Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Wednesday, December 23, 2015

அஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்?

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் - விஜய் என்று சொல்கிறது தமிழ்த் திரையுலகம். முன்னால் உள்ள இரண்டு கூட்டணிக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ வாய்ப்பு அஜித் - விஜய் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் சமூக வலைதளம். சமூக வலைதளத்தின் வளர்ச்சி இருவரின் வளர்ச்சிக்கும் மிக முக்கியக் களப்பணி ஆற்றி வருகிறது.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில், அஜித் - விஜய் ரசிகர்களைப் போல எந்த நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதில்லை. மற்றொரு நடிகரின் படம் வெளியாகும்போது, அதற்கு எதிராக மனம் புண்படும் விதமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் இல்லை!
அஜித் நடித்த படம் வெளியாகும்போது, “படம் நலலாயில்லை” என்று கருத்து தெரிவித்தால்கூட தப்புதான். உடனே நீங்கள் விஜய் ரசிகராகச் சமூக வலைதளத்தில் சித்தரிக்கப்படுவீர்கள். அதோடு, விஜய் ரசிகனாக இருப்பதே எத்தனை கேவலமான ஒரு விஷயம் என்பதாகக் கூட்டம் கூட்டமாக வலை தளத்தில் வாரித் தூற்றுவார்கள் - கூடவே, விஜய்க்கும் அர்ச்சனை நடக்கும். இதேதான் விஜய் படம் நல்லாயில்லை என்று கருத்து கூறுபவன் கதியும். அஜித் ரசிகராக அவரை முடிவு கட்டி... அவருக்கும் அஜித்துக்கும் சேற்று அபிஷேகம் நடத்திவிட்டுத்தான் ஓய்வார்கள் - விஜய்யின் ஆன்லைன் காவலர்கள்!
அஜித் - விஜய் இருவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்குக்கூடச் சில விமர்சகர்கள் பயப்படுகிறார்கள். காரணம், ரசிகர்கள் ஒன்றுகூடித் திட்டுவார்களே என்றுதான். இது குறித்துப் பிரபல இணைய விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, “என் பெயரை வெளியிடாதீர்கள். கலை என்பது விமர்சனத்துக்கு உட்பட்டது என கமல் தெரிவித்தார். ஆனால், அஜித் - விஜய் படத்தை நீங்கள் விமர்சனம் செய்யவே முடியாது. ஒரு வேளை படம் நல்லாயில்லை என்று தெரிவித்துவிட்டீர்கள் என்றால் முடிந்தது.
எங்கிருந்தாவது உங்களது மொபைல் நம்பரைப் பிடித்து வெளியிட்டுவிடுவார்கள். அன்று முழுவதும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்குவதுதான் உங்களது வேலையாக இருக்கும். அஜித் - விஜய் இருவரது விஷயங்களில் கருத்துரிமை என்பது சுத்தமாக கிடையாது” என்று வருத்தமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் தளத்தில் அஜித் - விஜய் ரசிகர்களின் பணிகளைப் பார்க்கும் போது, அவர்கள் இதையொரு தொழில் போலவே பண்ணுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு வருமானத்துக்கு எப்படி மதுவிற்பனையைப் பயன்படுத்துகிறதோ, அதேபோலத்தான் அஜித் - விஜய் தரப்பிலிருந்தே, அவர்களின் புகழுக்காக சமூக வலைதளத்தில் ரசிகர்களை பயன்படுத்தும் வேலையும் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்! அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பரப்பவும், தங்கள் எதிரிக் கட்சிகளை சிக்கலில் மாட்டிவிடவும் தனியார் ஏஜென்சிகளை வைத்து இணையதளத்தில் கொடி பிடிக்கும் பாணியை இந்த வகை ‘மெகா’ போற்றல் மற்றும் தூற்றலில் காணலாம்.
சில காலமாக அஜித் - விஜய் ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வரும் சண்டைகள் கைகலப்பாகவும் மாறி இருக்கிறது. 'வேதாளம்' படம் வெளியானபோது, தூத்துக்குடியில் இரு தரப்பு ரசிகர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சண்டை குறித்து செய்திகள் வெளியானபோது கூட இரு நடிகர்களிட மிருந்தும் மவுனமே பரிசாகக் கிடைத்தது.
தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் மனம் விட்டுப் பேசும்போது சொல்லும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சினிமா வட்டாரத்துக்கே வெளிச்சம். அதாவது. நடிகர்களின் ரசிகர்கள் பெயரால் இணையத்திலும், நேரடிக் களத்திலும் அடிதடி உக்கிரம் அடையும்போது இவர்கள் மாஸ் நடிகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இவர்களின் சம்பளமும் ஏறிக்கொண்டே போகிறது?!
'திருப்பதி' படத்துக்கு அஜித் வாங்கிய சம்பளத்தையும் 'சிவகாசி' படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளத்தையும் சுட்டிக்காட்டும் இந்தத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் “ரசிகர்களின் மோதல் வலுத்துக்கொண்டே செல்லச் செல்ல இவர்களின் சம்பளமும் விஷ வேகத்தில் ஏறிக்கொண்டே போனது” என்று கூறுகிறார்கள்! இவர்கள் இருவரையும் வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாப விகிதம் இதே அளவுக்கு உயர்ந்துகொண்டே போனதா என்றால், இல்லை என்பதுதான் பதில் என்று சுட்டிக் காட்டும் இவர்கள்,
“ரசிகர்களின் இந்த வேகத்தையும் பாசத்தையும், தங்கள் பணப் புழக்கத்தையும் தமிழகத்தின் வெள்ள நிவாரணம் போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை நோக்கிக் கொஞ்சமாவது திருப்பி விட்டிருந்தால் எத்தனையோ ஏழைகளுக்குப் பலன் கிடைத்திருக்கும்” என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
அஜித் - விஜய் இருவருமே கடவுள் அல்ல, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிப்புக் கலைஞர்கள்... மற்ற எல்லாத் துறைகளிலும் உள்ளது போன்ற திறமையும், உழைப்பும் கொண்ட ‘புரொஃபஷனல்கள்’ என்பதை இந்த ரசிகர்கள் உணரும் வரை இது போன்ற ஆதங்கம் நீடிக்கத்தான் செய்யும்!
பின் குறிப்பு :இந்தக் கட்டுரையில் அஜித் - விஜய் இருவரையும் குறிப்பிடும் விதத்தை வைத்தே இரண்டு ரசிகர்களுக்கும் சண்டைக்கு வருவார்கள், எங்க தலைவர் பெயரை எப்படி பின்னாடி போடலாம் என்று. மேலும் இக்கட்டுரையின் பின்விளைவாக ’ஹேஷ்டேக்’ உருவாக்கி இரு தரப்பு ரசிகர்கள் பெயரிலும் ட்ரெண்ட் செய்யக்கூடும். அதில்கூட யாருக்கு மாஸ் அதிகம் என்று பலப்பரீட்சை நடக்கலாம். ட்விட்டர் தளத்திற்கு வந்தீர்கள் என்றால் அதையும் நீங்கள் பார்த்துவிடலாம்!

-தஹிந்து


Wednesday, November 11, 2015

வேதாளம் - தெறி ஹிட்டா? மீடியம் ஹிட்டா? - த இந்து அலசல் - மக்கள் கருத்து

* 'மாஸ் ரசிகர்களுக்கான மாஸ் சினிமா' என்ற 'பழிவாங்கல்' கதைக்களம் கொண்ட தமிழ் சினிமா இலக்கணத்துக்குள் கச்சிதமாகப் பொருந்திருயிருக்கும் படம் 'வேதாளம்.'
* 'நாயகன்' ரேஞ்சில் தன் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுக்க 'தலைவா' மூலம் ஒரு முயற்சி செய்தார் விஜய். அந்த வகையில், 'பாட்ஷா' லெவலுக்கு ஒரு படத்தை தன் ரசிகர்களுக்குத் தர அஜித் விரும்பினார் போலும். அதற்காக, 'பாட்ஷா' திரைக்கதையை 'தைகக்ரைதி'யெல்லாம் பண்ணி பின்னியெடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.
* அதிரடி, தெறிப்புகளைத் தாண்டி, சென்ட்டிமென்ட்ஸ் - எமோஷன்ஸ் என தன் ரசிகர்கள் மட்டுமின்றி, பொழுதுபோக்கு சினிமா ரசிகர்கள் அனைவரின் கவனத்தையுமே ஈர்க்க ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் அஜித்.
* அஜித்தைத் தவிர படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் முழுமையாக வலம் வந்திருப்பவர், தங்கை கதாபாத்திரத்தை ஏற்றுள்ள லஷ்மி மேனன் மட்டுமே. இந்த தீபாவளி ரிலீஸின் புஸ்வானம் ஸ்ருதி ஹாசன்தான். மற்ற அனைவரும் தவுசன் வாலாவில் பங்கு வகித்த உதிரி வெடிகளாகவே வந்து போயிருக்கிறார்கள்.
* விறுவிறுப்பான தெறிப்புச் சண்டைக்காட்சிகள்தான் படத்துக்கு பலம். அதிரடித் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளில் புதிய அம்சங்களைப் புகுத்த முயற்சித்து, அதில் ரசிகர்களின் வரவேற்பால் வெற்றியும் பெற்றிருக்கிறது வேதாளம் டீம்.
* 'வீர விநாயக', 'ஆலூமா டோலுமா' ஆகிய இரண்டு பாடல்கள் அமர்க்களம். மற்றவை ரசிகர்கள் தியேட்டர் வாசலுக்கு வந்து வெடிகளைப் பற்றவைத்து கொஞ்சம் குதூகலித்துவிட்டு அரங்குக்குத் திரும்ப துணைபுரிகின்றன.
* மாஸ் மசாலா திரைப்படத்துக்கு முதுகெலும்பே ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்தான். இவை இரண்டுமே வேதாளத்தில் பக்கா. ஹிட்டான ஹரி படங்களை நினைவூட்டினாலும், வேதாளம் தரும் வேகம் - அஜித் ரசிகர்களுக்கு அட்டகாச அனுபவத்தைத் தருகிறது.
* வழக்கமான பழிவாங்கல் - தாதா சார்ந்த கதைதான் என்றாலும், சுறு சுறு திரைக்கதையிலும், அசத்தல் திருப்பங்களிலும் பிசுபிசுப்பிக்காமல் தெறித்து வெடிக்கவைத்த வகையில், இயக்குநர் சிவாவின் பங்களிப்பு சிறப்பு.
* லாஜிக் பார்க்கும் சீரியஸ் சினிமா ஆர்வலர்களைத் தாண்டி, இயல்பு மீறாத பொழுதுபோக்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்திருக்கும் வகையில், வேதாளம் - அஜித் ரசிகர்களுக்கானது மட்டும் அல்ல என்ற எல்லையைத் தாண்டி விடுகிறது.
* திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்தால், ஒட்டுமொத்தமாக அஜித்... அஜித்... அஜித்... இந்த ஒரு நட்சத்திரத்துக்காக மட்டுமே விரும்பி வேதாளம் பார்க்கச் செல்வோருக்கு நிச்சயம் இது தல தீபாவளிதான். மற்றபடி, அதிரடி - மசாலா - மாஸ் பட விரும்பிகளுக்கும் சுவையான விருந்துதான்.
சரி... அடுத்த கட்டம் நோக்கிய தமிழ் சினிமாவுக்காக ஏங்கிவரும் திரைக் கலை ரசிகர்களுக்கு... அதான் தெறிக்க விட்டாச்சே!

  • Karthik  from India
    இது மாதிரி படம் தான் ஒவ்வொரு ரசிகனும் எதிர் பார்க்கறது ... செம கலக்கல்...
    about an hour ago
     (1) ·  (0)
     
    mahendrakumar Up Voted
    • M
      Makthum  from India
      Mass movie
      about 2 hours ago
       (0) ·  (0)
       
      • P
        Pravin  from United States
        வழக்கமா பல படத்துல பார்த்த கதைதான் ஆனா நீங்க இப்படி விமர்சனம் பன்றிங்க ஆனா புதுசா எதாச்சும் முயற்சி பன்னுனா அது நல்லா இல்லனு விமர்சனம் பன்றிங்க
        about 3 hours ago
         (0) ·  (0)
         
        • S
          Srinivasan  from United States
          Blockbustermovie
          about 4 hours ago
           (0) ·  (0)
           
          • M
            Manichan  from India
            படம் ரொம்ப சுமார் ராக இர்ருக்கிறது ...ஆனால் அஜித் alaga இர்றிக்கிறார்
            about 4 hours ago
             (0) ·  (0)
             
            • V
              Vendhan  from Sri Lanka
              வேதாளம் படத்துல அப்படி என்ன இருக்கு. காத கிளிகுற சத்தம் ஹீரோவ தூக்கி பிடிக்குற visual காட்சி அமைப்பு. சுத்தம்மா வேஸ்ட்
              about 5 hours ago
               (4) ·  (5)
               
              Rajagopal · manichan · prasad · sathish Up Voted
              Thangam · mahendrakumar · parthi · inbarasan · Govardhanan Down Voted
              • N
                N.Govind  from India
                Centiment action &ajith

              -thanx - the hindu


              Thursday, September 03, 2015

              ட்விட்டரில் அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டையும், சின்மயி ஃபேஸ்புக்கில் வழங்கிய பதிலடி பதிவும்

              அஜித் - விஜய் ரசிகர்களிடையே நடைபெறும் சண்டையில் சிக்கிக் கொண்ட சின்மயி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
              ஆவணி அவிட்டம் அன்று நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பா, மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகனுக்கு 'தல ஆவணி அவிட்டம்' என்று தெரிவித்தார். அதற்கு ரசிகர் ஒருவர் "தல என்ற வார்த்தை எதற்கு எடுத்தாலும் பயன்படுத்தாதீர்கள். தல என்றால் எங்க அஜித் சார் மட்டுமே" என்று குறிப்பிட்டார்.
              மாதவன் வெளியிட்ட ட்வீட்டையும், ரசிகரின் கருத்தையும் வைத்து பலர் கிண்டல் செய்து வந்தார்கள். இதனை சின்மயி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு 'கடவுளே' என்று குறிப்பிட்டார். அவர் வெளியிட்ட உடனே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருமே சின்மயியை கடுமையாக திட்டி தீர்க்க ஆரம்பித்தார்கள்.
              தொடர்ச்சியான ரசிகர்களின் தொந்தரவைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார் சின்மயி. அப்பதிவில் சின்மயி கூறியிருப்பது:
              "சமூக வலைதளங்களை இன்று பிடித்திருக்கும் மிகப்பெரிய நோய் ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு ரசிகர் அல்லது அவரை பிடிக்காதவர் என்று புரிந்துகொள்ளப்பட்டால், கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் தாக்குதலை எதிர்பார்க்கலாம்.
              ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் சார்பாக அவமதிப்பை எதிர்கொள்ள அவர்களது எண்ணற்ற ரசிகர்கள் இருப்பார்கள் (பெரும்பாலும் ஆண் ரசிகர்கள்). தொடர்ந்து ஆபாசமாக வசை பாடி அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.
              எனக்குத் தெரிந்து இந்த நட்சத்திரங்கள் யாருக்கும் இணையத்தில் நடப்பது என்ன என்பது தெரியாது. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அப்படி மோசமாகப் பேசுபவர்கள் பெரும்பாலும் டாக்டர்கள், என்ஜினியர்கள் போல படித்தவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இளைஞர்கள் கையில் தான் தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
              நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், "ஒருவரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். வழிபாடு செய்யாதீர்கள்" என ஒருவர் பேசினார். நாம் எல்லோருமே எதாவது ஒரு விளையாட்டு வீரருக்கோ, நடிகருக்கோ, இசைக் கலைஞருக்கோ, விஞ்ஞானிக்கோ ரசிகராக இருப்போம். ஆனால் அந்த ரசிப்புத் தன்மை எல்லை தாண்டி, வேறொருவரின் ரசிகரை மோசமாகப் பேசும்வரை சென்றால், நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நாம் மோசமான எடுத்துக்காட்டாகவே இருப்போம்.
              உதாரணத்துக்கு - வாட்ஸாப்பில் நகைச்சுவை மீம் ஒன்றை வேடிக்கையாகப் பகிர்ந்தேன். அது எந்த வரம்பையும் மீறாத நகைச்சுவையே. எனது நண்பர்களில் இருந்த அஜித் ரசிகர்கள் சிலர் அதைக் கண்டு சிரித்து, மறந்தும் விட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் உடனே என்னை வசை பாட ஆரம்பித்தார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு டாக்டர். திருமணமாகி, பெண் குழந்தை உள்ளவர். தனக்குப் பிடித்த நடிகரை கிண்டல் செய்வதை பொறுக்க முடியாமல், சமூக வலைதளத்தில், ஒரு பெண்ணை ஒழுக்கமற்றவள் என்று தகாத வார்த்தைகளில் ஏசும் அளவுக்கு அவர் எல்லை மீறுகிறார்.
              இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? பிரபலமான ஒருவர், ஒரு நகைச்சுவையைப் பகிர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட ரசிகர் உண்மையான ரசிகரா என்பதை, அவரது பக்கத்துக்குச் சென்று ஆராய்ந்து விட்டு பிறகு பகிர வேண்டும் என்பதா? நாங்கள் எதாவது சொன்னால் "நீ இதை விளம்பரத்துக்காக செய்கிறாய்" என்ற குற்றச்சாட்டு வேறு.
              இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், நான் பாதிக்கப்பட்ட பெண்ணாக உணரவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னைப் போல ஒருவர், "எனக்கு கத்தி ட்ரெய்லர் பிடித்துள்ளது" என ட்வீட் செய்தால் அடுத்த நொடி ஆபாச பின்னூட்டங்களும், வசைகளும் தொடரும். இம்மாதிரியான சம்பவங்களில், பெண்களைப் போல ஆண்களும் ஏசப்படுகிறார்களா என்பது தெரியவில்லை. இதே போல கத்தி படம் பிடித்திருந்தது என்று ட்வீட் செய்த ஆலிஷா அப்துல்லா என்ற வீராங்கனையும் இப்படியான வசைகளை எதிர்கொண்டார். பல ரசிகர்கள் இப்படியான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கலாம்.
              இணையம் சுதந்திரமான தளமாக இருக்க வேண்டும். ஒவ்வொருக்கும் அதில் தங்களது கருத்துகளை பகிர உரிமை இருக்க வேண்டும். அந்த கருத்து மற்றவர்களை காயப்படுத்தினாலும் அதற்கு பதிலாக ஏன் தவறாகப் பேச வேண்டும்?
              நமது தலைமுறை தான் இணையத்தின் வீச்சை, பலன்களை அனுபவித்து வருகிறது. நமது எல்லைகளை நாமே வரையறைத்துக் கொண்டு தனிப்பட்ட அளவில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
              நமது எதிர்கால சந்ததிக்கு எதை விட்டுச் செல்கிறோம்? நமது தலைமுறை எப்படிப்பட்டது என தெரிந்து கொள்வார்கள்? இதுதான் நாம் எதிர்காலத்தை உருவாக்கும் விதமா? நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
              அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான சமூக வலைத்தளப் போர் என்பது தொடர் கதையாகி வருகிறது.

              நன்றி - த இந்து

              • MYS  
                ரசம் தேவை. விரசம் ஏனோ?
                Points
                580
                about 6 hours ago
                 (0) ·  (0)
                 
                • MMohamedfarook  
                  தமிழன் என்று சொல்லி தரம் தாழ்ந்து போக வேண்டாம்.பக்கத்து மாநிலத்தில் இது போல் கேவலம் நடப்பதில்லை . .
                  Points
                  120
                  about 6 hours ago
                   (4) ·  (0)
                   
                  • Jafer Sadiq  
                    வாழ்த்துக்கள் சின்மயீ, ஆண்களை குற பயப்படும் உலகிலில் சினிமா துறைளிருகிட்டு உண்மையை கூறியதில் வாழ்த்துக்கள். நான் நல்லவன் என்று குரலாம் நான் மட்டும் நல்லவன் என்பது போல்ல எல்லோரும் நினைப்பது தவறு. நமது மீடியா , பேப்பர் ,மதம் ,மொழ்லி எல்லாம் இதை தான் நமக்கு கற்பிக்கிறது. எபோது அடுத்தவர்களை மதம், மொழி , இனம் ,தேசம் கடந்து நாம் மதிக்க படிகிரோமோ அபோதுதான் இந்த நிலை மாறும். நாம் நமது பெருமை பேசியை காலத்தை ஓட்டுகிறோம்.இதனுடைய தாக்கம் தான் இந்த பிரச்சினை . பாவம் சின்மயீ எல்லோரும் வசை படுவார்கள். பெண்கள் என்றல் கற்பு வரை பேச்சு போகும் மனதை திட படுத்தி வைத்துகொள்ளுங்கள் .
                    Points
                    2660
                    about 6 hours ago
                     (1) ·  (0)
                     
                    • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
                      சின்மயி சொல்வது உண்மைதான்.....ரசிகன் எனபது எல்லை மீறி, தான் ரசிப்பவனை ஆராதிக்கும் அபாயத்தில் - இந்தியாவின் வருங்காலங்கள் என்றழைக்கப்படும் படித்தவர்கள் சிக்கிகொண்டிருப்பது பேராபத்துதான் .
                      Points
                      3550
                      about 7 hours ago
                       (3) ·  (0)
                       
                      • BBalu  
                        இது மாதிரி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் போட்டோ மற்றும் குடும்ப பின்னணி விபரங்களையும் சேர்த்து வெளீடவேண்டும்.இவர்கள் psychopathic disorder பாதிக்கப்பட்டவர்கள்.
                        about 8 hours ago
                         (5) ·  (0)
                         
                        • கண்ணன்  
                          தைரியமாக கருத்து வெளியிடும் சின்மயி போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் .அவரே கமலஹாசனின் உறவினர் மற்றும் ரசிகர் என்றாலும் (பரமக்குடிக்காரர்தான) ஒரு நாளும் மற்ற சில ரசிகர்கள்போல ரஜினியையோ மற்ற நடிகர்களைப் பற்றியோ தவறாக எழுதியதில்லை நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியதிருக்கிறது
                          Points
                          8725
                          about 8 hours ago
                           (1) ·  (0)
                           
                          RBALAKRISHNAN Up Voted
                          • RRahul  
                            அறிவியலையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் நம்முடைய வளர்சிக்கு பயன்படுத்தாமல் இன்று தவறான வழியிலேயே பெரும்பாலும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் என்பது வேதனையான ஒன்று.
                            Points
                            310
                            about 8 hours ago
                             (3) ·  (0)
                             
                            • Saravanan Arumugam  
                              இதில் ஒருவரின் ரசிகர்கள் மிகவும் மோசம், youtube இல் புலி trailer வெளியான அன்று( இரவு 12 மணி) விழித்திருந்து 1 மணி நேரத்தில் 2000 dislike கொடுத்துள்ளனர். இதுவரை 20,000 dislike பெற்ற சாதனை படம் புலி மட்டுமே.
                              Points
                              285
                              about 9 hours ago
                               (2) ·  (2)
                               
                              anand Up Voted
                              Vikram · padma Down Voted
                              • Ppookkaran  
                                விஜய் , அஜீத் என்ற இருவருமே திரை வாழ்வில் அல்லது பொது வாழ்வில் பெரிதாக ஒன்றும் சாதிக்காதவர்கர் அவர்களின் முன்னோடிகளோடு ஒப்பிடும் போது ! மேற்கண்ட இருவரையும் திரையில் பார்க்கும் போதே எரிச்சல் வரும் அளவிற்கு பில்டப் கட்சிகள் அவர்களின் படங்களில் வருகிறது . நாம் அறிவியல் ரீதியாக பெற்ற வசதிகளை , நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் .
                                Points
                                1235
                                about 9 hours ago
                                 (5) ·  (0)
                                 
                                mani · ganesan · balu · kathir · அந்நியன் Up Voted
                                • AVAnbu victor  
                                  நாம் நம்பும், விரும்பும் ஒரு விஷயத்தை யாராவது எதிர்த்தோ அல்லது ஏற்றுகொள்ளமலோ இருந்தால் அதை இங்கே யாராலும் சகித்து கொள்ள முடியவில்லை. மூடநம்பிக்கைகளை எதிர்த்து பேசியதால் கல்புர்கி கொலை செய்யப்பட்டார். அது மதத்தின் மேல் வெறிகொண்டு இருபவர்களிடம் சகிப்பு தன்மை இல்லாததால் தான். இந்த சண்டை ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. இதை தடுக்காவிட்டால் நாளை இவர்களும் அந்த வழியை பின்பற்றலாம்.
                                  Points
                                  1155
                                  about 9 hours ago
                                   (1) ·  (0)
                                   
                                  • IAidal Antony  
                                    சின்மயி சகோதரிக்கு நன்றி.சரியான பதிலடி தந்துள்ளிர்கள்
                                    about 10 hours ago
                                     (3) ·  (0)
                                     
                                    • Sshankar  
                                      தமிழ் நாட்டை இந்த அதல பாதலதுக்கு கொண்டு சென்று நடிகர்களின் பைத்தியமாகி விட்டது இந்த திராவிட கட்சிகளே.இந்த trend இன்னும் பல தலை முறைகள் வந்தாலும் இப்படியேதான் இருக்கும்.
                                      about 10 hours ago
                                       (2) ·  (0)
                                       
                                      • PPoongunran  
                                        வேற வேலை இல்லேன்னா இப்படித்தான் . ரசிகர்களுக்கும் சரி , சின்மயி போன்ற பிரபலங்களுக்கும் சரி , வேறு வேலை இல்லாததினால் தான் இப்படிப்பட்ட அவலங்கள் நாள் தோறும் அரங்கேறுகின்றன .சம்பத்தப்பட்ட நடிகர்கள் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு பிசியாக இருக்கிறார்கள் .வேறு எதுவும் இல்லாதவர்கள் அசிங்கமாக மோதிக்கொள்கிறார்கள் . வேதனை ............ பூங்குன்றன் .
                                        Points
                                        340
                                        about 10 hours ago
                                         (1) ·  (0)
                                         
                                        • TTHIYAGARAJAN  
                                          கருத்துக்களோ கேலிகளோ, இணையம் மக்களை வெகுசீக்கிரம் சென்றடையும் ஒரு இணைப்பு.. ஆராயப்படமலும் சரியான கோணத்தில் புருநிந்துகொள்ளமலும் இடும் பின்னூட்டம் மூலம் எதிர்வினைகளை சந்திக்க வேண்டிய தர்மசங்கடமும் ஏற்படுகிறது... கண் கெட்ட பிறகுதானே சூரியனை தேடுவோம் நாம்!!(?)
                                          about 11 hours ago
                                           (0) ·  (0)
                                           
                                          • Mmanjoorrasa  
                                            தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகர்களை கடவுள்களாக நினைக்கும் பைத்தியக்காரர்கள் அதிகம் இருக்கின்றனர்.
                                            about 11 hours ago
                                             (1) ·  (0)
                                             
                                            karthi Up Voted
                                            • Rraja  
                                              விஜய் அஜித் நல்ல நண்பர்கள். தயவுசெய்து சண்டை போடதீங்க pls
                                              about 11 hours ago
                                               (1) ·  (0)
                                               
                                              karthi Up Voted
                                              • RARajinikanth Arumugam  
                                                நன்றாக சொன்னீர்கள் சஹோதரி இவர்கள் எல்லாம் திருந்துவது கடினம் ஏன், சம்பந்தப்பட்ட நடிஹர்களே வந்து சொன்னாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.
                                                about 11 hours ago
                                                 (1) ·  (0)
                                                 
                                                karthi Up Voted
                                                • Rravi  
                                                  ***** wonderful