Monday, March 19, 2012

ராஜபக்சே- சோனியா ரகசிய உரையாடல்,வெளியிட்ட இணைய தளம்

hehehe...
1. தினமும் காலையில் சூர்யோதயத்தை நாம் பார்க்கையில் ஈழத்தமிழர்கள் வாழ்வே அஸ்தமனத்தில் என்பதை நினைவில் கொள்வோம்


-------------------------------------

2. தமிழர்களின் தலை எடுக்கத் துணை போன தலைவர்கள் மீண்டும் அரசியலில் தலை எடுக்க நாம்  விடலாமா?


--------------------------------

3. ஈழத்தமிழனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க மறுத்த தமிழக அரசியல்வாதிகள் ஓட்டுப்பிச்சை கேட்டு நம் வீட்டுக்கு வருகையில் அவர்களை துரத்தி அடிப்போம்

--------------------------------------

4. ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி.. சோனியா, கலைஞர் இருவரும் குற்றவாளிக்குத்துணை போன குற்றவாளிகள்


--------------------------------------

5. ராஜபக்சே நம் விரோதி, அவனை நாளை கூட அழித்து விடலாம், ஆனால் காங்கிரஸ்-ம், தி முக வும் தமிழ் இனத்தின் துரோகிகள்,இன்றே அவர்களை துரத்தி அடிப்போம்

-----------------------------------------


6. ஞாபக மறதிதான் தமிழனின் தேசிய வியாதி.அதனால் தான் திராவிட கழகங்கள் மாற்றி மாற்றி நம்மை ஏமாற்றி வருகின்றன

-------------------------------

7.  உடன்பிறப்புகள் எல்லாம் வலி உடன்,எமன் உடன்,வேதனை உடன் போராடிக்கொண்டிருகிறார்கள்,அவர்களுக்காக நாம் போராட வேண்டாமா?


----------------------------------

8. சேவல்கள் கூவி பொழுது விடிவதில்லை, கழுகுகளின் சதியில் தமிழ் இனம் அழிவதில்லை


-------------------------------------

9. தோளில் மங்களகரமான  மஞ்சள் துண்டை போட்டுக்கொண்டு ஒருவர் தமிழ் இனத்தின் மார்பில் கறுப்பு பேட்ஜ் குத்தி விட்டார்


------------------------------------

10. சுனாமி வந்து சுருட்டிச்சென்றது ஓராயிரம் தமிழரை! ஒரு அனானி வந்து கொன்று சென்றான் ஒரு லட்சம் தமிழரை.

-----------------------------





 

11. இந்தியாவின் சிறந்த மாநிலம் குஜராத்! இந்தியாவின் மோசமான, கையாலாகத மாநிலம் தமிழகம்

------------------------------------------------

12. அகதிகளாய் பல அநாதைகள்.. அநாதையாய் அலைய வேண்டியவன் அரசனாய் # ராஜபக்சே


---------------------------------

13. ஆண்டவன் இருக்கிறானா? இல்லையா? இலங்கையை சுடுகாடு ஆக்கி ஆண்டவன், ஆள்பவன் மாண்டவன் ஆவது எப்போது?

-----------------------------

14.மறை மழண்ட சிங்களர்களுக்கெதிரான மெரினா கண்டனக்கூட்டத்தில்  கலந்து கொண்ட பாடல் ஆசிரியர் தாமரை-க்கு நன்றி


-----------------------------------

15. ஒரு வி ஐ பி  ஏதாவது தவறு செய்தால் கூட புகழ்ந்து தள்ளும் ஜனங்கள், ஒரு சாதாரணன் ஒரு சாதனை செய்தாலும் அதை பழிக்கிறதே!


----------------------------------



16. ராஜபக்சே - ஓ!கடவுளே! எனக்கு நீண்ட ,ஆரோக்யமான வாழ்க்கையை கொடு!


கடவுள் - அப்படி ஒரு சம்பவம் நடந்துட்டா மக்கள் என் மேல வெச்சிருக்கற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடும்

------------------------------------

17. சோனியா - காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு..

 ராகுல் - ம்க்கும், நிகழ்காலம் மட்டும் இருக்கா?


------------------------------------------

18. தமிழன் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கான்னா “கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல, அரண்மனைல வை”ங்கறதை கொள்கையா வெச்சிருக்கறதாலதான்


------------------------------------------------

19. 'துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய்.# கரூர் ஜெகன் கோவிச்சுக்க மாட்டாரா?

------------------------------------

20. ஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன்...! # ஹூம், வாழ்க்கை ஒரு வட்டம்டா - தனுஷ்


---------------------------




21. ராஜபக்சே - இந்தியாவுல எப்படி எந்த பயமும் இல்லாம உங்களால இருக்க முடியுது?


 சோனியா - தமிழர்கள் அப்பாவிகள்,இன்னும் என்னை அன்னைங்கறாங்க

---------------------------------

22. சோனியா - நமக்கு வாய்த்த தி முக அடிமைகள் மிக மிகத்திறமை சாலிகள்!

ராகுல் - மக்கள் தான் நம் எல்லாருக்கும் எஜமானர்கள், மறந்துடாதீங்க


-------------------------------------

23. ராஜபக்சே - மேடம், என் பையனுக்கு எதுக்காக விருது கொடுத்திருக்கீங்க? \

சோனியா - தமிழர்களே அதை பற்றி கேட்கலை, உங்களுக்கென்ன போச்சு?


-----------------------------------

24. கஹானி ஹிந்திப்படத்துல நான் கர்ப்பவதியா நடிக்கறேன் -வித்யா பாலன் # மோசமான பொண்ணா டர்ட்டி பிக்சர்ல, மாசமான பொண்ணா கஹானில?


------------------------------

25. அம்மாவுக்கும்,மனைவிக்கும் நடக்கும் மோதலில் நான் பார்வையாளராக இருக்கக்கூட வாய்ப்பே இருந்ததில்லை! # கண் மண் தெரியாம அடிக்கறாங்க அவ்வ்


----------------------------------

ரஜகை ராபர்ட் படம் இது



டிஸ்கி - ராஜபக்சே- சோனியா ரகசிய உரையாடல்,வெளியிட்ட இணைய தளம் அட்ரா சக்க தான் ஹி ஹி  .......

15 comments:

Prabu Krishna said...

அண்ணா வெறும் பரபரப்புக்கு இப்படிப்பட்ட தலைப்புகளை பயன்படுத்த வேண்டாமே. இதையே தான் நீங்கள் கிண்டலடிக்கும் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள்.

முடிந்தால் தலைப்பை மாற்றவும்.

ராஜி said...

அம்மாவுக்கும்,மனைவிக்கும் நடக்கும் மோதலில் நான் பார்வையாளராக இருக்கக்கூட வாய்ப்பே இருந்ததில்லை! # கண் மண் தெரியாம அடிக்கறாங்க அவ்வ்
>>>
அடி பலமா?!

கோவை நேரம் said...

வெள்ளை வேன் வர போகுது மாமோய்....

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால காங்கிரஸை தமிழ் நாட்டுலதாம்லேய் வச்சிருக்கீங்க இன்னும் உயிரோடே, அண்ணன் ஏரியாவில் [[மும்பை]] காங்கிரஸை வேரும் வேரடி மண்ணோடும் சாச்சிட்டேம்லெய், வாய் பேச்சு நாதாரிங்க உருப்படவே மாட்டானுங்க அது எவனா இருந்தாலும் சரி, நான் பிளாக் எழுதுனது மட்டும் இல்லைலேய் காங்கிரஸ் இந்தியாவுல வேரடி மண்ணோடு சாய்க்க படனும்னு நான் சொன்னதுல என் தொகுதியில மண்ணுக்குள்ளே காங்கிரஸை புதச்சிட்டேம்லேய், முடிஞ்சா நீங்களும் செய்து பாருங்கலேய், புடுங்கி மாதிரி எழுதுறதை விட்டுட்டு ராஸ்கல் அண்ணே இது உள்குத்து அண்ணே உனக்கு புரியும்னு நினைக்கிறேன்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

வெளிநாட்டுல வேலை பார்க்குற ஒருத்தன் வந்து இப்பிடி கவுத்துட்டானேன்னு,[[தோற்கடிச்சிட்டானேன்னு]] காங்கிரஸ்'காரன் கொலைவெறில இப்பவும் சுத்திட்டு இருக்கானுக, பயங்கர பாதுகாப்புலதான் நான் இப்பவும் இருக்கேன்
மும்பையில், கொய்யால தமிழனை கொன்னவனை நான் ஆதரிப்பேன்னு நினைக்கிறே அண்ணே தைரியம் இருந்தா நாய்பக்ஷேயை மும்பை வரசொல்லு பார்ப்போம் அவன் சேதாரம் இல்லாமல் திரும்பிட்டான்னா என் செவியை அறுத்து தாரேன், சில சில நாய்ங்க சிங்களன்கிட்டே பணத்தை வாங்கிட்டு புடுங்கி மாதிரி எழுதிட்டு இருக்கானுங்க நாதாரி தமிழனுங்க துரோகி நாய்கள்.....வாங்கடா சோடி போட்டு பார்ப்போம் கொய்யால மூதேவிகளா....?

Yoga.S. said...

அந்த இணையத்தளம் "அட்ராசக்கை" தான்!///அதுக்கு ஒங்களுக்கு எல்லாத் தகுதியும் உண்டு!

Yoga.S. said...

அந்த இணையத்தளம் "அட்ராசக்கை" தான்!///அதுக்கு ஒங்களுக்கு எல்லாத் தகுதியும் உண்டு!

'பசி'பரமசிவம் said...

//இந்தியவின் மோசமான கையாலாகாத மாநிலம் தமிழ்நாடு//
ரொம்பச் சரி செந்தில்.
மிகச் சரியாகப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.

Anonymous said...

படங்கள் அருமை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யோவ்..

உம் குசும்புக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருந்தாலும் நான் போட்டுறேன்...

ஒரு...

ரைட்டு...

Unknown said...

யாருய்யா மனோவை சீண்டியது...!ஒரு பச்ச மண்ணை யாருய்யா.....!தோண்டியது...
மும்பை "கை" காரனுக்கே பை..!பை..! காட்டியவர் எங்க மனோ!

Kannan said...

இந்த பதிவை வாசிப்பவர்கள் தயவு செய்து இந்த facebook page இல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சனல் 4 வீடியோவுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இது செய்யப்படுகிறது
http://www.facebook.com/Channel4.Fake.Video

IKrishs said...
This comment has been removed by the author.
ஹேமா said...

படங்கள் எனக்கும் வேணும் சிபி !