Showing posts with label செல்வராகவன். Show all posts
Showing posts with label செல்வராகவன். Show all posts

Friday, May 31, 2019

NGK -சினிமா விமர்சனம்

ngk hd images માટે છબી પરિણામ

எம் ஜி ஆர் , என் டி ஆர் மாதிரி அரசியலில் 3 எழுத்து இனிஷியல் ஹிட் ஆவதால் படமும் அதே ராசிப்படி ஹிட் ஆகட்டும் என இப்டி டைட்டில் வெச்சிருக்காங்க போல , ஆனா ஹீரோ முழுப்பெயரையும் (அழகான தமிழ்ப்பெயர் என்பதால் )அப்டியே வெச்சிருக்கலாம்


 ஹீரோ ஒரு சமூக சேவகர் , கம்ன்யூனிச சித்தாந்தம் கொண்டவர் . ஊருக்கே நல்லது பண்றார், தமிழருவி மணியன் ரஜினியை உசுப்பி விடற மாதிரி ஒரு ஆள் சாதாரணமாவே நீ இவ்ளோ நல்லது பண்றே ,அரசியலுக்கு வந்தா எவ்ளோ  நல்லது பண்ணுவே என உசுப்பேற்றி விட நம்ம தளபதி  எப்படி  2 வருசமா பகல்  கனவு காண்கிறாரே இதோ ஆட்சி கலைஞ்சிடும், நாம முதல்வர் ஆகிடலாம்னு அதே போல் ஹீரோவும் அர்சியலில் இறங்க முடிவு பண்றார்

 ஒரு அரசியல்வாதி கிட்டே எடுபுடியா சேர்றார், கிட்டத்தட்ட அமைதிப்படை அமாவாசை மாதிரி , அவர் எப்படி படிப்ப்டியா முன்னேறி சி எம் ஆகறார் என்பதே கதை ( கொஞ்சம் காதுல பூ ரகம் தான்)


ஹீரோவா சூர்யா , அவரோட பாடி லேங்க் வேஜ் பிரமாதம் , விரைப்பா நிற்பது , எடுபுடியா ஆக கூச்சப்படுவது , நண்பனை கொலை செய்ய நேர்வது , குற்ற உணர்ச்சி என படம் முழுக்க அவர் நடிப்புக்குத்திஒஇனிதான்


நாயகியா சாய் பல்லவி . புருஷன் மேல சந்தேகப்படுவது , பொசசிவ்னெஸ் என கலந்து கட்டி ஓவர் ஆக்டிங் பண்றார்


 இன்னொரு ரம்பாவின் தொடை அழகு வாரிசு ரகுல் ப்ரீத்தி சிங்  கலக்கறார். அவரோட திமிர்த்தனம் , ஹீரோவைப்பார்த்ததும் ஏற்படும் உடல் மன மாற்றங்கள் , வாசம் பிடிப்பது என ஸ்கோர் பண்றார்.ஒரு டூயட்டில் டான்சில் கலக்கறார்

இளவர்சு குட் ஆக்டிங் 


இடைவேளை வரை வேகமாகப்போகும் திரைக்கதை பின் தடுமாறுது , ஏகப்பட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரகள் ஆளாளூக்கு ஒரு ஐடியா கொடுத்து கொழப்பி இருக்காங்க போல 


பி ஜி எம் பட்டாசு , பாடல்கள்  ஓக்கே ரகம் 





நச் டயலாக்ஸ்


எனக்கு உன் கிட்ட பிடிச்சதே உன் உடம்புல வர்ற வாசனைதான்

நான் பர்ப்யும் எதுவும் யூஸ் பண்ணலையே?
விவசாயி உடம்புல வர்ற மண்வாசனை ,ஹ்ம்ம்


2 தோற்கும் நேரத்துல உடையாதே!
ஜெயிக்கும் நேரத்தில் உளறாதே


3 இந்த நாட்டுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வித பைத்தியம் ,என் மகனுக்கு நாட்டு மேலயே பைத்தியம்


4 ஆயுதம் வாங்கறதுல இந்தியா முதலிடமா?அங்கங்க கக்கூஸ் போகவே தண்ணி இல்ல


5 தகுதி ,தராதரம் பார்த்து செய்யறது உதவி இல்லை,தேவைக்கு செய்யறதுதான் உதவி


6 அரசியல் ங்கறது சுடுகாடு மாதிரி,உள்ளே போனவன் பிணமாதான் திரும்பி வருவான்

7 கரை வேட்டி ன்னாலே (அரசியல்வாதி)மக்கள் கேவலமாதானே பாக்கறாங்க?


8 படிச்ச புள்ள நீ,இதை முதல்ல புரிஞ்சுக்கோ,அரசியலோ ,எதுவோ எந்த வேலையா இருந்தாலும் படிப்படியாதான் முன்னுக்கு வர முடியும்


9 எந்த ஒரு மிகப்பெரிய விஷயமா இருந்தாலும் அதோட ஆணிவேர்ல இருந்து ஆரம்பிக்கனும்


10 இந்திய நாட்டின் பண்பாட்டை அயல் நாட்டினன் வாங்கிட்டான்


11 என் பொன்மொழிகளை எனக்கே சொல்லிட்டுப்போறான் ,அபாயகரமானவன்


12 எதையாவது பத்த வைக்கனும்னா மேல இருந்தும் பத்த வைக்கக்கூடாது,கீழே இருந்தும் பத்த வைக்கக்கூடாது ,நடுவுல இருந்து பத்த வைக்கனும் ,அப்ப தான் மேலயும் பத்திக்கும் ,கீழேயும் பத்திக்கும்

13 ட்விட்டர் ,FB ல ட்ரெண்ட் ஆகறதை ஜனங்க 2 நாட்கள்ல மறந்துடுவாங்க


14  அதென்னாங்கடி,மாடர்ன் பொண்ணுங்க அடுத்தவ புருசனை கரெக்ட் பண்ண ரெடியா இருக்கீங்க?







தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

கேரளா திருவனந்தபுரம் ஸ்ரீ கிருபா ல 31/5/2019 9.30 am ஷோ சூர்யா ரசிகைகளுக்கான ஸ்பெஷல் ஷோ வாம்,அடேங்கப்பா ,மம்முட்டி ,மோகன்லாலுக்குக்கூட அப்டி நடந்ததா தெரில


கேரளா கோட்டயம் சங்கணாச்சேரி தன்யா ரசிகர் ஷோ 7 am. ஹவுஸ்புல்

தன்யா ரம்யா அப்சரா 3 தியேட்டர்கள்

a






3  போராடறது தப்புன்னா போராடற மாதிரி சூழ்நிலையை உருவாக்கறதும் தப்புதானே? தியேட்டரிக்கல் ட்ரெய்லர் (கே வி ஆனந்த் + சூர்யா + மோகன்லால் )

4 ஹீரோக்கு புரட்சிகர இளைஞர் ,கம்யூனிச சித்தாந்தம் பேசுகிற ,இயற்கை விவசாயி கேரக்டர் ,சூர்யாக்கு சுலபமா செட் ஆகிடுச்சு,இயக்குனர் செல்வராகவன் லைட்டா தடுமாறுகிற மாதிரி தோணுது.காதல்,த்ரில்லர் ,பேன்ட்டசி படங்களில் காட்டிய செய்நேர்த்தி இதுல காட்ட முடியல


5  அரசியல்வாதிக்கு எடுபுடியா வந்து ஹீரோ பண்ற வேலைகளை அவரது ரசிகர்கள் ஜீரணிக்க சிரமப்படலாம்


சூர்யா,ரகுல் ப்ரீத்திசிங்,இளவரசு பங்கேற்ற அந்த ஹால் சீன் அருமை.செ.ரா டச் ,அப்ளாஸ் அள்ளிடுச்சு

7  அதிமுக அமைச்சர் மாட்டிய பாலியல் குற்றச்சாட்டு ,ஆடியோ வெளியீடு பற்றிய முக்கிய காட்சி

8  இடைவேளை வரை படம் குட்.திரைக்கதை அமைப்பு அமைதிப்படையின் சாயல் வராமல் பார்த்துக்கொள்ள இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார் ,பிஜிஎம் பட்டாசு

ஹீரோ இன்ட்ரோக்கள்ல ரசிகர்கள் பேப்பர் துண்டுகளை,லாட்டரி டிக்கெட்களை திரை முன் வீசறாங்க.படம் முடிஞ்சதும் அவங்களையே சுத்தம் பண்ண வெச்சிடனும்


10 இரு நாயகிகளையும் ஓவர் ஆக்டிங்க் பண்ண வைத்திருப்பது செல்வராகவன் கேரியரில் புதுசு,பின்னடைவு.ஆனால் ரகுல் ப்ரீத்தி சிங் சாய் பல்லவிய ஓவர்டேக் கறார் ,அபாரம்


11 கல்யாண மண்டப சீனில் சிஎம் மும் ,எ.க.தலைவரும் பேசும் காட்சியில் எம்ஜியார் கலைஞர் இருவரையும் தாக்கிட்டாரு இயக்குநர்


12 திமுக ,அதிமுக 2 கட்சிகளையும் போட்டுத்தாக்கறாரு − இப்டிப்பேசிப்பேசியே ஜனங்களை ஏமாத்தறாங்க குறியீடு டயலாக்


13 விஜய் ரசிகர்களுக்கு செல்வராகவன் மேல காண்டா?சூர்யா மேலயா? காலைல இருந்து அனத்திட்டே இருக்காங்க?


14 செல்வராகவன் + விஜய் காம்போல வரவேண்டிய படமாம்,சூர்யா கைக்கு கை மாறிடுச்சாம்.இப்பதான் தெரியுது



சபாஷ் டைரக்டர்

 1  வழக்கமா செ. ரா படங்களில் ஒரு பெட்ரூம் சீனும் 4 கிஸ் சீன்களும் இருக்கும், அவை இதில் இல்லை. டீசண்ட்டா இருக்கு படம் 


2  பாட்ஷா படத்தில் ஹீரோ மெடிக்கல் ஷீட் வாங்கும்போது என பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற ,மெகா ஹிட் சீனுக்கு நிகரான ஒரு ஹீரோ பில்டப் சீன் இருக்கு , கலக்கல் ரகம், ஆடியன்ஸ் அப்ளாஸ் அள்ளிடுச்சு


3   ரகுல் ப்ரீத்தி கேர்கடர் வடிவமைப்பு





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  லாஜிக் மிஸ்டேக் 1 − to வசனகர்த்தா செ.ரா

அரசியல் ங்கறது சுடுகாடு மாதிரி,உள்ளே போனவன் பிணமாதான் திரும்பி வருவான்
1 சுடுகாட்ல பிணத்தைப்புதைக்கறப்ப கூட வர்றவங்க உயிரோடதானே வர்றாங்க?
2 பிணமா எப்படி திரும்ப வர முடியும்?அதான் உயிர் இல்லையே?



2 ஒரு மாநில முதல்வரை பப்ளிக் ப்ளேஸ் ல ஜனங்க வேன் ல தீ வெச்சு கொளுத்துவது ஓவர் பூ சுற்றல்


3 சாய் பல்லவியின் ஓவர் ஆக்டிங் பல இடங்களில் எரிச்சல் ., அவருக்கு டூயட் சீனே வழங்காதது பெரிய பின்னடைவு ( படத்துக்கு இல்ல சாய் பல்லவி ரசிகர்களுக்கு)


4 ஒரு கட்சியின் தலைவர் செத்துட்டா அவரது வாரிசு அல்லது அவருக்கு அடுத்த இடத்தில் இருப்ப்பவர் தானே அந்த இடத்துக்கு வர முடியும் ?



சி.பி கமெண்ட்-NGK - முதல் பாதி பரபரப்பு ,விறுவிறுப்பு 2 வது பாதியில் இல்லாதது பெரிய"பின்னடைவு,க்ளைமாக்ஸ் நம்ப முடியல,சூர்யா வுக்கு வெற்றி,செல்வராகவனுக்கு தோல்வி ,பிஜிஎம் ,ரகுல்,குட் .விகடன் 41 ,ரேட்டிங்க் 2.75 / 5

Saturday, March 28, 2015

கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன்? - சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் பேட்டி

  • சிம்பு, யுவனுடன்
    சிம்பு, யுவனுடன்
  • படம். எல்.சீனிவாசன்
    படம். எல்.சீனிவாசன்
  • மனைவி கீதாஞ்சலியுடன்..
    மனைவி கீதாஞ்சலியுடன்..
‘‘உண்மை இதுதான். தற்போதைய சினிமாவில் சுதந்திரம் அறவே இல்லை. நான் படம் எடுக்கத் தொடங்கிய 2000-ல் ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. 100 படங்களில் 99 படங்கள் காமெடிப் படங்கள்தான் விற்கும் என்ற நிலை அப்போது இருந்ததில்லை ’’
ஒவ்வொரு முறையும் வெப்பம் தெறிக்கக் கோபத்தோடு பேட்டிக்குத் தயாராவதுதான் இயக்குநர் செல்வராகவன் ஸ்பெஷல். சிம்புவை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து’வுக்காக அளித்த பேட்டியிலிருந்து...
‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இடைவெளியை எப்படி உணர்கிறீர்கள்?
தொடர்ந்து படம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? ஓடிக்கொண்டே இருக்கும்போது நின்று மூச்சு வாங்கிக்கொள்வோம் இல்லையா.. அப்படித்தான் இந்த இடைவெளியை எடுத்துக்கொள்கிறேன்.
‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வழியே ஏற்படுத்திய தாக்கத்தை, நீங்கள் புதிய களங்களில் உருவாக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களில் ஏற்படுத்தவில்லையே?
தொடர்ந்து காதல் படங்களையே கொடுக்க முடியாது. நான் இங்கே காதல் படங்கள் மட்டும் எடுப்பதற்காக வரவில்லை. அப்போது எனக்கு 22, 23 வயது இருக்கும். அதனால் சில படங்கள் அந்த வயது அனுபவத்தில் இருந்திருக்கலாம். அதையே தொடர்ந்தால் பணத்துக்காக மட்டுமே இயங்கும் ஆளாக மாறிவிடுவோம். அதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ஃபிலிம்மேக்கர் பல வகைப்படங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்.
உங்கள் படங்களைப் படமாக்கும்போது திரைக்கதையின் முதல் காட்சியில் தொடங்கி வரிசையான முறையில் படமாக்குவீர்கள் என்பது உண்மைதானா?
சில படங்களை அப்படித் தொட்டுத் தொடர்ந்திருக்கிறேன். அதுமாதிரி செய்யும்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. படக்குழுவினர் எல்லோருடைய ஒத்துழைப்பும் அதற்கு முக்கியம். எல்லா தருணங்களிலும் அப்படிச் செய்ய முடியாத சூழலும் உருவாகும். தொடக்கத்தில் 15 முதல் 20 காட்சிகள் வரைக்குமாவது வரிசையாக எடுக்கும்போது கதையோடு நம்மை இணைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படைப்பாளியின் சுதந்திரத்திற்குள் தணிக்கைக் குழு அதிகம் தலையிடுவதாகவும், படத்தை ஆராய்ந்து தேர்ந்த விமர்சனம் வைப்பவர்கள் அங்கே குறைவு என்றும் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீகள்?
என் படங்களுக்கு சென்சாரில் இதுவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. அவர்கள் முன் வைக்கும் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கும்.
உங்கள் படங்களை மணிரத்னம் தொடர்ந்து பாராட்டிவந்திருக்கிறார். தற்போது அவரும் காதல் கதைக்குத் திரும்பியிருக்கிறார் என்று தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. வேறுவேறு மனநிலைகளில் கிரியேட்டர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள். காதல் கதைகளைக் கொடுக்க இது சரியான நேரம்தான். தற்போதைய சூழலில் காதல் படங்கள் எதுவும் இல்லை. காமெடிப் படங்களைத்தான் இழுத்துப்போட்டு இயக்குகிறார்கள். இப்போது காதலைத் தொட்டால் புதிதாகத்தான் இருக்கும்.
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்ற முடிவெடுத்து படத்தின் ஆரம்ப வேலைகளில் இணைந்திருந்தீர்கள். திடீரென ஒரு கட்டத்தில் விலகியும் விட்டீர்கள். அந்தப் படத்தில் பணியாற்றியிருக்கலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நடக்காததைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. சினிமா எல்லோரும் சேர்ந்து பயணிக்கக்கூடிய விஷயம். சரியாக இல்லை என்றால் அதன் உறுதி கம்மியாக இருக்கும். ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்ததை நோக்கி நகர்வதுதானே சரி.
இனி திரைப்படமே எடுக்க வேண்டாம் என்ற மனநிலையோடு பேட்டி கொடுத்தவர், நீங்கள். அந்த கோபம் எல்லாம் குறைந்துவிட்டதா?
எப்போதுமே என் கோபங்களுக்குச் சரியான காரணம் இருக்கும். இங்கே இருக்கும் சூழ்நிலை மீதுதான் என் கோபம். மும்பையில் சினிமா வேலை செய்யும்போது மரியாதை இருக்கிறது. இங்கே இல்லை. இது பணத்துக்கான தொழில் என்று 90 சதவீதம் ஆட்கள் பார்க்கிறார்கள். பணம் மட்டும்தான் சினிமாவா? பணம் அவசியம்தான். அதுவே முழுக்க அவசியமாகிவிடக் கூடாதே. என் கோபம் இதுதான்.
தனுஷின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது. ஒரு அண்ணனாகத் தற்போது அவருடைய ஓட்டத்தை எப்படி கவனிக்கிறீர்கள்?
சின்ன வயதில் இப்படி இருந்தோம், அப்படிச் சுட்டித்தனம் செய்தோம் என்ற ஏக்கங்கள் இருக்கலாம். அதை எல்லாம் கடந்து எல்லோருக்கும் தனித் தனிக் குடும்பம், திசைகள் வந்துவிட்டன. அதைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு எல்லைக்கோடும் உருவாகியுள்ளது. அண்ணன், தம்பி என்பதை எல்லாம் கடந்து தனித் தனி இடம் இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும்.
சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுகிறீர்களே?
கூட்டமாக இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. சின்ன வயதில் இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சுற்றி நின்றாலே எனக்குப் பிரச்சினை. நான் எனக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறேன்.
ட்விட்டரில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது தொடர்பான பதிவுகளையே நிரப்புகிறீர்களே?
அது ஒரு வரம்தான். எவ்வளவு பேர் குழந்தையின் அருமையைப் புரிந்துகொள்கிறோம். பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காக நேரத்தை வீணாக்குவது விசேஷமானது. அதை விட்டுவிடக் கூடாது.
அவ்வளவு எளிதாகப் படப்பிடிப்புக்கு அழைத்து வர முடியாதவர் என்று கூறப்படும் சிம்புவை நீங்கள் இயக்க இருப்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது..
‘காதல் கொண்டேன்’ படம் இயக்கிய நாட்களில் இருந்தே சிம்புவைத் தெரியும். என்னையும்கூட, ‘இவன் அப்படி, இப்படி’ என்று கூறுகிறார்கள். சிம்புவையும் அதுமாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நெருக்கமான இரண்டு நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தில் பயணிக்கப்போகிறோம். அவ்வளவுதான்.
‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தினை உங்கள் மனைவி கீதாஞ்சலி இயக்குகிறார். படப்பிடிப்பில் உங்களையும் பார்க்க முடிகிறதே?
நான் ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள், ‘நான் படம் இயக்கப்போகிறேன்’ என்று ஒரு டீமோடு வந்து கேட்டாங்க. ‘ஓ தாராளமாக’ என்று கதையைக் கொடுத்துவிட்டேன். திரைக்கதை என்னோடது என்பதால் படப்பிடிப்பில் கதையில் ஏதாவது மாற்றம் வரும்போது நான் அங்கே இருந்துதானே ஆக வேண்டும்?
சிம்புவை வைத்துத் தொடங்கும் படத்தின் கதைதான் என்ன?
ஒவ்வொரு முறை ஒரு படம் செய்யும்போதும் நிறைய யோசிப்பேன். இதைத் தொடுவோம் எனும்போது எனக்கு முதலில் ஆர்வம் ஏற்பட வேண்டும். மீண்டும் ஒரு சோகமான காதல் கதையோ, பாதிக்கப்பட்ட மனதின் கதையோ எடுக்க முடியாது. இந்தப் படத்தில் என்னவெல்லாம் ஈர்க்க முடியும் என்று பார்க்கும்போது என்னோட தேடலும் அதை நோக்கியதாக இருக்கிறது. அப்படி ஒரு படமாகத்தான் இதுவும் வரும்.
விக்ரமை இயக்கப் புறப்பட்டு ‘லடாக்’ வரை படப்பிடிப்புக்கு போய் படத்தைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?
கதையை மாற்றிக்கொண்டே போகச் சொன்னார்கள். அது முடியாது என்று சொல்லிவிட்டேன். சிம்பிள். அவ்வளவுதான்.


நன்றி  - த  இந்து

Friday, April 20, 2012

சைக்கோ டைரக்டர் செல்வராகவன் பேட்டி - கெடாவெட்டு

 http://img1.dinamalar.com/cini/CineGallery/VM_120018000000.jpg
 
செல்ல மகள் லீலாவதியைத் தன் மடியில் போட்டுத் தாலாட்டிக்கொண்டு இருந்தார் அப்பா செல்வராகவன். ''இது வரைக்கும் வேலைனு கிளம்பி, வெளியூரோ, வெளிநாடோ எங்கே போனாலும் மனசு எப்பவும் வீட்டைத் தேடாது. ஆனா, இப்போ ஒருநாள்கூட இவளை விட்டுட்டு இருக்க முடியலை. எப்படா ஷூட்டிங் முடியும்னு காத்திருந்து, நிஜமாவே பிரேசில்ல இருந்து பறந்து வந்திருக்கேன்!'' - 'இரண்டாம் உலகம்டென்ஷன் மறந்து சிரிக்கிறார் செல்வராகவன்.விகடன் பேட்டி இது
1.  '' 'மயக்கம் என்ன’ - அந்த அளவுக்குத் திருப்தி கொடுக்கலையே...''


சி.பி - படம் நல்லாலைன்னு சொல்றீங்களா? துள்ளுவதோ இளமை, 7G ரெயின்போ காலனி அளவு கில்மா இல்லைன்னு சொல்றீங்களா?
''அது இயற்கைதான். எனக்கே எதிலும் திருப்திப்பட்டுப் பழக்கம் இல்லை. அதுவும் என்னை மாதிரி ஆளெல்லாம் திருப்தி அடைஞ்சுட்டா... அவ்வளவுதான்.

சி.பி - நீங்க சோனியா அகர்வாலை டைவர்ஸ் பண்ணுனப்பவே அது தெரிஞ்சிடுச்சுங்க.. அவங்களை லவ் பண்றப்ப என்ன பேட்டி குடுத்தீங்க? -” என்னதான் கருத்து வேற்றுமை வந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது”

 அதான், வெற்றி தோல்வி இரண்டில் இருந்தும் விலகியே இருக்கேன். இப்போ மனசு முழுக்க 'இரண்டாம் உலகம்தான். அந்தப் பட ஸ்க்ரிப்ட் எழுதுறது பெரிய ரோதனை.

 சி.பி - எழுதறதே ரோதனைன்னா அதை படிக்கற, பார்க்கற எங்களுக்கு எவ்ளவ் வேதனை?

 அதைப் படமாக எடுக்கிறது பெரிய சோதனை. இதை இந்தியில் செய்யப் பிரியப்படுறவங்க, 'ஸ்க்ரிப்ட்டைப் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கே... எப்படி இதை ஸ்க்ரீன்ல கொண்டுவருவீங்கனு பார்க்க ஆசையா இருக்குனு சொல்றாங்க!''

சி.பி -  என்னது? ஸ்க்ரிப்ட்டைப் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கா? செம கில்மா கதையா?இந்தப்படத்துல  ஹீரோ தன் ஃபிரண்ட்டோட தம்பியோட லவ்வரை கரெக்ட் பண்றானா? வசனம் சாரு நிவேதிதாவா?

http://123tamilcinema.com/images/2011/09/anu-350x416.jpg
2. ''அப்படி என்ன பெரிய துணிச்சலான முயற்சியில் இறங்கி இருக்கீங்க?''

சி.பி - என்ன அப்படி கேட்டுட்டீங்க? அண்ணன் ஜூனியர் கே பாலச்சந்தர், சீனியர் உயிர் புகழ் சாமி.. ஓடிப்போகும் 10 ந்கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ்க்கு முன்னோடி
''துணிச்சல்னு சொன்னா, உடனே இங்கே றெக்கைகளை வெட்டிர்றாங்களே. எந்தப் படம் எடுத்தாலும் அதை என் சொந்த வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாங்க. கொஞ்சம்கூட நியாயமே இல்லாத செயல் இது.

சி.பி - உங்க கதை எல்லாமே அப்படித்தானே இருக்கு? சிம்பு - ஐஸ்வர்யா தனுஷ்- தனுஷ் கதைதானே மயக்கம் என்ன? 

ஒரு ரேடியோல செய்தி கேட்கும்போது, அதோட நாம சம்பந்தப்படுத்திக்கிறது இல்லை. .பி.எல். பார்க்கும்போது அதை தீவிரமா எடுத்துக்கிறது இல்லை. ஆனா, சினிமானு வந்துட்டா மட்டும் உடனே,

'இவன் வாழ்க்கை யில் இது நடந்திருக்கும்டானு பேச ஆரம்பிச்சுடுறாங்க. படத்தைப் படமா மட்டும் பாருங்கனு சொல்லத் தோணுது. இங்கே தேவதாசிகளைப் பத்தி வெளிப் படையா ஒரு படம் பண்ண முடியாது. பயந்து பயந்து படம் எடுக்க வேண்டியிருக்கு. இதெல்லாம் என் காலத்துக்குள்ளேயாவது மாறுமானு பார்க்க ஆசையா இருக்கு. ஆனாலும், 'இரண்டாம் உலகம்நிச்சயம் வழக்கமான என் பாணியில் இருக்காது.''


சி.பி - என்னது? படம் உங்க பாணீல  இல்லையா? அப்போ ஹீரோ சைக்கோ கிடையாதா? ஸ்கூட்டரோ வா? அவ்வ்வ்வ்  

 
3. ''நீங்க சொல்றதைவெச்சுப் பார்த்தா, படத்துக்கு ஆர்யா பொருத்தமா இருக்காரா? இன்னமும் அவரோட ப்ளேபாய் இமேஜ்தானே பிரபலம்?''

சி.பி - ஆர்யா பொருத்தமா இருக்காரோ இல்லையோ, எடுத்த வரை படத்தை போட்டுப்பார்த்து வருத்தமா இருக்காராம்
''சரி... அப்படியே எத்தனை நாள் இருக்கிறது? ஆர்யா ரொம்ப சென்சிபிள். எப்படி வேணுமோ அப்படி மாறுறார். ஆர்யா, அனுஷ்கா ரெண்டு பேரும் இந்தப் படத்துக்குக் கொடுத்திருக்கிற பெர்ஃபார்மென்ஸ் ரொம்பப் பெருசு. ஆர்யா நிச்சயம் அடுத்த லெவலுக்குப் போக வேண்டிய நேரம் இது. இந்தப் படம் நிச்சயம் ஆர்யாவை எலிவேட் பண்ணும். நான் அவரைப் பத்தி இவ்வளவு திருப்தியா பேசும்போதே, அவர் சரியான சாய்ஸ்தான்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!''

சி.பி - இந்த பேட்டியை படிச்சு அனுஷ்கா ரசிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? ஹி ஹி 

 http://img1.dinamalar.com/cini/ShootingImages/11562843223.jpg
4. ''உங்க படங்களை நீங்களே திருப்பி எடுக்கிற மாதிரி இருக்கு. ஏன் இந்தத் தப்பைப் பண்றீங்க?''

சி.பி - கண்டவன் எல்லாம் என் படத்தை ரீ மேக் பண்ணிடக்கூடாது, அதான் நானே என் படத்தை ரீமேக்கிங்க் ஹி ஹி 
''சமயங்கள்ல அப்படி நடந்துடுது. ஆனாலும், முழுக்கவே அப்படிச் சொல்லிடவும் முடியாது. 'மயக்கம் என்னவிமர்சனங்களில் தனுஷ் கேரக்டரை 'சைக்கோனு ஒரு வார்த்தையில் சொல்லிட்டாங்க. ஆனா, அது அப்படி இல்லை. ஒரு கிரியேட் டர் குடிக்கு அடிமையானா, எப்படி

நடந்துக்குவான்னு டீடெய்ல் பண்ணியிருந்தோம். நாம எப்பவும் ரெண்டு மூணு வார்த்தை வெச்சிருக்கோம்... லூஸு, பெர்வெர்ட், சைக்கோனு. ஒரு குடிகாரனை சைக்கோனு சொல்லிட்டா, அப்புறம் நான் என்ன பண்ண முடியும்? ஒண்ணு... ஹீரோ, காமெடி நடிகர்னு வெச்சுக்கிட்டு மசாலாப் படம் பண்ணலாம்

 இல்லேன்னா, ஏதோ ரகசியம் இருக்குனு யோசிக்கிற மாதிரி வித்தியாசமா எடுக்கலாம். எனக்கு முதல் விஷயம் சுட்டுப்போட்டாலும் வராது. இரண்டாவது சொன்னதுதான் வரும். அதுலயே இன்னும் தொடாம நிறைய விஷயங்கள் அப்படியே இருக்கு. அதை அழகாச் செய்ய ஆசை. என் லிமிட் எனக்குத் தெரியும்.''

சி.பி - அண்ணனுக்கு ஏன் காமெடி வராதுன்னா அண்ணன் சிந்தனை எப்பவும் காம நெடியாவே இருக்கு.. அதான் 
5. ''ரொம்ப சாஃப்ட் ஆயிட்டீங்களே... இந்த நேரம் வீட்ல இருக்கீங்க. முகத்திலும் வார்த்தைகளிலும் அவ்வளவு சாந்தம் வந்திடுச்சு. ஒரு குழந்தை இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவருமா?''


சி.பி - அண்ணன் செம ஹார்டுங்க, அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் கிட்டே எல்லாம் வள் வள். ஆனா உடன் இருக்கும் ஹீரோயின் கிட்டே மட்டும் ஜொள் ஜொள் ( ஆண்ட்ரியா, ரீமா சென் எக்செட்ரா.. )
''கொண்டுவந்திருக்கே! பாப்பாவோட சின்ன அசைவுகள்கூடப் பேரானந்தம் தருது. ஸ்கூலுக்குப் போன பிறகு, 'எனக்கு ஏன் லீலாவதினு பேர் வெச்சீங்க. மாடர்னாவே இல்லைனு பாப்பா திட்டும். அதுக்காக வாய்ல நுழைய முடியாத விநோதமான பேரை வைக்க முடியாது. அடுத்து பெண் குழந்தை பிறந்தால், என்ன பேர் வைக்கலாம்னும் முடிவு பண்ணிட்டேன்... சகுந்தலா!''



http://www.tamilkurinji.in/images_/Anuska-twine_1330610993.jpg
6. ''மீடியாவில் எங்கே பார்த்தாலும் தனுஷ் பத்திதான் பேச்சு... பாராட்டியும் கிசுகிசு ரகசியமாகவும்... ஒரு அண்ணனா நீங்கஅவருக்கு அட்வைஸ் பண்ணுவீங்களா?''

சி.பி -அண்ணனுக்கே   ஆயிரம் பேரு அட்வைஸ் பண்ணனும்.. இந்தக்காலத்துல அட்வைஸ் பண்ணா எவன் கேட்கறான்.. 4 படம் மரண அடி வாங்குனா தானா திருந்துதுங்க 
''எங்க எல்லாருக்கும் தனித்தனி அடையாளம் இருக்கு. யாரும் யாரோட பெர்சனல் லைஃப்க்கு உள்ளேயும் போகக் கூடாது. தனுஷ் ஒரு தனி ஆள். என் தம்பிங்கிறது எல்லாம் அடுத்துதான். நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அட்வைஸ் எல்லாம் பண்ணிக்கிறது இல்லை.''

7. ''என்ன திடீர்னு ஹாரிஸ் ஜெயராஜ்கூடக் கூட்டணி?''
''அதுவும் ஒரு அனுபவம். யாரும் வேண்டாம்னு அவர்கிட்ட போகலை. அவருடைய மியூஸிக் எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைக்கு அவர் பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. வைரமுத்து, ஹாரிஸ்னு புது டீம் இன்னும் உற்சாகம் கொடுத்திருக்கு.''

http://123tamilcinema.com/images/2012/03/74d7c40df34349fd9f84f9d8b39474cd1.jpg