Friday, March 11, 2011

ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்.. ஒரு தரம்.....

http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg 
1. பா.ம.க., தலைவர் மணி: காங்கிரசுக்காக, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்று இரண்டை குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற பேச்சே எழவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 31 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்.

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...

----------------------------------------------
2. தமிழக முதல்வர் கருணாநிதி: காங்கிரஸ், 60 இடங்கள் போதாதென்று, 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

போங்க தலைவரே... உடனே ராஜினாமா பண்ணி கொள்கை வீரர்கள்னு புரூஃப் பண்ணாம இப்படி பெரியம்மா கால்ல விழுந்ததுக்கு போயஸ் அம்மா கிட்டே தோத்தே இருக்கலாம்.

-----------------------------------------------

3. பத்திரிகைச் செய்தி: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியின் வீட்டில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மும்பையிலுள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஹசன் அலியை அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

இப்படியே விசாரனை பண்ணீட்டே இருங்க.. ஆனா தண்டனை மட்டும் குடுத்துடாதீங்க... எனக்கென்னவோ பேரம் தான் நடக்குதுன்னு நினைக்கறேன்.

---------------------------------------------
 http://deco-00.slide.com/r/1/3/dl/pKkYxdFD4z81a9OrA6EbCElNZXftEwuJ/watermark
4. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி:இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் உட்காரப் போவதில்லை; அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆசை தி.மு.க.,விற்குத்தான் உள்ளது. கூட்டணிக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்து மிரட்டல் விடுத்தது என சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..

------------------------------------------



5. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என, ஆறு மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினேன். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என, பல கட்சியினரும் நினைக்கின்றனர். இது சரியல்ல; நாட்டு நலனுக்கும் நல்லது அல்ல.

நாட்டு நலனுக்கு நல்லதில்லைன்னு பார்த்தா திராவிடக்கட்சிகள் தலை முழுகப்படனும், கவர்னர் ஆட்சி வரனும்.. அதெல்லாம் முடியுமா? நடக்கறதை பேசுங்க..

------------------------------------


6. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபட்டு பெண்கள் சொந்த காலில் நின்றால், சமுதாயத்தை பிடித்துள்ள வரதட்சணை நோய், பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளில் இருந்து மகளிருக்கு விடிவு பிறக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கட்டாய கல்வியும், கட்டாய வேலை வாய்ப்பும் கிடைக்க அனைவரும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும்.

இது மகளிர் தின அறிக்கை மாதிரி தெரியலயே.. அய்யா கூட இருந்துக்கிட்டே அம்மா கூட கூட்டணி போட அச்சாரம் மாதிரி தெரியுது..?

------------------------------------------------------
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
7.அ.தி.மு.க., மகளிரணி செயலர் கோகுல இந்திரா பேச்சு: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருவர். அப்போது அவர்களிடம், "இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரும். அதனால், 99 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம்; அதை கொடுக்க வேண்டும்' என, கேட்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும்.

அம்மா வந்ததும்  அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..?

------------------------------------------------

8. பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் பேட்டி: பல முனை மாற்று வரியில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படாது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, 100 டாலருக்கு மேல் இருந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களின்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. உணவுப் பொருட்களின் விலை இம்மாதத்தில் குறையும்.

எங்களுக்குக்கூட காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவது கவலை அளிப்பதாகத்தான் உள்ளது..
---------------------------------------------------------

9. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருவரும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஆண் - பெண் உறவு, நட்பின் அடிப்படையில் அமையும் போது, வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். அரசியலிலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.

எப்படியோ  அம்மாவுக்கு அடிமை ஆகீட்டீங்க..25 சீட் தக்கி முக்கி ஜெயிச்சுட்டா அம்மா மதிப்பாங்க.. இல்லைன்னா போட்டு மிதிப்பாங்க...

--------------------------------------

டிஸ்கி -1 : நடிகை ஃபோட்டோ இல்லாததால் எங்கே சி பி திருந்தீட்டானோ என யாரும் அதிர்ச்சி அடைய வேணாம்.கோதுமை அல்வாவை டெயிலி சாப்பிட்டுட்டே இருந்தா திகட்டும்.. நாம என்ன பண்ணுவோம்.. கொஞ்சம் காரக்கடலை சாப்பிட்டு நாக்குக்கு காரத்தன்மை கொடுத்து அப்புறம் மறு படி ஸ்வீட் சாப்பிடுவோம்.. அது மாதிரி தான்..

டிஸ்கி 2  - சி பி நடிகைகளை கோதுமை அல்வா என கூறிவிட்டான் என போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கு,  ... எதுக்கு சிரமப்படறீங்க..இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணுனா அப்பவே மன்னிப்பு கேட்டுடறதா முடிவு பண்ணிட்டேன்.. யாருக்கும் சிரமம் வைக்ககூடாது.. சோ எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. ஹி ஹி(  நாகேஷ் என்னை மன்னிச்சிடுங்க ஹி ஹி )

53 comments:

தமிழ் 007 said...

வடை..

சக்தி கல்வி மையம் said...

ஆகா... வந்துட்டாங்கய்யா..

சி.பி.செந்தில்குமார் said...

மங்களகரமா என் பிளாக்ல தமிழ் முதல்ல வந்தது சந்தோஷம்.. இதே மாதிரி தமிழனும் எல்லா விஷயத்துலயும் முன்னணிக்கு வந்தா தேவலை...

தமிழ் 007 said...

//ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்.. ஒரு தரம்.....//

இந்த ரேட்டு நமக்கு கட்டாதுங்க சாமி. உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ஒரே விலை 25000 ஆயிரம். இப்பவெல்லாம் ரொம்ப டிமாண்ட் சாமி ஓட்டுக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

ஆகா... வந்துட்டாங்கய்யா..

ஆஹா .. கருண்.. ஃபீனிக்ஸ் பறவை ஆகீட்டீங்க போல,...

சி.பி.செந்தில்குமார் said...

>தமிழ் 007 said...

//ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்.. ஒரு தரம்.....//

இந்த ரேட்டு நமக்கு கட்டாதுங்க சாமி. உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ஒரே விலை 25000 ஆயிரம். இப்பவெல்லாம் ரொம்ப டிமாண்ட் சாமி ஓட்டுக்கு.

கொடுப்பவர்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள்.. ஆனால் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள்( தமிழனுக்கு நன்றி உணர்ச்சி ஜாஸ்தி.. அதான் பயம்..)

சக்தி கல்வி மையம் said...

நண்பா.. என்னுடைய பிளாக்கை அழிச்சா இவனுங்களுக்கென்ன ஒரு சந்தோஷம்..

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

நண்பா.. என்னுடைய பிளாக்கை அழிச்சா இவனுங்களுக்கென்ன ஒரு சந்தோஷம்..

கருண்.. தமிழன் எப்பவும் ரேஸ்ல வேகமா ஓடி ஜெயிக்க நினைக்கறதை விட , தன்னை விட வேகமா ஓடறவனை காலை வாரி விட்டு தான் முன்னேற நினைப்பான்..

டக்கால்டி said...

கருண்.. தமிழன் எப்பவும் ரேஸ்ல வேகமா ஓடி ஜெயிக்க நினைக்கறதை விட , தன்னை விட வேகமா ஓடறவனை காலை வாரி விட்டு தான் முன்னேற நினைப்பான்..

March 11, 2011 9:04 AM//

:-)
Absolutely...Tamilnandu story...

Unknown said...

ஓகே ஓகே

டக்கால்டி said...

ஓகே ஓகே//

யோவ் இன்னிக்கு எதுவும் புதுசா எழுத காணோம்?

Thirumalai Kandasami said...

அம்மா வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை இப்பவே மதிக்க மாட்டேன் என்கிறது..ஒரு வேலை மதிமுக தனியாக நின்றால் ,,எதிர்ப்பு ஓட்டுகள் எல்லாம் தனியாக பிரிந்து ,அம்மாவுக்கு மறுபடியும் ...இந்த அம்மாவுக்கு தலைக்கனம் ரொம்ப அதிகம்..கூடவே இருக்கும் வைகோவை மதிக்காதது விரக்தியை கொடுக்கிறது ...இதை நம்பி எப்படி ஒட்டு போடுவது..அதிமுக வுக்கு இப்பவே ஒரு வோட்டு காலி(நான் தான்,நேத்து தான் முடிவை மாத்தினேன்,,தொகுதி பங்கீடை பொறுத்து மறுபடியும் மாறலாம்) ..வெளங்கிடும்..அதிமுக வை அழிக்க அம்மா போதும்..ச்சே .

சி.பி.செந்தில்குமார் said...

>>Thirumalai Kandasami said...

அம்மா வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை இப்பவே மதிக்க மாட்டேன் என்கிறது..ஒரு வேலை மதிமுக தனியாக நின்றால் ,,எதிர்ப்பு ஓட்டுகள் எல்லாம் தனியாக பிரிந்து ,அம்மாவுக்கு மறுபடியும் ...இந்த அம்மாவுக்கு தலைக்கனம் ரொம்ப அதிகம்..கூடவே இருக்கும் வைகோவை மதிக்காதது விரக்தியை கொடுக்கிறது ...இதை நம்பி எப்படி ஒட்டு போடுவது

உண்மைதான்.. கூட்டணிக்கட்சித்தலைவர்களை மதிக்க வேண்டும்.. அம்மாவுக்கு அடுத்தவங்களை மதிக்கவே தெரியாது.. பாவம்

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

ஓகே ஓகே//

யோவ் இன்னிக்கு எதுவும் புதுசா எழுத காணோம்?

மேட்டர் தெரியாதா? அவர் ஆஃபீஸ்ல புதுசா ஒரு ஃபிகர் சேர்ந்திருக்காம்.. அதுக்கு தொழில் கத்துக்குடுக்கறாராம்.. தக்காளி பிஸி.. காலைலயே சொல்லீட்டார்

காங்கேயம் P.நந்தகுமார் said...

இன்றைய நாட்டு நடப்புகளுக்கு சரியான கருத்துக்கூறிய சி.பி.அண்ணன் வரும்2016 ல் தமிழகத்தின் முதல்வர். அப்போ நான் அங்கே அல்லக்கை

THOPPITHOPPI said...

//அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..//

நச்

சி.பி.செந்தில்குமார் said...

>>பி.நந்தகுமார் said...

இன்றைய நாட்டு நடப்புகளுக்கு சரியான கருத்துக்கூறிய சி.பி.அண்ணன் வரும்2016 ல் தமிழகத்தின் முதல்வர். அப்போ நான் அங்கே அல்லக்கை

என் வீட்டுக்கு ஆட்டோ வரனும்.. நான் அடி வாங்கனும்.. அதானே உங்க ஆசை..? ஒரே ஊர்க்காரரே இப்படி நினைச்சா நான் என்ன பண்ரது..? அவ் அவ்

Unknown said...

மச்சி இன்னிக்கி அந்த பிகரு இங்க வந்து இருக்குல்ல ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>THOPPITHOPPI said...

//அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..//

நச்

ரிச்

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

மச்சி இன்னிக்கி அந்த பிகரு இங்க வந்து இருக்குல்ல ஹி ஹி

இடம் சுட்டி ஃபிகர் விளக்கவும்

Anonymous said...

மதிப்பாங்க... அல்லது மிதிப்பாங்கா...
இந்த பதிவை மதிக்கிறோம்...

சி.பி.செந்தில்குமார் said...

>>"குறட்டை " புலி said...

மதிப்பாங்க... அல்லது மிதிப்பாங்கா...
இந்த பதிவை மதிக்கிறோம்...

தொடர்ந்து வரவும் என நிபந்தனை விதிக்கிறோம்

Unknown said...

உன் கூட கூட்டணி வச்சதால என் தளம் பக்கம் பெண் பதிவர்களே வரம்மாட்டேங்குறாங்க மச்சி ஹிஹி!

Unknown said...

நீங்க ஒரு பேடு பாயாம் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@ vikki

ஹா ஹா நல்லா வேணும்
எனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்க கூடாது..# தமிழன் பாலிஸி

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

நீங்க ஒரு பேடு பாயாம் ஹி ஹி

ம் ம் மஹாநதில கமல் சொல்ற டயலாக் தான் நினைவு வருது

Unknown said...

//அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..//

விளங்கினா சரி....ஆனா விளங்குதில்லையே பாஸ்

Unknown said...

//அம்மா வந்ததும் அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..//
ஹிஹி யார் வந்தாலும் அதே!!!

சி.பி.செந்தில்குமார் said...

சிவ சிவா

Unknown said...

//கொஞ்சம் காரக்கடலை சாப்பிட்டு நாக்குக்கு காரத்தன்மை கொடுத்து அப்புறம் மறு படி ஸ்வீட் சாப்பிடுவோம்.. அது மாதிரி தான்..
//
அப்போ...............................?????????
அடுத்த பதிவு எப்படி வரும்னு ஒரு கணக்கு போட்டுகிட்டம்...


இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_11.html

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

நீங்க ஒரு பேடு பாயாம் ஹி ஹி

ம் ம் மஹாநதில கமல் சொல்ற டயலாக் தான் நினைவு வருது//

அதுல டயலாக்கெல்லாம் இருக்கா? அத எவன் பாத்தான்? :))

வைகை said...

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...//

இது நீங்க எப்ப எழுதுயது? அதான் புடுங்கி ரெண்டு நாளாச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

கமல் ரசிகர்கள் வைகையை எனக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.. ஹி ஹி

வைகை said...

காங்கிரஸ், 60 இடங்கள் போதாதென்று, 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்//

எங்கள் தன்மான சிங்கம்..சுயமரியாத சுண்ணாம்பு கேட்டார்ல..கேட்டார்ல? (என்னது?...கால்ல விழுந்துட்டாரா?) அவ்வ்வ்வவ்..

சி.பி.செந்தில்குமார் said...

>>வைகை said...

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...//

இது நீங்க எப்ப எழுதுயது? அதான் புடுங்கி ரெண்டு நாளாச்சே?

இப்ப எழுதுனதுதான்.. பொறுத்திருந்து பாருங்க..

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
கமல் ரசிகர்கள் வைகையை எனக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.. ஹி ஹி//

பாஸ்..பாஸ்..எனக்கு ரெண்டு மைனஸ் வோட்டு போடசொல்லுங்க பாஸ்.. நானும் பிரபலமாயிக்கிறேன் :))

Unknown said...

ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி பேடு பாயி கூட கூட்டணி அமைக்க வச்ச...............செல்லாது செல்லாது

சி.பி.செந்தில்குமார் said...

>>வைகை said...

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...//

இது நீங்க எப்ப எழுதுயது? அதான் புடுங்கி ரெண்டு நாளாச்சே?

இப்ப எழுதுனதுதான்.. பொறுத்திருந்து பாருங்க..

March 11, 2011 10:07 AM
Delete
Blogger வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
கமல் ரசிகர்கள் வைகையை எனக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.. ஹி ஹி//

பாஸ்..பாஸ்..எனக்கு ரெண்டு மைனஸ் வோட்டு போடசொல்லுங்க பாஸ்.. நானும் பிரபலமாயிக்கிறேன்

என்னா ஒரு வில்லத்தனம்?

சி.பி.செந்தில்குமார் said...

??>>விக்கி உலகம் said...

ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி பேடு பாயி கூட கூட்டணி அமைக்க வச்ச...............செல்லாது செல்லாது

விக்கி இன்று பதிவிடாதது ஏன்? ஆஃபீசில் நடந்த மர்மம் என்ன?பதிவுலகம் அதிர்ச்சி

Unknown said...

மச்சி சொல்லிடாத சொல்லிடாத படுவா பிச்சி புடுவேன்!

Speed Master said...

இந்த பதிவை சி பி தான் எழுதியதா
ஒரு போட்டாவும் இல்லையே


////
அம்மா வந்ததும் அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..?////////


ஹி ஹி

Anonymous said...

சி பி நடிகைகளை கோதுமை அல்வா என கூறிவிட்டான் என போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கு,//யாரும் ஒண்ணும் சொல்லலை பேசாம அடுத்த பதிவை ரெடி பண்ணுங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

present sir

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நடிகைகளின் படம் இல்லா போஸ்டு! - இதை

நல்லதென்று சொல்லாவிட்டால்( நீ ) வேஸ்டு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அழகாக இருக்காளே கி பி - எனக்கிந்த

அரசியலே புரியலையே சி பி!





கி பி என்றால் - கிறிஸ்தோபர் பிலோமினா!

யார் அவள் ?

யாருக்குத்தெரியும் ?

நமக்கு அதுவா முக்கியம்!

கவிதை நல்லா இருக்கா? இல்லையா?

செங்கோவி said...

அடுத்தவங்களைக் குறை சொல்றதே தலைக்கு வேலையாப் போச்சு..நாங்களும் தான் உங்களுக்கு தமிழ்மணத்திலயும், இண்ட்லிலயும் ஓட்டு போடுறோம்..ஒரு ஓட்டுக்கு 100 ரூபான்னக் கூட இன்னேரம் 10,000 தேறியிருக்குமே..

MANO நாஞ்சில் மனோ said...

//அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..//

சரியாக சொன்னீர் மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//ப்படியோ அம்மாவுக்கு அடிமை ஆகீட்டீங்க..25 சீட் தக்கி முக்கி ஜெயிச்சுட்டா அம்மா மதிப்பாங்க.. இல்லைன்னா போட்டு மிதிப்பாங்க...//

நாங்க ஒரு ஆப் அடிச்சிட்டு தெம்பா நிப்போமுல்ல...

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி -1 : நடிகை ஃபோட்டோ இல்லாததால் எங்கே சி பி திருந்தீட்டானோ என யாரும் அதிர்ச்சி அடைய வேணாம்.//

சத்தியமா நீ திருந்த மாட்டலேய் மக்கா ஹே ஹே ஹே ஹே.....
செந்திலா கொக்கா....

தமிழ்க்காதலன் said...

அன்பு சி.பி, தலைகளை உருட்டி பகடை ஆடி இருக்கீங்க... சரி. சரியான முடிவு சொல்லாம விட்டுடீங்களே. நமக்கு எரியற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி அப்படிங்கற நிலைதான். விரைவா மாற்றம் வர பாடுபடுவோம்.

Unknown said...

//3. பத்திரிகைச் செய்தி: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியின் வீட்டில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மும்பையிலுள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஹசன் அலியை அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

இப்படியே விசாரனை பண்ணீட்டே இருங்க.. ஆனா தண்டனை மட்டும் குடுத்துடாதீங்க... எனக்கென்னவோ பேரம் தான் நடக்குதுன்னு நினைக்கறேன்.//
இப்பதான் times now ல நியூஸ் பார்த்தேன் bailல வெளியிலேயே வந்தாச்சு !
எனக்கென்னமோ வீரப்பன் கதை போலத் தோணுது CPS !

ஹேமா said...

சிபி...கார்ட்டூன்களே கதை சொல்கிறது.வரைந்தவர் மதி என்றிருக்கிறது.உங்கள் தெரிவில் வரைகிறாரா?அல்லது நீங்களேதானா ?கார்ட்டூன் கீறியவருக்கு பாராட்டுக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி ஹேமா..அது நான் வரைந்ததில்லை.. தினமணியில் மதி வரைந்தது..