Showing posts with label 2 ஜி. Show all posts
Showing posts with label 2 ஜி. Show all posts

Thursday, July 05, 2012

சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த ஜெ. + கலைஞர் குடும்பத்துக்கு 2 ஜி ஊழலில் ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?? ,

http://rajkanss.files.wordpress.com/2008/09/pg2a1.jpg 

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.


இலங்கையில் புலிகள் ஆதிக்கத்தை ஒழிப்பதாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பார்லி.,யிலும் எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு பணிந்து இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.



இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு ( விமானப்படை) இந்திய ராணுவ தரப்பில் பயிற்சி அளிக்கிறது. சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சி முகாமுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.



இலங்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெ., இன்று இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:



நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழகத்திற்கும் , தமிழ் இனத்திற்கும் எதிரான செயல். சர்வேதச அளவில் இலங்கைக்கு எதிராக குரல் ஒலித்து வரும் போது இது போன்று பயிற்சிக்கு இந்தியா முன்வந்திருப்பது பொருத்தமற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு மவுனம் சாதித்து வருமு் மத்திய அரசு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இது தமிழக மக்களின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இலங்கை வீரர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கருணாநிதி கண்டனம் : இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில்; இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


பிரதமர் கருணாநிதிக்கு கடிதம் : இலங்கை தமிழர் சீரமைப்பு மற்றும் அந்நாட்டு அமைச்சர் பேச்சு குறித்தும் சமீபத்திய ரியோடி ஜெனீரோ மாநாட்டின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.


http://athikalai.files.wordpress.com/2011/02/2g-cartoon.jpg


 2. கருணாநிதி குடும்பத்துக்கு ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?ஆதாரம் தாக்கல்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.



தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேற்று முன்தினம் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர்.


அப்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஆதாயம் பெற்ற நிறுவனங்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 223 கோடி மற்றும் 550 கோடி ரூபாய் என, தனித் தனியாக அளித்ததற்கான ஆதாரங்கள், தங்களிடம் உள்ளதாகக் கூறினர். அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர்.



223 கோடி:கூட்டுக் குழுவிடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி:அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் இருந்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற டி.பி., குழும நிறுவனம், அதற்கு பிரதிபலனாக 223.55 கோடி ரூபாயை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டி.பி., குழுமத்திடம் இருந்து, கலைஞர்"டிவி'க்கு இந்த பணம், எந்த வழியில், எப்படி கைமாறியது என்பதற்கான பட்டியலையும் தாக்கல் செய்துள்ளோம்.



ஏர்செல் விவகாரம்:அடுத்ததாக, ஏர்செல் நிறுவனம், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனம், கருணாநிதியின் உறவினர் குடும்பத்துக்குச் சொந்தமான சன் டைரக்ட் "டிவி' லிட்., நிறுவனத்தில், 549.96 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இது தொடர்பாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 


கடந்த மே மாதம், இது தொடர்பாக சி.பி.ஐ.,யுடன் இணைந்து, மலேசியாவில் விசாரணை நடத்தினோம். இன்னும் சிலமுக்கியமான தகவல்கள், மலேசிய அதிகாரிகளிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvtwsqNWE6NDerOtPlFj37dlMW7JyoLhTBcIgiMVRI1cE1MJRwRcXBwHDOWa8-KCIjD-yU78MmL7FLhX7ZmUxdrYk5wR31E0g9SMH2siGTnQaAZrP-MP6Fdimy3EEcsrqQPlnc4Whp4pnN/s1600/tamilmakkalkural_blogspot_madan_cartoon.jpg


நன்றி - தினமணி , மதி , தின மலர்

Thursday, May 24, 2012

ஆ ராசா, ப .சிதம்பரம், அடுத்த ஆப்பு சோனியா ?- சுப்ரமணீயம் சுவாமி பேட்டி

சைக்க முடியாத சக்தியாக இருந்த ஆ.ராசா தன் அமைச்சர் பதவியை இழந்தது தொடங்கி திகார் சிறைக்குள் தள்ளப்பட்டது வரை அத்தனைக்கும் முக்கியக் காரணம், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!



 15 மாத திகார் சிறை வாசம் கடந்து, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் ராசா. இதைவைத்து, 'இனி சி.பி.ஐ. விசாரணை பிசுபிசுத்துவிடும்’ என்றும் 'ஸ்பெக்ட்ரம் பூதம் அவ்வளவுதான்’ என்றும் எக்கச்சக்க அனுமானங்கள். இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களில் தீவிரமாக இருந்த 'ஸ்பெக்ட்ரம் டெரர்’ சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசியதில் இருந்து...


1. ''ஆ.ராசாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் குறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்களே?''



''இது சுத்த அபத்தம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு ஜாமீன் கோருவதும் கொடுக்கப்படுவதும் முறையானதுதான். ராசா விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஜாமீன் கோருவது குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் உரிமை.


இதற்கு ராசா மட்டும் விதிவிலக்கா என்ன? சட்டரீதியான அணுகுமுறையில் அவர் ஜாமீனில் வந்திருக் கிறார். இதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் எந்த விதத்திலும் குறையாது. சொல்லப்போனால், ஒரு வருடத்துக்கு முன்னரே ராசா வெளியே வந்திருக்கலாம்.''



சி.பி - அவர் உள்ளேயே இருந்திருந்தா அவருக்குப்பாதுகாப்பு, வெளீயே வந்தா திமுக வுக்குப்பாதுகாப்பு. இது தெரிஞ்சவங்க வாய்ல ஜின்னு, அறியாதவங்க  வாயில மண்ணு


2. '' 'ஸ்பெக்ட்ரம் விசாரணை சரியான பாதையில் செல்லப்போவது இல்லை என்பதையே ராசாவுக்கான ஜாமீன் உறுதி செய்திருப்பதாக’ தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்துச் சொல்லி இருக்கிறாரே?''



''ஜெயலலிதா, சட்டம் படிக்காதவர். சட்டப் பிரிவுகளையோ, நுணுக்கங்களையோ அறியாதவர். அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். நியூக்ளியர் சயின்ஸைப் பற்றித் தெரியாமலேயே, கூடங்குளம் அணு மின் நிலைய விளைவுகள் குறித்து ஏதேதோ பேசினார். பின்னர், அப்படியே அந்தர் பல்டி அடித்து, அணு மின் நிலையத்தால் பாதிப்பு இல்லை என்றார். புரியாமல் ஏதாவது பேசுவதும் பின்னர் அப்படியே உல்டா அடிப்பதும் அந்த அம்மாவுக்கு வாடிக்கையானதுதான்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நாங்கள் தீவிரமாகக் கையில் எடுத்தபோது, 'இதனால் ஒரு உண்மையும் வரப்போவது இல்லை’ எனச் சொன்னவர்தான் ஜெயலலிதா. ஆனால், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் ஆதி தொடங்கி அந்தம் வரையிலான அத்தனை உண்மைகளும் சட்டத்தால் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. 


 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் வசமாகச் சிக்கத் தொடங்கியதும், 'ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளிவர ஆதாரம் கொடுத்தவர்களே நாங்கள்தான்’ எனப் பெருமிதம் தேடப்பார்த்தார் ஜெயலலிதா. சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் ஜெயலலிதா, இப்போது சிதம்பரத்தின் குற்றத்தை நான் நிரூபிக்க வேண்டும் என்கிறார்.


 சரி, நாளைக்கே நான் அதை நிரூபித்துவிட்டால், அம்மையார் என்ன சொல்வார்? சிதம்பரத்தின் மீதான குற்றத்தை நிரூபிக்க அவரே ஆதாரங்களைக் கொடுத்ததாக அள்ளிவிடுவார்.


நாடாளுமன்றத் தேர்தலின்போது சிவகங்கைத் தொகுதியில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடந்தன என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த உண்மைகளை சென்னை உயர் நீதிமன்றத் தில் அம்பலப்படுத்தி சிதம்பரத்தின் மீது நடவடிக்கைக்கு வித்திடாதது ஏன்?


 அப்படியென்றால், சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்றுதானே எண்ணத் தோன்றும்? தேர்தல் குளறுபடிகள் குறித்த அத்தனை ஆதாரங்களையும் வைத்து சிதம்பரத்தைச் சிக்கவைத்திருக்க வேண்டிய ஜெயலலிதா வும் கண்ணப்பனும் அமைதியாக ஒதுங்கிக் கொண்டது ஏனாம்? இதற்கெல்லாம் அம்மையாரிடம் பதில் இருக்கிறதா?''



சி.பி - ஊழல் குற்றச்சாட்டு வெளில வரணும், உண்மையான குற்றவாளிகள்  பிடிபடனும்னு யாரும் ஐ மீன் எந்த அரசியல் வியாதியும் நினைக்கறதில்லை.. அவர் ஆட்சிக்கு வந்தா இவங்க ஊழல் வெளீல வந்து பேரை கெடுத்தா போதும், அதே போல் இவங்க ஆட்சி வந்தா அவர் ஊழல் வெளில வந்து பேரை கெடுக்கனும்


3. ''அடுத்தபடியாக இதிலேயே 275 கோடி ரூபாய் விவகாரம் எனப் பரபரப்புக் கிளப்புகிறீர்களே... அது உண்மையா?''


''நான் என்ன சொன்னாலும் அதற்கான ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டுதான் சொல்வேன். பரபரப்புக்காக எதையும் சொல்பவன் நான் அல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் விஸ்வரூபத்தை ஆரம்பத்தில் நான் சொன்னபோது, பலரும் நம்ப முடியாமல்தான் பார்த்தார்கள்.






 ஆனால், சுவாமி சொன்னது உண்மைதான் என இப்போது எல்லோருக்குமே புரிகிறது. ராசாவுக்கு 275 கோடி ரூபாய் கைமாறியதாக இப்போது சி.பி.ஐ. கண்டுபிடித்து இருக்கிறது. ராசாவுக்கு யுனிடெக் வயர்லெஸ் நிறுவனம் கொடுத்த பணம்தானே அது? இதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ. சேகரித்துவிட்டது. இது தொடர்பாக விரைவில் இன்னொரு குற்றப்பத்திரிகை ராசா மீது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வெயிட் அண்ட் வாட்ச்!''


4. ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கனிமொழி மனு தாக்கல் செய்து இருக்கிறாரே... அப்படி விடுவிக்க சாத்தியம் இருக்கிறதா?''


''அவர் என்ன மனு வேண்டுமானாலும் தாக்கல் செய்யட்டும்; எப்போது வேண்டுமானாலும் தாக்கல் செய்யட்டும். ஆனால், இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அவர் விடுபட வாய்ப்பே இல்லை.''



5. ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது தவறே சொல்ல முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருத்தத்தோடு சொல்லி இருக்கிறாரே?''


''எத்தகைய குற்றம் செய்தவரும் தன்னை அப்பாவி என்றுதான் சொல்லிக்கொள்வார். சிதம்பரத்தின் பேச்சும் அப்படிப்பட்டதுதான். தான் நிரபராதி என இவர் சொன்னால் போதுமா? ஸ்பெக்ட்ரம் வழக்கின் போக்கை நீதிமன்றம் அல்லவா நிரூபிக்க வேண்டும்?''


6. ''ப.சிதம்பரம் தொடங்கி தயாளு அம்மாள் வரை பலரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்குவார்கள் எனச் சொன்னீர்களே... இப்போது நிலைமை எப்படி?''


''குற்றவாளிகள் யாரும் தப்பவே முடியாது. ராசா, சிதம்பரத்தைத் தொடர்ந்து சிக்கப்போவது சோனியாதான். அடுத்தடுத்து எறும்பு வரிசைபோல் ஒவ்வொருவராக உள்ளே வருவார்கள். இப்போது உறுதியாக அடித்துச் சொல்கிறேன்... ஸ்பெக்ட்ரம் என்கிற பிரமாண்ட ஊழலில் பங்கெடுத்த புள்ளிகள் யாரும் வழக்கில் இருந்து தப்பவே முடியாது.''


 நன்றி - விகடன்