Friday, March 18, 2011

சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய பெண்ணை செம ஃபிகர்,செம கட்டை என வர்ணிப்பது தவறா?ஆனந்த விகடன் அலசல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXsu1hsF-hokpG9x2WaB0l5102_tzJpThllMvUyxVKpcmzWwx9-N8VkbMioJ3fVJweBgyEQsJXW_d7Q9YWT8RIIMFjVcMvyylTRkn2ESBfLS34fXhhlUY0CyoNBrwoTdLTK6kwfSWXDcE/s400/Kanika-Plain-Silk-Indian-Saree--homelyheroines.blogspot.jpg 

சமீபத்தில் நான் ஒரு சினிமா விமர்சனம் எழுதும்போது ஹீரோயினின் அண்ணியை செம கட்டை என வர்ணித்து விட்டேன். அது பலரது மனங்களை சங்கடப்படுத்தியதாக நண்பரின் பதிவைப்படித்து வருத்தம் அடைந்தேன்.இனி அது போல் தவறு நேராமல் கவனமாக இருக்கிறேன் என பின்னூட்டம் இட்டேன்.

இந்த வார ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரை பெண்களின் வலியையும்,அவர்களது மன நிலையையும் மனதை பாதிக்கும் வண்ணம் எழுதப்பட்டு இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

'பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு... கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு!’ என்று ஆண்களுக்கு... பெண்களைக் கண்டால் பசியும் கவலையும் மறந்துபோவது, அவளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதால்தான்! 

சாலையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
சுலபமாக ஒரு பெண்ணைக் குறித்து 'மொக்கை ஃபிகர்’, 'சுமார் ஃபிகர்’, 'சூப்பர் ஃபிகர்’ என்று மதிப்பெண் அளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... நெருங்கி, பேசி, பழகி உணர்ந்த பிறகு, 'மொக்கை ஃபிகர்’ என்று முன்னர் பட்டமளிக்கப்பட்ட பெண், உங்களுக்குப் பேரழகியாகத் தோன்றும் அதிசயம் அனுபவித்தது உண்டா?

அவளது ஒரு புன்சிரிப்புக்காக, 'சாப்டியா?’ என்ற ஒற்றை விசாரிப்புக்காக ஏங்கித் தவித்த அனுபவம் உண்டா? இறுக்கம் தவிர்த்து உருக இலகுவாக இருங்கள்... உணர்வீர்கள்!


யார் கண்டது? நீங்கள் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப் பாலுக்குத் தப்பியவளாக இருக்கக்கூடும்.

அல்லது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பு கதையாக, வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி கணவனை விவாகரத்து செய்தவளாகவோ, குடும்ப நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராகக் காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து, துயரத்தைச் சுமந்து வாழ்பவளாகவோ இருக்கக்கூடும். 
 http://www.our-kerala.com/newgallery/images/photos/images/Kanika_8608.jpg
ஏழ்மை நசுக்க வாழ்வின் ரணங்களை அனுபவித்தவளாகவோ, அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வருவதுபோலத் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தோசைகளைச் சுட்ட அனுபவம் உள்ளவளாகவோ...  இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்!
பொதுவாகவே, பெண்கள் 'வேண்டாம்’ என்றால், 'வேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தம் என ஒரு கருத்து நிலவுகிறது. 

எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்துமா? நிச்சயம் இல்லை. தன்னம்பிக்கை உள்ள பெண்களிடத்தில் எது கேட்டாலும், மனதில் உள்ளதைப் பட் படாரென்று உடைத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால், கட்டுப்பெட்டியாக, 'வாய்ப் பூட்டு’ சட்டம் இயற்றப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்களால் நினைத்ததை அத்தனை சீக்கிரம் வெளியில் சொல்லிவிட முடிவது இல்லை. அதனாலேயே மென்று விழுங்கி, மனம் 'ஆம்’ என்று சொல்ல, உதடுகள் 'இல்லை’ என்று சொல்லும் விபத்து நேர்கிறது.

என் நெருங்கிய தோழி செல்விக்கு செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் விரைவாக நடக்காது என்கிற பயத்தில் இருந்தனர் பெற்றோர். செவ்வாய் தோஷம் உள்ள மாப்பிள்ளை ஒருவர் வர, அவள் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரமாக மணம் முடித்தனர். அவளோ நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவள். பாட்டு, நடனம் என்று எல்லா திறமைகளும் கொண்டவள்.

ஆளுமைத் திறன் வாய்க்கப்பெற்ற அவள் மட்டும் படிப்பை முடித்திருந்தால், ஒரு திறமையான அதிகாரியாக வலம் வந்திருப்பாள். ஆனால், எல்லாம் இருந்தும் அவளால் அவள் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியவில்லை. திருமணமாகிச் சில நாட்கள் கழித்து நான் அவளைப் பார்க்கச் சென்றபோது, வீட்டுக் கொல்லைப்புறத்தில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருந்தாள். அப்படி அவளைக் காண நேர்ந்த அந்த துரதிஷ்ட கணம் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்.

'சிந்து பைரவி’ படத்தில் பாட்டு கற்றுக்கொள்ளும்போதும் சுலக்‌ஷனா மாடியில் காயப்போட்ட வடாம்பற்றி கவலைப்படுவதுபோல, பணியிடத்திலும் வீட்டைப் பற்றிய நினைவுகளிலேயே நீந்திக்கொண்டு இருப்பார்கள் பெண்கள். மெகா சீரியல்கள் என்ற போர்வையில் வரும் நிகழ்ச்சிகளும்கூட, பெண்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே இழுக்கின்றன. ஆனாலும், பொழுதுபோக்க வேறு வழி இல்லாத நிலையில், பெண்களும் சீரியல்களையே பார்க்கத் தலைப்படுகின்றனர். 

எப்படி வீட்டுக்கு வெளியே ஓர் உலகம் உண்டு என்பதைப் பெண் மனது நம்ப மறுக்கிறதோ, அப்படியே சீரியல்களைத் தாண்டிய நிகழ்ச்சிகளைத் தர நம் ஊடகங்களும் மறுக்கின்றன. அப்படியே வந்தாலும், சமையல், அழகுக் குறிப்புகள் என்று மீண்டும் மீண்டும் ஆணுக்காக ஒரு பெண்ணைத் தயார் செய்வதை மட்டுமே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்ன செய்ய... 'ஆணுக்கு உலகம் எல்லாம் வீடு... பெண்ணுக்கு வீடுதான் உலகம்’ என்று பெண்களையே நம்பவைத்த உலகம்! 

சேலை, சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று சாலைகளில், கோயில்களில், அலுவலகங்களில் எதிர்ப்படும் பெண்கள் விதவிதமானவர்கள். பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவளை எடை போடுவது இன்னமும் சமூக வழக்கமாக இருக்கிறது. பெண்கள் அணியும் உடையே ஈவ் டீஸிங்குக்குக் காரணம் என்று கருதி, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மட்டும் டிரெஸ் கோட் கெடுபிடிகள் அரங்கேறும். ஈவ் டீஸிங்குக்குப் பலியான சரிகா ஷா அணிந்திருந்தது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ்தானே?

பணி நிமித்தம் சொந்த ஊரில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களின் உலகம் பிறர் அறியாதது. இப்படியான ஊர்க் குருவிகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும், அதிகாலையில் எழ வேண்டும். இல்லையென்றால், குளிக்க பாத்ரூம் கிடைப்பதில் துவங்கும் அன்றைய சிக்கல். 

ஒரு சிறிய அறையில் நான்கைந்து கட்டில்கள் ஒட்டி ஒட்டி கிடத்தப்பட்டு இருக்கும். சில ஹாஸ்டல்களில் ரயில் பெர்த்போல படுக்கைகள் மேலும் கீழுமான அடுக்கடுக்காக இருக்கும். தூக்கக் கலக்கத்தில் எழுந்து தலையில் நச்சென்று மோதிக்கொள்வதில் புலரும் பலரின் பொழுதுகள். ஒரு சின்ன ஷெல்ஃபில் அத்தனை பேரின் பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கே வாடகை நான்காயிரத்துச் சொச்சமாக இருக்கும். குருவிக் கூடு அறையில், நான்கைந்து பெண்கள் அவரவர் கனவுகள் அனுமதித்த எல்லைக்குள் உலவிக்கொண்டு இருப்பார்கள்.

விடுதி அறைத் தோழி ஒருத்தியின் அப்பா பல வியாதிகளோடு போராடிக்கொண்டு இருக்கிறார். அம்மாவும் அத்தனை சுகம் இல்லை. இவளுடைய சம்பளம்தான் அந்தக் குடும்பத்தின் ஜீவ நாடி. பெற்றோர் மேல் அத்தனை பாசம் இருந்தாலும், மாதம் ஒரு முறைகூட ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்து வர மாட்டாள்.

விடுதித் தோழிகள் அவளைத் திட்டித் தீர்க்கவும் அதற்கான காரணத்தைக் கம்மல் குரலில் சொன்னாள் ஒருநாள், 'ஒரு தடவை நான் ஊருக்குப் போயிட்டு வந்தா, குறைஞ்சது ஆயிரம் ரூபா ஆகும். அந்தக் காசு மிச்சப்பட்டா, அது அப்பாவுக்கு ஒரு வாரம் மருந்துக்கு ஆகும்ல. நான் அங்கே போய் என்ன அவங்களுக்கு மருத்துவமா பார்க்கப் போறேன்?’

இன்னொரு தோழிக்கு காலை 4 முதல் 9 மணி வரை கால் டாக்ஸி அலுவலகத்தில் பகுதி நேர வேலை. அது முடிந்து அரக்கப் பறக்க ஹாஸ்டலுக்கு வந்து குளித்து அலுவலகம் செல்வாள். மாலை 6 மணிக்குத் திரும்பியதும் மீண்டும் கால் டாக்ஸி அலுவலகத்துக்கு ஓட்டம். இரவு 11 மணிக்கு நிதானமாகச் சாப்பிட்டு, எங்களோடு பேசி நாட்டு நிலவரம் அறிந்துகொண்டு, 12 மணிக்கு படுக்கையில் சாய்வாள். 

அடுத்த நாள் மீண்டும் 4 மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்னரே துடித்தெழுந்து ஓடிக்கொண்டு இருப்பாள். ஒரு முறை, மாதக் கடைசியில் ஹாஸ்டல் வார்டனிடம் விடுதிக் கட்டணத்தை எண்ணிக்கொடுத்துவிட்டு, கையில் மிச்சம் இருந்த பணத்தை வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள். தோள் தொட்டு உலுக்கியதும், ''இந்த ரூவா நோட்டு அத்தனையும் என் வேர்வைப்பா!'' என்றவளின் குரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!


நட்பும் காதலும்தான் பெரும்பாலான பெண்களை உற்சாகமுடன் இயக்கிக்கொண்டு இருக்கிறது. சாலையில் நடந்துகொண்டே இயர்போனில் பேசியபடி செல்லும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். சிலர் திட்டியும் இருப்பீர்கள். கொஞ்சம் அவர்கள் அருகில் சென்று கேட்டுப் பாருங்கள். எவ்வளவுதான் நெருங்கிச் சென்று கேட்டாலும், அவர்கள் பேசுவது உங்கள் காதில் விழாது. அவ்வளவு மெல்லிய குரலில் பேசுவார்கள். 

பெற்றோருடன் வாழும் பெண்ணாக இருந்தாலும், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்ணாக இருந்தாலும், தனியாகப் பேசுவதற்கென பெண்களுக்கு சுதந்திரப் பிரதேசமே கிடையாது. ஆகவே, பலர் அருகில் இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை யாரும் அறியாதவாறு பேச நிர்பந்திக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சியாக அந்த மென் குரல் உரையாடல் கலையைக் கற்றுக்கொண்டது பெண்ணினம்.

ஓர் ஆண், பலர் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு போனில் 'ஐ லவ் யூ’ சொல்வது இங்கே ஃபேஷன். ஆனால், தன் நெருங்கிய தோழியாக இருந்தாலும்கூட, அவள் முன்னே அந்த மூன்று வார்த்தைகளை ஒரு பெண் சொல்ல முடியாத சூழல்!

நெருங்கிய தோழிகளாய் இருந்த எத்தனையோ பெண்கள் திருமணம் முடித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பறுந்து புகுந்த வீட்டில் ஒரு மெஷினாக இயங்கிக்கொண்டு இருக்கும் வாழ்க்கைச் சூழலின் வேதனையை ஒரு நாளேனும் உணர்ந்து இருக்கிறீர்களா? என்றேனும், எங்கேனும், உருவம் மாறி பருமனாகி, கையில் குழந்தையுடன், கவலை ரேகைகள் படர்ந்த முகத்துடன் சந்திக்க நேரும்போது, தோழியைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியைவிட, அவள் உருவம் அளிக்கும் உணர்வு மனதைப் பிசையும். 

'எப்படி இருக்கே?’ என்ற கேள்விக்கு, 'நல்லா இருக்கேன்!’ என்று சம்பிரதாயமாக உதடுகள் சொன்னாலும், காட்டிக்கொடுக்கும் கண்களை என்ன செய்ய முடியும்?

கிண்டி தொழிற்பேட்டை அருகே, ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை, மாலைகளில் சென்னையில் எங்குமே காணக் கிடைக்காத தாவணி அணிந்த பெண்களைக் காண முடியும். எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலர் 9 மணிக்குள் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும். 

10 நிமிடங்கள் தாமதமானாலும்கூட அரை நாள் விடுமுறையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அற்ப சொற்ப சம்பளத்தில் அதுவும் பிடித்தம் செய்யப்படும். அந்த அயோக்கியத்தனத்துக்குப் பயந்து, அந்தப் பெண்கள் காலையில் பேருந்து ஒவ்வொரு ஸ்டேஜைக் கடக்கும்போதும் மணி பார்த்துப் பார்த்து நகத்தைக் கடிக்கும் தவிப்பு நமக்கே பதற்றத்தை உண்டாக்கும். 

ஸ்டேஜ் க்ளோஸிங் என்று பேருந்து ஓரங்கட்டி நிற்க, அழாக்குறையாக அந்தப் பெண்கள், 'அண்ணே... அண்ணே வண்டிய எடுங்கண்ணே! வெளில நிக்க வச்சுருவாங்கண்ணே!’ என்று கெஞ்சிய முகங்களைப் பார்த்தால் எவருக்கும் மனம் கலங்கும். தங்களுக்கு பவுடர், பொட்டு வாங்குவதற்கோ... ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற நவநாகரிக ஆடைகள் வாங்குவதற்கோ அந்தப் பெண்கள் தங்கள் ஆயுளைத் தேய்த்துத் தீய்த்து உழைப்பதில்லை. குடும்பத்தினரின் மூன்று வேளை உணவுக்காகத்தான் இந்தப் பாடு!

பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் இல்லாத பணியிடங்கள் வாய்ப்பது இல்லை. பேருந்தில் உரசும் வக்கிரத்தில் இருந்து அலுவலக ஃபைலுக்கு அடியில் விரல் தடவும் எதேச்சதிகாரம் வரை அனைத்தையும் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண்.

ஓர் ஆண் தன் பணியில் முன்னேறி மேலே சென்றால், அவனது திறமை காரணம் என்று புகழும் உலகம், அதையே ஒரு பெண் சாதித்தால், 'வேறு வழி’யில் சாதித்தாள் என்று புறம் பேசும். தன் உழைப்பில் தன்னைச் சார்ந்தவர்களை வாழவைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற, ஒரு பெண் கடக்க வேண்டிய பாடுகள் சொல்லி மாளாது.

எது எப்படியோ, பெண்களின் வியர்வையும் கண்ணீரும் சமமாகக் கலந்திருக்கும் சமுத்திரத்தின் நீர்தான் ஆவியாகி ஆண்களின் உலகில் மழையாய்ப் பெய்து வளமாக்குகிறது!

85 comments:

குரங்குபெடல் said...

Congrats . . .
For changiging your policy (not insurance)

iam telling about kaniga stills

Thanks

டக்கால்டி said...

என்ன தலைவா திடீர்னு பெண்கள் மீதான மரியாதை கலந்த அக்கறை?

டக்கால்டி said...

ஒண்ணுமே புரியல உலகத்திலே...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

என்ன தலைவா திடீர்னு பெண்கள் மீதான மரியாதை கலந்த அக்கறை?

அடடா.. பிராயசித்தமா ஒரு நல்லது பண்ண விடமாட்டீங்களே..

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

ஒண்ணுமே புரியல உலகத்திலே...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

புரியாத புதிர்?

சி.பி.செந்தில்குமார் said...

>>udhavi iyakkam said...

Congrats . . .
For changiging your policy (not insurance)

iam telling about kaniga stills

Thanks

ஹா ஹா இந்த கட்டுரைக்கு இந்த மாதிரி தான் ஸ்டில் போட முடியும்.. இதுலயும் கவர்ச்சி ஸ்டில் போட்டா கும்மிட மாட்டாங்க>?(ஏற்கனவே வாங்குன அடி.. வலிக்குது.. அவ் அவ்)

Unknown said...

நண்பா உன் பகிர்வுக்கு நன்றி

சாப விமோசனம் பெறுவாயாக!

டக்கால்டி said...

கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க...இன்னிக்கு ஒரு கதை போட்டிருக்கேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நண்பா உன் பகிர்வுக்கு நன்றி

சாப விமோசனம் பெறுவாயாக!


பல்லை கழட்டிடுவேன் ராஸ்கோலு...நான் எப்போய்யா சாபம் வாங்குனேன்?

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க...இன்னிக்கு ஒரு கதை போட்டிருக்கேன்

ஓ.. அன்னைக்கு சொன்னீங்களே அந்த கில்மா கதையா?இன்னைக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே. நாளைக்கு வரட்டா? ஹி ஹி

Unknown said...

ஓ அப்போ அதுக்கு பதிலாத்தான் இதுவா சரி சரி ஹி ஹி!

டக்கால்டி said...

கில்மா? பூஜா கரானா ஹை?!!!

டக்கால்டி said...

என் பதிவில் இன்று எழுதிய கதை அண்ணனின் நிஜ வாழ்வில் நடந்திருக்கும் என்று நம்புகிறேன்...எனவே அவருக்கு எனது நன்றிகள் ஹி ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger டக்கால்டி said...

என் பதிவில் இன்று எழுதிய கதை அண்ணனின் நிஜ வாழ்வில் நடந்திருக்கும் என்று நம்புகிறேன்...எனவே அவருக்கு எனது நன்றிகள் ஹி ஹி...

தக்காளி விக்கியைத்தானே சொன்னீங்க?

டக்கால்டி said...

தக்காளி விக்கியைத்தானே சொன்னீங்க?

March 18, 2011 8:32 AM//

இல்லை இல்லை...ஒரு சூரியன்...ஒரு சந்திரன்..ஒரு சூப்பர் ஸ்டார்..ஒரு சி.பி அண்ணன்

டக்கால்டி said...

எப்படிடோ அழகு கனிகா படம் போட்டதால உங்களை அதிகம் டேமேஜ் பண்ண விரும்பலை...

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

தக்காளி விக்கியைத்தானே சொன்னீங்க?

March 18, 2011 8:32 AM//

இல்லை இல்லை...ஒரு சூரியன்...ஒரு சந்திரன்..ஒரு சூப்பர் ஸ்டார்..ஒரு சி.பி அண்ணன்

திட்டறதுன்னா நேரடியாவே திட்டலாம்.. எதுக்கு இந்த வஞ்சப்புகழ்ச்சி?

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

எப்படிடோ அழகு கனிகா படம் போட்டதால உங்களை அதிகம் டேமேஜ் பண்ண விரும்பலை...

ஏற்கனவே டேமேஜ் ஆன ஆளை இன்னும் எத்தனை பேர்யா டேமேஜ் பண்ணுவீங்க?

டக்கால்டி said...

ஏற்கனவே டேமேஜ் ஆன ஆளை இன்னும் எத்தனை பேர்யா டேமேஜ் பண்ணுவீங்க?

March 18, 2011 8:38 AM//

இது தன்னடக்கமா? இல்லை கலைஞர் மாதிரி ராஜதந்திரமா?ஹி ஹி

டக்கால்டி said...

திட்டறதுன்னா நேரடியாவே திட்டலாம்.. எதுக்கு இந்த வஞ்சப்புகழ்ச்சி?

March 18, 2011 8:37 AM//

ச்சே ச்சே என்னமோ தெரியல உங்களை திட்ட மனசு வரமாட்டேங்குது ஜி...

பாலா said...

சத்திய சோதன.... (கவுண்டர் style)

டக்கால்டி said...

சோ சாட்...சூரியன் நம்மளை சுடாது சூரியன் வெப்பம் தான் நம்மளை சுடும்...
அது போல அண்ணன் பெண்களை பத்தி தப்பா பேச மாட்டாரு...பெண்கள் தான் அண்ணனை தப்பா புரிஞ்சுக்குறாங்க...ஹி ஹி

ப.கந்தசாமி said...

பெண்களின் மனதை நன்கு புரிந்து எழுதியிருக்கிறீர்கள். பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. அதற்குக் காரணம் ஆண்களுடைய கண்ணியக் குறைவுதான். நல்ல அழகு என்பதை "செம கட்டை" என்று சொல்பவர்கள் பண்பில்லாதவர்கள்.
பதிவிற்குப் பாராட்டுகள்.

சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் சார் எழுதுனது நான் இல்லை.. விகடன் கட்டுரை

சி.பி.செந்தில்குமார் said...

பாலா said...

சத்திய சோதன.... (கவுண்டர் style)

நக்கலு?

சி.பி.செந்தில்குமார் said...

>>ச்சே ச்சே என்னமோ தெரியல உங்களை திட்ட மனசு வரமாட்டேங்குது ஜி...

என் பிளாக்ல திட்ட கூச்சமா இருந்தா உங்க பிளாக்ல தனிப்பதிவா போட்டு திட்டுங்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>பெண்கள் தான் அண்ணனை தப்பா புரிஞ்சுக்குறாங்க...ஹி ஹி

பரவால்லை.. டகால்டி நம்மை நல்லா புரிஞ்சு வெச்சிருக்காரு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.ஃஃஃ

உண்மை.. நல்லதொரு பகிர்வு நன்றி சார்.

சக்தி கல்வி மையம் said...

முடிவு டச்சிங்.

வைகை said...

நானும் விகடன் வார வாரம் படிப்பேன்.. இந்த வாரம் இன்னும் படிக்கவில்லை.. கட்டுரையை முந்தி தந்தற்கு நன்றி!

டக்கால்டி said...

பரவால்லை.. டகால்டி நம்மை நல்லா புரிஞ்சு வெச்சிருக்காரு

March 18, 2011 8:47 AM//

ஊரே உங்களை பத்தி நல்ல புரிஞ்சு வெச்சுருக்கு சார்...
(இதை நல்ல முறையில் எடுத்துக்கொள்ளவும்..குதர்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..ஹி ஹி )

சி.பி.செந்தில்குமார் said...

தோழி பிரஷா said...

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.ஃஃஃ

உண்மை.. நல்லதொரு பகிர்வு நன்றி சார்.


நன்றி பிரஷா

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

முடிவு டச்சிங்.

அப்போ ஓப்பனிங் ?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

நானும் விகடன் வார வாரம் படிப்பேன்.. இந்த வாரம் இன்னும் படிக்கவில்லை.. கட்டுரையை முந்தி தந்தற்கு நன்றி!

வைகை மூடு அவுட்ல இருக்கார் போல.. வழக்கமா கும்முவாரு...

உணவு உலகம் said...

கட்டுரை பல பெண்களின், முன்னே சிரித்து பின்னே அழும், வாழ்க்கை சூழலை சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்திடுது. பகிர்விற்கு நன்றி, சார்.

டக்கால்டி said...

அப்போ ஓப்பனிங் ?

March 18, 2011 8:52 AM//

அதான் முடிவுன்னு சொல்லிட்டாருல...அப்புறம் ஏன் நீங்களே கேட்டு மானத்த வாங்கிக்கிறீங்க? ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

ஆனந்தவிகடன்ல இப்படியெல்லாம் கூட சர்வே எடுக்கராங்களா என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஊரே உங்களை பத்தி நல்ல புரிஞ்சு வெச்சுருக்கு சார்...
(இதை நல்ல முறையில் எடுத்துக்கொள்ளவும்..குதர்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..ஹி ஹி )

ஹூம்.. வித் இன் பிராக்கெட்ல அதை போடாம விட்டாக்கூட நம்பி இருப்பேன்

Unknown said...

ஆரம்பம் முதல் முடிவு வரை
......

எங்கள் சிபி அண்ணன் வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

கட்டுரை பல பெண்களின், முன்னே சிரித்து பின்னே அழும், வாழ்க்கை சூழலை சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்திடுது. பகிர்விற்கு நன்றி, சார்.


ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>அதான் முடிவுன்னு சொல்லிட்டாருல...அப்புறம் ஏன் நீங்களே கேட்டு மானத்த வாங்கிக்கிறீங்க? ஹி ஹி

அதுக்கில்ல.. ஒப்பனிங்க் தான் என்னுது..

Unknown said...

கட்டுரை பல பெண்களின், முன்னே சிரித்து பின்னே அழும், வாழ்க்கை சூழலை சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்திடுது. பகிர்விற்கு நன்றி, சார்.
// nanba eppadi sir erukeenga...

சி.பி.செந்தில்குமார் said...

siva said...

ஆரம்பம் முதல் முடிவு வரை
......

எங்கள் சிபி அண்ணன் வாழ்க

இன்னைக்கு சிவா பிளாக்ல போய் 2 மைனஸ் ஓட்டு போட்டுட்டு நைஸா வந்துடனும்.. அப்பத்தான் அண்ணன்னு கூப்பிடமாட்டாப்ல

டக்கால்டி said...

இன்னைக்கு சிவா பிளாக்ல போய் 2 மைனஸ் ஓட்டு போட்டுட்டு நைஸா வந்துடனும்.. அப்பத்தான் அண்ணன்னு கூப்பிடமாட்டாப்ல

March 18, 2011 8:56 AM//

ஒ இது வேறயா அண்ணே..என்னண்ணே நீங்களே இப்படி பண்ணலாமா அண்ணே...

Unknown said...

அட போங்க அண்ணே நாம கடையில கமென்ட் விழாது ..எதில ஓட்டு வேற வேணுமா
ஓட்டு வாங்கி நான் என்ன உங்கள போல முதல்வர ஆகா போறேன்

டக்கால்டி said...

46

டக்கால்டி said...

48

டக்கால்டி said...

49

டக்கால்டி said...

50

டக்கால்டி said...

மீண்டும் வடை

Unknown said...

அதெலாம் முடியாது வடை எனக்கும் செல்வவுக்கும்தான்

உணவு உலகம் said...

siva said...
கட்டுரை பல பெண்களின், முன்னே சிரித்து பின்னே அழும், வாழ்க்கை சூழலை சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்திடுது. பகிர்விற்கு நன்றி, சார்.
// nanba eppadi sir erukeenga...//
நான் நலமே! நீங்கள் நலமா, நண்பரே ? நற, நற, நற,. . . . . . . . . நண்பரே, சி.பி. சார் பல்லை கடிக்கிறார். என் பதிவு பற்றி பேசுங்கன்னா, நண்பா நலமா? நான் நலமே! நீங்கள் நலமா, நண்பரே ? எப்படி இருக்குது உங்களுக்கு? கேட்குதா?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒ இது வேறயா அண்ணே..என்னண்ணே நீங்களே இப்படி பண்ணலாமா அண்ணே..

சும்மா ஜாலிக்கு.. சொல்றவன் செய்ய மாட்டான்.. செய்யறவன் சொல்லமாட்டான்

உணவு உலகம் said...

டக்கால்டி said...
மீண்டும் வடை//
அதென்ன அண்ணனுக்கு ரெண்டாவது ஆட்டமா?

சி.பி.செந்தில்குமார் said...

>>நண்பரே, சி.பி. சார் பல்லை கடிக்கிறார். என் பதிவு பற்றி பேசுங்கன்னா, நண்பா நலமா

ம் இங்கே என்ன நடக்குது?

டக்கால்டி said...

சும்மா ஜாலிக்கு.. சொல்றவன் செய்ய மாட்டான்.. செய்யறவன் சொல்லமாட்டான்

March 18, 2011 9:07 AM//

நான் வார்த்தைக்கு வார்த்தை உங்களை அண்ணன் என்று அழைத்ததை கவனிக்கவும்...முடிஞ்சா வந்து என் தளத்துல மைனஸ் ஒட்டு குத்துங்க ஜி...ஹி ஹி

உணவு உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>நண்பரே, சி.பி. சார் பல்லை கடிக்கிறார். என் பதிவு பற்றி பேசுங்கன்னா, நண்பா நலமா
ம் இங்கே என்ன நடக்குது?//
நல்லதே நடக்குது!நலம் விசாரிப்பு தொடருது.

Unknown said...

அந்த நாள் நியாபகம் வந்ததே நண்பரே நண்பரே ...

மிக்க நலம்

சக்தி கல்வி மையம் said...

என்ன நடக்குது இங்க?

டக்கால்டி said...

வேடந்தாங்கல் - கருன் said...
என்ன நடக்குது இங்க?

March 18, 2011 9:15 AM//

கதக்களி...மலே மலே மலே மலே மலே மருதமலே

Unknown said...

am escape..karuthu cholravanga ellam chollunga samiyooo...

சக்தி கல்வி மையம் said...

டக்கால்டி said...

வேடந்தாங்கல் - கருன் said...
என்ன நடக்குது இங்க?

March 18, 2011 9:15 AM//

கதக்களி...மலே மலே மலே மலே மலே மருதமலே
--- இந்தப் பாட்டுக்குதான் கதகளி ஆடுவாங்களா?

டக்கால்டி said...

இந்தப் பாட்டுக்குதான் கதகளி ஆடுவாங்களா?

March 18, 2011 9:18 AM//

அண்ணனோட தளம் என்பதால் இந்த பாட்டை தான் சொல்ல முடியும்...ஹி ஹி

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

நானும் விகடன் வார வாரம் படிப்பேன்.. இந்த வாரம் இன்னும் படிக்கவில்லை.. கட்டுரையை முந்தி தந்தற்கு நன்றி!

வைகை மூடு அவுட்ல இருக்கார் போல.. வழக்கமா கும்முவாரு...//


நல்லதுக்கு காலமில்லையோ? ஒரு நல்ல பதிவுல நம்ம வேலைய காமிக்க வேண்டாம்னு நினைச்சேன்... ஹி ஹி :))

ராஜி said...

அருமையான பதிவு, பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி!

ராஜி said...

லையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!
///

உண்மையான வரிகள்

ராஜி said...

லையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!
///

உண்மை வரிகள்

சண்முககுமார் said...
This comment has been removed by the author.
சண்முககுமார் said...

பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் இல்லாத பணியிடங்கள் வாய்ப்பது இல்லை. பேருந்தில் உரசும் வக்கிரத்தில் இருந்து அலுவலக ஃபைலுக்கு அடியில் விரல் தடவும் எதேச்சதிகாரம் வரை அனைத்தையும் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண்.


பெண்களின் மனதை நன்கு புரிந்து எழுதியிருக்கிறார்கள் பதிவிற்குப் பாராட்டுகள்

இதையும் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

பெண்களின் மன உணர்வுகளை அப்பட்டமாய்ப் ப்ரதிபலிக்கும் பதிவு..

//''இந்த ரூவா நோட்டு அத்தனையும் என் வேர்வைப்பா!''

'எப்படி இருக்கே?’ என்ற கேள்விக்கு, 'நல்லா இருக்கேன்!’ என்று சம்பிரதாயமாக உதடுகள் சொன்னாலும், காட்டிக்கொடுக்கும் கண்களை என்ன செய்ய முடியும்?
//

வலி மிகுந்த வரிகள்.

உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Mohammed Arafath @ AAA said...

இந்த பதிவு சேற்றில் முளைத்த செந்தாமரை.
அதிக பேர் வரவேண்டும் என்று நடிகைகளை அரை குறை ஆடையோடு போட்டு கேவலமான பப்ளிசிட்டி தேடும் பதிவர்களுக்கு இந்த பதிவு ஒரு செருப்படி. இது கண்டிப்பா யாரோ பெண் மனதை புரிச்சு எழுதி இருகாங்க.. அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

ராஜகோபால் said...

அருமை.

நான் அதிகம் பேசி பழகியது என் அம்மா மட்டும் தான். ஏன்னா நா வீட்டுக்கு ஒரே பையன் எனக்கு காலேஜ் முடிகரவரைக்கும் பெண்களுடன் பழக வாய்ப்பு கிடைக்க வில்லை, நான் முதலில் வேலை பார்த்த சாப்ட்வேர் கம்பனிலதான் வேரு சில பெண்களுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தது, இருந்தும் அவர்களுடன் எப்படி பேசுவது என்று தெரியாத காரணத்தால் அவர்கள் ஏற்கனவே சேய்து முடித்த வேலையில் உண்டாகும் சந்தேகம் கூட கேட்க முடியாமல் போனது, பெண்கள் எப்பொழுதும் ஆண்களை விட திறமைசாலிகள். இப்ப நா இருக்கறது பகரின் இங்க நானே ராஜா நானே மந்திரி அக்கௌன்டன்ட் இப்ப நா ரொம்ப சந்தோசமா இருக்கன்.இப்ப எந்த பொண்ணுகிட்டையும் பேசுனும்ன்னு அவசியம் இல்ல.

இன்னமும் பெண்களுடன் பசுவது எப்படின்னு சொல்லிகுடுக்காத இந்திய சூழ்நிலை உள்ளது வருத்தம் தான்.

Unknown said...

வழி மாறி வந்திட்டனோ?
ஆனா நியாயமான பதிவு.

செங்கோவி said...

என்னே ஒற்றுமை..நான் இன்னைக்கு பிராயச்சித்தமா அவ்வையார் படத்தைப் போட்டுட்டு இங்க வந்தா, தலைவர் ஒரு பதிவே போட்டிருக்காரு..ஏன் தலைவரே இப்போ நம்ம மன்றம் இருக்கா..கலைச்சுட்டீங்களா..உங்களை நம்பித் தான் நாங்க இருக்கோம்.நல்ல ப்திலாச் சொல்லுங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்தக் கட்டுரை உங்களை நிஜமாகவே கவர்ந்ததா? இக்கட்டுரை உங்கள் ப்ளாக் ல வருவதற்கான அவசியம் என்ன என்பது குறித்து சிந்திக்கிறேன்! விகடன் கட்டுரைதான்! அதுக்காக!



ஆனால் பெண்களைப்பற்றி நீங்களாகவே ஒரு பத்து வரி எழுதிப் போட்டிருந்தால், அதனோட அவுட் புட் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம்!



இக்கட்டுரை மூலம் எனக்கு கிடைக்கும் நீதி என்னவென்றால்,



" சி பி செந்தில்குமார் விகடனை விட தரமான கட்டுரை எழுதுவார் "



மன்னிச்சிடுங்க நண்பா!

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ஆச்சி பிளாக் தடம் மாறுது.....
கொலை மிரட்டலா...? இல்லை மிரட்டலே கொலையா...?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்கள் ஒரு கட்டுரை எழுதும் போது, உங்களது ஒவ்வொரு வரிக்கும் கமெண்டு குடுத்திருப்பீங்க! அது பக்கா சூப்பரா இருக்கும்!



உதாரணம்



.நான் 13 ஃபிகர்ங்களோட பேரை வெவ்வேறு ஜோக்ஸ்களில் வர வைத்து ஒரே ஜோக் எழுத்தாளர் அதிக அளவில் ஃபிகர் பெயர்களை வர வைத்தவன் என்ற வரலாற்று சிறப்பை ஏற்படுத்தினேன்..( ஹி ஹி நம்மால இது தான் முடியும்.. ஹி ஹி )



---------

சில வருடங்களுக்குப்பிறகு ஈரோட்ல அந்த பெண்ணை பார்த்தேன்.. ( இப்போ அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. பார்த்தீங்களா? மேரேஜ் ஆனதும் ஃபிகர் பத பிரயோகம் கட் ஆகி பெண் என மாறியதை..? # தமிழன் கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு எப்பவும் மரியாதை குடுப்பான்)



----------------



குறும்பட ஸ்டில்கள் எதுவும் கிடைக்கலை.. என் மெயிலுக்கு அனுப்பி வைங்கன்னு சொன்னதை யாரும் மதிக்கலை..(வழக்கம் போலவே..)அதனால சில குறும்பு பட ஸ்டில்கள்.. ஹி ஹி



-------



அனுஷ்காவை இவ்வளவு கவுரவமா எந்த இணைய தளத்துலயும் இதுவரை காட்டுனதில்லை.. எனவே கண்ணியமான இணைய தளம் என்ற விருதை அட்ரா சக்க தனக்குத்தானே அளித்துகொள்கிறது..இது ரொம்ப கேவலமா இருக்கே என நொந்து கொள்பவர்கள் டாக்டர் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தை நான் ஃபாலோ பண்றேன் என்பதை உணரவும்.. ஹி ஹி



-----------



வழக்கமா சி பி பண்ற விமர்சனம் மாதிரி இல்ல...பக்கத்து சீட் ஃபிகரை பார்த்துட்டு கோட்டை விட்டுட்டாருன்னு யாரும் கமெண்ட் போட்டுடாதீங்க... அது உண்மை இல்லை.. படத்துல அவ்வளவுதான் தேறுச்சு...(அந்த ஃபிகரு தேறாது..ஹி ஹி )



-----------



கிட்டத்தட்ட நிச்சயம் வரை போயிட்டோம். அப்புறம் தான் விதி விளையாடுச்சு.( விதி என்ன ஸ்போர்ட்ஸ்மேனா?) எனக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி (வாய் மட்டுமா?)





------------



இந்த வரிகளில் இருக்கும் சுவாரசியம் விகடன் கட்டுரையில் மிஸ்ஸிங்!



i want ' cp senthilkumar '

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
shanmugavel said...

பகிர்வுக்கு நன்றி

tsekar said...

Super.Touching my heart.

~tsekar

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மனதைத் தொடும் வலி மிகுந்த வரிகள்...! இன்னும் நாம் பெண்களின் சமூக பங்களிப்பை முழுமையாக அங்கீகரிக்காமலேயே இருக்கிறோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெரிகுட் போஸ்ட் சிபி....!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட செந்தில் சார், அருமையான அலசல்


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நான் ஆனந்த விகடனில் இதை நேற்று படித்தேன் நேற்றிலிருந்து என் மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் .