Showing posts with label INIYA. Show all posts
Showing posts with label INIYA. Show all posts

Saturday, November 17, 2012

அம்மாவின் கைப்பேசி - சினிமா விமர்சனம்

http://chennaionline.com/images/gallery/2012/October/20121003060930/Ammavin_Kaipesi_Movie_Posters_Wallpapers_04.jpg 

ஒரு படத்தின் தயாரிப்பாளரோ , இயக்குநரோ அந்தப்படத்தில் தலை காட்ட ஆசைப்பட்டால்  பாலைவனக்கூடாரத்தில் தலைக்கு மட்டும் இடம் கேட்ட ஒட்டகத்தின் கதை ஆகி விடும், ஒரு நல்ல கதை கூட தேவையற்ற ஆக்ரமிப்பால் திசை மாறி திரைக்கதை தடுமாறிப்பயணித்து விழலுக்கு இரைத்த நீர் ஆகி விடும் என்பதற்கு சமீபத்திய நல்ல உதாரணம் தான் இந்த அம்மாவின் கைப்பேசி


படத்தோட கதையை தங்கர் பச்சான் சொன்ன மாதிரி அப்படியே சொல்லிட்டா அது தமிழ் இனத்தலைவரின்  ஈழப்பிரச்சனை பற்றிய தி முக நிலைப்பாடு மாதிரி குழப்பி அடிக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தக்கதையை எப்படி சொல்லி இருக்கனுமோ அப்படி நேரா கதைக்கு வர்றேன். 


ஹீரோவுக்கு மாமன் பொண்ணு ( ஹீரோயின் ) மேல காதல். ஆனா அவர் வேலை வெட்டி இல்லாம ஊரைசுத்திட்டு இருப்பதால் காதலுக்கு தடை. ஹீரோயினின் அப்பா நடத்தும் மினர்ல் வாட்டர் கம்ப்பெனிலயே அவருக்கு வேலை போட்டுத்தர்றாரு. நல்லா சுமூகமா போய்ட்டு இருக்கும்போது வில்லங்கமா ஹீரோ மேல ஒரு திருட்டுப்பழி விழுது.


 பெத்த அம்மாவே ஹீரோவை நம்பலை. அதனால நல்ல நிலைமைக்கு வர்ற வரை இந்த ஊர்ப்பக்கம் தலை வெச்சு படுக்க மாட்டேன்னு சவால் அல்லது சபதம் எடுத்து ஹீரோ அம்மாவை அம்போன்னு விட்டுட்டு போயிடறார்.


 7 வருஷம் ஒரு  கல் குவாரில சூபர்வைசரா , மேனேஜரா வேலை செய்யறார்.அங்கே நடக்கும் ஊழலை கண்டு பிடிச்சு ஓனர்ட்ட காட்டிக்குடுக்கறார். பணி புரியும் ஆஃபீஸ் பணத்தை 65 லட்சம் ரூபாயை பேங்க்ல இருந்து எடுத்துட்டு வரும்போது அதே கல்குவாரில ஒர்க் பண்ணின ஆட்கள் 3 பேரால் ஹீரோ கொலை செய்யப்பட்டுடறார்.



தன் மகன் வருவான் வருவான்னு பார்த்துட்டு இருந்த அம்மா, மாமன் மகள் என்ன செஞ்சாங்க என்பது மிச்ச மீதிக்கதை 


ஹீரோ சாந்தனு. மிக அருமையான நடிப்பு. இதுவரை பிளே பாயாக நடித்தவர் முதல் முதலா குணச்சித்திர நடிப்பு. வெல்டன்.ஹேர் ஸ்டைலை எல்லாம் கிராமத்தான் போல் மாற்றி பாடி லேங்குவேஜிலும் அக்கறை காட்டி இருக்கிறார். அம்மாவிடம் விளக்குமாற்றால் அடி வாங்கும் காட்சியில் தாய்க்குலங்களின் அனுதாபத்தையும் , கமல் , விக்ரம்க்குப்பின் ஈகோ பார்க்காமல் அடி வாங்கும் 3 வது தமிழ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் பெறுகிறார்


இனியா அவருக்கு  ஜோடி. காதல் காட்சியிலும் சரி , சோகக்காட்சியிலும் சரி அளவான நடிப்பு. டூயட்  காட்சியில் இளமை கொப்புளிக்கிறது. ( பல் துலக்கற சீனா?ன்னு கேட்கக்கூடாது) 


 தங்கர் பச்சான் தான் படத்துல வில்லன் படத்துக்கும் வில்லன். அதாவது இந்தப்படம் போதிய வரவேற்புப்பெறாமல் போவதற்குக்காரணமே இவர் கேரக்டர் தான். இயக்குநருக்கான கேள்விகள் பகுதில இவருக்கு ஆப்பு காத்திருக்கு,. 


 ஒளிப்பதிவு , எடிட்டிங்க் , இசை எல்லாம் நிறைவாக இருக்கு. இந்த மாதிரி கிராமியக்கதைகளில் இளையராஜாவின் இசை இருந்தால் அது படத்துக்கு பிளஸ் ஆக இருக்கக்கூடும். ஆனால் இசை புதுமுகம்.

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillsfef194123a98e23594c841797206e7cc.jpg.


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தில் முடிந்தவரை தொழில் சம்பந்தப்பட்ட விவரங்களை படத்தின் தேவைக்கு மீறி விலாவாரியாக காட்டியது.  மினரல் வாட்ட்டர் பாக்கெட் தயாரிப்பு , மாம்பழ ஜூஸ் கம்ப்பெனி , கல் குவாரி ஃபேக்டரி சம்பந்தப்பட்ட காட்சிகள் 



2. படத்தின் மெயின் கதையிலோ, நாவலிலோ கல்குவாரி பற்றி இல்லை. ஆனாலும் பட ஷூட்டிங்க்கின் போது டாபிக்கல் மேட்டராய் கல்குவாரி பிரச்சனை ஓடியதால் மணி ரத்னம் பாணியில் அதை சாமார்த்தியமாய் உள் நுழைத்தது 



3..ஹீரோ - ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் இளமை ஊஞ்சல் , தூரி ஆடும் வகையில் படப்பிடிப்பு 



4. சைக்கிள் கேப்பில் கிராமத்து நடன வகைகள் , கிராமத்து இசை வாத்தியங்களை ஆங்காங்கே சேர்த்து இசையை ரசிக்க வைத்தது 


5. பெரும்பாலான கேரக்டர்களை கிராமத்து நிஜ மனிதர்களை நடிக்க வைத்தது. ஒரே கல்லுல 2 மாங்காய். நடிப்பு இயல்பா இருக்கும். சம்பளமும் தரத்தேவை இல்லை.. வேலை வாங்கும் சாமார்த்தியம் இருந்தா போதும் 


6. தங்கரின் மனைவியாக வருபவர் நடிப்பு அற்புதம். ரசிக்கத்தக்க நடிப்பு + இடுப்பு மடிப்பு 


http://mimg.sulekha.com/tamil/ammavin-kaipesi/stills/ammavin-kaipesi-movie-pics-0124.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. படத்தோட மெயின் கதை அம்மா , மகன் பாசம் , பிரிவு மீண்டும் அவர்கள் சேர்வது பற்றித்தான். ஆனால் திரையில் 60 % கதையை இயக்குநரான நீங்களே ஆக்ரமிச்சுட்டா மெயின் கதையின் தாக்கம் எபப்டி மக்களுக்குப்போய்ச்சேரும்? 


2. படத்துல 3 வில்லன்க. அதுல ஒருத்தர்தான் இயக்குநரான நீங்க.. அதென்ன உங்களூக்கு மட்டும் ஏகப்பட்ட காட்சிகள் , ஒரு டூயட் வேற . சகிக்கலை.. இந்த லட்சணத்துல இயக்குநருக்கு ஒரு கில்மா சீனும், ஏய் இன்னொருக்கா அப்டினு கேட்கும் கிளு கிளு காட்சியும், படத்துல மகா எரிச்சலை வரவைக்கும் காட்சி.. ஏய்யா , கதை எவ்ளவ் சீரியஸா போய்ட்டிருக்கு.. அதுல போய் கில்மா காட்சியா? அப்டியாவது ஹீரோ - ஹீரோயினுக்குன்னா கூட பரவாயில்லை.. 


3. க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனான நீங்க ஒரு கொலையை பண்ணிட்டு சாமி கோயில்ல ஆணி செருப்புல நடந்து தாய்க்குலத்தின் இரக்கத்தை சம்பாதிக்க முயற்சி பண்ணிய சீனுக்காகவே உங்களை  ஜெயில்ல போடனும் . படு கேவலமான , அனுதாபத்தை பிச்சை கேட்கும் காட்சி// 



4. ஹீரோ அம்மாவுக்கு ஃபோன் பண்றார். அம்மா செல்ஃபோனை வந்து எடுக்கறதுக்குள் கட் ஆகிடுது. ஏன் அவர் 2 வது டைம் பண்ண மாட்டாரா>? 7 வருஷம் பிரிஞ்சு இருப்பவர் இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பாரா? 



5. அம்மா - மகன் செண்ட்டிமெண்ட் காட்சியை பிழிஞ்சு எடுக்க  நினைத்ததெல்லாம் ஓக்கே. அதுக்கு  என்ன பண்ணி இருக்கனும்? அம்மா - மகன் பாசத்தை ஆல்ரெடி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும்.. ஒரு சீன் கூட அம்மா மகன் பாசக்காட்சியே ஆழமா காட்டலை./. உங்களூக்கு உங்களை முன்னிலைப்படுத்தவே நேரம் சரியா இருக்கு 


6.  மாமன் மக்ளை பிரிஞ்சு போன ஹீரோ அவருக்கு ஒரு கடிதம் கூட போட மாட்டாரா?  அட்லீஸ்ட் ஹீரோயின் தோழி, பக்கத்து வீட்டுக்காரம்மா யார் மூலமாவது தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டாரா>? 



http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillse7cee2300ad768707777b28d444c8bba.jpg



7. மாமன் மகளுக்கு மேரேஜ் வேற ஒருவர் கூட ஆகிடுது. அதுக்கு அவர் சொல்ற காரணம் செம காமெடி . உங்க கிட்டே இருந்து தகவலே வர்லை என்பதால் நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சேன். டெட் பாடி பார்க்காம எப்டி அப்டி ஒரு முடிவுக்கு வர்றது? 


8. கல் குவாரில அப்போதான் முதல் நாள் வேலைக்கு சேரும் ஹீரோ சட்டசபையில் கேப்டன் மாதிரி ரணகளப்படுத்துவது எப்படி? முதல் நாள்ல எல்லாருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். அந்த காட்சி படு செயற்கை 



9. ஆண்டாண்டு காலமாய் ஊழல் செய்யறவன், கோடிக்கணக்குல சம்பாதிச்சவன் தனக்கு இடையூறாய் ஒருத்தன் வந்தா  டக்னு ஆளை கொலை செஞ்சு விபத்து மாதிரி காட்டுவானே தவிர நீயும் கூட்டாளீயா சேருன்னு கோடிக்கணக்குல பணத்தை லாஸ் ஆக்க மாட்டான்.. 


10. கல்குவாரில நல்ல வேலைக்கு சேர்ந்ததும் ஹீரோ ஏன் அம்மாவுக்கு தகவல் சொல்லலை? மாமன் மகள் இடம் தன் சந்தோஷத்தை பகிர்ந்துக்கலை. காதலியிடம் தான் இப்படிப்பட்ட சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்க முடியும். அதை ஏன் அவர் செய்யலை? 



11.  பத்துநாளா உனக்கு ஃபோன் பண்ணிட்டே இருக்கேன், ஏன் எடுக்கலை?னு ஹீரோயின் கேட்டப்ப ஹீரோ சொல்லும் டயலாக் சிறுபிள்ளைத்தனமானது. “ நான் இங்கே ஒரு பிரச்சனைல மாட்டி இருக்கேன்” அதான்.   10 நாளா அவர் குளிக்காம , சாப்பிடாம இருந்தாரா? ஃபோன் அட்டெண்ட் பண்ணக்கூட டைம் இல்லையா?


12. பேங்க்ல 65 லட்சம் கேஷ் தர்றாங்க.அதை எத்தனை கட்டு இருக்குன்னு கூட செக் பண்ணாம எந்த  மடையனாவது பேக்கை திறந்து கூட பார்க்காம வாங்கிட்டு வருவானா? காட்டுப்பாதைல அவ்ளவ் கேஷ் வெச்சுக்கிட்டு  தனியா பயணம் செய்வாங்களா? எங்க ஆஃபீஸ்ல ஒரு லட்சம் வித்ட்ரா பண்ணிட்டு வர்றதுன்னாலே மேனேஜர் 2 பேரை கூட கூட்டிட்டுப்போங்கறார். 65 லட்சம் அப்படி அநாமத்தா விட்டுடுவாங்களா? 


http://www.breezemasti.com/gallery/data/media/201/iniya_in_ammavin_kaipesi_movie_stills_2.jpg


13. முக மூடி போட்டு வழிப்பறி பண்றவங்க ஏன் திடீர்னு அதை கழட்டி ஹீரோ கிட்டே தங்களை அடையாளப்படுத்திக்கறாங்க? துப்பாக்கில வந்த மாதிரி சஸ்பென்சோட  சாவுன்னு ஏன் சொல்லாம இடம் சுட்டி பொருள் விளக்கி டைம் வேஸ்ட் பண்றாங்க?



14. ஹீரோவை  2 பேர் சூழ்ந்ததும் என்னை விட்டுடு , பணத்தை வேணா எடுத்துக்க அப்டினு ஹீரோ சொல்றது எப்படி? 10 பேர் சேர்ந்த கும்பல்னா ஓக்கே , ஜஸ்ட் 2 பேர். சமாளிக்கலாமே? ஏன் முயற்சியே பண்ணலை? 


15. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பணத்துக்காக தன்னை துரத்தும் 2 வில்லன்க கிட்டே இருந்து தப்பிக்க அந்த பள்ளத்தாக்குல இருந்து ஜஸ்ட் தண்ணீரில் ஜம்ப் பண்ணி இருக்கலாமே? ஏன் செய்யலை? ( நீச்சல் தெரியாதுன்னு சாக்கு சொல்ல வழி இல்லை.. கிராமங்களில் நீச்சல்  தெரியாத ஆளே இல்லை )



16. க்ளைமாக்ஸ் ஓவர் இழுவை.. சீக்கிரம் முடிங்கப்பா  என தியேட்டர்ல அவனவன் கதறிட்டு இருக்கான்.. 


17. யார் நம்பலைன்னாலும் பெத்த அம்மா மகனை நம்புவா.அப்படியே நம்பலைன்னாலும் வெளீல சொல்லிட்டு இருக்க மாட்டா. ஊர் மக்கள் முன்னாடி விளக்கு மாற்றால் அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர் 



http://masscinema.in/wp-content/gallery/ammavin-kaipesi-movie-stills/ammavin-kaipesi-movie-stills-11.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. சும்மா இருக்கும் ஆம்பளையை எந்த பொண்ணுக்கும் பிடிக்காது # ( சும்மா = வேலைக்குப்போகாம)


2. இன்னைக்கு உலகத்துல இருக்கும் பெரும்பாலான பணக்காரர்கள் எல்லாருமே ஒரு கால கட்டத்துல ஒரு வேளை சாப்ப்ட்டுக்கூட வழி இல்லாம கஷ்டப்பட்டவங்களே.. 



3. இன்னும் 10 வருஷத்துல இந்த நாடே குடிகார நாடா மாறப்போகுது


4. சுத்த பத்தமா இருந்தா எங்கேயும் சாப்பிடலாம். கையேந்தி பவன்ல கூட .


5.  தமிழ்ல இருக்கறதுலயே உயர்வான வார்த்தை அய்யா தான்.
சார் எல்லாம் வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சது.


6. ஒரு வெள்ளைக்காரன் இன்னொரு வெள்ளைக்காரனை சார்னு கூப்பிட்டு பார்த்திருக்கிங்களா? 


7. கிழவன் தான் கரும்பு ஜூஸ் குடிப்பான், குமரன் கரும்பைத்தான் கடிப்பான் ( டபுள் மீனிங்க் )


8. குவாரிங்கறது தங்க முட்டை இல்லை இல்லை வைர முட்டை இடும் வாத்து



9. அம்மா அலங்காரம், நீயே ஒரு அலங்காரம் , உனக்கு எதுக்கும்மா இன்னும் அலங்காரம்? 


 http://tamilmaxs.com/wp-content/gallery/ammavin-kaipesi-tamil-movie-stills/thangar-bachan-and-meenal-at-ammavin-kaipesi-movie-stills-3.jpg



 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 


  எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 



 எதிர்பார்க்கும்   டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேட்டிங்க் -  5 /10



சி.பி கமெண்ட் - தாய்க்குலங்கள் , டி வி சீரியல் ரசிச்சுப்பார்க்கறவங்க பார்க்கலாம். மற்ற யாராவது போனீங்க அவ்ளவ் தான். இல்லை அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு என நல்ல படம் எல்லாம் குடுத்திருக்கார். ஏமாற்ற மாட்டார்னு அடம் பிடிக்கறவங்க போங்க , படுங்க ஐ மீன் பட்டுத்தெளிங்க.ஈரோடு தேவி அபிராமியில் பார்த்தேன் .


http://filmiparadise.com/upload/stills/1628_wallpaper202813257.jpg

 

Friday, December 23, 2011

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjURnG-36EaHoB-BgoOUHD49jWBWhCKSUy-QTGIXDtBlq3YWjJPQDAjj9s4alZatfzhzBDjgcEutuKSf0Ri_0UzdKIz3owjNu79rCF8TPs8pj2BuulxEHIXMKU3OtffV-K_oLfs_T4Czw/s1600/Rajapattai-Movie-new-Posters-2.jpg 

அடடே.. வாங்க சுசிந்திரன் சார்.. கோடம்பாக்கத்துல தொடர்ந்து 3 படங்கள் வெவ்வேற பாணில பண்ணிட்டீங்க..அதுல வெண்ணிலா கபாடி குழு -ல உங்க டச் இருந்துது.. அழகர்சாமியின் குதிரை-ல வியாபார ரீதியா சரியா போகலைன்னாலும் ஒரு அழகியல் உணர்வோட கதை சொல்லி இருந்தீங்க, நான் மகான் அல்ல படம் பக்கா கம்ர்ஷியல். இதுவரை யாருமே சொல்லாத கதை, ஹீரோவோட அப்பாவை கொலை செஞ்சவங்களை பழி வாங்கற வித்தியாசமான கதை.. மொத்தத்துல உங்களை நம்பி தியேட்டருக்கு வரலாம்.. அந்தளவு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ரேஸ் குதிரை சார் நீங்க.. 

ரொம்ப தாங்க்ஸ்.. தம்பி... நற நற 

ஏன் சார் பல்லை நற நறனு கடிக்கறீங்க?

நான் தமிழ் ரசிகர்கள் மேல கோபமா இருக்கேன்.. அழகர்சாமியின் குதிரை படத்தை அவங்க ஓட்டலை..

அட விடுங்கண்ணே, தியேட்டர்ல ஆபரேட்டரே படத்தை ஓட்டாம இடைவேளைக்குப்பிறகு தூங்கிட்டாராம்.. அது பழைய கதை அதை விடுங்க.ராஜபேட்டை என்ன கதை, இதுக்கு ஸ்டோரி நாட் (KNOT) எங்கே பிடிச்சீங்க?

. உன் சொந்த ஊரு ஈரோடுதானே? அங்கே என்கேகே பி ராஜா -சிவபாலனை ஏமாற்றி நில மோசடி பண்ணாரே.. அதை பேஸ் பண்ணி சசிகலாவை வில்லி ஆக்கிட்டேன் ஹி ஹி 


http://glmourheroine.files.wordpress.com/2010/12/telugu-cute-actress-latest-deeksha-seth-saree-stills.jpg


அவங்க ஆல்ரெடி வில்லிதானே.. என்ன, இத்தனை நாளா போயஸ்ல ஜல்லி அடிச்சிட்டு இருந்தாங்க , இனி அது முடியாது.. அவ்ளவ் தான் , சரி , இந்தப்படம் மூலமா நீங்க இன்னா சொல்ல வர்றீங்க?

ஒரு பக்காவான கமர்ஷியல் சக்சஸ் டைரக்டர்னு காட்டறேன் அவ்ளவ் தான்.. 

கே விஸ்வநாத் சார் கவுரவமான டைரக்டர், அவரை காமெடி பீஸ் ஆக்கிட்டீங்க, பாவம், ஆனாலும் அவர் நல்லாவே நடிச்சிருக்கார்.. ஓப்பனிங்க்ல சினிமாவில் வில்லனா நடிக்க ஆசைப்படும் விக்ரம்க்கு காதல் ஐடியா குடுக்கறதும், ஃபிகர்ங்களை  மடக்க அவர் ஜொள்ஸ் பார்ட்டி ஜக்கு ஆகறதும் லேசா செயற்கை தட்டுனாலும் ரசிக்க முடியுது.. இதுவரை தமிழ் சினிமால ஹீரோக்கு லவ் பண்ண தாத்தா ரேஞ்ச்ல இருக்கறவர் இவ்ளவ் தரை மட்டமா இறங்கி யாரும் பார்த்தே இருக்க மாட்டாங்க.. 

இந்தப்படத்துக்காக விக்ரம் உழைப்பு பற்றி சொல்லுங்க

பொறுங்க சொல்றேன், விக்ரம் ஜிம் பாடிதான் அதுல ஒண்ணும் யாருக்கும் டவுட் இல்ல, ஆனா அவர் ஏன் அப்படி விறைப்பா அப்படி படம் பூரா வர்றாரு? நெஞ்சை நிமிர்த்திட்டே இருக்காரு? அவ்வ்வ்வ்வ்வ்

தீக்‌ஷாசேத்னு ஒரு ஃபிகர் ஆந்திரா பார்ட்டி.. தெலுங்குல இருந்து இறக்கு மதி பண்ணி  இருக்கோம்..



http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/pictures/kollywood/movies/2011/Rajapattai/Rajapattai%20Movie%20and%20Working%20Stills/Rajapattai%20Movie%20and%20Working%20Stills-d506d672233e5a89b87748253ed06caa.jpg
சுங்க வரி சாரி சினிமா சங்க வரி கட்டிட்டீங்களா? சும்மா சொல்லக்கூடாது.. ஃபிகரு கொழு கொழுன்னு , மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கு.. பாப்பாவுக்கு நடிப்பு வருதா ? வராதா?ன்னு தெரில. ஏன்னா அதுக்கு நீங்க சீனே வைக்கலை.. இடுப்பு மடிப்பு தெரியத்தான் சீன் வெச்சிருக்கீங்க.. 

சும்மா இல்ல தம்பி.. 50 லட்சம் சம்பளம்.. அதான் ஃபுல்லா யூஸ் பண்ணிக்கிட்டேன் ஹி ஹி 

சரி.. உங்க வாயால படத்தோட கதையை அட்ரா சக்க இணைய தள வாசகர்களுக்கு ஒரு தடவை சொல்லிடுங்க... 

அதாவது ஒரு பெரிய கோடீஸ்வரர்.. அவருக்கு ஒரு பொறுக்கி பையன் இருக்கான்.. 

அது தெரிஞ்சதுதானே, சினிமால பணக்காரனுக்கு வாய்க்கர பசங்க எல்லாம் பொறுக்கி பையன்களாத்தானே இருப்பாங்க?

அவனுக்கு எம் எல் ஏ ஆக ஆசை வருது.. சசிகலா ஒரு அரசியல்வாதி, சசி கிட்டே வந்து சீட் கேட்கறான், அந்த சசி அந்த பொறுக்கி கிட்டே உங்கப்பா பேர்ல இருக்கற 30 கோடி ரூபா சொத்துல ஒரு ஆசிரமம் கட்டி இருக்காரே அந்த நிலத்தை மட்டும் எழுதி வாங்கு, நீதான் எம் எல் ஏங்கறார்.. அந்த பொறுக்கியோட தொந்தரவும், டார்ச்சரும் தாங்க முடியாம கோடீஸ்வர அப்பா எஸ் ஆகி கரெக்டா ஹீரோ கிட்டே வந்து சேர்றார்.. ஹீரோ எப்படி ஹீரோயினை கவனிச்சுக்கிட்டே , தன்னை எதிர்க்கிற வில்லனோட 178 அடியாட்களையும் அடிச்சுப்போட்டுட்டு, வில்லியை கரெக்ட் பண்றார்?ங்கறதுதான் கதை..



http://www.southgossips.in/wp-content/uploads/2011/06/deeksha-seth-at-raja-pattai-movie-press-meet-21.jpg

என்னது? ஹீரோ வில்லியை கரெக்ட் பண்றாரா? அடங்கோ..

ஓ சாரி சாரி. வில்லியை டிஸ் கனெக்ட் ஃப்ரம் திஸ் கேஸ் அப்படிங்கறதுதான் கதை.. 

படத்துல நாலே பாட்டு, 4ம் ஓக்கே யுக பாரதி, யுவன் சங்கர் ராஜா கூட்டணி நல்லாவே பண்ணி இருக்காங்க.. ஓப்பனிங்க் ஷாங்க் -ஒரு பையன் போலவே பாட்டுல ஹீரோயின் செம செம. வில்லாதி வில்லன் எல்லோரும் குத்தாட்ட பாட்டு ஓக்கே , அதுக்கு ஆடுன நடிகை பயங்கர தொப்பை, சகிக்கல.. அவ்வ்வ் லோஹிப் காட்ற ஃபிகர்ங்க எல்லாம் நல்லா நோட் பண்ணீக்குங்க, தொப்பை இருந்தா தயவு செஞ்சு அவாய்டு தட் லோ ஹிப் சேலை ஐடியா ( சமூகத்துக்கு மெசேஜ்ங்கோவ்), ஓ கனியே பனிப்பூவே நல்ல மெலோடி.. 


ஃபைட் சீன் பற்றி சொல்லவே இல்லையே... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin3-LzoonE-dsa2tEqhR_WRMIIReMo-Fzv0gf254DljJ03RMVKj0K6Jt2l40YEYhKus1_NYBLW2RD0IClDCroG4iSn0OKNJj_S8zFGII3y8j8wblx9OQ6q01EnJZRl6BtVLmXm654MdD68/s1600/Deeksha_Seth_Spicy_Saree_10-586x1050.jpg
 


அய்யா அய்யா உங்க காலை காட்டுங்க.. ஃபைட்ஸ் எல்லாம் செம.. 67 வில்லன் அடியாட்களை 3 நிமிஷத்துல ஹீரோ அடிக்கறது சூப்பர்.. எனக்கு ஒரு டவுட், பொதுவா எல்லா சினிமா மசாலா டைரக்டரையும் கேட்கறேன், ஹீரோ வில்லனை தன் மண்டையால நங்க்-னு சத்தம் வர்ற மாதிரி தாக்கராரு.. வில்லனுக்கு ரத்தம் வருது.. ஹீரோவுக்கு வியர்வை கூட வர்லை.. அசால்ட்டா இருக்கார்.. அப்புறம் ஹீரோ பைக்ல போறப்ப, டூயட் பாடறப்ப கூலிங்க் கிளாஸ் போடட்டும் ஸ்டைலுக்கு ஒத்துக்கலாம்.. ஆனா 80 பேரை அடிக்கறப்ப கூட கிளாஸ் போட்டுட்டே தான் அடிக்கறார், கண்ணு தெரியுமா? அவ்வ்வ்வ் 

டேய் நாயே கூலிங்க் கிளாஸ் பற்றி நீ பேசறே... வேற பேசு.. 

படத்தோட முதல் 4 ரீல்ல ஹீரோயின் ஹீரோ லவ் வர்ற சீன் எல்லாம் செம .. நேரம் போறதே தெரியல.. அப்புறம் வாப்பா கேரக்டர்ல வர்ற கஜினி பட வில்லன் பிரதீப்பை விக்ரம் சி பி ஐ ஆஃபீசர் மாதிரி விசாரனை பண்ற சீன் சொன்னா கோபப்படாதீங்க - கேனத்தனமா இருக்கு. அதை கூட ஏத்துக்கலாம், அவர் சிட்டிசன் அஜித் மாதிரி 6 கெட்டப்ல மாத்தி மாத்தி விசாரணை பண்றது படு செயற்கை.. எதுக்கு அப்படி சீன் வெச்சீங்க? 

ஹி ஹி ட்ரெய்லர்ல, போஸ்டர்ல விக்ரம் பல கெட்டப்ல நடிக்கறார்-னு ஒரு பில்டப் காட்டத்தான்.. மற்றபடி வேற ஏதும் உள்குத்து இல்ல..

அப்புறம் ஒரு முக்கிய மேட்டர், சசிகலாவா வர்ற மேடம் அதான் அக்கா கேரக்டர் செம தெனாவெட்டு ஹி ஹி சரி உங்க கிட்டே சில கேள்விகள் கேட்கறேன் பதில் சொல்லுங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFqWEUCHTVG7c32W_eqhuXoqVO7M7uK4mPXlvr8DhxMFCPq6Eo45A5wZ-kEXz0kC5nB4UJZ5c5bnKkFIy61PO709CE9Dt-uWnuk7FQR8xvyt8JIcOG7Ul5c_RXS3xg54WoJqZrSedZlWn_/s1600/Deeksha+Seth_+in+Wanted+Movie+%25286%2529.jpg


1. விஸ்வநாத் ஃபோட்டோவை 1500 காபி ஜெராக்ஸ் எடுத்து தமிழ்நாடு பூரா ஆட்களை விட்டு தேடச்சொல்ராரே வில்லி சசிகலா அவர் என்ன அவ்ளவ் ஏழையா? காணவில்லை எனது தந்தையை-னு மகன் தர்ற மாதிரி  நியூஸ் பேப்பர்ல ஒரு விளம்பரம் தந்தா மேட்டர் ஓவர், சன்மானத்துக்கு ஆசைப்பட்டு எவனாவது காட்டிக்குடுத்துடப்போறான்.. 


2. விஸ்வநாத் தன் மகன் ஒரு பொறுக்கின்னு தெரிஞ்சே தான் வீட்டை விட்டு வெளீயே வர்றார்.. அவர் தன் மகன் அழுது டிராமா பண்ணுனதும் நம்பி உடனே அவன் கூட போய் பத்திரத்துல கையெழுத்து போட்டுடறாரே, அவர் என்ன அவ்ளவ் கேனையா? இல்ல படம் பார்க்கற நாங்க கேனையா?

3. நாட்டையே ஆட்டிப்படைக்கற சசிகலா மாதிரி ஒரு வில்லி சாதாரண ஸ்டண்ட் நடிகரை பார்த்து அப்படி பயப்படறாரே...ஹீரோ என்பதாலா?

4. அட்டகாசமான திறமை உள்ள விக்ரமை ஏன் பல காட்சிகளில் லூஸ் மாதிரி காட்டி இருக்கீங்க? குறிப்பா அழும் குழந்தையை  சிரிக்க வைப்பதற்காக காமெடி ஃபைட் போடும் ஹீரோ சகிக்கல,,

5. ஹீரோ 3 வருஷமா ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றாரு, ஹீரோயின் கண்டுக்கலை, ஆனா விஸ்வநாத் வந்து ஒரு ஐடியா தர்றாரு.. சினிமாவுக்கு கூப்பிடுன்னு.. உடனே பார்ட்டி செட் ஆகிடுது.. அந்த அலவு கூட ஐடியா இல்லாத மாங்கா மடையனா அவரு?

6. படத்துல போலீஸ்னு ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கறதையே யாரும் கண்டுக்கலை. ஆல் இன் ஆல் ஹீரோவே பார்க்கறாரு அவ்வ்வ்வ்வ்வ்

7.  30 லட்சம் ரூபா சம்பளம் குடுத்து ஸ்ரேயா, ரீமாசென் 2 பேரையும் ஒரு டான்ஸ்க்கு ஆட விட்டிருக்கீங்க , ஓக்கே ஆனா அதை ஏன் படம் முடிஞ்சு , டைட்டில் போடறப்ப பாட்டை போடறீங்க? பாதிப்பேர் கிளம்பிட்டாங்க.. அட்லீஸ்ட் ஒரு அறிவிப்பாவது தந்திருக்கலாம்.. இப்போ ஒரு பாட்டு வரப்போகுதுன்னு..

8. க்ளைமாக்ஸ்ல கோர்ட் வளாகத்துல போலீஸ் செக்யூரிட்டியோட வில்லி வர்றப்ப அரை கிமீ தூரத்துல இருந்து ஒரு ஆள் ஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்-னுகத்திட்டே வந்து கத்தியால குத்தறார்.. போலீஸ் எல்லாரும் கையில் கன் வெச்சிக்கிட்டு ஆன்னு வேடிக்கை பார்க்கறாங்க, ஏன்? ( அட்லீஸ்ட் அவன் சவுண்ட் இல்லாம வர்ற  மாதிரியாவது காட்டி இருக்கலாம்.. )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVRM6WvTkfWcrouW6ehzy-_OxcV0O_PxLDWC_uvHH1paX3n-cyyGVlTU7MM9cg9AqoHyilc_Y_5qKHkxh6WSmL-Q9MpIbK2EjUmGLrwNpmOWjXghXyM349PsCcoN_fmyiovgnboaycMdFs/s640/deeksha_seth_mirapakaya_movie_stills_01.JPG


ஜாலியான கமர்ஷியல் மசாலாதான், ஆனா புளிச்சுப்போன கதை.. 


25 நாட்கள் ஓடும் , பொங்கல் வருதே, அதுக்குள்ள அள்ளூனாத்தான் உண்டு

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

சி.பி  கமெண்ட் - வித்தியாசமான படங்கள் விரும்பும் ரசிகர்களூக்கான படம் இல்லை, ஆனாலும் மசாலா ரசிகர்கள் பார்க்கலாம், பொழுது போகுது, காமெடி இருக்கு.. கிளாமர் இருக்கு

ஈரோடு - பள்ளிபாளையம் ஜெயலக்‌ஷ்மி தியேட்டர்ல படம் பார்த்தேன்

 படத்துல கலக்கலான காமெடி 30 ஜோக்ஸ் தேறும், அது திங்கள் கிழமை போஸ்ட்ல

டிஸ்கி - கீழே உள்ள ஃபோட்டோ படத்துல கிடையாது,தீக்‌ஷா சேத்-ன் ஒரு தெலுங்குப்பட ஸ்டில் அது அவரோட ஃபேஸ் புக்ல இருந்து சுட்டது ஹி ஹி ..

ராஜபேட்டை , டான் -2 , எட்டாம் நெம்பர் வீடு - ஒரு முன்னோட்ட பார்வை

http://i.indiaglitz.com/tamil/news/rajapattai290911_1.jpg1. 1.  ராஜபேட்டை - தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். தில், தூள், சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்க பக்கா கமர்ஷியல் படம் இது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார். டைரக்டர் கே.விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிறுத்தை புகழ் அவினாஷ், நான் மகான் அல்ல வில்லன் அருள்தாஸ், ப்ரதீப் ரவாத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிலமோசடி தொடர்பாகவும் அவற்றுக்கு பின்னே இருக்கும் மோசடி கும்பல் பற்றிய கதைதான் ராஜபாட்டை. படத்தில் விக்ரம் வில்லனிடம் இருக்கும் அடியாளாக ஜிம் பாயாக நடிக்கிறார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வி.பி.சினிமா புரெடக்ஷன்ஸ் சார்பில் பிரசாத் வி.பொட்லாரி தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் முதல்படம் இது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

சி.பி -இப்போ நடக்கறது அதிமுக ஆட்சி என்பதால் திமுக ஆட்சியில் நடந்த ,குறிப்பாக ஈரோடு என் கே கே பி ராஜா மாதிரி ஆளுங்களோட வணடவாளங்களை தண்டவாளத்துல ஏத்துற படமா இருக்கும். 

சென்னை, பாண்டிச்சேரி, ஹைதரபாத், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும், பாடல் காட்சிகள் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர். படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. டிச.23 முதல் திரைக்கு வர இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் நடிக்கும் பக்கா கமர்ஷியல் படம் ராஜபாட்டை.

http://tamilmoviesonline.co.in/wp-content/uploads/2011/11/Deeksha-Seth-In-Rajapattai-6_thumb5.jpg

 சி.பி - ஆனா ட்ரெய்லர் எல்லாம் பார்த்தா தல அஜித் நடிச்ச சிட்டிசன் நினைவு தான் வருது.. விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்ல வர்றார்.. அந்த மேக்கப் எல்லாம் சரியா பொருந்தலை.. லெட் ஸி ,எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை .

ஹீரோயின் மெழுகு பொம்மை மாதிரி இருக்கு..ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசா, சங்கீதா ஆகிய 3 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது..

2. டான் 2 -ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா, போமன் இரானி நடித்த படம், ‘டான்’. அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் 1978ல் வெளியான ‘டான்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘டான் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. 


ஷாரூக், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குணால் கபூர் நடிக்கும் இந்தப் படம் தமிழில் அதே பெயரில் டப் ஆகிறது. ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜேசன் வெஸ்ட். வரும் 23ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. ‘டான்’ படத்தில் நடித்தவர்களில் அர்ஜுன் ராம்பால், இஷா கோபிகருக்குப் பதிலாக, இதில் லாரா தத்தாவும் குணால் கபூரும் நடித்துள்ளனர். 

டான் 2

 சி.பி -இதுல ஷாரூக் கெட்டப் எல்லாம் பார்த்தா அஜித் நடிச்ச பில்லா -2 கதையைத்தான் சுட்டுட்டாங்களோன்னு டவுட்டா இருக்கு.. பில்லா படத்துல அப்பாவி அஜித்தா வர்ற கேரக்டர்க்கு பரம சிவன்ல அஜித் வர்ற கேரக்டருக்கான கெட்டப்பை ஷாரூக் இதுல யூஸ் பண்ணி இருக்கார்.. 
இதை எல்லாம் வெச்சுப்பார்க்கும்போது டான் 2 பில்லா ரீமேக் , அல்லது பில்லா-2 வை தழுவிய கதை என்று தான் தோணுது..

சொல்ல முடியாது, டான் -2 படக்கதையை தெரிஞ்சுக்கிட்டு பில்லா -2 படம் அதே கதையை சுட்டு எடுக்கறாங்களோ  என்னவோ?எப்படியும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம், எப்படின்னா விக்ரம் நடிச்ச ராஜபேட்டையை விட இந்த ப்டத்துக்கு நல்ல தியேட்டர்ஸ் அமைஞ்சுருக்கு.

http://www.thedipaar.com/pictures/resize_20111108075821.jpg



ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ஹிந்தியிலும், ஈரோடு ஆனூர் தியேட்டர்ல தமிழ் டப்லயும் ரிலீஸ் ஆகும் போல தோணுது..


3. எட்டாம் நெம்பர் வீடு - ரொம்ப நாளுக்குப்பிறகு ஒரு பேய்ப்படம், இது நேரடி தமிழ்ப்படம் போல தெரில.. ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா சி ஐ டி காலனின்னு ஒரு ஹிந்திப்படம் வந்ததே அந்த படத்தை டப் பண்ணி நைஸா ரிலீஸ் பண்றாங்கன்னு நினைக்கறேன்.. ஈரோடு ஸ்டார் தியேட்டரில் ,அண்ணாவில் ரிலீஸ்..

இந்தப்படத்துக்கு ஸ்டில் போடலாம்னு கூகுள்ல தேடுனா கிடைக்கலை.. என்னய்யா மார்க்கட் பண்றீங்க?


Saturday, December 17, 2011

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/12/mouna_guru_movie_posters_27.jpg


திருட்டு பயலே,ஆரண்ய காண்டம், யுத்தம் செய் படங்களுக்குப்பின் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடு களம் இறங்கி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி இயக்குநர் சாந்தகுமாருக்கு அழகிய பூச்செண்டுடன் வரவேற்று வாழ்த்தலாம்..

சாலை விபத்தில் ஒரு கார் சிக்குது..டிரைவர் உயிருக்கு போராடறான்.. அந்த கார் டிக்கில கோடிக்கணக்குல பணம்.அந்த வழியா வந்த போலீஸ் ஜீப்ல ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீஸ், அந்த பணத்தை ஆட்டையை போட்டுடறாங்க.இதுக்கு மாஸ்டர் பிளானாக இருக்கும் இன்ஸ்பெக்டர்  தன்னோட சின்ன வீட்டுல இருக்கறப்ப இந்த மேட்டர் சம்பந்தமா தன் கூட்டாளிகளோட ஃபோன்ல பேசறதை பாப்பா வீடியோ எடுத்துடுது..

அந்த வீடியோவை வெச்சு மிரட்டி பணம் முழுவதையும் தானே கறந்துடலாம்னு பாப்பா ஐடியா பண்றப்ப  காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் அந்த வீடியோ கேசட்டை ஆட்டையை போட்டுடறான்.. இது ஒரு டிராக்.. ஹீரோ எப்படி எண்ட்டர் ஆகறார்?

ஹீரோவோட கேரக்டரை நல்லா புரிய வெச்சுடறாங்க ஓப்பனிங்க் ஷாட்லயே.. ஆள் பார்க்க அமைதி டைப். ஆனா 2 ரூபா சில்லறையை ஏமாத்துனதுக்காக ஒன் ருப்பி காயின் பூத்தையே உடைக்கற ஆள்.அவர் தன் அண்ணன் வீட்டுக்கு வர்றார், காலேஜ்ல படிக்க , ஹாஸ்டல்ல தங்கறார். அண்ணிக்கு ஒரு தங்கை.. அதான் ஹீரோயின். 2 பேருக்கும் லவ் ஆகறதை அழகிய கவிதையா போற போக்குல சொல்லிடறாங்க..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiijFWhNk-jHCPETBDuV_QuUeTaAokPpdPEhR_ZY6rVnMRmLlDk_QhIOyslNFlBBx_GU_kAriyLL5msifV6qLVx2G051C6loXlEz5UGgpFP0BOcSTWaD01rDMqQdxkRHzfJKtRmPhVMjaQ/s1600/iniya+Pair+With+Arulnidhi+in+Mouna+Guru+Movie+Stills+Photos+gallery+Pics+%252830%2529.jpg
இப்போ ஹீரோதான் அந்த வீடியோ கேசட்டை எடுத்த ஆள்னு தவறா புரிஞ்சுட்டு ஹீரோ & வேற 2 பசங்களை காட்டுக்குள்ள அந்த இன்ஸ்பெக்டர்  குரூப் கடத்திட்டு வந்து என்கவுண்ட்டர் டிராமால போட்டுத்தள்ளறப்ப  வீடியோ  வெச்சிருக்கற ஆள் வேறன்னு தெரிய வருது.. ஆனா மேட்டர் இவங்களுக்கு த்தெரிஞ்சதால  போட வேண்டிய சூழல்.. ஹீரோ எப்படியோ எஸ் ஆகிடறார். இங்கே இடைவேளை..

ஹீரோவை ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்து அவனை பைத்தியம்னு பட்டம் கட்டி விட்றாங்க..அவர் எப்படி அதுல இருந்து தப்பி  வர்றார்?ங்கறது மிச்ச கதை.. இந்த கேசை டீல் பண்ற இன்னொரு லேடி இன்ஸ்பெகடர் அந்த 4 போலீஸ்தான் குற்றவாளிகள்னு கண்டு பிடிக்கறார்.. இடைவேளை வரை செம விறு விறுப்பு.. பின் பாதியில் லேசான தொய்வு இருந்தாலும்  அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.. 

ஹீரோ உதயன்க்கு நடிப்பு வர்லைன்னாலும் கேரக்டரே அமைதி டைப் என்பது மாதிரி காட்டி நல்லா சமாளிக்கிறார்.. இந்தப்படத்துக்கு ஒரு அஜித்தோ, விஜய்யோ ஹீரோ ஆகி இருந்தால் படம் எங்கேயோ போய் இருக்கும்.. 

ஹீரோயின் இனியா இதுல மாடர்ன் கேர்ளா வர்றார்.. வாகை சூடவா படத்துல செமயா இருந்தார், இதுல நெற்றில பொட்டு வைக்காததாலோ என்னவோ அவ்வளவா எடுபடலை.. ஓவர் மேக்கப் வேற. இப்ப வர்ற படங்கள்ல ஹீரோயினுக்கு பொட்டு வைக்க கூடாதுன்னு ஏதாவது சங்கல்பம் வெச்சிருப்பாங்க போல.. மகா ஜனங்களே.. பொண்ணுங்க பொட்டு வைக்கலைன்னா அது மாடர்ன் கேர்ள் ஆகிடாது. அது அழகு தரும்.. 

அண்ணிக்கு தெரியாமல் ஹீரோ , ஹீரோயின் இருவரும் காதல் கொள்ளூம் இடங்கள் கல கல.. ஹீரோயினை விட அண்ணி செம ஃபிகர்  ஹி ஹி ..வில்லனாக வரும் ஜான் விஜய் ( வ குவாட்டர் கட்டிங்க் காமெடி பார்ட்டி) அசத்தலான நடிப்பு, பாடி லாங்குவேஜ். அவர் கூடவே வரும் 3 போலீஸ்களும் நிஜமாவே நேரில் பார்ப்பது போன்ற சம்பவங்களை கண் முன் நிறுத்தும் நடிப்பு.. சபாஷ்.. 

லேடி இன்ஸ்பெக்டராக வரும் உமா ரியாஸ் அமைதியான நடிப்பு. அவர் இன்வெஸ்டிகேஷன் செய்வது மிக யதார்த்தம். ஆனால் அவர் ஏன் 6 மாத கர்ப்பிணியாக வர்றார்? படத்தின் க்தைக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஏன்னா அவர் வயிற்றை தள்ளிட்டு அங்கேயும், இங்கேயும் அலைஞ்சு இன்வெஸ்டிகேஷன் பண்றது மனசுக்கு கஷ்டமா இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgayBBZz9B2mLVUwC_59K7YNBKUkgZ_2Wa-MqunI922Ge0UVCbpEQRbCQFSJKNqrpp2WxLyaaCGBj2XmNJyaBFTtvhec2DnH7rEL8x_V1wjOHPvYvD9fXvCS4PjQ48CVv5ocfx7IgkHgC0h/+Iniya+New+Stills+In+Mouna+Guru+Audio+Launch+%252810%2529.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயிஸம் எதையும் காட்டாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் காட்டியது பெரிய பிளஸ். ஏன்னா தயாரிப்பே ஹீரோவோட அப்பாதான், அதனால ஓப்பனிங்க், ஃபைட், ஹீரோ துதி பாடும் பாட்டு எதும் இல்லாம யதார்த்தமான ஹீரோவா காட்டுனது முதல் பிளஸ்

2. ஒரு நாவல் படிக்கிற மாதிரி  மிக தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதை.. சமீபத்தில் வந்த படங்களில் இவ்வளவு நேர்த்தியாக ஒரு திரைக்கதை தெளிவை நான் பார்க்கலை. வெல்டன் டைரக்டர்..

3.  யாரிவன் யாரிவன் பாட்டு, ஒரு டூயட் பாட்டு ரெண்டிலும் படமாக்கப்பட்ட அழகிய காட்சி அமைப்புகள் மனதை விட்டு  அகலாதவை

4. படத்தின் கதை அனுமதித்தும் ஒரு இடத்திக் கூட விரசமான காட்சியோ, கண்ணியக்குறைவான சம்பவமோ இல்லை. பெண்கள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படி ஒரு த்ரில்லர் மூவியை தருவது மிக கடினம்.. செம

5. படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிக யதார்த்தமான நடிப்பை தந்தது, அவ்ர்களை வேலை வாங்கியது எல்லாமே செம

6. பின்னணி இசை கன கச்சிதம்.. டெம்ப்போ ஏற்ற வேண்டிய இடங்களில் ஏற்றி , பேக் கிரவுண்டில் சைலண்ட் மோடு தேவைப்படும் இடங்களில்  அமைதி என நீட் டெக்னீஷியன் ஒர்க்.. ஒளிப்பதிவும் சூப்பர்.. 


http://www.kollytalk.com/wp-content/gallery/mouna-guru-movie-stills/mouna-guru-9.jpg

 இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  படத்துல ஹீரோ மெண்டல் ஆவது , மெண்டல் ஹாஸ்பிடல் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது.. அதை சரி செய்ய அமரர் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே கதை யுக்தியை பயன் படுத்தி இருக்கலாம்.அதாவது ஒப்பனிங்க்ல முதல்ல ஹீரோவை மெண்டலா காட்டி அப்புறம் ஃபிளாஸ்பேக் சீன்ல கதை சொல்லி இருக்கலாம்.. 

2. கார் ஆக்சிடெண்ட்ல உயிருக்கு போராடற ஆளை இன்ஸ்பெக்டர் அவனோட பின் மண்டைல தாக்கி கொல்றார். அதுக்குப்பிறகு அந்த கேஸ் இன்வெஸ்டிகேஷன் லேடி இன்ஸ்பெக்டர் உமா கிட்டே வருது.. ஓகே, ஆனா அவர் ஏன் அவசரப்பட்டு அவனை பின்னால தாக்கனும்?அவனே சீரியஸ்சா இருக்கான்.. ஈசியா முன்னால அடிச்சு கொன்னிருக்கலாமே..

3.  இன்ஸ்பெக்டரின் சின்ன வீடு ஒரு ஹோட்டல்ல தன் ஆளுங்களோட டிஸ்கஸ் பண்றாங்க, அங்கேதான் வீடியோ கேமரா பறி போகுது.. இந்த மாதிரி சீக்ரெட் மேட்டர் பேசறவங்க ஆள் நடமாட்டம் இல்லாத ஹை வேஸ் ரோட் ஒதுக்குப்புறத்துலயோ, ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்லயோதான் பேசுவாங்க.. ???

4. இன்ஸ்பெக்டர் தன் சின்ன வீட்டை அடிச்சு காயப்படுத்தி தள்ளி விடறப்ப எதிர்பாராத விதமா இறந்துடறாங்க.. ஆல்ரெடி முகம், உடம்புல காயம் உள்ள ஆளை எப்படி தூக்குல தொங்குற மாதிரி செட் பண்ணி வைக்க முடியும்?காயமே இல்லாம தலையணைல முகத்தை அமுக்கி கொலை செஞ்சாதானே அப்படி செய்ய முடியும்? முறைப்படி இந்த சிச்சுவேஷன்ல மொட்டை மாடில இருந்து கீழே குதிச்ச மாதிரி செட் பண்ணீனாத்தானே அந்த காயங்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும்?

5. ஏதாவது பிரச்சனைன்னா, அல்லது கொலையை நேர்ல பார்த்த சாட்சின்னா உடனே போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டர் ஹீரோவை மட்டும் ஏன் போடாம மெண்டல் ஆக்க தலையை சுத்தி மூக்கை தொடறார்? டப்னு சூட் செஞ்சா மேட்டர் ஓவர்..

6. விறுவிறுப்பா போகும் திரைக்கதைல அந்த சோகப்பாடல் எதுக்கு? இந்தப்படத்துல காதல் ஊறுகாய் மாதிரிதானே?



http://www.cenimaz.com/wp-content/uploads/2011/12/Mouna-Guru-Tamil-Movie.jpg

வித்தியாசமான கதையை ரசிப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

ஹீரோ வால்யூ இல்லாததால் எதிர்பார்த்த அளவு படம் ரீச் ஆகலைன்னாலும்  மவுத்டாக் மூலமா ஹிட் ஆக வாய்ப்பு உண்டு.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று

சி.பி கமெண்ட் - திரில்லர் பட விரும்பிகள் குடும்பத்தோடு பார்க்கலாம்

Friday, September 30, 2011

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12644_1.jpg

முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்து விட்டால் 2 வது படம் சறுக்கி விடும் என்ற கோடம்பாக்கத்து செண்ட்டிமெண்ட்க்கு மீண்டும் ஒரு உதாரணமாக களவாணி சூப்பர் ஹிட் கொடுத்த சற்குணம் ஆகி இருக்கிறார்..  


( விக்ரமன் 1.புது வசந்தம் 2.பெரும்புள்ளி ,
ஆர் பார்த்திபன 1.புதிய பாதை 2 பொண்டாட்டி தேவை ,

எம் சசி குமார் 1.சுப்ரமணிய புரம் 2.ஈசன் 

எஸ்.எழில் 1.துள்ளாத மனமும் துள்ளும் 2.பெண்ணின் மனதைத்தொட்டு, 

வஸந்த் 1. கேளடி கண்மணி 2.நீ பாதி நான் பாதி .. 

என நீண்டு செல்லும் உதாரணங்கள்...

ஆனால்  (HAIR)ஹேர் இழையில் கமர்ஷியல் வெற்றியைத்தவறவிட்ட மண்மணம் கமழும் ,குழந்தைத்தொழிலாளர்களுகெதிரான விழிப்புணர்வுப்படம் வாகை சூட வா என்பதிலும்,இதற்கு சில விருதுகள் நிச்சயம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லை.. 






http://www.cinespot.net/gallery/d/582254-1/Vaagai+Sooda+Vaa+photos+_12_.jpg

 கே பாக்யராஜ் பத்திரப்பதிவு எழுத்தர், தன் மகன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதே இவரது அவா..அதற்காக  பயிற்சி வாத்தியாராக தன் மகன் விமலை  கண்டெடுத்தான் காடு எனும் படிப்பறிவே இல்லாத கிராமத்திற்கு அனுப்புகிறார்.. அங்கே அறியா மக்களை செங்கல் சூளை முதலாளி ஏமாற்றுவதை அறிந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைப்படுத்தும் விமல் அவ்வப்போது டீக்கடைக்காரி ஹீரோயினால் லவ்வப்படுகிறார்.. கவர்மெண்ட் வேலை கிடைத்த பிறகும்  அவர் அந்த வேலையை உதறி அந்த ஊர் மக்களோடு மக்களாய் கலப்பதே கதை..


இயக்குநரின் எண்ணம், எழுத்து, நோக்கம் அனைத்தும் பாராட்டத்தக்கதே.. ஆனால் என்ன தவறு செய்தார் என்றால் அவர் மெயின் கதைக்கு வரும்போதே 8 ரீல் முடிந்து விடுகிறது.. அதுவரை பாத்திர அறிமுகங்கள் , நாயகி பாடல்,குறும்புகள் என திசை மாறிப்பயணிக்கிறது திரைக்கதை..

விமல்க்கு இது முக்கியமான படம் அவர் கேரியரில்.. 1966-ல் நடக்கும் கதை நடப்பதால் அந்த கால கட்டத்தை நினைவு படுத்த ஆர்ட் டைரக்டரும், பட டைரக்டரும் எந்த அளவு உழைத்திருப்பார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது.. 

அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் விமல் அசத்தல்..  செங்கல் சூளை முதலாளியிடம்,அவரது அடி ஆட்களிடம் அடி படும் காட்சியில் எந்த வித ஹீரோயிசத்தையும் காட்டாமல் அடி வாங்குகிறார்.. ஹீரோயினைப்பார்த்தும் வழியவில்லை.. குட்.. நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரளத்துப்பைங்கிளி இனியா ஹீரோயின். இவர் அந்தக்கால ரஞ்சனியை, ரஞ்சிதாவை கலந்து கட்டி வார்க்கப்பட்ட களிமண் சிலை போல் இருக்கிறார்.. விழிகளாலேயே பல வித்தகங்கள் புரிகிறார்..  நல்ல எதிர் காலம் உண்டு.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-1.jpg

மண்மணம் கமழ்ந்த படத்தில் செவி வளம்  காண வைத்த வசனங்கள்

1.  அய்யா, நாங்க என்னய்யா செய்வோம்? கண்ணாலம் பண்ண வாங்குன காசுக்கு காலம் பூரா வேலை செய்யனும் போல....

2. வந்திருக்கறது வாத்தியார்யா.. அடிப்பாரா?

அவர் என்னடா நம்மை அடிக்கறது? நான் அவரை அடிக்கறேன் பாரு.... 

3. தூண்டிலைப்போட்டதுமே தக்கையின் அசைவை வெச்சே மாட்னது என்ன வகை மீன்னு கண்டுபிடிப்போம் இல்ல..!!!

4.  யோவ்... 2 காசு டீ.. 3 காசு டீ. எது வேணும்?

2க்கும் என்னம்மா வித்தியாசம்?

3 காசு டீ போட்டா ருசி அடி நாக்குல அப்படியே நிக்கும்..

சரி பரவால்ல.. 2காசு டீ.யே போடு..

போய்யாங்க்.... ( கதைக்களன் 1966)


5.  வாத்தியாரே.... நாங்க இதை திருடிட்டு வந்துட்டோம்.. நீங்க வெளிலயே நில்லுங்க.. யாராவது வந்தா , நாங்க இங்கே இல்லைன்னு சொல்லிடுங்க.. 

6. என்னைப்பற்றி என்ன வேணா பேசுங்க, ஆனா என் லாரியைப்பற்றி எதுவும் பேசக்கூடாது.. 

அப்டியா.. டேய் இவன் மூஞ்சியைப்பாரு.. ஆளும் அவனும்.. 

டேய்.. நிறுத்துங்கடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. 

7.  சார்.. எங்களைத்தப்பா நினைக்காதீங்க.. எங்களுக்கும் , படிப்புக்கும் ஒத்ஹ்டு வராது.. ஆள் வேணா பிடிச்சுத்தர்றோம்..

8. அய்யா.. உங்க பையன் கெட்ட வார்த்தை பேசறான் சார்... தேவ...யான்னு சொன்னான் சார்..

இல்லப்பா டி கட் பண்ணிட்டுதான் சொன்னேன்.. 

9. இந்த சேலையை வாங்கி ரெண்டரை வருஷம் தான் ஆகுது.. அதுக்குள்ள கிழிஞ்சிடுச்சு. வாங்குன காசைத்திருப்பிக்குடு.. 

ஏம்மா.. சேலைன்னா அது கிழியத்தான்மா செய்யும்.. 

10. நீங்கதான் போஸ்ட்மேனா?

அதுக்கு ஏன்யா சிரிக்கறே?

இல்ல லேடி போஸ்ட் விமனை இப்போதான் பார்க்கறேன்.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-4.jpg

11. நான் வாங்கற சம்பளம் என் சைக்கிள்க்கு பஞ்சர் ஒட்டக்கூட பத்தாது போல... 

12. உங்களுக்கு அத்தை பொண்னு, மாமன் பொண்ணு யாராவது இருக்காங்களா? இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்ணாலம் கட்டாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. சந்ததிக்கும்..

13. எனக்கு சீர் வரிசைக்கு காசு சேத்தனும்,... இன்னைல இருந்து எல்லாத்துக்கும் ரேட் அதிகம் பண்ணிட வேண்டியதுதான்... 

14.  வாத்தியாரய்யா.. உங்களை மாதிரியே வேலையே செய்யாம சம்பளம் வாங்கற மாதிரி ஏதாவது வேலை இருக்கா?

15.  ஏம்மா, போஸ்ட் விமன், நீங்க எப்பவும் பேனாவை ஜாக்கெட்ல தான் சொருகி வெச்சுப்பீங்களோ?

யோவ்!!!!!!!!!!!!!!

16.  அரசாங்கத்தோட நேரடித்தொடர்புல உங்கப்பன் நான் இருக்கறதால அரசாங்கத்தை ஏமாத்தலாம், தனியாரை ஏமாத்தலாமா? ( வாட் எ லாஜிக்!!)

17.  இங்கே பாரம்மா.. எனக்கு 80 வயசுதான்.. வயசாகிடுச்சேன்னு என்னை இளப்பமா நினைக்காதே.. இப்பக்கூட இளவட்டப்பசங்களால என்னோட போட்டி போட முடியாது தெரிஞ்சுக்கோ.. வெத்தலை கொடு..

இந்தாய்யா பெரிசு.. நல்லா இறுக்கிக்கட்டிக்கய்யா.. கீழே விழுந்திடப்போகுது வெத்தலை!!!!!!!!!!!!!!!

18.  அந்தப்பொண்ணு கிட்டே இருந்து ரெட்டை மூக்கு வெத்தலை வாங்கிட்டியா? அப்போ புதுத்துணி எடுத்துத்தந்தே ஆகனும்./.

19.  டேய்./.. வாத்தியார் கதை சொல்லப்போறாராம்.. போலாமாடா?

அட.. விட்றா.. நமக்குத்தெரியாத கதையா அவர் சொல்லிடப்பொறாரு?

20.  முன்னெல்லாம் எக்சஸைஸ் செஞ்சு செஞ்சு எனக்கு கால் எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் மொத்தம் இருக்கும் , கை எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் பெரிசா  இருக்கும்.. என் செஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா?

சார்.. அப்போ அங்கே இருந்து பால் வருமா சார்..?



http://thebollywoodgallery.com/wp-content/uploads/2011/07/Iniya-Vaagai-Sooda-Vaa-Heroine-8-269x339.jpg

21.  அக்காவுக்கு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னேன்.. அவர் சிரிச்சாருக்கா....

22. நீ யாரை வேணாலும் கண்ணாலம் கட்டிக்கோ.. எனக்கென்ன? சாப்பாடு போட ஆள் இருக்காதேன்னு பார்த்தேன் , அவ்ளவ் தான்... 

யோவ்.. ப்ளீஸ் என்னை கண்னாலம் பண்ணிக்கய்யா.. டீக்கடை வெச்சு அந்தக்காசுல சீர்க்காசை கரெக்ட் பண்ணிடறேன்.. 

23. டேய்.. வாத்தியாரோட அப்பாவும் சர்க்காரோட நேரடித்தொடர்பு வெச்சிருக்கர் போல.. 

24. யோவ்.... வாழ்ந்தா கெட்டப்பா ( கித்தாய்ப்பா) வாழனும்.. இல்லன்னா செத்துப்போகனும்யா....

25.. வயசுப்பொண்ணு எப்பவும் வக்கணையாத்தான் சமைக்கும்.. 

26. பசியும் , சோறும் தான் வாழ்க்கைன்னு கிடந்த எங்களை படிக்க வெச்சதே நீங்கதான்யா!!

http://www.newsonweb.com/newsimages/September2011/a114d1f5-f31c-476c-8270-c5709fc219321.jpg




இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கமர்ஷியலாய் இது சக்சஸ் ஆகாது என்பது தெரிந்தும் கதையை சமூக சீர்திருத்த நோக்கத்தோடு வடிவமைத்தது.. 

2. ஆர்ட் டைரக்டர் சீனுவோடு சேர்ந்து புதுக்கொட்டையில்  2 கோடி செலவில் 75 குடும்பங்கள் வாழும் வீட்டை 1966 மாடலில் வடிவமைத்தது..

3. புதிய இசை அமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகப்படுத்தியது.. அவரது இசையில் 1.  சாரக்காத்து வீசும்போது சாரைப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே சாரைப்பார்த்ததுமே..... 2. போறானே போறானே... போகாம போறானே..  போன்ற பாடல்கள் கலக்கல் ரகம், அந்தப்பாடலை படம் பிடித்த விதம் டாப்... ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்க்கு ஒரு ஓ போடலாம்..

4.  ஓப்பனிங்க் ஷாட்டில் செங்கல் சூளையை காட்டும்போது.. மண் தரையில் ஓடி வரும் பஞ்சுப்பூ,  செங்கல் சுமப்பவர் தன் தலையில் ஏராளமான செங்கல்களை அடுக்கும் அழகு ( கிராஃபிக்ஸ் என்றாலும் )  என ஜால வித்தை..

5.  காலம் காலமாக பெண் தன்னை விரும்பும் ஆணிடம் தனக்கு வேறு பக்கம் மணம் ஆகப்போகிறது என பொய் சொல்லி அவன் மனம் வாடுவது கண்டு மனம் மகிழும் பெண்ணியல் சார்ந்த உளவு சூத்திரத்தின் படி நாயகி நாயகனை சீண்டி விட்டி ஒரு குதியாட்டம் போடுகிறாரே.. மார்வலஸ் நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் இனியா & ஆல்சோ டைரக்டர்..

6. பையன் ஒருவன் கிணற்றில் விழுந்ததும் உடனே அந்த ஊரில் ஏற்படும் பதட்டம், களேபரம், குழப்பம் என அனைத்தையும் இசையால், காட்சிப்படுத்தியமைக்கு சபாஷ்!

7. சின்னப்பசங்க ரேடியோவைத்திருடிட்டு ஓடிப்போறப்ப திருடாதே பாப்பா திருடாதே ஒலிபரப்பாவது டைமிங்க்....


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/idhayathil-idam-kodu/idhayathil-idam-kodu-movie-udhayakumar-iniya-ganja-karuppu-stills-13_720_southdreamz.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. கதைக்கான ரோல் மாடலாக முந்தானை முடிச்சையும், திரைக்கதைக்கான ரோல் மாடலாக திருமதி பழனிச்சாமியை எடுத்துக்கொண்டதும் பட்டவர்த்தனமாய் த்தெரிகிறது ..

2. வாத்தியாரை கிராமத்துக்கு நியமிக்கும் சேவா சங்கம் சட்டப்படி உறுதிப்படுத்த மாதம் 2 முறை வர வேண்டும், ஆனால் யாரும் வரவே இல்லை.. ஹீரோ பாடமே எடுக்காமல் 2 மாச சம்பளமே வாங்கி விடுகிறார்.. அதற்குப்பிறகே சிலேட், புக்ஸ் எல்லாம் வருது.. எப்படி?

3. ரேடியோவில் பாட்டு கேட்கும் சீனில்; அதில் லைட் எரியுமே.. காணோமே? ரேடியோவை மட்டும் காட்டி விட்டி பாட்டை வேறு டேப்பிலிருந்து ஒலிபரப்பியது நல்லாத்தெரியுது..

4. அபியும், நானும் படத்தில் த்ரிஷா வீட்டு வேலைக்காரனாக வந்து கலக்கினாரே அவர் இதில் பைத்தியமாக வருகிறார்.. அவர் விமலிடம் நான் போறேன்.. நீ இருக்கனும் என்று சொல்லி விட்டுப்போகிறார்.. அந்த சஸ்பென்ஸ் காட்சியை வைத்து இடைவேளை விட்டு பில்டப் பண்றாங்க.. ஆனா அதுக்குப்பிறகு அது பற்றி எதுவும் சொல்லவே இல்லை.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?

5. களவாணி படத்தில் இருந்த கலகலப்பு மைனஸ்..  இடைவேளை வரை கதைக்கே போகாமல் இழுத்தது அதை விட பெரிய மைனஸ்.. 

6. அவ்ளவ் கட்டுப்பெட்டியான கிராமத்தில் வாத்தியாருடன் ஹீரோயின் பழகுவதை யாரும் கண்டுக்கவே இல்லையே ஏன்?

7. க்ளைமாக்ஸில் ஹீரோ கவர்மெண்ட் வேலையை விடுவது தியாகமாகத்தெரியவில்லை.. அவர் பாடம் சொல்லித்தருவதே தினமும் மாலை 1 மணி நேரம் தான்.. அதற்கு ஏன் வேலையை விட வேண்டு> கவர்மெண்ட் வேலைக்குப்போய்ட்டே அதை தொடரலாமே? வாரா வாரம் சனி , ஞாயிறு மட்டும் வந்து சொல்லிக்கொடுத்தால் போதுமே?

8. பொன்வண்ணன் மாதிரி கேணை வில்லனை பார்க்க முடியாது.. அவர் ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்.. ?

அடிதடி தாதா கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம்தான் இந்தப்படம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6gakMt66Yon5-ZYk3mQAP_bxKPB9H8k2E6RkS0PFDhuWMgbpcKYU-IKS7nyts4adj_jUgV9ifX_I97rV4RfJEm5d5SscwJA6TbAA0WZjW3BymHzsFd_vbMfJ_1Gicotk9Y6_x2iRxXE/s400/RA%25252B5.jpg



ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்....

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.


ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்


டிஸ்கி -1

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி -3

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்