Friday, March 09, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (9.3..2012) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


 http://3.bp.blogspot.com/_rR_DLxd7wts/S_-45vOPe5I/AAAAAAAAEkU/3cdBcXotQn0/s1600/maasi-poster.jpg

1. மாசி - ஜி.கிச்சா இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் மாசியில் அவருக்கு போலீஸ் அதிகா‌ரி வேடம்.
படம் பற்றி கேட்டால், அர்ஜுன் ஆச்ச‌ரியமாகச் சொல்லும் ஒரு விஷயம், “இதுவரை ஆ‌க்சன் ஹீரோவா நடிச்சேன். இதில் முதல் முறையா எதி‌ரிகளுடன் மசில் ஃபவருடன் மோதாமல் மைண்ட் பவரை யூஸ் பண்றேன். ஏதி‌ரிகளை எப்படி புத்திசாலித்தனத்தால் வீழத்துகிறேன் என்பது ஹைலைட்டாக இருக்கும்.
 
சி.பி - அப்போ இன்று முதல் நீங்கள் மைண்ட் பவர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள் ஹி ஹி 

” ஆ‌க்சன் கிங் அறிவை வைத்து விளையாடுவது ச‌ரிதான். ஆனால், அவரது ரசிகர்க‌ள் இதை ஏற்றுக் கொள்வார்களா? அந்த சந்தேகம் இயக்குனருக்கும் இருக்கும் போலிருக்கிறது. அதனால், இருக்கிற ஒன்றிரண்டு சண்டைகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார். 
 
சி.பி - அறிவை வெச்சு விளையாடறேன்னு ஹீரோ வில்லன் 2 பேரும் 13 ரீலும் செஸ் விளையாடாதீங்கய்யா செம காண்டாகிடுவோம்.. 

http://reviews.in.88db.com/images/maasi/maasi8.jpg
அதிலும் கிளைமாக்ஸ் சண்டை மிகப் பிரமாண்டம். அர்ஜுன் பொன்னம்பலத்துடன் மோதும் இந்தக் காட்சியில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் 600 கார்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சண்டைக் காட்சியை படமாக்க பயன்படுத்தப்பட்டவை ஏழு கேமராக்கள். தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் இது முதல்முறை. 
 
சி.பி - 7 கேமராவானா என்ன? 70 கேமராவா இருந்தா என்ன? படத்துல ஒரு சீன் தானே ? அதுவும் இல்லாம எந்திரன்ல 35 கேமரா யூஸ் பண்ணாங்களே?

இதே கிச்சா சினேகாவை வைத்து பவானி ஐபிஎஸ் படத்தை இயக்கி வருகிறார், அதுவும் ஒரே நேரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சி.பி - விளங்கிடுச்சு.. அந்தப்படம் ரிலீஸ் ஆகி பல மாசங்கள் ஆச்சு.. அப்போ இந்தப்படம் 2009ல ஸ்டார்ட் பண்ணிய படம் போல அவ்வ்வ்வ்,
 
ஈரோடு ஆனூர்,ராயல்,அன்னபூரணி 3 தியேட்டர்ல ரிலீஸ்.. ஆனா நாளைக்குதான்
 
http://tamilmp3songslyrics.com/PhotoGallery/Jun11/Sevarkodi1.jpg


2. சேவற்கொடி - பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாரான புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இவர்களுடன் பவன், பிதாமகன் மகாதேவன், ஸ்ரீரஞ்சனி, சாய்ஜெகன், மணிமாறன், தவசி, கூத்துப்பட்டறை தயாள் உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் இரா.சுப்ரமணியன். 
 
 
அபியும் நானும் படத்தின் வசனகர்த்தாவான இவர் அப்பட இயக்குநர் ராதா மோகனின் உதவியாளராக சினிமா கற்று கொண்டவர் என்பதும் கவனிக்கத்தக்கது!

சேவற்கொடி குறித்து சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், பிறரைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் தனிமனித கோபம்தான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்ற கருவுடன் படத்தை இயக்கி வருகிறேன். 
 
திருச்செந்தூரில் நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. திருச்செந்தூரின் புகழ்பெற்ற சூரசம்ஹார காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. அந்த நிகழ்ச்சியில்தான் படத்தின் நாயகனும், நாயகியும், வில்லனும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம், என்று கூறியுள்ளார்.
http://www.filmics.com/gallery/d/147128-1/Sevarkodi-Movie-Photo-Stills-33.jpg

அம்பாசமுத்திரம் அம்பானி, முதல்இடம், படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.செல்லத்துரையின் ஒளிப்பதிவில் உருவாகும், இப்படத்திற்கு எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைப்பதும் அவரது முதல்படம் இதுதான் என்பது ஹைலைட்!
 
கவினர் வைரமுத்துவின் இளமை துள்ளும் வரிகளும் அதற்கு ஏற்ப M.L.R.கார்த்திகேயன் குரலும் இந்த பாடலை மேலும் மேருகேட்டுகிறது.

நாயகியின் அழகை + அவளது செயல்களை வர்ணித்து பாடும் ஹீரோ பாடல் போல இருக்கு இது. நம்ம வைரமுத்து சார் சும்மா ஹீரோயின் அழகாய் மிக அழகாய் பாடலில் வர்ணித்து இருக்கிறார். அதனை நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்து கேளுங்கள்.

பாடல் வரிகளை சிதைக்காமல் மிக நேத்தியாய் இசை கோர்வை. பாடலில் அங்கங்கே 'சக்போன்' இசையை தூவி மேலும் அழகு சேர்த்திருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் C.சத்யா.

சத்யாவின் இசை மிகவும் தேர்ந்த இசை அமைப்பாளர் போல இருக்கு. வாழ்த்துக்கள் !!!!

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு!
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு!
தூரத்தில் பார்த்த காதல் வராது!
பக்கத்துல பார்த்த காமம் வராது!
மானுமில்ல மயிலுமில்ல!
கூனுமில்ல குயிலுமில்ல!
இருந்தும் மனசு விழுந்து போயிசுது!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும்!
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும்!

அழுக்கு துணிய உடுத்தி அவ தளுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடித்த மனசு அட சொக்குது சொக்குதுடா !
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதுடா!

தூங்கி எழுந்தா பிள்ளை அழகு!
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு!
அவ சொல்லுக்கடங்கா முடியும் -
சுத்தி கசக்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்!
தேத்துபல்லும் கண்டு பித்து பிடிக்கும்!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !

வெளக்கமாறு புடுச்சி அவ வீதி பேருக்கும் போது
வளைவு நெளிவு பார்த்து மனம் வலுக்க பார்க்கதடா!
குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெரிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெரிச்சு போகுதடா!

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு!
அவ பூசும் ஒலிக்கும் வீதி அழகு !
ஒரு விக்கல் எடுக்கிற தோதும்
தும்மி முடிக்கிற தோதும்
அவஸ்தையிலும் அவள் அழகு !
குத்தம்குறையிலும் மெத்த அழகு !

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !
 
இந்தப்படம் எதிர்பாராத வெற்றியை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ட்ரெயிலர், ஸ்டில்ஸ் எல்லாம் பக்கா .ஈரோடு இன்னும் ஸ்டாரில் ரிலீஸ்
 
http://chennai365.com/wp-content/uploads/movies/Pathirama-Pathukkunga/Pathirama-Pathukkunga-Stills-042.jpg
 
3. பத்திரமா பாத்துக்குங்க  - உறவுகளின் பரிணாமத்தை சொல்லும் படம்  உறவுகளின் பரிணாமத்தை சித்தரிக்கும் வகையில், ஒரு புதிய படம் தயாராகியிருக்கிறது. இந்த படத்துக்கு, பத்திரமா பாத்துக்குங்க என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

வாடா போடா, இனிது இனிது ஆகிய படங்களில் நடித்த ஷரண்குமார் கதாநாயகனாக நடிக்க, ராட்டினம், மன்னாரு படங்களில் நடித்து வரும் ஸ்மிதாஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சம்பத்ராம், வையாபுரி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு டைரக்ஷன்: வி.சி.சோமசுந்தரம்.

படத்தை பற்றி தயாரிப்பாளரும், டைரக்டருமான வி.சி.சோமசுந்தரம் சொல்கிறார்:-
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAzyuNqN34sTAk7SOAMb2TuZ0pqWLEU_h4IIlXtWVF6yUKaGZ5vxQFAi-Mbb1xhWruNGpn1XAd3h9v-zJHd4NwstvGHaRotAmFqUHWi1nMjBxchsXxQDsvQzOEQKQn4ypINlE7mrixa6Pn/s1600/pathirama-pathukkunga-movie-stills-26.jpg

நட்பு, காதல் மற்றும் உறவுகளின் எல்லா பக்கங்களையும் பதிவு செய்யும் கதை இது. கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் காதல் வந்த விதத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் படம் விளக்கும். திரைக்கதையில் புதிய யுக்தியை கையாண்டிருக்கிறோம். ஜித்து ஒளிப்பதிவு செய்ய, சிவாஜிராஜா இசையமைத்து இருக்கிறார்.  
 
சி.பி - படம் எடுக்கற எல்லாருமே  திரைக்கதையில் புதிய யுக்தியை கையாண்டிருக்கிறோம்.அப்டினும், இதுவரை யாருமே தொடாத சப்ஜெக்ட்டும்னுதான் சொல்றாங்க.. ஹி ஹி 
 
ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்
http://chennai365.com/wp-content/uploads/Poster/Naanga/Naanga-Movie-Stills-030604004.jpg

4.  நாங்க -தலைவாசல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி எண்ட்டர் ஆன செல்வா  பின் பூவேலி உட்பட பல ஹிட் படங்கள் கொடுத்தவர்.. அவரது 25 வது படம் தான் இது.. கதை 1980ல ஸ்டார்ட் ஆகி 2011 ல முடியுதாம் ..காலேஜ் ஃபிரண்ட்ஸ் பல வருடங்களுக்குப்பின் சந்திக்கும்ப்போது நடக்கும் சுவராஸ்யங்கள் தான் படமாம்.. அவர் சொல்றதை பார்த்தா பறவைகள் பல விதம், ஒரு கல்லூரியின் கதை டைப்ல படம் இருக்கும்.. போல

 இதுல 5 லவ் ஸ்டோரி இருக்காம் .. 13 புதுமுகங்கள் நடிக்கறாங்களாம்.. 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh51myaKE4uvaepj8SdD3bvoLTDCU1tORPm_oarpONqs51mSBLZA7YyvqO9wI92S3aAPGGUNRzFKlyRbL8GIZb40yd6f-Zp3vZ5bGSCvcgLYDa6SdsDow1t5vqjRrgg9gRxNVbpb1_g-4ed/s1600/naanga_movie_stills_pics_photos_05.jpg

 படத்துல கதை அம்சம் எப்படியோ சதை அம்சம் கண்டிப்பா இருக்கும்.. ஏன்னா இதுல கஸ்தூரி கில்மா கேரக்டர்ல வர்றாராம்.. விகடன் கேலரில மட்டும் கிளு கிளு ஸ்டில்ஸ் 46 இருக்கு.. கூகுள் சர்ச்ல 127 படங்கள் இருக்கு .. ஹி ஹி 
 
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்
http://chennai365.com/wp-content/uploads/Hollywood/John-Carter-Maaveeran/John-Carter-Maaveeran-Stills-030402002.jpg

5. JOHN  CARTER - ஆங்கிலப்பட ரசிகர்களுக்கு இது மார்ஸ்.. ஏலியன்ஸ் டைப் படம்.. கிராஃபிக்ஸ் காட்சிகள்க்கு பஞ்சமில்லை.. சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்கறதால இந்தப்படம் செம கலக்கு கலக்கும்னு எதிர்பார்க்கலாம்.. ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் ரிலீஸ்..

http://bestmoviesevernews.com/wp-content/uploads/2012/02/john-carter-movie-image-31-e1329520416937.jpg

4 comments:

Senthil said...

Nice!!!!!!11111111

thanks!!!!!1

senthil,doha

Unknown said...

யோவ் இன்னைக்கு எத்தன பதிவு போடப்போறே...ஆங் வெள்ளிக்கிழம ஆச்சே..முடியாதே... ஹஹா!

Dhileep said...

John carter pakkam poidadheenga.. sema mokkai..

Unknown said...

படத்திக்கு போயாச்சா....?