஒரு முற்றும் துறந்த முனியம்மா கதை நடிக்க ஆவலாவாங்க என நம்பறேன்


 ஹீரோயினா அமலா பால் அருமையான் நடிப்பு , ஓப்பனிங் காட்சிகளில்  நண்பர்களுடன் கொட்டம் அடிப்பது போன்ற சீன்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப்பார்க்கிற்து , வழக்கமா அமலா பால் அப்படி நடிப்பவர் அல்ல ( முன்னாள் கணவர்  இயக்குநர் விஜயை வெறுப்பேற்றவே அப்டி நடிச்சிருக்கலாம்)

 பின் பாதி படம் முழுக்க் அமலா பால்  ராஜ்ஜியம் தான்,  கேமரா மேன் , லைட் பாய்ஸ்களுக்கு கொண்டாட்டமான  படம்


கில்மா சீன்கள் , பிட்டு இன்ன பிற அஜால் குஜால் காட்சிகளை எதிர்பார்த்துப்போனவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் ( நான் அடையலை )


ஃபிளாஸ்பேக்கில் வரும் அந்த திருப்புமுனை கேரகடர் பொண்ணு அற்புதமான நடிப்பு , வாய்ப்புகள் வரும் 


 ஒளிப்பதிவு அருமை, ஹிந்தில டப் பண்ணா மல்லிகா ஷெராவத் ரெடியா இருப்பார் 


aadai movie માટે છબી પરિણામ

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் ல"PNR ஸ்டேட்டஸ் பாத்து டிக்கெட் கன்பர்ம் ஆகிடுச்சா? னு செக் பண்ற மாதிரி தமிழ் சினிமா உலகத்துல வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட படம் பொட்டி வந்துடுச்சா?லைசென்ஸ் க்ளியர் ஆகிடுச்சா?அப்டி னு பாக்க ஒரு ஆப் வந்தா தேவலை



2 ஓப்பனிங்க் சீன்ல சிந்து சமவெளி புகழ் அமலாபால் 8 கெஜ பட்டுப்புடவை ல வர்றதைப்பாத்துட்டு நெட் தமிழன் மிரண்டுட்டான்,அது"கனவு"சீனாம்,நினைவு சீன்ல ஒரே ஒரு டிராயர் ,ஒரு திருப்பூர் பனியனோட வந்ததும் சமாதானம் ஆகிட்டான்


3  இயக்குநர் ஒரு பெண்ணியவாதியாகவோ ,பெண்கள் முன்னேற்றத்துல அக்கறை உள்ளவாராகவோ இருப்பவர் போல,இதை எப்படி கண்டுபிடிச்சேன்னா நாயகி கேரக்டர் வடிவமைப்பு.பந்தயம் கட்டி பைக்ல 125 கிமீ வேகத்துல போகுது,தம் அடிக்குது,தண்ணி அடிக்குது,அரை குறையா டிரஸ் பண்ணுது,வெரிகுட்


நடுராத்திரி 12 மணிக்கு தனியா சுடுகாட்டுக்குப்போறேன்னு பந்தயம் கட்டுவாங்க.அந்த மாதிரி நாயகி ஒரு பில்டிங்க்ல ஒரு நைட் பூரா ஆடை இல்லாம இருந்து காட்றேன் ஜம்பமா,திமிரா மப்பு ல பந்தயம் கட்டி படற பாடுதான் கதை


5  திமுக தலைவர் க்கு நெருங்கிய நண்பரான வைரமுத்து#metoo பாலியல் பலாத்காரவழக்கில் சிக்கியது குறித்து நேரடியா தாக்கப்பட்டிருக்கிறார்.உடன்பிறப்புகள் பொங்கலையா அவர்"சார்பா?

aadai amala paul  hot માટે છબી પરિણામ
நச் டயலாக்ஸ்


1   டீக்கடை வெச்சிருக்கறவன்தானே னு என்னை இளக்காரமாப்பாக்காதீங்க,நான்"நாளையே சிஎம்மாவோ ,பிஎம்மாவோ ஆக வாய்ப்பிருக்கு !



எந்த டிரஸ்ல நீ அழகா இருப்பே?

டிரஸே போடாம இருந்தாதான் அழகா இருப்பேன்


எஸ் வி சேகர் டிராமா காமெடி டயலாக்கை சுட்டுட்டாங்க

அய்யா இருக்காரா?
மேல படுத்திருக்காரு
நான் அப்றம் போன் பண்றேன் (இது ஒரிஜினல்)
அய்யா எங்கே? மேலே படுத்திருக்காரு
நீ என்ன பண்றே?
அம்மா எங்கே ? கீழே படுத்திருக்காங்க
பணிப்பெண் = விளக்கு பிடிச்ட்டு இருக்கேன்



4  கிடைச்ச சுதந்திரத்தை மிஸ்யூஸ் பண்ணாதீங்க #aadai


5  ஹிஸ்டாரிக்கல்  படமா பார்த்தே?

 நாம பார்க்கறதெல்லாம் சன்னிலியோன் நடிச்ச படங்கள் தான் , ஹிஸ்டரில போய் அழிக்க வேண்டிய வேலை இருக்கும்
\

6   நாம் நியூஸ் படிக்கறது பெரிய விஷயம் இல்லை , நம்மை நியூஸ்ல வர வைக்கனும் #Aadai 


7  டை கட்டி  வாழற வாழ்க்கை வாழாட்டி பரவால்ல , மத்தவங்க  முன் கை கட்டி வாழ்ற வாழ்க்கை ஆகாது எனக்கு  #Aadai 



8      சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


 ம்  குடும்பக்கட்டுப்பாடு


9  மயங்கி விழற  மாதிரி நடிச்சு   நக்கல் பண்ணா நாளை நிஜமா மயங்கி விழறவங்களைக்காப்பாத்த யாரும் முன் வர மாட்டாங்க   #Aadai 



10  தப்பு , சரினு நாகரீகம் பார்த்தா வேலைக்கு ஆகாது

aadai amala paul  hot માટે છબી પરિણામ








நெட் வந்த பின்பு பிட் படங்களின் ஆதிக்கமும் ,அதற்கான மவுசும் குறைந்தது.கேரளா கோட்டயம் அபிலாஷ் தியேட்டர் 37 பேர் /540 சீட்ஸ்
ஆடை FDFS


a
சபாஷ் இயக்குநர்


1  இடைவேளைக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாயகி முதல் பாவம் அபிலாஷா ரேஞ்சில் இருந்தாலும் ம்காட்சிகள் கண்ணியம்


2   பலரது யூகங்களுக்கு மாறாக திரைக்கதை அமைத்தது


 3  சினி ஃபீல்டில் இருந்தாலும் தைரியமாக திமுக பிரமுகர் வைரமுத்து வின்  வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது


4    போஸ்டர்  டிசைன்   மார்க்கெட்டிங் , விளம்பரங்கள் என படத்துக்கு நல்ல ஓப்பனிங் கொண்டு வந்தது

  லாஜிக் சொதப்பல்கள்


1  லாஜிக் மிஸ்டேக் 1− பிரபலமான ஒரு சேனல்ல ரெகுலரா நியூஸ் வாசிக்கற பொண்ணு திடீர்னு லீவ் போட்டுட்டா ஆல்ட்டர்நேட்டிவா வேற அரேஞ்ச்மெண்ட்பண்ணி வெச்சுக்க மாட்டாங்களா? அப்டியே பதர்றாரு? எல்லா சேனல்கள்லயும் 3 ் பேரு இருப்பாங்களே?


2    கம்பெனியை காலி பண்றவங்க ஒரே நைட்ல அப்டி துடைச்சு எடுத்துட்டுப்போவாங்களா? கொஞ்சம் கொஞ்சமாதானே காலி பண்ணூவாங்க , அதுவும் அவ்ளோ பெரிய பில்டிங்கை காலி பண்ண ஒரு மாசம் ஆகும்


3  நாயகி நிர்வாணமா இருக்கு , ஃபோன் அவுட் கோயிங் போகலை ஒரு ஹோட்டல்ல  இருந்து வர்ற விளம்பர மார்க்கெட்டிங் கால் ல 5 சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணீ  வாட்டசாட்டமான ஆள் வேணாம், சின்னப்பையுனா  அனுப்புங்க அப்டிங்குதே அதுக்குப்பதிலா   அவரது ஹைட்டுக்கு தகுந்த யாரோ ஆள் ப்வந்தா அவன் டி சர்ட்டை யூஸ் பண்ணீக்கலாமே?


4  தொடர்ந்து 36 மணி நேரமா சாப்பிடலை , தண்ணீர் குடிக்கலை அதுக்கான சோர்வோ அறிகுறியோ நாயகி கிட்டே காணலையே? செழுமையாத்தானே இருக்கு ?


5   நாயகியோட அ ம்மா தொடர்ந்து 18 தடவை கால் பண்ணியும் நாயகி எடுக்கலை, அதுக்குப்பின் 20 மணி நேரம் அம் மா  ஃபோனே பண்ணாதது ஏன்? ஃபோன் லொக்கேஷனைஒ வெச்சு இன்ன இடத்துல இருக்கார்னு போலீஸ் கண்டு பிடிக்க ட்ரை பண்ணலையே? அது ஏன்? 


6   டெலிவரி பாய் டெட் பாடினு நினைச்சு எடுத்துட்டுபோபோகும் போலீஸ் கூட போலீஸ் நாய் கூட்டிட்டு வர்லையே அது ஏன்? 



ஆடை− டி.வி .பிராங்க் ஷோக்கள்,மக்களை மடையர்கள்"ஆக்கும் ஷோக்களை"நையாண்டி செய்திருக்கும்"கதை.நல்ல கரு.ஆனா"திரைக்கதைல தேவையற்ற கிளாமர்,மார்க்கெட்டிங்க்காக,ஆபாசம் எதுவும் இல்லை என்றாலும்.. விகடன் 41 , ரேட்டிங்க் 2.5 / 5

Thursday, March 28, 2013

தலைவா துப்பாக்கியை தாண்டிடுமா? - இயக்குநர் விஜய் பேட்டி

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQDLezW28cuvlB5MXx6q9XysBBYAdhBxZU3iI8cfxUDLJXe43-2 
 
"குட் பேபி அமலா பால்!”
 
 
எம். குணா
 
முதன்முதலா காலேஜ் கட் அடிச்சுட்டுப் பார்த்த படம் 'காதலுக்கு மரியாதை’. என் பேரும் விஜய்ங்கிறதால அப்ப அந்தப் படத்துல விஜய் போட்டிருந்த மாதிரியே டி-ஷர்ட், கூலர்ஸ் போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணுவேன். இப்போ அதே விஜயை வெச்சு, 'தலைவா’ படம் இயக்குறேன். காலம் ரொம்ப வேகமா ஓடுது!'' - சிலிர்ப்பும் சிரிப்புமாகப் பேசத் தொடங்கினார் விஜய்... இயக்குநர் விஜய்!
 
 
 
''இயக்குநர் விஜய், நடிகர் விஜயை எப்படிப் பிடிச்சார்?''  


''தனிப்பட்ட முறையில் அவர் எனக்குப் பழக்கம் இல்லை. முன்னாடி 'மதராசபட்டினம்’ பார்த்துட்டு வாழ்த்தினப்போ, 'நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னார். இப்போ சமீபத்தில் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் 'விஜய் கால்ஷீட் என்கிட்ட இருக்கு. நீங்க போய் அவருக்குக் கதை சொல்லுங்க’னு சொன்னார்.


அவரைப் போய்ப் பார்த்தேன். 'தலைவன்கிற பட்டத்தை நாம தேடிப் போகக் கூடாது. அது தானா நம்மளைத் தேடி வரணும்’னு ஒன் லைன் சொல்லிட்டுக் கதை சொன்னேன். கால் மணி நேரத்துல சிரிச்சுட்டே கைகொடுத்து கன்ஃபர்ம் செய்தார்!''




''நீங்க இயக்கின 'கிரீடம்’, 'மதராசபட்டினம்’, 'தெய்வத்திருமகள்’ எல்லாமே சோகமான முடிவுகொண்ட க்ளாஸிக் வரிசைப் படங்கள். ஆனா, 'துப்பாக்கி’ ஹிட்டுக்கு அப்புறம் அதைவிட அதிரடியா எதிர்பார்ப் பாங்களே விஜய் ரசிகர்கள்?!''   


''நீங்க குறிப்பிடும் எல்லாப் படங்களிலும் க்ளைமாக்ஸ் சோகமா இருக்கும். ஆனா, படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டரின் தேடலுக்கு அதுதான் தேவை. 'தலைவா’ சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ். பட்டாசு வெடிக்கும் படம். இன்னைக்கு 'தலைவர்’னு அடையாளப் படுத்தப்படுற எல்லாரும் அந்த இடத்துக்கு எப்படி வந்தாங்கனு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அப்படியொரு ஃப்ளாஷ்பேக்தான் படம். 'துப்பாக்கி’ சக்சஸுக்குப் பிறகான எதிர்பார்ப்பு நிச்சயம் பூர்த்தியாகும் அளவுக்குத் திரைக்கதை பிடிச்சிருக்கோம். ஸ்டைல், டான்ஸ் போக சின்னச் சின்ன நுணுக்கமான எக்ஸ்பிரஷன்களுக்குக்கூட ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருக்கார் விஜய்!''



''சத்யராஜுக்குப் படத்தில் என்ன ரோல்?'' 


''மிக முக்கியமான ரோல். அது விஜயின் காட்ஃபாதரா இல்லை வில்லானாங்கிறது சஸ்பென்ஸ். நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து இப்போ வரை அவரோட உயரத்தையும் நடிப்பையும் அண்ணாந்து பார்க்குறவன். ஆனா, அவர்கூட வேலை பார்க்கும்போது சினிமா மீது அவர் வெச்சிருக்கிற டெடிகேஷன் பார்த்து ஆச்சர்யமா இருக்கு. மும்பையில் 'தலைவா’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, பால் தாக்கரே உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் இருந்தார்.


 நான் ஸ்பாட்ல இல்லாதப்போ, சிவசேனா கட்சிக்காரங்க வந்து சத்யராஜ் சார்கிட்ட படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. 'நோ... நோ... டைரக்டர் வந்து பேக்கப் சொல்லாம நான் இடத்தைவிட்டு நகர மாட்டேன்’னு சொல்லி அவங்களை தில்லா எதிர்த்திருக்கார். அந்த அர்ப்பணிப்பும் துணிச்சலும் எங்களைப் போன்ற ஜூனியர்கள் எல்லாரும் கத்துக்க வேண்டிய பாடம்!''


'' 'என்கிட்ட நூறு பேருக்கு மேல உதவி இயக்குநர்களா வேலை பார்த்திருந்தாலும் விஜயை என் அசிஸ்டென்ட்னு சொல்லிக்கிறதில் பெருமைப்படுறேன்’னு இயக்குநர் ப்ரியதர்ஷன் சொல்லியிருக்காரே?'' 



''ப்ரியதர்ஷன் சார் என் கலைக் கடவுள். என்னைப் பத்தி அவர் அப்படிச் சொல்றதுக்கு நான் ரொம்பக் கொடுத்துவெச்சிருக்கணும். இன்னிக்கு நான் இருக்கும் இடத்துக்குக் காரணம் அவர் கத்துக்கொடுத்த பாடம்தான். எனக்கு ஒரு ஆசை இருக்கு. இதுவரை ப்ரியதர்ஷன் சார் 92 படம் இயக்கியிருக்கார். அவரோட 100-வது படத்துல மறுபடி நான் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்!''


''உங்களுக்கும் அமலா பாலுக்கும் நத்திங் நத்திங்னு சொல்றீங்க. ஆனா, 'தலைவா’வில் அவர் எப்படி ஹீரோயின் ஆனார்?'' 


''இளைமைத் துடிப்பும் பெர்ஃபார்மென்ஸ் நடிப்பும் காட்ட வேண்டிய ஹீரோயின் கதைக்குத் தேவை. சோனம் கபூர், தீபிகா படுகோன் எல்லாம் கேட்டுப் பார்த்தோம். உடனடியா கால்ஷீட் இல்லைனு சொன்னாங்க. இடையில ஒரு நாள் விஜய் சார், 'மோகன்லால், அமலா பால் நடிச்ச 'ரன் பேபி ரன்’ படம் பார்த்தேன். அமலா நடிப்பு நல்லா இருந்துச்சு. நம்ம படத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கனு தோணுது’னு சொன்னார். 'நானும் படம் பார்த்தேன். உங்களுக்கு ஓ.கே-ன்னா எனக்கும் ஓ.கே’னு சொன்னேன். இப்படித்தான் அமலா பால் புராஜெக்ட்டுக்குள் வந்தாங்க. அந்த நிமிஷத்துல இருந்து இந்தக் கேள்வியையும் நான் எதிர்பார்த்தேன்!''


''சரி... உங்க கல்யாணம் எப்போ? காதல் கல்யாணமா... நிச்சயிக்கப்பட்ட திருமணமா?'' 


''நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ் மூணு பேரும் சேர்ந்து ஒரு ரூபாகூடச் சம்பளம் வாங்காம ஒரு படம் எடுக்கணும்னு ஆசைப்படுறோம். காரைக்குடிதான் படத்தோட மொத்த லொகேஷனும். அந்தப் படம் தமிழகக் கலாசாரத்தின் பிரதிபலிப்பா இருக்கணும். அப்புறம்தான் கல்யாணம் பத்தின நினைப்பே. அதுவும் அம்மா, அப்பா பார்த்து செலெக்ட் செய்ற பொண்ணுதான். போதுமா?''


ஒருவேளை... அப்பா-அம்மாவே அமலா பாலை செலெக்ட் பண்ணுவாங்களோ?! 

நன்றி - விகடன் 
 
 
 
 

Thursday, April 28, 2011

என்னது? என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா?

http://s.chakpak.com/se_images/14400_-1_564_none/hansika-motwani-wallpaper.jpg 

1.கூட இருந்தே குழி பறிக்கறதுல நம்ம தலைவர் தான் நெம்பர் ஒன்.. 

எப்படி சொல்றே..?

வாக்கிங்க் ஸ்டிக்கா கடப்பாரையை யூஸ் பண்றாரே..?


-------------------------------------

2. ஹன்சிகா மோத்வானி முன்னால பார்க்க அழகா இருக்காங்க.. ஆனா பின்னால பார்க்க சுமாரா தான் இருக்காங்க..

 முன்னுக்குப்பின் முரணாப்பேசாதே... 

-----------------------------------

3.  மிஸ் மோஹனா.. நான் உங்க வீட்ல எடுபுடி வேலை செய்ய ஆசைப்படறேன்.. 

 சாரி,, மிஸ்டர்.... என்னை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டா என் அப்பா கிட்டே போய் பேசுங்க.. 

------------------------

4.டைரக்டர் சார்.. எதுக்காக உங்க வீட்லயே சாராயம் காய்ச்சறீங்க?

என் கிட்டே சொந்த சரக்கே இல்லைன்னு ஊர் பூரா பேச ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க வாயை அடைக்கத்தான்.

-----------------------

5. பால் விலை உயர்வு தனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணனும்னா கோட்டைக்குத்தான் போகனும்.. தலைவர் எதுக்கு கோடம்பாக்கம் போறாரு?

அட நீங்க வேற.. அவரோட டார்கெட் ஆவின் பால் அல்ல.. அமலா பால்.. அவங்க ஜாஸ்தி சம்பளம் கேட்கறாங்களாம்..

--------------------------
http://tamil.koodal.com/cinema/gallery/actress/amala_paul/amala_paul_57_411201170910123.jpg
6. இந்த மேட்ச்ல இந்தியா தான் ஜெயிக்கனும்னு சாமி கிட்டே வேண்டிக்கறியே..?நாட்டுப்ப்ற்றா?

அதெல்லாம் இல்ல.. இந்த மேட்ச் ல இந்தியா ஜெயிச்சுட்டா ஒட்டுத்துணி  கூட இல்லாம் ஒரு பிட்டுப்படத்துல நடிப்பேன்னு நடிகை பேட்டி குடுத்து இருக்காங்களே?

---------------------------

7. நடிகை ரத்னா தேவி வெளி நாடு ஷூட்டிங்க்குக்கு வர மாட்டேங்கறாங்களா? ஏன்? 

 பாரத ரத்னா  விருது மிஸ் ஆகிடும்னு யோசிக்கறாங்களாம்.

-------------------------

8. ரசிகர் மன்றம் முன்னால ஏகப்பட்ட கூட்டம் நிக்குதே.. ஏன்?

நடிகையோட ரசிகர் மன்றத்துக்கு அமலாபால் பூத் அப்படின்னு பேர் வெச்சு இருக்காங்களாம்.. கண்டிச்சு போராட்டம் நடக்குது...

---------------------------

9. நீங்க காஃபி அல்லது பூஸ்ட் தான் குடிக்கறீங்க.. அது ஏன்?

காப்பி பேஸ்ட் எழுத்தாளன்னு ஒரு பேர் வந்துடுச்சு.. அதனால அதை டைவர்ட் பண்றேன்.. இப்போ பாருங்க காப்பி பூஸ்ட் எழுத்தாளன்னு சொல்வாங்க.. ஹி ஹி

---------------------------

10.  கல்யாண மண்டபத்துல எந்தப்பக்கம் மொய் எழுதறாங்க..?

ஏன் கேட்கறே,?

 அந்த ஏரியா பக்கம் தலை காட்டாம நைசா எஸ்கேப் ஆகத்தான்.. 

-----------------------
டிஸ்கி 1 - என்னை தாக்கி தினசரி 3 பதிவுகள் வந்துட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லலைன்னு நண்பர்கள் கேட்கறாங்க.. இலங்கைல ஒரு இனமே தாக்கப்பட்ட போதும் நாம் கையாலாகாம சும்மா பார்த்துட்டுதானே இருந்தோம்.. ஒரு இனம் தாக்கப்பட்ட போதே கண்டுக்காத நாம ஒரு தனி மனிதன் தாக்கப்பட்டா மட்டும் ஏன் பொங்கி எழனும்?

டிஸ்கி 2 - இது என் 445 வது போஸ்ட்.இதுல காப்பி பேஸ்ட் போஸ்ட் 44. மீதி எல்லாம் சொந்த சரக்கு தான்.அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும்ல தான் படிச்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கற மாதிரி நானும் படிச்ச நல்ல விஷயங்கலை ஷேர் பண்ணிக்கறேன்.. 

டிஸ்கி 3 - சிலர் சொல்றாங்க.. ஆனந்த விகடனின் சேல்ஸ் என்னால பாதிக்கப்படுதுன்னு.. விகடனின் சேல்ஸ் 8லட்சத்துக்கு மேல்.. ஆனா என் போஸ்ட்டை படிக்கறவங்க ஜஸ்ட் 1000 டூ 2000. இதுல என்ன பாதிப்பு?

Saturday, April 09, 2011

விகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXZdasBkREM6X5evceiVKs15rGtSfhLnXrQEjaiaNELbDIX16-CVDtgGFBOq4QomwsEknWTKVJoHJIT5wIaadhL3bfmtTmA-wfRVe4c0sjQQ0Z7SrkZu73KHQsPF2BemhYmUANIj1x-yD/s1600/amala_paul.jpg
''இந்தப் படம் விக்ரமோட விஸ்வரூபம். 'சேது’, 'பிதாமகன்’ படங்களில் அவர் பண்ணி வெச்சிருக்கிற ரெக்கார்டுகளை அவரே இதில் அடிச்சு உடைச்சிருக்கார். கதையும் கேரக்டரும் முடிவானதும் நான் யோசிச்ச ஒரே ஹீரோ... விக்ரம்தான். என்னோட எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கார். டெல்லியில் தேசிய விருதுக்கு ஆர்டர் சொல்லிரலாம்!'' - சந்தோஷமாகச் சிரிக்கிறார் டைரக்டர் விஜய்.

இப்படிவிருது கிடைக்க்ப்போகும் படம்னு  சொன்னா படம் ஓடாதே....

விக்ரம் நடிக்கும் 'தெய்வத்திருமகன்’ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நடுவே நடந்தது இந்தச் சந்திப்பு.
1. ''எடை குறைந்து, முகம் மாற்றி இருக்கும் விக்ரம் போட்டோக்களைப் பார்த்தாலே, ஆச்சர்யமாக இருக்கிறதே...''

''இது என் கனவுப் படம். இந்தப் படத்துக்காக நானே ஒரு குழந்தை மாதிரி மாறி இருக்கேன். உங்களையும் ஒரு குழந்தையா மாத்தி, வேறு ஒரு உலகத்தைக் காட்டப் போறேன்.

 அய்யா.. ஜாலி.. அப்போ யாரும் தியேட்டர்ல டிக்கெட்டே எடுக்க வேண்டியதில்லையா? .. ஹி ஹி 


படத்தில் விக்ரமின் மனசின் வயசு அஞ்சு. அந்த வயசுக்கு உண்டான மன வளர்ச்சி மட்டுமே உள்ள ஆளா வர்றார். ஒரு குழந்தைக்கு இருக்கிற அதிகபட்சமான கேள்வி 'பட்டாம்பூச்சிக்கு யார் கலர் அடிச்சாங்க?’ங் கிறதுதானே? அப்படி ஒரு குழந்தைதான் விக்ரம். 

சுத்தி நடக்கிற எதுவும் அவருக்குத் தெரியாது. யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கத் தெரியாது... முடியாது. கள்ளம், கபடம், காமம், பொறாமை, வக்கிரம்னு எதனோட நிழலும் படாமல் சிரிக்கிற ஒரு குழந்தையா வர்றார் விக்ரம். 

அப்படி ஒரு மனசு, உலகத்தில் ரெண்டே பேருக்குத்தான் கிடைக்கும்.  ஒண்ணு... ஞானி. இன்னொண்ணு... குழந்தை. எல்லோராலும் ஞானி ஆக முடியாது. ஆனா, யார் நினைச்சாலும், குழந்தை ஆக முடியும்!


உலகத்தோட அசிங்கங்கள் தெரியாம இருக்கிறவங்களை நாம மன வளர்ச்சி இல்லாதவங்கன்னு சொல்றோம். நான் அவங்களை 'தெய்வத்திருமகன்’னு சொல்றேன்!''

 மோகன்லால் நடிச்ச ஒரு மலையாளப்படம் + அமிதாப் நடிச்ச ஒரு ஹிந்திப்படம் இவற்றின் உல்டான்னு சொல்றாங்களே.. அதை சின்னப்புள்ளத்தனமான குற்றச்சாட்டா நினைச்சுக்கலாமா?  ... 
2. ''கேட்கவே நல்லா இருக்கு... படத்துக்காக நிறைய மெனக்கெட்டு இருப்பீங்கள்ல?'' 

''நானும் விக்ரமும் நிறைய ரிசர்ச் பண்ணினோம். 

 அப்போ படத்தோட ஹீரோயின்ஸ் அனுஷ்காவும், அமலா பாலும் உடன் இருந்தாங்களா?  ஹி ஹி..

மன வளர்ச்சி குன்றிய வங்களோட உலகத்தைப் பார்க்கிறதுக்கு 'உதவும் கரங்கள்’ வித்யாகர் நிறைய உதவி பண்ணினார். விக்ரம் சார், ஒரு மாசம் அவங்களோடு பழகினார். அவர் இல்லைன்னா... இந்தப் படத்தை நான் செய்து இருக்கவே மாட்டேன். அவ்வளவு அழகா அந்த கேரக்டரை உள்வாங்கிட்டார். ஷூட்டிங்கில் நிறைய இடங்களில் நான் கட் சொல்ல மறந்து நிற்கும் அளவுக்கு, நடிப்பைக் கொட்டியிருக்கார் விக்ரம்.

அப்போ படத்துல எடிட்டிங்க்ல கோட்டை விட்டிருக்கீங்களா?


உடல் மெலிஞ்சதால், நிறைய உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. பொறுக்க முடியாத தலைவலி வரும்.

ராவணன் படம் பார்த்தப்போ எங்களுக்கு இருந்தா  மாதிரியா? 

விருப்பப்பட்டதைச் சாப்பிட முடியாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். 14 கிலோ எடை குறைச்சார். அப்படியே அஞ்சு வயசுப் பையனோட பேச்சு, சிரிப்பு, குரல், பாடி லாங்வேஜ்னு அத்தனையும் மாத்தி அவர் வந்து நின்னப்போ... பிரமிச்சுட்டேன்.


இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் விக்ரம் ஒருத்தர். ஒவ்வொரு டைரக்டரும் அவரோடு ஒரு படம் பண்ணணும்கிறது என்னோட வேண்டுகோள்!''



3. ''இதில் அனுஷ்கா - அமலா பால்னு டபுள் தமாக்காவுக்கு என்ன வேலை?''


''நிச்சயமா மூணு ஃபைட், நாலு ஸீன் படம் கிடையாது. 

சீனா?.... ஓ.. ஸீனா?

ஹீரோயின் விஷயத்தில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. அனுஷ்கா தமிழில் தொடர்ந்து நடித்தால், சாவித்திரி, ரேவதி, சுஹாசினி அளவுக்குச் சிறந்த நடிப்பைத் தர முடியும். அதற்கான தகுதிகள் அவங்ககிட்ட உண்டு. 

அந்த 3 நடிகைங்க மேல உங்களுக்கென்ன கோபம்?

எல்லாரையும் சிரிக்கவைக்கிற சந்தானம், இந்தப் படத்தில் சிரிக்கவும் அழவும் வைப்பார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ஜி.வி.பிரகாஷ். எங்க கெமிஸ்டரி இதில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கு. குழந்தையா இருக்கிறதைவிட பெரிய சந்தோஷம் உலகத்தில் உண்டா?


நம்ம எல்லாருக்கும் குழந்தையாகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'தெய்வத்திருமகன்’ உங்களை, என்னை, நம்மை இன்னும் அழகாக்கும்னு நம்புகிறேன்!''

நம்புங்க நம்புங்க.. நம்பிக்கை தானே வாழ்க்கை...