Showing posts with label KALKI. Show all posts
Showing posts with label KALKI. Show all posts

Saturday, July 13, 2013

கிழியும் முகத்திரை-பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு!


கிழியும் முகத்திரை

பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு!

ரமணன்

நீங்கள் தமிழனா, மலையாளியா, பெங்காளியா யாரா இருந்தால் என்ன? உங்களின் மெயில், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், இன்டர்நெட்டில் அனுப்பப்படும் போட்டோக்கள், ஸ்கைபில் பேசுவது, யு டியுபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுத் துறையால் எப்போது வேண்டுமானாலும் சர்வரிலிருந்து நேரடியாகப் பெற்றுப் பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். அதற்கான அதிகாரமும் அத்தனை வசதிகளும் அவர்களிடம் இருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன, இந்தத் திட்டத்துக்குபிரிசம்’ (PRISM) என்று பெயர்.


உலகம் முழுவதும் உள்ள தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல் இதுஎன்ற அதிர்ச்சியான தகவலை, கடந்த வாரம் புகழ்பெற்ற தினசரிகார்டியன்வெளியிட்டது. ‘கார்டியன்இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்கங்களுக்கும் பெயர் பெற்றது. தொடர்ந்துவாஷிங்டன் போஸ்ட்தினசரியும் இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது.

NSA தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவுத் துறையின் ஓர் அங்கம். 1952லேயே தொடங்கப்பட்ட இது, முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது என்பதே தெரியாத அளவுக்கு ரகசியமானதாக இருந்தது. NSAஎன்றால்நோ ஸச் ஏஜென்சிஎன்றுகூட கிண்டல் செய்யப்பட்டது. 1975 முதல் இது வெளிநாடுகளில் அமெரிக்கப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய நபர்களின் செய்தித் தொடர்புகளைக் கண்காணிக்கிறது.





 அமெரிக்க மக்களின் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்று இதன் அன்றைய தலைவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகித் தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான் இப்போது அமெரிக்கா மட்டுமில்லை... உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்கத்துக்குள் ஊடுருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். என்.எஸ்.. இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000 பேருக்கு மேல் பணியாற்றும் (பலர் ராணுவ சேவை என்ற போர்வையில்) நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் நிறுவி உலகின் மிகப் பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்புப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம் மட்டும் இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்தியச் செய்திகளை!


அமெரிக்கச் சட்டத்தின்படி அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டவரின் தொலைபேசி மற்றும் எந்த ஒரு செய்தித் தொடர்புகளையும் கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய ஆணையை வாரண்ட்டாகப் பெற வேண்டும். இது செனட் கமிட்டிக்குத் தெரிவிக்கப்படும். ஆனால் இப்போது இது என்.எஸ்..வின் நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார். அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் யாருடைய இன்டர்நெட் கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஒபாமா அதன் ஆயுட்காலத்தை இப்போது நீட்டித்திருக்கிறார். ஒபாமா தன் முதல் தேர்தலில்புஷ் நிர்வாகத்தில் அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளைகண்டித்தவர்.

செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கிக் கொண்டிருந்தபோது, ‘பிரிசம்பற்றி எங்களுக்குத் தெரியாதே! நாங்கள் கோர்ட் கேட்கும் தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இன்டர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா கம்பெனிகளின் அறிக்கைகளும் ஒரே மாதிரியான வாசகங்களைக் கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரியவில்லையா? எனக் கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட்.



 அமெரிக்க அதிபர் ஒபாமாதேச நலனுக்காகச் செய்யப்படும் விஷயங்களில் எந்த நிர்வாகமும் 100% பாதுகாப்பும், 100% தனி உரிமையையும் 0% யாருக்கும் தொல்லையில்லாத வாழ்க்கையையும் அளிக்க முடியாதுஎன்று சொல்லி இருப்பது அவரின் ஆசியுடன்தான் இந்த விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்கிறது. பிரிசம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்கப்பட்டிருந்த 41 ஸ்லைடு ((power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சத்துக்கு வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம் லீக் ஆனது என்பதை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ‘மக்கள் நலன் கருதி சொன்னது நான்தான்என எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் என்.எஸ்..வின் முன்னாள் ஊழியர்.

இணைய உலக வாசிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை எழுப்பக் காத்திருக்கின்றன. மீடியாக்கள் எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலைச் சந்தித்து, பிரச்னை குறித்துப் பேச இருக்கிறார்கள்.


எது எப்படியோ... இனி மெயில் எழுதும்போதும் ஃபேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள். பெரிய அண்ணன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.


thanx-kalki

Tuesday, January 22, 2013

அழகிரி அதிமுக வில் அம்மாவுக்கு வாரிசாவாரா? ஓ பக்கங்கள் ஞாநி அலசல்


ஓ பக்கங்கள்

ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா?

ஞாநி

ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 


இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.



ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார்.


ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.


ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.


ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும்.


அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை.


தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.

குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.


ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.


இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.


அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை.


அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம்.

ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.


கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார்.

தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.


அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.

இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?

கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை.

தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.


நன்றி - கல்கி , புலவர் தருமி 

Monday, January 21, 2013

கடல்-துளசி-15 - லிப் கிஸ்-ஏன்? - ஓ பக்கங்கள் ஞாநி ???? VS மணிரத்னம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAHmoyVck_8G2iLYlVZOE0N2bFoixi3uf5QK0WZYqnKhLBRVQ_YbnPqHy7DpT55JrRvNA7NxeJogylp0O66qcYCIZK6Xscwt-eFQvWGWi03Io8kBNFvSOszoLqkxiv2Z1g_yoiHSTTbg5w/s1600/Kadal+Unseen+Movie+Posters+(4).jpg

ஒரு முத்தம்; பல கேள்விகள்!

ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக், சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.


 http://tamilspicy.com/wp-content/plugins/wp-o-matic/cache/acabe15c6d_kadal-nenjukule-picturized.jpg



நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் :

15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா?

படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா?

பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா?

இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா?

தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த ஃபேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன்?"


இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை. என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 http://www.cutmirchi.com/upimages/1358430697_0.jpg




உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா ராதாவுடையதுதான்.


இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட வேண்டும்.


அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர். ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.


சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக பலப்படுத்துகின்றன.


தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான்.


இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.


http://newindianexpress.com/incoming/article1423224.ece/ALTERNATES/w460/Thulasi.jpg

அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.


என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.

குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.


எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.


பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.


காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.



thanx - kalki , pulavar tharumi

http://moviegalleri.net/wp-content/gallery/thulasi-nair-at-kadali-audio/actress_thulasi_nair_hot_photos_kadali_audio_launch_0407aa0.jpg

Friday, January 18, 2013

27 நட்சத்திரத்துக்கான ஒரு வருட பலன்கள்- 2013 part 2



விசாகம் 1,2,3 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் குரு பகவான். இவர் தன காரகர் மற்றும் புத்திர காரகர் ஆவார். உமது ராசிக்கு 3ஆம் இடமான தைரிய ஸ்தானம் மற்றும் 6ஆம் இடமான ரோக ருண ப்ராப்த ஸ்தானம் ஆகியவற்றுக்குடையவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் வருவதால் போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பணம் கையாளும் பொறுப்பில் இருக்கும் அனைத்துப் பிரிவினரும் மிகவும் கவனமுடன் கடமையைச் செய்யவும். விவாகரத்து வழக்கில் இழுபறி நிலவும். அறுவை சிகிச்சைக்கு முனைவோர் அதனை ஒத்திப் போடுவது நன்று.
ஒருமுறை ஆலங்குடி, திருச்செந்தூர், திருவலிதாயம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வரவும். ஓம் குருப் பரம்மனே நம’- என்று தினசரி 108 முறை ஜபிக்க நன்று. கந்த சஷ்டி கவசம்’, ‘ஸ்கந்த குரு கவசம்’, ‘சண்முகக் கவசம்’, ‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம்இவற்றில் ஏதாவது ஒன்றினை தினசரி பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 3,4, 6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு பகவான் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விசாகம் 4ம் பாதம்: உமது நட்சத்திர நாதன் குரு பகவான்: அவர் தன, புத்திர காரகர் ஆவார். அவர் உமது ராசி 2ஆம் இடம் என்னும் தனம் வாக்கு நேர்கிற ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் என்னும் 5ஆம் இடத்துக்கும் உடையவர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் உதயமாவதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் சுமுக உறவைப் பராமரிக்கவும். கண் சம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. எனினும் குரு பலம் மற்றும் குரு பார்வை 2ம் வீட்டுக்கு இருப்பதால் அச்சமடையத் தேவை இல்லை. பாகப் பிரிவினையை தற்சமயம் வற்புறுத்த வேண்டாம். குரு யந்திரம் பூஜிக்கவும். குருவின் ஆசியைப் பெறுவது நன்று. குரு கவசம்படிக்கவும். கந்தசஷ்டி கவசம்பாராயணம் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு பகவான் / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு

அனுஷம்: உமது நட்சத்திரநாதன் சனி பகவான். அவர் ஆயுள் காரகர். உமது ராசிப்படி 3 ஆம் இடமான வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானம் 4ஆம் இடமான சுக, வாகன, கல்வி மற்றும் மாத்ரு ஸ்தானம் ஆகியவற்றுக்கு உடையவர். புத்தாண்டு பிறப்பு சம்பத் தாரையில் வருவதால் சரளமான பணப்புழக்கம் உண்டாகும். வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் ஏற்றம் அடைவர். பிரயாணங்கள் நல்ல பலன் தரும். பழைய வீட்டைப் புதுப்பிக்கலாம். புதிய வீடு, மனை, பூமி, வண்டி, வாகனம் வாங்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம். தினசரி வெங்கடேச சுப்ரபாதம்கேட்கவும். பிரதி சனிக்கிழமை வெங்கடாஜலபதியை வழிபடவும். நவக்கிரகத்துக்கு தீபம் ஏற்றவும். சுதர்ஸன அஷ்டகம்பாராயணம் செய்க. ஒருமுறை திருப்பதி மற்றும் மதுரை அருகே உள்ள திருமோகூர் சென்று வரவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,4,6,9 / அதிர்ஷ்ட திசை: மேற்கு/ அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாசலபதி / அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கேட்டை: உமது நட்சத்திர நாயகன் புதன். அவர் உமது லாப ஸ்தானம் என்னும் 11ஆம் வீட்டுக்கும் உடையவர் ஆவார். வித்யா புத்தி, தொழில் ஆகியவற்றுக்கு புதன் காரகத்துவம் வகிக்கிறார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் ஜென்ம தாரையில் வருவதால் உடல் நலனில் கவனம் தேவை. கண் சம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. கவனம் தேவை.
ஒருமுறை திருவெண்காடு புதன்ஸ்தலம், குருவாயூர் சென்று வருக. கிருஷ்ணக்கவசம், சுதர்ஸன அஷ்டகம், பஜகோவிந்தம் பாராயணம் செய்ய நன்று. இயன்றவர்கள் சுதர்ஸன ஹோமம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,5,6,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சக்கரத்தாழ்வார் மற்றும் குருவாயூரப்பன் / அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மூலம்: உமது நட்சத்திர நாயகன் கேது பகவான். இவர் ஞான காரகர். ஞான மார்க்கம், இறை வழிபாடு, ஆராய்ச்சி, முனைவர் பட்டம் பெறுவது போன்றவற்றுக்கு இவரே காரகத்துவம்.
புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சம்பத் தாரையில் வருவதால் தெய்வ பலம் மிகும். பிரார்த்தனைகள் நடந்தேறும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை.
கேது ஸ்தலமான கீழ்ப் பெரும்பள்ளம், விருத்தாசலம் என்ற திருத்தலத்தில் உள்ள ஆழத்துப் பிள்ளையார், காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்த சுவாமி, குடை வரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்பட்டி போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட நன்று.
விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய ஸித்திமாலை, கணேச புஜங்கம், ருணஹர கணபதி ஸ்தோத்திரம் படிக்க நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,7 / அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர் மற்றும் சித்திரகுப்த சுவாமி / அதிர்ஷ்ட திசை: கன்னிமூலை என்னும் நிருதி திசை (தென்மேற்கு) / அதிர்ஷ்ட நிறம்: சித்திர வண்ணம்

பூராடம்: உமது நட்சத்திர நாயகன் சுக்கிரன். இவர் களத்திர காரகர் என்னும் போக சாரகர் என்றும் அழைக்கப்படுவர். உமது ராசிக்கு 6 ஆம் இடமான ருண ப்ராப்த ஸ்தானம் 11ஆம் இடமான லாப ஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் உதயமாவதால் கணவன் மனைவி இடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வர இடமுண்டு. எனினும் குரு பலமும் குரு பார்வையும் இருப்பதால் அச்சத்துக்கு இடமில்லை. சிலரது காதல் திருமணங்கள் கடைசி நேரத்தில் தடைப்பட்டுப் போகக்கூடும். பாகப் பிரிவினையில் சிக்கல் உண்டாகும். ஒருமுறை கஞ்சனூர் மற்றும் ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும்.
வீட்டில் வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் விளக்குப் பூஜை செய்யவும். தினசரி காலை மாலை 5 1/2 - 6 தீபம் ஏற்றி வழிபடவும். இது மிகவும் சிறப்பான பூஜை. சந்தோஷம் நிலவும். சாந்தி பெருகும். மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி ஸத நாமஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ர நாமம் போன்ற ஏதேனும் ஒன்றை மனமுருக வாசிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி / அதிர்ஷ்ட நிறம்: வெண்மை மற்றும் ரோஸ், ஆரஞ்சு
உத்திராடம் 1 ம் பாதம்: உமது நட்சத்திர நாயகன் சூரியன். அவர் ஆத்ம காரகர். அவர் உமது ராசிக்கு 9ம் வீடு என்னும் பாக்ய ஸ்தானத்துக்கு உடையவர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் உதயமாவதால் சுக சௌக்யம் பெருகும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த ஏஜென்ஸி, டெண்டர்கள், தடையின்மைச் சான்று போன்றவை கிடைக்க இடமுண்டு. புத்திர பாக்கியம் கிட்டும். எதிர்பார்த்திருந்த விசா தடையின்றி வரும். ஒருமுறை சூரியனார் கோயில் சென்று வருவது நலம். பிரதோஷக் காலத்தில் சிவபெருமானை மனமுருக வழிபடவும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. பிரதோஷ கால அபிஷேகத்துக்கு பால் தயிர் தருவது நன்று. ஆதித்ய ஹிருதயம்’, ‘சிவ புராணம்பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9,5 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் சூரியன். அவர் ஆத்ம காரகர். ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீட்டுக்கு உடையவர் ஆவார். தந்தை, அரசாங்கம், உயர் அதிகாரிகள், அரசாணைகள் போன்றவற்றுக்கு அதிபதி. இவைகளுக்கு காரகத்துவம் வகிப்பவர் சூரியன். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் உதயமாவதால் செய்தொழிலுக்கு தக்கக் கூட்டாளி கிடைக்க இடமுண்டு. கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் பரஸ்பர நிதி உதவி கிட்டும். கண், நரம்பு சம்பந்த கோளாறு விலகும். பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ இடமுண்டு. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிட்டும்.
ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்க. பிரதி திங்கள் கிழமை சிவாலயத் தரிசனம் செய்க. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடவும். வழிபாட்டுக்கு பால், தயிர், புஷ்பம் வாங்கிச் சமர்ப்பிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள் 1,3,5,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் மற்றும் பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
திருவோணம்: உமது நட்சத்திர அதிபதி சந்திரன். அவர் உமது ராசிக்கு 7ஆம் வீட்டுக்குடையவர். சந்திரன் மனம் காரகர் மற்றும் மாத்ரு காரகர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிரத்யக்கு தாரையில் உதயமாவதால் கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையில் அடிக்கடி வீண் வாக்குவாதம் வரும். அரசுப் பணியிலிருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். வங்கிக்கடன் பெறுவதில் இழுபறி நிலவும். ஜாமீன் கையெழுத்து போட்ட வகையில் சங்கடம் உண்டாகும். ஒருமுறை திருவெண்காடு சென்று சேவித்து வரவும். உங்கள் இன்னல் குறைய, திருப்பதி வருவதாகப் பிரார்த்தனை செய்க. தினசரி காலையில் வெங்கடேச சுப்ரபாதம்படிக்கவும் / கேட்கவும்.
அதிர்ஷ்ட எண்: 5,6,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அவிட்டம் 1,2 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். உமது ராசிக்கு 4 ஆம் வீடான வண்டி வாகன, கல்வி மற்றும் மாத்ரு ஸ்தானம், 11ஆம் வீடான லாபஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி செவ்வாய். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் சாதகத் தாரையில் உதயமாவதால் தெய்விக அனுகூலம் மிகும். ரியல் எஸ்டேட், அரசியலில் லாபம் உண்டு. சகோதர உறவுகள் பலமடையும். ஸ்திர சொத்துகள் சேரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். சிலர் நம்பிக்கையான முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவர். பதவி உயர்வு பெறவும் இடம் உண்டு. ஒருமுறை வைத்தீஸ்வரர் கோயில் சென்று வருவது நலம். பழநி, திருவேற்காடு போன்ற திருத்தலங்களுக்கும் செல்லலாம். அங்காரகனே அல்லல் களைந்து ஆனந்தம் தருவாய்!என்று பிரார்த்திக்கவும். ஓம் ஸ்ரீ அங்காரகாய நமஹ" என தினசரி 108 முறை ஜெபிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருவேற்காடு கருமாரியம்மன் மற்றும் பழனி முருகன் / அதிர்ஷ்ட திசை: தெற்கு / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அவிட்டம் 3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். சகோதர காரகர், இரத்தகாரகர் ஆவார். அவர் உமது ராசி வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானமான 3ம் வீட்டுக்கும் கர்மஸ்தானம், தஸம ஸ்தானம் எனும் 10ஆம் வீட்டுக்கும் அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சாதகத் தாரையில் உதயமாவதால் பெயரும் புகழும் சேரும். செய்தொழிலில் முன்னேற்றம் கிட்டும். அரசியலில் ஈடுபட்டோர் மிகுந்த செல்வாக்கு பெறுவர். ரியல் எஸ்டேட், செங்கல் மற்றும் பீங்கான் தொழில், நெல் அரவை ஆலைகள், சாயப்பட்டரை போன்ற பிரிவுகளில் பணிபுரிவோர் மிக்க அனுகூலமடைவர். செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில், பழநி முருகன் திருக்கோயில், கருமாரியம்மன் கோயில் சென்று வழிபட நன்று. அங்காரகனே ஆனந்தம் அருள்வாய்!என மனமுருகி வேண்டுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: தெற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: கருமாரியம்மன், பழநி முருகன்/அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
சதயம்: உமது நட்சத்திர நாயகன் ராகு பகவான். அவர் யோக காரகர். எதிர்பாராத தன வரவு, எதிர்பாராத சந்திப்பு போன்றவற்றுக்குக் காரகர் இராகுவே. புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் வதை தாரையில் உதயமாவதால் உடல் நலனில், பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதில் பதற்றம் வேண்டாம். தந்தை வழியில் எதிர்பாராத செலவுகள் வர இடம் உண்டு. அருகில் உள்ள அய்யனார் கோயில், ஐயப்பன் கோயில் சென்று வழிபடவும். ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடவும். துர்க்காஷ்டகம்’, ‘துர்க்காஸ்த்தவம்பாராயணம் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 46,9 / அதிர்ஷ்ட தெய்வம்: அய்யனார், ஐயப்ப சுவாமி / அதிர்ஷ்ட திசை: வடமேற்கு / அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

பூரட்டாதி 1,2,3 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் குரு பகவான். இவர் தன, புத்திரகாரகர். உமது ஆளுமை மற்றும் திறமைக்கும் குரு பகவானே காரகர் ஆவார். உமது ராசிக்கு தனம் வாக்கு, நேத்திரம் ஆகியவற்றுக்கான 2ஆம் வீட்டுக்கும் லாப ஸ்தானம் எனும் 11ஆம் வீட்டுக்கும் குரு பகவானே அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். வாக்கினால் வளமும் நலமும் சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றலாம். பணம் கொடுக்கல், வாங்கல் செய்வோர் மிக்க அனுகூலம் பெறுவர்.
திருச்செந்தூர் முருகன், திருவலிதாயம் குருபகவான், ஆலங்குடி குருபக வான் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வரவும். கந்தசஷ்டி கவசம்’, ‘கந்த சரணப் பத்து’, ‘சண்முகக் கவசம்ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி பாராயணம் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
பூரட்டாதி 4ம் பாதம்: உமது நட்சத்திர நாயகன் குருபகவான். அவர் உமது ஜென்ம ராசிக்கும் 10 ஆம் இடத்துக்கு உடையவர் ஆவார். தன, புத்திர காரகர் குருபகவான். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால் நீண்டகால கனவுகள் நனவாகும். நீண்ட கால நோய்கள் விலகும். தொழில் வளம் பெருகும். புதிய கிளைகள் உருவாகும். சொந்த கட்டடம் வாங்குவீர்கள். அடிக்கடி வெளியூர் செல்ல நேரும். சரளமான பணப்புழக்கம் உண்டாகும். எனினும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில் ரீதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கேட்ட உதவியை தடையின்றிப் பெறலாம்.
ஒருமுறை ஆலங்குடி குரு ஸ்தலம், திருச்செந்தூர், திருவலிதாயம் போன்ற இடங்களுக்குச் சென்று வரவும். குருவே துணை!என சதா காலமும் ஜெபித்தால் கஷ்டங்கள் தீரும். நினைத்த காரியம் நடக்கும். குரு கவசம்படிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: திருசெந்தூர் முருகன் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

உத்திரட்டாதி: உமது நட்சத்திர நாயகன் சனி பகவான். அவர் உமது ராசிக்கு 11ஆம் வீடான லாபஸ்தானம் மற்றும் 12 ஆம் இடமான விரயஸ் தானம் ஆகியவற்றுக்கும் உடையவர். அவர் ஆயுள்காரகர் ஆவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் பரமமைத்ர தாரையில் உதயமாவதால் சுபமே உண்டாகும். செய் தொழிலில் லாபம் மிகுந்து காணும். கடன் தொல்லை தராது. நல்ல பணியாட்கள் கிடைப்பர். தொழிலில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நலம். இல்லற வாழ்வில் ஊடலும் கூடலும் சேர்ந்தே நிகழும். இடமாறுதல் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு கிட்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.
குச்சனூர் சனி பகவான் கோயில், திருஆவினங்குடி மற்றும் திருப்பதி சென்று வர நன்று. தினசரி வெங்கடேஸ்வர சுப்ரபாதம்கேட்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,4,6,8 / அதிர்ஷ்ட திசை: மேற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி/அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரேவதி: உமது நட்சத்திர நாதன் புதன் பகவான். அவர் வித்தை, புத்தி போன்றவற்றுக்கு காரகர். இவரே தொழில் காரகரும் ஆவார். உமது ராசிக்கு சுகஸ்நானம் என்னும் 4ஆம் வீட்டுக்கும் களத்திர ஸ்தானம் எனும் 7ஆம் வீட்டுக்கு அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜென்ம தாரையில் உதயமாவதால் உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கூட்டுத் தொழிலில் புதிய ஒப்பந்தம் போடும்போது கவனம் தேவை. கணவன் மனைவி புரிந்துணர்வுடன் பரஸ்பர அன்புடன் செயல்படவும். குடும்பத்தில் வேற்று மனிதர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திரு விடைமருதூர் புதன்ஸ்தலம், ஏதேனும் ஒரு இடத்துக்குச் சென்று தரிசனம் செய்ய நன்று. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய நன்று.
அதிர்ஷ்ட எண்: 5,6 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் மற்றும் சக்கரத்தாழ்வார்/அதிர்ஷ்ட நிறம்: பச்சை


thanx - kalki  


 part 1 - http://www.adrasaka.com/2013/01/27-2013-part-1-p.html