Showing posts with label ஜீவா. Show all posts
Showing posts with label ஜீவா. Show all posts

Thursday, September 11, 2014

ஜீவா - சுசீந்திரன் இயக்கத்தில் ஆர்யா தயாரிக்க, விஷால் - விஷ்ணு விஷால் பேட்டி

  • ஜீவா படத்தில் விஷ்ணு மற்றும் ஸ்ரீதிவ்யா
    ஜீவா படத்தில் விஷ்ணு மற்றும் ஸ்ரீதிவ்யா
  • ஜீவா படத்தில் விஷ்ணு மற்றும் ஸ்ரீதிவ்யா
    ஜீவா படத்தில் விஷ்ணு மற்றும் ஸ்ரீதிவ்யா
‘‘இயல்பாகவே நான் நடித்த படங்களில் எல்லாம் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும். அதில் கதையைச் சுமந்து செல்லும் பலருடன் நானும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பேன். ‘ஜீவா’ படத்தில்தான் முழு கதையையும் தாங்கிப் போகும் பாத்திரத்தில் நடிக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் இந்தப் படத்தில் தான் ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறேன். சின்னச்சின்ன அடியாக எடுத்து வைத்த எனக்கு சரியான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிற படமாக ‘ஜீவா’அமையும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார், விஷ்ணு விஷால். 


சுசீந்திரன் இயக்கத்தில் ஆர்யா தயாரிக்க, விஷால் வெளியிட என்று ‘ஜீவா’ படம் ஒரு நட்புக் கூட்டணியில் உருவாகி வருகிறது. விஷாலின் அலுவலகத்தில் அமர்ந்து படத்தின் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த விஷ்ணு விஷாலை சந்தித்தோம்.. 



‘ஜீவா’ படத்தின் புகைப்படங்களைப் பார்த்தால் சிசிஎல் கிரிக்கெட் குழுவினர் இணைந்து ஒரு கிரிக்கெட் படம் எடுத்திருப்பது போல தெரிகிறதே? 


 
இப்படி ஒரு நல்ல டீமை இணைத்து வைத்தது சினிமா நட்சத்திரங்களின் சிசிஎல்தான். ‘ஜீவா’ படத்தை திட்டமிடுவதற்கு முன்பு ‘வீர தீர சூரன்’ கதையைத்தான் சுசீந்திரன் படமாக்க முடிவெடுத்திருந்தார். அந்த நேரம் அவர் விஷாலோடு சேர்ந்து ‘பாண்டிய நாடு’ படத்தில் கமிட் ஆகியிருந்தார். மீண்டும் நாங்க இருவரும் சேரலாம் என்றபோது, ‘‘நாம ஏன் ‘வெண்ணிலா கபடி குழு’ மாதிரி ஒரு படம் செய்யக்கூடாது’’ என்கிற யோசனையைச் சொன்னார். இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு விளையாட்டுப் படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் கிரிக்கெட்டை கையில் எடுப்போம் என்பது சுசீந்திரன் ஐடியாவாக இருந்தது. நான் இயல்பாகவே ஒரு கிரிக்கெட் வீரன். அதனால் கிரிக்கெட்டைச் சார்ந்த கதை என்றதும் இதில் பணியாற்றும் வேகம் அதிகரித்தது. அந்த உணர்வு படத்திலும் பிரதிபலிக்கும். 


‘முண்டாசுப்பட்டி 2’ என்ன ஆச்சு? 

 
அதைப்பற்றி இன்னும் பேச ஆரம்பிக்க வில்லை. வந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம். 


நீங்கள் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகராமே? 

 
எனக்கு பெரிதாக நடிக்கத் தெரியாது. இயக்குநர் சொல்வதைக் கேட்டு அதை கொஞ்சமும் சொதப்பாமல் நடிக்க முயற்சிக்கி றேன். ‘நீர்ப்பறவை’ படத்தில் கூட மதுபோதை யில் சுற்றித்திரியும் காட்சிகளில் நன்றாக நடித்திருப்பதாக சொல்வார்கள். அதெல்லாம் இயக்குநர் சொல்படி கேட்டு நடித்ததுதான். ஒரு படத்தில் 6 மாதங்கள் வேலை செய்கிறோம். அந்த நேரத்தில் அப்படத்தின் இயக்குநர்களை குருநாதர்களைப் போல் மதிக்கிறேன். அதனால் இயக்குநர்கள் என்னை விரும்புவதாக நினைக்கிறேன். 


உங்கள் மனைவியின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக முன்பு கூறியிருந்தீர்களே?

 
அவங்க இரண்டு கதைகளைத் தயார் செய்தார்கள். முதல் படத்தின் கதையை அவர் எழுதி முடிக்கும் சமயம் அதே சாயலில் ஒரு படம் வந்தது. அடுத்து எனக்கு கிரிக்கெட் பிடிக்குமே என்று அதை மையமாக வைத்து கதையை தயார் செய்தார். தெரிந்தோ, தெரியாமலோ இப்போது சுசீந்திரனுடன் இணைந்து கிரிக்கெட் படமும் செய்கிறோம். திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஓடிவிட்டது. கொஞ்சம் நாட்கள் சினிமா வேலைகளை ஓரம்கட்டி விட்டு குடும்ப பொறுப்புகளில் இறங்கலாம் என்று பிரேக் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக அவங்க இயக்கத்தில் நான் படம் நடிப்பேன். 



உங்களுடன் சேர்ந்து அறிமுகமான சூரி இன்று படு பிஸியாகிவிட்டாரே? 

 
அவர் இன்று படங்களில் செய்யும் எல்லா பாவனைகளும் நடிப்பதற்கு முன்பே நான் அருகில் இருந்து பார்த்து ரசித்தவன். அவர் யதார்த்தமான மனிதர். கதாபாத்திரம் என்ன கேட்கிறதோ அதற்காக மெனக்கெடுவார். இந்தப் படத்துக்காக 20 நாட்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்துள்ளார். பரோட்டா காமெடி மாதிரி இந்தப் படத்தின் இரண்டாவது பாதியில் செம காமெடி ட்ரீட் வைத்திருக்கிறார். 


உங்களையும், விக்ராந்தையும் வைத்து விஷால் ஒரு படம் தயாரிக்கப் போகிறாராமே? 


 
அதற்கு நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வருகிறோம். சரியான கதை கிடைத்ததும் வேலையைத் தொடங்கிவிடுவோம். 



ஆர்யா, விஷால் என்று உங்க நண்பர்கள் எல்லோரும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். உங்களுக்கு படம் தயாரிக்கும் எண்ணம் இல்லையா? 

 
அதுபற்றி இன்னும் யோசிக்கவில்லை. அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கவும் எனக்கு இப்போது மனமில்லை. முதலில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அக்கறை செலுத்தலாம் என்று இருக்கிறேன். 


உங்கள் அடுத்த படங்கள் என்ன? 


 
சீனுராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படம் ரெடியாகிவிட்டது. இதில் விஜய்சேதுபதியும் நானும் நடிக்கிறோம். விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்த அனுபவம் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நலன் குமாரசாமியிடம் உதவியாளராக இருந்த ரவி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். நல்ல கதைகளில் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 



thanx - the hindu

Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

http://caribbeanboys.weebly.com/uploads/8/2/4/5/8245516/207920543.jpg?497

தியேட்டர்ல இருக்கற 1268 பேர்ல ஹீரோ ஜீவா அறிமுகத்தப்ப 300 பேர் கைதட்ட, ஹீரோயின் தப்ஸி அறிமுகத்தின்போது 500 பேர் மனம் மயங்க, சந்தானம் அறிமுகம் ஆகும்போது 1000 பேர் ஆர்ப்பரிக்க  அப்போதே தெரிந்து போனது இது ஜீவாவுக்கான ஹீரோயிச படம் இல்லை என..!!!!!!

சமீபத்தில் ரிலீசான உதயன் பத்தின் கதை தான்.. ஹீரோவின் அண்ணன் மும்பைல தாதா ..அவரை போலீஸ்ல சரண்டர் ஆக வெச்சு திருத்தி தன் ஊருக்கே கூட்டிடு வர்ற வேலை ஹீரோவுக்கு...

அண்ணன்க்கு ஒரு பழைய காதல் தோல்வி இருக்குன்னு வீக் பாயிண்ட்டை பிடிச்சு,வாலி அஜித் இல்லாத ஜோதிகா கேரக்டரை சிம்ரன் கிட்டே சொல்ற மாதிரி ஜீவா இல்லாத தப்ஸி கேரக்டரை தன் காதலியா சொல்லி படம் பூரா ரீல் ஓட்டி உஷ் அப்பா சாமி.. ரீல் அந்து போச்சு!!!!!!!!!!

ஆறு பட சூர்யா மாதிரி விறைப்பா வரும் நந்தா ஒரேமாதிரி நடித்திருந்தாலும் அவரது 3 நிமிட ஃபிளாஸ்பேக் காதல் ஒரு அழகிய சிறு கதை.. ஒவ்வொரு முரட்டு மனிதனுக்குள்ளும் ஒரு காதல் ஒளிந்திருக்கும் என்ற உண்மையை சொல்வது அப்ளாஸ் வாங்குகிறது..

ஜீவாவுக்கு அண்டர்ப்ளே ஆக்டிங்கா? அல்லது யாரோ எப்படியோ போங்கப்பா.. சந்தானம், தப்ஸி, நந்தா என 3 பேரை தாண்டி எனக்கு 4 வது இடம் தானே? என்ற விரக்தியில் கிண்டல்ப்ளே ஆக்டிங்க் பண்றாரா? தெரில...

தப்ஸி என்னதான் பாப்பா ஃபிகரா இருந்தாலும் கலரா இருந்தாலும் பாப்பா கிட்டே ஏதோ மிஸ்ஸீங்க்.. பாடல் காட்சிகளில் தேறி விடுகிறார். நடிப்புக்கும் இவருக்கும் ரொம்ப தூரம் போல. யார் நடிப்பை எதிர்பார்த்தா? என்று இயக்குநர் நினைத்திருப்பார் போல!!!

படத்தில் சிக்ஸர் அடிப்பது சந்தானம் தான். கேப் கிடைக்கும் இடம் எல்லாம் கிடாதான்.....

http://www.filmics.com/tamil/images/stories/news/May/26-5-11/Vandhan-Vendran.png
சந்தானம் காமெடியில் களை கட்டிய இடங்கள் + பட்டுக்கோட்டை பிரபாகர்  பளிச் வசனங்கள்

1. சார்... எழுதி வெச்சுக்குங்க.. நம்ம டீம் தான் ஜெயிக்கும்.. 

ஏதோ உங்களை வெச்சுத்தான் மெட்ராஸ் சுத்தி பார்க்கனும்..

2.  உன் தம்பியோட வீக்னெஸை ஏன் என் கிட்டே சொல்லி என்னை ஜெயிக்க வைக்கறே? இதுல உனக்கென்ன லாபம்?

ம்... உன் தங்கச்சியை எனக்கு கட்டி குடுப்பேன்னுதான்.. போடாங்க்க்க்...

3.  சார்... நீங்க தமிழா?

சந்தானம் -  கஷ்டப்பட்டு ஹிந்தில பேசுனேன். எல்லாம் வேஸ்ட்.. எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?

கஷ்டப்பட்டு ஹிந்தில பேசுனீங்களே? அதை வெச்சுத்தான்... 

4. சந்தானம் -  டிரெயிலரைப்பார்த்து படம் நல்லாருக்கும்ன்னு முடிவு பண்ணாதீங்கடா!!

5. மிஸ்டர்  டான்


சந்தானம் -  சொன்னா நம்புங்கடா! நான் டான் இல்ல. வெறும் டண்டணக்கா டாண் தான்.... 

6. ஏண்ணே.. தமிழன் டூ தமிழன் நம்ப மாட்டீங்களா?

சந்தானம் - ஆமா.. இவரு பெரிய வ உ சி நான் ம பொ சி .. டேய் நாயே காசைகொடுத்துட்டு இடத்தை காலி செய்டா!!!

7. சந்தானம் - என்னை இப்போ சும்மாதானே அடிச்சீங்க? அவனையும் அப்படிஅடிச்சதா நினைச்சுக்கக்குடாதா? எதுக்கு 3 லட்சம் பணம் கேட்கறீங்க?

8. சந்தானம் -  அண்ணே, இவரு நம்ம ஃபிரண்டு.. சென்னைல கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இவர் பேரு வைக்கலைன்னு கோவிச்சுகிட்டு வந்துட்டாரு.

9. சந்தானம் - கசாப்புக்காரன் வண்டில காய்கறி இறங்கற மாதிரி நம்ம டாண் ரமணா வண்டில இவன் வந்து இறங்கறானே?

10. சார். நாம 2 நிமிஷம் யூஸ் பண்ற டூத்பேஸ்ட் கலர் சேஞ்ச் பண்றோம்.. டேஸ்ட் சேஞ்ச் பண்றோம்.. அப்படி இருக்கறப்ப பல வருஷம் இருக்கப்போற வீடு பிளானிங்க்ல சேஞ்ச் பண்றதுல என்ன தப்பு?


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=5241&option=com_joomgallery&Itemid=76

11. ஹாய் மேடம்.. நீங்க போட்டிருக்கற இந்த டிரஸ் உங்களுக்கு செம மேட்சிங்க். 
என்னால உனக்கு என்ன காரியம் ஆகனும்?

12. விதி இருக்கற எல்லா இடத்துலயும் விதி விலக்குகளும் இருக்கும்.. 

13. ஏன்? ஆம்பிஷன் உள்ள ஆளுங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாதா?

14. ஹலோ.. ஃபிரண்ட். என் ஆளோட ஜட்டி அவ பேண்டை தாண்டி வெளில தெரியுது.. ரயில்ல எல்லாரும் பார்க்கறாங்க. இப்போ நான் என்ன பண்ண?

டேய். இது மிட் நைட்டுடா.. என் தூக்கத்தை கெடுத்துட்டு கேக்கற டவுட்டாடா? இது?நான் ஒண்ணு சொல்றேன். செய்வியா?

கண்டிப்பா.. சொல்..

ஃபோனை வெச்சிடு.. 

15.  உயிரைக்காப்பாத்தற மருந்துக்குக்கூட எக்ஸ்ப்யரி டேட் இருக்கு.. ஆனா நமக்கு?

16. மிஸ்.. உங்க கிட்டே சொல்லனும்னும் இருக்கு.. சொல்லக்கூடாதுன்னும் இருக்கு./...

நான் அழகா இருக்கேன்.. அதானே?

ச்சே.. ச்சே.. அந்தப்பொய் எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. 

17. உங்களுக்கு ஏன் லவ் பிடிக்காது?

அது அர்த்தம் இல்லாதது. பஸ்ஸூக்காக 2 நிமிஷம் வெயிட் பண்ணாதவன் எல்லாம் கிஸ்ஸுக்காக 8 மணிநேரம் கூட வெயிட் பண்றான்..

18. என்னைப்பொறுத்தவரை லவ் என்பது காலை கட்டிக்கிட்டு 500 கி மீ நடக்கற மாதிரி. 

19. இந்த உலகத்துல அண்ணன், தம்பி, அம்மா, அப்பா செத்தா அழுவாங்க. யாரும் தற்கொலை செஞ்சுக்க மாட்டாங்க. ஆனா காதலி இறந்தா தற்கொலை செஞ்சுக்கறாங்களே? அது ஏன்? அதான் லவ்.... சாமி, பேய் , காதல் மூணும் 1 தான், உணராதவரை அது இல்லை..

20.  ஒண்ணு சொல்றேன் கோவிச்சுக்க மாட்டீங்களே.. அரை மணி நேரமா சரக்கு அடிக்கறேன். சைடு டிஸ் இல்ல.. ஊறுகாய் வாங்கிக்கவா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfPFf-JcFN9cKz61vX3eD5MpF7Yt2mW6olpJw1z_L7jVZ3lgEXUOhSp4AHy7xsl6ROzGtoA2XUhmlO-q5y_FmPHOLTXqk0wV5sox68Tj9-HjmSpnF8EhMUYu7ma2BG4piohmMZdFqZEk/s1600/tapsi+%25284%2529.jpg

21. நாயை கண்டு ஏன் பயப்படறீங்க? நீங்க ஒரு பாக்ஸர் ஆச்சே?

அது உங்களுக்கு தெரியும். அந்த நாய்க்கு தெரியுமா? ( குமுதம் ஜோக் 1998 - வி சாரதி டேச்சு)

22. அவ சிரிச்சா அழகா இருப்பா.. சிரிக்கலைன்னா இனும் அழகா இருப்பா!!

23. இப்போ 2 பேரு எங்கே இருக்கீங்கடா?

நான் கீழே படுத்திருக்கேன்.. அவ மேலே படுத்திருக்கா. 

மேரேஜ்க்கு முன்னே இதெல்லாம் தப்புடா.

நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல , அவ ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர்ல. ( எஸ் வி சேகரின் தத்துப்பிள்ளை நாடகத்திலிருந்து சுடப்பட்ட காமெடி )

24. டேய்.. அவர் கிட்டே சொல்லிட்டு போலாமா?

டேய் நாயே. நாம என்ன இப்போ சினிமாக்கா போறோம்.. பர்மிஷன் வாங்கிட்டு போக.. உயிரை காப்பாத்த ஓடறோம். 

25. என்ன வெடிக்கற சப்தம் கேக்குது? தீபாவளி அதுக்குள்ள வந்துடுச்சா?

26. என் பொண்ணை லவ் பண்றியா மேன்?

சாரி.. சார்.. உங்க பொண்ணுன்னு தெரியாது. நான் லவ் பண்ற பொண்ணு  உங்களுக்குப்பிறந்ததுன்னு இப்போ தான் தெரியும்.. 

27. லேடி - இந்த சி டியை உங்க கிட்டே குடுக்கச்சொன்னார். 

சாரி மேடம்.. இது நீங்க2 பேரும் நடிச்ச அந்த மாதிரி சி டியா? நான் பார்க்கறதில்லையே?

28.காதலுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு நானா செஞ்சுக்கிட்ட கல்யாணம் என்னை தண்டிச்சிடுச்சு..

29.  ரயில் கிளம்புது.. நான் கிளம்பட்டா/?

இரு, நான் முதல்ல கிளம்பிடறேன்.. அதுக்குப்பிறகு நீ போ.... நீ போறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது

30. சரி..நான் ஒண்ணு கேக்கறேன்.. ரமணா ஜெயிலுக்கு போய்ட்டா நீ என்ன செய்வே?

அரிசில ஒரு ஆழாக்கு கம்மியா உலைல போடுவேன்..

http://andhramirchi.files.wordpress.com/2011/02/tapasee3.jpg?w=249

31. டேய்.. எப்படிடா ரமணா மாதிரியே மிமிக்ரி பண்ண முடியுது? உன்னால?

அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.. மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ் வந்துடும்..

மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ்னா.. அப்போ மூக்கை சொறிஞ்ச மாதிரி பேசுனா தமனா வாய்ஸ் வருமா? ( செம கிளாப்ஸ் இந்த சீன்ல)

32. ஒரு கோடு வோர்டு.. அந்த ஆல் கிட்டே போய் வெள்ளீக்கிழமை காலைல மழை வரும்னு சொல்லி..

ஓ.. அவர் என்ன செய்வாரு?

 வியாழக்கிழமை மாலைலயே துவைச்சு காய வெச்ச துணியை எல்லாம் எடுத்து உள்ளே வெச்சிடுவாரு..

33. எதுக்கு ரிவால்வரை கிளவுஸ் போடாம எடுத்தே?

டேய், நான் என்ன பைல்ஸ்  ஆபரேஷனாடா பண்ணப்போறேன்?

34. கமிஷ்னர் டிரான்ஸ்ஃபர் ஆனா நீ தானே சிட்டி கமிஷ்னர்? அப்புறம் ஏன் அது வரை வெயிட் பண்ணனும்? போட்டுத்தள்ளிட்டா?


35. லவ்வுல தோத்தவன் இன்னொருத்தன்  லவ் தோத்துப்போக விட மாட்டான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI6mhjydGf-e52Tekyc9e5OX0Bm7I0G-sXYmtRn2JsuozNSZ_Eye-l_6a6dv1xV8AenBsBnCN6I_EBUSuuW-kf-AqRc303msRdQEa9vZDZX_hc5hZXAMNKwQAmdkOz7caoTeIhiX68eM1o/s1600/tapsi-hot-images0217.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. அஞ்சனா அஞ்சனா , காஞ்சனா மாலா ( கேரளா), இதயத்தில் கம்பிதனை நுழைக்காதே 3 பாடல்களை படமாக்கிய விதமும் , கவிஞர்களிடம் வரிகளை வார்த்தெடுத்த அழகும்....

2.  க்ளைமாக்ஸ்சில் ஜீவா சொல்லும் தப்ஸி கதை ட்விஸ்ட்..

3. இந்தப்படத்தில் சந்தானம், தப்ஸி கால்ஷீட் வாங்கியது.

இயக்குநரிடம் சில கேள்விகள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYMQgx5r8LeYS8wieiVMtmCoO3s9ZVUGkQNadfI9D3FR5RHlcp5gQ8ND9YJxCv6QE1wlNIcVBW2PqaP5wX8vzMN-h9LpgRMtx7q_bdFC1EC3siK_Q6kN1tX7STgGQe9C0_Flwhe_egvT0/s1600/tapsi+%2528110%2529.jpg

1.  தன்னிடம் ஒரே ஃபோட்டோ தான் அப்பாவினுடையது இருப்பதாக சின்னப்பையன் சொல்றான்... ஏன்? அம்மாவின் கல்யாண ஆல்பத்தில் அப்பா இருப்பாரே?

2. நந்தா இடது கைப்பழக்கம் இருப்பவராக காட்டப்படுகிறது.. ஆனால் சிறு வயதில் அப்படி காட்டப்படவில்லை..

3. நந்தா ஷூட் பண்றப்ப ரிவால்வரை அவர் இடுப்பு மட்டத்தில் தான் சுடறார்.. குண்டும் அதே மட்டத்தில் தான் போகுது.. ஆனா குண்டு நின்று கொண்டிருக்கும் எதிராளியின் நெற்றியில் படுதே எப்படி?

4. ஜீவா நந்தாவை மிரட்ட தன் வலது கையில் ஒரு வெட்டு, இடது கையில் 2 இடங்களில் வெட்டு போட்டுக்கறார் கத்தில .... ரோட்ல அவரை விட்டுட்டு நந்தா போய் அரை மணி நேரம் கழிச்சு சந்தானம் & குரூப் ஓடி வர்றப்ப கொஞ்சம் கூட ரத்தம் லீக் ஆகாம அப்படியே இருக்கே?ஏன்? அந்த சீன்ல சந்தானம் ஏன் ஆட்டோல வராம அரை கி மீ ஓடியே வர்றார்?

5. நந்தா இரும்புக்கம்பியால் ஆட்கள் மேல் அடிக்கும்போது ஏன் இரும்புக்கேடயத்தில் படுவது போல் நங்க் நங்க் என்ற பின்னணி சத்தம்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtBAE4ZwezRMpy4TM8ahqjkjomlHtiRtJoKCoHDpKqCzKyZ_6xBod3J3OgPsFHv2zJKv5AfcT3PubgDxuORr7kv1UeKsqzjwkUF0-INo00ylSvhVJcp-d_9Uda1taU6NXqecVJvhZXWYg/s1600/tapsee_pannu+movie+hot+wallpapers.jpg
படம் ஏ பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும்குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி மார்க் - 35

சி.பி கமெண்ட் - வந்தான் வென்றான் - நொந்தான் சென்றான் என்று சொல்ல வழி இல்லாமல் சந்தானம் காப்பாற்றுகிறார்

ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்...


டிஸ்கி - எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு -

Friday, August 12, 2011

ரவுத்திரம் - டெம்ப்போ இன் ஃபைட்டிங்க் சீன்ஸ் ,அம்போ இன் ஹிட்டிங் சான்ஸ் - சினிமா விமர்சனம்

http://tinselmovies.com/images/rowthiram2.jpg
சத்யா கமல் போல் ஒரு கேரக்டர் பண்ண வேண்டும் என்ற ஆதங்கம் ஜீவாவுக்கு வந்ததில் தப்பில்லை.ஆனால் அதற்கு ஸ்கிரிப்ட் பக்காவாக அமைந்தால் மட்டும் பத்தாது, பாடி லேங்குவேஜில் சூர்யாவின் அர்ப்பணிப்பு, பாடி மெயிண்டெனென்ஸில் விக்ரமின் உழைப்பு , பல வருட அனுபவம் எல்லாம் வேண்டும்.. அதை எல்லாம் விட்டு விட்டு இந்த பிஞ்சு முகத்தை வைத்துக்கொண்டு அவர் புரூஸ்லீ ரேஞ்சுக்கு எதிரியிடம் அடியே வாங்காமல் பாட்ஷா ரஜினி மாதிரி ஷோ காட்டினால் எப்படி?

படத்தில் முதல் ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு .. பட்டாசைக்கிளப்புது ஃபைட்டுக்கான லீடும் ,அதை படமாக்கிய விதமும், ஸ்லோமோஷன் சண்டைக்காட்சிகளும்.. 

படத்தோட கதை என்ன? அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்கும் கோப க்கார இளைஞன் தான் ஹீரோ. ( அநியாயம் எங்கே ஓடுனாலும் தட்டிக்கேப்பாரா?)அப்படி போடும் சண்டையில் எதேச்சையாக ரவுடியும் ,வில்லனும் ஆகிய கவுரிமேல்  அடி பட்டு விடுகிறது.. ஆனால் கவுரி வேறு ஒரு கேஸ்க்காக ஜெயிலில் இருக்கும் சூழலில் ஸ்ரேயாவுடன் லவ்விக்கொண்டு இருக்கிறார். வில்லன் வெளியே வந்ததும் வேட்டை ஆரம்பம்.. 

ஹீரோயின்க்கும் , படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எவனும் கேட்கக்கூடாது என்பதற்காக அவர் அசிஸ்டெண்ட் கமிஷனரின் மகள் என்று ஆரம்பத்திலேயே இயக்குநர் நம் வாயை அடைத்து விடுகிறார்..

ஜீவாவுக்கு தங்கை கேரக்டர், ஸ்ரேயாவுக்கு தோழி கேரக்டர் என ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாய் பல அழகு ஃபிகர்கள்.. அனுபவி ராஜா அனுபவி.. 

ஜீவாவின் தங்கைக்கு மாப்ளையாக வரும் சத்யனின் காமெடி உதார் நடிப்பு படத்தை ஜாலி மூடில் கொண்டு போக ரொம்பவே யூஸிங்க்... அதே போல் வழக்கமாக ஹீரோவின் ரவுடியிசம் கண்டு பயப்படும் ஹீரோயினாக  இல்லாமல் அவரைக்கண்டு ஆச்சரியம் கொள்ளும் ஹீரோயினாக ஸ்ரேயா வருவதும் , கொடுத்த சம்பளத்துக்கு பங்கம் வராமல் இயக்குநர் அவரை முழுதாக யூஸ் பண்ணியதும் ( படத்துல ) சபாஷ் போட வைக்கின்றன..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizOGRnTCa_lrRQ9LFphqL97JRu-bNnjDSMJg5gunAXGD3UrPTRQl3v4vFhA-3LGtZOMl9d6Jlv3vCBzweMbZHKKCZbr20YJuvi3h9wyZ4aeJlrUjgvAEz3mvPVyC8uzocSfzGqHX_pbWc/s1600/shriya1.jpg

ஆக்‌ஷன் படத்திலும் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  நீங்களும் தட்டி கேட்க மாட்டீங்க,கேட்கறவனையும் விட மாட்டீங்க.. 

2.  காபி ஷாப் கூப்பிட மாட்டீங்களா?

அட! அக்கவுண்ட்ல தருவாங்களா? அப்போ போலாம். 

3.  என்னடா காபி தர்றே? கட்டிங்க் மாதிரி இவ்வளவு கம்மியா?

4.  இது தான் உங்க ஊர்ல காபி ஷாப்பா?

ஆமா சொல்டா!

ஆமா.. ஹி ஹி 

5.  எதுக்கு என் செல்லை பிடுங்கறே? அதுல பேலன்ஸ் கிடையாது.. 

அது மாடலை பார்த்தாலே தெரியுது. 

6.   உன் கிட்டே ஃபோன் இருக்கா?

ஓ. என்னுது ஐ ஃபோன்.. காஸ்ட்லி, அதனால அதை வீட்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.. ஹி ஹி 

7. அப்பா பேரை உங்க பையனுக்கு வெச்சுட்டு அவனை அவரே , இவரே அப்டின்னு மரியாதையா கூபிடறதை இங்கே தாங்க பார்க்கறேன்.

8. ஒழுங்கா இருக்க முடியும்னா உன் பையனை இருக்க சொல்லு, இல்லைன்னா அவரை வீட்டை விட்டு கிளம்ப சொல்லு.. 

என்னடா?நம்மளை சொல்லிட்டு அவரு கிளம்பி போய்ட்டாரு?

9. உங்க பேரு அம்முவா? யார்.. உங்க அம்மா வெச்ச பேரா? 

தெரில.. யார் வெச்சாங்கன்னு.. அப்போ நான் சின்ன பொண்ணு..

10. அவனுங்க 4 பேரையும் பார்டா.. எக்ஸ்பேண்டபிள்ஸ் போஸ்டர் மாதிரியே ஃபிலிம் காட்டறதை.. அடங்குங்கடா... 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNbr4Ta9Z9zwLUXnnVBq0zsEqzJKsvAIZsTBebee44aYHQSWR8Sw6J9VcEDboDfkQqwJq_v1j5e-38iGB6eq7R0ZW7_WWRHIwsEeahLm96rvuB4PKWgorkeltKJTr-dpqtBoL1tjaH5zSj/s1600/1.jpg

11.  நீ இப்போ என்னைத்தானே பார்த்தே?

இல்லையே?

 கண் பொய் சொல்லாது.. சிவா.. 

12. வில்லனிடம் பஞ்ச் டயலாக் - இதுக்கு முன்னால உன்னை நான் பார்த்ததில்லை, இதுக்கு அப்புறமும் நான் உன்னை பார்க்கறதா இல்லை..

13.  அவருக்கு 28 வயசு, இது வரை 200 ஃபைட் போட்டிருப்பாரு.. உங்களுக்கு 50 வயசு இருக்கும் எத்தனை ஃபைட் போட்டிருப்பீங்க?

14.  ஒரு பொண்ணு பிறந்த வீட்ல எப்படி வேணாலும் இருக்கலாம்.ஆனா புகுந்த வீட்ல ....

அய்யய்யோ நீ எப்பம்மா இங்கே புகுந்தே?

15. சாரி.. நீ சொன்னபடி 4 மணிக்கு ரெஸ்டாரண்ட் வர முடியாது, 4.05க்கு வந்துடவா?

16. என்னை எப்படி மறந்தே?

உன்னை எப்போ நினைச்சேன்?

17. அவ கண் இருக்கே, ஊதாப்பூவை பிளாக் & ஒயிட்ல பார்த்த மாதிரி இருக்கும்.. 


18. வரமாட்டேன்னு சொன்னியே ,ஏன் வந்தே?

வரமாட்டேன்கறதை சொல்லிட்டுப்போலாம்னுதான் வந்தேன்

19. ஜூஸ் முடிஞ்சுது, இன்னும் ஏன் உறிஞ்சிட்டே இருகே? ஸ்ட்ராவை?வேணும்னா இன்னொண்னு சொல்லவா?

நோ.. நான் சிக்ஸ் பேக்கிற்கு ட்ரை பண்றேன். 

 உங்க ரேஞ்சுக்கு நீங்க எயிட் பேக்கிற்கே ட்ரை பண்ணலாம்.. 

20.  இவ்வளவு பில்டப் தர்றீங்களே? உங்க பேரென்ன?

ராமானுஜம்

சத்தியமா உங்க பேரை யூஸ் பண்ண மாட்டேன் போதுமா?

சரி , நான் ஷார்ட் டெம்பர் என்ற மேட்டரை உங்க தங்கைட்ட சொல்லிடாதீங்க. 




http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/04/shreya.jpg

21. அங்கிள், நான் பெரியவங்க கிட்டே எப்பவும் ரொம்ப ரெஸ்பெக்ட்டா நடந்துக்குவேன்.. 

அதான் பார்த்தேனே.. 

22.  அவ போய்ட்டாளா?

ம், அவளோட உங்க மானமும் போச்சு. உங்க சின்ன வயசுல எந்த டிரஸ்சும் போடாம பந்தாவா ஒரு போஸ் குடுத்துட்டு நிப்பீங்களே, அந்த ஃபோட்டோவை வாங்கிட்டு போறாரு..

23. சரி.. விடுங்கடா.. அழகான பொண்ணுங்கன்னா பசங்க ஃபாலோ பண்ணத்தான் செய்வானுங்க.. 

அதான்க்கா கேட்கறோம்.. உங்களை ஏன் ஃபாலோ பண்றானுங்க?

24.  அண்ணே, என் பையன் ஒருத்தனை அடிச்சுட்டான், நீங்க தான் காப்பாத்தனும்.. 

சரி , விடு.. இன்னைக்குத்தான்  கவுரி ( வில்லன்) ரிலீஸ் ஆகறாரு.. அவர் கிட்டே சொல்லிக்கலாம்.. 

என் பையன் அடிச்சதே அந்த கவுரி யைத்தான்.. 

25. நாங்க எல்லாம் பொத்திக்கிட்டு இருக்கோம்,உனக்கு மட்டும் ஏண்டா பொத்துக்கிட்டு வருது? 

அதுக்குப்பேருதான் ரவுத்திரம்

26.  என் தங்கை கல்யாணத்துக்கு கூப்பிடலை, ஓக்கே, அட்லீஸ்ட் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்லை?

27. அவனை தூரத்துல இருந்து ரசிச்சாலே போதும்  எனக்கு..

28.  அவன் மாறமாட்டான்மா.. 

எதுக்கு மாறனும்?

29. கவுரிக்கு எதிரா அரெஸ்ட் வாரண்ட் வாங்கியாச்சு, இப்பவே போய் அரெஸ்ட் பண்றேன்.. 

நாளை காலை வரை வெயிட் பண்ணுங்க சார்.. 


மிஸ்டர் அசிஸ்டெண்ட் கமிஷ்னர், உங்க மாப்பிள்ளை சிவாவை ரவுடி கவுரி கொன்னுடுவான்னு பயப்படறீங்களா?

இல்லை, ரவுடி கவுரியை மாப்பிள்ளை சிவா கொன்னுடுவான்னு பயப்படறேன்.. 

30. அரசியல்வாதிங்க நாம தான் ரவுடிகளை யூஸ் பண்ணனும், அவனுங்க நம்மை யூஸ் பண்ண நாம் விடக்கூடாது



http://www.kollynews.com/wp-content/uploads/2008/03/200803190153-1.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  இடைவேளை வரை படத்தோடு இணைந்து செல்லும் காமெடி

2. கையேந்திபவனில் ஸ்ரேயா தன் கையால் ஜீவாவுக்கு தோசை சுட்டுப்போடுவது.. 

3.  குடும்பத்தில் உள்ள அனைவர் பெயர்களிலும் மரக்கன்றுகள் வளர்க்கும் ஸ்ரேயா.. அதை பெருமையாக ஜீவாவிடம் காட்டுவது..

4.  அடியே என் நேசம் பாடல் காட்சியில் ஒளிப்பதிவு அழகை அள்ளியது.

5. ஓப்பனிங்க் ஃபைட் சீனும், தியேட்டர் பைக் ஸ்டேண்டில் நடக்கும் ஃபைட் சீனும் கலக்கல் ஸ்டண்ட் அமைப்பு. ( ஓப்பனிங்க் ஃபைட்டில் கூடவே ஸ்ரேயா குலுங்க குலுங்க ஓடி வருவது செம கிளாமர்)




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPttOOhIl25XV-52_f-PX7n6lIYozXN4T1E6txoEpYqrhLUiVNecZ9Wie7TJvSGUSQfPZvrAC1T5qzyRZcogzBHetG-lvReYE6PiWARIWWidPw_q5Ajrm5z7Y0ehwidKdUBY-QFfMNt5Od/s400/shriya-apr01.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.   ஜீவா தன் தங்கைக்கு மிட்நைட் 3 மணிக்கு ஃபோன் பண்றாரு, அடுத்த ரிங்க்லயே எடுக்கறாரே, அது எப்படி? ( புது மணத்தம்பதிகள்னு சால்ஜாப்பு சொல்ல வழி இல்லை, மாப்ளை தூங்கிட்டு இருக்காரு, பொண்ணு மட்டும் விழிச்சுட்டு இருக்கே?)

2.  ஜீவா பைக்ல பெட்ரோல் குண்டு போடறாங்க , 15 நிமிஷமா பைக் எரியுது, ஜீவா ஃபைட்டா போடறார், ஆனா பைக் பெட்ரோல் டேங்க் வெடிக்கவே இல்லை.. ஏன்? 

3.  ஜீவா வீட்டுக்கு அவரோட அப்பா வர்றப்போ  வீட்ல எதுவுமே இல்லை, பால் உட்பட.. ஆனா வீட்ல ஃபிரிட்ஜ் உட்பட எல்லா வசதியும் இருக்கு. அர்த்த ராத்திரில ஹீரோவை வெளில  கிளப்பி விட வேற ஐடியா கிடைக்கலையா?

4.  ஜீவா படம் பூரா 67 பேர்ட்ட ஃபைட் போடறார், எல்லாரையும் ஒரே அடில வீழ்த்திடறார், அவர் அடியே வாங்கலை. அவர் என்ன அர்னால்டு ஸ்வார்ஷெனேகரா?

5. ஜீவா அநியாயத்தை தட்டிக்கேட்கறதையே ஃபுல் டைம் ஜாப்பா வெச்சிருக்காரே? அவர் பூவாவுக்கு என்ன பண்றார்? ( ரயில்வே வேலை வந்ததையும் வேணாம்கறாரு)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgulps4JD0BC8w6WPA_bpEQshrETs_VI1AiGcSDkfZbHJBQQZhypCIi4zK_gqSebEYCTK_SbhQTWIbjIeYCR17NeQRrH7xRHcoC9LsqIH_qj1z5TuIGhvx-Dav8eNqwxJIFT0vpCK6FNlky/s1600/shriya-hot-10.jpg

இந்தப்படம் தெலுங்குல டப் பண்ணுனா நல்லா ஓடும்னு தோணுது.. தமிழ்ல சுமாராதான் போகும், ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடலாம்.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40 

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஃபைட்  & ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. 


http://1.bp.blogspot.com/-8prMmWGqhO4/TfWw5zTJT7I/AAAAAAAAF9U/KB7UOntHyNM/s1600/26.jpg

 ஈரோடு அபிராமி,அன்னபூரணி, ஸ்ரீசண்டிகா, ஸ்ரீநிவாசா என 4 தியேட்டர்ஸ்ல போட்டிருக்காங்க. நான் அபிராமில பார்த்தேன்..

Friday, April 22, 2011

கோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://picasamusic.com/musicimg/KO.jpg

பாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை  வைத்து கே வி ஆனந்த்  களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள்...ஆட்சி மாற்றம் வருகிறது.. பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் கதை.. 
கேட்கும்போது மறுபடியும் ஒரு அரசியல் படமா ? என யாரும் சலித்துக்கொள்ள தேவை இல்லை.. நீட் ஆக்‌ஷன் கம்ர்ஷியல் தான்.

படத்தில் முதலில்  நம் மனதைக்கவர்வது பியா தான்.துறு துறுப்பான நடிப்பு,இயல்பான முக பாவனைகள்,செம்பருத்திப்பூ மலர்ந்த மாதிரி உதட்டில் தக்க வைத்த சிரிப்பு என சர்வசாதாரணமாக நம் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் செம அழகு..
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/Piya-Bajpai.jpg

 இரண்டாவது படத்தின் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இயற்கை அழகை அள்ளுகிறது.. ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் லாவகமான கேமரா கோணங்கள்,பல இடங்களில் வெல்டன் சொல்ல வைக்கிறது.

3 வது கதைக்களன் . பத்திரிக்கை ஆஃபீஸ்-ல் நடப்பதை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஆர்ட் டைரக்‌ஷன்.ஆரம்பக்காட்சிகளில் குப்பத்தில் குடிசைகளில் கேமரா புகுந்து புறப்பட்டு படம் பிடிக்கும்போது ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் எவ்வளவு முக்கியம் என நிரூபிக்கிறது..

அடுத்தது ஜீவா.. பிரஸ் ரிப்போர்ட்டரை கண் முண் நிறுத்துகிறார்.. தன்னை சுற்றி எது நடந்தாலும் அவர் உடனே கேமராவை கையில் எடுப்பது அருமை..ஒரு பத்திரிக்கையாளனுக்கு கேமரா மூன்றாவது கை மாதிரி என்ற லைனை கேட்ச் பண்ணி , கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்.

அடுத்து அஜ்மல்.. இவரது அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஆனால் கட்சியின் இளைஞர் படைத்தலைவர் என்ற அளவில் காட்டத்தான் அவர் ஒர்த். அதை மீறி ஒரு கட்சிக்கே தலைவராக காட்டுவதும் சி எம்மாக காட்டுவதும் குருவி தலையில் பனங்காய் கதை தான்.
http://narumugai.com/wp-content/uploads/2010/11/ko-karthika.jpg
ஹீரோயின் கார்த்திகா.. ராதாவின் மகள்.ஆள் நல்ல உயரம் தான்.. ஆனால் இவர் தமிழ் சினி ஃபீல்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவரது புருவங்கள் மகா மைனஸ்.. செயற்கையாக வரையப்பட்ட வளைந்த வில் போன்ற புருவங்கள்  பிளஸ் என நினைத்து விட்டார்கள் போல.. அது அவரது முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் முகம் ஒரு ட்ரை ( DRY SKIN)ஸ்கின் என்பதால் மேக்கப் போடும்போது பக்கா செயற்கை காட்டுகிறது.. பாப்பாவுக்கு நடிப்பும் வர லேது..  ஸாரி டூ சே திஸ்... 

படத்தில் சுவராஸ்யமான வசனங்கள்

 1.  ரேஷன் கார்டுல என்ன விசேஷம்?

நாங்க ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் சாராயம் தருவோம்.

2.  மிஸ்டர் டாக்டர் பிரகாஷ்.. நீங்க ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் 10 பேஷண்ட்டை மொத்தமா ஒரே சமயத்துல போட்டுத்தள்ளுனது எப்படி?ங்கறதை விளக்குவீங்களா?

3. தீ விபத்து நடந்தப்ப  எப்படி தப்பிச்சீங்க?

என் கிட்டே  4 வாட்டர் பாக்கெட் இருந்தது.. அதை என் மேல பீய்ச்சி அடிச்சுக்கிட்டேன்.

4. ஜீவா - அர்னாட்ஷா(!!) என்ன சொல்லி இருக்கார்னா நல்ல ஃபிகரா ,டாப்பா இருக்கற பொண்ணுங்களுக்கு டாப் சரியா இருக்காதாம் .. ( மூளை....)

5. பியா - நான் அந்தப்பொண்ணு கிட்டே பேச்சு குடுத்தேன்.. ஒரே நைட்ல ரூ 30,000 சம்பாதிக்கறாளாம்.. சில சமயம் ரூ 50000 கூட கிடைக்குமாம்.சரி.. ஒரு ஆர்வத்துல கேட்கறேன்.. எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

 ஜீவா - ம் ம் ஒரு நூத்தம்பது ரூபா?

பியா - அடப்பாவி.. அடி வாங்கப்போற.. சரி இவளுக்கு... 

ஜீவா- ஆள் ஹைட் ஜாஸ்தி.. அதுக்காக சும்மா அனுப்பிட முடியுமா..ஏதோ போட்டு குடுத்து அனுப்பலாம்.

கார்த்தி.-- அடச்சே.. என்ன பேச்சு இதெல்லாம்..
http://1.bp.blogspot.com/_Uno_emuDLJc/TIsE3nNxllI/AAAAAAAAIC4/hEiuyjjVjN4/s1600/piaa_bajpai_hot_photo_shoot_pics_images_04.jpg
6.  வில்லன் - தமிழ்ப்பேப்பர்ல தாண்டி வேலை செய்யறீங்க? எதுக்கு இங்கிலீஷ்ல பேசறீங்க?

7. நான் யாருன்னு உனக்குத்தெர்யுமா?

அல்லக்கை

என்ன சொன்னே?

 சாரி,.. அண்ணனோட கை.. 

8.  ஜீவா - ஏய்.. அதெல்லாம் போகட்டும்.. நீ கடிச்சியே ஒருத்தனை.. அல்சேஷன் நாய் பிச்சை வாங்கனும்.. 

பியா - !!!!!!!!!!!!!!!!

9. பிரஸ்னா பாசிட்டிவ் மேட்டர்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.. நெகட்டிவ் மேட்டர் தான் எடுபடும்.. ஒரு கள்ளக்காதல், ஒரு கொலை,இப்படித்தான் நியூஸ் எடுக்கனும்.. 


10. சார்.. பிரஸ்னா கேவலமா நினைக்காதீங்க.. பத்திரிக்கைக்காரங்களால தான் ஆட்சியே மாறுது.. ( ஆமா.. கருத்துக்கணிப்புன்னு எதையாவது போட்டு மக்களை குழப்பறதே இவங்க தானே?)

11.  பியா - தூங்காம கண்ணை மூடிக்கிட்டே கனவு காண்பதும் ஒரு சுகம் தான்.. 

12. நான் ஏன் அவனை லவ் பண்றேன்னா பொண்ணுங்க தானா வந்து பேசுனா பசங்க அடுத்த நிமிஷமே மேல கை போட நினைப்பாங்க.. ஆனா அவன் அப்படி இல்லை...அவன் ஒரு ஜெம்..  ( இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சிருக்கலாம்.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே பொண்ணு.. )

13. டேய்.. எதுக்குடா கொதிக்கறீங்க? அரிசி மூட்டை இருந்தா அங்கே நாலஞ்சு எலிங்க இருக்கத்தான் செய்யும்.. ஆட்சின்னு ஒண்ணு இருந்தா அங்கே ஊழல் இருக்கத்தான் செய்யும்.. ( நாலஞ்சுன்னா ஓக்கே ஒண்ணே முக்கால் லட்சம் கோடின்னா நாட் ஓக்கே)
14. நிருபர் - சி எம் சார்.. உங்களுக்கும், இந்த கொள்கைப்பரப்புச்செயலாளர்க்கும் ஏதோ கனெக்‌ஷன்னு பேசிக்கறாங்களே?

பிரகாஷ்ராஜ் - அவ எம் பொண்ணு மாதிரி.. 

நிருபர் - அப்போ அவங்கம்மாவுக்கும் உங்களுக்கும் கனெக்‌ஷன்னு நியூஸ் போட்டுக்கலாமா/ சார்?   ( எம் ஜி ஆர் - ஜெ நேரடி அட்டாக் )

15. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்கு எதிரா நியூஸ் போட எவ்வளவு வாங்குனீங்க?

சார்.. நீங்க தான் சொன்னீங்க.. எங்க  நல்லாட்சில எதிர்க்கட்சியே கிடையாதுன்னு.. அப்புறம் எப்படி?

16.  டியர்.. உன் மன்சுல நான் இல்லைன்னா ஏன் உன் கண்ணு கலங்குது?

17. பியா - அடேய்.. நீ என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.. ஆனா போற வர்றவளை எல்லாம் லவ் பண்றியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல..  ( ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் )




18. இந்த உலகத்துல பழமையான தொழில் ரெண்டே ரெண்டு தான்.. 

1. அரசியல் 2. விபச்சாரம்,.

ஆனா இப்போ அரசியலே விபச்சாரமா போச்சு.. 

19 தம்பிங்களா.. அரசியல்னா சும்மா இல்ல.. சுறா, திமிங்கலம் எல்லாம் பசியோட உலாவற இடம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. இல்லைன்னா ஆளைப்போட்டுத்தள்ளிடும்.. ( சரி விடுங்க,. தெரியாம சுறா பார்த்துட்டோம்.. அதையே சொல்லிக்காண்பிச்சுட்டு)


20. நம் தலைவர் ஒரு பாயும் புலி.. நடமாடும் சிங்கம்.. அதனால் தான் நடிகை ஷமீதா ஸ்ரீயை தன் கூடவே வைத்திருக்கிறார்.. ( இந்த இடத்துல நமீதாவை அட்டாக்)

 21. ஷமீதா - ஹாய் மச்சான்ஸ்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு ரொம்பப்பெரிய..... மனசுன்னு.. ( நல்ல வேளை.. )

 22 - சி எம் - என்னடா நான் பேசறப்ப கூட்டமே இல்லை..?

தலைவரே .. ஷமீதா போனதும் கூட்டமும் போயிடுச்சு.. நீங்க அவங்க பேசறதுக்கு முன்னாமே பேசி இருக்கனும்..

 அட.. வெளக்கெண்ணெய்.. அதை நீ முதல்லியே சொல்லி இருக்கனும். 

23  இந்தகாலத்துல இளைஞர்கள் எல்லாம் ஐ டி ல ஒர்க் பண்ணத்தான் விரும்பறாங்க.. ஃபாரீன்ல வேலை கிடைச்சா உடனே நாட்டை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாங்க.. 

. ஏன்.. உனக்கு விசா கிடைக்கலைங்கற கோபத்துல பேசறியா?
 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1234.jpg

 இயக்குநருக்கு பாராட்டு போகும் இடங்கள் (ALL CREDITS GO TO DIRECTER)
1. காலேஜ் ஃபிளாஸ்பேக் காட்சியில்  வரும் கனவில் தூங்கு  பாடல் காட்சியில் அஜ்மல், ஆடு இரண்டு பேரும் ஒரே கிளை இலையை ஆளுக்கு ஒரு முனையில் வைத்து தின்பது...
 
2. அதே பாடல் காட்சியில் காலேஜ் ஃபிகர்களாக வருபவர்கள் நிஜமான காலேஜ் ஃபிகர்ஸாக இருப்பது...

3.  கார்த்திகா தனிமையில் ரூமில் இருக்கும்போது சடார் என ஒரு உருவம் வருவதை சர்ப்பரைஸ் ஷாட்டாக எடுத்தது.. ( தியேட்டரில் பாதிப்பேர் வீல் என கத்தி விட்டார்கள்)

4.  ஒரு சேஸிங்க் சீனில் உயரமான பில்டிங்க்ல இருந்து ஜாக்கிசான் போல பைப்பில் சறுக்கிக்கொண்டே ஜீவா வரும் சீனை டூப் இல்லாமல் ,கட் ஷாட் இல்லாமல் லெங்க்த்தி ஷாட்டாக எடுத்தது..( வெல்டன் ஜீவா)

5. சூப்பர் ஹிட் சாங்கான என்னமோ ஏதோ பாட்டுக்கான லொக்கேஷன், பாடல் படமாக்கப்பட்ட விதம்,கண்ணியமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.( THE PICTURAISATION OF THE SONG IS SO LOVELY)

இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

 1.  படத்தின் ஆதார இடமான மேடையில் குண்டு வெடிக்கும் சீனை பிரம்மாண்டமாக எடுக்காமல் சொதப்பியது ஏன்? அதை லாங்க் ஷாட்டில் துக்ளியூண்டு காட்டி தப்பிச்ட்டீங்களே.. 

2. மொத்தப்படத்திலும் மனித நேயத்தை புகழ்ந்து விட்டு பாடல் காட்சியில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் ஷாட் எதற்கு?

3. என்னதான் ஒரு நிருபர்க்கு கடமை கண்ணாக இருந்தாலும் விபத்து நடந்தாலும் சரி.. கலவரம் நடந்தாலும் சரி.. ஜீவா  மக்களை காப்பாற்றாமல்
ஃபோட்டோ எடுத்துட்டு இருப்பது ஏன்?

4. படம் செம ஃபாஸ்ட்டா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு அந்த வெண்பனியோ பெண்மணீயோ மெலோடி பாட்டு? அதுவும் செகண்ட் ஆஃப்ல...?

5. தீவிரவாதிகளை பார்க்க சி எம் தான் மட்டும் தனியே போய்ப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன? மாட்டிக்கவா?

6. ரிப்போர்ட்டர்க்கான டிரஸ் கோட் படத்தில் ஹீரோ, ஹீரோயின் டாரும் மெயிண்ட்டெயின் பண்ணலையே..? ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே?)

7. செகண்ட் ஆஃப்ல வைத்த ட்விஸ்ட் ஓக்கே.. ஆனா அதுக்கான காரணத்தை ஃபிளாஸ்பேக்ல சொல்லி இருக்கனும்.. 

இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

 ஈரோடு வி எஸ் பி, சண்டிகா , ஸ்ரீ கிருஷ்ணா என 3 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகி இருக்கு.

டிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..

 டிஸ்கி 2 - இந்தப்படத்தின் கதைக்களன் பத்திரிக்கைத்துறை என்பதாலும், பிரசஸ்காரங்க நினைச்சா எதையும் சாதிக்க முடியும் என்ற கான்செப்ட் என்பதாலும்  இந்தப்படத்துக்கான பத்திரிக்கை விமர்சனங்கள் கொஞ்சம் ஓவர் பில்டப்போடே இருக்கலாம்..