Saturday, March 05, 2011

கூட்டு களவாணிகள் ரெண்டு பட்டதால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/Specials/athiradi%20saravedi/thamizharuvi-manian.jpg
டாக்டர் கலைஞர் சிறந்த ராஜ தந்திரி தான். ஆனால் இலங்கைத்தமிழர்களின் சாபமும்,மீனவர்களின் கண்ணீரும்  அவரை துரத்துகிறது.இப்போ இல்லாட்டி எப்போ என காங்கிரஸ் நினைக்கிறது.பாலைவன ஒட்டகத்துக்கு கூடாரத்தை கொடுத்த கதை ஆகி விடக்கூடாது என தி மு க நினைக்கிறது.

இந்த சமயத்தில் தமிழருவி மணியன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிடுவது பொறுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.இது விகடனில் வந்தது.



கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்

karunaanithi தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.


காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!


ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது – உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!


ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 

‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.


‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?


‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்?

சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!


அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை.

‘அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?


‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?


‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி – 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).


நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.


‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! ‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே?

‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!


கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். 

அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள்.

இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!


‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! 

அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்;

சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று ‘நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! 

நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். 

இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!


ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா?

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?


ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?

நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!


இப்படிக்கு,
ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,
தமிழருவி மணியன்

77 comments:

தமிழ் 007 said...

வடை

தமிழ் 007 said...

என்ன தல திடீர்னு அரசியல் பதிவு. ஏதாவது கட்சியில விருப்ப மனு தாக்கல் பண்ணி இருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

என்ன கொடுமை சார் இது? நான் எந்த பதிவு போட்டாலும் இப்படி ஏன் போட்டீங்கன்னா நான் எதைத்தான் போடறது? ஹி ஹி

தமிழ் 007 said...

தல சீக்கிரம் இன்ட்லி, தமிழ்10 2-லையும் சேருங்க ஓட்டப்போட்டுட்டு நாலு இடத்துக்கு போகனும இல்லையா! ஏன்னா நாங்க ரொம்ப பிஸி

சக்தி கல்வி மையம் said...

தமிழ் 007 said...

வடை //// நைட் பத்து 1/2 மணிக்குகூட வடையா?

தமிழ் 007 said...

வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு இந்த பதிவு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

சக்தி கல்வி மையம் said...

பதிவை படிச்சிட்டு வரேன்..

தமிழ் 007 said...

//வேடந்தாங்கல் - கருன் said...

தமிழ் 007 said...

வடை //// நைட் பத்து 1/2 மணிக்குகூட வடையா?//

வேற என்னங்க பண்றது. வீட்டுல சாப்பாட்டுல தண்ணி ஊத்தீட்டாங்க. இந்த வடை தான் இன்னைக்கு நைட் சாப்பாடு.

என் பசியறிந்து பதிவு போட்ட சி.பி. வாழ்க! வளர்க!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

தல சீக்கிரம் இன்ட்லி, தமிழ்10 2-லையும் சேருங்க ஓட்டப்போட்டுட்டு நாலு இடத்துக்கு போகனும இல்லையா! ஏன்னா நாங்க ரொம்ப பிஸி


மிட் நைட்ல என்ன பிஸி.. ஓ சாரி.. நான் டியூப்லைட் .இப்போதான் புரிஞ்சுது.. பல இடங்களுக்குப்போறவராச்சே.. ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

பதிவை படிச்சிட்டு வரேன்..


பொறுமையா வாங்க.. வெயிட்டிங்க்

தமிழ் 007 said...

//சி.பி.செந்தில்குமார் said...


மிட் நைட்ல என்ன பிஸி.. ஓ சாரி.. நான் டியூப்லைட் .இப்போதான் புரிஞ்சுது.. பல இடங்களுக்குப்போறவராச்சே.. ரைட்டு//

இதுல ஏதோ உள்குத்து இருக்குப்பா!
பதிவுல தான் வஞ்சப்புகழ்ச்சினா, கமென்டும் அப்படியே போட்டா நான் என்ன பண்றது?

சக்தி கல்வி மையம் said...

தமிழ் 007 said...

//வேடந்தாங்கல் - கருன் said...

தமிழ் 007 said...

வடை //// நைட் பத்து 1/2 மணிக்குகூட வடையா?//

வேற என்னங்க பண்றது. வீட்டுல சாப்பாட்டுல தண்ணி ஊத்தீட்டாங்க. இந்த வடை தான் இன்னைக்கு நைட் சாப்பாடு.

என் பசியறிந்து பதிவு போட்ட சி.பி. வாழ்க! வளர்க! --- வழிமொழிகிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி எனக்கு ஒரு மீனிங்க்லயே ஒழுங்கா பேசத்தெரியாது.. இதுல எங்கே டபுள் மீனிங்க்..?

சக்தி கல்வி மையம் said...

உங்களோட கெஸ் என்ன? யார் ஆட்சிக்கு வருவாங்க?( மாட்னிங்களா)

தமிழ் 007 said...

பதிவுக்கு சைடீஸா அமலா பாலையோ, தாப்ஸியையோ, அட்லீஸ்ட் அனுஷ்காவையாவது போட்டிருக்கலாம்.

ஏன் சொல்றேன்னா!

நைட்ல நல்ல படங்களை பார்த்துட்டு தூங்கினா மனதுக்கு ரொம்ப நல்லதுன்னு ஒரு டாக்டர் தாங்க சொன்னாரு!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கூத்தாடி-- யார சொல்லுறீங்க?... எல்லா அரசியல்வாதிகளும் கூத்தாடிகள் தானே...ஆரியக்கூத்தாடினாலும் தன் காரியத்தில் கண் வைப்பவர்கள் தானே..

செங்கோவி said...

தலைவரே..நீங்களும் விகடன்ல சேர்ந்துட்டீங்களா..வாழ்த்துகள்!

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

கூத்தாடி யார சொல்லுறீங்க...

எல்லா அரசியல்வாதிகளும் கூத்தாடிகள் தானே...ஆரியக்கூத்தாடினாலும் தன் காரியத்தில் கண் வைப்பவர்கள் தானே..


கேப்டனும்,அம்மாவும்

Unknown said...

என்ன சிபி நைட்டுல இருந்தே சமையலா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger செங்கோவி said...

தலைவரே..நீங்களும் விகடன்ல சேர்ந்துட்டீங்களா..வாழ்த்துகள்!

நீங்க டி எம் கேவா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வேடந்தாங்கல் - கருன் said...

உங்களோட கெஸ் என்ன? யார் ஆட்சிக்கு வருவாங்க?( மாட்னிங்களா)

இதுல மாட்டறதுக்கு என்ன? அம்மா தான்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தமிழ் 007 said...

பதிவுக்கு சைடீஸா அமலா பாலையோ, தாப்ஸியையோ, அட்லீஸ்ட் அனுஷ்காவையாவது போட்டிருக்கலாம்.

ஏன் சொல்றேன்னா!

நைட்ல நல்ல படங்களை பார்த்துட்டு தூங்கினா மனதுக்கு ரொம்ப நல்லதுன்னு ஒரு டாக்டர் தாங்க சொன்னாரு!

March 5, 2011 10:49 PM

தானைத்த்லைவர் ட்ஆக்டர் சாரி டாக்டர் கலைஞர் கடுப்புல இருக்கறப்ப உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

என்ன சிபி நைட்டுல இருந்தே சமையலா ஹிஹி!

March 5, 2011 10:55 PM

யோவ்.. எனக்கு சமைக்கறதை சாப்பிட மட்டும் தான் தெரியும்.நீர்தான் நளபாக சக்கரவர்த்தியாச்சே

Unknown said...

எனக்கென்னமோ காங்கரஸ் தலைல மண்ணை வாரி போட்டுக்குசின்னு நெனைக்கிறேன் ஹிஹி

Unknown said...

இப்போ தான் வந்தேன் அந்த பிகரப்பாத்துட்டு ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

காங் ... அம்மாகூட சேர சான்ஸ் இருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

எனக்கென்னமோ காங்கரஸ் தலைல மண்ணை வாரி போட்டுக்குசின்னு நெனைக்கிறேன் ஹிஹி

March 5, 2011 10:58 PM

kaangkiraSkku காங்கிரஸ்க்கு இழக்க ஒன்றும் இல்லை.கலைஞர்க்குத்தான் இழப்பு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வேடந்தாங்கல் - கருன் said...

காங் ... அம்மாகூட சேர சான்ஸ் இருக்கா?

இதுவே இறுதி முடிவல்ல. கலைஞர் விட மாட்டார்.. ஏதாவது ஸ்டெப் எடுப்பார். அம்மா கூட சோனியா சேர வாய்ப்பில்லை

நர்மதன் said...

அரசியல் என்ற சாக்கடையில் இருந்து எப்ப தமிழனுக்கு விமோசனம் கிடைக்குமோ

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

இப்போ தான் வந்தேன் அந்த பிகரப்பாத்துட்டு ஹி ஹி

யோவ்.. அந்தப்படத்துக்கு போயிடாதீங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நர்மதன் said...

அரசியல் என்ற சாக்கடையில் இருந்து எப்ப தமிழனுக்கு விமோசனம் கிடைக்குமோ

கவர்னர் ஆட்சி அல்லது ராணுவ ஆட்சி வந்துடனும்

Unknown said...

டெலிபோன் மணிபோல்
தக்காளி!

நர்மதன் said...

இதையும் பாருங்க பாஸ்

http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post_04.html

Unknown said...

ஆமா அது ஹாலிவுட்டு படம் ஸ்ஸ்ஸ்!

சக்தி கல்வி மையம் said...

விக்கியை என் பக்கம் வரசோல்லுப்பா? போரடிக்குது..

Unknown said...

இங்க இருந்து ஒரு வேல விஷயமா ஹோசிமிங் சிட்டி போனேன் ஹி ஹி!

2 மணிநேர விமானப்பயணம் அங்க...........

Unknown said...

வந்துட்டேன் நண்பா

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

வந்துட்டேன் நண்பா
-- நன்றி...

சி.பி.செந்தில்குமார் said...

என்ன நடக்குது?

Unknown said...

ஸ்ஸ்ஸ் கண்ணு கட்ற்றிசிய்யா யப்பா!

Unknown said...

தப்பிச்சி வந்தாச்சி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

என்னய்யா விக்கி , வை கோ மாதிரி ஜம்ப் பண்ரீரு?

Unknown said...

நாளைக்கு பதிவா போடலாம்னு ஹிஹி!

Unknown said...

சரி இப்போ சந்தோசமா!

அரசியல சொன்னேன் ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

நாளைக்கு அரசியல் பதிவு போடுமய்யா.. சண்டேன்னா ரெண்டுன்னு கில்மா பதிவு போட்டுடாதீங்க

Unknown said...

சரி தலைவரே போட்டுட்டா போச்சி!

vimalanperali said...

நல்ல கடிதம்.தமிழருவிமணியனுடயது.

சி.பி.செந்தில்குமார் said...

yoovயோவ்.. நான் பதிவு தான் போடச்சொன்னேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விமலன் said...

நல்ல கடிதம்.தமிழருவிமணியனுடயது.

நன்றி சார்

Unknown said...

தக்காளி டபுள் மீனிங்குல பேசாதியும்!

ராஜி said...

தி.மு.க ஆட்சிக்கு வந்தா முதல் களி உருண்டை உங்களுக்குதான்(களி எங்க போடுவாங்கனு தெரியும் இல்ல) கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்..

ssk said...

அரசியலில் சொல்லடி வாங்காமல் எதுவும் முடியாது, வேர்வை, எதிர்ப்பு இல்லாமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.
எந்த வேர்வையும் சிந்தாமல் தமிழருவி, ஆறு , கடல் போன்றவர்கள் எதுவும் கேட்பார்கள். வலை புலிகளும் அப்படியே.
இலவசம் தேவை உள்ளவர்கள் பெறுவதில் மற்றவருக்கு என்ன வலி. இங்கு எதோ எல்லாம் தருமா படியும், நியாய படியும் நடப்பது போல.
ஆயிரகணக்கான ஆண்டுகளாக ஒரு உழைப்பவனின் வியர்வையை விட பூணூல் போட்டு யாருக்கும் புரியாத ஒன்றை முனுமுனுத்து கொள்ளை அடிப்பது சரியா?
கலைஞரை நாற அடித்து எழுதினால் ப்ளாக் உலகில் உயர்ந்த இடம் கிட்டும். பழுத்த பழத்தை குறி வைப்பது மனித இயல்பு தானே?
ஜெவை நாற அடித்து எழுதினால் சற்று குறைவாக விளம்பரம் கிட்டும்.
எந்த கட்சியாவது தைரியம் இருந்தால் இலவசம் கிடையாது என்று சொல்லி ஒட்டு கேட்க முடியுமா.
மனிதர்கள் தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
பழ.கருப்பையா இன்னும் சிறப்பாக கலைஞரை பின்னி பெடல் எடுப்பார்.

பொன் மாலை பொழுது said...

சாக்லேட்டும், பிஸ்கட்டும் நிறைத்து பள்ளி செல்லும் பிள்ளையின் சட்டைப்பையில் இன்று மல்லிகைபூவும் மணக்கும் சந்தனமும்! :))

சி.பி.செந்தில்குமார் said...

@kakku maaNIkkam

காலத்தின் கோலம்

Unknown said...

பதிவ போட்டாச்சி தல!

Unknown said...

//அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை//
சைக்கோ,
சேடிஸ்ட்
இந்த வகையில் கலைஞர்
ஒரு
அண்ணா நாமிஸ்ட்
(anonymous IT)

சி.பி.செந்தில்குமார் said...

@ ஆகாய மனிதன்

இந்த வகையில் கலைஞர்
ஒரு
அண்ணா நாமிஸ்ட்
(anonymous IT)

செம

மாணவன் said...

அரசியலா??

நோ கமெண்ட்ஸ்... :))

எல் கே said...

//தி.மு.க ஆட்சிக்கு வந்தா முதல் களி உருண்டை உங்களுக்குதான்(களி எங்க போடுவாங்கனு தெரியும் இல்ல) கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்..
/

அந்த நாளை ஆவலுடன் எதிர் பார்க்கும்
அடியேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>எல் கே said...

//தி.மு.க ஆட்சிக்கு வந்தா முதல் களி உருண்டை உங்களுக்குதான்(களி எங்க போடுவாங்கனு தெரியும் இல்ல) கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்..
/

அந்த நாளை ஆவலுடன் எதிர் பார்க்கும்
அடியேன்


என்னா ஒரு வில்லத்தனம்

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்லாத்தான் கேட்டுருக்காரு தமிழருவி மணியன்

அஹோரி said...

அரசாங்க வேளையில் இருக்கும் ஐந்தறிவு ஜென்மங்கள் இதை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வீட்டில் வைத்துகொள்ள வேண்டும்.

டக்கால்டி said...

அஹோரி said...
அரசாங்க வேளையில் இருக்கும் ஐந்தறிவு ஜென்மங்கள் இதை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வீட்டில் வைத்துகொள்ள வேண்டும்.

March 6, 2011 8:39 AM///


அருமையோ அருமை அஹோரி பாசு

settaikkaran said...

நல்லாத்தான் கேட்டிருக்கிறாரு தமிழருவி மணியன்! அசத்தல் இடுகை தல!

மைதீன் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு

காங்கேயம் P.நந்தகுமார் said...

தமிழருவி மணியே இவ்வாறு கடிதம் எழுத எத்தனை பெட்டி உன் கைக்கு இடம் மாறியது? ஆமா சி.பி.அண்ணே இந்த போஸ்ட்டை வெளியிட நீங்க எவ்வளவு..............?

Unknown said...

//தி.மு.க ஆட்சிக்கு வந்தா முதல் களி உருண்டை உங்களுக்குதான்(களி எங்க போடுவாங்கனு தெரியும் இல்ல) கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்..
/

அந்த நாளை ஆவலுடன் எதிர் பார்க்கும்
அடியேன்


என்னா ஒரு வில்லத்தனம் //

கலைஞர் வருவதற்க்கான வாய்ப்பு தொலைதூரம் வரை தெரியவில்லை. ஆனால் ஜெயலலிதா முதல்வராக வந்துவிட்டால் இந்த வயசான காலத்தில் ................ அந்த கொடுமையை நினைத்தால் தான் எனக்கு சங்கடமாக இருக்கிறது. எப்படியோ நாட்டிற்க்கு நல்லது நடந்தா சரிதான்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல இந்தவாரமும் தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்! ஓயாது, அயராது, தீயா வேல செய்யுறீங்க! உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது, அது எங்களுக்கே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது! வாழ்த்துக்கள் தல!!



எங்க இன்னிக்கு புது பதிவ காணல?

Pandian R said...

பதிவு போட்டவங்க. பின்னூட்டம் போட்டவங்க அனைவரும் மறக்காம ஓட்டு போடுங்க

Jana said...

நான் அபிப்பிராயப்பட்ட சில விடையங்களையும் நிங்க காட்டியிரக்கிங்க. தலையங்கம் செம தூள் தலை

நிரூபன் said...

ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது – உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!//

இதைத் தான் சொல்வதோ காலை வாருவது என்று?

நிரூபன் said...

‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.//

ஐ ஆம் ஸ்ரில் படிச்சிங். இந்த வசனத்தைப் படிச்சால் கலைஞர் தன் கையாலே தன் மண்டைக்கு அடிச்சு அழுவாரு. இது அவருக்கு சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

நிரூபன் said...

வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!//

ஐயையோ, ஐயையோ தமிழ் அருவியாக பாய்கிறது. அருமை.

நிரூபன் said...

நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!//

மக்களின் கண்ணீர் மன்னவனைச் சும்மா விடாது என்பதற்கு இறுதி வரிகளே சான்று. இந்தப் பத்திரிகைக் கடிதத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தலை.

நிரூபன் said...

ஓட்ட வட நாராயணன் said...
தல இந்தவாரமும் தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்! ஓயாது, அயராது, தீயா வேல செய்யுறீங்க! உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது, அது எங்களுக்கே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது! வாழ்த்துக்கள் தல!!



எங்க இன்னிக்கு புது பதிவ காணல?

ஐ ஆம் றிப்பிட்டு. நண்பர் மாத்தியோசியுடன் இணைந்து நானும் உங்களை வாழ்த்துகிறேன்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,
தமிழருவி மணியன்ஃஃஃஃ

நல்லதொரு கையொப்பமையா ஹ..ஹ..ஹ...