Wednesday, March 09, 2011

புரட்சித்தலைவியின் அரசியல் வாழ்வை புரட்டிப்போட்ட கடிதம்,அதி மு க அதிர்ச்சி

http://www.envazhi.com/wp-content/uploads/2010/10/jaya-ajith-vijay.jpeg 
சில நாட்களுக்கு முன் தமிழருவி மணியன் அவர்கள் விகடனில் கலைஞருக்கு ஒரு கடிதம் போட்டு கலக்கினார். இப்போது அவரது அடுத்த தாக்குதல் புரட்சித்தலைவிக்கு...

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.


உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்!

தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/jayalalitha.jpg
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!


உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.


எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
 http://new.vikatan.com/news/images/addd.jpg

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 

1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.


யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். 

மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.


அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. 
 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg?w=480&h=654
தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.


முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். 

நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது.

சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.


ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள்.

உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

 http://img.dinamalar.com/data/uploads/WR_216592.jpeg
சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். 

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? 

வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!


ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? 

உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIyq4cteTn4NIN9nUInRVN-CD7_7D3sbiLBlOr08VVxJzRUtX1uKYnJoFiJ2HfPsWnQEdn7GkPFYzfLEIlw5VqVp63MwJL-ihuGu_d5cRs1PfGJ7McdEtAJqS0OXSeiiPPHDnXHzaoHcj6/s1600/Jayalilatha+cartoon.jpg

உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம்.

ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு.

'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?


அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்;

அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!


திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHX-8Y3fQjW5tABhp-1DdE5HgEXlG4_D7B0zz_MulsTOAwU1ADa5kduYK0MPU_JVTx0Q4fQGK2rE8PQjCcUuozMgioJvDARffzwnVYCIuZlqDXAHRREXcmXg37eVkh-NpRGX6X8OU_kEW3/s1600/tamilmakkalkural_blogspot_meenavar_prachani.jpg
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும்.

அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?


போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். 

உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!


சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். 

அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். 

டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும்.

சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.


உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்

54 comments:

Unknown said...

vadai !

முத்துசிவா said...

Scroll panni paatale 5 nimisham aaguthennee....:):)

போளூர் தயாநிதி said...

parattugal

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கொஞ்சம் டைம் கொடுங்க படிச்சிட்டு வர்றேன்..

சி.பி.செந்தில்குமார் said...

முத்துசிவா said...

Scroll panni paatale 5 nimish

5 வருஷ வாழ்க்கை...10 நிமிசம் செலவு பண்ணலாம் தப்பில்லை

போளூர் தயாநிதி said...

பாராட்டுகள் இப்படித்தான் குமுக (சமுக )சிந்தனையுடன் செயல்படவேண்டிய நிலையில் தமிழுலகம் இருக்கிறது . தமிழருவி மணியனின் கடிதம் உண்மையில் பாராட்ட கூடியது மட்டுமல்லாமல் இந்த அதிகார வகுப்பு அதை அவற்றில் உள்ள உண்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நல்ல ஆட்சி செய்யவேண்டும் என்பதே நம் அவா

Unknown said...

//உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது//
பள்ளத்தை தாண்டி ஓடிட்டு இருக்கேன்...
இதோ வரேன் CPS

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முடியலிங்க..


இந்த சந்தர்பத்தை அம்மா சரியாக பயன்படுத்திக் கொள்வார்களா.. அல்லது பழைய குருடி கதவை திரடி என்ற கதைபோல்.. சசிகலா உடன் தான் கூட்டணி அமைப்பார்களா..
பொருத்திருந்து பார்ப்போம்..

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன்..

Unknown said...

நான் மதிக்கும் சில அரசியல் மனிதர்களில் ஒருவர் கடிதத்த போட்ட உமக்கு என் நன்றிகள் நண்பா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழருவி மணியன்
என்றும் எம்ஜிஆரின் மிக சிறந்த விசுவாசி இவர்கள் சொல்லையெல்லாம் தலைமை ஏன் காதில் போடுவதில்லை என்று தெரியவில்லை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்கள் பதிவில் இன்றை பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..
வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

போளூர் தயாநிதி said...

பாராட்டுகள்

நன்றி சார்..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நான் மதிக்கும் சில அரசியல் மனிதர்களில் ஒருவர் கடிதத்த போட்ட உமக்கு என் நன்றிகள் நண்பா!

ரைட்டு... நண்பனின் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி.. நாடும் மகிழ்ச்சியா இருக்கும் நாள் எப்போ..?

தனி காட்டு ராஜா said...

Good one :)

kalakunga anne...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழருவி மணியன்
என்றும் எம்ஜிஆரின் மிக சிறந்த விசுவாசி இவர்கள் சொல்லையெல்லாம் தலைமை ஏன் காதில் போடுவதில்லை என்று தெரியவில்லை..

அம்மாவுக்கு ஓவர் டாமினேஷன் புத்தி.. யார் சொன்னாலும் கேக்கக்கூடாதுன்னு ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

தனி காட்டு ராஜா said...

Good one :)

kalakunga anne...

நாடே கலங்கிப்போயிருக்கறப்ப நாம என்னத்த கலக்கறது..?

Unknown said...

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு புள்ளி வைத்திருக்கும். சிலருக்கு அது கமா பலருக்கு அதுவே முற்று நண்பா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும்.//////

இலவச அறிவிப்புகள் மட்டுமே நல்ல ஆட்சி என்று அர்த்தம் ஆகி விடாது வேலைவாய்ப்பை வழகிங்னால் போதும் அதுதான் நல்ல ஆட்சி...

இன்னும் தேர்தல் அறிக்கைகள் வர வில்லை மக்களே இலவசங்களை நம்பி ஏமாராதீர்கள்..

சக்தி கல்வி மையம் said...

கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை ---

உண்மைதான்...

சக்தி கல்வி மையம் said...

இந்தமுறை அம்மாதான் வருவாங்க...
திருந்துவாங்க.. அப்படி திருந்தவில்லை என்றால் அவர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு புள்ளி வைத்திருக்கும். சிலருக்கு அது கமா பலருக்கு அதுவே முற்று நண்பா!


ஆனால் ஆச்சரியக்குறிகளாய் நின்று சாதிக்க வேண்டியவர்கள் வாய்ப்பில்லாமல் கேள்விக்குறியாய் நிற்பதும்,ஊழலின் ஊற்றுக்கண்கள் பதவியில் நீடிப்பதும் நாட்டின் சாபக்கேடா..?

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

இந்தமுறை அம்மாதான் வருவாங்க...
திருந்துவாங்க.. அப்படி திருந்தவில்லை என்றால் அவர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்..

மக்களுக்கு வேற வழி இல்லை.. எரியற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என தேர்வு செய்வதே அவர்கள் நிலை..

ரஹீம் கஸ்ஸாலி said...

நானும் .....வந்துட்டேன்........

Unknown said...

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடும்னான் பாரதி.......................

அவனுக்கு இந்த நாடு புகழைத்தவிர எதுவும் கொடவில்லை............

காசுக்கு ஆசைப்படாத காந்தியை தான் இந்த அற்ப மனிதர்கள் வென்றுவிட்டதாக நினைக்கிறார்கள் நண்பா................

சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மனிதனின் நெனைப்பும் தன்னோடு சேர்த்து தன் நாட்டையும் சாதிக்க வைக்க நினையும் பொழுதே நாம் உயர்வோம்........நண்பா

Unknown said...

//1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.//

//தத்துவஞானிகள் ஆளவேண்டும்.
அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும்.//


//போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம்.

உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!//

தமிழ் குத்தால அருவி, தான் என்பதை இந்தக் கடிதத்தின் மூலம் நிருபித்து விட்டார் மணியன் !

vijayan said...

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ,அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.

Unknown said...

வடை எனக்கு கிடைச்சதுக்கு CPS தந்த அறிவுரைதான்...
நன்றி !
3 மணிக்கு தான் பதிவு போடணும்ன்னு ஒரு சூட்சுமம் சொல்லிக் கொடுத்தாரு...

தமிழருவி சார் கடிதம் மாதிரி ஒரு பதிவு போடனும்னு ரொம்ப நாள் ஆசை...
அதை நீங்க போட்டு என்னை படிக்க வச்சுட்டீங்க CPS
காலத்துக்கு ஏற்ற பதிவு...
நன்றி !

Unknown said...

என்னைக்காப்பாற்று என்று கதறுபவனின் கழுத்தில் ஏறி நின்று நர்த்தனம் ஆடும் பிணம் அல்ல அல்ல பணம் தின்னும் கழுகுகளுக்கு மனித ஓலங்கள் கேட்க்காது நண்பா

கேற்க வைக்க வேண்டும் எனில் இப்பிறவியை இம்மாந்தருக்கு அளித்து அடுத்து வரும் நம் எதிர்கால சந்தாதிகளுக்காவது உயிர் கொடுப்போம் நண்பா

நிரூபன் said...

தமிழருவியின் கடிதம், தமிழால் நறுக்கெனக் கேள்வி கேட்டு, அருவி போல் அம்மா முகத்தில் ஆச்சரிய ரேகைகளைப் பரவ விடும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் said...

ஊழல் ஆட்சி ஒழியனுமா? தமிழக் ஒளிரனுமா?
அம்மா கையிலை வாக்கைப் போடு செல்லக் கண்ணு,
நீங்க் அம்மா கையிலை வாக்கைப் போடு செல்லக் கண்ணு!

தமிழருவியின் கடிதத்தைப் படித்த உற்சாகத்தில் ஒரு பாட்டை மாற்றும் முயற்சி. அவ்வளவு தான். உள் கூத்து எதுவும் இல்லை.

Unknown said...

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எரிந்தது யார் சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ..........என்று இன்றும் வழி இல்லாமல் தவிக்கும் என் சகோதரனுக்கு சிறந்த வழி காட்ட முடியவில்லை என்றாலும் அவனை படு குழியில் தள்ளும் விஷயத்தை இந்த மாக்கள் நிறுத்தினாலே போதும் நண்பா

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஜெயலலிதாவின் அட்டூழியங்களை புட்டு புட்டு வைத்த தமிழருவி மணிக்கும் அதை இடுக்கையாய் வெளியிட்ட உங்களுக்கும் ஒரு ஜெ! சாரி ஒரு ஜோ

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு கட்டுரைப் பகிர்வு.

ம.தி.சுதா said...

////முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை.////

ஏங்க கடந்த காலம்... சில நெரம் மறந்திரப்பாங்க இன்றைய நாளையே நினைக்கச் சொல்லுங்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

அமைதி அப்பா said...

எல்லோரும் படிக்கிறோம். நல்லா புரிஞ்சிக்கிறோம். ஆனால், படிக்க வேண்டியவர் படிக்கணுமே?!

ராஜ நடராஜன் said...

இனி வரும் காலம் ஜெயை பதிவுலகம் வாட்டும் காலம்:)

settaikkaran said...

தமிழருவி மணியனின் இரண்டு கடிதங்களயும் ஒன்றுக்குப் பலமுறை வாசித்தாலே போதும், தமிழக அரசியலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு முடிவுக்கு வர முடியும் போலிருக்கிறது.

இவை இரண்டையும் ஒரு ஒப்பீடு செய்து இன்னொரு இடுகையாக எழுதினால், இன்னும் பிரமாதமாய் வரும் தல.

MoonramKonam Magazine Group said...

சாட்டையடி வார்த்தைகள்

ஜோதிஜி said...

5 வருஷ வாழ்க்கை...10 நிமிசம் செலவு பண்ணலாம் தப்பில்லை


கேலிசித்திரத்திற்காக தேடிய உழைப்பு புரிகின்றது. ம்ம்ம்.... உங்கள் பின்னூட்ட பதிலுக்கு நான் என்றும் ரசிக்ன்.

அஞ்சா சிங்கம் said...

மனசாட்சியின் குரல் இந்த கடிதம் பார்க்கலாம் இனிவரும் காலம் மண்சோறு சாப்பிடும் மந்திரிகள் காலமாக இருக்கும் ............................

வசந்தா நடேசன் said...

அப்ப அதிமுக செயிச்சுபுடும், ம்ம்ம்.. தமிழருவி மணியனின் நல்ல கட்டுரை, ஓட்டு போட போகுமுன் எல்லாரும் படிக்கவேண்டியவை, இதுவும் முன்பு எழுதிய கலைஞருக்கான கடிதமும்.. பகிர்ந்தமைக்கு நன்றி..

ராஜி said...

உங்களுக்கு "நல்ல நேரம்" இன்றிலிருந்து ஆரம்பிடுச்சு சிபி சார் அம்மாவை தாக்கி ஒரு பதிவா? இனி தொண்டர்கள் உங்களை அனுபுடன் கவனித்துக் கொ(ல்)ள்வார்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல கட்டுரை. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று... நன்றி சிபி!

செங்கோவி said...

கிழிகிழின்னு கிழிச்சிருக்காரே..

செங்கோவி said...

கிழிகிழின்னு கிழிச்சிருக்காரே..

ssk said...

தமிழருவி ஒன்றும் தெரியாமல் எழுதவில்லை..
ஜெ வுக்கு அறிவுரை என்ற பெயரில் கலைஞரை திட்டியே எழுதி உள்ளார்.
இதில் இருந்தே இவரை பற்றி தெரிகிறது.
ஏன் கலைஞரை பற்றி எழுதும் போது ஜெ வை திட்ட வேண்டியதுதானே.
இதிலும் உள்ளது பூணூல் பாசம்.

Unknown said...

//தமிழருவி ஒன்றும் தெரியாமல் எழுதவில்லை..
ஜெ வுக்கு அறிவுரை என்ற பெயரில் கலைஞரை திட்டியே எழுதி உள்ளார்.
இதில் இருந்தே இவரை பற்றி தெரிகிறது.
ஏன் கலைஞரை பற்றி எழுதும் போது ஜெ வை திட்ட வேண்டியதுதானே.
இதிலும் உள்ளது பூணூல் பாசம்.//

பூணூல் பாசம் - ராமர் வணவாசம்
என்று ராமாயணத்தை ஏன் இந்த
மு(க்)கஜெயபாரதத்தில் சொருகறீங்கன்னு தான் புரியலை ?

SurveySan said...

good one.

IlayaDhasan said...

பாதி படிகிருப்பவே தூக்கம் வருது ... அந்த அம்மா முழுசா படிச்சுடுமா?

http://unmaikaga.blogspot.com/

Unknown said...

தமிழருவி ஒன்றும் தெரியாமல் எழுதவில்லை..
ஜெ வுக்கு அறிவுரை என்ற பெயரில் கலைஞரை திட்டியே எழுதி உள்ளார்.
இதில் இருந்தே இவரை பற்றி தெரிகிறது.
ஏன் கலைஞரை பற்றி எழுதும் போது ஜெ வை திட்ட வேண்டியதுதானே.
இதிலும் உள்ளது பூணூல் பாசம். //

ஆகா.... என்ன ஒரு கண்டுபிடிப்பு. ஏம்பா நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களா. தலைவரின் அதே முகம். அப்படியே மெயிண்டெயின் பண்ண்ஙக. இல்லாட்டி உருப்ட்டுருவீங்க.

Jayadev Das said...

\\சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் \\ இவரே சசிகலா என்ற ரிங் மாஸ்டர் முன்னால் சர்கஸ் மிருகம் பம்முவது போல பம்முவதோ ஏனோ? கடவுளுக்கே வெளிச்சம்.

Jayadev Das said...

\\சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் \\ இவரே சசிகலா என்ற ரிங் மாஸ்டர் முன்னால் சர்கஸ் மிருகம் பம்முவது போல பம்முவதோ ஏனோ? கடவுளுக்கே வெளிச்சம்.

tHE bOSS said...

அதிமுக பொதுச் செயலாளர் அம்மாவுக்கு தமிழருவி மணியன் எழுதி உள்ளது சாதாரண மடல் அல்ல..
ஏழை மக்களை ஏழை மக்களாகவே அவல நிலையில் வைத்து இருக்கும் திமுக அரசை அகற்ற நினைக்கும்
ஒவ்வொரு தமிழ் மகனின் உள்ளத்து குரல்..
இதை முதல்வராக போகும் அம்மா உணர்ந்து செயல்பட்டால்...
எதிர் கால தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும்..