Showing posts with label SANTHAANAM. Show all posts
Showing posts with label SANTHAANAM. Show all posts

Thursday, June 07, 2012

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதாபோல ஏன் முயற்சிக்கலை?-சந்தானம் பேட்டி @ விகடன்

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg 

1''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 

 
 ''ஏங்க... அவர் என்ன கொத்தவால் சாவடி மார்க்கெட்டா... இல்லை நான்என்ன கோயம்பேடு மார்க்கெட்டா? யாராலயும் யார் மார்க்கெட்டும் போகாதுங்க. சினிமா வுல யாரும் யாரையும் தீர்மானிக்க முடியாது. இப்ப நான் ஹிட்டடிச்சா அதுக்கு யாரெல் லாம், எதெல்லாம் காரணமோ... அதுவேதான் நான் சொதப்பினதுக்கு ஒரு வகையில கார ணமா இருக்கும். புல்லரம்பாக்கம் பிரதர், ஆமா... அவருக்கு எங்கே மார்க்கெட் போச்சு? அவர் இப்பவும் ஸ்க்ரீன்ல வந்தா... ஆடியன்ஸ் அலறுவாங்களே!''



2. ''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


'' 'ஓகே... ஓகே’ படத்துல ஊர்  உலகமே கேட்கிற மாதிரி சொல்லிட்டேனே... 'எந்த ஒயின்ஷாப்லயும் உங்க பிராண்ட் சில்லுனு கிடைக்குறதில்லை’னு. அதே பிராண்ட்தான் தோணி!''



3. ''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு. ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட்ஸ் சொல்லுங்களேன்?'

'
''ஹன்சிகா, தமன்னா எல்லாருமே செம க்யூட். அவங்க ஸ்பாட்ல என்ன வார்த்தை சொன்னாலும் நான் அதைரிப்பீட் அடிச் சுட்டே இருப்பேன். இப்படியே கலாய்ச்சுட்டே இருக்கும்போது கோபம் வந்து கண்டபடி திட்டுவாங்க. அதுல இருந்து நாலு வார்த்தை யைப் பிடிச்சு, படத்துல அந்த வார்த்தையை வெச்சு அவங்களையே கலாய்ப்போம். எப்படி நம்ம தொழில் ரகசியம்?


அவங்களுக்கு டயலாக் வருதோ இல்லையோ, ஆனா ஃபேஸ் எக்ஸ்பிரஷன் பயங்கரமா இருக்கும். 'அவர் வீட்ல இல்லை. வெளியே போயிருக்கார்’. இதுதான் டயலாக். ஆனா, 'அங்கே வீடே இல்லை. பல வருஷமா அங்க ஆள் நடமாட்டமே இல்லை’ங்கிற அளவுக்கு அதுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பாங்க. நாம புரிஞ்சு நடிக்கிறதைவிட, அவங்க புரியாம நடிக்கிறதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அதுதான் எல்லாருக்கும் ப்ளஸ் பாயின்ட்!''



3. ''இன்னமும் சின்னத் திரை நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?'

'
''பெருசு, சிறுசுங்கிறது எல்லாம் ஸ்க்ரீன் அளவுல மட்டும்தான். மத்தபடி ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் டபுள் எக்செல் சைஸ்தான். 'லொள்ளு சபா டீம்’ எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. இருக்காங்க! சுவாமிநாதன், மனோகர்னு லொள்ளு சபா டீம்ல பலரும் என்கூட சினிமால நடிச்சுட்டுத்தான் இருக்காங்க. அடிக்கடி சந்திச்சு மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவோம். ஜீவா இப்ப 'மாப்பிள்ளை விநாயகர்’ங்கிற படத்துல ஹீரோ. அதுல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித் தா மச்சான்னு கேட்டான். அதுல நடிக்கிறேன். பாலாஜி அண்ணன், மாறன் அண்ணன்னு எங்க டீம் எல்லாருமே அடிக்கடி சந்திச்சுப்போம். பார்ட்டி, ஃபங்ஷன்னு வெளியே போனா, இவங்களோட போய் மொத்தமா கலாய்ச்சுக் கழுவிக் கழுவி ஊத்திட்டு வந்துருவேன்!''  




4  ''உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''   


''ரெண்டுமே என் வாய்தான்!

சில நேரம் டைமிங்காப் பேசி ஸ்கோர் பண்ணிடுவேன். சில நேரம் ஓவராப் பேசி கோட்டை விட்டுருவேன். ஒரு டைரக்டர் நம்மகிட்ட வந்து, 'புதுமுகங்களை வெச்சுப் படம் பண்றோம். நீங்க நடிச்சா பப்ளிசிட்டிக்கு உதவியா இருக்கும்’னு என் கேரக்டர்பத்திச் சொன்னார். 'நல்ல விஷயமா இருக்கே... பண்ணிக் கொடுக்கலாம்’னு சம்மதிச்சேன்.

 சம்பளம் பேச தயாரிப்பாளர் வந்தார். லோ பட்ஜெட் படம், புதுமுகங்கள் எல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு என் வழக்கமான சம்பளத்தைவிட ரொம்பக் குறைச்சு சொன் னேன். அவர் அதுக்கே டென்ஷனாகி, 'என்ன சார் இவ்வளவு சம்பளம் கேட்கிறீங்க? சின்னப் படம் சார் இது’னு கொதிக்க ஆரம்பிச்சுட்டார். 'சின்னப் படம்னா எவ்ளோ... அரை மணி நேரம்தான் எடுக்குறீங்களா?’னு கலாய்ச்சுவிட்டுட்டேன். அவர் டென்ஷன் ஆகிக் கிளம்பிட்டார். இப்படித்தான் நம்ம வாய் எல்லாத்துக்கும் கவுன்டர் அடிக்கும்!''




5. ''உண்மையைச் சொல்லுங்க சந்தானம்... உங்களுக்குப் பிடிச்ச தேன்ன்ன் அடை, ஜாங்கிரி, ஜிலேபி... யாரு?'' 


''பேர் மட்டும் சொல்ல மாட்டேன் பரவாயில்லையா?


இப்படி நான் சொல்லிட்டா, இதுதான் நீங்க என்கிட்ட கேட்ட முதல் கேள்வியா இருக்கும். ஆனா, நான் கொடுக்கிற கடை சிப் பதிலா இருக்கும். அதோட என் வீட்டுல என்னை ஃபினிஷ் பண்ணிரு வாங்க!''



6. ''காதல்ல பல்பு வாங்கிய அனுபவம்?''   


''பாலிடெக்னிக் படிக்கும்போது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி, சாக் லேட் பின் பண்ணிக் கொடுத்தேன். அவ சாக்லேட்டை மட்டும் பிரிச்சுச் சாப்பிட்டுட்டு லெட்டரைத் திரும்பக் கொடுத்துட்டுப் போய்ட்டா. சரியான தீனிப் பண்டாரமா இருப்பா போலனு நெக்ஸ்ட் டைம் வெறும் லெட்டர் மட்டும் கொடுத்தேன். அதைப் படிச்சுட்டு இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்துட்டுப் போய்ட்டா.

 ரொம்ப அவமானமாயிருச்சு. முக்கா முக்கா மூணாவது டைமா தைரி யத்தை வரவெச்சு நேரடியாவே போய்சொல் லிட்டேன். என்னைப் பார்த்தா அவளுக்கு ரொம்பக் கேவலாமத் தோணியிருக்கணும் போல. பகபகனு சிரிச்சுட்டுப் போய்ட்டா. அப்படியே அவளை மறந்துட்டு, அடுத்த பொண்ணு மேல கான்சன்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



7. ''சந்தானம்... சிறு குறிப்பு வரைக?'' 


''சந்தானம் ஜாலியான பையன். எல் லாரையும் கலாய்ப்பேன். ரொம்ப சென்டி மென்ட் பார்ப்பேன். இருந்தாலும் நடுவில் எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போக முடியுமோ, அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போவேன். எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும் பிரச்னை தீரலை... ஒண்ணுமே பண்ண முடியாத சூழ்நிலைன்னா, வேற வழியே இல்லாம திரும்பவும் விட்டுக்கொடுத்திருவேன்.
நான் ஆறாவது படிச்சுட்டு இருக்கும்போது 'வாழ்க வளமுடன்’கிற அமைப்புல அப்பா என்னைச் சேர்த்துவிட்டுட்டார்.


 அதுல இருந்தே ஆன்மிக ஈடுபாடு அதிகமாயிருச்சு. கோயி லுக்கு ரொம்பப் போக மாட்டேன். ஆனா, சிவனைத் தினம் கும்பிடுவேன். இலவச இணைப்புகள்ல வர்ற ஆன்மிகப் புத்தகங் களை நீங்கள்லாம் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்க. ஆனா, அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ரமண மகரிஷி, புத்தர், வள்ளலார், பாபாஜினு பெரிய கலெக்ஷனே வெச்சிருக்கேன். ஆன்மிகப் புத்தகங்கள்ல படிக்கிறதையே நான் வேற மாதிரி படத்துல பயன்படுத்தியிருக்கேன்.


'ஆன்மாங்கிற பால், உடலுங்கிறது தண்ணீர். ஜீவாத்மாவோடு, இந்த பரமாத்மா எப்போ ஒண்ணுசேருதோ, அப்போ இந்த உடலை தண்ணீரைப் போலப் பிரிச்சு எடுக் கணும்’னு சொல்வாங்க. அதைத்தான் 'ஓகே ஓகே’ படத்துல குவார்ட்டர், தண்ணீர் பாக் கெட், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ்வெச்சு, 'இது மீரா... இது நீ... இது நானு’ன்னு சொல் லிக் காமெடி பண்ணினேன்.


ஓவர் ஆலா... சந்தானம் ரொம்ப நல்லவன்ங்க!''



8. ''இயக்குநராகும் எண்ணம் இருக்கி றதா? அப்படி இயக்கினால் யார் உங்கள் ஹீரோ?'' 


''அப்படி ஒரு ஆசை இருக்குங்க. கால் ஷீட் கமிட்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு அதைப் பத்தி யோசிக்கணும். அப்போ யாருக்கு என் கதை பிடிக்குதோ, யார் கால்ஷீட் கொடுக்குறாங்களோ, அவங்களைவெச்சுப் படம் பண்ணுவேன். வெறுமனே சிரிச்சுட்டு மட்டும் போகாம, படம் முடிஞ்சதும் யோசிக்கிற மாதிரி காமெடி - சென்டிமென்ட் கலந்த ஒரு கதை வெச்சிருக்கேன். நான் படிச்ச ஆன்மிக விஷயங்களை காமெடி கோட்டிங்ல சொல்லுவேன்.

 நாமெல்லாம் வெளிநாட்டை ஆச்சர்யமாப் பார்க்கிறோம். ஆனா, நம்ம நாட்டுலயே எல்லா விஷயங்களும் இருக்குது. அங்கெல்லாம் 'எப்படி இருக்கீங்க?’னு கேட்டா, 'ஐ யம் ஃபைன்’னு சொல்வாங்க. அவங்க உடம்பையும் மனசையும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. ஆனா, இங்கேதான் சோகமா இருந்தா 'மனசு சரியில்லை’னு சொல்லுவோம். டல்லா இருந்தா, 'உடம்புசரி இல்லை’னு சொல்லுவோம். இந்த மாதிரி யான தத்துவங்கள்லாம் நம்ம நாட்டுல மட்டும்தான் உண்டு. இப்படி நம்ம நாட்டுப் பெருமைகளை ஹைலைட் பண்ணி கதை சொல்லணும்!''



9. ''அதென்ன... நீங்கள் சொல்வதைக் கேட்கும், உங்களுக்கு செட் ஆகும்இயக்கு நர்களிடம் மட்டும்தான் நடிப்பேன் என்று ஏதேனும் பாலிசி வைத்திருக்கிறீர்களா?'' 


''டைரக்டர்-ஆர்ட்டிஸ்ட்டுங்கிற காம்பி னேஷன், சரக்கும் சோடாவும் மாதிரி. மிக்ஸிங் கரெக்டா இருக்கணும். இல்லாட்டி, வேற மாதிரி ஹேங் ஓவராகிடும். எனக்கு யாரெல்லாம் மிக்ஸிங் சரியா இருக்காங் களோ, அவங்களோட சேர்ந்து நிறைய படம் பண்றேன். அப்புறம் பெரிய இயக்குநர்கள் படங்கள்லயும் நடிச்சிட்டுதான் இருக்கேன். ஷங்கர் சார் படம் 'எந்திரன்’ பண்ணினேன். இப்ப அவர் விக்ரம் சாரை வெச்சுப் பண்ற  படத்துலயும் பண்றேன். கௌதம் மேனன் சாரின் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடிக்கிறேன். நீங்க சொல்றதுலாம் இவங்க படங்கள்ல செட் ஆகாது


 .
10. ''சமூக விஷயங்களையும் நகைச்சுவையில் கலந்து தந்த என்.எஸ்.கிருஷ்ணன்,  எம்.ஆர்.ராதாபோல நீங்க ஏன் முயற்சிக்கலை?'' 


 ''அதுதான் அவங்க பண்ணிட்டாங்களே நண்பா! நாம ஏதாவது புதுசா பண்ணுவோம்னுதான் வேற மாதிரி ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்!''




11. ''லொள்ளு சபாவுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?''   


''ரெண்டுமே லொள்ளுதான். என் சினிமா காமெடிகளை சேனல்ல பார்த்து ரசிக்கிறாங்கன்னா, லொள்ளு சபா காமெடிகளை இன்னமும் யூ-டியூப்ல பார்த்து ரசிக்கிறாங்க. மத்தபடி ரெண்டுக்கும் வேற பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, சினிமாங்கிறது எவர் க்ரீன். எதிர்கால ஜெனரேஷன் பார்த்து ரசிக்கிறது. 'டேய் என்னடா இது... அந்தக் காலத்துல சந்தானம் இவ்வளவு மொக்க போட்ருக்கான்’னு எதிர்காலத்துல யாரும் சொல்லிடக்கூடாதுங்கிறதால சினிமாவுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்றேன்!''



டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


Saturday, June 02, 2012

லேடீஸை அதிகம் கலாய்ப்பது ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்ப எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடி காலாகாலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' 


''அட! என்னங்க குரு... இப்படி கோக்குமாக்கா மாட்டிவிடுறீங்க? வெல்... இதுக்கு நான் என்ன சொல்ல? ஆங்... எனக்கு அப்புறம் வரப்போற காமெடியன்கள் பின்னிப் பெடலெடுத்தா, நம்ம காமெடி மொக்க தட்டிரும். வர்ற பார்ட்டிங்க கொஞ்சம் மொக்கையா இருந்தாங்கன்னா, நம்மளது அப்படியே தூக்கலா நிக்கும்... கிரேட் எஸ்கேப். அதனால, அடுத்த ஜெனரேஷனைப் பொறுத்துதான் நம்ம காமெடி ஜெனரேட்டரோட லைஃப் இருக்கு. அதனால, அதுவரைக்கும் வொர்ரி பண்ணிக்காம, இந்தத் தலை முறையைச் சிரிக்கவெச்சுட்டுப் போயிருவோமே.''




2. ''இப்போதைக்கு காமெடியில் உச்சக்கட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?'' 


 ''எனக்குத் தெரிஞ்சு வடிவேலு, விவேக் ரெண்டு பேருமே உச்சக்கட்ட கலைஞர்கள்தாங்ணா.''



3.  ''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?'' 


''அக்காவா, தங்கச்சியானு தெரியலை...  கோபத்துல எதுனா சாபம் கீபம் விட்ராதீங்க. அப்புறம் அடுத்த பிறவியில் கழுதையா பொறந்திரப்போறேன். 'சில சமயம்’னு சொல்றதைவிட, 'சில பெண்களை’ கமென்ட் அடிக்கிறேன்னு சொல்லலாம். படத்துல ஹீரோயின், அம்மானு நிறைய கேரக்டர்கள் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் மரியாதையாத்தான் பேசுவேன். கூட நடிக்கிற சில கேரக்டர்களை மட்டும்தான்  கலாய்ப்பேன்.


 அதை அந்த இடத்துல செஞ்சே ஆகணும். இல்லைன்னா, அது சாமி குத்தம் ஆகி, ஏவி.எம். ஸ்டுடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திருவாரு. அதையும் இயக்குநர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிறதாலதான் செய்றேனே தவிர, தனிப்பட்ட விருப்பம்லாம் கிடையாது. பெண்களை என் கண்களைப் போல மதிக்கிறவன்ங்க நான்!''



4. ''உங்கள் திரை வாழ்க்கைக்கு உதவியவர்களில் மறக்க முடியாதவர் யார்... ஏன்?'' 


''முதல்ல என் அம்மா. எனக்கு புத்தி தெரியாத வயசுலயே சின்னக் குழந்தையா இருக்கும்போது, டான்ஸ் எல்லாம் ஆடுவேன்னு சொல்வாங்க. ஏதாவது வேணும்னு அடம்பிடிச்சு அழுதிருப்பேன். அதை டான்ஸுனு நினைச்சுட்டாங்கனு நினைக்கிறேன். என்னை ஸ்கூல் ஆண்டு விழா டான்ஸ்ல சேர்த்துக்கணும்னு ரொம்ப கஷ்டப் பட்டு மிஸ்கிட்டல்லாம் சொன்னாங்க.


 அப்ப சூர்யானு ஒரு மிஸ்தான் எனக்கு ஸ்கூல்ல டான்ஸ் ஆட வாய்ப்பு தந்தாங்க. எப்படி ஆடணும்னு சொல்லியும் தந்தாங்க. டிராமா எழுதிக்கொடுத்து நடிக்கவெச்சாங்க. அடுத்து, சின்னத்திரைக்கு அதாவது, விஜய் டி.வி-யில் வாய்ப்பு வாங்கித் தந்த பாலாஜி, ராம்பாலா. என் டி.வி. ஷோக்களைப் பார்த்துட்டு, பெரிய திரைக்கு என்னை அழைச்சுட்டு வந்த சிம்பு. இவங்க எல்லாருமே என் வாழ்க்கையில முக்கியமானவங்க, மறக்க முடியாதவங்க.''



5. ''லொள்ளு சபா ஷூட்டிங் காமெடி ஏதாவது சொல்லுங்களேன்?'' 


''லொள்ளு சபாவுல எடுத்ததைவிட, நீங்க பார்த்ததைவிட, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த காமெடி அள்ளும். ஒரு தடவை மனோகருக்கு என்னை எதிர்த்துப் பேசுற மாதிரி ஒரு டயலாக். 'உன்னை எப்படி எல்லாம் உயிருக்குயிரா நான் வளர்த்தேன். எல்லாத்தையும் மறந்து என்னைத் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டியே... ஏன்?’ இவ்ளோதான் டயலாக். எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும், அரை நாள் ரிகர்சல் பார்த்தும் அந்த டயலாக்கை அவர் பேசவே இல்லை. 'சரஸ்வதி சூலத்தை எடுத்து நாக்குல குத்தி னாக்கூட இவரால பேச முடியாது. 


அவருக்கு அவ்வளவு எல்லாம் வேணாம். டயலாக்கைக் கம்மி பண்ணுங்கப்பா’னு சொல்லிட்டார் டைரக்டர். 'உன்னை எப்படி எல்லாம் வளர்த் தேன், இருந்தாலும் தூக்கிப்போட்டுட்டீயே, ஏன்?’னு வசனத்தைக் குறைச்ச£ங்க. ஹூம்... அதுவும் வரலை. 'என்னை மதிக்காமத் தூக்கிப்போட்டுட்டீயே... ஏன்?’னு அதையும் கம்மி பண்ணினாங்க.


 முன்னாடியை விட ரொம்பத் திணற ஆரம்பிச்சுட்டார் மனுஷன். எல்லாரும் கொலவெறி ஆயிட் டோம். 'சரி விடு, வெறும் 'ஏன்?’னு மட்டும் கேக்கச் சொல்லு’னு சொல்லிட்டு டைரக்டர், 'ஆக்ஷன்’ சொன்னார். நான் திரும்பி நின்ன தும், 'ஏன்?’னு கேக்குறதுக்குப் பதிலா... 'எதுக்கு?’ன்னார் மனோகர். டைரக்டர் சேரைத் தூக்கி அடிச்சுட்டார். அவங்கவங்க கையில எதையெதை வெச்சிருந்தாங்களோ, அதாலயே அவரை அடிக்க வந்துட்டாங்க.


 'யோவ்... காலையில இருந்து ஏன்... ஏன்னு ஆயிரத் தெட்டு வாட்டி சொல்லியாச்சு. கடைசியில 'எதுக்கு?’னு கேக்குறியே... உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாய்யா?’னு நாள் முழுக்கப் பரேடு. இந்த மாதிரி நிறைய இருக்கு. அடுத்தடுத்த எபிசோடுல பார்ப் போம்.''



6. ''உங்கள் குரல் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டா... மைனஸ் பாயின்ட்டா?'' 


''கண்டிப்பா ப்ளஸ் பாயின்ட்தாங்க. வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்னு அப்போ சொல்வாங்க. ஆனா, இப்போலாம் வாய்ல ஆம்ப்ளிஃபயர் வெச்சு முக்குக்கு முக்கு லவுட் ஸ்பீக்கர் கட்டிக் கதறுனாத்தான், அந்தப் புள்ளைக்குக் குடிக்கத் தண்ணிகூடக் கிடைக்கும். அப்படி இருக்கு இப்போ டிரெண்ட். 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ல 'ஹாய் டியூட்’னு என் ஒரு போன் வாய்ஸுக்கே தியேட்டர்ல கிளாப்ஸ் அள்ளுச்சே தலைவா! 'வாய்ஸுக்கு கிளாப்ஸ் வர்றதை இப்பதான் பாக்குறோம்’னாங்க. அந்த அளவுக்கு என் வாய்ஸ் ரீச் ஆகியிருந்தா, அது ப்ளஸ்தானே சரவணன்?''




7. '' 'நண்பன்’ படத்தின் மூணு ஹீரோவில் ஒருத்தரா உங்களை நடிக்கக் கூப்பிட்டு இருந்தா, யாரோட ரோல் உங்க சாய்ஸ்?'' 


''ஜீவா கேரக்டர்! அந்தப் படத்தை இந்தியில பார்த்தப்பவும் சரி, இப்ப தமிழ்ல பார்த்தப்பவும் சரி, அந்த கேரக்டர்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சென்டிமென்ட் ப்ளஸ் காமெடி ரெண்டுமே கலகல காக்டெய்லா இருக்கும் அந்த கேரக்டர்!''




8.''உங்களுக்குப் பிடித்த தமிழ் காமெடி நடிகர்கள் யார் யார்?'' 


 ''நல்ல காமெடி சென்ஸ் உள்ள காமெடி நடிகர்கள் மத்த லாங்குவேஜைவிட தமிழ்லதான் அதிகம். அதனால, இவங்க யாரையும் ஸ்கிப் பண்ண முடியாது. பட், என்னையும் மதிச்சு நீங்க இந்தக் கேள்வி கேட்டுட்டீங்க... தங்கவேல் சார், கவுண்டமணி சார் காமெடி ரொம்பப் பிடிக்கும். அவங்க டயலாக் டெலிவரி, டைமிங் சென்ஸ் எல்லாம்... மக்கா சான்ஸே இல்ல! அதுலயும் 'கல்யாணப் பரிசு’ படத்துல தங்கவேலு சாரோட ஒவ்வொரு சேட்டையும் எக்ஸ்பிரஷனும்... எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறித் துரத்தினாக்கூட அவர்கிட்ட நெருங்க முடியாது!''




9.''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார்?''



''பிடிச்ச ஹீரோ... ரஜினி சார். பிடிச்ச ஹீரோயின்... சிம்ரன்.''



10. ''உங்கள் முன்னோடிகள்?'' 


''என் உறவினர்கள்தான். தெருவுல இருக்குற சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்னு என் முன்னோர்கள்தான் என் முன்னோடிகள். இவங்ககிட்ட இருந்துதான் நிறைய புதுப்புது வா£த்தைகள், கேரக்டர்களைப் பிடிச்சுருக்கேன் நான். 'அப்பாடக்கர்’னு சொன்னது என் மாமா ஒருத்தர்தான். ஒருமுறை ஒரு நாய் அவரைப் பார்த்து குறைச்சப்ப, அந்த நாயைப் பார்த்து அவர் கேட்டதுதான், 'நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா’ங்கிறது. இந்த மாதிரி புதுப்புது விஷயங்கள் எல்லாம் அவங்கள்ட்ட இருந்துதான் எடுப்பேன்.


 'என்னை என்ன அகாதுகானு நினைச்சியா?’னு நான் பேசினதுக்கூட அப்படித்தான். 'எப்பப் பார்த்தாலும் சித்தப்பாவைக் கூப்பிட்டு சபையில அசிங்கப்படுத்துறதையே வேலையா வெச்சிருக்கீங்களே, என்னை என்ன அகாதுகானு நினைச்சிங்களாடா?’னு ஒருவாட்டி மாமா சொன்னதை ஞாபகம் வெச்சு டயலாக் ஆக்கினேன். 'நம்ம தம்பியைப் பேட்டி எடுக்க வர்றாங்க. ரோடெல்லாம் ஒரே குப்பையா இருக்கே’னு மப்பு ஏத்திக்கிட்டு ரோட்டையே கூட்டினார் இன்னொரு சித்தப்பா. இவங்கள்லாம்தான் என் முன்னோர்கள்; முன்னோடிகள்.''


- அடுத்த வாரம் 


''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 


' ''அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 


''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ பஜனைக் கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங்களா?'' 


டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html

சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 



Thursday, May 31, 2012

லொள்ளு சபா - எந்திரன் பார்ட் 2 - ? சந்தானம் பேட்டி @ விகடன்

http://i.ytimg.com/vi/a5HXKnP52rA/0.jpg 


1. 'மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 


 
''கண்டிப்பா 'எந்திரன்’தான். அந்தப் படம் பார்த்த உடனே இதை வெச்சு எப்படி எல்லாம் லொள்ளு பண்ணலாம்னு சும்மா ஜாலியாப் பேசினோம். ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கிற கதை. அதனால நிறைய புதுப் புது ஐடியாஸ் கிடைச்சது. அப்படி ஒரு ஷோ பண்ணா, கண்டிப்பா எந்திரன் 2.0தான் எங்க சாய்ஸ்!''



2. ''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''நேற்று... இன்று... நாளைனு போட்டு 'காமெடியன்கள்’னு மட்டும் போடுங்க. அதுதான் ரொம்ப சரி!


சினிமாவுல வடிவேலு, சந்தானம், அப்படி இப்படினு பேர் மட்டும்தான் மாறும். ஆனா, காமெடியன்கள் வந்துட்டேதான் இருப்பாங்க. நாளைக்கு யார்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்கிட்ட கேட்டா, எனக்கு மட்டும் என்ன ஆன்ஸர் பேப்பர் லீக் ஆகியிருக்குமா என்ன?''



3. ''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?'' 



''வேண்டாங்க... பெருசா சாதிச்ச சார்லி சாப்ளின் பட்டம் வெச்சுக்கிட்டாரா என்ன, லாரல்-ஹார்டி பட்டம் வெச்சுக்கிட்டாங்களா? மிஸ்டர் பீனுக்கு என்ன பட்டம் இருக்கு? சாதிச்ச யாருமே பட்டம் வெச்சுக்கலையே. அதனால, எனக்கும் பட்டம் வெச்சுக்கணும்னு ஆசை இல்லை. அப்போ நீ சாதிச்சுட்டியானு கோக்குமாக்காக் கேள்வி கேட்கக் கூடாது. அப்படிலாம் படத்துலதான் எங்களை நாங்களே டபாய்ச்சுக்குவோம்!''




4. '' 'இம்சை அரசன் 23ம் புலிகேசி’ இரண்டாம் பாகத்தில் நீங்கதான் ஹீரோவாமே... உண்மையா?'' 


''இதுவரைக்கும் எதுவும் உறுதி ஆகலை. பேசிட்டு இருக்கோம். எல்லாம் கூடி வந்தா பார்க்கலாம்!''  




5. ''குவார்ட்டர் இல்லாமல் உங்களால் சிரிக்கவைக்கவே முடியாதா?'' 


''எனக்கும் ஆசைதாங்க. ஆனா, 'குவார்ட்டர்’னு ஒரு டயலாக்கை ஆரம் பிச்சாதான் எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆடியன்ஸ் முகத்துல ஒரு சந்தோஷமும் மலர்ச்சியும் அந்த வார்த்தையைக் கேட்ட தும்தான் வருது. அட... காமெடி சீன் பிடிக்க டிஸ்கஸ் பண்றப்போ, அதைச் சொன்னாதான் கூட உட்கார்ந்திருக்குறவங்க முகத்துல ஒரு உற்சாகம் பொங்குது. அதனால 'புலி வால் பிடிச்ச கதையா, குவார்ட்டரை விட முடியலை. ஞாபகப்படுத்திட்டீங்க. அதனால, ஒரு குவார்ட்டர் காமெடி சொல்றேன்...


என் ஆபீஸ்ல ஒரு குவார்ட்டர் பார்ட்டி இருக்கார். அன்னைக்கு ஒரு பெரிய ட்ரீட். அவரையும் சாயங்காலம் ட்ரீட்டுக்குக் கூப் பிட்டு இருந்தோம். பார்ட்டிக்குப் போறதுக்கு முன்னாடி வார்ம்-அப் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கார். பவர்கட்டான நேரத்துல ஒரு கட்டிங்கைத் தேத்தி, ஃபிரிஜ்ல இருந்து தடவித் தடவி வாட்டர் பாக்கெட் எடுத்து மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு சத்தம் இல்லாம செட்டில் ஆகிட்டார்.


கரன்ட் வந்த பின்னாடி ஒரு நண்பர் வந்தார். அவருக்கு டீ போட்டுக் கொடுக்க ஃப்ரிஜ்ல பால் பாக்கெட் தேடுறோம். காணோம். அப்பத்தான் தெரிஞ்சது... 'வாட்டர் பாக்கெட்’னு நினைச்சு நம்ம தோஸ்த் பால் பாக்கெட்டை வெட்டி கட்டிங்ல மிக்ஸ் பண்ணியிருக்கார்னு. அவரை செம கலாய் கலாய்ச்சிட்டோம். நாங்க பார்ட்டி முடிஞ்சு வர்ற வரை அந்த கட்டிங் பார்ட்டி டாய்லெட்டைவிட்டு வெளியவே வரலை. சீதபேதி, வாந்தி பேதினு ஊர்ல இருக்குற அத்தனை பேதி யும் வந்து ஒரு காட்டு காட்டிருச்சு!''



6. ''தற்போதைய காமெடியன்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்?'' 


''இப்போ உள்ள காமெடியன்களில் எல்லாருமே எனக்கு நண்பேன்டாதான். யாரையும் குறிப்பா சொல்ல முடியாது. ஹாலிவுட் காமெடியன்களில் என் ஆல்டைம் ஃபேவரைட் மிஸ்டர் பீன்தான். சமீபத்தில் அவர் நடிச்ச ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரோட எக்ஸ்பிரஷன்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே அட்டகாச அட்ராக்ஷனா இருக்கும்!''

http://123tamilgallery.com/images/2010/09/telugu-actor-santanam-02.jpg



7. ''ஸ்கூல் நாடகங்களில் நடிச்ச காமெடி அனுபவம் சொல்லுங்களேன்?'' 


''நைன்த் படிக்கும்போது ஒரு நாடகம் போட்டோம். பூலோகத்துல இருந்து கிளம்பிப் போய் எமலோகத்துல இருக்குறவங்களை மாடர்னா மாத்துறதுதான் கான்செப்ட். எமன் வேஷம் போட்டவன் வேட்டி மாதிரி கட்டி, தலையில கிரீடம்லாம் வெச்சிருந்தான். அவன் உட்காரும்போது நான் சேரை இழுக்கணும். அவன் லேசா தடுமாறணும். அதை நான் ராங் டைமிங்ல பண்ணி சேரை முழுக்க இழுத்துட்டேன். அவன் விழுந்துட்டான்.


 தலைகுப்புற விழுந்த வேகத்துல, அவன் வேட்டி கிரீடத்துல சிக்கி, அவன் போட்டிருந்த ஓட்டை ஜட்டி அப்படியே எக்ஸ்போஸ் ஆகிருச்சு. நான் அவனுக்கு உதவி பண்றதா நினைச்சு, வேட்டியைக் கிரீடத்துல இருந்து பிடிச்சு உருவுறேன். மொத்த வேட்டியும் கையோட வந்திருச்சு. 'ஓட்டை ஜட்டி எமன்’னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் கிரீடத்தைத் தூக்கிப் போட்டுட்டு ஸ்டேஜ்லயே என்கூட மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டான். 'நான் என்ன பண்றது?’னு சமாளிச்சுப் பார்த்தேன். ஹூம்ம்... கோபம் குறையாமப் பல வருஷம் என்கூடப் பேசாமயே இருந்தான்!''



8. ''காமெடி நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?''   


''காமெடி நடிகர்கள் ஓட்டுப் போடலாம்தானே! அப்போ அவங்களுக்கும் அரசியலுக்கு வரத் தகுதி இருக்குதானே பிரதர்?! மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைச்சா, அவர் காமெடியனா இருந்தா என்ன... வில்லனா இருந்தா என்ன? ஆக்ச்சுவலி சினிமாவில் இருக்கும்போதே காமெடியன்ஸ் மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க!''



9. ''இந்தக் கேள்விக்கு மழுப்பாம, மறைக்காம பதில் சொல்லுங்க... நீங்க ஹீரோவா நடிக்கிற படத்துக்கு யாரை ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணுவீங்க?'' 


''சும்மாவே என்கூட நடிக்கிற எல்லா ஹீரோயின்களும்... 'வாங்க ஹீரோ சார்’னு கூப்பிட்டுக் கலாய்ப்பாங்க. இதுல நீங்க வேறயா? ஆனா, இதுவரை அவங்களே யாரும் 'நீங்க ஹீரோவா பண்ணப்போறீங்களா’னு கேட்டது இல்லை. அதனால, அவங்க யாரும் என் சாய்ஸ் இல்லை. என் ஆசைனு கேட்டா, கேத்ரீனா கைஃப்தான். ஆனா, அவங்க சம்மதமும் அதுல முக்கியம் இல்லையா? கேட்டுச் சொல்லுங்களேன்!''



10. ''விகடன் மேடையில் கராத்தே உடையில் உங்க போட்டோ பார்த்தேன். எத்தனை பெல்ட் வாங்கியிருக்கீங்க? எந்தக் கடையில் வாங்கு னீங்க?'' 


''நீங்க வாங்கின கடைக்குப் பக்கத்துக் கடையில வாங்கினேன்  நம்புங்க பிரதர்... கராத்தேல பிரவுன் பெல்ட் வரை வாங்கியிருக்கேன். இப்பவும் கராத்தே ஸ்டெப்லாம் ஞாபகம் இருக்கு. ரியல் லைஃப்ல ஒருத்தனைத் தூக்கிப் போட்டுலாம் மிதிச்சிருக்கேன். ஆனா, அப்போ கராத்தே கை கொடுக்கலைங்க. நாம பொறுமையா அந்த ஸ்டெப் போட்டுத் தாக்கறதுக்குள்ள நம்மளை அடிச்சுட்டுப் போயிருவாங்க.


 பழக்கதோஷத்துல நாம 'ஹோஸ்’னு குனிஞ்சு மரியாதை பண்ணும்போது, அவனுங்க பொக்குனு குத்திருவானுங்க. தெருச் சண்டை வேற விஷயம். இப்போ ரீசன்ட்டாகூட ஒருத்தன் குடிச்சிட்டு ரோட்டுல ஒரு பொண்ணைப் போட்டு அடிச்சுட்டு இருந்தான். வண்டியை நிறுத்தி சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கலை. நானும் ஃப்ரெண்டும் சேர்ந்து நாலு அப்பு அப்புனோம். அப்புறம்தான் அடங்குனான்.


 அப்பப்போ பசங்ககூட ஜாலியா ரெஸ்லிங் விளையாடுவேன். யார் முதுகு முதல்ல கீழ படுதோ அவங்க அவுட். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பார்ட்டிங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விளையாடினப்ப, விரல்ல லேசா எலும்பு முறிஞ்சிருச்சு. ஆனா, நிச்சயம் கராத்தே கத்துக்கிறது நம்ம தன்னம்பிக்கையைத் தாராளமா வளர்க்கும். உடல் வலுவைக் கூட்டுற விஷயம். அதுக்காகவே அதைக் கத்துக்கலாம்!''



11. ''உங்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகமா... ஆண் ரசிகர்கள் அதிகமா?''


''இப்போ சென்சஸ் எடுத்துட்டு இருக்காங்களே.... அவங்ககிட்ட சொல்லி அப்படியே இந்தக் கேள்விக்கும் பதில் வாங்கிருவோமா? என்ன பாஸ் இது விளையாடிக்கிட்டு இருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேருமே சமமாத்தான் இருக்காங்க. ஆனா, பசங்க பரவாயில்லை. தியேட்டர்ல விசிலடிச்சோ, கலாய்ச்சோ விட்ருவாங்க. நம்ம நம்பருக்கு ஒரு தடவை கூப்பிட்டு அதை நாம எடுக்கலைன்னா, கோபப்பட்டுவிட்ருவாங்க.


 ஆனா, சில பெண் ரசிகைகள் கால் பண்ணுவாங்க. எடுக்கலைன்னா, 'என்ன சார், கால் அட்டெண்ட் பண்ண மாட்டீங்களா?’னு ஒரு மெசேஜ் வரும். அதுக்கு ரிப்ளை பண்ண மாட்டேன். கொஞ்ச நேரத்துல 'நீ என்ன அவ்ளோ பிஸியா?’னு கோச்சுப்பாங்க. அப்புறம் 'போடா வெண்ணெ’னு ரொம்பக் கோபமா அனுப்புவாங்க. நான் எதுக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். எல்லா ரசிகர்கள்கிட்டவும் பேசணும்னு ஆசைதான். ஆனா, எவ்ளோ பேர்கிட்ட பேச முடியும்?''


- அடுத்த வாரம் 


http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/592235_156557197698928_2040420322_n.jpg


''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 


''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு... ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட் சொல்லுங்களேன்? 


டிஸ்கி - 1
- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html





Thursday, May 24, 2012

டபுள் மீனிங்க் காமெடி ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 

''அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்னு அழகான குடும்பம். ஊர் இங்கே தாம்பரம் பக்கத்துல பொழிச்சலூர். அந்த ஊரே என் சொந்தம்தான். எல்லோருமே சொந்தக்காரங்கதான். ஒவ்வொருத்தரையும் தனித் தனியா சொன்னா, எலெக்ஷன் ஓட்டர் லிஸ்ட் மாதிரி ஆகிடும். ரொம்பப் பெரிய குடும்பம். சந்தோஷமா இருக்கோம்!''



2.'' 'அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 

 நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்களா? அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படிங்க தொடர்ந்து நடிக்க முடியும்? மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற விஷயம் அதுல இல்லைனு சொன்னாங்க. அதான் அந்த டிராக் வேணாம்னு நினைச்சு, வழக்கமான நம்ம டகால்டி டிராக்குக்கு மாறிட்டேன்!''



3. ''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ, பஜனை கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங் களா?'' 


''கலாய்ச்சுட்டாராமாம்!''



4. ''உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சோகம் என்ன?''
''என் நண்பன் ஜிலானியின் மரணம். என்னோட மிக நெருங்கிய நண்பன் அவன். என்னை நிறைய மாத்தினவன். பெரிய பணக்கார வீட்டுப் பையன். அவன்கூட கம்பேர் பண்ணா, நான் ஒண்ணுமே கிடையாது. இருந்தாலும், என்னைக் கூடவே வெச்சு சுத்திட்டு இருப்பான். 'லொள்ளு சபா’ பண்ணிட்டு இருக்கும்போது, என்கிட்ட கார் எல்லாம் கிடையாது.


அப்போ கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துக்கக் கூப்பிடுவாங்க. சிம்பு, 'ஜெயம்’ ரவி மாதிரியான ஹீரோக்கள் செம பாலீஷா, சொகுசான கார்களில் வந்து இறங்குவாங்க. நான் ஆட்டோவுக்கே காசு இல்லாம அல்லாடிட்டு இருப்பேன். அப்போலாம் லான்சர் மாதிரி கெத்து கார்ல என்னை கூட்டிப் போய் இறக்கிவிட்டு இருந்து கூட்டிட்டு வரணும்னு டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புவான். எப்பவுமே எங்கயுமே என்னைவிட்டுக் கொடுக்கவே மாட்டான். என்னை இந்த அளவுக்கு முன்னேத்திவிட்ட நல்ல நண்பன். பாண்டிச்சேரி போய்ட்டு வரும்போது பைக் விபத்துல இறந்துட்டான். என்னோடஉண்மை யான 'நண்பேன்டா’ அவன். ஐ மிஸ் யூ ஜிலானி!''


5. ''உங்க அம்மா, அப்பா, வீட்டுக்காரம்மா, குழந்தைகளுக்குப் பிடிச்ச காமெடியன் யார்?'' 

''என் அம்மா, அப்பா, சம்சாரம், குழந்தைங்க, தோஸ்துங்க எல்லாருக்கும் பிடிச்ச காமெடியன்... நான்தான். வேற யாரையாச்சும் சொன்னா, சோறு போட மாட்டேன்ல. நான் மொக்கை காமெடி பண்ணினாலும் பயங்கரமா சிரிச்சு, அப்ளாஸ் கொடுத்து என்னை வளர்த்துவிட்டது அவங்கதான். நமக்குப் பிடிச்ச பேட்ஸ்மேன் டொக்கு போட்டாலும் 'வாவ்... வாட் எ ஸ்ட்ரோக்’னு கைதட்டுவோமே... அந்த மாதிரி!

ஸ்கூல் படிக்கிறப்பலாம் நான் வீட்டுக்கு டார்ச்சர் கொடுக்குற பிள்ளை. என் டார்ச்சர் தாங்காம ஒரு தடவை என் அம்மா, 'ஊர்ல நாலஞ்சு புள்ள பெத்தவள்லாம் சந்தோஷமா இருக்கா. ஒரே ஒரு புள்ளையப் பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே’னு அலுத்துக்கிட்டாங்க.


அதைத்தான் காப்பி பண்ணி 'பாஸ்’ படத்துல பேஸ்ட் பண்ணேன். ஷூட்டிங் பரபரப்புல வீட்டுக்குப் போகலைன்னா, அம்மா அந்த டயலாக்கைத்தான் சொல்லிட்டு இருப்பாங்க. என் வீட்டுக்காரம்மாவுக்கு பொண்ணு பாக்குற காமெடி சீன்னா ரொம்பப் பிடிக்கும். என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தப்ப, நான் ஊர்ல இல்லை. பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட 'லொள்ளு சபா எபிசோட்ல பாத்துக்கோங்க’னு வீட்ல சொல்லிட்டாங்க. அன்னைக்கு எபிசோட்ல 'பதினாறு வயதினிலே’ படத்தைக் கலாய்ச்சிருந்தோம்.


அதுல என்னைப் பார்க்க என் சம்சாரம் கிராமத்தையே துணைக்கு வெச்சுக் கிட்டு டி.வி. முன்னாடி காத்துட்டுஇருந்திருக் காங்க. கைல பீடி, சாராய பாட்டில்னு ஒரு நல்ல குடிமகனா நான் மிகச் சிறப்பாகச் சலம்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'டி.வி-ல நாலு பேரு பாக்கும்போதே இப்படிக் குடிக்குறானே... இவன்லாம் தனியா இருந்தா எப்படிக் குடிப்பான்’னு பொட்டு பொடிசுல ஆரம்பிச்சு கிழவிங்க வரை திட்டியிருக்காங்க. 'சிகரெட் கிகரெட் குடிச்சாகூடப் பரவாயில்லை.


பீடி குடிக்குறானே!’னு பெருசுங்க பொருமியிருக்காங்க. 'இப்படி ஒரு பரதேசிக்கு வாக்கப்படணுமா?’னு என் மனைவி சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எல்லாம் சொல்லிப் புரியவெச்சுக் கல்யாணம் பண்ணினேன்.

'மந்திரப் புன்னகை’ படத்துல மாமனார் வீட்டுக்காரங்க கும்பலா வந்து இறங்குனதும், 'வந்துட்டாங்கப்பா... மாயாண்டி குடும்பத்தார்’னு கமென்ட் அடிப்பேனே... அதோட இன்ஸ்பிரேஷன் இந்தச் சம்பவம்தான். என் பசங்களுக்கு 'ஓ.கே. ஓ.கே.’ பட பார்த்தா கேரக்டர்தான் ரொம்பப் பிடிக்கும். ஏதாவது கோபத்துல திட்டுனாக்கூட, 'ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு’னு சொல்லிக் கலாய்க் குறாங்க. எப்படிச் சமாளிக்குறதுனுதான் தெரியலைங்க!''


6. ''நீங்க பேசுற காமெடிகள் எல்லாத்தை யும் போறபோக்குல 'ஜஸ்ட் லைக் தட்’தட்டி விடுறீங்களே... எப்படி?'' 

''டயலாக் பேசுறது ஜஸ்ட் லைக் தட் ஃப்ளோவா இருக்கும் பிரதர். ஆனா, அதை ஹிட் ஆக்குறதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு யோசிப்போம். புதுசா ஒரு வார்த்தை பிடிக் கும்போதே, அது மக்களுக்குப் பிடிக்குமா? எவ்வளவு தூரம் ரீச் ஆகும்னு மூளையைக் கசக்கிட்டே இருப்போம். ஒரு காமெடி சீன் பண்ண குறைஞ்சது மூணு நாள் ஆகும்.


இப்போ நடிச்சுட்டு இருக்குற 'சேட்டை’ படத்துல நான் இன்னொருத்தர்கிட்ட 'பக்கத்து அபார்ட்மென்ட்ல கில்மா நடக்குது’னு சொல்ல ணும். கில்மா பழைய வார்த்தையாச்சேனு யோசிச்சோம். அதையே கொஞ்சம் மாத்தி, 'சிக்காய் முக்காய் நடக்குது’னு சொல்வேன். 'அப்படின்னா’னு இன்னொருத்தர் கேட்க, 'அதாங்க கிலிகிலிகிலிபிலிபிலிபிலி... இப்பவும் புரியலையா? ஸ்கிஸ்கிஸ்குஸ்குஸ்குஸ்ங்க’னு சொல்லும்போதே டைரக்டர் கண்ணன் சிரிச்சிட்டார்.


இந்த ரெண்டு வார்த்தையைப் பிடிக்க எங்களுக்கு ரெண்டு நாளாச்சு. இந்த உலகத்துல எதுவுமே ஜஸ்ட் லைக் தட் கிடைக்காது நண்பா!''


7. ''உங்க காமெடிகளைக் குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை  ரசிக்குறாங்க. ஆனா, நடுநடுவுல திடீர்னு ரெட்டை  அர்த்த வசனம் வெச்சுடுறீங்களே... தேவையா?'' 

''உண்மைதான். தெருக்கூத்தோ, மேடை நாடகமோ, சினிமாவோ... எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தணுமே! 'டபுள் மீனிங் டயலாக்’ ரசிக்கவே ஒரு குரூப் இருக்கே. அவங்க கோட்டாவுக்கு நாங்க ஏதாவது கொடுத்தாகணுமே?

அதான் டபுள் மீனிங் காமெடி. குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியாது. புரியும்போது ரசிக்க ஆரம்பிச்சிடுறாங்க. என் அக்கா பையன் 'மன்மதன்’ படத்துல நான் பண்ணின காமெடியை முன்னாடி பாத்தப்ப, இரான் சினிமாவை சப்- டைட்டில் இல்லாமப் பார்க்குற மாதிரி உட்கார்ந்துட்டு இருந்தான். இப்போ அதைப் பார்க்குறப்ப விழுந்து விழுந்து சிரிக்கிறான். நம்மளா யாருக்கும் சொல்லிக் கொடுக்குறதில்லை பிரதர்!''


8.''சினிமாவுல ஹீரோ - ஹீரோயின்னுகூடப் பார்க்காம எல்லாரையும் செமையா கலாய்க்கிறீங்க... நிஜ வாழ்க்கைல நீங்க செமத்தியா கலாய் வாங்கியிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணுங்க?'' 

 ''காலேஜ் படிக்கும்போது வி.ஜி.பி-ல ஷோ பண்ண வாய்ப்பு கிடைச்சது. மூணு மணிக்கே மேடை ஏறித் தயாரா இருந்தோம். ஒருத்தன்கூட வரலை. திடீர்னு ரெண்டு பஸ் நிறைய கும்பல் வந்து இறங்குச்சு. 'மச்சான், இவங்களைச் சிரிக்கவெச்சு ஸ்கோர் பண்ணிருவோம். அப்பதான் இன்னொரு நாள் புரொகிராம் கொடுப்பாங்க’னு பேசி வெச்சுக் காமெடி பண்ண ஆரம்பிச்சோம்.


 எதிர்ல இருக்குற அத்தனை பேரையும் அப்படிக் கலாய்க்குறோம். எல்லாம் பொணம் மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. நான் மேடையை விட்டு இறங்கி, அவங்களோட சேர்ந்து உட்கார்ந்து கைதட்டுறேன். அப்பவும் பய புள்ளைக ஒருத்தன்கிட்டயும் ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு கட்டத்துல ரொம்பக் கடுப்பாகி, 'யோவ்! கைதட்டுனா என்ன குறைஞ்சா போயிருவீங்க’னு திட்டுனா, 'ஏண்டி பாபு... ஏனு செஸ்தானு?’ங்கிறானுங்க. எல்லாம் ஆந்திரா கோஷ்டி. வாழ்க்கையில நாங்க வாங்குன பிரமாண்டமான மொக்கைங்க அது!''

- அடுத்த வாரம் 

''மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 



''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?


''
- இன்னும் கலாய்க்கலாம்...


டிஸ்கி - சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html

சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html





சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 

Thursday, May 10, 2012

சந்தானம் பேட்டி - இன் ஆனந்த விகடன்


http://moviegalleri.net/wp-content/gallery/karthi-ranjani-wedding-reception/karthi_ranjani_reception_photos_487.jpg 

1. ''நீங்க கவுண்டமணியைப் பயங்கரமா இமிடேட் பண்றீங்கனு நான் சொல்றேன்... கரெக்டா?'' 


சி.பி - கொலம்பஸ்.. புதுசா கண்டு பிடிச்சுட்டாரு.. இரிடேட் பண்ணாம தானே இமிடேட் பண்றாரு?  


''அது என்ன மாய மந்திரம்னு தெரியலை... விகடன் ஆளுங்க எடுக்குற பேட்டியில மட்டும் இந்தக் கேள்வி ரிப்பீட் ஆகிட்டே இருக்கு. இதை வாசகர்கள்தான் கேக்குறாங்களா, இல்ல... விகடன்ல உள்ளவங்களே எழுதிப்போட்டுக் கேக்குறாங்களானு தெரியலை. பரவாயில்லை... இந்தவாட்டியும் சமாளிப்போம்.


என் முதல் படம் 'மன்மதன்’. அதுல ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க கவுண்டமணி சார்தான் காமெடி. செகண்ட் ஹாஃப்லதான் என் காமெடி. மகுடேஸ்வரன் சொல்ற மாதிரி, அவரை நான் இமிடேட் பண்ணி இருந்தா, படம் முடிஞ்சதுமே, 'அடேய்... இந்த சந்தானம் பய கவுண்டமணி மாதிரியே பண்றான்ப்பா’னு சொல்லி அப்பவே காலி பண்ணியிருப்பாங்க.



 ஆனா, அப்படில்லாம் எதுவுமே நடக்கலையே நண்பா. ஒருவேளை நான் சப்ஜாடா எல்லாரையும் கலாய்க்கிறதால, நீங்க இப்படிச் சொல்றீங்கனு நினைக்கிறேன். வழக்கமா கவுண்டமணி சார் செந்திலை மட்டும்தான் அதிகமாக் கலாய்ப்பார். நான் என்கூட நடிக்கிற எல்லாரையுமே செந்திலா நினைச்சுக் கலாய்க்கிறேன். அதனால, அவரைஇமிடேட் பண்ற மாதிரி உங்களுக்குத் தோணலாம். ஆனா, உங்க கிரீடம் மேல சத்தியமா நான் அவரை இமிடேட் பண்ணலை மிஸ்டர் மகுடேஸ்!''


சி.பி - நாத்திகம் பேசி  கருத்து சொன்னா அது விவேக் காமெடி, அடிவாங்கி அழுதா வடிவேல் காமெடி, எல்லாரையும் நக்கல் அடிச்சு துவைச்சு காயப்போட்டு தொங்கப்போட்டா அது கவுண்டமணீ காமெடின்னு  தமிழன் மனசுல ஃபார்ம் ஆகிடுச்சு.. மாற்ற முடியாது.. நமக்கு சிரிப்பு வருதா?ங்கரதுதான் முக்கியம்..



2. ''விஜய், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யானு ஹீரோக்களே சேர்ந்து நடிக்கிறாங்க. ஆனா, வடிவேலு - சந்தானம் காம்பினேஷன் இனிமேல் சாத்தியமா? எங்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்க ஆசையா இருக்கே?'' 



''எனக்கும் அந்த ஆசை இருக்கு. நான் ரெடிங்க!''




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzJzfOMOWF2Bf8npCN_g8Tqy4Hlac6W2T7KEoAtA_YE3vhItFwhf-JI8bM9I-mq6zE_r-yvlR7owcCzx2AJZ3lddEXo4GHIsQsJlqeLwLFwOGqq-58jyDQxYn-g1-ls-5K1Mw_FEY-_9ji/s1600/san+(1).jpg

 3. ''நீங்க பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ஆனாலும், பக்கா மெட்ராஸ் பாஷை பேசி ஒரு படம்கூட நடிக்கலையே நீங்க... ஏன்?'' 


''என்ன திவ்யா... நம்மகிட்டயே காமெடி பண்றீங்க. இப்ப நான் பேசுறது எந்த ஊர் பாஷைனு நினைச்சுட்டு இருக்கீங்க? 'எப்டிக்கீற? நாஷ்டா துன்னியா? இட்னு வா... வலிச்சுனு வா’னு பேசுற பழைய மெட்ராஸ் பாஷையை மனசுலவெச்சுட்டுக் கேக்குறீங்கனு நினைக்குறேன்.


 அப்படிலாம் இப்ப சென்னையிலயே யாரும் பேசாதப்ப, நான் மட்டும் பேசினா ரொம்ப கேரிங்கா இருக்குங்க. இப்பல்லாம் மெட்ராஸ் பொண்ணுங்க செம டீசன்ட்டா இங்கிலீஷ்லதான் கலக்கு றாங்க. அவங்களுக்கு ஈக்குவலா இல்லாங் காட்டியும் பசங்களும் தமிழையே இங்கிலீஷா ரீ-மிக்ஸ் பண்ணிப் பேசுறாங்க. 


அதைத்தான் நானும் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக் கேன். இப்போ 'ஓ.கே. ஓ.கே.’ படத்துலகூட பக்கா ட்ரிப்லிக்கேன் பாஷைதான் பேசி யிருப்பேன். அதைக் கவனிக்கலையா நீங்க? ஆங்... பை தி பை... திவ்யகுமாரி, நீங்க லூஸ் மோகன் ரசிகையா?''


4.''தமிழ் சினிமாவில் காமெடின்னா ஆண்கள்தானா... ஏன் பெண்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கவே மாட்டேங்கிறீங்க?'' 


''எப்பவுமே இப்படினு சொல்ல முடியாது. ஒருகாலத்துல மனோரமா ஆச்சி கொடுத்த ஸ்பேஸ் போகத்தான் எல்லாருக்கும் இடம் இருந்தது. தங்கவேல் சார், நாகேஷ் சார், சந்திரபாபு சார்னு வளைச்சு வளைச்சு எல்லாருக்கும் ஜோடியா நடிச்சுட்டு இருந்தாங்க ஆச்சி. அதுக்குப் பிறகு, கோவை சரளா மேடம் அடிச்சுத் தூள் பண்ணிட்டு இருந்தாங்க. 


ஆனா, அவங்களுக்கு அப்புறம் யாரும் வரலை. பார்ப்போம்... யாராவது வருவாங்க... அது வரைக்கும் 'அவள் வருவாளா... அவள் வருவாளா’னு நாம பாட்டு பாடிட்டு இருப்போம்!''



சி.பி - ஏன்? ஷகீலா, ஆர்த்தி 2 பேரும் இப்போ காமெடி டிராக்ல ட்ரை பண்ணிட்டுதானே இருக்காங்க? ஓக்கே ஓக்கே ல உங்க கூட நடிச்ச தேன்ன்ன்ன்ன்ன் அட கூட காமெடில கலக்க வாய்ப்பு இருக்கு.



5''நயன்தாரா,  தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி... இவங்கள்ல யார் உங்களுக்கு நெருக்கமான தோழி?'' 




''நல்ல வேளை... என் நெருக்கமான தோழி பேரு இந்த லிஸ்ட்ல இல்லை. கிரேட் எஸ்கேப்!''




6. ''தமிழில் எந்த ஹீரோவுடன் நடிப்பது உங்க கனவா இருந்தது?'' 


''ரஜினி சார்தான். அந்த அளவுக்கு அவரோட தீவிர வெறி பிடிச்ச ரசிகன்.  'எந்திரன்’ மூலம் அந்தக் கனவும் நிறைவேறிடுச்சு. 'எந்திரன்’ ஷூட்டிங்ல என் டயலாக்கை எல்லாம் மறந்துட்டு, ரஜினி சார் நடிக்கிறதையே பார்த்துட்டு நிப்பேன்.


 'ஏன்... ஏன்... என்ன... என்ன... என்ன ஆச்சு சந்தானம்?’னு சார் பதற்றமா கேட்பார். 'இல்ல சார்... நீங்க நடிக்கிறதையே பாத்துட்டு இருந்துட்டேன்’னு சொல்வேன். 'ஓ.கே. நான் நடிச்சதைப் பார்த்துட்டீங்க. நீங்க என்ன நடிக்கிறீங்கனு நான் பார்க்கணும்ல. அதுக்காகவாவது நடிங்க சார்’னு கிண்டலடிப்பார்.


 நாம ஏதாவது செட்ல காமெடி பண்ணா, அவரும் ஜாலியா சேர்ந்து கலாய்ப்பார். சீன்ல என் காமெடி டயலாக் டெலிவரி எல்லாத்தை யும் ரசிப்பார். 'சூப்பர்... சூப்பர்’னு என்கரேஜ் பண்ணுவார். கடைசியில ஒரு சீரியஸான சீன். நான் ரொம்பவே திணறிட்டேன். 'அப்பா, காமெடின்னா மட்டும் பபபபனு பேசிடுற. சீரியஸ் சீன்ல சிக்கிக்கிட்ட பார்த்தியா’னு சிரிச்சார். சார் செம ஸ்ட்ரிக்ட்டு... ஆனா, செம சாஃப்ட்டு!''



7 ''எப்பவும் ஹீரோவுக்கு நண்பனாவே காமெடியன் வர்றது ஏன்?'' 



சி.பி - அப்போத்தானே படம் பூரா வர முடியும்?  காமெடி களை கட்டும்? வில்லனா வந்தா ஹீரோயின் இருக்கற சீன்ல அதிகமா வர முடியாதே? 


''இந்தக் கேள்வியைத்தாங்க நானும் எல்லா டைரக்டர்கள்கிட்டயும் கேட்டுட்டே இருக்கேன். அட... ஹீரோவுக்கு மட்டும்தான் உலகத்துல ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்களா? அந்த ஹீரோயின் ஹீரோயின்னு ஒருத்தங்க நடிக்கிறாங்களே... அவங்களுக்குலாம் பசங்க ஃப்ரெண்ட்ஸா இருக்க மாட்டாங்களா? 


 'அந்த கேரக்டர்ல ஒரு பொண்ணுதான் நடிக்கணும், நீ பையன். நடிக்கக் கூடாது’னு ஏதோ சினிமா இலக்கணத்தை மீறக் கூடாதுங்கிற மாதிரி சொல்றாங்க. அட... இந்த மாற்று சினிமா... ரியல் சினிமானு ஏதேதோ சொல்றாங்களே... அதுலயாச்சும் ஹீரோயினுக்கு ஒரு காமெடி யனை ஃப்ரெண்ட் ஆக்குங்கப்பா... அன் லிமிடெட் கால்ஷீட் தர்றேன்.''


சி.பி - அதுல ஒரு பிரச்சனை இருக்கு.. பெரும்பாலான படங்கள்ல ஹீரோவை விட நீங்க பர்சனாலிட்டில தூக்கலா தெரியறதால உங்களூக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா அப்புறம் ஹீரோ ஷூட்டிங்க்ல டம்மிஆகிடுவார்.. 

http://www.dailomo.com/wp-content/uploads/2011/11/siruthai-Santhanam-Karthi-Tamanah.jpg



8 ''நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ஸ்கூல்ல வாத்தியார்கிட்ட  அடிலாம் வாங்கி இருக்கீங்களா? ('சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா’னு கலாய்க்கக் கூடாது!)'' 


''டிப்ளமோ இன் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்... சுருக்கமா டி.இ.சி. படிச்சிருக்கேன். அதுவே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் படிச்சேன். வாத்தியார்களையே கலாய்ச்ச  சம்பவம்தான் நிறைய இருக்கு.

 ஒரு சின்ன சாம்பிள்... கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் நான் படிச்சேன். காலையில நாலு பீரியட், மத்தியானம் மூணு பீரியட். மத்தியானம் சாப்பிட்டு முடிச்சுட்டுப் போறப்ப ஒரே ஒரு புக்கை மட்டும் கைல வெச்சு ஸ்டைலா சுத்திக்கிட்டே ஸ்கூலுக்குப் போவேன். அப்படி ஒரு தபா போனப்ப, 'எங்கடா என் சப்ஜெக்ட் புக்?’னு வாத்தியார் கேட்டாரு.


என்ன பண்றதுனு தெரியாம, 'இல்லைங்க சார்... வர்ற வழியில ஒருத்தர் புடுங்கிக்கிட்டாரு’னு சமாளிச்சேன். அப்புறம் அப்புறம் அவர் கேட்டப்பவும் அதே காரணத்தைச் சொன்னேன். ஒரு நாள் என்னை இறுக்கிப் புடிச்சுட்டாரு... 'புக்கை எவனாவது புடுங்குவானா? உன்கிட்ட புத்தகத்தைப் புடுங்குனது யார்னு சொல்லு... நான் என்னன்னு கேக்குறேன்?’னு என்னை ஸ்கூட்டர்ல தூக்கிப் பின்னால உட்காரவெச்சுக்கிட்டு கிளம்பிட்டாரு. 


 'என்ன பண்ணி டபாய்க்கலாம்’னு யோசிச்சுட்டே போறேன். ஒரு நாலு ரோடு சந்திப்புல ஸ்கூட்டரை நிப்பாட்டச் சொன்னேன். 'எங்கடா, யார்றா அது?’னு சுத்திமுத்திப் பார்த்துட்டே கேட்டார். 'அதோ அவருதான் சார்’னு கை காமிச்சுட்டு, வீட்டுப் பக்கம் ஓடிட்டேன். வாத்தியார் திரும்பிப் பார்த்தா, அங்கே கையில புத்தகத்தை வெச்சிட்டு சிலையா நிக்கிறார் பாரதியார். 




பயங்கர காண்டாயிட்டார் மனுஷன். 'டேய்...’னு நடுரோட்ல நின்னுட்டு ஆந்திரா வில்லன் மாதிரி கத்தினார். அக்கம்பக்கத்துல நின்னவங்க கூடி விசாரிச்சதும், விஷயத்தைச் சொல்லியிருக்கார். 'ஏன்யா, வாத்தியார் வேலைதானே பாக்குற... அறிவில்லையா உனக்கு. சின்னப் பையன் சொல்றான்னு கேட்டுக்கிட்டு இவ்ளவு தூரமா வருவ?’னு எல்லாரும் அவரைப் போட்டுக் கலாய்ச்சிட்டாங்க. இந்த மாதிரி மத்தவங்களை மாட்டிவிட்டு பிரச்னை ஆனது நிறைய இருக்கு!''


- அடுத்த வாரம்... 


''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்போ எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடிகாலா காலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' 


''இப்போதைக்கு காமெடியில் உச்சகட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?'' 


''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?'' 


- இன்னும் கலாய்க்கலாம்...


http://jeevafans.com/wp-content/uploads/2011/08/VV-Santhanam-Jeeva.jpg
THANX - VIKATAN


டிஸ்கி - சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html

சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html