Sunday, June 03, 2012

காடு வெட்டி குரு கன்னா பின்னா பேட்டி @ விகடன் - கிடாவெட்டு

''மாநாட்டுக்காக நாலு நாள் மகாபலிபுரத்துல தங்கி இருந்தேன். அங்கே பீச்ல நடக்குறதை எல்லாம் நானும் பார்த்துட்டுத்தான் இருந்தேன். சவட்டிஎடுக்கிற மொட்டை வெயில்ல யாரைப்பத்தியும் கவலைப்படாம கட்டிப்புடிச்சிட்டு மோந்துட்டு இருக்குதுங்க.


சி.பி - யூத்னா அப்டி இப்டித்தான் இருக்குமாம், கேட்டா அப்படி சமாளிக்கறாங்கண்ணே,.. அண்ணே, நிஜமா காத்து வாங்கத்தான் போனீங்களா?இல்லை, ஓ சி ல லைவ் ஷோ பார்க்கப்போனீங்களா?


இதுவாங்க காதல்? அந்தக் காலத்துலயே தமிழனுக்கு வீரமும் காதலும் இருந்ததா, இலக்கியங்கள்ல சொல்லி இருக்காங்களே. அதுதான் காதல்!'' - எடுத்த எடுப்பிலேயே ஆவேசம் காட்டுகிறார் காடுவெட்டி குரு. அவரது சொந்த கிராமமான காடுவெட்டியிலேயே நடந்தது இந்தச் சந்திப்பு

http://kilakarainews.files.wordpress.com/2012/01/wr_540716.jpeg


.
1. ''ஆயிரம் சமாதானம் சொல்லுங்கள்... வன்னியர் சமுதாயத்துப் பெண்களை வேறு சாதிப் பையன்கள் காதலித்துத் திருமணம் செய்தால், அவர்களின் கையை வெட்டுவேன்’ என்று நீங்கள் பேசியது சரியா?''


சி.பி - அண்ணன் காடு வெட்டி குரு இனி லவ்வர்ஸ் கை வெட்டி குரு என அன்போடு அழைக்கப்படுவார், ஆனா ஒரு டவுட், கையை வெட்டுனா அவங்க லவ் பண்ணாம அமைதி ஆகிடுவாங்களா?




''காதல் திருமணமோ... கலப்புத் திருமணமோ செய்யக் கூடாதுனு நான் சொல்லவே இல்லை. அது என் கொள்கையும் கிடையாது. காதல்ங்கிற பேர்ல பொண்ணுங்களை ஏமாத்துறதைத்தான் என்னால ஏத்துக்க முடியலை. கடலூர், அரியலூர் மாவட்டங்கள்ல வசதியாக இருக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களைக் காதலிக்கிற மாதிரி நடிச்சுச் சீரழிச்சுடுறாங்க.


 ஆறு மாசம் அந்தப் புள்ளையைக் கூட வெச்சு நாசம் பண்ணிட்டு, அப்புறம் அடிச்சுத் துரத்திடுறானுங்க. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுங்க எங்கே போகும்? தற்கொலைதான் பண்ணிக்குதுங்க. எங்க வன்னியர் சாதிப் பொண்ணுங்களைக் குறிவெச்சு மட்டும்தான் இது நடந்துட்டே இருக்கு. கடலூர், அரியலூர் மாவட்டத்துல புள்ளைங்களைப் பெத்த எத்தனை பேரு கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறாங்கனு ஒரு சர்வே எடுத்துப் பாருங்க...



சி.பி - ஏமாத்தற நாய்ங்களுக்கு ஜாதி என்ன குலம் என்ன? கோத்திரம் என்ன? கிடைச்சதை மடக்கறாங்க... டி வி சீரியல், சினிமா பார்த்தும் பொண்ணுங்கதான் ஜாக்கிரதையா இருக்கனும்.. குறிப்பிட்ட ஜாதிப்பெண்களைத்தான் ஏமாத்தறாங்கன்னு சொல்லிட முடியாது



நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைனு உங்களுக்கே தெரியும். ஏன்... அதே தெய்வீகக் காதல் ஒரு ஏழை வீட்டுப் பெண் மேல வர மாட்டேங்குது? அதான் ஒரு ஆவேசத்துல 'காதல்ங்கிற பேர்ல எங்கக் குடும்பத்துப் பொண்ணுங்களை ஏமாத்துறவங்க கையை வெட்டுங்க’னு சொன்னேன்



. எங்க சாதிப் பையனே அப்படி ஒரு தப்பு பண்ணி இருந்தா, அவனையும் வெட்டுங்கனுதான் சொல்றேன். ஒரு பொண்ணைப் பெத்த அப்பா ஸ்தானத்துல இருந்து பாருங்க... நான் சொல்றதோட அர்த்தமும் வலியும் புரியும்!''



http://www.writermugil.com/wp-content/uploads/2009/03/election-cartoon-11.jpg


'2. 'அப்போ உங்க சாதியைச் சேர்ந்த பசங்க மத்த சாதிப் பொண்ணுங்களைக் காதலிக்கிறதை ஏத்துக்குறீங்களா?''


''காட்டுமன்னார்குடி, அரியலூர் பகுதியில் எங்க சாதிப் பசங்க நிறைய பேரு தாழ்த்தப் பட்ட சமூகத்துப் பெண்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பெண்ணை அடிச்சுத் துரத்தினது கிடையாது. 


சந்தோஷமா வெச்சிக் குடும்பம் நடத்திட்டு இருக்காங்க. எங்க சுத்து வட்டாரத்துல யாராவது காதலிச்சு வீட்ல சம்மதம் கிடைக்கலைன்னா, நேரா இதே காடுவெட்டி கிராமத்துக்குத்தான் ஓடி வருவாங்க. 'காடுவெட்டி கிராமத்துக்குப் போயிட்டா, குரு அண்ணன் சேர்த்துவெச்சிடுவாரு’னு அவங்களுக்கு ஒரு நம்பிக்க


அப்படி நானே இதுவரை ஆயிரத்துக்கும் மேல காதல் கல்யா ணங்களைச் செஞ்சிவெச்சிருக்கேன். பெத்தவங்ககிட்டயும் பேசி சமாதானப் படுத்திவெச்சிருக்கேன். உண்மையான காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைப்பான் இந்த குரு!''


3. ''பா.ம.க. மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்திருச்சே?''


சி.பி - பா ம க எப்போ ஜாதி அரசியலை விட்டுச்சு? இப்போ மறுபடி கையில எடுக்க? ஜாதிக்கட்சி ஜாதியை கையில எடுக்கறதுல என்ன தப்பு?



''தமிழ்நாட்டுல சாதி இல்லாம என்ன நடந்திருக்கு சொல்லுங்க? இங்கே இரண்டரைக் கோடி வன்னியர்கள் இருக் கோம். ஆனா, எங்க வாழ்க்கை நிலை இன்னைக்கு வரைக்கும் உயரலையே?


 எங்க பாட்டன் காலத்துல விவசாய நிலக் கிழார்களா இருந்தவுங்க, இன்னைக்கு விவசாயக் கூலிகளா இருக்கோம்.எங்க உரிமைக்காக நாங்க போராடும்போது சாதியைச் சொல்லித்தான் போராட வேண்டி இருக்குது. சாதியை ஒழிச் சிட்டோம்னு சொல்றீங்க...


 சரி, இன்னும் சிதம்பரம் நடராஜர் கோயில்ல நந்தன் போன வாசலை எதுக்கு மூடி வெச்சிருக்காங்க? ஸ்ரீரங்கம் பெருமாளை நாங்க போய்ப் பார்க்க எதுக்கு நடுவுல ஒரு இடைத்தரகர்? தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டுமே சாதி இல்லைனு சொல்லிட்டு, ஊருக்குள்ள சாதியை வளர்த்துக்கிட்டுதான் இருக்கு.


 'நாங்க சாதி இருக்கு’னு சொல்லிட்டு, சாதிக் கொடுமையை ஒழிக்கப் போராடிட்டு இருக்கோம். வடநாட்டுப் பக்கம் போனா, நடிகையில இருந்து கிரிக்கெட் ஆடுறவன் வரைக்கும் அத்தனை பேரும் பேரோடு சாதியையும் சேர்த்துதான் வெச்சிருக்கான். இதெல்லாம் எப்போ மாறி, இந்தியன், தமிழன்கிற நிலை வருதோ... அப்ப நாங்க சாதியைப் பத்திப் பேசினா எங்களை வந்து கேளுங்க!''


4. ''அப்போ 2011-ல் தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சினு சொன்னீங்க.. இப்ப என்ன... 2016-ல் அன்புமணி தமிழக முதல்வர்ங்கிறதுதான் உங்க திட்டமா?''


''கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் - அழகிரி, ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா, விஜயகாந்துக்குப் பிறகு அவரு பொண்டாட்டினு ஆளாளுக்குச் சொல்லிட்டு இருக்காங்க. எங்க கட்சியை வழி நடத்தும் சின்னய்யாதான் அடுத்த முதல்வர்னு நாங்க சொல்றதுல என்ன தப்பு? வெள்ளைக்காரன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டான். அப்படிப்பட்டவனே எங்க சின்னய்யா வைப் பார்த்து, எழுந்து நின்னு கை தட்டி இருக்கான். அப்படிப்பட்ட திறமை சாலியை 'முதல்வர்’னு சொல்றதில் என்ன தப்பு?''


சி.பி - வாரிசு அரசியலால தான் தமிழ் நாடு குட்டிச்சுவராகி இருக்கு, மதுவிலக்கு, சினிமா, புகைப்பழக்கம் இப்படி பல நல்ல விஷயங்களில் எல்லாருக்கும் புத்தி சொல்ற தலைவரு இந்த விஷயத்துல மட்டும் தன் மகனை ஏன் முன்னிலைப்படுத்தி பத்தோட 11 ஆகறாரு?என் குடும்பத்தை சேர்ந்தவங்க யாராவது அரசியலுக்கு வந்தா என்னை செருப்பால அடிங்கன்னு ஏன் சொன்னாரு?


http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg


5. ''ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி?''


''எங்கே கோயில் திருவிழா நடந்தாலும் அங்கே ஒரு புது டாஸ்மாக் கடை திறக்கிறதுனு ஒரு புது திட்டம் கொண்டு வந்திருக்காங்க அவங்க. எல்லோரும் குடிச்சிட்டுப் போய் சாமி கும்பிடுங்கனு சொல்றாங்கபோல!


உலகத்துலயே இப்படி ஒரு கேவலம் எங்கேயும் நடக்காது. சாமி கும்பிடுற இடத்துல சாராயத்துக்கு என்னங்க வேலை? குடிகாரங்களை உருவாக்குவதில் தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்கணும்னு திட்டம் போட்டு வேலை செய்றதைத் தான் ஜெயலலிதாவின் ஒரு வருடச் சாதனைனு சொல்ல லாம்!'


சி.பி - சாராயம்  சாப்பிற சாமி தான் தமிழன்க அதிகம் கும்பிடற கருப்பண்ண சாமி, மாடசாமி இப்படி.. அரசாங்கத்துக்கு முக்கிய வருமானமே டாஸ்மாக் தான்.. குஜராத் மட்டும் எப்படி டாஸ்மாக் இல்லாமயே சமாளிக்குதுன்னு போய் பாடம் கத்துட்டு வரச்சொல்லனும் மேடமை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyWDabmTF4POj8IkzO7WZMsXgl2uehp4-jAsxvGYZQw81mmJrfSiUVyUA-Y_MEwd1xHUj2eQE2hoHa3E54Oy6ZZjkyQ4WlPVd9Ton8IPhVrZM9AnmZwm-jwhmFYxqWk-zXogWmPLkDz0Uy/s1600/ramadoss_jayalalitha1.jpg


6. ''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்?''


''அவரு இன்னும் தெளியவே இல்லையே! தலைவருக்கு உண்டான தகுதி எதுவுமே அவருக்குக் கிடையாது. ஏதோ ஒரு அலையில மக்கள் ஓட்டுப் போட்டாங்க. ஜெயிச்சு வந்துட்டாங்க.



'நான் ஆஃப் அடிச்சேன். என் தொண்டர்கள் ஃபுல் அடிப்பாங்க. எல்லோரும் குடிப்போம்’கிங்றதுதான் அவரோட கொள்கை. எம்.ஜி.ஆர். வந்தாரு, குடிக்கச் சொன்னாரு. கலைஞரும் குடிக்கச் சொன்னாரு. ஜெயலலிதாவும் குடிக்கச் சொன்னாங்க. நாளைக்கு இவரு வந்தாருன்னா, 'என்னைப் போல எல்லோரும் நிதானம் இல்லாம குடிச்சிக்கிட்டே இருங்க’னு சொல்லு வாரு.



நிதானம் இல்லாம குடிச்சிட்டே இருந்தா, குடும்பத்தையே நடத்த முடியாது. அப்புறம் எப்ப டிங்க நாட்டை ஆள முடியும்? அவரு எந்த நேரத்துல குடிக்காம இருப்பாருனு யாருக்குமே தெரியலயே. சட்டமன்றத்துக்கே அப்படித்தானே வராரு. ஏதோ வந்துட் டாரு... இதோடு அவரு அரசியல் முடிஞ்சிடும். அதனால அவரைப் பத்தி இனி பேச வேண்டியதே இல்லை!''

http://mmimages.mmnews.in/Articles/2011/Feb/2075eacd-69e3-4238-b0de-46a34db1771a_S_secvpf.gif


3 comments:

rajamelaiyur said...

உங்க கமென்ட் குரு பேட்டியவிட காமெடியா இருக்கு

rajamelaiyur said...

அரசியலில் ஒரு சொல் ஒரு செயல்னு வாழ்பவர் ராமதாஸ் அவரின் தளபதி இவர்

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

அண்ணே ஆம்ல்ட் ரெடி வாங்க ஒரு கட்டிங் போடலாம்..... பிரியாணியை சொன்னேன்