Showing posts with label செக்ஸ். Show all posts
Showing posts with label செக்ஸ். Show all posts

Monday, February 04, 2013

டி வி யில் இனி நைட் 11 மணிக்கு ஏ படம் - மக்கள் கருத்து

புதுடில்லி : "ஏ' என்ற, தணிக்கை சான்றளிக்கப்பட்ட, சினிமா படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'யில் ஒளிபரப்ப, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில் ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ' படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான், தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.



அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற, "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.



"ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும், பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன் வைக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில், "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள, பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில், நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக, மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





1. எதுக்கு 11 மணி வரைக்கும் வெயிட் பண்ணனும் .. அதன் எல்லாத்தையும் மெகா சீரியல் பேர் ல காட்டுறங்களே


2. தேவையல்லாத வேலைய மட்டும் பாருங்க.....என்ன அரசாங்கமோ?



3 இரவு 11 மணிக்கு மேல் எல்லாம் ப்ராக்டிகல் இருக்கும் போது படம் எதற்கோ? தனிமையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன் கிடைக்கும்


4. அப்பன்னா இந்தியா சீக்கிரம் 200 கோடியை தாண்டிடும். ஆண்கள் பாவம்....


5. நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு திரைப்படம் ஒரு காரணம் .மக்கள் அதிகம் பார்த்து அதில் வரும் கட்சிகளை மனதில் பாதிக்கும் பொது சில வன்மங்கள் நடக்கின்றன .இதை தணிக்கைத்துறை மனதில் கொண்டு செயல்படவேண்டும் நல்ல கருதுஉள்ள படங்களுக்கு அனுமதி அழிதல் நல்லது .


6. ஏ படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது என்பது தேவை இல்லாத ஒன்று. காரணம், சாதாரணமாக வரும் அனைத்து நிகழ்ச்சிகளுமே இன்று அப்படித்தான் இருக்கின்றன. அது மட்டுமில்லை இரவு நேரங்களில் படிக்கும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைவார்கள், மற்றும், மக்கள் தொகையும் அதிகமாகும்???.

7. மத்திய அரசு அதிகாரிகளே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில் எ படங்கள் நாட்டுக்கு தேவையா ? இரவு நல்ல தரமான நிகழ்சிகள் ஒலிபரப்பு பண்ணலாமே பாலியல் வன்முறைக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனய பற்றி யோசிக்கும் அரசு அவர்களே எ படங்களுக்கு அனுமதி அளிக்கலாமா ?


8.  ஆபாச காட்சிகள் தணிக்கை தணிக்கைத்துறை வெட்டி எறிய வேண்டும் . படங்களை எடுபவர்கள் காட்சிகளை ஆபாசம் இல்லாமல் எடுப்பார்கள் .ஆபாசம் ஆகிய முக்கிய காட்சிகளை வெட்ட படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு ஆகும் சூழ்நிலை வந்தால் தான் இவர்கள் படங்களை நல்ல தரமான படங்களை கொடுப்பர்


9. அரபு நாடுகள் மற்றும் அதற்குப்பிறகு இருப்பவர்கள் இப்போதே மாலையில் தொடங்கி சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்களை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இனிமேல் வேறு வழியில்லை... தொலைக்காட்சியை தனியறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டியதுதான்.


10. இது ஆரோக்கியமான முடிவு அல்ல.பதினோரு மணி என்பது இன்றைய காலகட்டத்தில் பின்னிரவு நேரமல்ல.இதனால் விரும்பத்தகாத விளைவுகள் நிறைய ஏற்படும்.மொத்தக்குடும்பமும் உட்கார்ந்து திரைப்படம் பார்க்கும் நேரத்தில் ஆபாசப்படங்கள் ஒளிபரப்புவது நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது.தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நஞ்சைப் பரிமாறுவது நியாயமல்ல.ஆபாசப் படங்கள் தொலைகாட்சிகளில் தவிர்க்கப்படவேண்டும். சிலரின் லாபத்திற்காக பலவீனமானவர்களின் மனதில் நச்சு எண்ணங்களை வளர்க்கும் இத்தகைய திரைப்படங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.வெளியில் இருக்கும் ஓனானை வீட்டுக்குள் விட்டுவிட்டு பின்னர் குத்துதே குடையுதே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை..


11. A படம் என்றாலே ஆபாசம் என்று பொருளில்லை எல்லாமே அஞ்சரைக்குள்ள வண்டி,சிந்துசமவெளி போன்றவையல்ல.சில சிக்கலான உறவுகள், செக்ஸ் கல்வி, வன்முறை சம்பந்தப்படவைகூட ஏ சான்றிதழ் வழங்கப்பட்டவைதான் டென் ஏஜ் பருவத்தினர் பாலியல் பற்றிய புறுத்தல் வேண்டுமென்பதற்க்காக எடுக்கப்பட்ட படங்களை சற்று முன்பே காட்டலாம் . அவற்றை பெற்றோர் துணையுடன் பார்ப்பது செக்ஸ் தொடர்பான பிரச்னைகளைத்தீர்க்க உதவும். செக்ஸ் தொடர்பான மூட ன்பம்பிக்கைகள் அதிகமுள்ள நம் நாட்டுக்கு இது அவசியம் தேவை



12 கெட்ட விஷயங்களை அமுல் படுத்த அரசுகள் எடுக்கும் ஷ்ரத்தையை நல்ல விஷயங்களுக்கு எடுப்பதில்லை. டாஸ் மார்க் சாராயம், அசிங்கப் படங்கள், அதீத விலை உயர்வு இதெல்லாம் உடனுக்குடன் இங்கே நடந்து விடும். ஆனால், தரமான சாலைகள், அத்யாவசியக் கல்வி, சுத்தமான குடிநீர் இதுபற்றிய சட்டங்களை ஒரே இரவில் போடுவது, அமுல்படுத்துவது போன்றவை மட்டும் இங்கே நடப்பதே இல்லை. அசிங்கங்களை மதிய மாநில அரசுகளே அரங்கேற்றிவிட்டு, குழந்தைகள், இளைஞர்கள், மக்கள் மனதை முழுக்க நஞ்சாகிவிட்டு மக்கள்-ஆட்சி நடத்துவதில் என்ன லாபம்? ஒழுக்கமிலா அரசுகள் ஒழுக்கமிலா மக்களையே உருவாக்கி புதுப்புது வன்முறைக்கு வழிகோலும் 


நன்றி - தினமலர் 

Wednesday, September 05, 2012

கிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1

பவுர்ணமி ராத்திரியில்  ரதி தேவின்னு ஒரு மலையாள கில்மாபடம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன்னா அதுதான் நான் பார்த்த முதல் சாமி படம்.அதனால அந்த ஞாபகார்த்தமா  அஜால் குஜால் ஜோக்ஸ்க்கு டைட்டில் அப்டி வெச்சுட்டேன்.. ராத்திரியில்  ரதி தேவின்னா அப்போ பகல்ல மூதேவியா,? சாயங்காலம் ஸ்ரீதேவியா? அப்டினு எகனை மொகனையா கேட்கக்கூடாது, எல்லாம் சும்மா ஒரு கிளுகிளுப்புக்குத்தான்.  ரக்பி ஜோக்ஸ், ஹிலாரியஸ் ஜோக்ஸ், டர்ட்டி ஜோக்ஸ்னு பல ஆங்கிலப்புக்ஸ்ல படிச்சது, கேட்டது என இது எல்லாமே மற்றவர்கள் படைப்புத்தான். வசன மேற்பார்வை,  டைரக்‌ஷன் டச் மட்டும் நான்.. அதனால திட்டுபவர்கள் படைப்பாளியையும், பாராட்டுபவர்கள் என்னையும் மனதில் கொள்க 


1. டாக்டர் ரியாஸ் -  உங்களுக்கு 2 பேடு நியூஸ் ( BAD NEWS)  


பிரபல ட்வீட்டர் - சொல்லுங்க டாக்டர்


1. உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கு , 2.கஜினி சூர்யா மாதிரி வெரி ஷார்ட் டைம் மெம்மரி லாஸ் இருக்கு.. 


பிரபல ட்வீட்டர் - இவ்ளவ் தானா? நான் கூட எனக்கு எய்ட்ஸ் இருக்கோன்னு பயந்துட்டேன் 


2. சில வருடங்களுக்கு முன்னால எல்லாம் பொண்ணுங்க பசங்களைக்கவர  அவங்க கர்ச்சீப்பை  வேணும்னே கீழே போடுவாங்க . பசங்க அதை எடுத்துட்டு வந்து XQS மீ மிஸ் , இது உங்களுதா? பாருங்கன்னு பேச்சுக்குடுப்பாங்க..  - இதெல்லாம் 1990 ல


 இப்போ பொண்ணுங்க கர்சீஃப்க்கு பதிலா பிராவை கீழே போடறாங்களாம் ( ஃபாரீன்ல )  - பிரா மேலே தானே போடனும்? எதுக்கு கீழே போடறாங்க? என்று யாரும் மொக்கை போடக்கூடாது.. 

3. என்னடி சொல்றே? மெடிக்கல்ஷாப்ல ஒர்க் பண்ற பையனைத்தான் லவ் பண்ணுவியா? அது ஏன்? 

 அவனுக்குத்தான் எப்போ செய்யனும்? எப்போ செய்யக்கூடாது? எல்லாம் தெரிஞ்சுருக்கும். பாதுகாப்புக்கும் பிரச்சனை இல்லை. 


( பாதுகாப்பா செய்யனும்னா செக்யூரிட்டி, வாட்ச்மேன் நாட் ஓக்கேவா? அவ்வ் )




4. செஸ்க்கும், செக்ஸ்க்கும் இன்னா ஒத்துமை?



 செஸ்னா 64 கட்டம் இருக்கும். அதுல எல்லா கட்டத்துலயும் காயை வெச்சு விளையாடுவோம். கில்மா ல ஆய கலைகள் 64 இருந்தாலும் ஒவ்வொண்ணாத்தான் விளையாட முடியும்.. 


5. நாய் டாக்டர் நாராயணா - இன்னும் உங்க கணவர் உங்களை கடிக்கறாரா? 



பொறுத்துப்போகும் பூமிகா - நோ டாக்டர், இப்போ கடிக்கறதில்லை


ஓஹோ! அந்த பழக்கத்தை விட்டுட்டாரா? வெரி குட்.. 

நோ டாக்டர்.. எல்லா பல்லும் கொட்டிடிச்சு.. சும்மா கவ்வுவார்.. அவ்ளவ் தான் 





6. ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? ஒரு செக்ஸ் மேனியாக் எங்க வீட்ல புகுந்துட்டான்.. 

மேடம், பதட்டப்படாதீங்க  இப்பவே ஒரு ஆளை அனுப்பறோம்

அவசரம் இல்லை, காலைல அனுப்பினா போதும். 4 பேரை அனுப்பிடுங்க.. அவன் நடக்க முடியாம கிடப்பான், ஸ்ட்ரெச்சர்ல வந்து தூக்கிட்டு போங்க !



7. பதிவிரதை பத்மா - அத்தான், இன்னைக்கு நைட் ஏதாவது நைட் கிளப்க்கு ஜாலியா போலாமா? 


ஓக்கே, பந்தயம், 2 பேர்ல யார் முதல்ல வீடு திரும்பறாங்கன்னு பார்க்கலாம்..  நீ ஈ ஆர் சி கிளப் போ.. நாம் முக்காடு கிளப் போறேன் ( அங்கே எல்லாருமே முக்காட்டோட தான் சுத்தறாங்களாம் )



8.  இண்டர்வியூவில் லேடி - டைப்ல நீ லோயரா ? ஹையரா? 


 டைப்பிங்க்ல லோயர், ” மிஸ்” டேக் ( MISS TAKE - MISTAKE) பண்றதுல  ஹையர்.. ஹி ஹி



9.மேடம், உங்களை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறேன். என்னையும் உங்க வெட்டிங்க் லிஸ்ட் ( WEDDING LIST) ல வைக்கனும்


 நடிகை - ஸாரி. ஆல்ரெடி எல்லாம் புக்டு.. வேணும்னா வெய்ட்டிங்க் லிஸ்ட்ல வேணா வைக்கறேன், ஓக்கேவா? 


10. இந்தக்காலத்துப்பொண்ணுங்க கழுத்துல பெரும்பாலும்  முருகன் டாலர் செயின் இருக்கும்.. ஏன் தெரியுமா? 

 தெரியலையே? முருகன் என்றால் அழகுன்னு அர்த்தம், அழகு இருக்கும் இடம்னு பேர் வரவா? 


 நோ, நோ. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்..  அதான்.. 


# குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..(இது மட்டும் ட்விட்டர்ல படிச்சது)

Saturday, April 23, 2011

ஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உயர் அதிகாரிகள்...வதம் செய்யக்கிளம்பிய வள்ளி..

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/01/Sneha_In_Police_Dress_2.jpg 

ஈரோடு: போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில், பரபரப்பு புகார் கூறியுள்ள ஈரோடு பெண் போலீஸ் வள்ளியை, சென்னை பத்திரிகையாளர்கள் மொய்த்தனர். மன அமைதிக்காக, தான் பணிபுரியும், "ஸ்டோர் ரூமி'ல், சுவாமி படத்தை மாட்டியுள்ளார் வள்ளி.

ஈரோட்டை சேர்ந்தவர் வள்ளி (35); 1997ல் போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஈரோடு எஸ்.பி., அலுவலக, "ஸ்டோர் ரூமி'ல் பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்க கோரியும், சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கை, வள்ளி தாக்கல் செய்தார்.


இவ்வழக்கு, வரும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், இவ்வழக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புகார் கொடுத்துள்ள பட்டியலில், 2004 முதல் 2011 வரை ஈரோட்டில் பணிபுரிந்த, 10 உயர் அதிகாரிகள் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

அவரை சமாதானப்படுத்தவும், வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றவும் வேண்டி, வள்ளியின் மொபைல் போனுக்கு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதுபோல், வள்ளி புகார் கூறியுள்ள அதிகாரிகள் பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, சென்னையில் இருந்து வார, மாத இதழ்களின் நிருபர்களும் அவரை நேற்று மொய்த்தனர்.

எந்த கேள்விக்கும் பிடிகொடுக்காமல், "இப்பிரச்னை குறித்து நீதிபதி தான் உத்தரவு வெளியிடுவார். நான் வக்கீலை மீறி, போலீஸ் துறையை மீறி செயல்பட முடியாது' என, ஒரே பதிலை கூறி வருகிறார் வள்ளி.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனம் தளராமல் வள்ளி தன்னுடைய பணிக்கு வழக்கம் போல் வந்து கொண்டுள்ளார். மன அமைதி வேண்டி, அலுவலகத்தில் சுவாமி படத்தை மாட்டி, பூ போட்டு வணங்கி வருகிறார்.

"ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், யாரேனும் மிரட்டுகின்றனரா?' என, வள்ளியிடம் கேட்டதற்கு, ""நீதி, நியாயத்துக்காக உழைக்கும் ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயமில்லை,'' என்றார்.

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு போல இன்னும் 10 நாட்களில் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன்.பல பெரிய தலைகள் உருளக்கூடும்..ஈரோட்டில் இப்போதே 4 உயர் அதிகாரிகள் லீவில் இருக்காங்களாம்.. 

என்னைக்கேட்டால் எவனெல்லாம் இந்த கேஸ்ல  மாட்றான்களோ.. அவங்க எல்லார் குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைக்கனும்.. எல்லா சினிமா தியேட்டர்களிலும் ஸ்லைடு போட்டு அவங்களை கேவலப்படுத்தனும்.. அப்பத்தான் இனி வரும் காலங்களில் தப்பு பண்றவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.

அதை விடுத்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணி சமாளிச்சா அவன் அங்கே போய் அதே வேலையை வேற பெண் போலீஸ் கிட்டே காட்டுவான்..