Monday, April 25, 2011

ஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி வராதமர்மங்கள் , ரகசியங்கள்.......



காலத்தை வென்றவர்கள்...


'''சர்வீஸைத்தான் விற்கிறோம்...''


இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் சாதாரண மளிகைக் கடையாக ஆரம்பமானதுதான் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். இன்று ஈரோட்டிலேயே ஐந்து, கோவையில் ஒன்பது, மதுரையில் மூன்று என தமிழகம் முழுக்க 35 கிளைகளைத் திறந்து வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

ந்த மிகப் பெரிய வளர்ச்சிக்கு காரணம் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் நவநீத கிருஷ்ணனும், தலைவராக இருக்கும் தனுஷ்கரனும்தான். நாமக்கல் - சேலம் சாலையில் இருக்கும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் நவநீத கிருஷ்ணனை சந்தித்தோம். கடந்த 22 ஆண்டுகளாக தாங்கள் கடந்து வந்த பிஸினஸ் வாழ்க்கைப் பயணத்தை நமக்கு எடுத்துச் சொன்னார் அவர்.


சாம்பார் செய்வதில் சாமர்த்தியம்!''தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கருவேலம்பாடு என்கிற சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். விவசாயக் குடும்பம்தான். தவிர, சின்ன வயதிலேயே என் அப்பாவையும் பறிகொடுத்தேன். சாத்தான்குளத்திலேயே எஸ்.எஸ்.எல்.சி. வரை கஷ்டப்பட்டு படித்தேன்.

 குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியவில்லை. எனவே, படிப்பை மூட்டைகட்டிவிட்டு, 1971-ல் சென்னைக்கு பஸ் ஏறினேன், மயிலாப்பூரில் இருந்த மளிகைக் கடையில் வேலை பார்க்க.அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு அநாதரவாக வந்து சேருகிறவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பவை ஹோட்டல்களும் மளிகைக் கடைகளும்தான்.

 எனக்கு ஹோட்டல் வேலைக்குப் போக இஷ்டமில்லை. காரணம், எங்கள் கிராமத்திலிருந்து ஏற்கெனவே சிலர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளில் வேலை பார்த்ததுதான். நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன்.


ஆரம்பத்தில் விதிவிட்ட வழியாகத்தான் வாழ்க்கை போனது. ஆனால், அப்படியே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துவிட எனக்கு விருப்பமில்லை. முன்னேற வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; கௌரவம் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாமும் வாழ வேண்டும் என்று நினைத்தேன். இந்த எண்ணம் வந்தபிறகு, நான் செய்த வேலையின் தன்மை மாறியது. ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன்.
 அப்போதுதான் பொருட்களை ஸ்டாக் செய்வது, சிந்தாமல் சிதறாமல் அதை பாதுகாப்பது, கஸ்டமர்கள் கேட்கிற பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பில்லிங், பொருட்களைக் கொடுக்கிற வியாபாரிகளுக்கு ஆர்டரும் பணமும் கொடுப்பது, இப்படி பல வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன். வேறு எந்தத் தொழிலிலும் இப்படி படிப்படியாக பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே!


அந்தக் காலத்தில் கடை வேலைபோக எனக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சமையல்தான். நான் நன்றாகச் சமைப்பேன். நான் சாம்பார் வைத்தால், எனது நண்பர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். எந்த வேலையைச் செய்தாலும் அதன் மூலம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு அப்போதே இருந்தது.

நண்பனுடன் தனிக்கடை!

இப்படி போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரு  திருப்பம் வந்தது 1985-ல். பதினைந்து ஆண்டு கால அனுபவம் எனக்கு பக்கபலமாக இருக்க, சொந்தத் தொழிலைத் தொடங்க நினைத்து வேலையை விட்டு நின்றேன். இந்த நேரத்தில் என் கிராமத்தைச் சேர்ந்தவரும் எனது சொந்தக்காரரும் நண்பருமான தனுஷ்கரன் ஈரோட்டில் வசித்து வந்தார்.

 அவரும் என்னைப்போல சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி, பிற்பாடு பிஸினஸ்மேனாக மாறியிருந்தார். அவரோடு சேர்ந்து ஒரு சிறிய மளிகைக் கடையை ஆரம்பிப்பதற்காக நான் சென்னையிலிருந்து ஈரோட்டிற்குச் சென்றேன்.



அந்த நேரத்தில் எங்களிடம் பெரிய அளவில் பணம் எதுவுமில்லை. ஆனால், பணமிருந்தால் மட்டும்தான் பிஸினஸ் தொடங்க முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

கடனில் பொருட்களைக் கொடுக்கும் வியாபாரிகள் எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். தவிர, எங்கள் சொந்தப் பணம் கொஞ்சம், நண்பர்களிடமிருந்து கடனாக வாங்கியது கொஞ்சம் என கையிலிருந்த பணத்தை வைத்து சின்னக் கடையைத் தொடங்கினோம்.

சின்னக் கடை என்றாலும் எங்கள் வாழ்க்கையை ஓட்டு வதற்கான லாபம் அதிலிருந்து கிடைத்தது. தவிர, சொந்தமாக ஒரு கடையை நடத்தும்போது ஏற்படுகிற பிரச்னைகளை சமாளிப்பது எப்படி என்பதை அந்த நிலையிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.

 பிஸினஸை நன்றாக விஸ்தரித்த பிறகு செய்யக்கூடாத பல தவறுகளைச் செய்து நாங்கள் பாடம் கற்றோம். முதல் நான்காண்டுகளில் பரவாயில்லை என்கிற அளவில் சென்று கொண்டிருந்த எங்கள் கடை, 1995-க்குப் பிறகு வேகமெடுக்க ஆரம்பித்தது. சின்னக் கடை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சூப்பர் மார்க்கெட் ஆனது.

 ஒரு கிளை போதாது என்கிற நிலையில் ஈரோட்டிலேயே இன்னொன்றையும் திறந்தோம். ஈரோட்டில் எங்கள் சர்வீஸை பார்த்த கோவை மக்கள், அங்கும் ஒரு கிளை திறக்க அழைப்பு விடுக்க, 1999-ல் கோவையில் முதல் கடையைத் திறந்தோம். இன்று கோவையில் மட்டுமே ஒன்பது இடங்களில் எங்கள் கிளை இருக்கிறது. இவை தவிர, நாமக்கல், திருச்செங்கோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை என 35 இடங்களில் கிளைகளைத் திறந்து விட்டோம்.
நான்கு விதிகள்!

இருபதாண்டு காலத்தில் நாங்கள் பெரிய வளர்ச்சி கண்டதற்கு காரணம், இந்த தொழிலில் நாங்கள் கடைப்பிடித்த நான்கு விதிகள்தான். ஈரோட்டில் சிறிய அளவில் நாங்கள் கடை ஆரம்பித்த காலத்திலேயே இந்த விதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு விட்டோம். இன்று வரை அந்த விதியிலிருந்து தவறி வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறோம்.

நிரந்தரம்!

எந்த ஒரு தொழிலையும் நிரந்தர மாகச் செய்ய நினைக்கிறவர்கள் தரமான பொருட்களையே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். எங்கள் கடைகளில் துவரம் பருப்பு என்றால் முதல் குவாலிட்டி பருப்பையே வாங்கி வைப்போம். எல்லாப் பொருட்களிலும் முதல் குவாலிட்டி அல்லது பெஸ்ட் குவாலிட்டி பொருட்களே எங்கள் கடையில் இருக்கும்.


சில கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுக்க நினைத்து இரண்டாவது, மூன்றாவது குவாலிட்டி பொருட் களை வாங்கி விற்கிறார்கள். அல்லது தரம் குறைந்த பொருட்களை வாங்கி, தரமானதாகச் சொல்லி விற்று விடுகிறார்கள். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் முதல் குவாலிட்டிக்கு குறைவான பொருட்களை வாங்கி விற்க எங்களுக்கு இஷ்டமில்லை.

தரமான பொருள்தான் வேண்டும் என்றால் நிறைய அலைய வேண்டியிருக்கும். உதாரணமாக, முதல் குவாலிட்டி துவரம் பருப்பு வாங்க குஜராத் துக்குப் போக வேண்டும்; மிளகு, கடுகு போன்றவற்றை வாங்க ஊஞ்சா; நல்ல பிளாஸ்ட்டிக் பொருட்கள் என்றால் மும்பை; நல்ல செருப்பு என்றால் டெல்லி என இந்தியா முழுவதும் அலைய வேண்டியதிருக்கும்.

நியாயமான லாபம்!

தரமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்கிய பிறகு எங்களுக்கான லாபத்தையும் அதிக அளவில் வைத்தால் அதன் விலை ஏகத்துக்கும் உயர்ந்துவிடும். எந்த பொருளானாலும் அதை நியாயமான விலைக்கு விற்க வேண்டுமென்றால் நமது லாபம் நியாயமானதாக இருக்க வேண்டும். நியாயமான விலை என்பதை எல்லோரும் வாங்கக்கூடிய சகாயமான விலை என பலரும் நினைக்கிறார்கள்.

 இது தவறு. பொருளின் தரத்துக்கு ஏற்ப அதன் விலை மாறும். ஆனால், நாம் சொல்லும் விலை நியாயமாக இருக்கும் என மக்கள் ஒப்புக் கொண்டாலே போதும், நம்மை விட்டு வேறு ஒரு கடைக்குப் போக மாட்டார்கள்.

தட்டுப்பாடு கூடாது!

நம் கடைக்கு பொருள் வாங்க வருகிறவர்களிடம் அவர்கள் கேட்கும் பொருள் இல்லை என்று சொல்லி போகக்கூடாது. எந்தப் பொருளானாலும் சரி, அது இந்தியாவின் எந்த பகுதி யில் கிடைத்தாலும் சரி, அதை எப்படியாவது எங்கள் கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவோம்.

சர்வீஸ்தான் பிஸினஸ்!

எங்கள் கடைகள் மூலம் நாங்கள் பொருட்களை விற்கிறோம் என்பதைவிட சர்வீஸைத்தான் விற்கிறோம். எங்களைப் பொறுத்தவரை எங்கள் கஸ்டமர்கள்தான் எங்கள் முதலாளிகள். அவர்களுக்கு சரியாக சேவை செய்தால் எங்களை விட்டு விலகிச் செல்லவே மாட்டார்கள் என்பதை எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களுக்கும் சொல்லி இருக்கிறோம். 

ஒரு கஸ்டமர் கடைக்குள் நுழைந்தவுடன் அவரை வணங்கி வரவேற்பதில் ஆரம்பித்து, அவருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்து, திருப்திகரமாக கடையை விட்டுச் செல்கிற வரை ஒரு ஊழியர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பயிற்சி வகுப்பின் மூலம் கற்றுத் தருகிறோம். பத்து, பதினைந்து ஆண்டு கால அனுபவம் கொண்ட மூத்த ஊழியர்களைக் கொண்டே நாங்கள் இந்த பயிற்சியைத் தருவதால், புதிய ஊழியர்களுக்கு கிடைக்கும் பயிற்சி வெறும் தியரியாக இல்லாமல் பிராக்டிகலாக இருக்கிறது.

கவனமாக இருக்கிறோம்!

லோக்கல் மக்களின் தேவையை அறிந்து, அவர்களை திருப்திப்படுத்தினாலே போதும், வளர்ச்சி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த துறையில் சில நிறுவனங்கள் வீழ்ந்ததற்கு காரணம், சொற்ப காலத்தில் அகலக்கால் விரித்து பணத்தைக் குவித்துவிட வேண்டும் என்று நினைத்ததால்தான். இந்தத் தவறை மட்டும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

நன்றி - நாணயம் விகடன்

டிஸ்கி - எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி என்பதால் டைட்டிலில்  வெற்றி என்ற வார்த்தை விடு பட்டது.. அதாவது டைட்டில் 

ஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி வராத வெற்றி ரகசியங்கள்.......


என திருத்தி படிக்கவும் ஹி ஹி 

Sunday, April 24, 2011

ரஜினியை தாக்கினேனா? - இயக்குநர் அமீர் VS விகடன் பேட்டி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZMp7T6atsC2eR8ksi07FC4QDMOnEh7lPuXnNeVHWRiDn5fsil_6Lfp7K3BMQvxlkiB9GrsTKJzidvu7R7319jx4eWV9IrcgHQJHranVmowadwc3a-Bpb7Zw5kr5BAkmYRvQgT6GjrP6I/'


து வந்தாலும் சரி’ என்கிற தைரியத்தில் இதயம் திறப்பவர் இயக்குநர் அமீர். 


1. ''அமளிதுமளிபிரசாரம், அமோக வாக்குப்பதிவு... அடுத்து யாருடைய ஆட்சின்னு நினைக்கிறீங்க?'' எனக் கேட்டதுதான் தாமதம்... சிதறு தேங்காயாகச் சீறத் தொடங்கிவிட்டார் அமீர்.

இதுக்கு ஏன் சீறனும்? யோகி படம் உல்டான்னு சொல்றாங்களே.. அது நிஜமா?ன்னு கேட்டாத்தானே கோபம் வரனும்?

''என்னோட 'ஆதிபகவான்’ படத்தைப் பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தா, அடுத்த முதல்வர் யாரா? அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமேஅல்லாடும் நிலையில், 'தலைப் பிள்ளை ஆண்... தப்பினால் பெண்’ என நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்?

ஆதிபகவன்.. டைட்டிலைப்பார்த்தாலே தெலுங்கு டப்பிங்க் வாசனை தெரியுது.. சத்தியமா படம் தேறாது.. 

இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் நாகரிகம்தான் பலிகடாவாகிவிட்டது. நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்குத் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கட்ட விழ்த்து விடப்பட்டன. 

ஆமா.. அண்ணன் அசிஸ்டெண்ட் டைரக்டர்சை திட்டற மாதிரி ஹி ஹி 

திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பற்றிப் பேசாமல், 'குடிக்கிறார், அடிக்கி றார்’ என்று பேசி சந்தி சிரிக்கவைத்துவிட்டார்கள். நேற்று வரை அரசியல் அரிச்சுவடி தெரியாத சிரிப்பு நடிகர்கள் இன்றைய தேர்தலைத் தீர்மானிக்கும் கருவிகளாக உருமாற் றப்பட்டார்கள். இந்தக் கேலிக்கூத்துகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!''

 அண்ணன் வடிவேல் கால்ஷீட் கேட்டு கிடைக்காத கோபத்தை இப்படி தீர்த்துக்கறார் போல.. ஹி ஹி 

2.''வடிவேலுவின் பிரசாரத்தைச் சொல்கிறீர்களா?''


''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிக்கிறேன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகனும் இன்றைக்கு எங்கே போனார்கள்?


 சிம்ரன் புருஷன் கூட குடும்பம் நடத்தபோய்ட்டார்( அவரோட புருஷன் கூடத்தான்.. யாரும் ஜெர்க் ஆகாதீங்க.. ). சினேகன் இப்போ சினேகா கூட சினேகமா இருக்காராம்.. ஹா ஹா நல்லா கேட்கரார்யா டீட்டெயிலு..


காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? 

அப்போ கேப்டன் கூட எந்த பிரச்சனையும் இல்லையே..?

விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம். 

அப்போ அரசியல் என்ன இதுக்குத்தான் பயன் படுத்தனும்?ஊழலும் பண்ணக்கூடாது,சொத்துத்தகராறுக்கும் யூஸ் பண்ணக்கூடாதுன்னா எப்படி?

இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன்.

 இல்லையே. நீங்க ஃபாரீன் டி வி டி யை கவனிச்சு சுட்டுட்டு இருக்கறதா சொல்றாங்களே..? ஹி ஹி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV__HkeEGx3NqF5J1Me9boRba3Y2JZOG24SdFBO7fgPFjr69qn6KTdvhjAzDyNGb5YwLeZC7X78V81x-dokG17bZ9P2geHuLd7LkcLXGDNk4KE94Ah62xq6My-pNtRoMaLw5GhkBCpOaE/s1600/ameer.jpg
வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன. அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!''


 என்ன ஒரே வித்தியாசம்னா ரேஷன் கடைல லேடீஸ் கூட்டம் அதிகமா இருக்கும், டாஸ்மாக்ல ஜென்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்.. 

3. ''அப்படி என்றால், மது குடிப்பது தவறு இல்லை என்கிறீர்களா?''

''ஒரு தாய் என்ன கொடுத்தாலும் குழந்தை அதைச் சாப்பிடுகிறது. காரணம், தாய் விஷத்தைக் கொடுக்க மாட்டாள் என்கிற நம்பிக்கை. மது குடிப்பது தவறு. ஆனால், அரசாங்கமே ஊற்றிக் கொடுக்கும் நிலையில், குடிப்பவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? உலகக் கோப்பை வாங்கிய மகிழ்ச்சியில் பல கோடி பேர் பார்க்க ஷாம்பெயின் பாட்டிலைத் திறந்து, சச்சினும் டோனியும் குடிக்கிறார் களே... அது மது இல்லையா?''

அப்போ.. அரசாங்கம் டாஸ்மாக்கை இழுத்து மூடிட்டா எல்லா பயல்களும் திருந்திடுவாங்களா? ஒரு பயலும் பாண்டிச்சேரிக்கோ,கேரளாவுக்கோ போக மாட்டானா?

4. ''வேட்பாளரை விஜயகாந்த் அடிச்சதா பரபரப்பு கிளம்பியதே?''

''அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், நிச்சயமா அது தப்புதான். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சாரா இல்லை, உதவியாளரைத் தட்டினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

 தெளிவா தெரியலயா? ஏன்? நீங்களும் மப்புல இருந்தீங்களா? 

ஆனால், அவர் அடிச்ச மாதிரியான காட்சிக்கு பின்னணி இசை எல்லாம் அமைச்சு, கிராஃபிக்ஸ் வேலைகளைக் காட்டியது, அடிச்சதை விட மோசமான விஷயம். குடிச்சதையும் அடிச்சதை யும் சொல்லிச் சொல்லியே, மக்களோட பிரச்னை களை மறக்கடிச்சிட்டாங்களே... அதுதான் ஜீரணிக்க முடியாத துரோகம்!''


 அதெல்லாம் யாரும் மறக்கலை.. மே 13 பாருங்க.. ரிசல்ட்டை.. மஞ்சள் துண்டைக்காணோம்.. ராசா துணியைக்காணோம்னு ஆளாளுக்கு ஓடரதை.. 

5. ''வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாசாரம். யாரையும் திட்டிப் பேசினா, நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுக்கும் சிங்கமுத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது. 'விஜயகாந்த்துக்கு கேப்டன்கிற பட்டம் ஏன்?’னு கேட்கிற வடிவேலுக்கு 'வைகைப் புயல்’ என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா?


 இந்தப் புயல் எந்த மரத்தை பேத்துச்சு... எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்டச் செயலாளர் தொடங்கி ரௌடிங்க வரைக்கும் அத்தனைப் பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தைப் பத்தி இவ்வளவு பேசுற வடிவேலு, அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும்? ஆட்சி மாறி னால் அதோ கதி ஆகிடும்கிற பயம்தானே? 'எப் போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன்!’ என 87 வயதிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத் திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு? 

ஆமாமா.. கலைஞரின் அரசியல் நாகரீகம் உலகறிந்ததுதான்..

சினிமாவில் ஒரு காமெடி நடிகரோட ரோல்... ஹீரோ பின் னால் ஒளிந்துகொள்வதுதான்! நிஜத்திலும் வடிவேல் அதைத் தான் பண்ணி இருக்கார். கலைஞர், ஸ்டாலின், அழகிரிங்கிற ஹீரோக்கள் பின்னால் ஒளிஞ்சு நின்னு பேசினார்!''

 வில்லன்களை ஹீரோக்கள் என சொல்லும் காலம் இது.. 



6. ''இப்போ இவ்வளவு வெளிப்படையா பேசுற நீங்க, தேர்தலுக்கு முன்னரே பேசி இருக்கலாமே... தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பழகன் தயாரிப்பில் படம் பண்றதால் தயங்கிட்டீங்களா?''

''தயாரிப்பாளர் அன்பழகன் என்னிடம் இதுவரைக்கும் அரசியல் பேசியதே இல்லை. ஓர் இயக்குநரா என்னை அவர் மதிக்கிறார். அதைவிட அதிகமா நான் அவரை மதிக்கிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவுதான் எங்களுடையது. தேர்தலுக்கு முன்னர் இதை நான் பேசி இருந்தால், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு பாடுவதா முத்திரை குத்தி இருப்பாங்க. மூச்சுக் காத்துக்குகூட முத்திரை குத்துற ஊர் இது. மே 14-ம் தேதி முதல்வர் பதவியில் யார் உட்கார்ந்தாலும், அவங்களுக்கு என்னோட அன்பான கோரிக்கை... நீங்க முதல்வரான உடனேயே திரைத் துறையில் இருந்து ஒரு கூட்டம் ஓடி வரும். மாலை மரியாதை செய்து, 'பாராட்டு விழா நடத்துறோம்... தேதி கொடுங்க’ன்னு கேட்கும். அய்யாவா இருந்தாலும், அம்மாவா இருந்தாலும், ஒருபோதும் அதுக்கு மயங்கிடாதீங்க. அந்தக் கூட்டத்தை விரட்டி அடிங்க. சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க. அதில் அரசியலைக் கலக்காதீங்க.

 தானாத்தேடி வர்ற புகழை. பாராட்டை யாராவது வேணாம்னு சொல்வாங்களா?

நடிகர்கள் அரசியல் ஆசையோட அலையுறாங்கன்னா, அதுக்குக் கட்சிகள்தான் காரணம். பிரசாரத்துக்கு கூப்பிடுறாங்க... வாய்ஸ் கொடுங்கன்னு சொல்றாங்க... உடனே கூடுற கூட்டமும் கிடைக்கிற வெற்றியும் தன்னால் நடந்ததா நடிகர்கள் கனவோட திரியுறாங்க. நாளைக்கே வடிவேலு தனிக் கட்சி ஆரம்பிச்சாலும், ஆச்சர்யம் இல்லை. யாரோ ஒருத்தர் எழுதிய வசனங்களைப் பேசிப் பழகிய வாய்கள் நாளைக்கு யாரை நோக்கியும் திரும்பும்!''


ரஜினியை மறைமுகமாத்தாக்கறீங்களோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihutaWQb4YM_vqi71v0dfR6pbIyrk9UTrEpEpXPxDZZAzxqKqQs2QBM3wvBPppMTumgcrs177EvSq99gjwCtjdGsJRLR-xAQQkoOKtwbLRbqtbVeXU8q5zScM2JJBus9t_9ysb-Oskqp0/s1600/viddiyaabalan.jpg
7.''அப்படின்னா திரைத் துறையினர் அரசியலுக்கு வரவே கூடாதா?''



''அப்படிச் சொல்லலை. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை சினிமாவில் மூழ்கிக்கிடந்திட்டு, திடீர்னு அரசியல் அவதாரம் எடுப்பதைத்தான் கண்டிக்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கு. 2016 தேர்தல் களத்தில் நிச்சயம் இந்த அமீர் இருப்பான். இதை வைத்து, ஆட்சியைப் பிடிக்கிற ஆசைக்காரர்களில் என்னையும் ஒருத்தனா நினைச்சுடாதீங்க.

 மாணவ ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலமா அனைவரையும் வாக்களிக்கவைக்கிறதுதான் நான் செய்யப் போற அரசியல். 'மாணவ மறுமலர்ச்சித் திட்டம்’னு ஆரம் பித்து, ஏழை மாணவர்களின் படிப்புக்கு மாணவர்களே உதவும் திட்டத்தை கும்பகோணம் கல்லூரியில் தொடங்கிவைத்து, பல கல்லூரிகளிலும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

 இன்றைக்கு ஒற்றை மனிதரா ஊழலுக்கு எதிரான ஒருங்கிணைப்பை அண்ணா ஹஜாரே ஏற்படுத்தி இருக்கார். தள்ளாத வயதில் அவர் செய்ததை துள்ளும் வயதில் உள்ள நம்மால் செய்ய முடியாதா என்ன?!''

சினிமாக்காரங்க சி எம் ஆக நினைக்கறது தப்பில்லை.. ஆனா எல்லா சினிமாக்காரங்களுமே தான் தான் அடுத்த சி எம்னு நினைச்சுக்கறாங்க.. அதான் தப்பு.. 

நாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட்! ஜூ வி பர பரப்பு கட்டுரை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIMGVUPXOJ3j9IO3-SXbinKN2oWeEhtn93H5wozAe67b1NxoBvvxImNFX7qanupWH1ODTVXGPkUol8tiiQENCWpAU06EQZPUtB5s_gQMQInXMkjXsSGvrBw4KSp5PL7sS9S373k_ngWxcE/s1600/0409223w.jpg
15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை
விவகாரம்! கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

ஆமா.. நம்மாளூங்க தப்பி ஓடும் வரை வேடிக்கை பார்த்துட்டு , அதுக்கப்புறமா ஆள் விட்டு தேடுவாங்க.. 


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவரது தந்தை பொன்னுசாமி, அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.
1996 நவம்பர் 6-ம் தேதி திடீரென்று நாவரசு காணாமல் போனார். 'காணாமல் போனாரா... கடத்தப்பட்டாரா?' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.




அதன் பிறகு ஜான் டேவிட்டை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். நாவரசு படித்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஜான் டேவிட், கரூரைச் சேர்ந்தவர். 'தனக்கு ரெக்கார்டு நோட் எழுதிக்கொடுக்கும்படி ஜூனியரான நாவரசுவை ஜான் டேவிட் டார்ச்சர் செய்தபோது, 'ஜாக்கிரதை... என் தந்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ என்று கோபமாகச் சொல்லி இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த ஜான் டேவிட், 'சமாதானமாகப் போவோம்' என்று பொய்யாகச் சொல்லி நாவரசுவைத் தனியாக அழைத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கியதில், நாவரசுக்கு உயிர் பிரிந்துவிட்டது. அதன் பிறகு, உடலைத் துண்டு துண்டாக அறுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார் ஜான் டேவிட்' என்று முதல் கட்ட விசாரணையில் அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி-யான ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.

15 நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழகக் குளத்தில் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் தலை கிடைத்தது. சென்னை தாம்பரத்திலிருந்து கிளம்பிய 21 ஜி பஸ்ஸில் ஒரு பார்சலில் தலையில்லா முண்டம் கிடைத்தது. மரக்காணம் அருகே ரயில்வே டிராக் பக்கம் கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் போலீஸார் ஒன்றுபடுத்தி, 'நாவரசுவின் உடல்தான்’ என்று உறுதி செய்தனர். சவாலான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 1998-ல் ஜான் டேவிட்டை குற்றவாளி எனக் கருதி இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. இதை எதிர்த்து, ஜான் டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பக்தவத்சலு ஆகியோர் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இதையடுத்து, கிறிஸ்துவ போதகராக மாறி தேவாலயத்தில் பணியாற்றி வந்தார் ஜான் டேவிட்.

 பாவம். அந்த மதத்துக்கே தீராத களங்கம்


2002-ம் வருடம் தமிழக அரசு இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா தலைமை​யிலான பென்ச், ''மாணவர் நாவரசு கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது. 

இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்​டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடி​யாது!'' என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனி​யர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்​பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்​படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்!'' என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.


உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, மலையாண்டி கவுண்டனூர் என்கிற ஊரில் பொன்.நாவரசு மெட்ரிக் பள்ளி ஒன்றைத் துவக்கி நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவில் மகள் வீட்டுக்குச் சென்று இருந்த காரணத்தால், அவர் சார்பாக, மைத்துனர் சிவ.சத்தியசீலன் பேசினார்.

''மருத்துவம் படிக்கப்போன நாவரசுவை, கதறக் கதறக் கொன்ற கொலைகாரன் இத்தனை காலமும் வெளியில் நடமாடியதை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். குற்றம் செய்தால், சட்டத்தின் முன்பு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்து இருக்கிறது!'' என்றார் சோகத்துடன்.

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் தனஞ்செயன், ''இந்த வழக்​கில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளி​களுக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் சுசில்குமார் எதிர்த் தரப்புக்காக வாதாடினார். 

ஜான் டேவிட்டின் சூட்கேஸிலும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளிலும் நாவரசுவின் ரத்தம் படிந்து இருந்தது முக்கியமான ஆதாரமாக இருந்தது. நாவரசுவுக்கு முன்பே, ஜான் டேவிட் பலரை ராகிங் செய்ததற்கான சாட்சியங்கள், கொலைக்குப் பிறகு பதற்றத்துடன் ஜான் டேவிட் நடமாடியதைப் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டினேன். 

ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆனதையும், அவர் மத போதகராக இருப்பதையும் காட்டி அனுதாபம் பெற முயன்றதைக் கடுமையாக எதிர்த்தேன். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்!'' என்றார்.

கடலூர் மாவட்ட போலீ​ஸார் ஜான் டேவிட்டை தேடிய​போதுதான், ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. உடனே, இன்டர்போல் போலீஸ் உதவியுடன் ஜான் டேவிட்டைத் தேடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்!

 கடைசியாக வந்த தகவல் -  சென்னை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜான் டேவிட் சென்னை அடையாறில் தங்கி, வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ., கம்பெனியில் பணிபுரிந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் தேடுவதையறிந்த ஜான் டேவிட், பாண்டிச்சேரிக்‌கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் தானாகவே வந்து சரணடைந்தார்.


Saturday, April 23, 2011

விகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும்மி

 http://tamil-actress.net/wp-content/uploads/2010/10/Sonia_Agarwal.jpgஏரியாவுக்குள் கட்-அவுட்களில் இரட்டைவிரல் களால் மூக்கைச் சுண்டியபடி போஸ் கொடுக்கிறார் தலைவர்!

என்னது? இவரும் தலைவரா? இந்த நாடு எத்தனை  தலைவரைத்தான் தாங்கும்?

நாமக்கல்வாசிகளோ இவர் செய்யும் டார்ச்சரில் டர்ர்ராகிறார்கள். ''என் உண்மையான பேரு சுப்ர மணி. எனக்கு வயசு 53. விவரம் தெரிஞ்ச வயசுல எம்.ஜி.ஆரைப் பார்த்த பின்னாடி, 'சுப்ரமணி’யை தூக்கிப் போட்டுட்டு எம்.ஜி.ஆர்-னு பேர் வெச்சிக் கிட்டேன். காலேஜ் படிக்கிறப்ப பசங்க என்னை, 'எம்.ஜி.ஆர். மாதிரி சும்மா தகதகனு மின்னுற’னு சொல்லுவாங்க.

ஏன்? உடம்பெல்லாம் கரகாட்டக்காரி மாதிரி ஜிகினா ஒட்டிக்கிட்டே திரிவீங்களா?


காலேஜ் முடிச்சிட்டு மஞ்சள் தூள் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தேன்.


 அடடா... மஞ்ச மாக்கான்னு யாரும் நக்கல் அடிக்கலை?


அப்பதான் இதய தெய்வம் இந்த மண்ணைவிட்டு மறைஞ்சார்.

 நல்லவேளை அவர் உங்களைப்பார்க்கலை... 



எம்.ஜி.ஆர். இல் லாத இந்த மண்ணுலகம் வேஸ்ட். அதனால நானே எம்.ஜி.ஆர் ஆக மாற முடிவு செஞ்சேன்.

அய்யய்யோ .. அப்போ நடிகை லதா வீட்டுக்கு போனிங்களா?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNTItADvyMOreOkZAYBZKll6gKsnQYXtPyX91pGF4QisrLkWdY3dqZQftGFf-53fUznksYH_spLNghqvRKD3qSnjhvqmUjy4VbOWZJfHvP3bWcQlkR1sQFin3VI9bqI5Bs9aC8KAvPWaE/s1600/sonia_agarwal_latest_hot_stills_images_02.jpg
அப்ப இருந்து இந்த எம்.ஜி.ஆர். கெட்- அப் தான்.
ஆரம்பத்துல எம்.ஜி.ஆர். பாட்டுக்கு நானே காட்டு மேட்டுல சுத்தி டான்ஸ் ஆடி, கத்திச் சண்டைப் போட்டு அதை வீடியோவுல பதிவு செஞ்சேன்.

 ஆமா.. பார்த்தோம். படு கேவலமா இருந்துது



 ஆனா, பல் வரிசை மட்டும் எனக்கு தலைவர் மாதிரி இல்லை. அதனால ஒரு பல் டாக்டரைப் பார்த்து, 'எம்.ஜி.ஆர். மாதிரி பல் வரிசை எனக்கு வேணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’னு சொன்னேன்.

 நல்ல வேளை பல் வரிசையை மாத்துனீங்க..



 பல டாக்டர்கள் பயந்து ஒதுங்கிட்டாங்க.

 டாக்டர் மட்டுமா? நர்சுங்க கூட பயந்து ஓடி இருப்பாங்களே..?


 தஞ்சாவூர்ல இருக்கிற ஒரு டாக்டர் மட்டும் ஓ.கே சொல்லி, ஆபரேஷன் செஞ்சாரு. எம்.ஜி.ஆர். மாதி ரியே எனக்கும் பல் வரிசை வந்துடுச்சு.

அடங்கொன்னியா...

அப்புறம் காது. அதுதான் ரொம்ப முக்கியம். எம்.ஜி.ஆருக்கு காது, கன்னத்தோட ஒட்டி இருக்கும். புகழ் பெற்ற நடிகர்கள் எல்லோருக்குமே அப்படிதான் இருக்கும்.

காது ஒட்டி இருக்கறவனெல்லாம் புகழ் பெற்ற நடிகன்னா எல்லாரும் பிளாஸ்டிக் சர்ஜரி  பண்ணிக்கிட்டு அலைவானுங்களே..?

ஆனா, எனக்கு காது விரிஞ்சிக்கிட்டு இருந்தது. அதுக்கும் ஆபரேஷன் செய்ய முடிவு எடுத்தேன். டாக்டர்கள் சிலர், 'உயிருக்கே ஆபத்து’னு பயமுறுத்தினாங்க. உயிரே போனாலும் சரினு பயப்படாமல் ஆபரேஷன் பண்ணி காதையும் தலைவருக்கு இருந்த மாதிரியே மாத் திக்கிட்டேன்.



 உயிர் போயிருந்திருக்கனும்.. மவனே தப்பிச்சுட்டே.. 
அடுத்த ஆபரேஷன்... அது சினிமாதான்! 'இதயத்தில் ஒருவன்’ படபிடிப்பு. கதை, வசனம், இயக்கம் எல்லாமே நான்தான். ஹீரோவும் நானே.

புரொடியூசரும் நீங்க தானே..? வேற எந்த கூமுட்டையன் பணம் போட வருவான்? 

என் வாழ்க்கை வரலாறுதான் படத்தோட கதை. அந்தமான் சோனியானு ஒரு பொண்ணைத் தேடிப் பிடிச்சு கதா நாயகியா நடிக்கவெச்சேன். சும்மா சொல்லக் கூடாது... 'சொக்கவைக்கும் சோனியா’ அந்தப் பொண்ணு.

 சோனியா அகர்வால் இந்த பேட்டியை படிச்சா மனசொடிஞ்சு போயிடுவார் பாவம்.. 

ஒரு வழியாப் படத்தை உலகம் பூராவும் ரிலீஸ் பண்ணிட்டேன்.

ஆமா.. பெரிய எந்திரன் படம் ரிலீஸ் ஆகி இருக்கு


நல்ல ரிசல்ட் வந்துட்டு இருக்கு.

 என்ன 4 காட்சிகள் ஓடிடுச்சுன்னா?


அடுத்த  படமும்  ரெடி!  பெயர்...  ரோபோ எம்.ஜி.ஆர்!''
 http://www.extramirchi.com/gallery/albums/south/actress/surthihassan/SruthiHassan9.jpg

 உதை வாங்காம அடங்க மாட்டீங்க போல.. 

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல இந்த காமெடி பீஸ் நடிச்ச நாமக்கல் எம் ஜி ஆர் படம் ரிலீஸ் ஆகி அடுத்த நாளே எடுத்துட்டாங்க.. காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு இருக்குல்லா.. லத்திகா சீனிவாசன் கூட தேவலை.. ஹி ஹி 

என் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள் கார்த்திகா கில்மா பேட்டி - காமெடி கும்மி

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/radha-daughter-karthika-hot/radha-daughter-karthika-pics-1.jpg 

'1. ' 'கோ’ ரிலீஸ் ஆகப்போகுது. அதில் உங்க பங்கு என்ன?'' 

''கே.வி.ஆனந்த் சார் என்னை முதல் முறை சந்திச்சப்போ, 'பரபரன்னு திரியுற ஒரு ஜர்னலிஸ்ட் கேரக்டர். பார்க்கும்போதே 'இவ எதுவும் பண்ணுவா!’னு ஆடியன்ஸ் நினைக்கணும்’னு சொன்னார்.

( எதுவும் பண்ணுவா ன்னா?... ஓஹோ.. தமிழ் ரசிகன் அவன் மனசுக்குபிடிச்ச ஃபிகர்னா அவளுக்காக எதுவும் பண்ணுவான்னா.. ஹி ஹி ரைட்டு.. )


வழக்கமா தமிழ்ப் படங்களில் ஹீரோ பில்டப்தான் அதிகம் இருக்கும். ஆனா, இதில் எனக்குத் தான் பில்ட்-அப் ஜாஸ்தி. 'சொன்னதும் பளிச்னு புரிஞ்சுக்கிறாங்க’னு அப்பப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல கே.வி சார் என்னைப் பாராட்டும்போது எல்லாம், முறைச்சுப் பார்ப்பார் ஜீவா.

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அம்மணி.. ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயே அடக்கிதான் வாசிக்கறாங்க.. நோட் இட்


எனக்கு ஒரே டார்கெட்தான். நான் சினிமாவுக்கு வந்தது பணம் சேர்க்கணும்னு இல்லை. பெஸ்ட் பெர்ஃபார்மர்னு பேர் வாங்கணும். அதைச் சீக்கிரமே வாங்கணும். அவ்வளவுதான்!''


2. ''ஜீவா என்ன சொன்னார்?'' 

''நிறைய ஹெல்ப் பண்ணினார்.

ஹி ஹி  நோ  கமெண்ட்ஸ்


படத்துல அவர் போட்டோ ஜர்னலிஸ்ட். அதனால, எப்பவும் கேமராவும் கையுமாதான் இருப்பார்.

(ஜப்பான் மொழில கேமரான்னா கார்த்திகான்னு அர்த்தமா? ரைட்டு.. )


கேமராவில் விளையாட்டா ஸ்டில்ஸ் எடுத்துட்டு இருந்தவர், படம் முடியும்போது புரொஃபஷனல் போட்டோகிராபர் ஆகிட்டார். என்னை வித விதமா, அழகழகா போட்டோக்கள் எடுத்துக் கொடுத்தார்.

ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஃபினிஷிங்க்ல பிரச்சனை வராம இருந்தா சரி.. எப்படியோ ஜீவா நல்லா டெவலப் பண்ணீட்டார் போல.. ஸ்டில்சை.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieKOv5_SIZcTseUvMXhwTVAs994MhMzpJ2nsfmUvzA04-q8tiaxYp0VxtaBPksfPaoxExeoAhXyGOT7L3RiE_isfGwo9UVSnz-mBv0M0n1JOKXm_6dLikYw7xdXTNdv13CTL3M95yDF7JW/s400/karthika-hot-sexy2.jpg

'3. 'தமிழில் கார்த்திக்கின் பையன் கௌதமுடன் மணிரத்னம் படத்தில் அறிமுகம் ஆகப்போறீங்கனு நியூஸ் வந்ததே?'' 


''ஆங்... நானும் கேள்விப்பட்டேன். ஆனா, அது உண்மை இல்லை. நான் கௌதமைப் பார்த்ததே இல்லை.


பார்க்காமயே எப்படி? ஹி ஹி


அதனால என்ன... சான்ஸ் கிடைச்சா அவர்கூடவும் ஒரு படம் நடிச்சிரலாம். எனக்கு இவர், அவர்னு இல்லை. இப்போ இண்டஸ்ட்ரியில் மாஸா, க்ளாஸா யார் எல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோ ருடனும் நடிக்கணும்!''

 மாஸா க்ளாஸா இருந்தா மட்டும் போதாது.. பார்ட்டி நல்ல பீஸா என பார்த்து நடிங்க.. 




4''விட்டா... ரஜினி கூட நடிக்கணும்னு சொல்வீங்க போல?'' 

''ஏன், நான் நடிக்கக் கூடாதா? எய்ட்டீஸ் ஹீரோ - ஹீரோயின்கள் கெட் டு கெதரின்போது என் அம்மாகிட்ட ரஜினி அங்கிள், 'உன் பொண்ணு படத்தை பத்திரிகையில் பார்த்தேன். அவ கண்ணு சூப்பரா இருக்கு.

நல்லவேளை.. கண்ணு சூப்பர்ன்னார்.. பொண்ணு சூப்பர்னு சொல்லலை..

கே.வி நல்லாப் படம் பண்ணுவார். உன் பொண்ணுக்கு நல்ல என்ட்ரி கிடைக்கும்’னு வாழ்த்தினாராம். அம்மா சொன்னதும் அவ்வளவு ஹேப்பியா இருந்தது. அடுத்த தடவை சென்னை வரும்போது எப்படியும் ரஜினி அங்கிளைச் சந்திக்கணும்!''

 ராதா கூட ரஜினியை அங்கிள்னு தான் கூப்பிடுவார்.. நீங்களும் அப்படியே கூப்பிட்டா ... எப்படி?தாத்தா முறை ஆகலை?
http://img.xcitefun.net/users/2008/08/9441,xcitefun-karthika-5.jpg

டிஸ்கி -1  ராதா கால ரசிகர்கள் யாரும் கார்த்திகா ஸ்டில்சை ரசிக்காதீங்க.. ஏன்னா மக முறை ஆகுது.. ராதாவையும் ரசிச்சிட்டு கார்த்திகாவையும் ரசிச்சா எப்படி? ஹி ஹி

டிஸ்கி 2 -பதிவே முடிஞ்ச பின்னால கடைசியா எதுக்கு ஒரு ஸ்டில்லுன்னு கேட்கறவங்களுக்கு மட்டும் ஒரு வார்த்தை.. இதுதான் ஃபினிஷிங்க் டச்.. ஹி ஹி

ஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உயர் அதிகாரிகள்...வதம் செய்யக்கிளம்பிய வள்ளி..

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/01/Sneha_In_Police_Dress_2.jpg 

ஈரோடு: போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில், பரபரப்பு புகார் கூறியுள்ள ஈரோடு பெண் போலீஸ் வள்ளியை, சென்னை பத்திரிகையாளர்கள் மொய்த்தனர். மன அமைதிக்காக, தான் பணிபுரியும், "ஸ்டோர் ரூமி'ல், சுவாமி படத்தை மாட்டியுள்ளார் வள்ளி.

ஈரோட்டை சேர்ந்தவர் வள்ளி (35); 1997ல் போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஈரோடு எஸ்.பி., அலுவலக, "ஸ்டோர் ரூமி'ல் பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்க கோரியும், சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கை, வள்ளி தாக்கல் செய்தார்.


இவ்வழக்கு, வரும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், இவ்வழக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புகார் கொடுத்துள்ள பட்டியலில், 2004 முதல் 2011 வரை ஈரோட்டில் பணிபுரிந்த, 10 உயர் அதிகாரிகள் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

அவரை சமாதானப்படுத்தவும், வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றவும் வேண்டி, வள்ளியின் மொபைல் போனுக்கு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதுபோல், வள்ளி புகார் கூறியுள்ள அதிகாரிகள் பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, சென்னையில் இருந்து வார, மாத இதழ்களின் நிருபர்களும் அவரை நேற்று மொய்த்தனர்.

எந்த கேள்விக்கும் பிடிகொடுக்காமல், "இப்பிரச்னை குறித்து நீதிபதி தான் உத்தரவு வெளியிடுவார். நான் வக்கீலை மீறி, போலீஸ் துறையை மீறி செயல்பட முடியாது' என, ஒரே பதிலை கூறி வருகிறார் வள்ளி.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனம் தளராமல் வள்ளி தன்னுடைய பணிக்கு வழக்கம் போல் வந்து கொண்டுள்ளார். மன அமைதி வேண்டி, அலுவலகத்தில் சுவாமி படத்தை மாட்டி, பூ போட்டு வணங்கி வருகிறார்.

"ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், யாரேனும் மிரட்டுகின்றனரா?' என, வள்ளியிடம் கேட்டதற்கு, ""நீதி, நியாயத்துக்காக உழைக்கும் ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயமில்லை,'' என்றார்.

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு போல இன்னும் 10 நாட்களில் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன்.பல பெரிய தலைகள் உருளக்கூடும்..ஈரோட்டில் இப்போதே 4 உயர் அதிகாரிகள் லீவில் இருக்காங்களாம்.. 

என்னைக்கேட்டால் எவனெல்லாம் இந்த கேஸ்ல  மாட்றான்களோ.. அவங்க எல்லார் குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைக்கனும்.. எல்லா சினிமா தியேட்டர்களிலும் ஸ்லைடு போட்டு அவங்களை கேவலப்படுத்தனும்.. அப்பத்தான் இனி வரும் காலங்களில் தப்பு பண்றவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.

அதை விடுத்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணி சமாளிச்சா அவன் அங்கே போய் அதே வேலையை வேற பெண் போலீஸ் கிட்டே காட்டுவான்..

Friday, April 22, 2011

கோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://picasamusic.com/musicimg/KO.jpg

பாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை  வைத்து கே வி ஆனந்த்  களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள்...ஆட்சி மாற்றம் வருகிறது.. பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் கதை.. 
கேட்கும்போது மறுபடியும் ஒரு அரசியல் படமா ? என யாரும் சலித்துக்கொள்ள தேவை இல்லை.. நீட் ஆக்‌ஷன் கம்ர்ஷியல் தான்.

படத்தில் முதலில்  நம் மனதைக்கவர்வது பியா தான்.துறு துறுப்பான நடிப்பு,இயல்பான முக பாவனைகள்,செம்பருத்திப்பூ மலர்ந்த மாதிரி உதட்டில் தக்க வைத்த சிரிப்பு என சர்வசாதாரணமாக நம் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் செம அழகு..
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/Piya-Bajpai.jpg

 இரண்டாவது படத்தின் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இயற்கை அழகை அள்ளுகிறது.. ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் லாவகமான கேமரா கோணங்கள்,பல இடங்களில் வெல்டன் சொல்ல வைக்கிறது.

3 வது கதைக்களன் . பத்திரிக்கை ஆஃபீஸ்-ல் நடப்பதை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஆர்ட் டைரக்‌ஷன்.ஆரம்பக்காட்சிகளில் குப்பத்தில் குடிசைகளில் கேமரா புகுந்து புறப்பட்டு படம் பிடிக்கும்போது ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் எவ்வளவு முக்கியம் என நிரூபிக்கிறது..

அடுத்தது ஜீவா.. பிரஸ் ரிப்போர்ட்டரை கண் முண் நிறுத்துகிறார்.. தன்னை சுற்றி எது நடந்தாலும் அவர் உடனே கேமராவை கையில் எடுப்பது அருமை..ஒரு பத்திரிக்கையாளனுக்கு கேமரா மூன்றாவது கை மாதிரி என்ற லைனை கேட்ச் பண்ணி , கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்.

அடுத்து அஜ்மல்.. இவரது அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஆனால் கட்சியின் இளைஞர் படைத்தலைவர் என்ற அளவில் காட்டத்தான் அவர் ஒர்த். அதை மீறி ஒரு கட்சிக்கே தலைவராக காட்டுவதும் சி எம்மாக காட்டுவதும் குருவி தலையில் பனங்காய் கதை தான்.
http://narumugai.com/wp-content/uploads/2010/11/ko-karthika.jpg
ஹீரோயின் கார்த்திகா.. ராதாவின் மகள்.ஆள் நல்ல உயரம் தான்.. ஆனால் இவர் தமிழ் சினி ஃபீல்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவரது புருவங்கள் மகா மைனஸ்.. செயற்கையாக வரையப்பட்ட வளைந்த வில் போன்ற புருவங்கள்  பிளஸ் என நினைத்து விட்டார்கள் போல.. அது அவரது முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் முகம் ஒரு ட்ரை ( DRY SKIN)ஸ்கின் என்பதால் மேக்கப் போடும்போது பக்கா செயற்கை காட்டுகிறது.. பாப்பாவுக்கு நடிப்பும் வர லேது..  ஸாரி டூ சே திஸ்... 

படத்தில் சுவராஸ்யமான வசனங்கள்

 1.  ரேஷன் கார்டுல என்ன விசேஷம்?

நாங்க ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் சாராயம் தருவோம்.

2.  மிஸ்டர் டாக்டர் பிரகாஷ்.. நீங்க ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் 10 பேஷண்ட்டை மொத்தமா ஒரே சமயத்துல போட்டுத்தள்ளுனது எப்படி?ங்கறதை விளக்குவீங்களா?

3. தீ விபத்து நடந்தப்ப  எப்படி தப்பிச்சீங்க?

என் கிட்டே  4 வாட்டர் பாக்கெட் இருந்தது.. அதை என் மேல பீய்ச்சி அடிச்சுக்கிட்டேன்.

4. ஜீவா - அர்னாட்ஷா(!!) என்ன சொல்லி இருக்கார்னா நல்ல ஃபிகரா ,டாப்பா இருக்கற பொண்ணுங்களுக்கு டாப் சரியா இருக்காதாம் .. ( மூளை....)

5. பியா - நான் அந்தப்பொண்ணு கிட்டே பேச்சு குடுத்தேன்.. ஒரே நைட்ல ரூ 30,000 சம்பாதிக்கறாளாம்.. சில சமயம் ரூ 50000 கூட கிடைக்குமாம்.சரி.. ஒரு ஆர்வத்துல கேட்கறேன்.. எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

 ஜீவா - ம் ம் ஒரு நூத்தம்பது ரூபா?

பியா - அடப்பாவி.. அடி வாங்கப்போற.. சரி இவளுக்கு... 

ஜீவா- ஆள் ஹைட் ஜாஸ்தி.. அதுக்காக சும்மா அனுப்பிட முடியுமா..ஏதோ போட்டு குடுத்து அனுப்பலாம்.

கார்த்தி.-- அடச்சே.. என்ன பேச்சு இதெல்லாம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Xp2c2yWUqjKqi5fFVhCBYUU8BC9cAF_7_dCwya5Fwq2v4D1zAvRan3D4uddlouU3my50w8k2ECZlcpauuqRsodeEsdfObCP0O06_RmS-nRwi2MjGQzQWuPwBX_QmxhX8ZSiSCV1wXRc_/s1600/piaa_bajpai_hot_photo_shoot_pics_images_04.jpg
6.  வில்லன் - தமிழ்ப்பேப்பர்ல தாண்டி வேலை செய்யறீங்க? எதுக்கு இங்கிலீஷ்ல பேசறீங்க?

7. நான் யாருன்னு உனக்குத்தெர்யுமா?

அல்லக்கை

என்ன சொன்னே?

 சாரி,.. அண்ணனோட கை.. 

8.  ஜீவா - ஏய்.. அதெல்லாம் போகட்டும்.. நீ கடிச்சியே ஒருத்தனை.. அல்சேஷன் நாய் பிச்சை வாங்கனும்.. 

பியா - !!!!!!!!!!!!!!!!

9. பிரஸ்னா பாசிட்டிவ் மேட்டர்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.. நெகட்டிவ் மேட்டர் தான் எடுபடும்.. ஒரு கள்ளக்காதல், ஒரு கொலை,இப்படித்தான் நியூஸ் எடுக்கனும்.. 


10. சார்.. பிரஸ்னா கேவலமா நினைக்காதீங்க.. பத்திரிக்கைக்காரங்களால தான் ஆட்சியே மாறுது.. ( ஆமா.. கருத்துக்கணிப்புன்னு எதையாவது போட்டு மக்களை குழப்பறதே இவங்க தானே?)

11.  பியா - தூங்காம கண்ணை மூடிக்கிட்டே கனவு காண்பதும் ஒரு சுகம் தான்.. 

12. நான் ஏன் அவனை லவ் பண்றேன்னா பொண்ணுங்க தானா வந்து பேசுனா பசங்க அடுத்த நிமிஷமே மேல கை போட நினைப்பாங்க.. ஆனா அவன் அப்படி இல்லை...அவன் ஒரு ஜெம்..  ( இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சிருக்கலாம்.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே பொண்ணு.. )

13. டேய்.. எதுக்குடா கொதிக்கறீங்க? அரிசி மூட்டை இருந்தா அங்கே நாலஞ்சு எலிங்க இருக்கத்தான் செய்யும்.. ஆட்சின்னு ஒண்ணு இருந்தா அங்கே ஊழல் இருக்கத்தான் செய்யும்.. ( நாலஞ்சுன்னா ஓக்கே ஒண்ணே முக்கால் லட்சம் கோடின்னா நாட் ஓக்கே)
14. நிருபர் - சி எம் சார்.. உங்களுக்கும், இந்த கொள்கைப்பரப்புச்செயலாளர்க்கும் ஏதோ கனெக்‌ஷன்னு பேசிக்கறாங்களே?

பிரகாஷ்ராஜ் - அவ எம் பொண்ணு மாதிரி.. 

நிருபர் - அப்போ அவங்கம்மாவுக்கும் உங்களுக்கும் கனெக்‌ஷன்னு நியூஸ் போட்டுக்கலாமா/ சார்?   ( எம் ஜி ஆர் - ஜெ நேரடி அட்டாக் )

15. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்கு எதிரா நியூஸ் போட எவ்வளவு வாங்குனீங்க?

சார்.. நீங்க தான் சொன்னீங்க.. எங்க  நல்லாட்சில எதிர்க்கட்சியே கிடையாதுன்னு.. அப்புறம் எப்படி?

16.  டியர்.. உன் மன்சுல நான் இல்லைன்னா ஏன் உன் கண்ணு கலங்குது?

17. பியா - அடேய்.. நீ என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.. ஆனா போற வர்றவளை எல்லாம் லவ் பண்றியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல..  ( ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் )




18. இந்த உலகத்துல பழமையான தொழில் ரெண்டே ரெண்டு தான்.. 

1. அரசியல் 2. விபச்சாரம்,.

ஆனா இப்போ அரசியலே விபச்சாரமா போச்சு.. 

19 தம்பிங்களா.. அரசியல்னா சும்மா இல்ல.. சுறா, திமிங்கலம் எல்லாம் பசியோட உலாவற இடம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. இல்லைன்னா ஆளைப்போட்டுத்தள்ளிடும்.. ( சரி விடுங்க,. தெரியாம சுறா பார்த்துட்டோம்.. அதையே சொல்லிக்காண்பிச்சுட்டு)


20. நம் தலைவர் ஒரு பாயும் புலி.. நடமாடும் சிங்கம்.. அதனால் தான் நடிகை ஷமீதா ஸ்ரீயை தன் கூடவே வைத்திருக்கிறார்.. ( இந்த இடத்துல நமீதாவை அட்டாக்)

 21. ஷமீதா - ஹாய் மச்சான்ஸ்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு ரொம்பப்பெரிய..... மனசுன்னு.. ( நல்ல வேளை.. )

 22 - சி எம் - என்னடா நான் பேசறப்ப கூட்டமே இல்லை..?

தலைவரே .. ஷமீதா போனதும் கூட்டமும் போயிடுச்சு.. நீங்க அவங்க பேசறதுக்கு முன்னாமே பேசி இருக்கனும்..

 அட.. வெளக்கெண்ணெய்.. அதை நீ முதல்லியே சொல்லி இருக்கனும். 

23  இந்தகாலத்துல இளைஞர்கள் எல்லாம் ஐ டி ல ஒர்க் பண்ணத்தான் விரும்பறாங்க.. ஃபாரீன்ல வேலை கிடைச்சா உடனே நாட்டை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாங்க.. 

. ஏன்.. உனக்கு விசா கிடைக்கலைங்கற கோபத்துல பேசறியா?
 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1234.jpg

 இயக்குநருக்கு பாராட்டு போகும் இடங்கள் (ALL CREDITS GO TO DIRECTER)
1. காலேஜ் ஃபிளாஸ்பேக் காட்சியில்  வரும் கனவில் தூங்கு  பாடல் காட்சியில் அஜ்மல், ஆடு இரண்டு பேரும் ஒரே கிளை இலையை ஆளுக்கு ஒரு முனையில் வைத்து தின்பது...
 
2. அதே பாடல் காட்சியில் காலேஜ் ஃபிகர்களாக வருபவர்கள் நிஜமான காலேஜ் ஃபிகர்ஸாக இருப்பது...

3.  கார்த்திகா தனிமையில் ரூமில் இருக்கும்போது சடார் என ஒரு உருவம் வருவதை சர்ப்பரைஸ் ஷாட்டாக எடுத்தது.. ( தியேட்டரில் பாதிப்பேர் வீல் என கத்தி விட்டார்கள்)

4.  ஒரு சேஸிங்க் சீனில் உயரமான பில்டிங்க்ல இருந்து ஜாக்கிசான் போல பைப்பில் சறுக்கிக்கொண்டே ஜீவா வரும் சீனை டூப் இல்லாமல் ,கட் ஷாட் இல்லாமல் லெங்க்த்தி ஷாட்டாக எடுத்தது..( வெல்டன் ஜீவா)

5. சூப்பர் ஹிட் சாங்கான என்னமோ ஏதோ பாட்டுக்கான லொக்கேஷன், பாடல் படமாக்கப்பட்ட விதம்,கண்ணியமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.( THE PICTURAISATION OF THE SONG IS SO LOVELY)

இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

 1.  படத்தின் ஆதார இடமான மேடையில் குண்டு வெடிக்கும் சீனை பிரம்மாண்டமாக எடுக்காமல் சொதப்பியது ஏன்? அதை லாங்க் ஷாட்டில் துக்ளியூண்டு காட்டி தப்பிச்ட்டீங்களே.. 

2. மொத்தப்படத்திலும் மனித நேயத்தை புகழ்ந்து விட்டு பாடல் காட்சியில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் ஷாட் எதற்கு?

3. என்னதான் ஒரு நிருபர்க்கு கடமை கண்ணாக இருந்தாலும் விபத்து நடந்தாலும் சரி.. கலவரம் நடந்தாலும் சரி.. ஜீவா  மக்களை காப்பாற்றாமல்
ஃபோட்டோ எடுத்துட்டு இருப்பது ஏன்?

4. படம் செம ஃபாஸ்ட்டா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு அந்த வெண்பனியோ பெண்மணீயோ மெலோடி பாட்டு? அதுவும் செகண்ட் ஆஃப்ல...?

5. தீவிரவாதிகளை பார்க்க சி எம் தான் மட்டும் தனியே போய்ப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன? மாட்டிக்கவா?

6. ரிப்போர்ட்டர்க்கான டிரஸ் கோட் படத்தில் ஹீரோ, ஹீரோயின் டாரும் மெயிண்ட்டெயின் பண்ணலையே..? ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே?)

7. செகண்ட் ஆஃப்ல வைத்த ட்விஸ்ட் ஓக்கே.. ஆனா அதுக்கான காரணத்தை ஃபிளாஸ்பேக்ல சொல்லி இருக்கனும்.. 

இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

 ஈரோடு வி எஸ் பி, சண்டிகா , ஸ்ரீ கிருஷ்ணா என 3 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகி இருக்கு.

டிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..

 டிஸ்கி 2 - இந்தப்படத்தின் கதைக்களன் பத்திரிக்கைத்துறை என்பதாலும், பிரசஸ்காரங்க நினைச்சா எதையும் சாதிக்க முடியும் என்ற கான்செப்ட் என்பதாலும்  இந்தப்படத்துக்கான பத்திரிக்கை விமர்சனங்கள் கொஞ்சம் ஓவர் பில்டப்போடே இருக்கலாம்.. 

ரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா? ஒரு அலசல்

http://www.dating360.info/wp-content/uploads/2011/03/love5.jpg


உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' என்றபடி...அகிலன் இனி உங்களுடன்..! 

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!

நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள். 

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை,இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghCyNxjIqI0y27tWVrTsWPtuZlz2ASycZxpmUg8XXHDTrgUcw6tgBmN-MMRTgVXEZxK0A-pkLp7bNqJAXDYlFBjX3dVLZF25MFBHBEIddm3ylednSHfIBmlDtC7WJEXwknBvOphb2jEqrm/s1600/love-wallpaper11.jpg
இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செல்வகுமார் - சமிக்ஷா... காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஓர் ஆண் குழந்தை. இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள். என்ன ஆச்சு?

குழந்தை பிறக்கும் வரை ரொமான்டிக்கான விஷயங்களுக்கு இருவருக்குமே நிறைய நேரம் இருந்தது. அடிக்கடி கிளம்பி எங்காவது ரிஸார்ட்டுக்குப் போய்விடுவார்கள். செக்ஸ் என்பதை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அனுபவிக்காமல்... வெவ்வேறு லொகேஷன்களில் ருசித்தார்கள். 'முத்தம்’ என்பதில் கிடைக்கும் எனர்ஜியும், எலெக்ட்ரி சிட்டியும் உற்சாகத்தைத் தரக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து முத்தங்களாவது கொடுத்துக் கொள்வார்கள்.

செல்வகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகள் கொடுப்பதில் வல்லவன். முக்கியமாக வகை வகையான வண்ணங்களைக் கொண்ட உள்ளாடை களைப் பரிசாகக் கொடுத்து, மனைவியைச் அணியச் சொல்லி ரசிப்பான். அந்த இரவு உடைகள் எல்லாம் 'ஸீ த்ரூ’ பாணியில் மிகவும் செக்ஸியாக இருக்கும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWGX_i4z0220BYkEHFCl4OfdZd2ivkD0Dd5XbQQNgRseMqFII62ECMeKfZfeEgh3XIWyTIIh2qp5vE9r0zPLZn7i6viRdCjMaqoCaOji3EZ1E0_xnvPz0Rglx6XKbErAGhB3_i-_FE4ic/s400/z115013046.jpg+3.jpg
முதலில் சமிக்ஷா வெட்கப்பட்டாலும், உள்ளூர அதில் மிகவும் மகிழ்ந்தாள். பதிலுக்கு அவளும் செல்வ  குமாருக்கு நிறைய பரிசுகளை வழங்குவாள். அவனைக் குளிக்க வைத்து, தானும் நனைவாள். செக்ஸில் முழு ஈடுபாடு காட்டுவாள். காதலர்கள் போல் சினிமா தியேட்டர் இருட்டறைகளில் அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிக் கொள்வாள்.

ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவரவர் அலுவலகங்களில் புரமோஷன் பெற்று, ஹவுஸிங் லோன், பிரசவ நெருக்கடிகள், குழந்தை பறித்துக் கொண்ட நேரம் போன்றவற்றால் அந்நியோன்யத்துக்கான நேரம் மெள்ள குறைந்து போனது- பேச்சும்கூட! 

இரவு வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துவிட்டு உடனே தூங்குவதற்குத்தான் மனமும் உடலும் அவர்களுக்கு இடம் தந்தன. இருவருக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்ள தேவைப்பட்ட ரொமான்ஸ் இல்லாமல் போனதால், அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. முக்கிய மான பிரச்னையே, இருவரும் பேசிக் கொள்ளாமல் போனதுதான்.

பிரபல செக்ஸாலஜி டாக்டர் கோத்தாரி, 'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஓபனாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!' என்கிறார்.
 http://images2.fanpop.com/image/photos/8900000/LOVERS-love-8964894-1024-768.jpg
மற்றொரு தம்பதி, பிருந்தா - சரவணன். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே காதலும் இல்லை, ரொமான்ஸும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ். இயந்திர மயமாக உடலுறவில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். ஆனால், பரஸ்பர வெறுப்பும், மனதில் வெறுமையும் இருவரை யும் பாதித்துக் கொண்டே இருந்தது. கோர்ட் படி ஏறாமலே தனித்தனி யாகப் பிரிந்துவிட்டனர். குழந்தைகளையும் பிரித்துக் கொண்டார்கள்.

'ஓர் உண்மையான பாராட்டு என்னைப் பல மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்' என்றார் எழுத்தாளர் மார்க் ட்வைன். இது கணவன் - மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்

. -தொடரும்


நன்றி - அவள் விகடன்

Thursday, April 21, 2011

மியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்தேகங்கள் இருக்கா?


கிரெடிட் கார்டு வட்டிக்கு சேவை வரி உண்டா?


1. கே:மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறேன். வீடு மாறப் போகிறேன். புதிய முகவரியை ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை தொடர்பான ஆவணங்களில் மாற்ற என்ன செய்ய வேண்டும்?


மோகன்ராஜ், கிளை மேலாளர், ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், கரூர். 
 
ப:முதலில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் புது முகவரியை மாற்றிக் கொள்ளுங்கள். அதன் நகலுடன் முகவரி மாற்று படிவத்தை நிரப்பி ஷேர் புரோக்கரிடம் கொடுத்துவிட்டால் போதும். டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டில் முகவரி மாற்றம் செய்யப்பட்டுவிடும். மியூச்சுவல் ஃபண்டிலும் இதே நடைமுறைதான்.
------------------------------------------------

2. கே:2,400 சதுர அடி மனையில் மொத்தம் 3,600 சதுர அடி பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி இருக்கிறார்கள். அதில், ஒருவர் 850 சதுர அடி ஃபிளாட்டை வாங்குகிறார் எனில், அவருக்கான பிரிக்கப்படாத பகுதி 'அன்டிவைடட் ஷேர்’ எத்தனை சதுர அடி கிடைக்கும்?
- ஏ.எஸ்.ராஜேஷ்குமார், சென்னை.
மணிசங்கர், தலைவர், ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுசிங் புரோமோட்டர்ஸ். 

ப:2,400 ச.அடி மனையில் 3,600 ச.அடி கட்டடம் கட்டப்படுகிறது எனில், இதன் விகிதம் 2400/3600 = 0.66. இதனை 850-ஆல் பெருக்கினால் கிடைப்பது, அதற்கான பிரிக்கப்படாத மனை. அதாவது, 850 ச. அடி ஃபிளாட்டுக்கு பிரிக்கப்படாத மனையின் அளவு 566.66 ச.அடி. பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதைக் கண்டுபிடிக்க, மொத்தமுள்ள வீடுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்டினால், மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.

-------------------------------------------

3. கே:என் வயது 36. தற்போது என்னிடம் 30,000 ரூபாய் இருக்கிறது. இதனை பங்கு, ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப். போன்றவற்றில் எதில் முதலீடு செய்யலாம்?
-மெயில் மூலமாக ராதா 
முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ்வெல்த் அட்வைசர்ஸ். 

ப:உங்களது தற்போதைய முதலீடுகள் என்னென்ன, வருங்காலத் தேவை என்ன என்று எதுவும் தெளிவாகக் கூறவில்லை. எனினும், உங்களின் வயதைக் கொண்டு உங்களிடம் இருக்கும் 30,000 ரூபாயை இரண்டு வகையில் முதலீடு செய்யலாம். அதாவது, நீண்டகாலத் தேவைக்கு எனில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் சரிபாதியாகப் பிரித்து முதலீடு செய்யலாம். இதுவே குறுகியகால முதலீடு எனில், அவசரத்திற்கு எடுக்கும் வகையில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைக்கலாம்.


4. கே:கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்ய முடியுமா? 

- சரண்யா, திருத்துறைப்பூண்டி.
புவனா ஸ்ரீராம், நிதி ஆலோசகர். 

ப:எஸ்.ஐ.பி. மூலம் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. ஆனால், புதிதாக வந்திருக்கும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மூலம் மாதம் குறைந்தபட்சம் 100, 500, 1,000 ரூபாய் என உங்கள் வசதிக்கேற்ப எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்து வரலாம்.  ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோட்டக் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவை மூலம் இந்த முதலீட்டைச் செய்யலாம்.


5. கே:எனது ஒரிஜினல் பிறந்த தேதி 7-7-1979. பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றில் இதே தேதிதான் இருக்கிறது. ஆனால், பள்ளிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டில் 16-7-1979 என்று இருக்கிறது. இதனை மாற்ற முடியுமா? அதற்கு என்ன வழி?

-டி.வெங்கடேஷ், பெங்களூர்.
தவ்லத் தமீன், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி. 

ப:உங்களின் பிறப்புச் சான்றிதழில் சரியான பிறந்த தேதி இருக்கிறது எனில், அதன் சான்றழிக்கப்பட்ட நகலுடன், என்ன காரணத்தால் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மாறியது என்பதைத் தெளிவாக எழுதி, அத்துடன் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் ஆவணங்களைப் பரிசீலனை செய்து பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியை சரிசெய்து கொடுப்பார்கள்.


6. கே:கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். இதில், வட்டிக்கு சேவை வரி போடுகிறார்கள். இது சரியான நடைமுறைதானா? 

- ராகவன் ஸ்ரீதரன்,  மெயில் மூலமாக
விஜயகுமார், ரிலேஷன்ஷிப் மேனேஜர், ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் பேங்க்.   

ப:பொதுவாக கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆனால், வட்டிக்கான சேவை வரி என்பது அனைத்து வங்கிக்கும் பொதுவானதே. அதாவது 10.3% சேவை வரி கிரெடிட் கடனுக்கான வட்டிக்கு கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு 10,000 ரூபாய்க்கான வட்டி 200 ரூபாய் எனில், சேவை வரி 20.60 ரூபாய். நீங்கள் வட்டி கட்டும்போது சேவை வரியும் சேர்த்து 220.60 ரூபாய் கட்ட வேண்டி வரும்.

 தொடரும்.


நன்றி - நாணயம் விகடன்

உங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெடி கும்மி

http://i.indiaglitz.com/tamil/news/mankatha181210_1.jpg 

''மும்பை தாராவி கிட்டத்தட்ட ஒரு குட்டித் தமிழ்நாடு. 'நாயகன்’ படத்துக்குப் பிறகு தாராவிக்குள் முழுமையாகப் புகுந்த படம் 'மங்காத்தா’!  ( அடங்கோ.. மறுபடி ஒரு நாயகனா?)

மொத்த தாராவியும் அஜீத்தைப் பார்க்கும் ஆசையில், அந்தச் சின்ன சந்துக்குள் திமிறி நிக்குது. 'தல... தல... மங்காத்தா சூப்பர் ஹிட்டாகும் தல’ன்னு அவங்க பக்கம் அஜீத் திரும்புறப்பலாம் சவுண்டு கொடுப்பாங்க. 'முதல்ல படத்தை எடுக்கவிடுங்கப்பா. (எந்தப்படம் எடுத்தாலும் ரிலீஸ் ஆகற வரை இந்த ஜால்ராக்கள் சத்தம் தாங்கறதில்லை.. )

அப்பதானே அது ஹிட் ஆகும்’னு ஜாலியும் கேலியுமா அஜீத்தே கூட்டத்தை கன்ட்ரோல் பண்ணி ஷூட்டிங் நடக்க உதவி பண்ணுவார். ரொம்ப ஜாலியா ஷூட்டிங் முடிச்சு இப்பத்தான் மும்பைல இருந்து பேக்கப் ஆகி வந்திருக்கோம்!'' - பெசன்ட் நகர் வீட்டில் கடல் காற்றுக்கு இடையே 'மங்காத்தா’ கதை சொல்கிறார் வெங்கட் பிரபு.

(சகுனி-மகாபாரதம் கதை உல்டா தானே..?மணி ரத்ணம் பாணில?)


1.''படத்தில் 'அவங்க நடிக்கிறாங்க... இவங்க நடிக்கிறாங்க’ன்னு ஏகப்பட்ட தகவல்கள். யார் யார் நடிக்கிறாங்கன்னு இப்பவாது சொல்லலாம்ல?''


(எல்லாரும் நடிக்கறாங்க.. யார் யார் நல்லா நடிக்கறாங்க?)

''இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டோடு படம் உருவாகும்னு நானே எதிர்பார்க்கலை. 'உங்க டீமே இல்லாம ஃப்ரெஷா ஒரு படம் பண்ணலாம். பிரேம்ஜியை மட்டும் வெச்சுக்குங்க’ன்னு துரை தயாநிதி சொன்னார். 

(அதானே .. பிரேம்ஜி இல்லாம வெங்கட் படம் எடுத்துடுவாரா என்ன?)

அப்ப அஜீத் சார் மட்டும்தான் உள்ளே வந்தார். அப்புறம் படத்துக்கே வேற கலர் வந்துடுச்சு. இப்போ அர்ஜுன் சார், த்ரிஷா, வைபவ், அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ்னு ஏகப்பட்ட பவர் பெர்ஃபார்மர்ஸ் உள்ளே வந்துட்டாங்க. அஜீத்துக்கும் அர்ஜுனுக்கும் இடையிலான போட்டிதான் 'மங்காத்தா’. 

ஒரு பிரச்னை, அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள்னு முதல் பாதி நகரும். 


(எப்படியோ படம் ரிலீஸ் ஆன பிறகு எந்த குடும்பமும் ரிசல்ட்டால பாதிக்கப்பாடாம இருந்தா சரி..)


அந்தப் பிரச்னைக்கான தீர்வு இரண்டாம் பாதி. ஒருநாளில் நடக்கும் சம்பவங்கள்தான் செகண்ட் ஆஃப். அர்ஜுன் சாருக்கு ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. மாதிரியான கேரக்டர். அஜீத் சாரின் 50-வது படத்தில் அவருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும்னு தெரிஞ்சும், அர்ஜுன் சார் நடிச்சுக் கொடுத்தது பெரிய விஷயம். 

 (அர்ஜூன்க்கு அது ஒண்ணும் புதுசு இல்லையே.. ஏற்கனவே குருதிப்புனல்ல டம்மி ஆனவர் தானே?)

'படத்தில் ஒரு சின்ன கேரக்டர் இருக்கு. நீங்க ஃப்ரெண்ட்லியா பண்ணித் தரணும்’னு ஆண்ட்ரியாகிட்ட கேட்டேன்.

செல்வராகவன் கோவிச்சுக்கலையா?

'எனக்கு ஓ.கே. ஆனா, உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு தரணும்’னாங்க. 'அதுக்கென்ன கொடுத்துட்டாப் போச்சு’ன்னு அவங்களைப் பிடிச்சுப் போட்டாச்சு!''

 ஹி ஹி அப்படியா விஷயம்..?

''அஜீத் ஹிட் கொடுத்து கொஞ்சம் இடைவெளி ஆயிருச்சே... இந்தப் படம் அதுக்குப் பதில் சொல்லுமா?'' 

''ஒரு வரியில் சஸ்பென்ஸ் உடைக்கவா? படத்தில் அஜீத் சார் முதல் முறையா முழு நெகட்டிவ் கேரக்டர் பண்ணி இருக்கார். அவர் கேரக்டர் பேரு விநாயக் மகாதேவன். 'பாஸிகர்’ ஷாரூக் மாதிரியான கேரக்டர். 


 படத்தோட ரிசல்ட் நெகடிவ்வா அமையாம இருந்தா சந்தோஷம்

காமெடி, திரைக்கதைன்னு எல்லாத்தையும் தாண்டி அவரின் கேரக்டர்தான் நிக்கும். 

 (இந்தப்படத்துல நடக்கலையா..பில்லாவுல வர்ற மாதிரி.. )

டான்ஸ், சண்டைக் காட்சிகளுக்கு ரொம்ப டெடிகேட்டடா வொர்க் பண்ணினார். அவர் இயல்பா கிரே ஹேர், சால்ட் அண்ட் பெப்பர் லுக்னு எப்படி இருக்காரோ அப்படியே விட்டுட்டோம். 'ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மாதிரி இருந்தா, நல்லா இருக்கும்’னு சொன்னேன். அப்படியே ரெடி ஆகி வந்து நின்னார்.

(நரை முடி கெட்டப் உங்க ஐடியாவா? கேவலமா இருக்கு)


படம் ரிலீஸானதும் பசங்க டை அடிக்கிறதை விட்டுட்டு கிரே ஹேர் ஸ்டைலை டிரெண்ட் ஆக்கிருவாங்க.

 நாசமாப்போச்சு.. இது வேறயா? ஏற்கனவே இவனுங்களைப்பார்க்க சகிக்காது. இதுல டை வேறயா? எல்லா ஃபிகருங்களும் கலரிங்க் தலையான்னு கிண்டல் பண்ணப்போகுது.. 

எங்க டீம் பசங்களைவிட குத்துப் பாட்டுக்கு செமத்தியா ஆட்டம் போட்டாரு. அவர் நல்லா ஆடிட்டு இருக்கும்போது பசங்க யாராவது மிஸ்டேக் பண்ணா, 'டேய் நானே நல்லா ஆடுறேன். உங்களுக்கு என்னடா வந்துச்சு?’ன்னு செல்லமாத் திட்டி வேலை வாங்குவார்.

நல்லா ஆடறாரா..? என்ன சீட்டுக்கட்டா? செஸ்சா?

'இந்த கேரக்டரை ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்க. ஆனா, என் ஃபேன்ஸை நாமதான் தயார் பண்ணணும். டிரெய்லர், இன்டர்வியூன்னு கொஞ்சம் கொஞ்சமா என் கேரக்டர் பிடிக்கிற மாதிரி அவங்களைத் தயார் பண்ணுங்க’ன்னார். அதுக்கு இந்தப் பேட்டிதான் பிள்ளையார் சுழி!'' 

பிள்ளையார் பிடிக்க  குரங்கா ஆன கதை ஆகிடப்போகுது.. 

2.''அப்போ வில்லன் அஜீத்துக்கு ஏகப்பட்ட பன்ச் டயலாக் இருக்குமே!''

''சான்ஸே இல்லை. பொதுவா எல்லாப் படங்களிலும் ஒரு ஹீரோ கெட்டது பண்ணா, உடனே அவருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சு அந்த ஹீரோ எதனால் கெட்டவன் ஆனார்னு சொல்வாங்க. ஆனா, நாங்க அதெல்லாம் பண்ணலை. கெட்டவன்னா... கெட்டவன்தான். 'நான் கெட்டவன்... நீ நல்லவன்’னு எந்த பன்ச்சும் கிடையாது. டயலாக் எல்லாமே யதார்த்தமா இருக்கும்!'

பதார்த்தமா இருக்குமா? விஜய் படம் மாதிரி இருக்குமா?

'
3''இதை அஜீத் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?''

( அவங்க எதைக்குடுத்தாலும் ஏத்துக்குவாங்க.. சராசரி ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?ன்னு கேட்கனும் )

''அவர் பெர்சனல் விஷயங்கள் எதையும் படத்தில் சேர்க்கலை. அவர் சேர்க்கவும் சொல்லலை. 'நாட்டு மக்கள் திருந்தி வாழணும்’னுலாம் எந்த மெசேஜும் இல்லை. இதுல அஜீத்-பிரேம்ஜிதான் காமெடி கூட்டணி. ஆனா, என் மத்த மூணு படங்களைக் காட்டிலும், இதுல சீரியஸ்னெஸ் ஜாஸ்தியா இருக்கும். அஜீத் ரசிகர்களுக்கு 'மங்காத்தா’ டபுள் ஜாக்பாட்!''

 நாட்டு மக்கள் திருந்தி வாழணும்’னா எவனும் சினிமாப்பார்க்கக்கூடாது..

என்னது? சீரியஸ்னெஸ் ஜாஸ்தியா.. ம் ம் வெளங்கிடும்.

4. ''அஜீத் அரசியல், எலெக்ஷன் பத்தி ஏதாவது பேசுவாரா?''

'' 'யார் பிரபு வருவாங்க? வேர்ல்டு கப் மாதிரி பயங்கர டஃப்பா இருக்கு’ன்னு ஏதாவது கமென்ட் அடிப்பார். தினமும் அரை மணி நேரமாவது அரசியலைப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். அஜீத் சாருக்கு இவ்வளவு டீடெய்ல்டா அரசியல் தெரியுமான்னு ஆச்சர்யமா இருக்கும்!''

 தினமும் அவரு அரை மணி நேரம் டைமை வேஸ்ட் பண்றாரா/ அடடா..

இது இந்த வார ஆனந்த விகடன் பேட்டி..


டிஸ்கி - இப்போ திடீர்னு நான் ஏன் திருந்தீட்டேன்னு கேட்டு நிறைய மெயில் வருது.. நாட்ல ஆட்சியே மாறப்போகுது.. நான் ஒரு தனி மனிதன் மாறக்கூடாதா? ஹி ஹி