Friday, November 14, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (14 11 2014 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

முருகாற்றுப்படை ,திருடன் போலீஸ் ,ஞான கிறுக்கன் , அப்புச்சி கிராமம் ,விலாசம்,புலிப்பார்வை ,அன்பென்றாயே அம்மா,ERRABUS,SECRET GIRL

1 முருகாற்றுப்படை-
Murugatrupadai - story

சிகரம் விஷூவல் மீடியா சார்பில் ஆர்.சரவணன் தயாரிக்கும் திரைப்படம் ‘முருகாற்றுப்படை’. படத்தின் தலைப்புதான் பக்தி மயமானதே தவிர, படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.


இதில் கதாநாயகனாக சரவணன் என்ற புதுமுகம் அறிமுகமாயிருக்கிறார். இவர் இப்படத்திற்காக ஒரு வருட காலம் கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார். இவருக்கு ஜோடியாக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த நவீகா ஹீரோயினாக நடித்துள்ளார். மற்றும் வி.எஸ்.ராகவன், ரமேஷ்கண்ணா, தேவதர்ஷினி, தருண் மாஸ்டர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.


இசை கணேஷ் ராகவேந்திரா. இவர் பிரபல வீணை இசைக்கலைஞர் பாலச்சந்தரின் பேரன். இதற்கு முன்பு ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஏ.எஸ்.செந்தில்குமார். இவர் ரத்னவேலு, என்.ராகவ் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பதோடு, சில விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


படத்தின் கதை என்னவென்றால், சென்னையில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் சிவராமன். இவரின் மகன் முருகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறான். தினம் கல்லூரி பேருந்தில் பயணம் செய்யும் அவன், ஒரு நாள் அரசு கலை கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் ஜாலியாக லூட்டி அடித்து பயணம் செய்வதை பார்த்து மனதை பறிகொடுக்கிறான். தனக்கு அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்ய முற்படும்போது, எதிர்பாராத சந்திப்பில் கலைக்கல்லூரி மாணவன் கருப்பு முருகனுக்கு உதவி செய்து நண்பனாகிறான்.

இரண்டு கல்லூரிகளுக்கு இடையே இருக்கும் வெறுப்புகள் மறைந்து அங்கு அன்பு ஆளுமை செய்கிறது. சமூகவிரோதிகளால் முருகனின் அப்பாவுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து முருகனுடன் முன்நின்று, சமாளித்து, முற்றுப்புள்ளி வைத்து, முருகனையும் அவன் அப்பாவையும் வெற்றிபெற வைப்பதே ‘முருகாற்றுபடை’யின் கரு.
murugatrupadai‘என்னது… ஸ்ரீதேவியோட பொண்ணு நடிக்க வந்தாச்சா..? அதுவும் ‘முருகாற்றுப்படை’ தமிழ்ப்படத்திலா..?’ ன்னு பதற வேண்டாம். இருந்தாலும் அந்த சஸ்பென்ஸ் கொஞ்ச நேரம் நீடிக்கட்டும். மேல படியுங்க…


இதுவரை உங்க வாழ்க்கையில இஞ்சினீயரிங் காலேஜ் மாணவர்களைப் பார்த்து, ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்கள் ‘புஸ்’ஸுன்னு பெருமூச்சு விடறதைப் பார்த்திருக்கலாம். ஆனால், ‘முருகாற்றுப்படை’ அப்படியே உல்டாவா கதை சொல்லுது. ஹீரோவா வர்ர சரவணன், ஒரு இஞ்சினீயரிங் காலேஜ் ஸ்டூடன்ட். ஆனா, இவருக்கு ஆர்ட்ஸ் காளேஜ் ஸ்டூடன்டுகள் ஜாலியா பஸ்ல லூட்டி அடிச்சுட்டு வர்ரதைப் பார்த்து, நாம இப்படி ஜாலியா இருக்க முடியலையேன்னு கவலை வருதாம்.


murugatrupadaiபிறகு ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தனோட நட்பு கிடைச்சு, ரெண்டு காலேஜ் மாணவர்களுக்கும் அதுவரை இருந்த விரோதம் மறைஞ்சு, கைகோர்க்கிற நேரத்துல… வில்லன் உள்ளே புகுந்து…’ன்னு போகுது கதை.


படத்தோட இயக்குநர் கே.முருகானந்தம், ‘பாலா’விலேர்ந்து, சசிகுமார் வழி வந்து தமிழ் சினிமாவின் 40க்கும் மேற்பட்ட படங்கள்ள… புரடக்ஷன் மேனேஜரா வேலை பார்த்தவர். ஆனா, கம்பன் வீட்டுக் கட்டுத்தறி போல், புரடக்க்ஷன் வேலை பார்க்கிறதுக்கு இடையில, டைரக்க்ஷனையும் கண்ணால பார்த்தே கத்துக்கிட்டாராம்.

இவருக்கு இந்தப்படம் தர புரட்யூசர் ஆர்.சரவணன் முடிவு செய்ய, உள்ளே விழுந்த பலர், “புரடக்க்ஷன் மேனேஜருக்கு டைரக்க்ஷன் சான்ஸா..?”ன்னு அவர் மனசைக் கலைக்கப் பார்க்க, சசிகுமார்தான் முன்னே வந்து “இவரை நம்பிப் படத்தைக் கொடுக்கலாம்…”ன்னு நற்சான்றிதழ் கொடுத்தாராம். அவருக்கும் நன்றி சொல்லி தன் முதல் பிரஸ் மீட்ல பேசினார் முருகானந்தம்.


அவர் பேசியதிலேயே ஹைலைட், “இதுவரை எனக்கும், புரட்யூசருக்கும் எந்த மனக்கசப்பும் வந்ததில்லை…”ங்கிறதுதான். அவ்வளவு உண்மையா வேலை பார்த்தேங்கிறார். “ஒரு புரட்யூசர் பணத்தை எண்ணுறதை வச்சே இவர் படத்தை எடுத்து முடிப்பாரா, மாட்டாரான்னு என்னால கண்டுபிடிச்சுட முடியும். அப்படி கண்டிப்பா இவர் படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணிடுவார்ன்னு நான் இவரைக் கண்டுபிடிச்சுட்டேன்..!”னு புரட்யூசரை உருகவச்சார்.


murugatrupadai“இவர் பேர் முருகானந்தம், புரட்யூசர் மற்றும் ஹீரோ பேர் சரவணன், கேமராமேன் பேர் செந்தில்குமார், பி.ஆர்.ஓ பேர் நிகில் முருகன்னு ‘முருகாற்றுப்படை’ல ஒரே முருகன் மயம்…”ன்னு தேவதர்ஷினி பேசியது கேட்சிங்கா இருந்தது. ஹீரோ சரவணன், “எனக்கும், ஹீரோயின் நவிகாவுக்குமான கெமிஸ்ட்ரியைவிட, படத்துல ரமேஷ் கன்னாவுக்கும், தேவதர்ஷினிக்குமான கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு…”ன்னு பத்த வச்சுட்டுப் போனார்.


இப்ப நாயகி நவிகாவுக்கு வருவோம். இந்தப் பொண்ணுக்கு இதுதான் முதல் தமிழ்ப்படம். ஆனா, இதுக்கு முன்னால ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ல ஸ்ரீதேவிக்கு மகளா நடிச்சு முடிச்சுடுச்சாம். (குழப்பம் தீர்ந்ததா..?)


ஆனா, பிரஸ்மீட்ல பொண்ணு பேசியது இங்கிலீஷுமில்ல, தமிழுமில்ல ‘தங்கிலீஷ்..!’


http://www.gtamilcinema.com/blog/2014/10/18/murugatrupadai-press-meet-news/


 


2  திருடன் போலீஸ்

திருடன் போலீஸ் படத்தை வெளியிடுகிறது தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

thiru‘குக்கூ’ படத்தை தொடர்ந்து ‘அட்டகத்தி’ தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’.


இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். இதில் தினேஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நித்தின் சத்யா, பால சரவணன், ‘ நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய், மூத்த நடிகர் ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அதோடு விஜய்சேதுபதியும் இருக்கிறார். அவர் படத்தில் ஸ்பெஷல் ஆட்டம் ஒன்று போட்டுள்ளார்.


எஸ்.பி.பி.சரண் இந்தப் படத்தை ஜே.செல்வகுமாருடன் இணைந்து தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் திருடன் போலீஸ் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ கைப்பற்றியுள்ளது.


படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட படம் தான் இந்த ‘திருடன் போலீஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.தங்கம்மாள் தயாரிக்கும் “ஞானகிறுக்கன்” வித்தியாசமான கதையோட்டத்தைக் கொண்டது.வித்தியாசமான கோணம் கொண்ட இந்த படத்தை இளையதேவன் கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார்.
டேனியல் பாலாஜி ஞானகிருக்கனாக கணேசன் என்ற கதாபாத்திரம் ஏற்கிறார்.அவரது மனைவியாக செந்தி நடிக்கிறார். ஜெகா என்ற புதுமுகம் கதாநாயகனாகவும் , அர்ச்சனாகவி ,சுஷ்மிதா நடிக்கிறார்கள்.மற்றும் தம்பிராமய்யா, செவ்வாளை,உமா,கலைச்செல்வி,சீனியம்மா,விஜயம்மாள் ஆகியோர் நடிக்கிறார்கள் . மாஸ்டர் சீனிவாசன் முக்கிய வேடமேற்கிறார்.
Copy of DSC_0005
ஒளிப்பதிவு – எஸ். செல்வகுமார்
இசை – தாஜ்நூர்
பாடல்கள் – நா.முத்துகுமார்,அறிவுமதி,கபிலன்,யுகபாரதி,மோகன்ராஜன்
கலை – ஆர். முரளி . நடனம் – தினேஷ் , ஸ்ரீதர் , தம்பிசிவா
எடிட்டிங் – ராஜாமுகம்மது . ஸ்டன்ட் – நாக்அவுட் நந்தா
தயாரிப்பு மேற்பார்வை – எம்.அருள். தயாரிப்பு நிர்வாகம் – வேல்ராஜன்
தயாரிப்பு – சி.தங்கம்மாள்
படம் பற்றி இயக்குனர் இளையதேவன்…..
இந்த படத்திற்காக சமீபத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எனாம்கிளியூர் என்ற கிராமத்தில்
“கண்ணீரை எடை போட எவருமில்லை – கை
தந்து கரை சேர்க்க துணையும் இல்லை ! என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
டேனியல் பாலாஜி – செந்தி , மாஸ்டர் மணிமாறன் பங்கேற்றனர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் ஞானகிறுக்கன் படத்தின் அந்த பாடல் காட்சியைப் பார்த்து நிறைய மக்கள் அழுது விட்டார்கள். ஒரு உண்மை சம்பவத்தை கருவாக எடுத்து கற்பனை கலக்காமல் படமாக்கி முடித்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர் இளையதேவன்.
- See more at: http://www.saalaram.com/tamil/14974/30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C.html#sthash.haGYrHzW.dpuf
 3 “ஞானகிறுக்கன்”


தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.தங்கம்மாள் தயாரிக்கும் “ஞானகிறுக்கன்” வித்தியாசமான கதையோட்டத்தைக் கொண்டது.வித்தியாசமான கோணம் கொண்ட இந்த படத்தை இளையதேவன் கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார்.


டேனியல் பாலாஜி ஞானகிருக்கனாக கணேசன் என்ற கதாபாத்திரம் ஏற்கிறார்.அவரது மனைவியாக செந்தி நடிக்கிறார். ஜெகா என்ற புதுமுகம் கதாநாயகனாகவும் , அர்ச்சனாகவி ,சுஷ்மிதா நடிக்கிறார்கள்.மற்றும் தம்பிராமய்யா, செவ்வாளை,உமா,கலைச்செல்வி,சீனியம்மா,விஜயம்மாள் ஆகியோர் நடிக்கிறார்கள் . மாஸ்டர் சீனிவாசன் முக்கிய வேடமேற்கிறார்.
Copy of DSC_0005
ஒளிப்பதிவு – எஸ். செல்வகுமார்
இசை – தாஜ்நூர்
பாடல்கள் – நா.முத்துகுமார்,அறிவுமதி,கபிலன்,யுகபாரதி,மோகன்ராஜன்
கலை – ஆர். முரளி . நடனம் – தினேஷ் , ஸ்ரீதர் , தம்பிசிவா
எடிட்டிங் – ராஜாமுகம்மது . ஸ்டன்ட் – நாக்அவுட் நந்தா
தயாரிப்பு மேற்பார்வை – எம்.அருள். தயாரிப்பு நிர்வாகம் – வேல்ராஜன்
தயாரிப்பு – சி.தங்கம்மாள்
படம் பற்றி இயக்குனர் இளையதேவன்…..
இந்த படத்திற்காக சமீபத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எனாம்கிளியூர் என்ற கிராமத்தில்
“கண்ணீரை எடை போட எவருமில்லை – கை
தந்து கரை சேர்க்க துணையும் இல்லை ! என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
டேனியல் பாலாஜி – செந்தி , மாஸ்டர் மணிமாறன் பங்கேற்றனர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் ஞானகிறுக்கன் படத்தின் அந்த பாடல் காட்சியைப் பார்த்து நிறைய மக்கள் அழுது விட்டார்கள். ஒரு உண்மை சம்பவத்தை கருவாக எடுத்து கற்பனை கலக்காமல் படமாக்கி முடித்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர் இளையதேவன்.

http://www.saalaram.com/tamil/14974/30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C.html


4  அப்புச்சி கிராமம் -
நீண்டநாள் தயாரிப்பில் இருக்கும் அப்புச்சி கிராமம் வருகிற 14ந் தேதி ரிலீசாகிறது. இதில் பிரவீன்குமார், அனுஷா, சுவாசிகா, சுஜா
நடித்துள்ளனர். விண்ணிலிருந்து பறந்து வரும் ஒரு விண்கல்லால் உலகம் அழியபோகிறது என்கிற கதை. ஆனால் இது மூடநம்பிக்கையை வளர்க்கும் படமல்ல என்கிறார் இயக்குனர் வி.ஐ.ஆனந்த்.
appuchi_gramam_tamil_movie_stills
அவர் மேலும் கூறியதாவது: பொதுவாகவே சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாயிடும்னு சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்வார். ஒரு வாரத்துல உலகம் அழியப்போவுதுன்னு வச்சிக்குவோம். அப்போ உலகத்துல என்ன நடக்கும்னு தெரியாது. ஆனா ஒரு கிராமத்துல என்ன நடக்கும் அதுதான் இந்தப் படம்.
ஒரு விண் கல் பூமியை நோக்கி வருகிறது அது எங்கு வேண்டுமானாலும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது ஒரு விஞ்ஞான தகவல். இது ஒரு கிராமத்துக்குள் விண்கல் விழுந்து ஒரு வாரத்துல உலகம் அழியப்போகுதுங்ற செய்தியா பரவிவிடுகிறது. அதன் பிறகு அந்த கிராம மக்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறதுங்றதுதான் கதை. இதில் மூட நம்பிக்கைங்றது கொஞ்சம்கூட கிடையாது. கிராம மக்களின் அப்பாவித்தனம், வெகுளித்தனம், மனிதாபிமானம்தான் வெளிப்படுத்தப்படுகிறது. உலகத்திலேயே எல்லாத்தையும் விட உயர்ந்தது சக மனிதனை நேசிப்பது என்கிற கருத்தை வலுவாக சொல்ற படம். என்கிறார் ஆனந்த்.


http://tamiltab.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/


5  விலாசம்

Vilaasam (2014) Tamil Mp3 Songs Download

பல படங்களில் துணைவில்லனாக நடித்து வந்தாலும் நடிகர் பவனை ‘பளிச்’சென்று அடையாளம் காட்டியது வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் அவருக்கு கிடைத்த ‘அவுட்’ கதாபாத்திரம் தான். அதன்பிறகு படங்களை கவனமாக தேர்வு செய்த பவனுக்கு கடந்தவருடம் வெளியான ‘தகராறு’ படம் சற்றே திருப்புமுனையாக அமைந்தது.
சொல்லப்போனால் அந்தப்படம் தான் பவனுக்கு விலாசம் தந்துள்ளது என்று சொல்லலாம்.. அதாவது ‘விலாசம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தந்துள்ளது. இந்தப்படத்தில் பவனுக்கு ஜோடியாக ஷனம் ஷெட்டி நடிக்க, முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்கள் சுஜிபாலாவும் அருள்தாஸும்.
தளபதி தினேஷ் மிரட்டலாக சண்டைக்காட்சிகள் அமைத்துள்ள இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ராஜகணேசன். சுந்தர்.சி.யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமாரும் அவரது சிஷ்யர் ராமலிங்கமும் இணைந்து ஒளிப்பதிவை கவனித்துள்ளனர். இந்தப்படத்தில் இருந்து பவனின் விலாசம் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


6  புலிப்பார்வை’.
வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘புலிப்பார்வை’.


‘ஸ்டார்’ மற்றும் ‘ரட்சகன்’ படங்களை இயக்கிய பிரவீன்காந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதோடு இசையமைப்பாளரும் அவரே. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் எஸ்.மதன்தான் இதில் பிரபாகரனாக நடித்துள்ளார். பாலசந்திரனாக 9ம் வகுப்பு மாணவன் சத்யா வருகிறார். இந்தப் படத்தில் இயக்குனர் பிரவீன்காந்தும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.



இப்படம் குறித்து பிரவீன்காந்த் கூறியதாவது, “ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் எடுத்திருக்கிறோம். பாலச்சந்திரன் சுட்டுக் கொல்வதற்குமுன் இலங்கை ராணுவத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சேனல் 4 நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.



அப்போது அந்த பாலகனுடைய பார்வை அனைவரையும் உலுக்கியது. அந்த பார்வையை பதிவு செய்யும் விதமாய் படத்திற்கு ‘புலிப்பார்வை’ என பெயர் வைத்துள்ளோம் என்றார். இந்த கதையை படமாக எடுப்பதற்கு முன் அதை சென்சார் அதிகாரிகளிடம் சொல்லி முறையான அனுமதி வாங்கி எடுத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுகிறார்.


 7 அன்பென்றாயே அம்மா




Erra Bus is an upcoming 2014 Tollywood movie which is directed and produced by veteran actor and director Dasari Narayana Rao under his banner Tharaka Prabhu Films. The movie will feature Vishnu Manchu and Catherine Tresa in lead roles.



SECRET GIRL-009

009-1: The End of the Beginning (Review)


“This movie is definitely a case where more is less–the more plot points they cram into the movie, the more you get overwhelmed.”



by Martin Hafer
A great example of lots of great ideas…too many in fact.
009-1 is a horrifically violent but very stylish film. Blood and gore is rampant and can be very off-putting. So, if you don’t like all the violence, then it’s certainly NOT a film for you. I am just warning you about this up front, as the film is a 9.5 on a scale of 1 to 10 for violence! Because of this, and a bit of nudity and sexuality, it’s probably NOT a good film to watch with your kids, your mother or Father O’Reilly!
The film is based on an older manga series from Japan. Back from 1967-1970 the series ran in serial form and it made a brief re-appearance in 1974. Then, much more recently, an anime version was made. How close they are to this live-action film, I have no idea.
009-1: The End of the Beginning



Directed by
Koichi Sakamoto



Cast
Mami Abe, Ryôhei Abe, Sanae Hitomi


Release Date
Out Now


Martin’s Grade: C+

We begin with a prologue telling the audience that the film is set in some dystopic future–where evil and greed are rampant and the poor are treated pretty much like animals. The opening scene in the night club sets the stage for the violence you’ll see, as a complete scum of a guy kills for no reason. And, after brutally murdering someone, he turns his lustful eyes to a gorgeous woman–a woman who just happens to be 009-1. However, it turns out that 009-1 is a secret agent–a cybernetic one! She has little in the way of past memories and is full of amazing gadgets, as she was created to serve her ‘side’ in some seemingly meaningless battle between rival countries. In addition to being able to regenerate, dodge bullets, seduce men and kill with ease, this robotic lady also has boobs which are, well, booby-trapped! You’ll just have to see the film to understand what I mean. But of course, she kills this scum-bag–as well as most everyone in his entourage.


நன்றி -தினமணி , மாலை மலர் , ஆல்  சினி வெப்சைட்ஸ்

0 comments: