Tuesday, July 31, 2012

ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா - சிறுகதை

மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால்

டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர்

வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள்.

மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள்,

பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள்.





சகட்டுமேனிக்கு சினிமா

பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த

புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், அரசாஙக் அதிகாரிகள், கதம்பமான

கும்பல். சிகரெட் பிடிக்கும் பெண்கள், சத்யஜித்ரேயைத் தொடர அவர் பொலான்ஸ்கியைக்

கட்டிகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.





பட்டுப்புடவை அணிந்த ஒரு சுந்தரி குத்துவிளக்கு ஏற்றினாள்.

எல்லோரும் சினிமா எத்தகைய சாதனம், மனித சமுதாயத்தை எப்படி மாற்றக்கூடிய வல்லமை

படைத்தது என்பது பற்றி இங்கிலீஷில் பேசினார்கள். ‘சினிமாவும் சமூக மாறுதலும்’

என்று புஸ்தகம் அச்சடித்து ஒல்லியான அதை இருபது ரூபாய்க்கு விற்றார்கள். உதட்டு

நுனியில் ஆங்கிலம் பேசினார்கள். சினிமா விழா!





நம் கதை இவர்களைப் பற்றி அல்ல. ஒரு சாதாரண பங்களூர் குடிமகனைப் பற்றியது. பெயர்

நாராயணன். தொழில் யஷ்வந்த்புரத்து பிஸ்கட் ஃபாக்டரியில் பாக்கிங்க் செக்‌ஷனில்.

ஃபிலிம் விழாவுக்காக தேதி அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலையில் சென்று வரிசையில்

நின்று தலா 11 ரூபாய்க்கு ஏழு டிக்கட் அடங்கிய புத்தகம் ஒன்றை

அடித்துப்பிடித்து வாங்கி வந்துவிட்டான்.





கூட்டத்தைத் தடுக்க போலீஸ் மெலிதான லட்டியடித்ததில் முட்டியில் வலி.

இருந்தாலும் முழுசாக வெளியே வந்துவிட்டான். டிக்கட் கிட்டிவிட்டது. ஏழு படத்தில

ஒரு படமாவது நன்றாக இருக்காதா..?





நாராயணின் அகராதியில் இந்த ’நன்றாக’ என்பதை விளக்க வேண்டும். நன்றாக என்றால்

சென்சார் செய்யப்படாத.. குறைந்த பட்சம் ஒரு கற்பழிப்புக் காட்சியாவது

இருக்கக்கூடிய படம். நாராயணனின் குறிக்கோள் நவீன சினிமாவின் மைல் கல்களை

தரிசித்துவிட்டு விமர்சனம் செய்வதல்ல. அதற்கெல்லாம் பண்டிதர்கள்

இருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாவது ஏதாவது ஒரு சமயம்

உடையில்லாமல் ஓரிரண்டு ஃப்ரேமாவது வரவேண்டும். அப்போதுதான் கொடுத்த காசு

ஜீரணம்.





நாராயணின் ஆசைகள் நாசூக்கானவை.

அவன் தின வாழ்க்கையும் மன வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. தின வாழ்க்கையில்

அவன் ஒரு பொறுப்புள்ள மகன். பொறுப்புள்ள அண்ணன். பக்தியுள்ள பிரஜை. பனஸ்வாடி

ஆஞ்ச நேயா, ராஜாஜிநகர் ராமன் எல்லாரையும் தினசரி அல்லது அடிக்கடி

தரிசிக்கின்றவன். எவ்வித ஆஸ்திக சங்கத்துக்கும் பணம் தருவான். எந்தக் கோயில்

எந்த மூலைக் குங்குமமும் அவன் நெற்றியில் இடம் பெறும். நாராயணனுக்குத் திருமணம்

ஆவதற்கு சமீபத்தில் சந்தர்ப்பம் இல்லை. ஐந்து தங்கைகள், அனைவரும் வளர்ந்து

கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள். ஒருத்திக்காவது ஆக வேண்டாமா?




பெண்களைப்

பற்றி இயற்கையாகவே நாராயணன் கூச்சப்படுவான். பஸ் நிலையத்திலோ, ஃபாக்டரியிலோ

அவர்களை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனை பலரும் புத்தன், ஞானி என்று

அழைப்பார்கள்.





அவன் மன வாழ்க்கை வேறு தரத்தது. அதில் அபார அழகு கன்னியர்கள் உலவி அவனையே

எப்போதும் விரும்பினர். இன்றைய தமிழ், இந்தி சினிமாவின் அத்தனை கதாநாயகியரும்

நாராயணனுடன் ஒரு தடவையாவது பக்கத்தில் அமர்ந்து தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

எத்தனை அழகு என்று வியந்திருக்கிறார்கள்.





நாராயணனுக்கு கிருஷ்ன ன் என்றொரு சிநேகிதன். அவன் அடிக்கடி நாராயணனிடம் கலர்கலராக

சில போட்டோக்கள் காண்பிப்பான். ஐரோப்பா தேசத்து நங்கைகள் வெட்கத்தை அறைக்கு

வெளியில் கழற்றி வைத்துவிட்டு தத்தம் அந்தரங்களைப் பற்றி சந்தேகத்துக்கு எவ்வித

சந்தர்ப்பமும் தராமல் இதோ பார், இதைப் பார் என்று நாராயணனைப் பார்த்துச்

சிரிக்கும் படங்கள். படங்களை விட அந்தப் புத்தகங்களில் வரும் விளம்பரங்கள்,





சாதனங்கள் நாராயணனை ரொம்ப வருத்தின. இதெல்லாம் நம் நாட்டில் கிடைத்தால் என்னவா!

என் போன்ற தனியனுக்கு இந்த சாதனங்கள் சிறப்பானவை. பயமோ கவலையோ இன்றி எவ்வளவு

திருப்தியும் சந்துஷ்டியும் அளிக்கும்.




என்னதான் அழகாக அச்சிடப் பெற்றிருந்தாலும் சலனமற்ற இரு பரிமாணப் படங்களைவிட

சினிமாச் சலனம் சிறந்ததல்லவா? நங்கைமார் நகர்வதைத் தரிசிக்கலாம். கேட்கலாம்.

கிருஷ்ணப்பா சொன்னான், ”அத்தனையும் சென்சார் செய்யாத படம் வாத்தியாரே! நான்

எதிர்த்தாப்பலே தியேட்டருக்கு வாங்கியிருக்கேன். தினம் தினம் படத்தைவிட்டு

வெளியே வந்ததும் எப்படி இருந்தது சொல்லு. நானும் சொல்றேன்.”

நாராயணன் பார்த்த முதல் படம் ரஷ்யப்படம். சைபீரியாவின் பனிப்படலத்தில் எவ்வளவு

கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்து எண்ணெய் கண்டுபிடித்து.. படம் பூரா

ஆண்கள்,கிழவர்கள். பாதிப்படத்துக்கு மேல் பனிப்படலம். வெளியே வந்தால் போதும்

என்று இரண்டு மணி நேரத்தை இரண்டு யுகமாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.

கிருஷ்ணப்பா எதிர் தியேட்டரில் பார்த்த ஃபிலிமோத்சவப் படத்தில் ஐந்து நிமிடம்

விடாப்பிடியாக ஒரு கற்பழிப்பு காட்டப்பட்டதாம். கானடா தேசத்து படம்.






வர்ணித்தான். ”பார்க்கிறவங்களுக்கே சுந்த் ஆயிடுச்சி வாத்தியாரே!” நாராயணன்

இன்னும் ஒரு நாள் இந்த தியேட்டரில் பார்ப்பது.. அப்புறம் எதிர் தியேட்டரில்

மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தான்.

நாராயணன் பார்த்த இரண்டாவது படம் டிராகுலா பற்றியது. படம் முழுவதும் நீல

நிறத்தில் இருந்தது.

நீள நகங்களை வைத்துக்கொண்டு ராத்திரி 12 மணிக்கு கல்லறையிலிருந்து புறப்பட்ட

டிராகுலா அந்த அழகான பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவதற்குக் கிளம்பியபோது நாராயணன்

சிலிர்த்துக் கொண்டான். ஆகா, இதோ! ரத்தம் உறிஞ்சுவதற்கு முன்பு, இதோ ஒரு

கற்பழிப்பு, சிறந்த கற்பழிப்பு, அப்படியே அவள் கவுனைக் கீறிக் குதறிக்

கிழித்து, உள்ளுடைகளையும் உதறிப்போட்டு, மெதுவாக அங்கம் அங்கமாக அந்த நகங்களால்

வருடி, அப்புறம்தான் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போகிறது என்று

எதிர்பார்த்து ஏறக்குறைய நாற்காலியில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான்.

அந்தப் பாழாப்போன பெண், டிராகுலா அருகில் வந்ததும் தன் கழுத்தில் சங்கிலியில்

தொங்கும் சிலுவையைக் காண்பித்துவிட -வந்தவன் வந்த காரியத்தைப் பூர்த்தி

செய்யாமல், ஏன் ஆரம்பிக்கக்கூட இல்லாமல், பயந்து ஓடிப்போய் விடுகிறான். சட்!

என்ன கதை இது! நிச்சயம் இந்த தியேட்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்

சினிமாப்படங்கள் அத்தனையும் அடாஸ் என்று தீர்மானித்து வெளியே வர,

கிருஷ்ணப்பாவைச் சந்திக்கப் பயந்து, வேகமாக பஸ்ஸ்டாண்டை நோக்கி ஓட, கிருஷ்ணப்பா

பிடித்துவிட்டான்.






“என்னாப் படம் வாத்தியாரே! டாப்பு! அப்பன் தன் பொண்ன காணாம்னுட்டு தேடிக்கிட்டு

போறான். அவ, எங்க அகப்படறாத் தெரியுமா? செக்ஸ் படங்கள் எடுக்கறவங்ககிட்ட

நடிச்சிட்டு இருக்கா! எல்லாத்தையும் காட்டிடறான்! கொட்டகையிலே சப்தமே இல்லை..

பின் டிராப் சைலன்ஸ்.”





“கிருஷ்ணா, நாளைக்கு டிக்கட் மாத்திக்கிடலாம். நீ என் தியேட்டர்லேயும் நான் உன்

தியேட்டர்லேயும் பாக்கிறேன்!”

“நாளைக்கு மட்டும் கேட்காதே வாத்தியாரே! நாளைக்கு என்ன படம் தெரியுமா? லவ்

மெஷின், பிரஞ்சுப் படம். நான் போயே யாகணும்!”

“பிளாக்கில கிடைக்குமா?”

“பார்க்கிறேன்! துட்டு ஜாஸ்தியாகும். ஏன் உன் படம் என்ன ஆச்சு.”

“சே, பேசாதே! மரம் செடி கொடியைக் காட்டியே எல்லா ரீலையும் ஓட்டறான். நீ

எப்படியாவது எனக்கு பிளாக்கில ஒரு டிக்கட் வாங்கிடு. என்ன விலையா இருந்தாலும்

பரவாயில்லை!”





85 ரூபாய்க்கு ஒரு டிக்கட் மிகுந்த சிரமத்துடன் கிடைத்ததாக வாங்கி வந்தான்.

கிருஷ்ணா, “உன் டிக்கட்டைக் கொடு” என்றான்.

“இதை வித்து பார்க்க முடியுமான்னு சோதிச்சுட்டு அப்புறம் வர்றேன். நீ தியேட்டர்

போயிரு” என்றான்.

“படத்தின் பெயர் லவ் மெஷின் இல்லையாமே.”

“ஏதோ ஒரு மெஷின். கிராக்கிங் மெஷினோ என்னவோ! ஆனா படு ஹாட்! கியாரண்டி மால்.”

நாராயணன் பார்த்த அந்த மெஷின் படம் செக்கஸ்லோவேகியா படம். நிஜமாகவே ஒரு புராதன

சினிமா எந்திரத்தைப் பற்றியது. நடிகர்கள் ‘கப்ராஸ், கப்ராஸ்’ என்று வேற்று

மொழியில் பேசிக்கொண்டிருக்க, படத்தின் அடியில் ஆங்கில எழுத்துக்கள் நடுங்கின.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நாராயணனின் இங்கிலீஷ் அவ்வளவு வேகமாகப்

படிக்க வரவில்லை.





இரண்டு வார்த்தை படிப்பதற்குள் படக் படக் என்று மாறியது. படத்தில் மிக அழகான

இரண்டு பெண்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ஏராளமாக கவுன் அணிந்து வந்தார்கள்.

கதாநாயகன் அண்ணனா, அப்பனா, காதலனா, என்று தீர்மானிக்க முடியவில்லை. கவுன்

போட்டிருந்த பெண்கள் சாஸ்திரத்துக்கூட அந்த கவுன்களைக் கழற்றவில்லை. இண்டர்வெல்

வரை ஒரு பட்டன்? ம்ஹூம்! படுக்கையில் அவர்கள் படுத்ததுமே காமிரா நகர்ந்துபோய்

தெரு, மண், மட்டை என்ற புறக்காட்சிகளில் வியாபித்தது. ஒரே ஒரு இடத்தில்

சினிமாவுக்குள் சினிமாவாக பாரிஸ் நகரத்தின் எஃபில் டவர்முன் ஒரு பெண் தன்

பாவாடையைக் கழற்றுவதாக ஒரு காட்சி வந்தது. அதாவது வரப் பார்த்தது. அதற்குள்

காமிரா அவசரமாக அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகபாவங்களைக்

காட்டத் தலைப்பட்டது. வெளியே வந்தான். கிருஷ்ணப்பா நின்றுகொண்டிருந்தான்.

“என்ன? பார்த்தியா? படம் எப்படி?”



“நீ பாக்கலை?”



”நான் என் டிக்கட்டை விற்கலாம்னு போனேன்! யோசிச்சேன். இன்னிக்கு இங்கதான்

பார்க்கலாமேன்னு உன் டிக்கட்ல உள்ளே நுழைஞ்சேன். கிடக்கட்டும் உன் படம்

எப்படி?”




“நாசமாய்ப் போச்சு. ஒரு எழவும் இல்லை. படம் முழுக்க குதிரை வண்டி கட்டிகிட்டு

ஒரு ஆள் பயாஸ்கோப் வைச்சுக்கிட்டு ஊர் ஊராப் போறான்!”

நாராயணன் கிருஷ்ணப்பாவை சற்று தயக்கத்துடன் கேட்டான்.

“உன் படம் எப்படி?”

“செமைப்படம் வாத்தியாரே.”

நாராயணன் மவுனமானான்.




“வேஸ்ட் ஆறதேன்னு உட்கார்ந்தேன். படுகிளாஸ். ஒரு முத்தம் கொடுக்கிறான் பாரு,

அப்படியே அவளைச் சாப்பிடறான். ஆரஞ்சுப்பழம் உரிக்கிற மாதிரி உடுப்புகளை

ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா உருவி…”




“கிருஷ்ணா அப்புறம் பேசலாம். எனக்கு அர்ஜண்டா வேலை இருக்குது! வர்றேன்” என்று

விரைந்தான் நாராயணன். அவனுக்கு அழுகை வந்தது. கிருஷ்ணப்பா போன்ற எப்போதும்

அதிர்ஷ்டக்காரர்களிடம் ஆத்திரம் வந்தது. “நாளைக்கு எங்கே படம் பார்க்கிறே

சொல்லு…” என்று தூரத்தில் கிருஷ்ணப்பா கேட்டான். நாராயணன் பதில் சொல்லாமல்

நடந்தான்.




ரப்பர் டயர்வைத்த வண்டியில் பெட்ரமாக்ஸ் அமைத்து எண்ணெய் கொதிக்க

மிளகாய் பஜ்ஜி தத்தளிக்க பலபேர் தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிப்பெட்டிக்குள் பொம்மை நங்கைகளின் அத்தனை சேலைகளையும் உருவித்

தீர்க்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது. மெல்ல நடந்தான். இருட்டு ரேடியோக்

கடையைக் கடந்தான். ‘டாக் ஆஃப் தி டவுன்’ என்கிற ரெஸ்டாரண்ட் வாசலில் ஒரு

கூர்க்கா நிற்க, ஒன்றிரண்டு பேர் அங்கே விளம்பரத்துக்காக வைத்திருந்த

போட்டோக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று இரண்டு காட்சிகள்,

லிஸ்ஸி, லவினா, மோனிக்கா, டிம்பிள்.. நான்கு அபூர்வ பெண்களின் நடனங்கள்.

மேற்படி நங்கைகள் இடுப்பில் மார்பில் சில சென்டி மீட்டர்களை மறைத்துச்

சிரித்துக் கொண்டிருந்தார்கள்.






அந்த வாசல் இருட்டாக இருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டு ‘பதக்’ என்று

துப்பிவிட்டு ஒருத்தன் உள்ளே செல்ல, கதவு திறக்கப்பட்டபோது பெரிசாக சங்கீதம்

கேட்டு அடங்கியது.




உள்ளே செல்ல எத்தனை ரூபாய் ஆகும் என்று யாரைக் கேட்பது என்று தயங்கினான். அந்த

கூர்க்காவைப் பார்த்த மாதிரி இருந்தது. வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்லி

விடுவானோ? நடந்தான்.




சற்று தூரம் சென்றதும்தான் தன்னை ஒருவன் பின்தொடர்வதை உணர்ந்தான். முதலில் அவன்

பேசுவது புரியவில்லை. பின்பு தெரிந்தது. “ஆந்திரா, டமில்நாடு, குஜராத், மலையாளி

கேர்ள்ஸ் சார்! பக்கத்திலேதான் லாட்ஜ். நடந்தே போயிறலாம்.”

நாராயணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்து “எவ்வளவு” என்றான்.

அவன் சொன்ன தொகை நாராயணனிடமிருந்தது.

”பிராமின்ஸ் வேணும்னா பிராமின்ஸ், கிறிஸ்டியன்ஸ், முஸ்லீம்? வாங்க சார்!”

நாராயணன் யோசித்தான்.






“நிஜம் ஸார் நிஜம்; நிஜமான பெண்கள்!”




நாராயணன் “வேண்டாம்ப்பா” என்று விருட்டென்று நடந்து சென்றான்.



நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய், சிறுகதைகள்

முந்தானை முடிச்சு - சினிமா விமர்சனம்

http://tvshowz.in/uploads/posts/mundhanai-mudichu.jpg

 தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்களில் ஒன்று, ஏ வி எம் மின் உயர்ந்த பட்ச வசூல் கொட்டிய படம்,  இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கே பாக்யராஜின் மாஸ்டர் பீஸ் படம், எம் ஜி ஆரால் கலை உலக வாரிசு என கே பி யை அறிவிக்க வைத்த படம், முருங்கைக்காயை தாவர வயாக்ரா என உணர வைத்த படம் என பல அம்சங்கள் கொண்ட படம் முந்தானை முடிச்சு..

கதையோட ஒன் லைன் ரொம்ப சிம்ப்பிள் - ரெண்டாந்தாரமா வாக்கப்படற மனைவி மொத தாரத்துக்குழந்தையை சித்தியா கொடுமைப்படுத்தாம தன் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டா நல்லாருக்கும்  அவ்ளவ் தான்.. ஆனா அதுக்கான திரைக்கதை தான் கே பி யின்  மாஜிக் மந்திரம்

கிராமத்து நாட்டாமை பொண்ணு தான் ஹீரோயின்.. அவர் 3 சின்னப்பசங்களோட  அதிக்கலம் பண்ணிட்டு இருக்காரு.. ஐ மீன் ஜாலி விளையாடு , கலாட்டா.. அந்த ஊருக்கு புதுசா வாத்தியாரு வர்றார்.. அவர் தான் ஹீரோ.. கைக்குழந்தையோட  வர்றார்..

ஆரம்பத்துல அவரை கலாட்டா பண்ணுன ஹீரோயின் அவர் ஒரு விடோயர்னு தெர்ஞ்சதும் லவ்வறார்.. ஆனா ஹீரோவுக்கு சித்தி கொடுமை பற்றி பயம் இருப்பதால் அதுக்கு ஓக்கே சொல்லலை.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3guSskKsOLjpIxdSo4yFFMyfWGqFMEWC9GSo-hkhADy0q6f8Z7TbpmX8PQ-kMfWqEX3-k9qygNWTe8zLK6l9DyvvDiehNWzU7uPV3voNhBpG2IQnak0oHLydgKktQ3kyFb61AeIiVZYjb/s400/Mundhanai-Mudichu.jpg


ஹீரோயின் ஹீரோ தன்னை கெடுத்துட்டதா பொய்ப்புகார் கொடுத்து கட்டாயத்தாலி வாங்கிக்கறார்.. மேரேஜ் ஆனாலும் நோ கில்மான்னு ஹீரோ உறுதியா இருக்கார்.. அவர் மனசை ஹீரோயின் எப்படி மாத்தி தாம்பத்ய வாழ்க்கை வாழறார் என்பதே கதை..

படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான்..  சரியா 20 நிமிஷத்துக்கு ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. சுவராஸ்யமான சம்பவங்கள்னு படம் போர் அடிக்காம போகுது..


கே பாக்யராஜ் கிட்டே 2 பிளஸ் பாயிண்ட் 1. தன்னை முட்டாளா, அப்பாவியா சித்தரிச்சுக்கிட்டே அதுல புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவது.. 2. பெண்கள் ரசிக்கும் வண்ணம் இலை மறை காய் மறைவாக கிளு கிளு சமாச்சாரங்களை சாமார்த்தியமாகப்புகுத்துவது


முதியோர் கல்வித்திட்டத்தில் தீபா ஆ சொல்லித்தரும் காட்சியில் இவரது டச்.. அபாரம்.. தாலாட்டு பாடவா? என கேட்டு ஊர்வசி பாடும் விரகதாப வாய்ஸில் - ஆரிராரிரோ ஆராரோ எனும்போது இவர் காட்டும் முக பாவனைகள் , ரீ ஆக்‌ஷன் கல கல கலக்கல்.. 


பாடல் காட்சிகளில் இவர் எக்சசைஸ் பண்ணுவது கூட அனைவரையும் ரசிக்க வைக்கிறது. 


 ஊர்வசி - குறும்புத்தன நடிப்பிலும் சரி, செண்ட்டிமெண்ட் காட்சியிலும் சரி.. கலக்கி எடுத்துட்டார்.. ஆனா இவருக்கு ஹீரோ மேல காதல் வந்த மாதிரி காட்சிகள் சரியா, முறையா வைக்கப்படலைன்னு தோணுது. ஏதோ ஒரு பரிதாபத்தில் விரும்பற மாதிரி இருக்கு.. 



தவக்களை மற்றும் சுட்டிப்பசங்களோட அட்டகாசம் அழகு கிராமத்து எள்ளல்கள்.. கோவை சரளா  5 காட்சிகளில் வர்றார். அவரை இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம்.. 


http://www.tamilhitsmp3.com/img/movie/MundhanaiMudichu.jpg


அட்டகாசமான பாடல்கள்



1. டைட்டில் சாங்க் - வெளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்.. மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்


2. ஹீரோயின் சாங்க் - நான் புடிக்கும் மாப்பிள்ளை தான், நாடறிஞ்ச மன்மதன் தான். 


3. டூயட் சாங்க் - அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்.. 

4. தீபாவுடனான செம குத்தாட்டப்பாட்டு - வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி.. 

5. விரகதாப குரலில் வரும் தாலாட்டு போலிப்பாட்டு - ஆரிராரிரோ..ஆராரோ.. கண்ணைத்தொறக்கனும்  சாமி.. கையைப் புடிக்கனும் சாமி.. 


6. சோகப்பாட்டு - சின்னஞ்சிறு கிளீயே சித்திரப்பூவிழியே. 

 


படத்தின் சில பெருமைகள் 


1. இளைய ராஜா கே பாக்யராஜ் இணைந்த முதல் படம்

2. ஏ வி எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ் பி முத்துராமன் தான்.. அதை உடைத்து வேற்று ஆளை டைரக்டரா போட்டது இதுதான் முதல்.. 


3. முருங்கைக்காயை மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்படுத்திய படம்.  ( ஆனால் கில்மா உணர்வுகளை அது தூண்டுவதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை )


4. மிகக்குறைந்த முதலீட்டில் மிக பிரம்மாண்டமான வசூல் பெற்ற படங்களில் ஏ வி எம்க்கு இதுவும் ஒன்று ( மற்ற 2 1. பாட்டி சொல்லைத்தட்டாதே, 2.  சங்கர் குரு)


5. அறுவடை நாள் ஆர் பி விஸ்வம்,( அசிஸ்டெண்ட் டைரக்டராக, வசனகர்த்தாவாக ), ஊர்வசி, தவக்களை, தீபா, கோவை சரளா  இதில் தான் புகழ் பெற்றார்கள்




http://www.123kerala.com/chithram/unnimeri/deepa19.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. பையனை அப்படியே விட்டுட்டு வர்றீங்க, எப்படி அவன் கிணத்துல இருந்து வெளில வருவான்?


 அவன் பல்லிக்கு பிறந்த பையன்ங்க. எப்படியாவது தொத்திக்கிட்டு வந்துடுவான்



2.  அப்பா, நம்ம சாதி சன மாப்ளை எனக்கு வேணாம். எல்லாரும் சின்ன வீடு வெச்சிருக்கானுங்க.. ஏன். நீயே வாரா வாரம் சனிக்கிழமை சின்னமனூர் போறீயே?


3. பையன் நம்ம பையனா?

 எம் பையன்


4. பையன் சிவப்பா , துறுதுறுப்பா அழகா இருக்கான். 


 அவன் என் பையன்


 அதான் சந்தேகமா கேட்டேன்


5. எங்கப்பாவையா பார்க்க வந்திருக்கீங்க?

 உங்கப்பா யார்னு எல்லாம் எனக்கு தெரியாது, இந்த ஊர் நாட்டாமையை பார்க்க வந்திருக்கேன் ( பஞ்சாயத்து தலைவர்)


 அவர் தான் எங்கப்பா 




6. நல்ல முட்டையை கடைல வாங்க ஒரு வழி இருக்கு.. 3 முட்டையை வரிசையா ஒன்றன் மேல் ஒன்று அடுக்குனா நல்ல முட்டையா இருந்தா  நடுவால இருக்கற முட்டை சுத்தும் ( தலை சுத்துது)


7.  அய்யா சாமி...... ( பிச்சைக்காரனின் குரல்)


என்ன? கத்திரிக்காய் சாம்பாரா?

 ஆமாங்க, முருங்கைக்காய் கூட்டு எல்லாம் இருக்கு 

 ஹூம்



8. ஏங்க.. அந்த வழியா யாராவது பாத்திரத்தோட போறதை பார்த்தீங்களா?

அட போய்யா, நானே  என் பொண்டாட்டியை  காணோம்னு தேடிட்டு இருக்கேன். 


ஓ! நம்மளை விட  கஷ்டம் உள்ள ஆளுங்க எல்லாம் இருக்காங்க போல . 



9.  குழந்தை சாப்பிட்டாச்சா? 


 நல்ல வேளை பால் புட்டியை இங்கே வெச்சிருந்தேன், இல்லை, பசங்க இதையும் ஒரு ஆத்து ஆத்தி இருப்பாங்க 



10. என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ ஒரு கையை மட்டும் தூக்கி. என்ன படிப்போ..?


சரிங்க.. இனி அப்படி பண்ணிடறேன்


என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ என்னமோ திருப்பதி ஏழுமலையானை கும்பிடற மாதிரி 2 கையையும் தூக்கி சொல்லிட்டு . சும்மா வாய்ல வணக்கம் சொன்னா போதாதா?


11. ரொம்ப நன்றி.. 


 தாங்க்ஸ். நாங்களும் டென் த் வரை படிச்சிருக்கோம்


12. அத்தை.. பழைய மாப்ளையா உரிமையோட என்னை பார்க்க எப்போ வேணாலும் வாங்க, ஆனா புது மாப்ளை ஆக்க ஏதாவது திட்டம் இருந்தா தயவு செஞ்சு இந்தப்பக்கமே வராதீங்க


13.  அக்கா, வாத்தியார் மயக்கமா இருக்கார்.. தண்ணி தெளி


. தண்ணி தெளிச்சா உடனே எந்திரிச்சு போயிடுவார்.. கொஞ்ச நேரம் இருக்கட்டும் அப்படியே. 


14. டேய். நான் எப்படி இருக்கேன்?


 ஹூம்.. எனக்கு வயசு பத்தலையேன்னு வருத்தமா இருக்குக்கா.. 



15. பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்ளை. 


16. மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 வாத்யாரய்யா மணீ எவ்ளவ்? மாட்டை சினைக்கு ஓட்டிட்டுபோகனும்.. 

இதுக்குத்தான் ஸ்கூல் பெல்லா?


 சொல்லாட்டிப்போய்ய்யா , என்னமோ இந்தாள்ட்ட  மட்டும் தான்மணி
இருக்கற மாதிரி அலட்டிக்கறீரே?


மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 சுதந்திரம் வாங்கித்தராமலே இருந்திருக்கலாம்


17.  புருஷன் கிழிச்ச கோட்டை தாண்டுனா பொண்டாட்டிக்கு கேடுன்னு ராமாயணத்துல படிச்சிருக்கேன்

 அது ராமர் கிழிச்ச கோடில்லை. லட்சுமணன் கிழிச்ச கோடுங்கோவ்.. 


 ஏதோ ஒண்ணு




இலை மறை காய் மறைவாக சொல்லப்பட்ட கிளு கிளு கில்மா வசனங்கள்
1. வாத்தியாரே, புதுசா வந்திருக்கீங்க. அப்படி என்ன தான் செய்யறீங்கன்னு ஆசையா வந்து பார்த்தா ரொம்பத்தான் சலிச்சுக்கறீங்களே?ஹூக்க்ம்
2.  யோவ், உனக்கு ஏதாவது பண்ணனும் போலவே இருக்குயா. 
 நீ எதுவும்  பண்ண வேணாம்.. இடத்தை காலி பண்ணு போதும்.. 
3.  போம்மா போ.. நாட்டாமை கூப்பிடறார் இல்ல? உள்ளே போ..  ஹூம், போன வருஷம்  நான் தான் நாட்டாமை. 
4.  பொண்ணை பார்க்கறதுன்னா மூஞ்சியை பார்த்து பேசனும். எங்கெங்கோ பார்த்துப்பேசுனா?
5. ஸ்ஸ்ஸ்சார்.. உங்க கிட்டே புது சாக்பீஸ் இருக்கா? எனக்கு வேணும்..
6. கல்யாணம் புதுசா ஆனவரு ஹோட்டல்ல சாப்பிட வந்திருக்காரே?
 பொண்டாட்டியை சமைக்க விட்டா நைட்ல களைப்புல அது தூங்கிடும். அதான்.. வாத்தியாரு விபரமானவருதான்
7. நீ எதுக்காக இங்கே டிரஸ் சேஞ்ச் பண்றே?
 உனக்குத்தான் இதெல்லாம் ஆகாதே, ஏன் வேடிக்கை பார்க்கறே?
8.  ஏய்.. முந்தானையை ஒழுங்கா போடு.. 
 தூக்கத்துல அப்டி இப்டி விலகறதுதான்
9. எப்படி ஆ போடறதுன்னு சொல்லித்தர்றேன்
 ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
 டீச்சர். இன்னொருக்கா?
 ஆமாமா, ஒரு டைம்லயே எல்லாத்தையும் கத்துக்க முடியாது//
10.  டீச்சர், நான் போட்டா கோனையா (க்ராஸ்) வரும்ங்க
 கொஞ்சம் கூட சொந்தமா முயற்சியே பண்ண மாட்டேங்கறீங்களே?
இளைய ராஜாவின் கலக்கல் பின்னணி இசை ( இடைவேளை ட்விஸ்ட் )
இயக்குநரிடம் சில சந்தேகங்கள்
1. ஹீரோயின் ஹீரோவால கெடுக்கப்பட்டதா பஞ்சாயத்துல பொய் பிராது கொடுக்கறா. படத்தோட மெயின் முடிச்சு இது. வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ணிட்டா மேட்டர் தெரிஞ்சுடும். கிராமத்துல ஏது அந்த வசதின்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. ஏன்னா க்ளைமாக்ஸ்ல அதே ஹீரோயின் கன்னி கழியாம கருத்தடை ஆபரேஷன் பண்ணபோறப்ப டாக்டர் அவருக்கு ஆபரேஷன் பண்ணாம மயக்கப்ப்படுத்தி வெச்சிருந்து ஹீரோ கிட்டே ஹீரோயின் இன்னும் கன்னி கழியாதவர்னு சொல்றார்..  
இந்த லாஜிக் மிஸ்டேக்கை சரி பண்ண படத்துல ஒரு கிராமத்து மருத்துவச்சி ஹீரோயின் கிட்டே பணம் வாங்கிட்டு உடந்தையா இருந்த மாதிரி காட்டி இருக்கலாமே?
2. ஹீரோ  மனைவியை இழந்தவர் என்ற செய்தி கேட்டு ஹீரோயின் திடுக்கிடுவது ஓகே.. ஆனா அதுக்கான எக்ஸ்பிரஷன் ஓவர் ரீ ஆக்‌ஷன். 
3. சாமியார்னா அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை காவி டிரஸ் தான். ஏன் மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாரு ஹீரோ இன் கண்ணைத்தொறக்கமுன் சாமி பாட்டுல ..  ( சித்து பிளஸ்டூ ல  இதே ரீமேக்  ரீ மிக்ஸ் சாங்க் ல அந்த தப்பை சரி பண்ணி இருப்பீங்க.. )
4. படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் வலியனா புகுத்தப்பட்டவை.. அவை இல்லாமலேயே விறு விறுப்பு கூட்டி இருக்க முடியும்.. 
1983 இல் இந்தப்படம்  ரிலீஸ் ஆச்சு. 

விளையாட்டு வீராங்கனை பிங்கி - ஓ பக்கங்கள் ஞானி கட்டுரை

http://www.competenetwork.com/images/stories/bloggers/ty-06-12/pinki-pramanik.jpg

பக்கங்கள்

பதில்கள் தேடும் கேள்விகள்...

ஞாநி

நீ ஆணா, பெண்ணா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நெருக்கடியை நம்மில் பெரும்பாலோர் சந்திப்பதே இல்லை.
ஆனால் இந்த நெருக்கடியை சந்திக்க வேண்டி வருவோரின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதன் அடையாளமாகத் தான் இன்று விளையாட்டு வீரர்கள் பிங்கியும் சாந்தியும் இருக்கிறார்கள்.
இந்திய தடகள வீராங்கனைகளான இருவரின் வாழ்க்கையும் அவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியால் நரகமாக்கப்பட்டுவிட்டது. இவர்களின் பிரச்னையைப் புரிந்துகொள்ளுவதற்கு முதலில் இயற்கை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும், ஆண், பெண் என்ற வரையறை இயற்கை ஏற்படுத்தியதல்ல. நாம் ஏற்படுத்தியதுதான். இயற்கை நாம் ஆண் என்று சொல்லும் வடிவத்துக்கும் பெண் என்று சொல்லும் வடிவத்துக்கும் இடையில் எண்ணற்ற வடிவங்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அறிவியல் அவற்றை அறிந்திருக்கிறது. ஆனால் சமூக ரீதியில் அவற்றுக்கெல்லாம் நாம் உரிய பெயர் சூட்டி வகைப்படுத்தி அங்கீகரிக்கத் தவறியிருக்கிறோம் என்பதுதான் அசல் பிரச்னை.
உடல்ரீதியாக அறிவியல் முற்றிலும் இது ஆண் உடல் என்றும் இது பெண் உடல் என்றும் வரையறுக்கும் உடல்கள் அமையப் பெறாமல் இரு தன்மைகளும் வெவ்வேறு விகிதங்களில் அமைந்த உடல்களைப் பெற்றவர்களை நம் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவர்களுக்கு உடல் எப்படி இருந்தபோதிலும் மன ரீதியாக தன்னை ஆண் என்று உணர்ந்தால் ஆணாகவும், பெண் என்று உணர்ந்தால் பெண்ணாகவும் அறிவித்துக் கொள்ளும் உரிமையை நம் சமூகம் வழங்குகிறதா? அல்லது இரண்டுமில்லாத மூன்றாம் பாலினம் என்று தன்னை அறிவித்துக் கொண்டால், அதற்குரிய சட்ட அங்கீகாரமும் சமூக வசதிகளும் இன்னமும் இல்லையே?


http://timesofindia.indiatimes.com/photo/14151694.cms
இந்தத் தீர்க்கப்படாத சமூக சிக்கல்களை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்தும் விதத்தில்தான் விளையாட்டுத் துறையில் ஏற்படும் சர்ச்சைகள் அமைகின்றன.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கிக்கு இப்போது வயது 26. பதினேழு வயதிலேயே ஆசிய உள்விளையாட்டுரிலே ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றவர். பின்னர் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம். அடுத்து ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம். தொடர்ந்து விபத்துகளினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிங்கி மறுபடியும் தேறி வந்து களத்தில் இறங்கியபோது, அவருக்கு எதிராக அவருடன் இருந்த ஒரு பெண் பாலியல் வன்முறை புகார் கொடுத்ததையடுத்து கைதானார். பிங்கி ஆண் என்றும் தன்னிடம் கட்டாய உடல் உறவு கொள்ள முயன்றார் என்றும் புகார். கைது செயப்பட்ட பிங்கிக்கு பாலியல் சோதனைகள் செய்யப்பட்டன.
தனியார் மருத்துவமனையில் பிங்கிக்கு நடந்த உடல்சோதனையின் வீடியோ படங்கள் செல்போன்களிலும் இணையத்திலும் பரப்பப்பட்டன. தனியார் மருத்துவமனை சோதனை பிங்கியை ஆண் என்று முடிவு செய்தது. ஆனால் இதை பிங்கி ஆட்சேபித்ததையடுத்து அரசு மருத்துவ மனையில் சோதனைகள் செய்யப்பட்டன. அதில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அடுத்து பிங்கியின் குரோமோசோம் பேட்டர்ன் சோதனை செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
பிங்கி மீது முதலில் பாலியல் வன்முறை புகார் செய்த பெண் தான் பொய்ப் புகார் கொடுத்ததாக இப்போது சொல்லியிருக்கிறார். பிங்கிக்கு அரசு கொடுத்த நிலத்தை அவரிடம் வாங்கிய அவதார் சிங் தூண்டுதலில் பொய்ப் புகார் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த அவதார் சிங் ஏற்கெனவே கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்திய குற்றத்தில் கைதானவர். அவர் மனைவி ஜோதிர்மயியும் தடகள வீராங்கனை. பிங்கியுடன் சேர்ந்து ஓடியவர். மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யாக இருந்தவர்.
பிங்கிக்கும் ஜோதிர்மயி கணவருக்கும் நிலத்தகராறு, பணத்தகராறு என்பது தனி விஷயம். அரசு விளையாட்டு வீரர்களுக்குக் கொடுத்த நிலத்தை அவதார் சிங் அவர்களை மிரட்டி கம்மி விலைக்கு வாங்கிக் கொள்கிறார் என்பது அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
http://i.telegraph.co.uk/multimedia/archive/02249/pi_2249658b.jpg
ஆனால் இந்த பணத் தகராறினால், பிங்கியின் பாலின அடையாளம் பிரச்னையாக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு அவர் தடகளப் போட்டிகளில் மெடல்கள் வென்றபோதெல்லாம் யாரும் அவரை ஆணா பெண்ணா என்று கேட்கவில்லை.


அடையாள சர்ச்சையில் சிக்கி சீரழிக்கப்பட்டவர் தமிழ்நாட்டின் சாந்தி சவுந்தரராஜன். இப்போது 31 வயதாகும் சாந்தி 11 சர்வதேச மெடல்களும் 50 உள்ளூர் மெடல்களும் வென்றவர். 2006ல் கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். சில சக வீரர்கள் ஆட்சேபித்ததையடுத்து அவருக்கு பாலியல் சோதனை செய்யப்பட்டது. அவரை பெண்ணாகக் கருத முடியாது என்று முடிவு செய்து கொடுத்த மெடல் பறிக்கப்பட்டது.
உண்மையில் சாந்தியின் பிரச்னை வேறு. பெண்ணாகவே பிறந்தபோதும் ஆண்ட் ரோஜென் சென்சிட்டிவிட்டி சிண்ட்ரோம் என்ற குறைபாட்டுடன் அவர் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குறைபாட்டினால், பெண் உடல் இருந்தபோதும் பெண் தன்மைக்குரிய சுரப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சாந்திக்காக இந்திய அரசோ, தமிழக அரசோ, ஆசிய விளையாட்டு நிர்வாகத்துடன் சண்டையிட்டதாகத் தெரியவில்லை. இப்போது சாந்தி வறுமையினால் தினக்கூலி வேலைக்குச் செல்வதாக செய்திகள் வெளியானபின், அரசு தரப்பில் இருந்து ஆதரவுக் குரல்கள் வருகின்றன. முதலில் சாந்தி ஏன் தினக் கூலியானார் என்பதே மர்மமாக இருக்கிறது. 2006ல் அவரது மெடல் பறிக்கப்பட்டபோதும் கூட, அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சாந்திக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தார். ஓராண்டு கழித்து மனஉளைச்சலினால் சாந்தி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி தருவதற்கான மையத்தை சாந்தி தொடங்கி நடத்தி வந்தார். அதில் 2009ல் 68 பேர் பயிற்சி பெற்றதாகவும் அவர்களில் சிலர் சென்னை மாரத்தானில் பரிசுகள் வென்றதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் மூன்றே வருடங்களில் சாந்தி தினக்கூலியானது ஏன் என்று புரியவில்லை. பரிசுப் பணம் சாந்தியின் சகோதரி திருமணச் செலவிலும் சகோதரர் படிப்புச் செலவிலுமாக தீர்ந்துபோய் விட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மையானால், லட்சக் கணக்கில் தங்களுக்காக செலவு செய்த சாந்தியை அவரது சகோதரரும் சகோதரியும் தினக்கூலியாளாக போக விட்டுவிட்டது நம் குடும்ப அமைப்பின் கோளாறையே காட்டுகிறது.



http://timesofindia.indiatimes.com/photo/14426411.cms
இப்போது மத்திய விளையாட்டு அமைச்சர் அஜமக்கான் தென் ஆப்ரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்காக அந்த நாட்டு அரசு போராடியதைப் போல சாந்திக்காக இந்திய அரசு போராடுமென்று அறிவித்திருக்கிறார்.
இந்தியாவைவிடப் பின் தங்கிய நாடாகக் கருதப்படும் தென் ஆப்ரிக்கா காஸ்டர் செமன்யாவுக்காகப் போராடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட இந்தியா இதுவரை சாந்திக்காக செய்யவில்லை. 2006ல் மெடல் பறிக்கப்பட்ட உடன் போராடாமல் விட்டுவிட்டு 2012ல் என்ன, எப்படி போராடுவார்கள் என்று தெரியவில்லை.

காஸ்டர் செமன்யாவின் விஷயத்தில் மிக முக்கியமான அம்சம் அவர் ஆணா பெண்ணா என்று நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவைக் கூட பகிரங்கப்படுத்த அவர் தடை வாங்கியிருப்பதுதான்.
செமன்யா 2008ல் உலக ஜூனியர் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர்.
செமன்யா 2009ல் 800 மீட்டர் ஓட்டத்திலும் 1500 மீட்டர் ஓட்டத்திலும் உலக ரிக்கார்டுகளை ஏற்படுத்தியதும், அவரது பாலியல் அடையாளத்தை சோதிக்க சர்வதேச தடகளக் கூட்டமைப்பு நட வடிக்கை எடுத்தது.
உடனே இதற்கு பெரும் எதிர்ப்பு பல்வேறு விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்ல, தென் ஆப்ரிக்க அரசிடமிருந்தே வந்தது. செமன்யாவுக்கு சரியான ஆலோசனை சொல்ல தவறியதற்காக அவரது கோச் ராஜினாமா செய்தார். தென் ஆப்ரிக்க அரசின் அறிவுரைப்படி செமன்யா, மிகப்பெரிய சட்ட நிறுவனத்தை தன் வக்கீலாக நியமித்தார். சோதனை முடிவுகளை வெளியிட கோர்ட்டில் தடை வாங்கப்பட்டது. தனக்கு தந்த மெடலையும் பணத்தையும் செமன்யா வைத்துக் கொள்ளலாம் என்று தென் ஆப்ரிக்க அரசு அறிவித்தது. ஒரு பெண் எப்போது பெண் தன்மையற்றவராகக் கருதப்படுவார் என்பது பற்றிய சர்வதேச தடகளக் கூட்டமைப்பின் விதிகள் தெளிவாக இல்லை என்று தென் ஆப்ரிக்க அரசு கூறிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வருட லண்டன் ஒலிம்பிக்சில் தென் ஆப்ரிக்க அணியின் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வர இருப்பவர் செமன்யாதான்.
செமன்யா விஷயத்தில் தென் ஆப்ரிக்க அரசு நடந்துகொண்டதைப் போல இங்கே சாந்திக்கு நடக்காமல் போனதற்குக் காரணம், இங்கே இருக்கும் மத்திய அரசுக்கும் சரி மாநில அரசுக்கும் சரி, விளையாட்டுத் துறையிலும் கொள்கைகள் சீராக இல்லை. பாலியல் அடையாளங்கள் பற்றிய அரசுக் கொள்கை என்பது ஒன்று இல்லவே இல்லை.
மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டியதும் சாந்திக்காகக் குரல் கொடுத்து ஓடிவரும் தொழிலதிபர்களும் அரசியல் வாதிகளும் இதையும் இன்னொரு தானதர்மமாகக் கருதாமல், இப்போதேனும் தெளிவான பாலியல் அடையாளக் கொள்கையை நம் அரசுகள் வகுக்க வற்புறுத்தவேண்டும்.
அவை உருவாகும்வரை சாந்திகளும் பிங்கிகளும் நம் சமூகத்தில் சர்ச்சைகளாகவும் கேலிப் பொருட்களாகவும் மட்டுமே இருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை.


http://static.sify.com/cms/image//mhln4mbjddf.jpg

தன் தந்தையுடன் பிங்கி
இந்த வார யோசனை!

கொடநாட்டுக்கு அதிகாரிகளை ஜெயலலிதா அடிக்கடி வரவழைப்பதால், அங்கே போவரும் வழிகளை நன்றாக பராமரிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே ஜெயலலிதா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டமாக தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அங்கே போயிருந்து ஆட்சி நடத்தும்படி பரிந்துரைக்கிறேன்.
இந்த வாரத் திட்டு!

காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரங்களை நடத்துவதற்காக தன் அமைச்சக வேலைகளை கவனிக்காமல் வேலை நிறுத்தம் செத ஷரத் பவாருக்கு .வா.தி. பல மாநிலங் களில் வறட்சி மிரட்டும் நேரத்தில் விவசாய அமைச்சர் வேலைக்குச் செல்லாமல் ஸ்டிரைக் செதது கேவல மானதாகும்.
நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி