Showing posts with label புராணம். Show all posts
Showing posts with label புராணம். Show all posts

Wednesday, May 23, 2012

ஸ்ரீராமராஜ்யம் - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.tollywoodandhra.in/wp-content/uploads/2012/02/Sri-rama-rajyam-movie-download.jpg

எல்லாருக்கும் தெரிஞ்ச ராமாயணக்கதைதான்.. ஆனா சம்பூர்ண ராமாயணம்னு தமிழ்ல டீட்டெயிலா வந்ததே அந்த மாதிரி இல்லை.. ஆஃப்டர் வனவாசம் சீதை ரிட்டர்ன் டூ அயோத்தி என்ன ஆச்சு, லவ குசா எப்படி வளர்ந்தாங்க? இதுதான் டாபிக்.. நயன் தாரா சீதையா நடிச்சதால தான் இந்தப்படத்துக்கு இவ்ளவ் செல்வாக்கு..


வனவாசம் முடிஞ்சு ராமர் சீதையோட  நாட்டுக்கு வர்றார்.. 2 பேரும் ஜாலியா அந்தப்புரத்துல  டூயட் பாடறாங்க.. அப்போ யாரோ மக்கள்ல ஒருத்தரு “ சீதை ராவணன் ப்ளேஸ்ல இருந்திருக்கா.. என்ன நடந்துச்சோ என்னவோ? அப்டின்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசிடறாரு.. உடனே ராமர் சீதையை  அதுவும் நிறைமாசமா இருக்கற சீதையை லட்சுமணன் கிட்டே சொல்லி  காட்டுக்குள்ளே கொண்டு போய் விட்டுட்டு வந்துடறாரு.. 

 தக்காளி, அதைக்கூட அவரா செய்ய மாட்டாரா? மன்னர் இல்லையா? அதான்.. எல்லாத்துக்கும் ஆள் வேணும் போல..காட்டுல சீதைக்கு ரெட்டைக்குழந்தை பிறக்குது. லவன், குசன்னு பேர் வைக்கறாங்க.. ராமர் நிஜமாவே பொண்டாட்டி மேல அக்கறையா இருந்தா  போய் குழந்தையை, மனைவியை பார்த்துட்டு வந்திருக்கனும்.. ஆனா 8 வருஷமா போகவே இல்லை..

 அந்த பசங்க 8 வயசு ஆன பின் அரண்மனைக்கே வந்து பஜனை பாடறாங்க.. அப்புறமா ராமர் காட்டுக்கு போய் சீதையை அரண்மனைக்கு வான்னு கூப்பிடறார்.. ஆனா பூமா தேவி வந்து சீதையை தன்னோட கூட்டிட்டு போயிடறாங்க.. ராமர் உள்ளதும் போச்சுடுடா க்ரீன் கண்ணா அப்டினு ரிட்டர்ன் ஆகறாரு.. இதுதான் கதை..


சீதையா நடிச்சிருக்கற நயன் தாராவை சும்மா சொல்லக்கூடாது. வாழ்க்கைலயே முதல் முறையா  குடும்பப்பாங்கா, கண்ணியமா முழு உடம்பையும் சேலையால மறைச்சு குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்காங்க .. தேடிதேடிப்பார்த்தும் ஒண்ணும் தெரியல ..

மற்றபடி ராமர், லவன், குசன் எல்லார் நடிப்பும் சுமார் தான் நாடகம் பார்ப்பது போல் இருக்கு .. செட்டிங்க்ஸ், ஆடை வடிவமைப்பு அசத்தல் . இளையராஜா  இசை பிரமாதம்.. 2 பாட்டு நல்லாருக்கு. மொத்தம் 15 பாட்டு அவ்வ்வ்வ்வ்.. இளையராஜாவின் இசையில் தெய்வங்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க  அந்தப்பாட்டும், ராமாயணமே, ஸ்ரீராமாயணமே பாட்டு 2ம் கலக்கல் ரகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPpr-IYDUn2dJ6p7pKnI2uscleExHIQww_MTNRZQwPJOXl_f4gYAkZXt0QmDAxMObWpPQsoEHjDb01wZ_khd4qivcWMiXASQ8BmAc3PVUjD4IRR4yy0qR7eJDqKrjoJfKx2ksuWXr-VbI/s1600/sri_rama_jayam20.jpg
 ராமாயணத்தை இயற்றிய வால்மீகியிடம் சில கேள்விகள்


1. தன் அப்பாவின் ஆணையை மதித்து ராமர் காட்டுக்குப்போனார், அவர் கூட அவர் சம்சாரம் போச்சு ஓக்கே. லக்‌ஷ்மணன் ஏன் போகனும்? அப்படியே அவர் போனாலும் ராமர் என்ன சொல்லி இருக்கனும்? ஒண்ணா நீ அரண்மனைலயே இரு. அல்லது உன் சம்சாரம் ஊர்மிளாவையும் உன் கூட கூட்டிட்டு வந்துடுன்னுதானே சொல்லி இருக்கனும்?


2. ஊர்மிளா ஏதும் சாப்பிடாமல் பட்டினி இருந்து எலும்புக்கூடாய் அவர் படுக்கை அறையில் இருந்ததாய் சம்பவம் வருது.. அதுவரை யாருமே அவரை கவனிக்கலையா?


3. ராமர் பாட்டுக்கு அவர் சம்சாரம் சீதை கூட குஜாலா காட்டுல சுத்திட்டு இருந்திருக்காரு.. லக்‌ஷ்மணன் என்ன பாவம் பண்ணாரு?தனியே விட்டுட்டீங்க?


4. ராமர் சீதை நினைவா சீதை உருவத்தில் தங்கச்சிலை செஞ்சு அரண்மனைல வெச்சு டெயிலி அதை பார்த்துட்டு இருக்கார் , ஓக்கே ஏன் அவரை காட்டில் போய் பார்க்கலை?


5. மக்கள் தான் சீதையை தப்பா பேசி காட்டுக்கு அனுப்பக்காரணம் ஆனாங்க. அதே மக்கள் தங்கள் நகைகளை கொடுத்து சிலை செய்ய சொன்னதுக்கு சீதையை போய் கூட்டிட்டு வான்னு ஒரு பயலும் சொல்லலையே?ஏன்?


6. அனுமார் உலகம் பூரா பறக்கறவர்.. சீதை அந்த காட்டுல தனியா இருக்கும்போது மட்டும் ஏன் தூது விடலை?


7. அசோக வனத்தில் சீதை கற்பு போய் இருக்குமோன்னு சந்தேகப்படற மக்கள் பேச்சை ராமர் கேட்டு அவரை தனியே காட்டுக்கு அனுப்பிட்டாரு , ஓக்கே அங்கே காட்டுல அவர் தனியா இருந்தப்ப யாராவது ரேப் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சாரா?


8. பூமா தேவி வந்து சீதையை தன்னோட பாதாள லோகத்துக்கு கூட்டிட்டு போயிடுது.. எந்த தப்புமே பண்ணாத சீதையை கூட்டிட்டு போறப்ப மனைவியை பரிதவிக்க விட்ட ராமரை ஏன் கூட்டிட்டு போகலை.. தக்காளி, வண்டில ஏர்றான்னு சொல்லி அவரையும் கூட்டிட்டு போறதுக்கென்ன?


9. லவன், குசன் 2 பேரும் பயங்கர புத்திசாலியா வளர்றாங்க, மந்திர வித்தை எல்லாம் தெரியுது. ராமர் பற்றி தெரியுது.. ஆனா ராமர் தான் தன் அப்பான்னு தெரியலை. அப்போ சீதை அவங்க கிட்டே மிஸ்டர் எக்ஸ் தான் உங்கப்பான்னு சொல்லி வளர்த்திருப்பாரா?


10. இவ்ளவ் துரோகம் ராமர் செஞ்சும் சீதைக்கு அவர் மேல கோபமே வர்லையே ஏன்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiVKjoenQMVngLd9k5wtYcLo0WzhDizqqeH4UnzOekdTCi9jZSHVeUeKlk_mdnl-5D5sLU074iJWaTTrqQIsuGva4OaWQcQgzBzKIvQvmIKFniogM1Bk8apxA-kQZBt8tW52MqaCJL2QU/s1600/Nayanatara_New_Photo_Stills_Sri_Rama_Rajyam+%25281%2529.jpg
 இயக்குநருக்கு சில கேள்விகள்


1. ராமர் தன்னிலை விளக்கம் அளிக்கறப்போ “ ஊரே பேசுது, அதனால தான் அப்படி செஞ்சேன்”கறார். ஆனா பூமாதேவி “ ஒரே ஒரு ஆள் பேச்சைக்கேட்டுட்டு உன்னை நிர்க்கதியா விட்ட ராமன்” கறார்,. ஒய் திஸ் குழப்பம்?


2. தலைவன் எவ்வழி? மக்கள் அவ்வழின்னு சொல்வாங்க.. ராமர் மகா உத்தமர், அப்படி இருக்கும்போது அவர் ஆட்சி புரியும் நாடும் அவரை மாதிரி தானே இருக்கனும்? ஏன் சீதையை சந்தேகப்படற அளவு கேவலமா இருக்கு?

3. ஒரு நாட்டின் மன்னன் போருக்காக போர்க்களம் போனா 6 மாசம் கழிச்சுத்தான் நாடு திரும்பறான்.. அப்போ அவன் என்ன எல்லாம் கில்மா பண்ணானோ? அவன் தீக்குளிக்க வேண்டியது இல்லையா?


4. பூமா தேவி பற்றி ராமாயணத்தில் வர்ணிக்கையில் கம்பர் பச்சை வண்ண ஆடை அணிந்தவள் அப்டிங்கறார்.. ஆனா படத்துல சிவப்புக்கலர் பட்டுப்புடவை, சிவப்புக்கலர்ல வெள்ளை கட்டம் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு வர்றாங்களே?


5. பட்டாபிஷேகம் செய்யும்போது நாட்டை காப்பாற்றுவேன் என உறுதி அளித்ததால் தான் நாட்டு நலன் கருதி சீதையை காட்டில் விட சம்மதித்தேன்னு ராமர் சொல்றாரு.. ஏன்? மெரேஜ் நடக்கும்போது கூட மனைவியை எந்நிலையிலும் கை விட மாட்டேன்னு சொன்னாரே? அதை காத்துல பறக்க விடலாமா?

6. புருஷன் இல்லாம தனிமையில் இருக்கும் பெண்கள் அந்தக்காலத்துல பூவே தலைல வைக்க மாட்டாங்க, ஆனா நயன் தாரா ஐ மீன் சீதை எப்பவும் 8 முழம் மல்லிகைப்பூ வெச்சுட்டு இருக்காரே?


7. சீதையை பார்க்க குடிலுக்குள் வர்ற முனிவர் ஏன் கதவை சாத்தறார்? ஹய்யோ அய்யோ ..


8. மத்தவங்க கண்ணுக்குத்தெரியாத இன்விசிபிள் விமனா சீதை அரண்மனைக்குள்ள வர்றப்போ ராமர் வந்ததும் அவரை பார்த்து சீதை ஏன் ஒளியனும்? அவர் தான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாரே/


9. நயன் தாரா கைல ரத்தச்சிவப்புல மருதாணி இருக்கு.. கானகத்துக்கு வந்த பின் 8 வருஷமா அவர் 3 மாசத்துக்கு ஒரு டைம் மருதாணி வெச்சுட்டே இருப்பாரா?அவர் தான் எந்த விதமான அலங்காரத்துலயும் மனம் லயிக்காம இருப்பவர் ஆச்சே?

10. பூமா தேவி க்ளைமாக்ஸ்ல 12 நிமிஷம் வசனம் பேசுது.. அப்போ ராமர் அவர் வாயையே ஆன்னு பார்த்துட்டு அவங்க கிளம்பறப்ப லபோ திபோன்னு அடிச்சுக்கறாரே.. அதை அவர் இருக்கறப்பவே செஞ்சிருக்கலாமே?


http://www.andhrabulletin.com/admin/images/Nayanathara%20stills%20from%20Sri%20Rama%20Rajyam%20(9).jpg
மனம் கவர்ந்த வசனங்கள்


1. மக்களுக்கு நல்வாழ்க்கை வழங்கி நாட்டை ரட்சிப்பவனே ராஜன் ( லீக்ஸ்?)


2. கஷ்டங்கள் இல்லை என்றால் கதைகள் இல்லை..


 அப்போ எந்த கதையும் சொல்ல வேணாம்.. கஷ்டம் எதும் வராம இருக்கட்டும்.


3. சூரிய கிரகத்தில் பிறந்தவர் சந்திர வடிவ பொட்டை இடலாமா?.

4. ராமர் இன் ரொமான்ஸ் மூடு - வளர்வது பிறை மட்டுமா? உன் இடையும் தான் ( நல்ல வேளை.. )


5. வரம் என்றாலே எனக்கு பயம் நாதா .. வரம் நமக்கு சரி வராது..

6.  ஆபத்து வேளை தெரிந்து வருவது இல்லை


7. நாளைக்கேவா? அது இயலாது.. பிறந்த மான் எழுந்ததும் ஓட நினைக்குமா?


8. தாம்பத்யம் முக்கியம் அல்ல, ராஜகாரியம் அழைக்கையில்.. வருகிறேன்.. ( இந்த ராமர் சம்சாரத்தை எப்பவும் சரியாவே கவனிக்கலை  போல )


9. சந்தேகித்தது ஒருவர் என்றால் வெட்டலாம். ஆனால் ஊரே சந்தேகப்பட்டால் நான் என்ன செய்வது? ( ஊர் உன்னை சந்தேகிச்சா நீ தீக்குளிப்பியா ங்கொய்யால)


10. கீர்த்திக்கு ( புகழ்)ஆசைப்பட்டு ராஜ தர்மத்துக்கு துரோகம் செய்ய மாட்டேன்..

11. யக்ஞ யாகம் மனைவி இல்லாத போது கணவன் தனித்து செய்ய முடியுமா?


12. கற்பது என்பது வேறு.. தெரிந்து கொள்வது என்பது வேறு


13. எதிரியின் பலத்தை அறிந்து கொள்வது போர் வித்தையின்  முதல் படி ( வால்மீகி சாணக்கியர்ல இருந்து சுட்டுட்டாரா? சாணக்கியர் வால்மீகிட்ட சுட்டாரா?)


14. பிரம்மாஸ்திரத்தை மிஞ்சியது, தோல்வி என்ற ஒன்றையே அறியாதது ராமனின் அஸ்திரம்


 ஆந்திராவில இந்தப்படம் படு குப்பை ஆகிடுச்சு.. தமிழ்ல கேட்கவே வேணாம்.. படு குப்பை.. 5 நாள் தான் ஈரோட்ல ஓடும்.. டி வி லபோட்டாக்கூட போயிடாதீங்க சாரி பார்த்துடாதீங்க.. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/function-photos/sri-rama-rajyam-audio-launch/sri-rama-rajyam-movie-audio-launch-86.jpg


Wednesday, March 28, 2012

கர்ணன் - நன்றி உணர்ச்சியின் நாயகன் - சினிமா விமர்சனம்

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-2.jpg 

புராணக்கதைகள் உண்மையில் நடந்த சம்பவமா? அல்லது கற்பனைக்கதையா? என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அதில் மனிதன் கற்றுக்கொள்ள  என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்க்கைப்பாடத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வதே நல்லது.. அதைத்தான் நம் முன்னோர்களும் விரும்பினார்கள்..

கொடை வள்ளல் என்றே அறியப்பட்ட கர்ணனின் நன்றி உணர்ச்சி, செஞ்சோற்றுக்கடனுக்காக அவனது தியாகங்கள் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையே கர்ணன் என்னும் இந்த பிரம்மாண்டமான படம்.. 

குந்தி தேவிக்கு ஒரு வரம். அவர் மனதில் யார் நினைக்கிறாரோ? அல்லது யார் மேல் ஆசைப்படுகிறாரோ அவரே அவரது கணவராக வாய்க்கப்பெறுவார்.. விளையாட்டாக சூர்ய பகவானை கணவனாக அடைந்தால் எப்படி இருக்கும்? என்று மனதில் நினைக்க சாட்சாத் சூரிய பகவானே நேரில் வந்து தரிசனம் தந்து ஒரு குழந்தையையும் இன்சிடெண்ட்டாக தந்து செல்கிறார் .. 

 இப்போ குந்தி கன்னித்தாய்.. குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விடு விடுகிறார்.. அதை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். 

25 வருடங்கள் கழித்து.. வாலிபன் ஆனதும் தனது வளர்ப்புப்பெற்றோர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக அவர்கள் பேச்சை கேட்டு கர்ணன் உண்மை அறிகிறான்.. 

ஒரு வில் வித்தைக்கான போட்டியில் அர்ஜூனை விட கர்ணன் சிறந்த வில்வித்தை வீரன் என்று நிரூபணம் ஆகிறது.. ஆனால் அர்ஜீணன் சத்திரியன்.. கர்ணன் தேரோட்டியின் மகன்.. இந்த ஒரே ஒரு வாதத்தை முன் வைத்து கர்ணனை பலர்  பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்துகின்றனர். 

தக்க சமயத்தில் துரியோதணன் ராஜ்ஜியம் கொடுத்து அவனை மன்னன் ஆக்கி கவுரவம் காப்பாற்றுகிறான்.. அந்த நன்றிக்கடனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக சபதம் செய்கிறான் கர்ணன்.

தேவேந்திரன் மாறு வேடத்தில் கர்ணனிடம் வந்து அவனது கவச குண்டலத்தை  தானமாக பெறுகிறான்.. யார் வந்து என்ன கேட்டாலும் மறுக்காமல் தானம் செய்யும் தயாள குணம் படைத்தவன் அவன்.. 

 அர்ஜூணனை ஒழிக்க பிரம்மாஸ்திரம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அது பற்றி தெரிந்த முனிவர்  அந்தணர்களுக்கு மட்டுமே அதை கற்றுக்கொடுப்பார்.. சத்தியர்களுக்கு கற்றுத்தர மாட்டார்... எனவே தான் ஒரு அந்தணர் என  பொய் சொல்லி கர்ணன் அந்த வித்தையை கற்றுக்கொள்கிறான்.ஒரு சமயம் அந்த முனிவர் கர்ணனின் மடியில் அமர்ந்து உறங்கும்போது  ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் குத்திக்கிழிக்கிறது.. அவன் அசைந்தால் குருவின் தூக்கம் கெட்டு விடும் என்பதால் கர்ணன் அமைதியாக வலியைப்பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்.. 


 கொட்டிய ரத்தம் பட்டு விழித்து உண்மை உணர்ந்த முனிவர் கர்ணனுக்கு சாபம் விடுகிறார்..

சுபாங்கி எனும் இளவரசியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கர்ணன் அவள் மேல் காதல் கொள்கிறான்.. துரியோதணன் மூலம் திருமணம் நடக்கிறது.. திருமணம் முடிந்த பின் கர்ணன் ஒரு தேரோட்டி என்ற உண்மை தெரிய வந்து மாப்பிள்ளையை அவமானப்படுத்துகிறார் மாமனார்.. 

 மகாபாரதப்போர் மூளும் நேரம்.. கிருஷ்ணர் கர்ணனை டம்மி ஆக்கினால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற முடியும் என்பதை கண்ணன் உணர்ந்து குந்தி தேவியை தூண்டி விட்டு கர்ணனிடம் தூது அனுப்புகிறார்..

குந்தி தேவி தான் தன் அம்மா, பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்தும் நன்றி உணர்வின் காரணமாக கர்ணன் அவர்கள் பக்கம் வரவில்லை.. துரியோதணன் உடன் இருந்து போரிட்டு  மடிகிறான்

 நடிப்பு பற்றி சொல்லனும்னா சிவாஜி ஆக்டிங்க் கிளாஸ்.. கர்ணன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம் காட்டி கலக்கலான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது நடை ஆஹா... ( உத்தம புத்திரன், ராமன் எத்தனை ராமனடி,வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற படங்கள் அவர் நடை அழகுக்கு பெயர் போனவை)


சிவாஜிக்குப்பின் பேர் சொல்லும் நடிப்பு என் டி ஆர்.. கிருஷ்ணர்னா அப்படியே தெய்வத்தை நேரில் பார்ப்பது போலவே.. அப்படி ஒரு சாந்தமான, எதற்கும் அசைந்து கொடுக்காத முகம்.. தெய்வீக தோற்றம் அவருக்கு இயற்கை கொடுத்த வரம்.. ஆந்திராவின் எம் ஜி ஆர் என போற்றப்பட்டவர்.. அவர் வரும் காட்சிகள் எல்லாம் மற்ற நடிகர்கள் எல்லாரும் டம்மியாக தெரிவது அவரது ஆளுமைக்குச்சான்று..


துரியோதணனாக வரும் அசோகன் காமெடி கலந்த நடிப்பு தந்திருக்கிறார்,.. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. வில்லத்தனம் கொஞ்சம் கம்மி தான்.. 

அர்ச்சுணனாக வரும் முத்து ராமன் ரொம்ப மென்மையான  முகச்சாயல் உள்ளவர்,.. அவர் சரத் பாபு மாதிரி ஜெண்டில் மேன் கேரக்டருக்கு ஓக்கே. அர்ச்சுனன் மாதிரி போர் வீரன் கேரக்டருக்கு..?? 

ஆடை வடிவமைப்பு, ஆர்ட் டைரக்‌ஷன் . ஒளிப்பதிவு எல்லாமே செம பிரம்மாண்டம்.. அப்படியே சம்பவங்களை கண் முன் நிறுத்துகிறது.. 3 மணீ நேர படத்தில் போர் அடிக்கும் காட்சிகள், அல்லது தேவை இல்லாத காட்சி என்று எதுவுமே இல்லை.. சபாஷ் எடிட்டிங்க்.. 

 பாடல்கள் 11.. அதில் சூப்பர் ஹிட் பாடல்கள் 4.. 

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-3.jpg

மகா பாரதம் இயற்றிய வியாசரிடம் சில கேள்விகள்


1. குந்தி தேவி அரண்மனையில் மக்களுடன் மக்கள் பார்வையில் தான் இருக்கார்.. 9 மாசம் காணாம போய் குழந்தையோட வர்லை.. ஒரே நிமிஷத்துல குழந்தை பிறந்துடுது.. அவர் ஏன் அதை ஆத்துல விடனும்.. கண்டெடுத்ததுன்னு சொல்லி அரண்மனையில் வளர்த்தலாமே?மக்கள் ஏன் பழிக்கப்போறாங்க?

2. உலகையே ரட்சிக்கும் கண்ணன் போர் நடக்காமல் காத்து இருக்கலாமே.. தனிப்பட்ட 6 பேரின் பகைக்காக ஏன் நாட்டு மக்களை போரில் இறக்கி பலிஆடுகளாய் மக்களை ஆக்கனும்? பல சித்து வேலைகள் தெரிந்த கண்ணன் துரியோதனன் மனதை மாற்றி இருக்கலாம்.. அல்லது ராஜ்யம் தானே பிரச்சனை? இந்தா ராஜ்யம் என புது ராஜ்யமே உருவாக்கி தந்திருக்கலாமே?

3. கர்ணனிடம் பிரம்மாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்க வேணாம் என வரம் வாங்கி வரச்சொல்லி குந்தியை அனுப்புவது ஏன்?அவருக்குத்தான் சக்தி இருக்கே? முதல் முறை கர்ணன் அதை பிரயோகிக்கும்போது எப்படி அர்ச்சுனரை காப்பாற்றினாரோ அதே போல் ஒவ்வொரு முறையும் காப்பாற்றலாமே?

4. முக்காலும் உணர்ந்த முனிவர்க்கு வந்திருக்கும் கர்ணன் அந்தணன் அல்ல என்பது ஏன் தெரியாமல் போச்சு.. அவரும் சராசரி மனிதர் தானா?

5. கர்ணன் உயிரோடு இருக்கும்போதே ஏன் அவனது 10 வயசு பாலகன் போருக்கு வர்றான்?அப்படி என்ன அவசியம்?

6. போர் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணன் அர்ச்சுணருக்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் உபதேசம் செய்கிறார்.. அது வரை அனைவரும் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா?


http://static.moviecrow.com/movie/karnan/658.jpg
 கர்ணன் பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. பீமன் கேரக்டர்க்கு நல்ல ஆஜானுபாவமாக ஒரு ஆளை போட்டிருக்க வேண்டாமா? பீமன் பஞ்ச பாண்டவர்களில் மிக பலம் பொருந்தியவர்.. ஆனா படத்துல அவர் பரிதாபமா இருக்கார்.. 

2. காந்தாரி கறுப்பு நிறத்துணியால் தான் தன் கண்களை கட்டி வாழ்நாள் முழுவதும் தன் கணவன் காணாத உலகத்தை தானும் காணப்போவதில்லை என்றாள்..என மகாபாரதம் கூறுகிறது..  ஆனால் படத்தில்  பச்சை ரிப்பனை கட்டி இருக்கார்..

3.  கர்ணனுக்கு மன்னன் பதவி அளிக்கபட்டதும் கர்ணனிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை, கூனிக்குறுகி இருக்கும் உணர்வு, தகுதிக்கு மீறிய மரியாதை  கிடைத்த குற்ற உணர்வு வர வேண்டாமா? ஆணவம் தெரியுதே அவர் நடை உடை பாவனையில்... 

4. பிரம்மாஸ்திரம் மறந்து போகும் என சாபம் கிடைத்ததும் ஏன் அந்த மந்திரத்தை ஒரு ஓலையில் எழுதி வைத்துக்கொள்ளக்கூடாது?

5. பிரம்மாஸ்திரம் கற்றுக்கொள்ளும் நாட்களில் தாடியுடன் இருக்கும் சிவாஜி கானகத்தில் அங்கேயே தங்கி பணி புரிகிறார்.. ஆனா அப்பப்ப அரண்மனைக்கு வர்றாரே.. அது எப்படி?

6. துரியோதணன் கேரக்டர் ஆட்காட்டி விரலில் மோதிரம் அணிந்து வருகிறார்.. ஆனால் மகா பாரதத்தில் மோதிர விரலில் தான் அணிவதாக வருது.. 

7. கண்ணனை பாண்டவர்கள், கவுரவர்கள் போய் பார்த்து கால் மாட்டில் தருமர், தலை மாட்டில் துரியோதணன் நின்று ஆதரவு கேட்கும் மிக முக்கியமான சீன் படத்தில் இல்லையே?

8. அமாவாசை அன்று பலி இட்டு போரை ஆரம்பித்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்று ஆனதும் கண்ணன் சூரிய சந்திரனை ஏமாற்றி ஒரு நாள் முன்னதாக அமாவாசை வரும்படி செய்கிறார்.. ஓக்கே.. ஆனால் துரியோதணன் அவன் கணக்குப்படி அமாவாசை அன்று தானே பலி தர்றான்.?

9. கர்ணன் - துரியோதணன்  மனைவி சொக்காட்டான் ஆடும் காட்சி.. எடுக்கவோ கோர்க்கவோ என வசனம் பேசும் முக்கியமான சீன் - அதில் கர்ணன் துரியோதனன் மனைவியுடன் இன்னும் நெருக்கம் காட்டி இருக்க வேண்டும்..அப்போதான் துரியோதணன் எந்த சூழ்நிலையிலும் கர்ணன் மேலோ, தன் மனைவி மேலோ சந்தேகம் கொள்ள வில்லை என்பது நிரூபணம் ஆகும்.. மகாபாரதத்தில் மிக பிரமாதமாக வர்ணிக்கப்படும் இந்த காட்சி படத்தில் மிக சாதாரணமாகவே எடுக்கப்பட்டிருகிறது

http://i.ytimg.com/vi/LwMNIpHWs_o/0.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

.  1. வாரி அணைக்க வா என்றேன்... வறியவன் ஏதோ வரம் கேட்பதாய் எண்ணி அந்த மழலை எனக்கு வாரிக்கொடுத்தான்.


2. வில்லுக்கு ஒரு விஜயன் என்ற சொல்லுக்கு பிறந்தவன் அர்ச்சுணன்

3.  அம்மா, அப்பா இருவரும் இறந்து விட்டார்களா? குழந்தாய்?

 இல்லை, என்னை மறந்து விட்டார்கள்

4.  என் இனமடா நீ!! மேக நாதா!!

5. இந்த சமூகம் அடித்த இடத்தை துடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் அடிக்கிறது

6. கொடுப்பது என்று உறுதி ஆன பின் உயிரும் ஒரு பொருட்டா?

7. பெண்கள் தோல்வியை தாங்க மாட்டார்கள். அதனால் நான் விட்டுத்தருகிறேன்.. 

ஆண்கள் பலசாலிகள்.. ஆனால் அறிவில்லாதவர்கள்

8.  ஏய்.. தேரோட்டி.. உன் ரத்தத்தில்  தேர் ஓடுகிறது.. 

 இல்லை.. எல்லோர் ரத்தத்திலும் சிவப்பு தான் ஓடுகிறது

9. நான் தேரோட்டுவதில் என்ன குறை கண்டீர்.. நான் ஒரு தேர்ரோட்டியின் மனைவி அல்லவா?

 ஆரம்பத்தில் இருந்து எல்லோரும் என்னை என்ன சொல்லி இகழ்ந்தார்களோ அதே பழி சொல்லை உன்னையும் அறியாமல் சொல்கிறாய்.. 

10.  வாயும் வயிறுமாய் உள்ள மனைவியை உயிரும் உணர்வுமாய் காக்க வேண்டும்..

11. விட்டுக்கொடுப்பதற்கே வீரம் அதிகம் வேண்டும்..

12.  இது என்னை நோக வைக்கும் கேள்வி... கர்ணா,,,

 ஆனால் கேட்க வேண்டிய கேள்வி கண்னா./..


13. போரில் மனிதனின் மதி மாறும், வெறி ஏறும். 

14. இறக்கும்போதும் நான் சிரிப்பை விரும்புகிறேன்

15. இந்த மனிதர்களுக்கு எப்போதும் எதற்கும் கடவுளை குறை சொல்வதே வழக்கம் ஆகி விட்டது..

16.  பாவ காரியங்கள் என்றும் மறைத்து வைக்க முடியாது.. எப்படியும் என்றாவது வெளியே வந்து விடும்.. 

17. வல்லவனாக ஒருவன் பிறக்கலாம்.. ஆனால் வளர்ப்பால் மட்டுமே  அவன் நல்லவனாக ஆக முடியும்.. 

18./. அண்ணன் ஜாதகத்துலயே சமாதானம் கற பேச்சே இல்லை.. 

19.  எல்லோருடைய முட்டாள் தனத்துக்கும் ஈடு கொடுக்க இந்த உலகத்தில் இருப்பது கடவுள் மட்டுமே.. 

20. உலகத்துக்கு துரியோதனன் எப்படியோ எனக்கு அவன் தான் கடவுள்.. செய் நன்றி கொண்டவன் நான்

21. வீரத்தை வீரம் ஒதுக்கி வைக்குமா? நீ க்டைசி வரை துரியோதனனுக்கு பக்க பலமாய் இருக்க வெண்டும் என்பதற்க்காகத்தான் உனக்கு போரில் எந்த பொறுப்பும் தரவில்லை

http://uyire.com/wp-content/uploads/mvbthumbs/img_7484_karnan-dts-version-trailer.jpg

 கலக்கலான பாடல்கள்

1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதது வல்லவன் வகுத்ததடா கர்ணா.. வருவதை எதிர் கொள்ளடா.. 

2. இரவும், நிலவும் வளரட்டுமே.. நம் இளமை நினைவுகள் மலரட்டுமே.. 

3. கண்ணுக்கு குலம் ஏது?கர்ணா... கருனைக்கு நிறம் ஏது?

4. போய் வா மகளே போய் வா.. 

5. மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை

6. என்னுயிர்த்தோழி. 

7. ஆயிரம் கரங்கள் உடையாய் போற்றி.. 

8. கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே?

9. மரணத்தை எண்ணி

 யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? என்ற கேள்வியே தேவை இல்லை.. அனைவரும் இந்தப்படம் பார்க்கலாம்.. 

 ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்