Wednesday, April 24, 2013

யார் இவள் - சினிமா விமர்சனம்

 

மேரேஜ் ஆன ஆம்பளைங்களுக்கு பொதுவா பேய் , பிசாசு கண்டா பயம் இருக்காது. ஏன்னா டெயிலி நைட்டும் , பகலும் அவங்கவங்க  சொந்தப்பொண்டாட்டியை க்ளோசப்ல வலுக்கட்டாயமா பார்த்து பார்த்து  மனசு திடம் ஆகி இருக்கும்.அதனால என்னை மாதிரி குழந்தை சுபாவம் உள்ளவங்க, குழந்தைங்க, பெண்கள் தான் பேயைக்கண்டா அலறுவாங்க, பயப்படுவாங்க , அந்த டைப் படம் பார்க்க ஆர்வம் காட்டுவாங்க . அப்பேற்பட்ட படம் தான் இது. அனன்யா ஹீரோயினா நடிச்ச இந்தப்படம் எப்டினு இப்போ பார்க்கப்போறோம். பிரபலமான நாலு நாவல்களை காக்டெயில் ஆக்கி திரைக்கதை அமைச்சிருக்காங்க

கதை 1 ( உல்டா ஆஃப் எண்ட மூரி வீரேந்திர நாத் தின்  திகில் பங்களா )

ஹீரோ சாரு மாதிரி ஒரு நாவல் ஆசிரியர்.  அவர் நாவல் எழுத தன் குடும்பத்தோட ஒரு தீவுக்கு வர்றார். அவருக்கு ஒரே ஒரு சம்சாரம் , ஒரு பொண்ணு .அங்கே வந்து கொஞ்ச நாள் ல யே ஏதோ அமானுஷ்ய சக்தி உலவறதை கண்டு  பிடிக்கறாங்க . 

கதை 2  ( உல்டா ஆஃப்  ஆர்னிகா நாசர் -ன் பனிப்புயல் )


 இப்டியே போனா பயங்கர திகில் கதையா போயிடும் , கொஞ்சம் கிளு கிளுப்பை  ஏத்திக்க வேணாமா?  எழுத்தாளரோட சம்சாரத்துக்கு ஆல்ரெடி ஒரு காலேஜ் மேட் காதலன் இருக்கான்.  அவன் எதார்த்தமாவோ, பதார்த்தமாவோ இங்கே வர்றான், வந்தவன் அப்டியே ஷாக் ஆகிடறான். தன் முன்னால் முன்னாள் காதலி ( எப்டி வாக்கிய அமைப்பு ? ) 


 அடுத்து படம் பார்க்கும் நாம் ஷாக் ஆகிடறோம்,. ஏன்னா ஹீரோயின் மாசமா இருக்கா.  அவ யாரால மாசமா ஆனா? அப்டினு ஒரு ட்விஸ்ட்.  சஸ்பென்ஸ். அடேங்கப்பா ...யாராலும் யூகிக்கவே முடியலை. புருஷன் தான் கர்ப்பத்துக்கு காரணம். ( அட போங்கப்பா , என்ன திரைக்கதை இது ? ) 


 


புருஷன்காரன்  ஒரு டைம் பால்கனில இருந்து தன் சம்சாரம் அவ காதலன் கிட்டே சிரிச்சுப்பேசிட்டு இருக்கறதைப்பார்த்துடறான். நாம பக்கத்துல இருக்கும்போது பல் துலக்கக்கூட வாயைத்திறக்காத சம்சாரம் அவன் கிட்டே மட்டும் பல்லைக்காட்டிப்பேசுதேன்னு கடுப்பு . 


 அபூர்வ ராகங்கள் படத்துல படகுல கூட்டிட்டுப்போய் ரஜினி கமலைப்போட்டுத்தள்ள ட்ரை பண்ணுவாரே , அதே சீனை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம  சுட்டு எடுத்துட்டாங்க .லவ்வர் க்ளோஸ் 


 நல்லா கேட்டுக்குங்க. இது ஒரு கிளைக்கதை . அவ்ளவ் தான். படத்தை இழுக்கனும் இல்ல? 

கதை 3 -  உல்டா  இந்திரா சவுந்தர் ராஜன் -ன்  மாளிகை தீபம் ) 

அந்த தீவுல ஒரு ஓவியர் இருக்காரு  . அவரோட காதலியை 4 பேர் சேர்ந்து  ஒன் பை ஒன்னா ரேப் பண்ணிடறாங்க . அவ செத்துடறா . இவர் அவ நினைவாவே சுத்திட்டு இருக்காரு . இவருக்கும் மெயின் கதைக்கும் சம்பந்தம் இல்லை ( இப்போ நான் மேலே சொன்ன கதை காட்சி வடிவமா இல்லாம குரல் வடிவுல கதையா வருது )




 மெயின் கதை இனி தான் .இப்போ இன்னொரு ட்விஸ்ட். எழுத்தாளரோட சம்சாரம் அவருக்கு 2 வது சம்சாரம். அவரோட முத சம்சாரத்துக்குப்பொறந்த பொண்ணு தான் இந்த பேய் பிடிச்ச குழந்தை , 2 வது சம்சாரம் முத தடவையா மாசமா இருக்கே  அப்டினு புருஷன் ஆச்சரியமும் படலை , அதிர்ச்சியும் ஆகலை , ஜெர்க் அடிக்கலை . அவன் என்னமோ ஆண்ட்ரியா சர்வ சாதாரணமா “ ஆமா அனிரூத் என் முன்னால் லவ்வர் தான் அதுக்கென்ன இப்போ”ன்னு அசால்ட்டா அடிச்சு விட்டாரே அப்டி இருக்கான்.


 ஒரு மாந்திரீகர் கிட்டே ஆலோசனை கேட்கறாங்க,. ஏன் எழுத்தாளரோட  முதல் சம்சாரத்துக்குப்பிறந்த குழந்தை பேய் பிடிச்ச மாதிரி நடந்துக்குது?  அவரோட 2 வது சம்சாரம் ஏன் சைவமா இருந்தும் மட்டன் சாப்பிடறா? அப்டினு . அப்போதான் அவர் ஒரு கதையை அள்ளி விடறார் . இது கொஞ்சம் கிளு கிளுப்புக்கதை 

 கதை 4  உல்டா ஆஃப்  பேய்க்கதை மன்னன் பி டி சாமியின்  மாய மோகினி




ஒரு ஊர்ல  ஒரு மந்திரவாதி . அதே ஊர்ல ஒரு சந்தனக்கட்டை  மாய மோகினி இருக்கா . மந்திரவாதி கிட்டே ஒரு குரு ஆலோசனை சொல்றாரு  அந்த மாய மோகினியை கரெக்ட் பண்ணி மேட்டரை முடிச்சுட்டா உனக்கு அபூர்வ சக்தி வந்துடும்னு . நானா இருந்தா டக்னு ஒரு கேள்வி கேட்டிருப்பேன். அப்போ நீங்க ஏன் ட்ரை பண்ணலை?னு . ஆனா அவன் அப்டி கேட்கலை 


மாயமோகினியை கசமுசா பண்ணிடறான் , முதல் வசந்தம் ல சத்யராஜ் ( குங்குமப்பொட்டுக்கவுண்டர் ) ஒரு பேயை  ரேப் பண்ணும்போது அது சும்மா இருந்துட்டு மேட்டர் எல்லாம் முடிஞ்ச பின் அய்யய்யோ கற்பு போச்சேன்னு கூப்பாடு போடுமே அப்டி மந்திரவாதி மாய மோகினி இடுப்புல கை வைக்கும்போது கமுக்கமா இருந்துட்டு எல்லாம் முடிஞ்ச பின் ஆர்ப்பாட்டம் பண்றா .  தற்கொலை பண்ணிக்கறா.


 அந்த ஆவி தான் இப்போ இங்கே உலாவது. அந்த ஆவியை யார் திருப்திப்படுத்துனா? ஐ மீன் சாந்தப்படுத்துனா?போலீஸ் ரைட்டர் மேல டவுட் பட்டது ஏன்? இதை எல்லாம் வெண் திரையில் காண்க


ஹீரோவா வர்ற ரைட்டர்  படு கேவலமா தாடி வெச்சுக்கிட்டு தலையே சீவாம  இருக்காரு . அநேகமா ஃபைனான்ஸ் இந்தப்படத்துக்கு இவராத்தான் இருக்கனும். பொதுவா ஆம்பளைங்க நடிப்பைப்பத்தி சிலாகிச்சு நமக்குப்பழக்கம் இல்லாததால் அடுத்த பேராவுக்கு ஸ்கிப் ஆகிக்குவோம்


 ஹீரோயின் அனன்யா . மாடர்ன் டிரஸ் போட்டுட்டு பாந்தமா வர்றார். படம் பூரா ஏகப்பட்ட சுடிதார் , எல்லாத்தையும் ஷூட்டிங்க் முடிச்சுஅப்டியே வீட்டுக்கு கொண்டு போய் இருப்பார்னு நினைக்கறேன் . எல்லாம் செம டிரஸ் . இவர் மாசமா இருக்கும்போது , பேய் பிடிச்ச மாதிரி பாவனை காட்டும்போது ஏகப்பட்ட இடங்கள் ல நடிப்பைக்காட்ட வாய்ப்பு . படத்துல இவர் கிளாமரா நடிக்கலை. அப்டியே நடிச்சாலும் நாம ரசிக்க முடியாது . அப்டி ஒரு பிஞ்சு மூஞ்சி 


அந்தக்குழந்தை  பூ விழி வாசலிலே  பேபி சுஜிதா மாதிரி அழகா இருக்கு. நடிப்பும் ஓக்கே . பேபி ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்க் பண்ணி கடுப்பேத்தாம இயல்பா நடிச்சிருக்கு 


 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. போஸ்டர் டிசைனில் இது ஒரு டப்பிங்க் படம் என்பதே தெரியாத மாதிரி அமைச்சது . அனன்யாவை மார்க்கெட்டிங்க் பண்ண உபயோகப்படுத்திக்கொண்டது . பேப்பர் , டி வி விலம்பரங்கள் எல்லாம் கன கச்சிதம் 


2. ஒரு சினிமாவுக்கு ஒரு கதை போதும், ஆனா 4 வெவ்வேற நாவலை அழகா உல்டா பண்ணி கதம்ப மாலை மாதிரி கோர்த்து சொல்லிய விதம் ஓக்கே 


3. திகில் படங்களுக்கே உண்டான ஒளிப்பதிவு , இசை எல்லாம்  சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான தரத்தில் இருக்கு 

 




 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பெட்ரூம்ல படுத்திருக்கும்போது கமுக்கமா இருக்கும் அவர் சம்சாரம் ரைட்டர் மும்முரமா கதை எழுதும்போது ரொமான்ஸ்க்கு கூப்பிடுவதும் , அவர் வர மறுத்ததால் கோபம் ஆவதும் ஏன்?  அவர் ஃப்ரீயா இருக்கும்போதே போய் இருக்கலாமே? ( எப்டி முத கேள்வி? ஹி ஹி ) 


2. ரைட்டர் என்ன இதுக்கோசரம் தன் சம்சாரத்தை அவரோட முன்னால் காதலன் கூட பேசிட்டு இரு நான் வந்துடறேன்னு சொல்லிட்டு பால்கனில நின்னு வேடிக்கை பார்க்கறார். எந்த புருஷனும் அப்டி பண்ண ,மாட்டான் . கட் பண்ணி அனுப்பத்தான் பார்ப்பாங்க 


3.  பால்கனில புருஷன் நிக்கறான்.  தன் முன்னாள் காதலன் கூட சிரிச்சு பேசும் ஹீரோயின் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாரா? இப்டியா பப்ளிக்கா நடந்துக்கறது? 



4. ஹீரோயின் தன் புருஷன் கிட்டே குழந்தையோட அப்நார்மல் ஆக்டிவிட்டிஸ் பற்றி சொல்லும்போது அவன் நம்பலை . அவ ஏன் செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து வெச்சு அவன் கிட்டே ஆதரமா காட்டி இருக்கக்கூடாது ? 


5.  ஹீரோயின் அனாமிகா மட்டன் சாப்பிடும்போது இடது கைல சாப்பிடறாரே? உவ்வே .. 



6. மாசமா இருக்கும் பொண்ணு புது வித டேஸ்ட் விரும்பி சாப்பிடுவா என்று டாக்டர் சொல்வது ஓக்கே , ஆனா சுத்த சைவமா இருக்கும் பொண்ணு அசைவம் சாப்பிடுவது நோ சான்ஸ் 


7. பேய் பிடிச்ச அனாமிகா அந்த சிக்கன் பீசை 10 நிமிஷம் சாப்பிடுவதை க்ளோசப்ல காட்டுவது உஷ் அப்பா முடியல . இன்னொரு உவ்வே சீன் 

 



8. இந்தப்படத்துல வர்ற மாய மோகினி மிஸ் மேட்சிங்க் மோகினியா இருக்கே? அதாவது பச்சைக்கலர் ஜாக்கெட்ட்க்கு சிவப்புக்கலர் பிராவும்  மஞ்சள் கலர் சேலைக்கு  ப்ளூ கலர் பெட்டிகோட்டும் போட்டுட்டு வருதே? ஏன்? 


9. ஹீரோ மேல டவுட் பட்டு வீட்டுக்கு வரும் எஸ் ஐ அப்பவே முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்காம “ அடுத்த தடவை வரும்போது நீ உண்மையை சொல்லனும்” அப்டினு அம்போன்னு விட்டுட்டுப்போறது செம காமெடி 


10. கவுரியைக்காணோம்னு ஹிரோ சொன்னதும் அந்த குண்டு ஆள் அந்த ரூம்க்குள்ளே போய் எதுக்கு தாழ்ப்பாழ் போட்டுக்கறார்? அவருக்கு முதல் இரவா நடக்குது? பொண்ணைத்தேடத்தானே போறார்? எதுக்கு தாழ் போடனும்? 


11. பேய் லிப்ஸ்டிக் எல்லாம் பூசிட்டு வருதே , எப்டி?  பியூட்டி பார்லர் கூட போகுமா? 

12. மந்திரவாதி மாய மோகினி இடுப்புல கை வைக்கறார். அப்போ கட் அண்ட் ரைட்டா “ டேய், கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்” அப்டினு கத்தி இருக்கனும் , அல்லது எத்ரிப்பையாவது காட்டி இருக்கனும். அப்டியே சொக்கி கண்ணை மூடி பாவ்லா காட்டிட்டு எல்லாம் முடிஞ்ச பின் அய்யய்யோ போச்சே என்பது ஏன்? 


13. இந்தப்படத்துல மெயின் கதையே அந்த மாய மோகினிதான் அதுக்கு நல்ல கிளாமரா இளமையான நடிகையா போடக்கூடாதா?  45 வயசு ஆண்ட்டியை புக் பண்ணி இருக்கீங்க. அதுவும் பஸ் ஸ்டேண்ட் கிராக்கி மாதிரி இருக்கு.. 


 



ஆனந்த விகடன்  எதிர்பார்ர்பு மார்க் - 40 ( இந்த மாதிரி டப்பிங்க் படத்துக்கு அவங்க விமர்சனமே போட மாட்டாங்க ஹி ஹி ) 


 குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 


 சி பி கமெண்ட் -  திகில் பட விரும்பிகள் டி வி  ல போட்டா பார்த்துக்கலாம் . மத்த படி பெருசா 1ம் இல்லை , 2ம் இல்லை

3 comments:

என் உலகம் said...

apoorva ragangal illai. mundru muduchu. figarai parthaal ellame maranthu poyidum pola irruke ?

என் உலகம் said...
This comment has been removed by the author.
Kathiravan Rathinavel said...

//முன்னால் முன்னாள் காதலி//
செம டச்