Tuesday, July 09, 2019

அவங்கவங்க் டெபாசிட் பண்ண ப்ணத்தை அவங்கவங்க தேவைக்கு அவங்கவங்க எடுத்தாலே வரின்னா எப்படி?

 1   எனக்கு, இந்த பொறுப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கவே இல்லை. -உதயநிதி 

நாங்களும் எதிர்பார்க்கலை, திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லைனு கலைஞர் சொன்னதால ஜனநாயக முறைப்படி தேர்தல் வெச்சு தேர்ந்தெடுப்பாங்கனு நினைச்சோம்

=================


2 இது, எனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக நான் கருதவில்லை; ஒட்டுமொத்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே நினைக்கிறேன்.-உதயநிதி 


அங்கீகார்ம் மட்டும் இல்லை , அதிகாரம்   அதி    காரம்


===============


 3  தொண்டர்களில் ஒருவனாக இருப்பதையே, நான் விரும்புகிறேன். -உதயநிதி - 

அப்போ ராகுல் மாதிரி பதவி வேணாம்னு சொல்லிடப்போறீங்களா?

================


4  இந்தப் பொறுப்பில், நிறைய சவால்கள் இருக்கின்றன. அதுபற்றி பேசுவதை விட, செயல்களில் காண்பிக்க விரும்புகிறேன்.-உதயநிதி 

ஹிந்தி ல சவால் அப்டின்னா கேள்வி , அப்போ இது சம்பந்தமா நிறைய கேள்விகள் கேட்பாங்க ஜனங்க


---------------

5  அ.தி.மு.க., தலைமை, பணத்தை வைத்து, அ.ம.மு.க., நிர்வாகிகள் மற்றும் கட்சியினரை இழுக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளது. -

அ.ம.மு.க., செயலர், ஹென்றி 


நாம தான் பணத்துக்கு விலை போக மாட்டோமே? கொள்கை தானே முக்கியம், ஏன் கவலை?

================


6  என்னிடமும் பேரம் பேசினர். ஆனால், நான் பணத்திற்கு விலை போக மாட்டேன்.-

அ.ம.மு.க., செயலர், ஹென்றி 


 தங்கம் , நிலம் இப்டி எதிர்பார்க்க்றார் போல , நான் எதற்கும் விலை போக மாட்டேன்னு சொல்லலையே?

================


7   ஓ.பி.எஸ்., உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அவர்களுக்கு பாதகமாக தீர்ப்பு வரும் சூழ்நிலை உள்ளதால், ஆட்சியையும், கட்சியையும் தக்க வைப்பதற்காக, இது போன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.-

அ.ம.மு.க., செயலர், ஹென்றி 


 இதுக்குப்பேரு அரசியல் சாணக்கியத்தனம், அதாவது மொள்ளமாரித்தனம்

=============


8   பயம் உள்ளவர்கள், பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க, தனியாக செல்லும்போது, தானாக கத்தியபடி செல்வர். அது போல் தான், தற்போது தினகரன், கத்தி வருக்கிறார். -தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் :

தினக்ரன் தனியாவா இருக்காரு? கூட 18 சாரி 17 எம் எல
ஏ க்கள் இருக்காங்களே? 

===============

9  தனி மரம், எப்போதும் தோப்பாகாது. தமிழகத்தில் எடுபடாத கட்சி என்றால் அது, அ.ம.மு.க., தான். -தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் :


கமல் , சீமான், தினகரன் மூவரும் தனிமரம் தான் , இவங்க சேர்ந்தா தோப்பாகுமோ?

================


10  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு மட்டுமன்றி, வேதாந்தா நிறுவனத்திற்கும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவை மாநில அரசின் அனுமதியின்றி அந்த நிறுவனங்கள், திட்டங்களை மேற்கொள்ள முடியாது.-நாராயணசாமி 


 இருங்க கவர்னர் கிரண்பேடியை அனுப்பி வைக்கறோம் - மோடி

--------------


11  லோக்சபா தேர்தலில், அசாம் மாநிலத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காத நிலையில், கட்சியின் மாநில பொறுப்பாளர் என்ற முறையில், தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்., பொதுச்செயலர் பதவியை, ராஜினாமா செய்கிறேன்-ஹரீஷ் ராவத்  


 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜீவ் குமாரா?( ராகுல்)


==========


12  . என்னைப் போன்றவர்களுக்கு பதவி முக்கியமல்ல. ஆனால், தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும், ராகுல் போன்ற தலைவர், கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்தால் தான், பா.ஜ.,வை தோல்வியடையச் செய்ய முடியும்.-ஹரீஷ் ராவத்  


சரி சரி கிளம்புங்க  காத்து வரட்டும்

=================


13   தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை அதிகரித்து வருகிறது.-தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழி:

அப்போ உங்க கட்சி ஆளுங்க நடத்தற ஆலைகளை எல்லாம் முதல்ல மூடச்சொல்லுங்க, மாற்றத்தை நம்ம கிட்டே இருந்து தொடங்குவோம்

=================



14  *ஆலைகளில் உரிய ஆய்வு செய்த பிறகே, மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. அளவாக மது குடித்தால், எந்த பிரச்னையும் இருக்காது. அதிகம் குடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும்.-மதுவிலக்கு துறை அமைச்சர், தங்கமணி: 

அப்போ மது  வீட்டுக்கு நாட்டுக்கு கேடு இல்லை , அளவா குடிங்க அப்டினு ஸ்லைடு போட,லாமே?

====================

15  *: மாநகராட்சிகளில், பல இடங்களில், சொத்து வரி அதிகளவில் இருப்பதாக, புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக, ஆய்வு நடந்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-**உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி

சொத்து வரி கட்ட முடைப்பட்டு சொத்துக்கணக்கை பிளாக்ல கொண்டு போய்டப்போறாங்க 

=================


6  தி.மு.க.,விற்கு, குடும்ப முன்னேற்ற கழகம் என, பெயர் வைத்துக் கொள்ளலாம்,'' என, பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி 

 குடும்ப அரசியல் பண்ணாதீங்கனு இனி சொல்ல முடியாது, குடும்பம் பூரா அரசியலுக்கு வந்திடுச்சு

==============

17   என்னை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஆர்எஸ்எஸ், பா.ஜ., வழக்கு போடுகிறது - ராகுல் 

 அந்த மிரட்டல் படி தான் பதவியை ராஜினாமா பண்றீங்களா?

=============

18  வாய்மையே வெல்லும் -ராகுல்

 அப்போ லிப்ஸ்டிக் போட்டா ஜெயிச்சுடலாமா?

=============



அவங்கவங்க் டெபாசிட் பண்ண ப்ணத்தை அவங்க்வங்க   தேவைக்கு அவங்கவங்க எடுத்தாலே  வரின்னா எப்படி?


===============


20 நாட்டில், 2024ம் ஆண்டுக்குள், அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான குடிநீர் வழங்கப்படும்,'' = நிர்மலா சீதாராமன்

 அதுவரை அட்ஜஸ் பண்ணி இருக்கற தண்ணியைக்குடிச்சுக்குங்கங்கறாரா?


2024 ல ஆட்சிக்காலமே முடிஞ்சிடுமே? யார் கிட்டே கேள்வி கேட்கறது?


==============

0 comments: