Showing posts with label CAPTAIN.JEYALALITHA. Show all posts
Showing posts with label CAPTAIN.JEYALALITHA. Show all posts

Thursday, March 17, 2011

ஆணவத்தால் ஆடிய ஆரணங்கே... தனக்குத்தானே ஊதிக்கொண்டீர்கள் சங்கே

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands.jpg 

அரசியலில் புதுத்திருப்பம்.வை கோவை அவமானப்படுத்திய அம்மா பாடம் கற்க வேண்டிய தருணம் வந்து விட்டது.3 வது அணி உருவானால் கலைஞருக்கு கொண்டாட்டம். தமிழனுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சு.எம்ஜிஆரையே மதிக்காதவர் தான் இந்த ஜெ.கூட்டணிக்கட்சித்தலைவர்களை இவரைப்போல் கேவலப்படுத்தியவர்கள் யாரும் இலர்..

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன்: தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் போவதாக திரிணமுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் துறையினருடன், எதிர்க்கட்சியினர் தொடர்பு வைத்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வளவுதானா? நான் கூட நீரா ராடியா கூட வர்த்தகத்தொடர்போன்னு நினைச்சு பயந்துட்டேன்.. 

--------------------------------------------------
 
2. சர்வதேச ஆடிட்டிங் நிறுவனமான கேபிஎம்ஜி: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் நம்பகத்தன்மை, குறிப்பாக சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் பதட்ட சூழலை உருவாக்கியுள்ளது.

அப்போ 2 வருஷத்துக்கு  முன்னால மட்டும் இவனுங்க யோக்கியமா நடந்திருப்பாங்கன்னு அர்த்தம் இல்லை.. அப்போ வெளில தெரியலை. இப்போ வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு.. அவ்வளவுதான்
-----------------------------------------------


3. இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: காங்., - தி.மு.க., கூட்டணியின் தவறான கொள்கைகளை முறியடிக்கும் வகையில், அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி, மக்கள் ஆதரவு பெற்ற மகத்தான கூட்டணி.

எங்கே.. அம்மா இந்த  வை கோவை கேவலப்படுத்தி ஆப்பு வெச்சுக்கிட்டாங்களே..3வது அணி உருவானா அம்மாவுக்கு சங்கு... கலைஞருக்கு நுங்கு.

----------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg?w=480&h=654
4. தமிழக காங்., தலைவர் தங்கபாலு: கடந்த தேர்தலில் நாங்கள் 48 இடங்களில் போட்டியிட்டோம்; தற்போது, 63 இடங்களில் போட்டியிடுகிறோம். 2004 லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணியில், 10 தொகுதிகளில் போட்டியிட்டோம்; 2009 லோக்சபா தேர்தலில், 16 இடங்களைப் பெற்றோம். இப்படி, காங்கிரசுக்கு முன்னேற்றம் ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆமாமா.. செம முன்னேற்றம் தான்.. அப்பவெல்லாம் காங்கிரஸ்ல 4 கோஷ்டிதான் இருந்தது.. இப்போ 32 கோஷ்டி இருக்கே.. கட்சி எம்பூட்டு வளர்ந்திருக்கு...

----------------------------------------

5. தி.மு.க., செய்தித் தொடர்பாளர் இளங்கோவன்: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளைப் பகிர்ந்துள்ளது, புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தொகுதிகள் பற்றிய புதிய நிலவரத்தை அறியவும், இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. லாப, நஷ்ட கணக்கில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளவில்லை; விட்டுக் கொடுத்து தொகுதிகளைப் பிரித்துக் கொண்டுள்ளோம்.

அண்ணே.. விட்டுக்குடுத்துன்னு மொட்டையா சொன்னா மக்களுக்கு என்ன புரியும்? தன்மானத்தை விட்டுக்குடுத்துன்னு விளக்கமா சொல்லுங்க...

---------------------------------

6. நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்: அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தியதில், நாங்கள் கோரிய தொகுதிகளைக் கொடுக்க அவர்களுக்கு மனமில்லாதது தெரிந்தது; அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதே சுயமரியாதைக்கு ஏற்றதென முடிவெடுக்கப்பட்டது; இதனால், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து எங்கள் கட்சி விலகிக் கொள்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா படம் தான் உங்க மாஸ்டர் பீஸ் காமெடின்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க.. இப்போ இந்த பேட்டியால அந்த ரெக்கார்டையே உடைச்சுட்டீங்க..மானங்கெட்டுப்போய் 3 சீட் கேட்டிருப்பீங்க.. அந்தம்மா ஒரு சீட் மட்டும் தர்றேன்னு கேவலப்படுத்தி இருக்கும்..

----------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/ramados-jayalalitha.jpg
7. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: பா.ஜ., ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் குறுகிய காலத்தில், மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அப்படியொரு வளர்ச்சியை, தமிழகத்தில் கொண்டு வர பா.ஜ., பாடுபடும் என்பதால், தேர்தலில் எங்களுக்கு உறுதியான வெற்றி கிடைக்கும். குறுகிய காலத்திற்குள், தமிழகத்தை ஆளும் நிலையை அடைவோம்.

குறுகிய காலம்னா எவ்வளவு ? குத்து மதிப்பா 2000 வருஷம் ஆகுமா?

----------------------------------

8. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் பேட்டி: தேர்தலில், எல்லா விதிமுறை மீறல்களுமே கைது செய்யக் கூடியவை அல்ல. வன்முறையில் ஈடுபடுவது மாதிரியான சில வகை மீறல்களுக்குத்தான் வழக்கு தொடரப்படுகிறது. அந்த வழக்கு விசாரணை முடிய வெகு நாட்களாகக் கூடும். அதில், தேர்தல் கமிஷன் தலையிட முடியாது.

விதியை மீறல்னாலே அது குற்றம் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் சட்டம் இயற்றனும்?

---------------------------------------------

9. தமிழக தலைமைத் தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி: ஒரு ஓட்டை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், ஓட்டை சரியாகப் பயன்படுத்தாத நாம் தான் அதற்குப் பொறுப்பு.

பேசாம ஆட்சியில் பங்குன்னு கூட்டணிக்கட்சிகள் நெருக்கற மாதிரி ஊழலில் பங்குன்னு வாக்காளர்களும் பாண்ட் பேப்பர்ல அரசியல் வாதிகளோட ஒரு ஒப்பந்தம் போட்றலாமா?

-----------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI1_DtXARCcMSIp11ALSXgifyAozubfEpUph0V2LZ4VIRPPF79fCRufFxo0fXLK-nHoyA4doPTc1p_SPlL7KIrr-rFts6KiawvZYLPgduH464U-MFFJPeLU0-4m69pGYEqZCuEl_bQkes/s1600/njk.jpg
10. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் தாவூத் மியாகான் பேட்டி: கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணிக்கு கொடுத்த ஆதரவை ரத்து செய்து, அடுத்த கட்டமாக அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

அம்மா மட்டும் அப்படியே உங்களை மதிச்சு சோபால உட்கார வெச்சுட்டாலும்..

----------------------------------------

11. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி: "ஸ்பெக்ட்ரம்' பற்றி தொழில் நுட்ப ரீதியாகத் தெரியாவிட்டாலும், அதிகளவு பணத்தை கொள்ளையடித்து விட்டனர் என மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப, விலைவாசி ஒன்றே போதும். இவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்களால் கட்சிக்காரர்கள் தான் பயனடைந்துள்ளனர்.

வேற யார் பயனடையனும்னு எதிர்பார்க்கறீங்க..?  கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறாங்க.. உங்களுக்கு எல்லாம் ஒரு பங்கா குடுக்க முடியும்?

Friday, March 11, 2011

ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்.. ஒரு தரம்.....

http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg 
1. பா.ம.க., தலைவர் மணி: காங்கிரசுக்காக, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்று இரண்டை குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற பேச்சே எழவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 31 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்.

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...

----------------------------------------------
2. தமிழக முதல்வர் கருணாநிதி: காங்கிரஸ், 60 இடங்கள் போதாதென்று, 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

போங்க தலைவரே... உடனே ராஜினாமா பண்ணி கொள்கை வீரர்கள்னு புரூஃப் பண்ணாம இப்படி பெரியம்மா கால்ல விழுந்ததுக்கு போயஸ் அம்மா கிட்டே தோத்தே இருக்கலாம்.

-----------------------------------------------

3. பத்திரிகைச் செய்தி: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியின் வீட்டில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மும்பையிலுள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஹசன் அலியை அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

இப்படியே விசாரனை பண்ணீட்டே இருங்க.. ஆனா தண்டனை மட்டும் குடுத்துடாதீங்க... எனக்கென்னவோ பேரம் தான் நடக்குதுன்னு நினைக்கறேன்.

---------------------------------------------
 http://deco-00.slide.com/r/1/3/dl/pKkYxdFD4z81a9OrA6EbCElNZXftEwuJ/watermark
4. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி:இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் உட்காரப் போவதில்லை; அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆசை தி.மு.க.,விற்குத்தான் உள்ளது. கூட்டணிக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்து மிரட்டல் விடுத்தது என சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..

------------------------------------------



5. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என, ஆறு மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினேன். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என, பல கட்சியினரும் நினைக்கின்றனர். இது சரியல்ல; நாட்டு நலனுக்கும் நல்லது அல்ல.

நாட்டு நலனுக்கு நல்லதில்லைன்னு பார்த்தா திராவிடக்கட்சிகள் தலை முழுகப்படனும், கவர்னர் ஆட்சி வரனும்.. அதெல்லாம் முடியுமா? நடக்கறதை பேசுங்க..

------------------------------------


6. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபட்டு பெண்கள் சொந்த காலில் நின்றால், சமுதாயத்தை பிடித்துள்ள வரதட்சணை நோய், பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளில் இருந்து மகளிருக்கு விடிவு பிறக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கட்டாய கல்வியும், கட்டாய வேலை வாய்ப்பும் கிடைக்க அனைவரும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும்.

இது மகளிர் தின அறிக்கை மாதிரி தெரியலயே.. அய்யா கூட இருந்துக்கிட்டே அம்மா கூட கூட்டணி போட அச்சாரம் மாதிரி தெரியுது..?

------------------------------------------------------
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
7.அ.தி.மு.க., மகளிரணி செயலர் கோகுல இந்திரா பேச்சு: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருவர். அப்போது அவர்களிடம், "இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரும். அதனால், 99 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம்; அதை கொடுக்க வேண்டும்' என, கேட்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும்.

அம்மா வந்ததும்  அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..?

------------------------------------------------

8. பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் பேட்டி: பல முனை மாற்று வரியில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படாது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, 100 டாலருக்கு மேல் இருந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களின்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. உணவுப் பொருட்களின் விலை இம்மாதத்தில் குறையும்.

எங்களுக்குக்கூட காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவது கவலை அளிப்பதாகத்தான் உள்ளது..
---------------------------------------------------------

9. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருவரும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஆண் - பெண் உறவு, நட்பின் அடிப்படையில் அமையும் போது, வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். அரசியலிலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.

எப்படியோ  அம்மாவுக்கு அடிமை ஆகீட்டீங்க..25 சீட் தக்கி முக்கி ஜெயிச்சுட்டா அம்மா மதிப்பாங்க.. இல்லைன்னா போட்டு மிதிப்பாங்க...

--------------------------------------

டிஸ்கி -1 : நடிகை ஃபோட்டோ இல்லாததால் எங்கே சி பி திருந்தீட்டானோ என யாரும் அதிர்ச்சி அடைய வேணாம்.கோதுமை அல்வாவை டெயிலி சாப்பிட்டுட்டே இருந்தா திகட்டும்.. நாம என்ன பண்ணுவோம்.. கொஞ்சம் காரக்கடலை சாப்பிட்டு நாக்குக்கு காரத்தன்மை கொடுத்து அப்புறம் மறு படி ஸ்வீட் சாப்பிடுவோம்.. அது மாதிரி தான்..

டிஸ்கி 2  - சி பி நடிகைகளை கோதுமை அல்வா என கூறிவிட்டான் என போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கு,  ... எதுக்கு சிரமப்படறீங்க..இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணுனா அப்பவே மன்னிப்பு கேட்டுடறதா முடிவு பண்ணிட்டேன்.. யாருக்கும் சிரமம் வைக்ககூடாது.. சோ எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. ஹி ஹி(  நாகேஷ் என்னை மன்னிச்சிடுங்க ஹி ஹி )