Tuesday, March 29, 2011

2 ஜி ஊழலை வைத்து பாமர மக்களை ஏமாற்ற முடியாது - கலைஞர் பரபரப்பு பேட்டி

http://aakayam.files.wordpress.com/2010/05/p42.jpg 

மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவினர் ஒருமனதாக ஏற்பார்களா.. தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமையுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

 
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, சிஎன்என் ஐபிஎன் செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

 கூட்டணி தொடருமா?

1. 'தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?'

"அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் காங்கிரஸும், தமிழக அளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.


கருத்து மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம். அதாவது திட்டங்கள் தமிழகத்துக்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல
 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/DMK/kk.jpg

2. இந்தத் தேர்தலில் திமுக முன்பை விட குறைந்த இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியும் அமையும் என எடுத்துக்கொள்ளலாமா?

"அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
 

மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து, இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் மற்றும் வலதுசாரி கட்சிகள் எல்லாம் இடம்பெற்று அவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள். 


அதைப் போல நாம் நம்புகிறேன், எண்ணுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருவேளை வோட்டிங் பேட்டன் என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEFWi8FjQK7IBzwutFtXcbwu0jzyfQvjGZzCOGtclejXmE6Ckabz4vTsiu1IS-8oQSl_fOkmE5GJRVUPGPes_BcpsjEPblZr7gFbZJKmlGJ7tIXuxrHAEQQ-8yjvMwiVSI68i9PZCjOEM/s400/thamalachi5.jpg
அரசியல் வாரிசு... 

3. "நீங்கள் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறீர்கள். உங்கள் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?"  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
"எந்தக் கேள்விக்குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அண்ணா தலைமையில் ஓர் அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணாவால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை,"


4. "கட்சியில் உள்ள அனைவரும் ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வார்களா?"

"திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது, மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது.

மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத நிறுவனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg
குடும்ப அரசியல்...

5. குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எனக்கு குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை, என்னைப் புரிந்த வர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார் - யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNwmT9eeXLTQr9A7es5yrhwXzHw6nPvrB60VCWy7cs-ULUa__geGN8cwv5EltixuQWNn-jYEw2jdAniAiVgzeWUVQREFc-HsrjfIyNILsXSCB1OPoeTI1L7Bgvful1isw3VoI12xegOc8/s1600/kanimozhi2.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம்... 

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாகத்திடமும் விசாரிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்கட்சிகள் கூறுவது குறித்து?

"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.


இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை," 
 http://www.alaikal.com/news/wp-content/stalin-ma.jpg
7. 2ஜி விவகாரத்தால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதா?

 சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்,

41 comments:

Unknown said...

இன்னுமாய்யா இந்த சனம் என்ன நம்புது ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

நிரந்தர முதல்வர்யா

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால வடை மிஸ்ஸாகிருச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது நீராராடியா கிழவி ஆயிட்டான்களா....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது நீராராடியா கிழவி ஆயிட்டான்களா....

அடப்பாவி மனோ.. அதையும் விட்டு வைக்கும் ஐடியா இல்லையா?

MANO நாஞ்சில் மனோ said...

//எந்தக் கேள்விக்குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின்.///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Unknown said...

அடப்பாவமே ஒரு குயந்த மனசு மனுஷன் அழவச்சி பாக்குறாங்களே இந்த வயசுல!

சக்தி கல்வி மையம் said...

நாங்களும் இரங்கிட்டோமில்ல..

சக்தி கல்வி மையம் said...

பதிவு போட்டு எங்கய்யா போன?

அஞ்சா சிங்கம் said...

பாவம்யா அவரு வெறும் ரெண்டே ரெண்டு குடும்பம் தான் வச்சிருக்காரு . அது பொறுக்கலை எதிர்கட்சி காரங்களுக்கு எப்ப பார்த்தாலும் குடும்ப அரசியல்ன்னு அவரை போட்டு தாளிசிகிட்டு ............

சக்தி கல்வி மையம் said...

வழக்கம் போல பதில் இல்லாததால் வெளிநடப்பு....

Speed Master said...

ஹி ஹி அவரிடன் கேள்வியை கேட்டு பதில் வாங்குவது மிகவும் கடினம்

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வழக்கம் போல பதில் இல்லாததால் வெளிநடப்பு....


எம் ஜி ஆர் தவிர மீதி எல்லா வாத்தியார்களுக்கும் கோபம் ஜாஸ்திய்யா

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

ஹி ஹி அவரிடன் கேள்வியை கேட்டு பதில் வாங்குவது மிகவும் கடினம்

ம் ம் இது வேறயா..?

மாலதி said...

வெறும் ரெண்டே ரெண்டு குடும்பம் தான் வச்சிருக்காரு . அது பொறுக்கலை எதிர்கட்சி காரங்களுக்கு எப்ப பார்த்தாலும் குடும்ப அரசியல்ன்னு அவரை போட்டு தாளிசிகிட்டு ............

MANO நாஞ்சில் மனோ said...

//இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.//

பதில் மட்டும் சளைக்காமல் சொல்றாங்கய்யா...

போளூர் தயாநிதி said...

குடும்ப அரசியல்ன்னு அவரை போட்டு தாளிசிகிட்டு ............

சி.பி.செந்தில்குமார் said...

malathi in sinthanaikal said...

வெறும் ரெண்டே ரெண்டு குடும்பம் தான் வச்சிருக்காரு . அது பொறுக்கலை எதிர்கட்சி காரங்களுக்கு எப்ப பார்த்தாலும் குடும்ப அரசியல்ன்னு அவரை போட்டு தாளிசிகிட்டு ............

haa haa ஹா ஹா ஒரு வஞ்சியின் வஞ்சப்புகழ்ச்சி அணி ஹா ஹா

உணவு உலகம் said...

ஐயோ, எப்ப தேர்தல் முடியும்?

Unknown said...

//ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.//
பார்ரா!

Jey said...

இந்தாளு கேனையா? இல்லை மக்கள கேனைங்கன்னு முடிவு பன்னிட்டாரா?.

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம உளரிக் கொட்ராரே மனுசன்....

Jayadev Das said...

இந்திய அளவில் காங்கிரஸும், தமிழக அளவில் திமுகவும் பெரிய \\கட்சிகள்\\ கொள்ளைக் கூட்டம் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள்.

Jayadev Das said...

\\எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன.\\ அவை: முடிஞ்ச வரைக்கும் கொள்ளையடிப்பது, பெண்டு பிள்ளைகளுக்குப் பதவி வாங்கித் தருவது, அதுக்கு எல்லா குறுக்கு வழிகளையும் பின்பற்றுவது.

Jayadev Das said...

\\கருத்து மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம். அதாவது திட்டங்கள் தமிழகத்துக்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.\\ எந்தெந்த துறைகளில் வரும்படி அதிகம் வருதோ அதெல்லாம் என் பிள்ளைகள், மருமகன்கள், மற்றும் கட்சியினருக்கே தரவேண்டும் இன்னும் நிறைய துறைகள் வேண்டும் என்று போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம். அதுக்காக கீழே விழுந்து அழுது அடம் பிடிப்போம், கோவிச்சுகிட்டு வீல் சேரில் விமானத்தில் சென்னைக்குத் திரும்புவோம். ஒரு போதும், காவிரியில் தண்ணீர் விடு, முல்லைப் பெரியாறு , பாலாறு பிரச்சினைக்கு என்று எந்த கேள்வியும் கேட்க மாட்டோம். வாயைப் பொத்திகிட்டு வந்திடுவோம். அவற்றால் எனக்கும், என் பிள்ளை குட்டிகளுக்கும் பைசா பிரயோஜனம் உண்டா? அப்புறம் அதுக்கு நான் ஏன் கவலைப் படனும்?? ஹி..ஹி..ஹி..

Jayadev Das said...

\\ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.\\ ஆமாம், தேவைப் பட்டா மதவாத கட்சி என்று நாங்களே சதா சொல்லும் பி.ஜே.பி. கூடவே கூட்டும் வைப்போம். பதவிக்காக பி.ஜே.பி. கூட கூட்டு வச்சொம்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல.

Jayadev Das said...

\\தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியும் அமையும் என எடுத்துக்கொள்ளலாமா?\\ தமிழ் நாட்டுக்குள அடிக்கிற கொள்ளையை பங்கு போட நாங்க தயாரில்லை. ஆனா நாங்க இங்கேயும் அடிப்போம், மத்தியிலும் ஆட்சியில் பங்கு கேட்டு, நல்ல பணம் கொழுத்த துறைகளை மிரட்டி கேட்டு வாங்கி அங்கேயும் அடிப்போம்.

Anonymous said...

ok

Jayadev Das said...

\\"திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது, மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது.\\ ஆனாலும், எனக்கப்புறம் என் மகன்தான் கட்சித் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் என்று மடம் மாதிரிதான் நடத்துவேன், ஆனா இது மடமல்ல, நான் நடத்தும் வியாபாரம். ஹி..ஹி..ஹி...

Jayadev Das said...

\\இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்,"\\தேர்தலில் ரவுடியிசம், கள்ள வோட்டு, மிரட்டல், வாக்குச் சாவடி கைப்பற்றுதல் போன்ற தில்லு முல்லுகளை பண்ணிய மாதியே இங்கேயும் பண்ணுவோம். [ வேணுமின்னா கொஞ்சம் இலவசமும் கொடுப்போம், போதுமா??? ஹா.. ஜா. ஹா..]

Jayadev Das said...

\\"இது ஊழலே அல்ல.\\ சட்டத்தை தனியார் கம்பனிகளுக்கு வளைந்து நெளிந்து போகுமாறு செய்ததற்கு கிடைத்த நேர்மையான கமிஷன், மற்றபடி, நான் அரிச் சந்திரன், காந்தி.

Jayadev Das said...

\\காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.\\ இப்படி செய்வதில் முதல் கில்லாடி நான்தான், இப்படிச் சொல்லிச் சொல்லியே மொத்தத்தையும் வித்து தின்னுட்டேன்.

Jayadev Das said...

\\அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்,\\விசாரணை...??? ஹா.ஹா...ஹா...ஹா...ஹா...ஹா... கேசு பூட்ட கேசா மாத்திடுவும், அப்புறம் புரிஞ்சுக்குவீங்க நாங்க காந்தியின் வாரிசுகள் என்று.

bandhu said...

//கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர்.//ஆனால் எனக்கும் கலைஞர் டி வி க்கும் சம்பந்தம் இல்லை!
யப்பா, யப்பா, யப்பா! என்னமா உடறாண்டா ரீலு!

நிரூபன் said...

"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.//

இது நிஜமாகவே கலைஞரி பேட்டி தானா. என்ன ஒரு றீலு.

நிரூபன் said...

கலைஞரின் பதில்களைப் பார்க்கும் போது சிரிப்பாகத் தான் இருக்கிறது. உங்கள் வலைப்பதிவின் மூலம் தமிழக அரசியலின் அனைத்து தகவல்களையும் அதிரடியாக அறிய முடிகிறது.

Unknown said...

உங்கள் சைட் சூப்பர் யா ....
"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.//

பெஸ்ட் ஒப் லக்
கீப் கோயன்.....

எனது சைட்

http://eyepicx.blogspot.com

செங்கோவி said...

அண்ணே, தைரியமா பெரிய இடத்துப் படமாப் போட்டிருக்கீங்களே..ஸ்டில் சூப்பர்ணே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல மன்னிச்சிடுங்க காலைல வர்றேன்!!

தமிழ்க்காதலன் said...

அன்பு செந்தில், ஒண்ணு பேசற ஆளுக்கு சொறணை இருக்கணும், அல்லது கேட்குற ஆளுக்கு சொறணை இருக்கணும். தமிழ்நாட்டுல இரண்டுமே இல்லை.
அந்த நம்பிக்கைதான் இந்த ஆள இப்படி உளற சொல்லுது.
அவள் என் மனைவிதான்... ஆனா அவளுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. அவள் என் மகள்தான் ஆனா எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவன் என் மகன்தான்... அவனுக்கும் எனக்கும், அவனுக்கும் என் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
என்னைய்யா இது......
கேட்குறவன் கேனையா இருந்தா....
கேழ்வரகுல நெய் வடியுது அப்படிங்றது இதுதானா...?

அப்பாடா..........

இந்தாளோட முடியலப்பா....

எவ்வளவு கேவலம் உண்டோ...அவ்வளவும் இந்த ஒரு ஆளுகிட்ட இருக்குய்யா...

சிந்தித்து ஓட்டுப் போட்டு... உங்க தலைஎழுத்தை மாத்திக்கோங்க....

YESRAMESH said...

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைசிருச்சா ..
என்னது கலைஞர் டிவி என்னுதா..
சொல்லவேஇல்ல

R.Gopi said...

ஹலோ...

“தல” தன் மேல தப்புனா அவ்ளோ சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டார்ங்க... அவர் என்ன எல்லாம் சொல்லி இருக்கார்னு பாருங்க...

1) ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல

2) கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர்...

3) முழு பூசணிக்காயை சோத்துல மறைச்சவய்ங்கள பார்த்திருக்கேன்... ஆனா, நம்ம “தல” எல்லாத்துலயும் ஸ்பெஷல் ஆச்சே, அதான் முழு “டைனோசர்” ரோஸ்ட் பண்ணி ஏப்பம் விடறாரு...