Friday, February 25, 2011

தனுஷ் -ன் சீடன் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVfbRMqgWj9xD4MDhVY1Mpzroyqxfa-ixeM80n9B_RSWyhlenXMLbyhyXAyYu0GzerFfbL3v8sJn1bX51lPuyhpoBWRQ_UytDvnXsFl2T2l0gp7cr7YFNv4vrlUwSLeTV2RcISk0VyNAk/s400/seedan_movie_posters_wallpapers.jpg
திருடா திருடி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் சுப்ரமண்யம் சிவா,தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்த தனுஷ்,தனது 50 வது படம் என்ற லேபிளுடன் ஆர்வமாக இசை அமைத்த தினா என ஓரளவு எதிர்பார்ப்புடன் சென்றால்.......

லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு ஹீரோவுக்கு வீட்டு வேலைக்காரி மேல் லவ்.அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கும்போது ,ஹீரோ - ஹீரோயின் இருவரையும் சேர்த்து வைக்கும் மாமா... சாரி மாமாங்கம் மாமாங்கமாய்  தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏற்று  நடித்த பூந்தோட்ட காவல்காரனாக தனுஷ் அந்த வேலையை கச்சிதமாக முடிக்க...ஸ் ஸ் அப்பாடா என ரசிகர்கள் எஸ்கேப்...


நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கும் ஹீரோ லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என வேலைக்காரி பின்னால் அலைவது நம்பும்படி இல்லை.அதே போல் ஹீரோயின் கனவில் கண்ட ஆதர்ஷ கணவன் ஹீரோ போலவே இருப்பதால் அவரும் லவ்வுகிறார்.இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.

புதுமுகம் ஜெய் கிருஷ்ணா சுத்த வேஸ்ட்.லவ் பண்ணுவாராம்,கையைப்பிடிப்பாராம். அம்மா கிட்டே மட்டும் சொல்ல மாட்டாராம்.அம்மா தாதாவோ,கொடுமைக்காரியோ இல்லை. லாஜிக் ஓட்டை இல்லை லாஜிக் பள்ளமே விழுதே...அவரது நடிப்பு கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு சரி இல்லாததால் எடுபடவில்லை.

http://mimg.sulekha.com/tamil/seedan/events/seedan-trailer-launch/seedan-trailer-launch-movie-events-stills-pictures00240.jpg
ஹீரோயின்  அனன்யா...குழந்தைத்தனமான முகம்.பாடல் காட்சிகளில் பாவனா +ஜோதிகா .காதல் காட்சிகளில் தேவயானி . பார்ட்டி கிட்டே சொந்த சரக்கு லேது. இயக்குநர்கள் செய்யும் தப்பு என்னன்னா ஒரு பாட்டு சீன் எடுக்கும்போது இப்படி நடிங்கன்னு சொல்லிக்காட்டறதில்லை. இந்தாம்மா குஷி பட டி வி டி, ஜெயம் கொண்டான் பட டி வி டி, இது மாதிரியே டான்ஸ் ஆடனும் என்கிறார்கள். ஹீரோயின்ஸ் என்ன பண்றாங்க ?அதை நெட்டுரு போட்டு வந்து அப்படியே நடிச்சுடறாஙக். அதான் எடுபடறதில்லை.


படத்துல பாராட்டற மாதிரி ரெண்டே அம்சம். 1. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும் அந்த ஓவியம் டிசைன் ஐடியாவும். 2. ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது.கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.

முன் பனிக்காலம் பாடல் காட்சியில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில். திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்கலை போட்டதற்கு ஒரு சபாஷ். ( அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்) 


போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/seedan-ananya-2.jpg--

மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக்  அதை மறைக்க படாத பாடு படும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி.தனுஷ் பாவம் டம்மி கதையில் ஏற்று நடித்த டம்மி கேரக்டர். பாவம் அவர் தான் என்ன பண்ணு வார்?

தனுஷ் வந்து பெரிதாக அந்த குடும்பத்தில் ஏதோ ட்சாதிக்கபோகிறார் என்று பார்த்தால் கோபாலா கோபாலா பட ஆர் பாண்டியராஜன் மாதிரி சமையல் சித்து வேலை செய்து புஷ் ஆகிறார்.

படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை.

சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப்.செயற்கையான சிரிப்பு.( டி வி ரியாலிட்டி ஷோக்களில்  பங்கேற்று  பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)
http://www.filmmy.com/images/seedan7.jpg
வசனகர்த்தா மனதை   திருடிய இடங்கள்

1. நாம என்னதான் பக்குவமா சமைச்சாலும் கோயில் பிரசாதம் டேஸ்ட் வர்றதில்லையே.. ஏன்?  ( ஓசி ல சாப்பிட்டதாலயோ?)

2. அம்மாவுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் எந்த இடத்துலயும் நான் செய்ய மாட்டேன் ( கேப்டன் ஜெ பற்றி பேசற மாதிரியே இருக்குப்பா)

3. ஏய்.. ஏன் திடீர்னு தாவணி போட்டுக்கிட்டே..?

ஆம்பளைங்க இருக்கற வீட்ல அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு தாத்தா சொன்னாரு.. ( அடடா.. இந்த தாத்தாக்களால நமக்கு எவ்வளவு இடஞ்சல்?)

4.   ஏய்....1   4  3   அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

ம் ம் .. வேலை வெட்டி இல்லாத ஆம்பளைங்க பொண்ணுங்களைப்பார்த்தா அப்படி சொல்வாங்களாம்.  ( ஹி ஹி எங்க பார்ட் டைம் ஜாப்பே அதானே...)

5. வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா., அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்.. ( ந்நோ கமெண்ட்ஸ்.. செண்ட்டிமெண்ட் வசனம்)

6. இனி  உன் சோகம் எல்லாம் என்னுடையது..  என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது... ( ஹீரோ அழகா ஒப்பிச்சாருப்பா.. )

7.  சாமி.. கும்பிடறேங்க....

விவேக் - அப்பீட்டாயிக்க நமக....

8.   குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?
9. விவேக்  - டேய்.. ஒரு போலிச்சாமியாரை எவ்வளவுதாண்டா டார்ச்சர் பண்ணூவீங்க..?

10. இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி உங்களைக்கூப்பிடுவா...

என்னது.. பாட்டியா..? ச்சீ

அடச்சே.. ஜோசியம் கேட்க.....

11. பெரிய வாழ்க்கையைக்கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு...

12. நீ சமையல் காரனா? மருத்துவனா?

சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

13. எந்த ஒரு பொருளுக்கும் அதனோட ஃஅழகை எடுத்துக்காட்ட ஒரு மாடல்தேவை.

படம் முடியும்போது ஹீரோயின் பாடும் அந்த சோகப்பாட்டைக்கூட சகித்துக்கொள்ளலாம், படம் நெடுக நாடகத்தனமாக நகரும் காட்சிகளைக்கூட மன்னித்து விடலாம்...ஆனால் படம் முடியும்போது தனுஷ் மனிதர் இல்லை பழநி மலை முருகன் என அவரை அவதார புருஷன் ஆக்கும்போதுதான்....


இந்தப்படம் ஏ,  பி,  சி.. ஆகிய 3 செண்ட்டர்களிலும் முறையே  15,  10  , 7  நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

51 comments:

சக்தி கல்வி மையம் said...

vadai...

சக்தி கல்வி மையம் said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாம என்னதான் பக்குவமா சமைச்சாலும் கோயில் பிரசாதம் டேஸ்ட் வர்றதில்லையே.. ஏன்? ( ஓசி ல சாப்பிட்டதாலயோ?)//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேடந்தாங்கல் - கருன் said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...//

அப்போ விமர்சனம் மொக்கைன்னா படம் சூப்பரா இருக்குமா?

மாணவன் said...

படம் ரிலீஸ் ஆயிடுச்சா?? ரொம்ப ஸ்பீடு சார்... :))

விமர்சன பகிர்வுக்கு நன்றி :)

ஆர்வா said...

என்னா ஸ்பீடு???? உங்க வேகத்தை அப்படியே நமக்கும் கொஞ்சம் கத்து கொடுங்களேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹாய்...... வந்துட்டேன்!

கோவை நேரம் said...

ஆனாலும் இது ரொம்ப ஓவரங்க.எப்படிங்க உங்களால மட்டும் முடியுது ...லேப்டாப் கொண்டுபோய் தியேட்டர்ல பதிவு போட்டுடீங்கனு நினைக்கிறேன் ....படம் மொக்கை ஆனாலும் உங்க தைரியம் எனக்கு பிடிக்கிறது...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)


உங்கள் ஆதங்கம் புரிகிறது! சினிமாவில் பார்ப்பதை எதுக்கு நிஜத்தில் எதிர்பார்க்கிறீர்கள்? அப்போ நம்ம டாக்குடரு நிஜத்துல பத்து பெற பறந்து பறந்து அடிப்பாரா?

Pranavam Ravikumar said...

I hope this will be a nice film. Actually we had the same in malayalam starred by Prithviraj & navya Nair. :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.


அப்புடிச்சொல்லுங்க சித்தப்பு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விமர்சனத்த போட்டுட்டு அடுத்த படத்துக்கு போயாச்சா? இல்ல லைன்ல இருக்கீகளா?

Unknown said...

சூடான விமர்சனத்திற்கு நன்றிகள்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்க எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்ல - இது உங்க பிரச்சனை!!

நாம எதிர்பார்த்த அளவுக்கு ஹீரோயின் ஸ்டில் இல்ல - இது எங்க பிரச்சனை!!

Unknown said...

//போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.//

காலம் மாறிப்போச்சோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே சித்தப்பு! இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பன்னிக்குட்டியோட பேட்டி போடுறேன்! வாங்க வந்து கலந்துக்குங்க!!

செங்கோவி said...

//பெரிய வாழ்க்கையைக்கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு...// அப்போ இந்தப் படம் பார்த்து, கஷ்டப்பட்ட உங்களுக்கு பெரிய்ய்ய்ய வாழ்க்கை வருதுன்னு சொல்லுங்க!

Unknown said...

//படத்துல பாராட்டற மாதிரி ரெண்டே அம்சம்.//

நச்...

செல்வா said...

//நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)//

நல்ல கேள்வி .. ஹி ஹி ஹி

செல்வா said...

//இந்தாம்மா குஷி பட டி வி டி, ஜெயம் கொண்டான் பட டி வி டி, இது மாதிரியே டான்ஸ் ஆடனும் என்கிறார்கள். ஹீரோயின்ஸ் என்ன பண்றாங்க ?//

அது எப்படிங்க அண்ணா நேர்ல பாத்த மாதிரி சொல்லுறீங்க ?

செல்வா said...

// ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது.கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.
//

இதுல கூட லாஜிக் இல்லையே .. ஹி ஹி

செல்வா said...

//வேலை வெட்டி இல்லாத ஆம்பளைங்க பொண்ணுங்களைப்பார்த்தா அப்படி சொல்வாங்களாம். ( ஹி ஹி எங்க பார்ட் டைம் ஜாப்பே அதானே...)
//

எங்கனு சொல்லாதீங்க ., என்னோட அப்படின்னு சொல்லுங்க .. ஹி ஹி

Unknown said...

அருவா அருவா

படமோ படம் ங்கொய்யால யாரு உங்க கம்பெனி முதலாளின்னு சொல்லுங்க சிபி!

தினேஷ்குமார் said...

பாஸ் எப்பவும் போல உங்க விமர்சனம் சூப்பர்

தினேஷ்குமார் said...

ஹையா வட

செல்வா said...

//ஆனால் படம் முடியும்போது தனுஷ் மனிதர் இல்லை பழநி மலை முருகன் என அவரை அவதார புருஷன் ஆக்கும்போதுதான்....
//

அப்படி வேற இருக்குதோ ?

Speed Master said...

ஸ்ஸ் அப்பா படிக்கும் போதே கண்ண கட்டுதே

karthikkumar said...

அப்பாடா நாங்க தப்பிச்சோம்... ஹி ஹி நீங்க மாட்டிகிட்டீங்க ....:)

Unknown said...

சரி தல பாப்போம் ஹி ஹி!
வெள்ளிகிழ சாயந்திரம் ஆச்சி நான் கெளம்புறேன்......ஒரு shivas waiting bye சிபி!

"உழவன்" "Uzhavan" said...

ninaicha mathiriye aahi pocha :-)

Unknown said...

இன்னிக்குத்தான் ரிலீசா? என்னா ஸ்பீடு?

Azhagan said...

I don't know how this film has been picturised, but please see the original, "Nandhanam" (Malayalam)

YESRAMESH said...

நீஙகதானான்னே எப்பவும் மொதல்லே!!
எல்லாம் மிச்சம்னே.

அஞ்சா சிங்கம் said...

சரி இந்த படத்துக்கு உண்மையான வில்லன் யாருன்னு சொல்லவே இல்ல ?

ரஹீம் கஸ்ஸாலி said...

நானும் வந்துட்டேன்

Jana said...

அடடா.. இன்னிக்குத்தானே ரிலீசு??? சூடான விமர்சனம்..

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்.... ??????

Unknown said...

சி பி யா கேட்டுத் தான் படமே ரிலீசு பண்ணுவாங்களாம்!!
முக்கியமா அவரு ப்ரீயா இருக்கணும்!!(எப்ப வேலையா இருந்திருக்கார்னு கேக்கப்பிடாது)

Unknown said...

//வசதியான வீட்டு ஹீரோவுக்கு வீட்டு வேலைக்காரி மேல் லவ்.//
ஹிஹி இப்ப வாற படங்களெல்லாம் இப்பிடி இசகு பிசகாவே வருதே..ஏன் பாஸ்?

தனி காட்டு ராஜா said...

//இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.//

:))

பாட்டு ரசிகன் said...

எப்படியோ எல்லா படத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுரிங்க..

வாழ்த்துக்கள்..

தமிழ் 007 said...

ஒரு நமீதா படமோ அல்லது இரண்டு டாப்ஸி படமோ(1நமீதா படம் = 2டாப்ஸி படம்) போட்டிருந்த நல்லா இருந்திருக்கும்.

நான் வர்ரதுக்குள்ள 40 பேர் வடையை பிச்சு தின்னுட்டாங்க.( பாப்போம் அடுத்த தடவையாவது வடை கிடைக்குதான்னு)

வைகை said...

பார்க்கலாமா?...பார்க்கமுடியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

பார்க்கலாமா?...பார்க்கமுடியாதா?//

ஏன் உங்களுக்கு மெட்ராஸ் ஐயா?

MANO நாஞ்சில் மனோ said...

//

நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா?//

ஆத்தே ஆரம்பமே அலறலா இருக்கே மக்கா இரும் படிச்சுட்டு வாரேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.//

ஹா ஹா ஹா நாசமா போவ....

MANO நாஞ்சில் மனோ said...

//புதுமுகம் ஜெய் கிருஷ்ணா சுத்த வேஸ்ட்.லவ் பண்ணுவாராம்,கையைப்பிடிப்பாராம். அம்மா கிட்டே மட்டும் சொல்ல மாட்டாராம்.அம்மா தாதாவோ,கொடுமைக்காரியோ இல்லை. லாஜிக் ஓட்டை இல்லை லாஜிக் பள்ளமே விழுதே...//

இதை படிச்சுட்டு ஹீரோ டாஸ்மாக்குல போயி மட்டை ஆகிட்டாராம்....

MANO நாஞ்சில் மனோ said...

//திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்கலை போட்டதற்கு ஒரு சபாஷ். ( அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்) //

சரி சரி பாவம் விட்டு தள்ளுமைய்யா..

MANO நாஞ்சில் மனோ said...

எது எப்பிடியோ சினிமாகாராணுவ கிட்டே குண்டக்க மண்டக்க மிதி வாங்கும் போது மனோ காப்பாத்தும்னு என்னை கூப்ட்டா எனக்கு சத்தியமா உம்மை தெரியாதுன்னு சொல்லிருவேன் ஜாக்கிரதை....

பொன் மாலை பொழுது said...

// எது எப்பிடியோ சினிமாகாராணுவ கிட்டே குண்டக்க மண்டக்க மிதி வாங்கும் போது மனோ காப்பாத்தும்னு என்னை கூப்ட்டா எனக்கு சத்தியமா உம்மை தெரியாதுன்னு சொல்லிருவேன் ஜாக்கிரதை...//


மனோ,

என்ன ஆளைய்யா நீர்? அப்படியெல்லாம் விடமாட்டோம் சி.பி. நீங்க நடத்துக.

தர்ஷன் said...

நல்ல வசனத்த எப்படி பாஸ் விட்டீங்க
"நமக்கு உறவே இல்லாத வெங்காயத்த வெட்டும் போதே நமக்கு கண்ணீர் வருதே"