Thursday, May 24, 2012

எஸ் ஜே சூர்யா (S.J.SURYA) விகடன் பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilnafE4lCiB11ZT_u5kdQ8uHySb5lCpPBwg-C5JHHY9E-vuQpURtnqLL17u_-m-sGFSuicnk2y_Ja9iWkfCsO77s_HMTGQP7726j0IHrMnUS1HGguq-GhMOP6_QkW7TdOTma97XWXSQ4k/s400/dsc_208000881244878142.JPG 

'இசையமைப்பாளர் எஸ்.ஜே.சூர்யா உங்களை வரவேற்கிறான்!''- மேஜையில் தடதட தாளம் தட்டி அதிரடிக்கிறார் மிஸ்டர் தன்னம்பிக்கை! 



 சி.பி - அப்போ டி ராஜேந்தர் யாருங்கோவ்?


 ''படத்தோட டைட்டில் 'இசை’... செமத்தியான டைட்டில்ல! ச்சும்மா பட்டையக் கௌப்புறோம்!'' - ஒரே நொடியில் அவர் உற்சாகத்தை நம் தோளுக்கு மாற்றுகிறார்.



சி.பி - டைட்டில்  இசையா? ரொம்ப ஈசி பட விமர்சனத்துல நம்மாளுங்க இசை = இம்சை அப்டினு வசை பாடப்போறாங்க 


''ஆறு வருஷத்துக்குப் பிறகு, நான் தமிழில் பண்ற படம் 'இசை’. காதலும் மியூஸிக்குமா முதல் பாதி, சைக்கோ த்ரில்லர் இரண்டாம் பாதி.





சி.பி  - சைக்கோ  த்ரில்லரா? சுத்தம்.அரோகரா அரோகரா , மயக்கம் என்ன? 3 எல்லாம் வரிசையா எங்க கண்ணுக்குள்ள வந்துட்டு போகுதே?




 காலங்காலமாப் பார்த்தீங்கன்னா, சினிமாவில் ஒரு மியூஸிக் ஜீனியஸ் இடத்தை இன்னொரு மியூஸிக் ஜீனியஸ் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. நம்ம கண்ணு முன்னாடியே பலர் புகழ் சக்கரத்துல ஏறி இறங்குறதைப் பார்த்திருக்கோம். அப்படி தன்னோட உச்சத்தில் இருந்து இறங்கிய ஒருத்தன், மீண்டும் அந்த உயரத்தை அடையப் போராடுறதுதான் கதை. தோத்துப்போன ஒரு மியூஸிக் டைரக்டரின் வலி, வேதனை எல்லாமே அச்சு அசலா படத்தில் இருக்கும்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5rIhIXgaztb4dp6Uo-wMdSG4hIFt3d3EFafCnU7JtqJB98gsf7f4i8sq637cNKIdbsNFWjjd2zi7zFfpAH9-dISZzGui2pKggj6soQpj1LWza4mm5aVl4EVjEXhwF86nerBBFJTLgSpBr/s1600/sj_surya_05.jpg



சி.பி - துரை இயக்கி தல நடிச்ச முகவரி கதையை கொஞ்சம் உல்டா பண்ணீட்டீங்க போல  , இடைவேளைக்குப்பிறகு மயக்கம் என்ன மாதிரியா, விளங்கிடுச்சு.. ஐ மீன் படத்தோட கதை விளங்கிடுச்சு ஹி ஹி



எந்தக் காரியத்திலும் ஆழமா இறங்கிப் பார்க்கிறதுதான் என் ஸ்டைல். அதான் நானே மியூஸிக் டைரக்டர் ஆகிட்டேன்!''


சி.பி - டீப் ஸீயிங்க்? ஹி ஹி 
1. ''ஒரு முழு படத்துக்கும் இசையமைக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?''


'' 'உங்களால ஒரு முழு படத்துக்கும் மியூஸிக் பண்ண முடியும்’னு என்கிட்ட சொன்னவரே ஏ.ஆர். ரஹ்மான்தான். 'நீங்க மனசுவெச்சா, பயிற்சி எடுத்துக் கவனமா இறங்கினா, நிச்சயம் உங்களால் முடியும்’னு சொன்னார் ரஹ்மான். நான்கூட, 'என் படத்துக்கு மியூஸிக் போடாம இருக்க இப்படி ஒரு ஐடியாவா சார்?’னு கேட்டேன்.


 'சேச்சே... அப்படியில்லை... உங்களால முடியும்னு எனக்குத் தோணுச்சு’னு சொன்னார். அவரே சொல்லிட்டாரே... நிச்சயம் அதுல ஏதோ இருக்கும்னு எல்லாத்தையும் ஒதுக்கிவெச்சிட்டு அஞ்சு மாசம் பியானோ, கிடார்னு மூழ்கி இசையமைப்பாளர் ஆகிட்டேன்!''



சி. பி - என்னண்ணே, முழு நமீதாவை கர்சீஃப்க்குள்ளே மறைக்க ட்ரை பண்றீங்க? உங்களூக்கும் ஏ ஆர் ஆர்க்கும் லடாய், அவர் இசை அமைக்க மறுத்துட்டாரு, அவர் எதிரே சவால் விட்டீங்கன்னாங்களே?

'2. 'என்னங்க இது... இந்தப் பயிற்சி போதுமா ஒரு இசையமைப்பாளர் ஆக?''


சி.பி - அதானே, இதென்ன ஓ பி எஸ் மாதிரி ஜிங்க் ஜக் அடிக்கற வேலையா?


''இந்த உலகத்துல எல்லாமே ஈஸிங்க. கஷ்டம்னு நினைச்சாத்தான் கஷ்டம். எந்த அறிமுகமும் இல்லாம 'நான் ஹீரோவா நடிக்கணும்’னு உங்க முன்னாடி வந்து நின்னு சொல்லியிருந்தா, அப்போ இதைவிடப் பெருசா ஆச்சர்யப்பட்டு இருப்பீங்கதானே?! ஆனா, நான் ஹீரோவா நடிச்சேனே.


 ஒரு விஷயம் நமக்குப் பிடிக்கணும். அவ்வளவுதான். பிடிக்காத பொண்ணுக்காக ஒரு நிமிஷம்கூடக் காத்திருக்க முடியாது. ஆனா, பிடிச்ச பொண்ணுக்காக ஒரு யுகம்கூடக் காத்தி ருக்கலாம். நான் மட்டும்இல்லை... இசை ரசனை கொண்ட யாருமே மியூஸிக் டைரக்டர் ஆகலாம். மனசு வைக்கணும். அதான் மேட்டர்!''


சி.பி - அதை விடுங்க.. நிலா மேட்டர் என்னாச்சு? பைசல் பண்ணி பேக் பண்ணீ அனுப்பிட்டீங்களாமே?


3. ''ஆல் தி பெஸ்ட். ஆனா, அருமையான இயக்குநராக இன்னிங்ஸ் ஆரம்பிச்சீங்க.அப்படியே இருந்திருக்கலாமோனு இப்போ தோணுதா?''


''என்னை நடிகனாக்கிப் பார்க்கணும்கிறதுதான் என் அளவு கடந்த ஆசை, கனவு, வெறி எல்லாமே. அதைச் செய்வதற்குக் கிடைச்ச பாதைதான் டைரக்ஷன். அஜீத் பெரிய மனசு பண்ணி என்னை இயக்குநர் ஆக்கினார். கொஞ்சம் டைரக்ட் பண்ணிட்டு உடனே என் கனவை வாழ்ந்து பார்த்துட்டேன். ஆசைப்பட்டதைப் பண்ண முடியலைன்னா, கையில கோடி கோடியாப் பணம் இருந்தும் என்ன பிரயோஜனம்?''

4. ''ஆறு வருஷ இடைவெளிக்கும் மொத்தமா சேர்த்து கிளாமர் சரக்கு வெச்சிருக்கீங்க போல?''


''அட... இதெல்லாம் சும்மா புரொமோஷனுக்கு! காதல், கண்ணீர், காமெடி, த்ரில், இசை, கிளாமர்னு எல்லாமே எந்தெந்த அளவு இருக்கணுமோ, அந்தந்த அளவு இருக் கும். பெங்களுரூ, மும்பை, டெல்லினு சுத்திச் சுத்தி, சுலக்னா வைப் பிடிச்சேன். தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு சாவித்திரினு போட்டுக்கலாம். நடிப்பு பின்னுது! 'எஸ்.ஜே.சூர்யா - எஸ்.சாவித்திரி இணைந்து கலக்கும்’னுதான் டிசைன் ரெடி ஆகிட்டு இருக்கு!''


சி.பி - எஸ் சாவித்ரி எல்லாத்துக்கும் எஸ் சொல்லீட்டாங்களா? ஆமா, சும்மா புரோமஷனுக்காகன்னா அந்த சீன் எல்லாம் படத்துல வராதா?


5. ''இத்தனை வருஷத்துல காதல், கல்யாணம்னு எதுவுமே இல்லையா? முன்னாடி பூமிகா, நிலானு கிசுகிசு அள்ளுமே?''

''காதல் நல்லது... கல்யாணம் அதைவிட நல்லது!ஆனா, கல்யாணம்னு போயிட்டா, அந்த உறவை நியாயப்படுத் தணும். உண்மையா இருக்கணும். அப்படி உண்மையா இருக்க முடியாத விஷயத்தை நான் செய்ய மாட்டேன். நம்மை நம்பி வந்த பொண்ணு கண்ணீர்விட்டு அழற மாதிரி இருக்கக் கூடாது. சரியா இருக்க முடியும்னு நம்பிக்கை இருந்தா, உள்ளே போயிடலாம். மத்தபடி காதல் வரும்... போகும். காதல் ஓர் அழகான உணர்வு. அதுக்குக் கட்டுப்பாடே கிடையாது!''


சி.பி - அண்ணன் சுருக்கமா இன்னா சொல்ல வர்றாருன்னா மேரேஜ் பண்ணுனா ஒரு ஃபிகர், லவ் மட்டும் பண்ணிட்டு இருந்தா ஊரெல்லாம் ஃபிகர்ங்கறார்  


http://cinesouth.com/images/new/28092005-THN12image1.jpg

6. ''தமிழ் சினிமாவைக் கவனிச்சுட்டு இருந்திருப்பீங்க... இப்ப இருக்கிறவங்கள்ல யாரைப் பிடிச்சிருக்கு?''

''இப்ப தமிழ் சினிமா ரொம்பவே அழகு! 'மைனா’ பிரபு சாலமன், 'வழக்கு எண்’ பாலாஜி சக்திவேல் ரெண்டு பேரையும் ரொம்பக் கொண்டாடத் தோணுது. சரவணனோட 'எங்கேயும் எப்போதும்’ சூப்பர். அந்தப் படத்தைப் பார்த்தா, படபடப்பா இருக்கும். அதே சமயம் காதல் ஃபீல், நல்ல மெசேஜ், கமர்ஷியல் எல்லாமே கலந்திருக்கும். அப்படி நிறையப் படங்கள் வரணும்.


 ஜீவா, ஜெய், ஆர்யா மேல எல்லாம் நல்ல நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் ரகுவரன், ரஜினி, கமல் மாதிரி பெர்ஃபார்ம் பண்ற நடிகர்கள் இப்ப ரொம்பக் கம்மியா இருக்காங்க. சம்பந்தமே இல்லாத வேற வேற கேரக்டர்களில் நடிச்சா, அதுவும் கைக்கு வந்திரும். இப்ப இருக்கிற பல ஹீரோக்களிடம் அந்தத் திறமை இருக்கு. பெரிய விஷயம் இல்லை. அனுபவமும் தெளிவும் ஆர்வமும் அதை அவங்களுக்குக் கத்துக்கொடுக்கும்!''


BAY RONG - ( BLACK DRAGON) - ஹாலிவுட் ஆக்‌ஷன் திரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.asiatorrents.com/imgz/images/bayrongcla.jpg

ஏழாம் அறிவு படத்துல  ஹிப்னாடிச  வில்லனா வந்தாரே டோங்க்லீ  அவர் தான் ஹீரோ கம் திரைக்கதை ஆசிரியர்  பேரு johnny nguyen. அவர் நடிச்ச இந்தப்படத்தை  இந்தியாவுக்கு வர்றப்போ பிளாக் டிராகன் அப்டினு டைட்டில் கொடுத்து ரிலீஸ் பண்ணி இருக்காங்க.. ஆனா ஆல்ரெடி 2009 ல அங்கே ரிலீஸ் ஆன படம் 


ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்.. அதாவது ஹீரோயின்  ஒரு கடத்தல் கேங்க்ல எப்படியோ மாட்டிக்கிட்டா.. அவ ஒரு டிக்கெட்.. அவளுக்கு பிறந்த ஒரு குழந்தையை வில்லன் ஒளிச்சு வெச்சு மிரட்டி அவனுக்குத்தேவையான கடத்தல் வேலைகளை வாங்கிக்கறான்.. 

ஒரு லேப்டாப்.. அதுல நாட்டோட  ராணுவ ரகசியம் எல்லாம் அடங்கி இருக்கு.. அந்த லேப்டாப்பை அபேஸ் பண்ணிட்டு வர்ற பிராகஜ்ட் தர்றான்.. அதை சக்சஸா முடிச்சுட்டா  குழந்தை அவளுக்கு அப்டினு டீல் 

ஹீரோயின் இந்த  லேப்டாப் வேலைக்கு 4 பேர் கொண்ட குழுவை ரெடி பண்றா. அதுல ஒரு ஆள் தான் நம்ம ஆள்.. பல அடிதடி ஆக்‌ஷன்க்கு நடுவே , அல்லது ஓரத்துல அந்த லேப்டாப்பை கைப்பற்றிடறாங்க.. 



http://files.myopera.com/doanhientt88/albums/850261/BayRong4.jpg

 ஆனா ஒரு ட்விஸ்ட்.. போக்கிரி படத்தை பார்த்து உல்டா பண்ணிட்டாங்க போல ஹி ஹி ஹீரோ ஒரு போலீஸ்.. இந்த சமூக விரோத கும்பலை பிடிக்கத்தான் இப்படி வேஷம் போட்டிருக்கான். ஹூம் எத்தனை படத்துல இந்த சஸ்பென்சை பார்த்திருப்போம் .. 

 க்ளைமாக்ஸ்ல வில்லனை முடிச்சுக்கட்டிட்டு, ஹீரோயினை கண்ணாலம் கட்டிக்கிட்டு ஹீரோ சுபம் + சுகம் ஹி ஹி


ஹீரோயின் நடிப்பு செம ( நாம எந்தக்காலத்துலயாவது பெண்களை குறை சொல்லி இருக்கோமா? )ஆள் பார்வை, பாடி லேங்குவேஜ், ஆக்‌ஷன் ஸ்பீடு எல்லாம் அபாரம்.. ஹீரோ கிட்டே தன் சொந்தக்கதை சோகக்கதை சொல்றப்போ சோகம், தன் அடியாள்ங்க கிட்டே முதலாளி அம்மா பாவனை, வில்லன் கிட்டே பம்ம வேண்டிய சூழல், குழந்தைக்கு ஏங்கும் அம்மா என நவ ரச நாயகி தான் போங்க .. எல்லா பிளஸ்க்கும் மேல ஹீரோ கூட ஒரு கில்மா சீன் இருக்கு ஹி ஹி  ஆனா கண்ணியமான காதல் காட்சி தான்


ஹீரோ வந்ததும் தியேட்டர்ல விசில் பறக்குது. ஆனா நம்மாளுங்க என்ன எதிர்பார்க்கறாங்கன்னா  அவர் ஏழாம் அறிவுல வந்த மாதிரியே  ஹிப்னாடிசம் மாதிரி அசால்ட்டா வில்லனை அடிக்கனும்னு பார்க்கறாங்க.. அவர் என்னடான்னா கமல் மாதிரி  நேச்சுரல் நடிப்பு பிளஸ் அடி வாங்கு வாங்குன்னு வாங்கறார்,, க்ளைமாக்ஸ் ஃபைட் செம .. எனக்கென்னமோ அவர் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு தோணுது.. 


அநேகமா ஹீரோயின் ஃபைனான்சியரோட ஃபியான்சியா இருக்கும் , அதனால ஃபிகரை முன்னிறுத்தி அண்ணன் கொஞ்சம் அடக்கி வாசிச்சுட்டார் போல .. 

 வில்லன் குரூப் 2 லேப்டாப் வெச்சிருக்காங்க. அதுல எது ஒரிஜினல் லேப்டாப்னு கண்டு பிடிக்க அங்கே கலவரம் நடப்பது போல் சீன் கிரியேட் பண்ண  வில்லன் டக்னு ஒரிஜினலை தன் பக்கம் இறுக்கிக்க அதுதான் ஒரிஜினல் என்பதை அறியும் காட்சியில் இயக்குநர் அப்ளாஸ் அள்ளறார்

 http://files.myopera.com/doanhientt88/albums/850261/thumbs/BayRong10.jpg_thumb.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  முடிவு எடுக்கறதுலயும் சரி, ஆளை முடிக்கறதுலயும் சரி கிங்க் மேக்கரா இருக்கனும்.. 


2. நமக்கு வெற்றி கிடைக்கும்கறதுக்காக யாரை வேணாலும் இழக்கலாம்.. 



3. நாய் வேஷம் போட்டா குரைக்கற வேலையை மட்டும் தான் செய்யனும்
வாலை ஆட்டக்கூடாது.. 


 சும்மா சீனைப்போடாத.. கிளம்பு காத்து வரட்டும்



4.  கையை குடு கோர்த்துட்டே ஜோடியா உள்ளே போலாம்// 



 ம் என்ன தைரியம்?

 உன் அழகுல மயங்கி இதை செய்யலை.. இன்னைக்கு நாம கப்பிள்சா ஆக்ட் பண்றோம்

 அதுக்காக மேல கை வைப்பீங்களா?  ( ஹி ஹி  ஸ்டெப் பை ஸ்டெப்பாத்தானே வர முடியும் மேடம் ? )


5.டேய்.. சைலண்ட் மோடுல  படுடா.. ( அவ்வ்வ்வ்)


6. நமக்குப்பிடிச்சவங்களை இழந்துட்டா எவ்ளவ் கஷ்டம்னு  எனக்குத்தெரியும்.. என்னை சுட வைக்காத..


7. எவ்ளவ் புத்திசாலித்தனமா திட்டம் போட்டாலும் பல சமயங்கள்ல விதியை யாராலும் மாற்ற முடியாமல் போய் விடுகிறது..



http://www.chud.com/wp-content/uploads/2011/08/Clash6.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங்க் ஷாட்ல 2 ஃபிகருங்க போரிங்க் பைப் லேடீஸ் மாதிரி பயங்கரமா அடிச்சுக்குதுங்க/.. அதுல ஒரு லேடி இன்னொரு லேடியை கன்ல ஷூட் பண்ணிடுது.. அந்த பெண் கைலயும் ஆயுதம் இருக்கு.. பொதுவா ஜாக்கிரதையாதான் எல்லாரும் இருப்பாங்க.. ஆனா அது பெப்பெரப்பேன்னு நிக்குது.. சாகற சூழல்ல எல்லாருக்கும் பயங்கர ஆவேஷம் வரும்.. பல பேரை கொலை செய்த அந்த ஃபிகருக்கு அது தெரியாதா? தேமேன்னு நின்னு அதும் பொட்டுன்னு போயிடுது



2. ஹீரோயின் முகத்தை வில்லன் பார்த்துடறான்.. எந்த விதமான மாறுவேஷமோ அல்லது அட்லீஸ்ட் கூந்தல் அலங்காரமாற்றமோ செய்யாம ஹீரோயின் தானா வலியனா போய் பார்ட்டில டேன்ஸ் ஆடி வில்லன்கிட்டே மாட்டிக்கறா.. எப்படி?


3. ஹீரோ போலீஸ் தான் என்பதை வில்லன் கண்டு பிடிக்கற சீன் படு கேவலமா இருக்கு.. அதாவது வில்லன் ப்ளேஸ்ல போலீஸ் ஒருத்தர் வேவு பார்த்துட்டு நிக்கறார்.. ஹீரோ பக்கத்துல வில்லனை வெச்சுக்கிட்டே நீ கிளம்பு என்பது போல் தலையை ஆட்டுறார்.. ஹய்யோ அய்யோ.. இந்த சீனை பார்த்தா குருதிப்புனல் க்ளைமாக்ஸ் சபாஷ் போட வைக்குது.. 


4. ஹீரோயின் வில்லி கிடையாது.. சந்தர்ப்ப வசத்தால வில்லன் கிட்டே பணயக்கைதியா ஆகிட்டா.. ஹீரோ ஒரு போலீஸ்னு தெரிஞ்சதும் அவ பெருமைதானே படனும். இல்லைன்னா பயப்படனும்.. அதை விட்டுட்டு அவனை கொலை பண்றதா மிரட்டறது எல்லாம் ஓவர்.. என் பேபி வில்லன் கிட்டே இருக்குன்னு கடைசி வரை அவ சொல்லவே இல்லை


5. இந்த கதைக்கு ஹீரோயின் ஒரு டிக்கெட் என்ற விஷயம் தேவையே இல்லை..  ஏன்னா ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சில ஒரு கிளு கிளுப்பே வர்லை. எப்படியும் அது ஒரு டிக்கெட் தானே எப்படியும் செட் ஆகிடும்னு ஒரு அசால்ட் ஆடியன்ஸ்க்கு வந்துடுது ( கவனிக்கவும், ஆடியன்ஸ்க்கு தான், எனக்கு  இல்லை )


6. க்ளைமாக்ஸ்ல ஹீரோவை வில்லன் சுட்டுடறான்.  ஹீரோ கீழே விழறார்.. வில்லன் , ஆடியன்ஸ், ஹீரோயின் எல்லாரும் ஹீரோ செத்துட்டதா நினைக்கறாங்க.. 10 நிமிஷம் கழிச்சு ஹீரோயினை வில்லன் கொலை பண்றப்போ டக்னு ஹீரோ குறுக்கே வந்து காப்பாத்தற சீன் ஓக்கே .. அவ்லவ் டேஞ்சரான சூழல்ல டக்னு வில்லனை பொட்டுத்தள்ளாம அவன் கிட்டே ஹீரோ செய்முறை விளக்கம் காட்டிட்டு நிக்கறாரு.. அதாவது மார்புக்கவசம் ( புல்லட் புரூஃப்) போட்டிருந்தேன்னு அதை காட்டிட்டு நிக்குது பக்கி .. ஹய்யோ அய்யோ


ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்


http://www.giaoduc.edu.vn/upload/image/2009/05/29/vhnt/bay-rong-2.jpg


 சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள் பார்க்கலாம்.. 18 + மட்டும் , ஏன்னா படத்துல ஒரு சீன் இருக்கு , படம் சரியா 87 நிமிஷம் ஓடுது.. சீன் வர்ற நேரம் படம் போட்டு 37 வது நிமிடம்  ஹி ஹி ( சீன் வர்றப்போ நான் வெளில போய்ட்டேன், 2 நிமிஷம் கழிச்சுத்தான் உள்ளே வந்தேன், # நீதி - மீ எ குட் பாய் )



http://pixhost.me/avaxhome/a1/ac/0019aca1_medium.png

டபுள் மீனிங்க் காமெடி ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 

''அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்னு அழகான குடும்பம். ஊர் இங்கே தாம்பரம் பக்கத்துல பொழிச்சலூர். அந்த ஊரே என் சொந்தம்தான். எல்லோருமே சொந்தக்காரங்கதான். ஒவ்வொருத்தரையும் தனித் தனியா சொன்னா, எலெக்ஷன் ஓட்டர் லிஸ்ட் மாதிரி ஆகிடும். ரொம்பப் பெரிய குடும்பம். சந்தோஷமா இருக்கோம்!''



2.'' 'அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 

 நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்களா? அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படிங்க தொடர்ந்து நடிக்க முடியும்? மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற விஷயம் அதுல இல்லைனு சொன்னாங்க. அதான் அந்த டிராக் வேணாம்னு நினைச்சு, வழக்கமான நம்ம டகால்டி டிராக்குக்கு மாறிட்டேன்!''



3. ''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ, பஜனை கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங் களா?'' 


''கலாய்ச்சுட்டாராமாம்!''



4. ''உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சோகம் என்ன?''
''என் நண்பன் ஜிலானியின் மரணம். என்னோட மிக நெருங்கிய நண்பன் அவன். என்னை நிறைய மாத்தினவன். பெரிய பணக்கார வீட்டுப் பையன். அவன்கூட கம்பேர் பண்ணா, நான் ஒண்ணுமே கிடையாது. இருந்தாலும், என்னைக் கூடவே வெச்சு சுத்திட்டு இருப்பான். 'லொள்ளு சபா’ பண்ணிட்டு இருக்கும்போது, என்கிட்ட கார் எல்லாம் கிடையாது.


அப்போ கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துக்கக் கூப்பிடுவாங்க. சிம்பு, 'ஜெயம்’ ரவி மாதிரியான ஹீரோக்கள் செம பாலீஷா, சொகுசான கார்களில் வந்து இறங்குவாங்க. நான் ஆட்டோவுக்கே காசு இல்லாம அல்லாடிட்டு இருப்பேன். அப்போலாம் லான்சர் மாதிரி கெத்து கார்ல என்னை கூட்டிப் போய் இறக்கிவிட்டு இருந்து கூட்டிட்டு வரணும்னு டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புவான். எப்பவுமே எங்கயுமே என்னைவிட்டுக் கொடுக்கவே மாட்டான். என்னை இந்த அளவுக்கு முன்னேத்திவிட்ட நல்ல நண்பன். பாண்டிச்சேரி போய்ட்டு வரும்போது பைக் விபத்துல இறந்துட்டான். என்னோடஉண்மை யான 'நண்பேன்டா’ அவன். ஐ மிஸ் யூ ஜிலானி!''


5. ''உங்க அம்மா, அப்பா, வீட்டுக்காரம்மா, குழந்தைகளுக்குப் பிடிச்ச காமெடியன் யார்?'' 

''என் அம்மா, அப்பா, சம்சாரம், குழந்தைங்க, தோஸ்துங்க எல்லாருக்கும் பிடிச்ச காமெடியன்... நான்தான். வேற யாரையாச்சும் சொன்னா, சோறு போட மாட்டேன்ல. நான் மொக்கை காமெடி பண்ணினாலும் பயங்கரமா சிரிச்சு, அப்ளாஸ் கொடுத்து என்னை வளர்த்துவிட்டது அவங்கதான். நமக்குப் பிடிச்ச பேட்ஸ்மேன் டொக்கு போட்டாலும் 'வாவ்... வாட் எ ஸ்ட்ரோக்’னு கைதட்டுவோமே... அந்த மாதிரி!

ஸ்கூல் படிக்கிறப்பலாம் நான் வீட்டுக்கு டார்ச்சர் கொடுக்குற பிள்ளை. என் டார்ச்சர் தாங்காம ஒரு தடவை என் அம்மா, 'ஊர்ல நாலஞ்சு புள்ள பெத்தவள்லாம் சந்தோஷமா இருக்கா. ஒரே ஒரு புள்ளையப் பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே’னு அலுத்துக்கிட்டாங்க.


அதைத்தான் காப்பி பண்ணி 'பாஸ்’ படத்துல பேஸ்ட் பண்ணேன். ஷூட்டிங் பரபரப்புல வீட்டுக்குப் போகலைன்னா, அம்மா அந்த டயலாக்கைத்தான் சொல்லிட்டு இருப்பாங்க. என் வீட்டுக்காரம்மாவுக்கு பொண்ணு பாக்குற காமெடி சீன்னா ரொம்பப் பிடிக்கும். என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தப்ப, நான் ஊர்ல இல்லை. பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட 'லொள்ளு சபா எபிசோட்ல பாத்துக்கோங்க’னு வீட்ல சொல்லிட்டாங்க. அன்னைக்கு எபிசோட்ல 'பதினாறு வயதினிலே’ படத்தைக் கலாய்ச்சிருந்தோம்.


அதுல என்னைப் பார்க்க என் சம்சாரம் கிராமத்தையே துணைக்கு வெச்சுக் கிட்டு டி.வி. முன்னாடி காத்துட்டுஇருந்திருக் காங்க. கைல பீடி, சாராய பாட்டில்னு ஒரு நல்ல குடிமகனா நான் மிகச் சிறப்பாகச் சலம்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'டி.வி-ல நாலு பேரு பாக்கும்போதே இப்படிக் குடிக்குறானே... இவன்லாம் தனியா இருந்தா எப்படிக் குடிப்பான்’னு பொட்டு பொடிசுல ஆரம்பிச்சு கிழவிங்க வரை திட்டியிருக்காங்க. 'சிகரெட் கிகரெட் குடிச்சாகூடப் பரவாயில்லை.


பீடி குடிக்குறானே!’னு பெருசுங்க பொருமியிருக்காங்க. 'இப்படி ஒரு பரதேசிக்கு வாக்கப்படணுமா?’னு என் மனைவி சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எல்லாம் சொல்லிப் புரியவெச்சுக் கல்யாணம் பண்ணினேன்.

'மந்திரப் புன்னகை’ படத்துல மாமனார் வீட்டுக்காரங்க கும்பலா வந்து இறங்குனதும், 'வந்துட்டாங்கப்பா... மாயாண்டி குடும்பத்தார்’னு கமென்ட் அடிப்பேனே... அதோட இன்ஸ்பிரேஷன் இந்தச் சம்பவம்தான். என் பசங்களுக்கு 'ஓ.கே. ஓ.கே.’ பட பார்த்தா கேரக்டர்தான் ரொம்பப் பிடிக்கும். ஏதாவது கோபத்துல திட்டுனாக்கூட, 'ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு’னு சொல்லிக் கலாய்க் குறாங்க. எப்படிச் சமாளிக்குறதுனுதான் தெரியலைங்க!''


6. ''நீங்க பேசுற காமெடிகள் எல்லாத்தை யும் போறபோக்குல 'ஜஸ்ட் லைக் தட்’தட்டி விடுறீங்களே... எப்படி?'' 

''டயலாக் பேசுறது ஜஸ்ட் லைக் தட் ஃப்ளோவா இருக்கும் பிரதர். ஆனா, அதை ஹிட் ஆக்குறதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு யோசிப்போம். புதுசா ஒரு வார்த்தை பிடிக் கும்போதே, அது மக்களுக்குப் பிடிக்குமா? எவ்வளவு தூரம் ரீச் ஆகும்னு மூளையைக் கசக்கிட்டே இருப்போம். ஒரு காமெடி சீன் பண்ண குறைஞ்சது மூணு நாள் ஆகும்.


இப்போ நடிச்சுட்டு இருக்குற 'சேட்டை’ படத்துல நான் இன்னொருத்தர்கிட்ட 'பக்கத்து அபார்ட்மென்ட்ல கில்மா நடக்குது’னு சொல்ல ணும். கில்மா பழைய வார்த்தையாச்சேனு யோசிச்சோம். அதையே கொஞ்சம் மாத்தி, 'சிக்காய் முக்காய் நடக்குது’னு சொல்வேன். 'அப்படின்னா’னு இன்னொருத்தர் கேட்க, 'அதாங்க கிலிகிலிகிலிபிலிபிலிபிலி... இப்பவும் புரியலையா? ஸ்கிஸ்கிஸ்குஸ்குஸ்குஸ்ங்க’னு சொல்லும்போதே டைரக்டர் கண்ணன் சிரிச்சிட்டார்.


இந்த ரெண்டு வார்த்தையைப் பிடிக்க எங்களுக்கு ரெண்டு நாளாச்சு. இந்த உலகத்துல எதுவுமே ஜஸ்ட் லைக் தட் கிடைக்காது நண்பா!''


7. ''உங்க காமெடிகளைக் குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை  ரசிக்குறாங்க. ஆனா, நடுநடுவுல திடீர்னு ரெட்டை  அர்த்த வசனம் வெச்சுடுறீங்களே... தேவையா?'' 

''உண்மைதான். தெருக்கூத்தோ, மேடை நாடகமோ, சினிமாவோ... எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தணுமே! 'டபுள் மீனிங் டயலாக்’ ரசிக்கவே ஒரு குரூப் இருக்கே. அவங்க கோட்டாவுக்கு நாங்க ஏதாவது கொடுத்தாகணுமே?

அதான் டபுள் மீனிங் காமெடி. குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியாது. புரியும்போது ரசிக்க ஆரம்பிச்சிடுறாங்க. என் அக்கா பையன் 'மன்மதன்’ படத்துல நான் பண்ணின காமெடியை முன்னாடி பாத்தப்ப, இரான் சினிமாவை சப்- டைட்டில் இல்லாமப் பார்க்குற மாதிரி உட்கார்ந்துட்டு இருந்தான். இப்போ அதைப் பார்க்குறப்ப விழுந்து விழுந்து சிரிக்கிறான். நம்மளா யாருக்கும் சொல்லிக் கொடுக்குறதில்லை பிரதர்!''


8.''சினிமாவுல ஹீரோ - ஹீரோயின்னுகூடப் பார்க்காம எல்லாரையும் செமையா கலாய்க்கிறீங்க... நிஜ வாழ்க்கைல நீங்க செமத்தியா கலாய் வாங்கியிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணுங்க?'' 

 ''காலேஜ் படிக்கும்போது வி.ஜி.பி-ல ஷோ பண்ண வாய்ப்பு கிடைச்சது. மூணு மணிக்கே மேடை ஏறித் தயாரா இருந்தோம். ஒருத்தன்கூட வரலை. திடீர்னு ரெண்டு பஸ் நிறைய கும்பல் வந்து இறங்குச்சு. 'மச்சான், இவங்களைச் சிரிக்கவெச்சு ஸ்கோர் பண்ணிருவோம். அப்பதான் இன்னொரு நாள் புரொகிராம் கொடுப்பாங்க’னு பேசி வெச்சுக் காமெடி பண்ண ஆரம்பிச்சோம்.


 எதிர்ல இருக்குற அத்தனை பேரையும் அப்படிக் கலாய்க்குறோம். எல்லாம் பொணம் மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. நான் மேடையை விட்டு இறங்கி, அவங்களோட சேர்ந்து உட்கார்ந்து கைதட்டுறேன். அப்பவும் பய புள்ளைக ஒருத்தன்கிட்டயும் ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு கட்டத்துல ரொம்பக் கடுப்பாகி, 'யோவ்! கைதட்டுனா என்ன குறைஞ்சா போயிருவீங்க’னு திட்டுனா, 'ஏண்டி பாபு... ஏனு செஸ்தானு?’ங்கிறானுங்க. எல்லாம் ஆந்திரா கோஷ்டி. வாழ்க்கையில நாங்க வாங்குன பிரமாண்டமான மொக்கைங்க அது!''

- அடுத்த வாரம் 

''மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 



''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?


''
- இன்னும் கலாய்க்கலாம்...


டிஸ்கி - சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html

சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html





சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 

ஆ ராசா, ப .சிதம்பரம், அடுத்த ஆப்பு சோனியா ?- சுப்ரமணீயம் சுவாமி பேட்டி

சைக்க முடியாத சக்தியாக இருந்த ஆ.ராசா தன் அமைச்சர் பதவியை இழந்தது தொடங்கி திகார் சிறைக்குள் தள்ளப்பட்டது வரை அத்தனைக்கும் முக்கியக் காரணம், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!



 15 மாத திகார் சிறை வாசம் கடந்து, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் ராசா. இதைவைத்து, 'இனி சி.பி.ஐ. விசாரணை பிசுபிசுத்துவிடும்’ என்றும் 'ஸ்பெக்ட்ரம் பூதம் அவ்வளவுதான்’ என்றும் எக்கச்சக்க அனுமானங்கள். இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களில் தீவிரமாக இருந்த 'ஸ்பெக்ட்ரம் டெரர்’ சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசியதில் இருந்து...


1. ''ஆ.ராசாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் குறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்களே?''



''இது சுத்த அபத்தம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு ஜாமீன் கோருவதும் கொடுக்கப்படுவதும் முறையானதுதான். ராசா விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஜாமீன் கோருவது குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் உரிமை.


இதற்கு ராசா மட்டும் விதிவிலக்கா என்ன? சட்டரீதியான அணுகுமுறையில் அவர் ஜாமீனில் வந்திருக் கிறார். இதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் எந்த விதத்திலும் குறையாது. சொல்லப்போனால், ஒரு வருடத்துக்கு முன்னரே ராசா வெளியே வந்திருக்கலாம்.''



சி.பி - அவர் உள்ளேயே இருந்திருந்தா அவருக்குப்பாதுகாப்பு, வெளீயே வந்தா திமுக வுக்குப்பாதுகாப்பு. இது தெரிஞ்சவங்க வாய்ல ஜின்னு, அறியாதவங்க  வாயில மண்ணு


2. '' 'ஸ்பெக்ட்ரம் விசாரணை சரியான பாதையில் செல்லப்போவது இல்லை என்பதையே ராசாவுக்கான ஜாமீன் உறுதி செய்திருப்பதாக’ தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்துச் சொல்லி இருக்கிறாரே?''



''ஜெயலலிதா, சட்டம் படிக்காதவர். சட்டப் பிரிவுகளையோ, நுணுக்கங்களையோ அறியாதவர். அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். நியூக்ளியர் சயின்ஸைப் பற்றித் தெரியாமலேயே, கூடங்குளம் அணு மின் நிலைய விளைவுகள் குறித்து ஏதேதோ பேசினார். பின்னர், அப்படியே அந்தர் பல்டி அடித்து, அணு மின் நிலையத்தால் பாதிப்பு இல்லை என்றார். புரியாமல் ஏதாவது பேசுவதும் பின்னர் அப்படியே உல்டா அடிப்பதும் அந்த அம்மாவுக்கு வாடிக்கையானதுதான்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நாங்கள் தீவிரமாகக் கையில் எடுத்தபோது, 'இதனால் ஒரு உண்மையும் வரப்போவது இல்லை’ எனச் சொன்னவர்தான் ஜெயலலிதா. ஆனால், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் ஆதி தொடங்கி அந்தம் வரையிலான அத்தனை உண்மைகளும் சட்டத்தால் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. 


 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் வசமாகச் சிக்கத் தொடங்கியதும், 'ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளிவர ஆதாரம் கொடுத்தவர்களே நாங்கள்தான்’ எனப் பெருமிதம் தேடப்பார்த்தார் ஜெயலலிதா. சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் ஜெயலலிதா, இப்போது சிதம்பரத்தின் குற்றத்தை நான் நிரூபிக்க வேண்டும் என்கிறார்.


 சரி, நாளைக்கே நான் அதை நிரூபித்துவிட்டால், அம்மையார் என்ன சொல்வார்? சிதம்பரத்தின் மீதான குற்றத்தை நிரூபிக்க அவரே ஆதாரங்களைக் கொடுத்ததாக அள்ளிவிடுவார்.


நாடாளுமன்றத் தேர்தலின்போது சிவகங்கைத் தொகுதியில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடந்தன என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த உண்மைகளை சென்னை உயர் நீதிமன்றத் தில் அம்பலப்படுத்தி சிதம்பரத்தின் மீது நடவடிக்கைக்கு வித்திடாதது ஏன்?


 அப்படியென்றால், சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்றுதானே எண்ணத் தோன்றும்? தேர்தல் குளறுபடிகள் குறித்த அத்தனை ஆதாரங்களையும் வைத்து சிதம்பரத்தைச் சிக்கவைத்திருக்க வேண்டிய ஜெயலலிதா வும் கண்ணப்பனும் அமைதியாக ஒதுங்கிக் கொண்டது ஏனாம்? இதற்கெல்லாம் அம்மையாரிடம் பதில் இருக்கிறதா?''



சி.பி - ஊழல் குற்றச்சாட்டு வெளில வரணும், உண்மையான குற்றவாளிகள்  பிடிபடனும்னு யாரும் ஐ மீன் எந்த அரசியல் வியாதியும் நினைக்கறதில்லை.. அவர் ஆட்சிக்கு வந்தா இவங்க ஊழல் வெளீல வந்து பேரை கெடுத்தா போதும், அதே போல் இவங்க ஆட்சி வந்தா அவர் ஊழல் வெளில வந்து பேரை கெடுக்கனும்


3. ''அடுத்தபடியாக இதிலேயே 275 கோடி ரூபாய் விவகாரம் எனப் பரபரப்புக் கிளப்புகிறீர்களே... அது உண்மையா?''


''நான் என்ன சொன்னாலும் அதற்கான ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டுதான் சொல்வேன். பரபரப்புக்காக எதையும் சொல்பவன் நான் அல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் விஸ்வரூபத்தை ஆரம்பத்தில் நான் சொன்னபோது, பலரும் நம்ப முடியாமல்தான் பார்த்தார்கள்.






 ஆனால், சுவாமி சொன்னது உண்மைதான் என இப்போது எல்லோருக்குமே புரிகிறது. ராசாவுக்கு 275 கோடி ரூபாய் கைமாறியதாக இப்போது சி.பி.ஐ. கண்டுபிடித்து இருக்கிறது. ராசாவுக்கு யுனிடெக் வயர்லெஸ் நிறுவனம் கொடுத்த பணம்தானே அது? இதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ. சேகரித்துவிட்டது. இது தொடர்பாக விரைவில் இன்னொரு குற்றப்பத்திரிகை ராசா மீது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வெயிட் அண்ட் வாட்ச்!''


4. ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கனிமொழி மனு தாக்கல் செய்து இருக்கிறாரே... அப்படி விடுவிக்க சாத்தியம் இருக்கிறதா?''


''அவர் என்ன மனு வேண்டுமானாலும் தாக்கல் செய்யட்டும்; எப்போது வேண்டுமானாலும் தாக்கல் செய்யட்டும். ஆனால், இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அவர் விடுபட வாய்ப்பே இல்லை.''



5. ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது தவறே சொல்ல முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருத்தத்தோடு சொல்லி இருக்கிறாரே?''


''எத்தகைய குற்றம் செய்தவரும் தன்னை அப்பாவி என்றுதான் சொல்லிக்கொள்வார். சிதம்பரத்தின் பேச்சும் அப்படிப்பட்டதுதான். தான் நிரபராதி என இவர் சொன்னால் போதுமா? ஸ்பெக்ட்ரம் வழக்கின் போக்கை நீதிமன்றம் அல்லவா நிரூபிக்க வேண்டும்?''


6. ''ப.சிதம்பரம் தொடங்கி தயாளு அம்மாள் வரை பலரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்குவார்கள் எனச் சொன்னீர்களே... இப்போது நிலைமை எப்படி?''


''குற்றவாளிகள் யாரும் தப்பவே முடியாது. ராசா, சிதம்பரத்தைத் தொடர்ந்து சிக்கப்போவது சோனியாதான். அடுத்தடுத்து எறும்பு வரிசைபோல் ஒவ்வொருவராக உள்ளே வருவார்கள். இப்போது உறுதியாக அடித்துச் சொல்கிறேன்... ஸ்பெக்ட்ரம் என்கிற பிரமாண்ட ஊழலில் பங்கெடுத்த புள்ளிகள் யாரும் வழக்கில் இருந்து தப்பவே முடியாது.''


 நன்றி - விகடன்

அடுத்த உலகம் சுற்றும் வாலிபன் சங்க்மாவா? பிரணாப் முகர்ஜியா?

 


1.ஏய், மிஸ்டர்.. உனக்கு காமன்சென்ஸ் (COMMON SENSE) இல்லையா? இப்படி பஸ்ல உரசறே?


 ஹலோ மிஸ்.. காமன்  சென்ஸ் இருக்கறதால தான் உரசறேன், ஹி ஹி


----------------------------

2. பார்வதியும் சிவனும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள் - முன்னாள் ஆதீனம் ஆஃப் மதுரை # கலைஞர்க்கு வந்த மாதிரி உங்களுக்கும் கனவுலயா?


------------------------------

3. என் க்ளாஸ்மேட் அனாமிகாவை தற்செயலா பார்த்தேன்.அவளோட 16 வயசுப்பொண்ணுக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்தேன். அவ

 “ சாரி அங்க்கிள், அம்மா ஆல்ரெடி வார்ன் மீ” அபவுட் யூ

----------------------------


4. 2 பேர் பழகறப்ப 3 வது நபரைப்பற்றி குறை சொல்லக்கூடாதாம், அப்போ 4 வது, 5 வது நபரை குறை சொல்லலாமா? 


--------------------------

5. .ஒவ்வொரு மனைவியும் ஒரு அம்மாதான், ஏன்னா அம்மாவும் அடிச்சாங்க, சம்சாரமும் அடிக்குது


----------------------------



6 பொண்ணுங்க ஜெனிலீயா மாதிரி, லைலா மாதிரி லூஸா என்னைக்கும் இருக்க மாட்டாங்க, பசங்களை வேணா லூஸாக்குவாங்க காதல் சந்தியா மாதிரி


----------------------------

7. அறை எண் 305இல் கடவுள் படம் ஓடலை, டைட்டில்- அறை எண் 5-ல் அஞ்சனா (18+)அப்டினு வெச்சிருந்தா ஓடி இருக்குமோ? டவுட்டு டேவிட்டு


------------------------

8.  பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஆசியுடன் வெளிவர இருக்கும் படம் 'கள்ளத்துப்பாக்கி'.! # அப்ப விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படம் நொள்ளத்துப்பாக்கியா?


---------------------------

9  எல்லாத்தையும் நீங்களே சாப்பிட்டுட்டீங்களே, எனக்கு வைக்கலை? 


கால் கிலோ ரவைல எத்தனை பேர் சாப்பிட முடியும்? # உப்புமா பத்துமா? # எ கீ


----------------------------

10.  திருமணத்திற்குப் பின் விவாகரத்து செய்ய மாட்டேன். நடிகை ஸ்ரேயா# நீங்க செய்ய மாட்டீங்க, சரி அவர் செஞ்சுட்டா?


----------------------------
11. நானும், சினேகாவும் லவ் பண்றப்ப ஏகப்பட்ட தடவை ஏதோ ஒரு கோபத்துல  நான் அவர் செல்லை உடைச்சுட்டேன் - பிரசன்னா  # நல்ல வேலை. செல்லை உடைச்சீங்க. 


-------------------

12  என்னை உப்பு மூட்டை தூக்கிக்கோ என்றாள், முடியாது என்றேன், பஞ்சு மூட்டை அல்லவா அவள்?


------------------------------

13. ஹேண்ட்வாஷ் ( HAND WASH) கவுரவமான வார்த்தை, ஆனா தமிழன் “ கை கழுவியாச்சு” என எப்படி யூஸ் பண்றான் பாருங்க 


-----------------------------

14. .காதலிக்கும்போது - ரதியே ரதியே!


கல்யாணத்துக்குப்பின் - விதியே விதியே!


-------------------------

15.. உன்னைப்பார்க்க உன் வீட்டுக்கு நான் வந்த போது, என்னைப்பார்க்க என் வீட்டுக்கு நீ வந்தாய் # இட மாறு ஜெயிச்ச பிழை


-----------------------------


கடல்" படத்தில் அறிமுகமாகும் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் "கெளதம் கார்த்திக்"



16 காதல் நினைவுகள் ஜீரணம் ஆகாத போது உன் முத்தங்கள் எனக்கு இஞ்சி மரப்பான்கள்



-------------------------------

17. ஜனாதிபதி ஆக பிரணாப் முகர்ஜிக்கு வாய்ப்பு அதிகம் # அடுத்து இவர் தான் உலகம் சுற்றும்  வாலிபனா?


---------------------------


18.  மதுரையில் சைக்கிள் டைம்பாம்வெடித்தது : அத்வானி வருகைக்கு எதிர்ப்பா என விசாரணை # பார்த்து போட்டுக்குடுங்க சார், வேன் வாடகையே 40,000 ரூபா


---------------------------

19. அரசியலில் குதிக்கும் எண்ணமில்லை:- சச்சின் # கேட்டுக்கோங்க.. சினிமா சச்சினே! ஒரிஜினலே அடக்கி வாசிக்குது


-------------------------

20. சுந்தர் சி படத்தில் விஷால் எம் ஜி ஆராக வர்றாராம் # விஷாலா வந்தாலே பார்க்க ஆள் இல்லை


--------------------

Nithya Kumar shared Mani Kandan's photo.

Wednesday, May 23, 2012

ஸ்ரீராமராஜ்யம் - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.tollywoodandhra.in/wp-content/uploads/2012/02/Sri-rama-rajyam-movie-download.jpg

எல்லாருக்கும் தெரிஞ்ச ராமாயணக்கதைதான்.. ஆனா சம்பூர்ண ராமாயணம்னு தமிழ்ல டீட்டெயிலா வந்ததே அந்த மாதிரி இல்லை.. ஆஃப்டர் வனவாசம் சீதை ரிட்டர்ன் டூ அயோத்தி என்ன ஆச்சு, லவ குசா எப்படி வளர்ந்தாங்க? இதுதான் டாபிக்.. நயன் தாரா சீதையா நடிச்சதால தான் இந்தப்படத்துக்கு இவ்ளவ் செல்வாக்கு..


வனவாசம் முடிஞ்சு ராமர் சீதையோட  நாட்டுக்கு வர்றார்.. 2 பேரும் ஜாலியா அந்தப்புரத்துல  டூயட் பாடறாங்க.. அப்போ யாரோ மக்கள்ல ஒருத்தரு “ சீதை ராவணன் ப்ளேஸ்ல இருந்திருக்கா.. என்ன நடந்துச்சோ என்னவோ? அப்டின்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசிடறாரு.. உடனே ராமர் சீதையை  அதுவும் நிறைமாசமா இருக்கற சீதையை லட்சுமணன் கிட்டே சொல்லி  காட்டுக்குள்ளே கொண்டு போய் விட்டுட்டு வந்துடறாரு.. 

 தக்காளி, அதைக்கூட அவரா செய்ய மாட்டாரா? மன்னர் இல்லையா? அதான்.. எல்லாத்துக்கும் ஆள் வேணும் போல..காட்டுல சீதைக்கு ரெட்டைக்குழந்தை பிறக்குது. லவன், குசன்னு பேர் வைக்கறாங்க.. ராமர் நிஜமாவே பொண்டாட்டி மேல அக்கறையா இருந்தா  போய் குழந்தையை, மனைவியை பார்த்துட்டு வந்திருக்கனும்.. ஆனா 8 வருஷமா போகவே இல்லை..

 அந்த பசங்க 8 வயசு ஆன பின் அரண்மனைக்கே வந்து பஜனை பாடறாங்க.. அப்புறமா ராமர் காட்டுக்கு போய் சீதையை அரண்மனைக்கு வான்னு கூப்பிடறார்.. ஆனா பூமா தேவி வந்து சீதையை தன்னோட கூட்டிட்டு போயிடறாங்க.. ராமர் உள்ளதும் போச்சுடுடா க்ரீன் கண்ணா அப்டினு ரிட்டர்ன் ஆகறாரு.. இதுதான் கதை..


சீதையா நடிச்சிருக்கற நயன் தாராவை சும்மா சொல்லக்கூடாது. வாழ்க்கைலயே முதல் முறையா  குடும்பப்பாங்கா, கண்ணியமா முழு உடம்பையும் சேலையால மறைச்சு குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்காங்க .. தேடிதேடிப்பார்த்தும் ஒண்ணும் தெரியல ..

மற்றபடி ராமர், லவன், குசன் எல்லார் நடிப்பும் சுமார் தான் நாடகம் பார்ப்பது போல் இருக்கு .. செட்டிங்க்ஸ், ஆடை வடிவமைப்பு அசத்தல் . இளையராஜா  இசை பிரமாதம்.. 2 பாட்டு நல்லாருக்கு. மொத்தம் 15 பாட்டு அவ்வ்வ்வ்வ்.. இளையராஜாவின் இசையில் தெய்வங்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க  அந்தப்பாட்டும், ராமாயணமே, ஸ்ரீராமாயணமே பாட்டு 2ம் கலக்கல் ரகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPpr-IYDUn2dJ6p7pKnI2uscleExHIQww_MTNRZQwPJOXl_f4gYAkZXt0QmDAxMObWpPQsoEHjDb01wZ_khd4qivcWMiXASQ8BmAc3PVUjD4IRR4yy0qR7eJDqKrjoJfKx2ksuWXr-VbI/s1600/sri_rama_jayam20.jpg
 ராமாயணத்தை இயற்றிய வால்மீகியிடம் சில கேள்விகள்


1. தன் அப்பாவின் ஆணையை மதித்து ராமர் காட்டுக்குப்போனார், அவர் கூட அவர் சம்சாரம் போச்சு ஓக்கே. லக்‌ஷ்மணன் ஏன் போகனும்? அப்படியே அவர் போனாலும் ராமர் என்ன சொல்லி இருக்கனும்? ஒண்ணா நீ அரண்மனைலயே இரு. அல்லது உன் சம்சாரம் ஊர்மிளாவையும் உன் கூட கூட்டிட்டு வந்துடுன்னுதானே சொல்லி இருக்கனும்?


2. ஊர்மிளா ஏதும் சாப்பிடாமல் பட்டினி இருந்து எலும்புக்கூடாய் அவர் படுக்கை அறையில் இருந்ததாய் சம்பவம் வருது.. அதுவரை யாருமே அவரை கவனிக்கலையா?


3. ராமர் பாட்டுக்கு அவர் சம்சாரம் சீதை கூட குஜாலா காட்டுல சுத்திட்டு இருந்திருக்காரு.. லக்‌ஷ்மணன் என்ன பாவம் பண்ணாரு?தனியே விட்டுட்டீங்க?


4. ராமர் சீதை நினைவா சீதை உருவத்தில் தங்கச்சிலை செஞ்சு அரண்மனைல வெச்சு டெயிலி அதை பார்த்துட்டு இருக்கார் , ஓக்கே ஏன் அவரை காட்டில் போய் பார்க்கலை?


5. மக்கள் தான் சீதையை தப்பா பேசி காட்டுக்கு அனுப்பக்காரணம் ஆனாங்க. அதே மக்கள் தங்கள் நகைகளை கொடுத்து சிலை செய்ய சொன்னதுக்கு சீதையை போய் கூட்டிட்டு வான்னு ஒரு பயலும் சொல்லலையே?ஏன்?


6. அனுமார் உலகம் பூரா பறக்கறவர்.. சீதை அந்த காட்டுல தனியா இருக்கும்போது மட்டும் ஏன் தூது விடலை?


7. அசோக வனத்தில் சீதை கற்பு போய் இருக்குமோன்னு சந்தேகப்படற மக்கள் பேச்சை ராமர் கேட்டு அவரை தனியே காட்டுக்கு அனுப்பிட்டாரு , ஓக்கே அங்கே காட்டுல அவர் தனியா இருந்தப்ப யாராவது ரேப் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சாரா?


8. பூமா தேவி வந்து சீதையை தன்னோட பாதாள லோகத்துக்கு கூட்டிட்டு போயிடுது.. எந்த தப்புமே பண்ணாத சீதையை கூட்டிட்டு போறப்ப மனைவியை பரிதவிக்க விட்ட ராமரை ஏன் கூட்டிட்டு போகலை.. தக்காளி, வண்டில ஏர்றான்னு சொல்லி அவரையும் கூட்டிட்டு போறதுக்கென்ன?


9. லவன், குசன் 2 பேரும் பயங்கர புத்திசாலியா வளர்றாங்க, மந்திர வித்தை எல்லாம் தெரியுது. ராமர் பற்றி தெரியுது.. ஆனா ராமர் தான் தன் அப்பான்னு தெரியலை. அப்போ சீதை அவங்க கிட்டே மிஸ்டர் எக்ஸ் தான் உங்கப்பான்னு சொல்லி வளர்த்திருப்பாரா?


10. இவ்ளவ் துரோகம் ராமர் செஞ்சும் சீதைக்கு அவர் மேல கோபமே வர்லையே ஏன்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiVKjoenQMVngLd9k5wtYcLo0WzhDizqqeH4UnzOekdTCi9jZSHVeUeKlk_mdnl-5D5sLU074iJWaTTrqQIsuGva4OaWQcQgzBzKIvQvmIKFniogM1Bk8apxA-kQZBt8tW52MqaCJL2QU/s1600/Nayanatara_New_Photo_Stills_Sri_Rama_Rajyam+%25281%2529.jpg
 இயக்குநருக்கு சில கேள்விகள்


1. ராமர் தன்னிலை விளக்கம் அளிக்கறப்போ “ ஊரே பேசுது, அதனால தான் அப்படி செஞ்சேன்”கறார். ஆனா பூமாதேவி “ ஒரே ஒரு ஆள் பேச்சைக்கேட்டுட்டு உன்னை நிர்க்கதியா விட்ட ராமன்” கறார்,. ஒய் திஸ் குழப்பம்?


2. தலைவன் எவ்வழி? மக்கள் அவ்வழின்னு சொல்வாங்க.. ராமர் மகா உத்தமர், அப்படி இருக்கும்போது அவர் ஆட்சி புரியும் நாடும் அவரை மாதிரி தானே இருக்கனும்? ஏன் சீதையை சந்தேகப்படற அளவு கேவலமா இருக்கு?

3. ஒரு நாட்டின் மன்னன் போருக்காக போர்க்களம் போனா 6 மாசம் கழிச்சுத்தான் நாடு திரும்பறான்.. அப்போ அவன் என்ன எல்லாம் கில்மா பண்ணானோ? அவன் தீக்குளிக்க வேண்டியது இல்லையா?


4. பூமா தேவி பற்றி ராமாயணத்தில் வர்ணிக்கையில் கம்பர் பச்சை வண்ண ஆடை அணிந்தவள் அப்டிங்கறார்.. ஆனா படத்துல சிவப்புக்கலர் பட்டுப்புடவை, சிவப்புக்கலர்ல வெள்ளை கட்டம் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு வர்றாங்களே?


5. பட்டாபிஷேகம் செய்யும்போது நாட்டை காப்பாற்றுவேன் என உறுதி அளித்ததால் தான் நாட்டு நலன் கருதி சீதையை காட்டில் விட சம்மதித்தேன்னு ராமர் சொல்றாரு.. ஏன்? மெரேஜ் நடக்கும்போது கூட மனைவியை எந்நிலையிலும் கை விட மாட்டேன்னு சொன்னாரே? அதை காத்துல பறக்க விடலாமா?

6. புருஷன் இல்லாம தனிமையில் இருக்கும் பெண்கள் அந்தக்காலத்துல பூவே தலைல வைக்க மாட்டாங்க, ஆனா நயன் தாரா ஐ மீன் சீதை எப்பவும் 8 முழம் மல்லிகைப்பூ வெச்சுட்டு இருக்காரே?


7. சீதையை பார்க்க குடிலுக்குள் வர்ற முனிவர் ஏன் கதவை சாத்தறார்? ஹய்யோ அய்யோ ..


8. மத்தவங்க கண்ணுக்குத்தெரியாத இன்விசிபிள் விமனா சீதை அரண்மனைக்குள்ள வர்றப்போ ராமர் வந்ததும் அவரை பார்த்து சீதை ஏன் ஒளியனும்? அவர் தான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாரே/


9. நயன் தாரா கைல ரத்தச்சிவப்புல மருதாணி இருக்கு.. கானகத்துக்கு வந்த பின் 8 வருஷமா அவர் 3 மாசத்துக்கு ஒரு டைம் மருதாணி வெச்சுட்டே இருப்பாரா?அவர் தான் எந்த விதமான அலங்காரத்துலயும் மனம் லயிக்காம இருப்பவர் ஆச்சே?

10. பூமா தேவி க்ளைமாக்ஸ்ல 12 நிமிஷம் வசனம் பேசுது.. அப்போ ராமர் அவர் வாயையே ஆன்னு பார்த்துட்டு அவங்க கிளம்பறப்ப லபோ திபோன்னு அடிச்சுக்கறாரே.. அதை அவர் இருக்கறப்பவே செஞ்சிருக்கலாமே?


http://www.andhrabulletin.com/admin/images/Nayanathara%20stills%20from%20Sri%20Rama%20Rajyam%20(9).jpg
மனம் கவர்ந்த வசனங்கள்


1. மக்களுக்கு நல்வாழ்க்கை வழங்கி நாட்டை ரட்சிப்பவனே ராஜன் ( லீக்ஸ்?)


2. கஷ்டங்கள் இல்லை என்றால் கதைகள் இல்லை..


 அப்போ எந்த கதையும் சொல்ல வேணாம்.. கஷ்டம் எதும் வராம இருக்கட்டும்.


3. சூரிய கிரகத்தில் பிறந்தவர் சந்திர வடிவ பொட்டை இடலாமா?.

4. ராமர் இன் ரொமான்ஸ் மூடு - வளர்வது பிறை மட்டுமா? உன் இடையும் தான் ( நல்ல வேளை.. )


5. வரம் என்றாலே எனக்கு பயம் நாதா .. வரம் நமக்கு சரி வராது..

6.  ஆபத்து வேளை தெரிந்து வருவது இல்லை


7. நாளைக்கேவா? அது இயலாது.. பிறந்த மான் எழுந்ததும் ஓட நினைக்குமா?


8. தாம்பத்யம் முக்கியம் அல்ல, ராஜகாரியம் அழைக்கையில்.. வருகிறேன்.. ( இந்த ராமர் சம்சாரத்தை எப்பவும் சரியாவே கவனிக்கலை  போல )


9. சந்தேகித்தது ஒருவர் என்றால் வெட்டலாம். ஆனால் ஊரே சந்தேகப்பட்டால் நான் என்ன செய்வது? ( ஊர் உன்னை சந்தேகிச்சா நீ தீக்குளிப்பியா ங்கொய்யால)


10. கீர்த்திக்கு ( புகழ்)ஆசைப்பட்டு ராஜ தர்மத்துக்கு துரோகம் செய்ய மாட்டேன்..

11. யக்ஞ யாகம் மனைவி இல்லாத போது கணவன் தனித்து செய்ய முடியுமா?


12. கற்பது என்பது வேறு.. தெரிந்து கொள்வது என்பது வேறு


13. எதிரியின் பலத்தை அறிந்து கொள்வது போர் வித்தையின்  முதல் படி ( வால்மீகி சாணக்கியர்ல இருந்து சுட்டுட்டாரா? சாணக்கியர் வால்மீகிட்ட சுட்டாரா?)


14. பிரம்மாஸ்திரத்தை மிஞ்சியது, தோல்வி என்ற ஒன்றையே அறியாதது ராமனின் அஸ்திரம்


 ஆந்திராவில இந்தப்படம் படு குப்பை ஆகிடுச்சு.. தமிழ்ல கேட்கவே வேணாம்.. படு குப்பை.. 5 நாள் தான் ஈரோட்ல ஓடும்.. டி வி லபோட்டாக்கூட போயிடாதீங்க சாரி பார்த்துடாதீங்க.. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/function-photos/sri-rama-rajyam-audio-launch/sri-rama-rajyam-movie-audio-launch-86.jpg


ஒரு தன்னிலை விளக்கம் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 5

பிரச்சனையை திசை திருப்பறதுல தமிழனை அடிச்சுக்க உலகத்துலயே ஆள் கிடையாது.. தானைத்தலைவர் , தமிழ் இனத்தலைவர்  டாக்டர் கலைஞரும் சரி ,ஒரு நாக்கு, ஒரு சொல் என வாழும் டாக்டர் ராம்தாசும் சரி ,பிரியமான தோழியை உள்ளே வெளியே சீட்டு ஆட்டம் மாதிரி கட்டம் கட்டி விளையாடும் புரட்சித்தலைவியும் சரி,நாட்ல என்ன பிரச்சனை நடந்தாலும் அதை அவங்களுக்கு சாதகமா ஆக்கிக்க , தமிழனை ஏமாற்ற ஏதாவது ரீல் விட்டு அறிக்கைங்கற பேர்ல காமெடி பண்ணுவாங்க.. அந்த மாதிரி தான் இருந்துச்சு என்னோட ஆர் டி பற்றிய நேற்றைய பதிவுக்கான விளைவுகள், எதிர் ட்வீட்கள்

நான் சொல்ல வந்த மேட்டர் என்ன? படைப்பு நல்லா இருந்தா அதை ஆர் டி பண்ணுங்க.. ஆளை பார்க்காதீங்க.. அதை யார் ட்வீட் பண்ணி இருந்தா என்ன? இதுதான் சொல்ல வந்தது.. அதை விட்டுட்டாங்க.. யார் அந்த பிரபல ட்வீட்டர்? மாயவரத்தானா? அதிஷாவா? லக்கிலுக் யுவ கிருஷ்ணாவா? அப்டின்னு கேட்டு ஆளாளுக்கு டி எம் பண்றாங்க, ஃபோன் பண்றாங்க.. அதை சொல்ல விருப்பம் இருந்தா நான் பதிவுலயே சொல்லி இருக்க மாட்டேனா?பேசாம அண்ணன் கானா பிரபாவை இதுல இழுத்துவிட்டுலாமா?ன்னு மீ யோசிச்சிங்க்.. ஏன்னா அவரும் என் ட்வீட்ஸ் ஆர் டி பண்ணதில்லை.. :0


 ஒரு பிரபல ட்வீட்டர் கம் பதிவர் வாலண்ட்ரியா ,வாண்ட்டடா ஜீப்ல ஏறி அது நானா? அப்டினு டைம்லைன்ல அவர் பங்குக்கு காமெடி பண்றார்.. ஆக்சுவலா அது அவர் அல்ல.. ஆனாலும் அவர் விசுவாசிகள் கம் நண்பர்கள் சப்போர்ட் பண்றோம்கற சாக்குல பிரச்சனையை திசை திருப்பறாங்க.. 


என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அதற்கான என் விளக்கங்களும்


1. பிரபல பதிவர் பொண்ணுங்க கிட்டே கடலை போடறது சி.பிக்கு பிடிக்கலை.. பொறாமைல தான் அப்படி வேணும்னே கற்பனையா புனைந்து சொல்றாரு .. -


இது தான் செம காமெடி.. தினமும் 18 மணி நேரமும் கடலை போடுவது ஒன்றையே தன் வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருக்கும் கடலை மன்னன் கட்டதுரையை விடவா அந்த பதிவர் பெரிசா கடலை போட்டுட்டார்? அவர் மேல் வராத பொறாமையா எனக்கு இவர் மேல் வந்துடப்போகுது?விடிகாலைல 3 மணிக்கு ஆரம்பிச்சு மிட் நைட் 12 வரை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்னு 3 பாஷைல 23 பேர்ட்ட கடலை போடறாரே குவிஸ் மன்னன் ரவி அவர் போடாத கடலையா இவர் போட்டாரு? நம்ம தல செந்தில்நாதன் 19 மணி நேரம் ஆன் லைன்லயே இருக்காரு.. அவர் போடாத கடலையா?அவ்ளவ் ஏன்?என்னையே எடுத்துக்குங்க , நான் போடாத கடலையா?

 இப்போ பொறாமைன்னா எப்படி வரும்னா நம்மை விட ஒருத்தர் டேலண்ட்டா இருக்கனும், அவருக்கு வந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காம இருக்கனும், அப்போ தான் பொறாமை வரும்.. என்னமோ நான் கடலையே போடாத மாதிரியும், அண்ணன் கடலை போட்டதால் தான் எனக்கு பொறாமை வந்த மாதிரியும் பேசறது எப்படி ஒத்துக்க முடியும் ?


2. திருப்புற சுந்தர கவர்மெண்ட்னு ஒரு ட்விட்டர் போட்ட எதிர் ட்வீட்டின் சாராம்சம் - ஏன் இதை செஞ்சே?ன்னு கேக்குறது எப்படி அத்து மீறலோ அதே போல் ஏன் இதை செய்யலைன்னு கேட்கறது அராஜகம்..


அண்ணன் என்ன சொல்ல வர்றார்ன்னா யார் கிட்டெயும் நீ போய் ஏன் ஆர் டி பண்ணலைன்னு கேக்காதே.. அது தனி மனித சுதந்திரம்.. அவங்கவங்க விருப்பம்.. பிடிச்சிருந்தா ஆர் டி பண்றாங்க, பிடிக்கலைன்னா விட்டுடறாங்க.. 


அவர் கருத்தை 100% நான் ஒத்துக்கறேன்.. இப்போ என் கேள்வியை அவர் சரியா புரிஞ்சுக்கலை.. அதாவது என் ட்வீட்டை ஏன் ஆர் டி பண்ணலை? என்பது என் கேள்வி அல்ல.. என் ட்வீட் எதுவும் ஆர் டி பண்ணாதவரு என் ட்வீட்டை பெண் பெயரில் போட்டதும் ஏன் ஆர் டி பண்ணாரு? என்பதுதான் கேள்வி..


3. இன்னொரு பிரபல ட்வீட்டர் சொன்னது - நிஜ‌மாக‌வே ----------தான் அவ‌ர் சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சா ஓட‌விட்டு ஒட்டு துணி இல்லாம‌ அவுத்துடுவேன் அவுத்து

  ஹா ஹா ஏன் இந்த கொலை வெறி? இப்போ என்ன ஆகிடுச்சு? கருத்து சுதந்திரம் இல்லையா? ஏதாவது சொன்னா உடனே டாக்டர் ராம்தாஸ் மாதிரி வன்முறைல இறங்கிடுவீங்களா? 


 4. ஒரு பிரபல பெண் ட்வீட்டர் சொன்னது - சாத்தான் வேதம் ஓதுது.. 


  ஏன் , ஒரு நல்ல விஷயத்தை நல்லவன் தான் சொல்லனுமா? கெட்டவன் சொல்லக்கூடாதா?( அதுக்காக நான் கெட்டவன்னு அர்த்தம் இல்லை) உங்க பேச்சுக்கே வர்றேன்.. எய்ட்ஸ் பற்றிய பிரசார கூட்டத்துக்கு ஒருத்தன் வர்றான் பாதுகாப்பான உறவு தேவை, சோ காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொல்றான்னு வைங்க.. உடனே ஆடியன்ஸ்;ல ஒருத்தன் எழுந்து “ உனக்கே எய்ட்ஸ் இருக்கு.. நீ எங்களை எச்சரிக்க என்ன தகுதி இருக்கு?ன்னு கேட்கற மாதிரி இருக்கு.. அவனுக்குத்தான் அதிக தகுதி இருக்கு.. அங்கே போகாதே  பாழுங்கிணறு இருக்குன்னு ஆல்ரெடி கிணத்துல விழுந்து அடி வாங்குனவனுக்குத்தான் சொல்ல அதிக தகுதி இருக்கு.. நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன? சொல்லப்படற விஷயத்தை மட்டும் பாருங்க




 5இந்தியாவின் நெம்பர் ஒன் ட்வீட்டரும்,5572 ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கறவருமான  அண்ணன் கார்க்கி போட்ட ட்விட்டர் லாங்கருக்கு என்  பதில் 






 நீங்க‌ எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்கிற‌ ஆளு. அப்ப‌டி இப‌ப்டின்னு உஷாரா டிஸ்க்ள‌ய‌ம்ர் போட்டு ஆர‌ம்பிக‌க்ணும்ன்னு தோண‌ல‌ சிபி. நீங்க‌ ப‌ரிச‌ல‌தான் சொல்ற‌தா இருந்தா நேரிடையா சொல்ல‌லாம். அது போல‌ அந்த‌ பெண் ட்விட்ட‌ர் யாரு, எந்த‌ ட்வீட்டுன்னு நேரிடையா சொல்லலாம். 


அந்த பிரபல பதிவர் பரிசல் அல்ல.. அதே போல் எனக்கு உதவி செய்த அந்த பெண் ட்வீட்டரை  அவங்க பேரை நான் ஏன் சொல்லனும்? அது தேவை இல்லாத பல பிரச்சனைகளை கொண்டாந்து விடும்..




அத‌ விட்டுட்டு ஏதோ கிசு கிசு ரேஞ்சுக்கு எழுதி இருப்ப‌த ர‌சிக்க‌ முடிய‌ல‌. முத‌ல்ல‌ நீங்க‌ மெகா ட்விட்ட‌ப்ல‌ பேசின‌ப்ப‌வே ஏன் யாரும் அவ‌ர த‌டுக்க‌ல‌, அட்லீஸ்ட் பேசி முடிச்ச‌ப்பின்ன‌ அது ப‌த்தி பேச‌லைன்னு கேட்டுட்டு இருந்தேன். உங்க‌ ஆர்டி ப‌ஞ்சாய‌த்து காமெடியா இருக்கு. யார் யார் எத‌ எத‌ ஆர்.டி ப‌ண்ண‌னும்ன்னு நீங்க‌ லிஸ்ட் போடுறீங்க‌. அதையும் சில‌ர் ம‌ன‌சுல‌ ப‌ட்டத‌ பேசுறீங்க‌, தேர்ந்த‌ ஜெய‌காந்தன் ந‌டைன்னு காமெடி ப‌ண்றாங்க‌. 


அண்ணே, நீங்க தான் காமெடி பண்றீங்க.. கூட்டத்துல மனசுல பட்டதை பேச எல்லாருக்கும் உரிமை இருக்கு.. சட்ட திட்டம் போட்டு இது இதுதான் பேசனும்னு ஏதாவது ரூல்ஸ் சொல்லி இருந்தீங்களா?  நான் எதை ஆர் டி பண்ணனும்னு லிஸ்ட் போடலீங்கோவ்.. நல்லா படிங்க.. அந்த போஸ்டடை,, என் பாயிண்ட்.. என்னோட நல்ல ட்வீட்டை ஆர் டி பண்ணாம என்னோட குப்பை ட்வீட்டை ஒரு பெண் பெயரில் போட்டப்ப மட்டும் ஏன் ஆர் டி பண்ணாரு? என்பதுதான்.. அதுக்கு பதிலை காணோம்.. சம்பந்தம் இல்லாம ஏண்ணே சண்டைக்கு வர்றீங்க? அண்ணே அந்த அளவு நான் ஒர்த் இல்லீண்ணே..



புதுசா வ‌ர்ற‌வ‌ங‌க்ள‌ நிறைய‌ பேர் ஃபாலோ ப‌ண்ண‌ மாட்டாங்க‌. அத‌னால‌ அவ‌ர் ட்வீட்ஸ் பல‌ரும் ப‌டிக்க‌ வாய்ப்பு இருக்காது. அதையே நிறைய‌ ஃபாலோய‌ர்ஸ் இருக்கிற‌ ஆளு ஆர்.டி ப‌ண்ணும்போது அவ‌ரோட‌ எல்லா ஃபாலோய‌ர்ஸூக்கும் அந்த‌ ட்வீட் க‌ண்ணுல‌ ப‌டும். அப்ப‌ உட‌னே ஆர்.டி ப‌ண்ணுவாங்க‌. இந்த‌ சின்ன‌ லாஜிக் கூட‌ தெரியாம‌ க‌ல்யாண் ஜுவ‌ல்ல‌ர்ஸ் பிர‌பு ரேஞ்சுக்கு குர‌ல‌ உய‌ர்த்தி சீமான் ரேஞ்சுக்கு முஷ்டி ம‌ட‌க்கி நீங்க‌ அன்னிக்கு க‌த்தின‌தெல்லாம் ஹார்ட்கோர் காமெடி.



ஹா ஹா ஹா அப்போ நீங்க என் போஸ்ட்டை முழுசா படிக்கலைன்னு அர்த்தம்.. ஏன்னா அண்ணன் டைம் லைன்ல இருக்கறப்ப தான் நான் ட்வீ்ட்ஸே போட்டேன்


அன்னைக்கு பெண் ட்விட்ட‌ர்க‌ள் அமுக்க‌ல் அம‌ராவ‌தி அது இதுன்னு எழுதின‌ப்ப‌வே யாராச்சும் வ‌ம்புக்கு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சிருப்பீங்க‌.


 அண்ணே, உங்களுக்கு இன்னும் விபரம் பத்தலண்ணே... சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டர், அவர் கணவர் அங்கீகாரம் கொடுத்த பின் தான் அப்படி எழுதுனேன்.. ஹய்யோ அய்யோ ஜில்னு மோர் சாப்பிடுங்கண்னே.. சரி ஆகிடும்
 
 அது ச‌ப்புன்னு போயிடுவே‌ இத‌ ஆர‌ம்பிச்சீங்க‌. அடுத்து ஏதோ பிளாக் மேட்ட‌ராமே.. உங்க‌ இந்த‌ அட்டென்ஷ‌ன் சீக்கிங் ப‌ரிச‌ல்தான் டேமேஜ் ப‌ண்ணியிருக்கு. தெரிஞ்ச‌வ‌ங்க‌ ப‌த்தி க‌வ‌லையில்லை. சில பேரு உங்க ப‌திவ‌ ப‌டிச்சுதான் ட்விட்ட‌ருக்கான‌ இல‌க்க‌ண‌த்தையே தெரிஞ்ச‌ மாதிரி க‌மென்ட் போட்டிருப்ப‌தால் நான் ப‌தில் சொல்ல‌ வேண்டியிருக்கு. ஃபாலோ செய்ற‌து, ந‌ல்லா ட்வீட்டாவே இருந்தாலும் அத‌ ஆர்டி ப‌ண்ர‌து அவ‌ங்க‌ இஷ்ட‌ம் என்ற‌ எல்.கே.ஜி டைப் அட்வைஸ‌ சொல்ற‌துக்கு என‌க்கே அருவ‌ருப்பா இருக்கு.

சி.பி - நான் யாருக்கும் அட்வைஸ் பண்னலையே, எனக்குத்தோன்றியதை நான் என் பிளாக்ல போடறேன்.. அதை என் வாசகர்கள் படிக்கறாங்க.. அது தப்பு, என்ன போஸ்ட் ட்விட்டப் பற்றி போட்டாலும் என் கிட்டே அப்ரூவல் வாங்கித்தான் போடனும்னு சொல்ல வர்றீங்களாண்ணே?

ஜோக் எழுத‌றேன்னு ஜோக் அடிக்கிற‌தோட‌ நிறுத்திக்கொங்க‌. தேவையில்லாம‌ ப‌ரிச‌ல்கிட்ட‌ பிர‌ச்சினை மாதிரி இனியும் செய்யாதீங்க‌.  


சி.பி -இது என்னமோ மிரட்டற மாதிரி இருக்கு.. நான் டம்மி பீசுண்ணே.. சாதாரண  ஆள்.. உங்க ரேஞ்சுக்கு பெரிய ஆள் கூட மோதுங்கண்ணே.. 


மொத்தமாக என் கருத்துக்கு ட்விட்டர் உலகில் 12 பேர் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.. ஆனா ஆதரவா 187 பேர் கருத்து சொல்லி இருக்காங்க? அப்போ 12 பெரிசா? 187 பேரு பெரிசா? கருத்துக்கணிப்பு எடுங்க..



டிஸ்கி-





இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

 

 

குரு - சிஷ்யை ( ரஞ்சிதாவின் சொந்தப்படம் )

பத்தினி சாபம் உங்கள எல்லாம் சும்மா விடாதுடா அயோக்கிய ராஸ்கல்லுங்களா
1.நேசிக்கத் தொடங்கினேன், அவ கண்டுக்கவே  இல்லை! வாய் விட்டு  வாசிக்கத் தொடங்கினேன், சைலண்ட் ப்ளீஸ் என்றர் லைப்ரரியன்


-----------------------


2. ஊழலில் மொத்தம் உருவம் பீகார் - லாலு # நீங்க இன்னும்  தமிழ் நாடு பக்கம் வர்லையா?ஊழலின்  ஊற்றுக்கண்ணே இங்கே தான் ஸ்டார்டட்


----------------

3. ஒரு மனுஷனுக்கு என்ன சார் வேணும்? ஒரு கிஸ் கிவிங்க் லேடி , எந்த ஃபீஸ்சும் கேட்காத ஜோடி -நித்தி


---------------------------------

4. ஆன்மீகத்தில் அக்கறை இல்லாவிட்டாலும் திருப்”பாவை”, திருவெம்”பாவை” அக்கறையா படிச்சா நீயும் ஒரு தமிழனே!



---------------------------

5. கடும் நிதிநெருக்கடியில் மத்திய அரசு,செலவுகளை இறுக்கிப்பிடிக்க  உத்தரவு #முதல்ல ஜனாதிபதியை எங்கேயும் போக வேணாம்னு இறுக்கிப்பிடிங்க


----------------------------




6. நித்யானந்தாவுக்கு மரியாதை தரவேண்டும் - ஆதீனம் # மரியாதை விக்ரமன் படம், நீங்க எதிர்பார்க்கறது ஏதும் இருக்காதே?


--------------------------


7. மின்வெட்டு நேரத்தை குறைக்க முடிவு -தமிழக அரசு #  அதாவது கரண்ட்டை கட் பண்ண ஈ பி காரங்க எடுத்துக்கற டைமை சொல்றாங்க 



------------------------

8. உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது World News # அப்போ சரக்கு அடிச்சா பிரமோஷன் கன்ஃபர்மா?


---------------------------


9.கட்டிட தொழிலாளியை கரம் பிடித்த கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு போலீசில்... # கட்டிடத்தொழிலாளி காதலியை  கட்டின எழிலாளி!



---------------------------


10. டியர், நான் ஆள் தான் வெயிட் 45 கே ஜி, ஆனா மனசளவுல எல் கேஜி ஹி ஹி .


.ம்க்கும் நான் பிரீ கேஜி , மைன்ட் இட் :)


-----------------------------------


11. நைட்டி போட்டிருக்கும் கேர்ள்ஸ் எல்லாம் நாட்டி ( NAUGHTY) கேர்ள் அல்ல, - பை அல்மைட்டி கம்மனாட்டி , மீ நாட் லைக் பொம்மனாட்டி வித் நைட்டி



---------------------------------


12.  வாக்காளர்களுக்கு பணம்: துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு:தேர்தல் கமிஷன்# லூசாய்யா நீ? 2000 ரூபா திருடு போனா 5 லட்சம் மாமூல் போலீஸ்க்கா?



-------------------------------

13.  அத்தான், ஈசியா பொய் சொல்றீங்க, ஆனா உண்மையை சொல்ல ஏன் தயங்கறீங்க?


 டியர், நீ அழகா இருக்கே-னு சொல்றது  ஈசி, இம்சையா இருக்கேன்னு சொல்றது கஷ்டம்


------------------------------

14. மேடம் , உங்க குரல் ரொம்ப கேவலமா இருக்கு..


 பாஞ்சாலி - ம்க்கும், ரேடியோ நாடகமா கேட்கறே? குரல் பற்றி விமர்சனம் பண்ண ?


-----------------------------------


15. உலகின் சிறந்த வலி  யாராவது ஒருவரால் நாம் அவ்வப்போது  புறக்கணிக்கப்படுவதே :(


---------------------

16. நீ இருக்கும் ஊருக்கு யாராவது போய் வந்தால் நான் அவர்களைத்தேடிப்போய்ப்பார்த்து பேசி வரும்போது உன்னுடன் பேசியது போலவே உணர்வேன்


-----------------------------------------

17. தைரியசாலிகளாக வெளியே காட்டிக்கொண்டாலும் உள்ளூர நாம் எல்லோரும் ஏதோ  ஒரு விதத்தில் பயந்தாங்கொள்ளிகளே


--------------------

18.  முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ,எதிராளியை எடை போடும் பக்குவம், சிக்கனம் இந்நான்கையும் நாம் பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்


--------------------------


19. உன்னை பார்த்தா ரவுடி மாதிரி இருக்கு, எப்படி உன்னை லவ் பண்ண?




  ரவுத்திரம் பழகுன்னு பாரதியாரே சொல்லி இருக்கார் மிஸ். :)


-----------------------------------

20. சுவாமி நித்யானந்தா பற்றி குறும்படம் இயக்குவேன். - நடிகை ரஞ்சிதா # மேடம், குறும்பட,மா?குறும்புப்படமா? இயக்குவீங்களா? மயக்குவீங்களா?



---------------





Tuesday, May 22, 2012

OH ,MY FRIEND (ஸ்ரீதர்) - சினிமா விமர்சனம்


http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/11/Oh-My-Friend-Movie-Review-Oh-My-Friend-Review.jpg
விக்ரமன் டைரக்‌ஷன்ல வந்த பிரியமான தோழி -40%  + பிரசாந்த்-ஷாலினி நடிச்ச பிரியாத வரம் வேண்டும் - 45%  சொந்த சரக்கு 15 % எல்லாத்தையும் கலக்குனா ஓ மை ஃபிரண்ட் தெலுங்கு படத்தோட கதை ரெடி.. 


ஹீரோவும் , ஹீரோயினும் ஒண்ணாங்கிளாஸ்ல இருந்தே க்ளாஸ் மேட்ஸ்.. ஸ்கூல், காலேஜ் தாண்டி அவங்க நட்பு வளருது.. 2 பேரும் ரொம்ப அந்நியோன்யமா இருக்காங்க , ஆர்யா - த்ரிஷா மாதிரி.. பார்க்கறவங்க, அவங்க கிட்டே பழகறவங்க எல்லாம் அவங்களை சிம்பு - நயன் மாதிரி லவ்வர்ஸ்சாவே நினைக்கறாங்க. ஆனா அவங்க லவ்வர்ஸ் இல்லை.. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் அவ்ளவ் தான்.. ஹீரோ ஒரு ஃபிகரையும், ஹீரோயின் வேற ஒரு ஆளையும் லவ் பண்றாங்க . 4 பேரும் பிக்னிக் போறாங்க .. அங்கே அவங்க 2 பேர் அந்நியோன்யமா பழகறதை பார்த்து அவங்கவங்க லவ்வர்க்கு பொறுக்கலை.. லவ்வா? நட்பா? ஏதாவது ஒண்ணு தான் டிசைடு பண்ணுனு சொல்றாங்க.. அவங்க என்ன முடிவு எடுத்தாங்க என்பதே கதை..

>

சித்தார்த் தான் ஹீரோ .. அந்தக்கால கார்த்திக் மாதிரி அதாவது இதயத்தாமரை, கோபுர வாசலிலே கார்த்திக் போல ஆள் சோ ஸ்மார்ட்.. செம துறு துறுப்பு.. பெண்களின் மனம் கவரும் பர்சனாலிட்டி, பாடி லேங்குவேஜ் .. ( ஆண்கள் அதிகம் அவரை விரும்பதில்லை, ஏன்னு தெரியலை )சட் சட் என மாறும் முக பாவங்கள் அவரது பிளஸ்.. சரளமான நடனத்திறமை இன்னொரு பிளஸ்....காதலில் சொதப்புவது எப்படிக்கு முன்னால ரிலீஸ் ஆன படமா இருந்தாலும் தமிழ்ல இப்போ தான் ரிலீஸ் என்பதால் அவருக்கு இந்தப்படம் உதவியா இருக்கும்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/oh-my-friend-movie-stills_1/oh_my_friend_movie_stills_0333.jpg


 ஸ்ருதி கமல் தான் ஹீரோயின்.. அதாவது  ஹீரோவோட பள்ளித்தோழி... நடிப்பு எப்பவும் போல்.. இவர் கிட்டே உள்ள மைனஸ்  தன் அப்பா கமல் போலவே “ இதோ இதோ பாரு.. நான் நல்லா நடிக்கறேன் “ அப்டினு கை தட்டி கூப்பிட்டு சொல்ற மாதிரி இருப்பதே..  படத்துல நல்ல டிரஸ்சிங்க்... ஏகப்பட்ட டிசைன்ல ஸ்டெட், பிரேஸ்லெட்,  சுடி.. கலக்கல்,.. 


ஸ்ருதியோட லவ்வரா வர்றவர் நவ்தீப்.. சுமாரான நடிப்பு. டைரக்டருக்கு என்ன பிரச்சனைன்னா அவரை லைட்டா வில்லன் மாதிரி காட்டி ஆகனும்.. ஆனா கேரக்டர் வைஸ் வில்லன் கிடையாது.. அங்கே தான் சிக்கல்.. 


ஹீரோவுக்கு ஜோடி சின்ன குஷ்பூ, பெரிய பல்பு ஹன்சிகா. ஆள்  சும்மா தக தகன்னு ரோஸ் மில்க்கால் அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனச்சிலை மாதிரி இருக்கார்.. ஆறிலிருந்து அறுபது வரை தியேட்டர்ல கைல கர்ச்சீபோட  வாயை ஆன்னு பார்க்க வைக்கறார்..  இவர் அழுகையில் ஜொலிக்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் மழையில் இவரை நனைய விட்டது இயக்குநரின் சாமார்த்தியம். எப்படின்னா அவர் கண்கள்ல கண்ணீர் வர்லைன்னு எவனும் சொல்லிட முடியாது..  மழைல நனைய விட்டா எவனும் பாப்பா முகத்தை கவனிக்க மாட்டான்.. உணர்ச்சிகரமான சீன்ல பாப்பா சரியா நடிக்கலைன்னு நாக்கு மேல பல்லை போட்டு யாரும் பேசிட முடியாது.. வெல்டன் டைரக்டர்.




http://datastore01.rediff.com/h450-w670/thumb/69586A645B6D2A2E3131/h6illz01e036hyac.D.0.Oh-My-Friend-Movie-Stills.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. ஹீரோ ஹீரோயினை ஏய் கில்லர் எனவும், ஹீரோயின் ஹீரோவை டுபாக்கூர் எனவும் அழைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வது, நட்பு பாராட்டுவது, ஊடல், அன்பு அனைத்தும் அழகு.. இப்படி ஒரு ஃஃபிரண்ட் நமக்கு இல்லியே என ஏங்க வைக்கும் காட்சி அமைப்புகள்




2. ஸ்ருதி, சித்தார்த்குக்கான ஆடை வடிவமைப்பு கலக்கல்..  எத்தனை வித விதமான மாடர்ன் டிரஸ்?




3.  க்ளைமாக்ஸில் சித்தார்த் பேசும் வசனமான “ நாங்க லைஃப்ல எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டோம் கறதுக்காக பெட்ரூமையும் ஷேர் பண்ணிக்கச்சொல்றீங்களே, இது என்ன நியாயம்? என்று கேட்பது கிளாசிக்.. 




4. நட்புன்னா என்னன்னா அப்டின்னு ஆரம்பிச்சு 2 பக்கத்துக்கு வசனம் எல்லாம் சொல்லாம காட்சி அமைப்பின் மூலமே அதன் பெருமையை சொன்னது.. 




5.  ஒரு பாடல் காட்சியில் மெதுவாக நகரும் ஃபாரீன் பஸ்ஸில் இருவரும் அமர்ந்து கால்களால் உந்தி அந்த பஸ்ஸை நகர வைப்பது போல் காட்டுவது கொள்ளை அழகு.. ( பாடல் - சிறுவர் சிறுமி போல் எத்தனை நாட்கள் நானும், அவரும் சுற்றித்திரிந்தோம்)






6. ஸ்ருதியின் லவ்வர் காரில் டிரைவிங்க் சீட்டில் அமரும்போது சித்தார்த் முன் சீட்டில் அமர வர நவ்தீப் நீங்க பின்னால என சைகை காட்ட சித்தார்த் எதுவும் பேசாமல்  ஒரு பார்வை பார்ப்பாரே ஸ்ருதியை ஆஹா.. 




7. ஹன்சிகாவுக்கான காமிரா கோணங்கள் அனைத்தும்  டாப் ஆங்கிளில் டாப்பை குறி வைத்து எடுக்கப்பட்டது டாப் ஹி ஹி







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ4ywktyAgAXfGcIrGhpzmpIAYh5zz1dAU7S_exqtl69JJ6a8fKMX6Kfd-DhT5r1RF_cRB63MeNJdP4nbK4eqwuGVYgg1Ba4rBbB4LLG6CefpESp-pm_37C4JCz2oPjkhIakxUMgXcvI3V/s1600/Shruti+Hassan+At+Oh+My+Friend+Movie+Press+Meet+Exclusive+Images+%25283%2529.jpg


 இயக்குநருக்கு சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்




1. வழக்கமா கூட்டத்துல அல்லது பஸ்ல ஒரு பொண்ணு பையனை இடிச்சா அவன் எஞ்சாய் பண்ணுவான்.. கத்தி ரகளை பண்ணுவனா?ஸ்ருதி ஒரு பையனை இடிச்சுடறாங்க.. அவன் என்னமோ குலமே அழிஞ்ச மாதிரி கத்தறான்.. அவன் கூட சித்தார்த் ஃபைட் வேற.. வெரி பேடு.. 




2. ஒரு சீன்ல ஸ்ருதி லேப்டாப்ல ஒர்க்கிங்க்.. சார்ஜ் ஏறிட்டு இருக்கு.. சித்தார்த் என்னமோ பேச ஸ்ருதி கண்டுக்கலை, உடனே அவர் சார்ஜ் ஒயரை பிடுங்கிட்டு “ இப்போ நெட்டை கட் பண்ணிட்டேன், என்ன பண்ணுவே?”ங்கறார்.. லேப் டாப்ல நெட் கனெக்டிவிட்டி பென் டிரைவ் இருக்கு 




3. ஓப்பங்க் ஷாட்ல சித்தார்த் தன் ஸ்கூல் மேட்டான ஹன்சிகாவை ரொம்ப வருஷம் கழிச்சு மீட் பண்றார்.. 10 நிமிஷம் பேசிட்டு திரும்பறார்.. ஆனா ஃபோன் நெம்பரோ, அட்ரஸோ, என்ன ஏதுன்னு ஒரு விபரமோ கேட்டுக்கலை.. அதுக்குப்பின் நாய் மாதிரி லோ லோ என அலையறார்.. இது தேவையா? இந்தக்காலத்துல முன்னே பின்னே அறிமுகம் ஆகாத ஃபிகர் 10 நிமிஷம் தொடர்ந்து பார்த்தாலே ஃபோன் நெம்பர் வாங்கிடறாங்க .. 10 வருஷம் ஒண்ணா படிச்ச தோழி கிட்டே நெம்பர் வாங்கக்கூடாதா? 




4. அப்புறம் ஸ்ருதி, சித்தார்த் 2 பேரும் ஹன்சிகாவை என்னமோ தீவிரவாதியை ஃபாலோ பண்ற மாதிரி ஏன் ஃபாலோ பண்ணி அட்ரஸ் கண்டுபிடிக்கறாங்க? நேருக்கு நேர் உன் அட்ரஸ் எங்கே?ன்னு கேட்கலாமே?




5. சித்தார்த்,ஸ்ருதி, ஹன்சிகா 3 பேரும் ஸ்கூட்டில ட்ரிபிள்ஸ் போறாங்க, அப்போ டிராஃபிக் கான்ஸ்டபிள் வழில பார்த்து டக்னு ஸ்ருதியை “ நீ ஆட்டோல போ”ன்னு சொல்லிடறார்.. இது கேனத்தனமா இருக்கு.. வேற ரூட்ல வணடியை திருப்பலாம், கொஞ்ச தூரம் அவரை நடக்க சொல்லி எல்லை தாண்டுனதும் மறுபடி ட்ரிபிள்ஸ் போலாம்.. இதுல இன்னொரு கிளு கிளு அட்வாண்டேஜும் இருக்கு.. எப்படின்னா சித்தார்த் பின்னால முதல்ல ஹன்சிகாவும், அதுக்குப்பின் ஸ்ருதியும் சிட்டிங்க்.. அப்போ நெருக்கம் அதிகமாகும்.. ஸ்ருதி இறங்கிட்டா 2 பேர்தானே இடம் இருக்கும், நெருக்கம் குறைஞ்சிடும், ஹி ஹி 




6. ஒரு முக்கியமான வேலையா கொச்சின் போக வேண்டிய சூழல்ல ஸ்ருதி சித்தார்த்துக்கு ஃபோன் பண்றார்.. ஆனா அவர் அட்டெண்ட் பண்ணலை.. அப்புறம் நினைவு வந்து கேட்கறப்போ 2 பேருக்கும் ஃபைட் வருது.. ஏன்? சிம்ப்பிள் மேட்டர்.. ஐ ஆம் கோயிங்க் டூ கொச்சின்னு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே? 


7. என்னதான் அந்நியோன்யமான ஃபிரண்ட்ஸா இருந்தாலும் அப்படியா கட்டிப்பிடிச்சுக்குவாங்க... காட்சி அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. 





http://www.movietitbits.com/images/gallery/hansika/hansika_big/Hansika%20Hot.jpg




 மனம் கவர்ந்த வசனங்கள்


1. மாறிட்டேன்னு நினைச்சேன்.. நல்ல வேளை.. நீ மாறலை .. 


நம்ம கிட்டே இருக்கற பெஸ்ட் கேரக்டரை நாம மாத்திக்கவே கூடாது.. 


2. மிஸ்டர்... இங்கே நோ வாக், நோ ஸ்மோக்கிங்க்.. 




 இதையும் உங்க டீச்சர் தான் சொன்னாங்களா? 


 நோ நோ காமன் சென்ஸ் ஹி ஹி .. இது கூட தெரியலையா?




3. ஒரு நல்ல இசை அமைப்பாளன்னு என்னை நிரூபிக்க எனக்கு வாய்ப்பு தேவை இல்லை.. தானா உணரனும் எல்லாரும் ( அதெப்பிடி? )




4.  இவளை தெரியுதா?


 ம் ம் அட்டு ஃபிகரா இருந்தாலும் அழகு ஃபிகர் மாதிரி சீன் போடறாளே.. தெரியாம இருக்குமா?




5. மிஸ்.. என்னை ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க?




 யானை உள்ளே போற அளவுக்கு உங்க வாயை திறந்து வெச்சிருந்தா?




6.  பிங்க்கி பிங்க்கி பாங்க்கி...... போட்டுப்பார்த்துத்தான் எதையும் செலட் பண்ணுவேன்


 ஓக்கே மிஸ். இப்போ 9 விரல் காட்டி 9 புக்ல 1 ஐ செலட் பண்ணிட்டீங்க.. சப்போஸ் 12 புக்ல இருந்து 1 செலட் பண்ண வேண்டி வந்தா மீதி 2க்கு எதை காட்டுவீங்க ? ( டபுள் மீனிங்க்  )


7. டியர், கண்ணாடியை பார்த்து எனக்கு நானே நன்றி சொல்லிக்க முடியாது.. அதே மாதிரிதான் உனக்கும்.. நெக்ஸ்ட்


8.  நெக்ஸ்ட் என்ன? 




 வாட்?




 ஜாப் கிடைச்சிருச்சு.. அடுத்து என்ன? ஹி ஹி 


 இதென்ன கேள்வி? வேலைக்கு போவேன்.. 






9. சின்ன வயசுல இருந்தே அவளுக்கு எது வேணும்னாலும் அவ அம்மா தான் டிசைட் பண்ணுவாங்க , இப்போ அவங்க இல்லை.. அதனால டெசிஷன் அத்தாரிட்டி யார்ங்கறதுல கன்ஃப்யூஷன்..


10. எல்லார் மாதிரியும் நீயும் ஃபிரண்ட்ஷிப்பை காதலுக்கு யூஸ் பண்ணிக்கப்போறியா?


ஸோ வாட்?அதுல என்ன தப்பு?


11.  ஒரு சின்ன பிராளம். 

 சொல்லு என்ன?


 அது பர்சனல். 

 ஓஹோ.. ஷேர் பண்ற அளவுக்கு நமக்குள்ள ஃபிரண்ட்ஷிப் வளரலையா?


யா. இனி டெயிலி வந்து என்னை படுத்தி எடுக்காதே.. 



12.  அவனுக்கு புது ஃபிரண்ட் வந்ததும் பழைய ஃபிரண்டை மறந்துட்டான் .. இதுதான் மனித சுபாவம்.. சராசரி நாம்




13.  லைஃப்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டைம் பிரியாரிட்டி கொடுக்க வேண்டி வரும். 




14. உன் பிராப்ளம் என்ன? நீத்துவா? 


 இல்லை.. நீ தான்... 




15. யார் எங்கே இருந்தாலும் ஹேப்பியா இருக்கறது தான் முக்கியம்.. ஆனா இன்னைக்கு நாம எல்லாருமே ஒண்ணா ஹேப்பியா இருக்கோம்








Oh My Friend (2011) DvdRip


16. லைஃப் யாரை எப்போ எங்கே சேர்க்கும்னு சொல்லிட முடியாது.. நேத்து ஃபிரண்ட்டா இருந்தவன் இன்னைக்கு எதிரி, இன்னைக்கு ஃபிரண்டா இருக்கறவன்  நாளை எதிரி.. 




17. கேரியர்க்காக லவ்வையே விட்டுக்கொடுக்கறவங்க இருக்காங்க.. ஆனா ஃபிரண்ட்சிப்க்காக உன் கேரியரையே விட்டுக்கொடுக்கறே.. யூ கிரேட்.. 



18. என் பையனோட வெற்றியை என்னால அனுபவிக்க முடியல.. ஏன்னா அவனை நான் என்கரெஜே பண்ணுனது இல்லை


19. கட்டிக்கப்போறவனை விட நீ ஃபிரண்ட்ஷிப்க்கு  முக்கியத்துவம் தர்றே.. 




20. அவளுக்கு ஒரு சின்ன பிராப்ளம்னா  என்னால தாங்கிக்கவே முடியலை.. 




 ஹூம், என் பிராப்ளமும் அதுதான்... லவ்வர் நானே சும்மா இருக்கேன்.. ஃபிரண்ட் நீ ஓவரா அட்டாச்மெண்ட் காட்டறே.. 






21. ஒண்ணு சொல்றேன். நல்லா மைண்ட்ல வெச்சுக்கோ.. ஆஃப்டர் மேரேஜ் யூ ஆர் மை பிராப்பர்டி




22.  புருஷனும், பொண்ட்டாட்டியும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் ஆக முடியுதோ இல்லையோ  பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் புருஷனும், பொண்ட்டாட்டியுமா தாராலமா ஆகலாம்.. 




23. உங்க எதிரே இப்போ ஒரே ஆப்ஷன் தான் இருக்கு.. அது ஃபிரண்ட்ஸா இருந்த நீங்க 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கறதுதான்




24. வாழ்க்கைல சாய்ஸ் தேடிட்டே இருந்த நான்  அவர் லைஃப்லயும் சாய்ஸ் ஆவேன்னு நினைச்சுக்கூடப்பார்க்கலை




25. டேய் மெரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. பேச்சிலர் பார்ட்டி எப்போ?


 ம்க்கும், என் மேரேஜே பிரேக் ஆகிடுச்சு




26. எந்த நட்புக்குள்ளேயும் ஒரு லவ் இருக்கும். எந்த லவ்வுக்குள்ளேயும்  ஒரு நட்பு இருக்கும்.. 




27. எந்த 2 உறவுகள் சேர்ந்து இருக்கறப்ப அண்டர்ஸ்டேண்டிங்கா இருக்காங்களோ அவங்க லைஃப் ஃபுல்லா சேர்ந்து இருக்கறதுல தடையே இல்லை 




28.  அட்ஜஸ்மெண்ட் பண்ணிட்டு வாழ்ந்துடலாம், ஆனா சேக்ரிஃபைஸ் பண்ணிட்டு வாழ முடியாது.. 




29.  உங்க 2 பேருக்கும் நாங்க ஃஃபிரீடம் கொடுத்தது பெரிய விஷயம் இல்லை.. அதை மிஸ் யூஸ் பண்ணாம 2 பேரும் கவுரம் காத்தீங்களே அதான் பெரிய விஷயம். 


30.ஒரு பொண்ணும், ஒரு பையனும் வயசுக்கு வந்த பின் ஃபிரண்ட்ஷிப்க்கு நோ சொல்லிடனுமா?




31.  ஒரு பையனும், பொண்ணும் தூய்மையான நட்போட பழகுனா இந்த உலகம் ஏன் தப்பா பேசுது?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeYJXvm0ttg83z4nVgcsUtG_RO5V_cxYnwA7FBfZvQOXtsxPaYT2SuNB6oo2oA-7_fF8PooeFxQNh6yci6uXfTwoCBvT_4-ZmIkdpwy6zKtzRgDdz3Bj3izdwCgVbFU8npaaIqn-uQCUVo/s640/Shruti+Hassan+Hot+Saree+Pictures.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41 ( இது தெலுங்குப்படம் என்பதால் விக்டனில் நோ விமர்சனம் ஜஸ்ட் டூ நோ ஸ்டாண்டர்ட்)




 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 




 சி.பி கமெண்ட் - கண்ணியமான நெறியாள்கை என்பதால் காதலர்கள், பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் பார்க்கலாம்.. இது யூத் ஃபிலிம்.. 




 ஈரோடு ஸ்ரீநிவசாவில் பார்த்தேன்.. 







http://www.bollygeek.com/wp-content/uploads/hot-hansika-motwani.png