Showing posts with label கே பாக்யராஜ். Show all posts
Showing posts with label கே பாக்யராஜ். Show all posts

Monday, October 17, 2011

நாளைய இயக்குநர் - காமெடி ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..

1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)

ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..

ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி  )

இல்லை...

அப்புறம் எதுக்கு எனக்கு சாக்லெட் தர்றே?

எங்காயா சொன்னாங்க.. நல்ல காரியம் பண்றப்போ ஸ்வீட் சாப்பிடனும்னு..

அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப்போறே?

உன்னை பிக்கப் பண்ணி உங்க வீட்ல டிராப் பண்ணலாம்னு இருக்கேன்..

தேவை இல்லை.. வேற ஆள் எனக்கு இருக்கான்.. நீ உன் வேலையை பாரு..

ஹீரோவுக்கு நோஸ்கட் குடுத்துட்டு அந்த ஃபிகர் லவ்வரோட கிளம்பிடுது..

ஹீரோ அடுத்து வேற ஒரு ஃபிகர் கரெக்ட் பண்றார்.. அதுக்கு தன் ரூம் மேட்ஸ்கிட்டே ஒருத்தன் கிட்டே இருந்து பைக் ஓசி வாங்கறார்..(2 மணி நேரத்துல திருப்பி தந்துடறேன்கற கண்டிஷன்ல.. )இன்னொருத்தன் கிட்டே டி சர்ட் ஓசி வாங்கறார்..ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறார்.. ஒரே இளநில 2 ஸ்ட்ரா போட்டு குடிக்கறார்.. திடீர்னு 3 பேர் அவரை வழி மறிக்கறாங்க.. ரூம் மேட்ஸ்தான்..

பைக் குடுத்தவன் பைக்கை பிடுங்கிக்கறான்,  டி சர்ட் குடுத்தவன் டி சர்ட்டை பிடுங்கிக்கறான் (அட பறக்கா வெட்டி).. 3 வது ஆள்..? அதுதான் சஸ்பென்ஸ் காமெடி..

“ஏண்டா.. என் ஃபிகரையே தள்ளிட்டு வந்துட்டியா.?ன்னு சொல்லி அவன் ஃபிகரை ஓட்டிட்டு சார்.. கூட்டிட்டு போயிடறான்.. விஷுவலா பார்க்க செம காமெடியாத்தான் இருந்தது..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. கதைல வர்ற 2 ஃபிகர்ங்களுமே அழகு ஃபிகர்தான்.. நடிப்பும் ஓக்கே..

2. ஆடியன்ஸை யோசிக்கவே விடாம திரைக்கதை செம ஸ்பீடு.. 

2. பின்னணி இசை கதையின் மூடை அப்படியே காமெடியாக்குது..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. என்னதான் காமெடின்னாலும் ஃபிகரையே தள்ளிட்டு போறது ஓவர்.. காதலையே கேலி பண்ற மாதிரி இருக்கு.. 

2. ஹீரோ ஃபிகரோட பைக்ல போற ரூட் அவங்க 3 பேருக்கும் எப்படி தெரியும்? கரெக்ட்டா எதிர்ல வர்றாங்களே எப்படி?

3. பைக்கை திருப்பி வாங்கறது ஓக்கே, யாராவது டி சர்ட்டைக்கூட அப்படி நடு ரோட்ல பிடுங்குவாங்களா?

4. ஓப்பனிங்க் ஷாட்ல பஸ் ஸ்டாப் ஃபிகர் ஹீரோவைப்பார்த்து கோபமா பேச வேண்டிய டயலாக்கை காமெடியால லைட்டா சிரிக்குது.. அதை அவாய்டு பண்ணி இருந்திருக்கலாம்


படம் முடிஞ்சதும் படத்தோட இயக்குநர் கே பாக்யராஜ் கிட்டே

என் முயற்சி எப்படி சார்?

என் வேலையையே மாத்திடுவீங்க போல.. நாங்க ஜட்ஜா? மாமாவா?

சுந்தர் சி - படம் ஓக்கே.. ஒரு குறும்படத்துக்குக்கூட சாங்க் கம்போஸ் பண்ணி நல்லா பண்ணி இருக்கீங்க ஹார்டு ஒர்க்.. 


2.  பாக்யராஜ் - ஆந்தை (த்ரில்லர் ஆக்‌ஷன்)

சட்டமும், சமூகமும் இல்லை என்றால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்வான் அப்டினு ஒரு சப் டைட்டிலோட படம் ஓப்பன் ஆகுது..

போலீஸ் வேலைக்கு எல்லா டெஸ்ட்லயும் பாஸ் ஆகற ஒருத்தன் ரிட்டர்ன் டெஸ்ட்ல ஃபெயில் ஆகிடறான்.. தன் ஃபிரண்ட் கிட்டே புலம்பறான்.. போலீஸ் வேலைல செலக்ட் ஆகனும்னா தனக்கு 4 லட்சம் பணம் வேணும்கறான்.. அவனோட ஃபிரண்ட் இல்லீகல் வேலை செய்பவன்.. அவன் இவனுக்கு அட்வைஸ் பண்றான்.. நேர்மையான வழில போனா பணம் கிடைக்காது.. குறுக்கு வழிலதான் சம்பாதிக்கனும்.. 

ஒரு ஆட்டோவை வழி மறிச்சு ஒரு கொள்ளை அடிக்கறான்.. அந்த பணத்தை அவன் கிட்டே கொடுக்கறான்..

அப்போ 2 பேருக்கும் வாக்குவாதம் வருது.. 

இல்லீகலா சம்பாதிச்சது எனக்கு வேணாம்கறான், இல்ல பரவால்ல எடுத்துக்கோ..சான்ஸ் கிடைக்கறப்ப யூஸ் பண்ணிக்கனும், தான் முன்னேறனும்னா  ஒருத்தனை கவுக்கறதுல தப்பில்லைங்கறான்.

இப்போதான் ஒரு ட்விஸ்ட்.. இது வரை நேர்மைன்னு பேசிட்டு இருந்தவன் இல்லீகலா நடக்க அட்வைஸ் பண்ண ஃபிரண்டையே போட்டுத்தள்ளிடறான்..

இந்தப்படம் ராம்கோபால் வர்மா படம் பொல் எஃப்ஃபக்ட்டா இருக்குன்னு சுந்தர் சி பாராட்னாரு..

ஆனா எனக்கு படத்தோட கான்செப்ட்டும் சரி,, அதை கொண்டு போன விதமும் சரி.. க்ளைமாக்ஸூம் சரி பிடிக்கலை.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தானே வலியனா ஓசில 4 லட்சம் தர்ற ஃபிரண்டை எதுக்கு மெனக்கெட்டு கொலை செய்யனும்? அவன் ஒண்ணும் பணத்தை திருப்பி கேட்கலையே?

2. 4 லட்சத்துக்காக கொள்ளை அடிச்சது ஓக்கே.. தேவை இல்லாம கொலை எதுக்கு?

3. இந்தக்கதை மூலம் சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க/?
Pancake Floor Pillows


3. அஸ்வத் - கார்த்திக்  ஒரிஜினாலிட்டி ( காமெடி)

என்ன கான்செப்ட்னா சினிமால கார்த்திக் அப்டிங்கற பேர்ல வர்றவங்க எல்லாம் ஈசியா ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணிடறாங்க.. அதனால ஹீரோ நாராயனன் தன் பேரை கார்த்திக்னு மாத்திக்கலாமா?ன்னு ஃபிரண்ட்ஸ் கிட்டே ஐடியா கேக்கறான்.. அவங்க வேணாம், உன் ஒரிஜினாலிட்டி போயிடும்கறாங்க

காலேஜ்ல ஜூனியர் ஃபிகரை ஹீரோ ராகிங்க் பண்றார்.. பேரு ,ஊரு எல்லாம் விசாரிக்கறார். அதே சமயம் இன்னொரு பையனை கூப்பிட்டு அந்த ஃபிகர் பக்கத்துல நிக்க வெச்சு அவனுக்கு ஐ லவ் யூ சொல்லுன்னு ராக் பண்றார்..

அந்த ஃபிகர் அந்தப்பையனை பார்த்து ஐ லவ் அப்டின்னு சொல்லி ஹீரோ நாராயணைப்பார்த்து யூ அப்டின்னு முடிக்கறா..

உடனே ஹீரோ டூயட் பாடறாரு.. ஃபிகர் பிக்கப் ஆகிடுச்சுன்னு..

அடுத்த ஷாட்ல அவ ஃபோன் பண்ணி நாராயணனை வரச்சொல்றா..

சார்.. உங்க கிட்டே ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை..

ஆஹா.. சொல்லுங்க சொல்லுங்க

அன்னைக்கு ஒரு பையனை ராக் பண்ணி என்னை அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வெச்சீங்களே அவனை நான் லவ் பண்றேன்.. முதல்ல உங்க கிட்டே தான் இந்த மேட்டரை சொல்லலாம்னு.. 

அடங்கோ..

அடேய்.. உன் பேரு கார்த்திக்கா?

எப்படி சார் கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?

எத்தனை படம் பார்க்கறோம்?

நல்ல காமெடி பேக்கேஜ். காலேஜ்ல நடக்கறதை நேர்ல பார்க்கற மாதிரி இருந்துச்சு...இயக்குநரே ஹீரோவாநடிச்சிருந்தார்..

இதுக்கு ஜட்ஜூங்க கமெண்ட் பண்றப்ப ஹீரோயின் வெவ்வேற கால கட்டத்துல வர்ற 3 சீன்லயும் ஒரே காஸ்ட்யூம் தான் போட்டிருக்காரு.. அதை கவனிக்கலையா?ன்னாங்க.. 

பட் சின்ன சின்ன மைனஸ் தாண்டி இது நல்ல காமெடி.. இதுக்குத்தான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வரும்னு நான் நினைச்சேன்.. ஆனா .....


4. கிஷோர் - ஃபோன் கால் (PHONE CALL)

ஒரு வீட்ல 4 ஃபிரண்ட்ஸ்.. ஏதோ பார்ட்டி கொண்டாட்டம்.. மாடிப்படி ஏறி வரும் ஒரு நண்பனுக்கு ஒரு ஃபோன் வருது.. அவனோட பழைய ஃபிரண்ட் பிரவீன்..

மேலே வந்ததும் டேய் பிரவீன் ஃபோன் பண்ணுனான்ன்னு சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆகறாங்க// டேய்.. உனக்கு விஷயமே தெரியாதா?அவன் இறந்துட்டான்.. எப்படி ஃபோன் வரும்?


இவன் உடனே ஷாக் ஆகிடறான்..

இப்போ மறுபடி பிரவீன்கிட்டே இருந்து கால்...

அவன் திகில் ஆகி பார்க்கறப்ப ரூம்ப இருந்து இன்னொரு ஃபிரண்ட்  பிரவீன் ஃபோனோட வர்றான்.. சும்மா கலாட்டா பண்ண..
இப்போதான் சஸ்பென்ஸ் உடையுது.. கேமரா அப்படியே  டேபிள்ல இருக்கற நியூஸ் பேப்பர்ட்ட போகுது.. இப்போ நாம பார்த்த எல்லாருமே ஆல்ரெடி இறந்துட்டாங்க என காட்டுது..

யூகிக்க முடியாத திருப்பம்...

ஓப்பனிங்க் ஷாட்ல கதைக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பேப்பர் போடற ஆளை காட்னது எதுக்குன்னு இப்போ புரியுது.. வெல் மேக்கிங்க்..
இதுக்கு கமெண்ட் பண்ணுன ஜட்ஜூங்க ஒரே ஒரு குறை சொன்னாங்க.. நைட் எஃபக்ட படம் பண்ணி இருந்தா இன்னும் டெரரா இருந்திருக்கும்னு..
சின்ன குறைகள் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க  படமே..

இந்த வாரம் வந்த 4 படங்கள்ல 3 படம் குட்..

Friday, September 30, 2011

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12644_1.jpg

முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்து விட்டால் 2 வது படம் சறுக்கி விடும் என்ற கோடம்பாக்கத்து செண்ட்டிமெண்ட்க்கு மீண்டும் ஒரு உதாரணமாக களவாணி சூப்பர் ஹிட் கொடுத்த சற்குணம் ஆகி இருக்கிறார்..  


( விக்ரமன் 1.புது வசந்தம் 2.பெரும்புள்ளி ,
ஆர் பார்த்திபன 1.புதிய பாதை 2 பொண்டாட்டி தேவை ,

எம் சசி குமார் 1.சுப்ரமணிய புரம் 2.ஈசன் 

எஸ்.எழில் 1.துள்ளாத மனமும் துள்ளும் 2.பெண்ணின் மனதைத்தொட்டு, 

வஸந்த் 1. கேளடி கண்மணி 2.நீ பாதி நான் பாதி .. 

என நீண்டு செல்லும் உதாரணங்கள்...

ஆனால்  (HAIR)ஹேர் இழையில் கமர்ஷியல் வெற்றியைத்தவறவிட்ட மண்மணம் கமழும் ,குழந்தைத்தொழிலாளர்களுகெதிரான விழிப்புணர்வுப்படம் வாகை சூட வா என்பதிலும்,இதற்கு சில விருதுகள் நிச்சயம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லை.. 






http://www.cinespot.net/gallery/d/582254-1/Vaagai+Sooda+Vaa+photos+_12_.jpg

 கே பாக்யராஜ் பத்திரப்பதிவு எழுத்தர், தன் மகன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதே இவரது அவா..அதற்காக  பயிற்சி வாத்தியாராக தன் மகன் விமலை  கண்டெடுத்தான் காடு எனும் படிப்பறிவே இல்லாத கிராமத்திற்கு அனுப்புகிறார்.. அங்கே அறியா மக்களை செங்கல் சூளை முதலாளி ஏமாற்றுவதை அறிந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைப்படுத்தும் விமல் அவ்வப்போது டீக்கடைக்காரி ஹீரோயினால் லவ்வப்படுகிறார்.. கவர்மெண்ட் வேலை கிடைத்த பிறகும்  அவர் அந்த வேலையை உதறி அந்த ஊர் மக்களோடு மக்களாய் கலப்பதே கதை..


இயக்குநரின் எண்ணம், எழுத்து, நோக்கம் அனைத்தும் பாராட்டத்தக்கதே.. ஆனால் என்ன தவறு செய்தார் என்றால் அவர் மெயின் கதைக்கு வரும்போதே 8 ரீல் முடிந்து விடுகிறது.. அதுவரை பாத்திர அறிமுகங்கள் , நாயகி பாடல்,குறும்புகள் என திசை மாறிப்பயணிக்கிறது திரைக்கதை..

விமல்க்கு இது முக்கியமான படம் அவர் கேரியரில்.. 1966-ல் நடக்கும் கதை நடப்பதால் அந்த கால கட்டத்தை நினைவு படுத்த ஆர்ட் டைரக்டரும், பட டைரக்டரும் எந்த அளவு உழைத்திருப்பார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது.. 

அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் விமல் அசத்தல்..  செங்கல் சூளை முதலாளியிடம்,அவரது அடி ஆட்களிடம் அடி படும் காட்சியில் எந்த வித ஹீரோயிசத்தையும் காட்டாமல் அடி வாங்குகிறார்.. ஹீரோயினைப்பார்த்தும் வழியவில்லை.. குட்.. நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரளத்துப்பைங்கிளி இனியா ஹீரோயின். இவர் அந்தக்கால ரஞ்சனியை, ரஞ்சிதாவை கலந்து கட்டி வார்க்கப்பட்ட களிமண் சிலை போல் இருக்கிறார்.. விழிகளாலேயே பல வித்தகங்கள் புரிகிறார்..  நல்ல எதிர் காலம் உண்டு.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-1.jpg

மண்மணம் கமழ்ந்த படத்தில் செவி வளம்  காண வைத்த வசனங்கள்

1.  அய்யா, நாங்க என்னய்யா செய்வோம்? கண்ணாலம் பண்ண வாங்குன காசுக்கு காலம் பூரா வேலை செய்யனும் போல....

2. வந்திருக்கறது வாத்தியார்யா.. அடிப்பாரா?

அவர் என்னடா நம்மை அடிக்கறது? நான் அவரை அடிக்கறேன் பாரு.... 

3. தூண்டிலைப்போட்டதுமே தக்கையின் அசைவை வெச்சே மாட்னது என்ன வகை மீன்னு கண்டுபிடிப்போம் இல்ல..!!!

4.  யோவ்... 2 காசு டீ.. 3 காசு டீ. எது வேணும்?

2க்கும் என்னம்மா வித்தியாசம்?

3 காசு டீ போட்டா ருசி அடி நாக்குல அப்படியே நிக்கும்..

சரி பரவால்ல.. 2காசு டீ.யே போடு..

போய்யாங்க்.... ( கதைக்களன் 1966)


5.  வாத்தியாரே.... நாங்க இதை திருடிட்டு வந்துட்டோம்.. நீங்க வெளிலயே நில்லுங்க.. யாராவது வந்தா , நாங்க இங்கே இல்லைன்னு சொல்லிடுங்க.. 

6. என்னைப்பற்றி என்ன வேணா பேசுங்க, ஆனா என் லாரியைப்பற்றி எதுவும் பேசக்கூடாது.. 

அப்டியா.. டேய் இவன் மூஞ்சியைப்பாரு.. ஆளும் அவனும்.. 

டேய்.. நிறுத்துங்கடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. 

7.  சார்.. எங்களைத்தப்பா நினைக்காதீங்க.. எங்களுக்கும் , படிப்புக்கும் ஒத்ஹ்டு வராது.. ஆள் வேணா பிடிச்சுத்தர்றோம்..

8. அய்யா.. உங்க பையன் கெட்ட வார்த்தை பேசறான் சார்... தேவ...யான்னு சொன்னான் சார்..

இல்லப்பா டி கட் பண்ணிட்டுதான் சொன்னேன்.. 

9. இந்த சேலையை வாங்கி ரெண்டரை வருஷம் தான் ஆகுது.. அதுக்குள்ள கிழிஞ்சிடுச்சு. வாங்குன காசைத்திருப்பிக்குடு.. 

ஏம்மா.. சேலைன்னா அது கிழியத்தான்மா செய்யும்.. 

10. நீங்கதான் போஸ்ட்மேனா?

அதுக்கு ஏன்யா சிரிக்கறே?

இல்ல லேடி போஸ்ட் விமனை இப்போதான் பார்க்கறேன்.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-4.jpg

11. நான் வாங்கற சம்பளம் என் சைக்கிள்க்கு பஞ்சர் ஒட்டக்கூட பத்தாது போல... 

12. உங்களுக்கு அத்தை பொண்னு, மாமன் பொண்ணு யாராவது இருக்காங்களா? இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்ணாலம் கட்டாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. சந்ததிக்கும்..

13. எனக்கு சீர் வரிசைக்கு காசு சேத்தனும்,... இன்னைல இருந்து எல்லாத்துக்கும் ரேட் அதிகம் பண்ணிட வேண்டியதுதான்... 

14.  வாத்தியாரய்யா.. உங்களை மாதிரியே வேலையே செய்யாம சம்பளம் வாங்கற மாதிரி ஏதாவது வேலை இருக்கா?

15.  ஏம்மா, போஸ்ட் விமன், நீங்க எப்பவும் பேனாவை ஜாக்கெட்ல தான் சொருகி வெச்சுப்பீங்களோ?

யோவ்!!!!!!!!!!!!!!

16.  அரசாங்கத்தோட நேரடித்தொடர்புல உங்கப்பன் நான் இருக்கறதால அரசாங்கத்தை ஏமாத்தலாம், தனியாரை ஏமாத்தலாமா? ( வாட் எ லாஜிக்!!)

17.  இங்கே பாரம்மா.. எனக்கு 80 வயசுதான்.. வயசாகிடுச்சேன்னு என்னை இளப்பமா நினைக்காதே.. இப்பக்கூட இளவட்டப்பசங்களால என்னோட போட்டி போட முடியாது தெரிஞ்சுக்கோ.. வெத்தலை கொடு..

இந்தாய்யா பெரிசு.. நல்லா இறுக்கிக்கட்டிக்கய்யா.. கீழே விழுந்திடப்போகுது வெத்தலை!!!!!!!!!!!!!!!

18.  அந்தப்பொண்ணு கிட்டே இருந்து ரெட்டை மூக்கு வெத்தலை வாங்கிட்டியா? அப்போ புதுத்துணி எடுத்துத்தந்தே ஆகனும்./.

19.  டேய்./.. வாத்தியார் கதை சொல்லப்போறாராம்.. போலாமாடா?

அட.. விட்றா.. நமக்குத்தெரியாத கதையா அவர் சொல்லிடப்பொறாரு?

20.  முன்னெல்லாம் எக்சஸைஸ் செஞ்சு செஞ்சு எனக்கு கால் எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் மொத்தம் இருக்கும் , கை எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் பெரிசா  இருக்கும்.. என் செஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா?

சார்.. அப்போ அங்கே இருந்து பால் வருமா சார்..?



http://thebollywoodgallery.com/wp-content/uploads/2011/07/Iniya-Vaagai-Sooda-Vaa-Heroine-8-269x339.jpg

21.  அக்காவுக்கு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னேன்.. அவர் சிரிச்சாருக்கா....

22. நீ யாரை வேணாலும் கண்ணாலம் கட்டிக்கோ.. எனக்கென்ன? சாப்பாடு போட ஆள் இருக்காதேன்னு பார்த்தேன் , அவ்ளவ் தான்... 

யோவ்.. ப்ளீஸ் என்னை கண்னாலம் பண்ணிக்கய்யா.. டீக்கடை வெச்சு அந்தக்காசுல சீர்க்காசை கரெக்ட் பண்ணிடறேன்.. 

23. டேய்.. வாத்தியாரோட அப்பாவும் சர்க்காரோட நேரடித்தொடர்பு வெச்சிருக்கர் போல.. 

24. யோவ்.... வாழ்ந்தா கெட்டப்பா ( கித்தாய்ப்பா) வாழனும்.. இல்லன்னா செத்துப்போகனும்யா....

25.. வயசுப்பொண்ணு எப்பவும் வக்கணையாத்தான் சமைக்கும்.. 

26. பசியும் , சோறும் தான் வாழ்க்கைன்னு கிடந்த எங்களை படிக்க வெச்சதே நீங்கதான்யா!!

http://www.newsonweb.com/newsimages/September2011/a114d1f5-f31c-476c-8270-c5709fc219321.jpg




இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கமர்ஷியலாய் இது சக்சஸ் ஆகாது என்பது தெரிந்தும் கதையை சமூக சீர்திருத்த நோக்கத்தோடு வடிவமைத்தது.. 

2. ஆர்ட் டைரக்டர் சீனுவோடு சேர்ந்து புதுக்கொட்டையில்  2 கோடி செலவில் 75 குடும்பங்கள் வாழும் வீட்டை 1966 மாடலில் வடிவமைத்தது..

3. புதிய இசை அமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகப்படுத்தியது.. அவரது இசையில் 1.  சாரக்காத்து வீசும்போது சாரைப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே சாரைப்பார்த்ததுமே..... 2. போறானே போறானே... போகாம போறானே..  போன்ற பாடல்கள் கலக்கல் ரகம், அந்தப்பாடலை படம் பிடித்த விதம் டாப்... ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்க்கு ஒரு ஓ போடலாம்..

4.  ஓப்பனிங்க் ஷாட்டில் செங்கல் சூளையை காட்டும்போது.. மண் தரையில் ஓடி வரும் பஞ்சுப்பூ,  செங்கல் சுமப்பவர் தன் தலையில் ஏராளமான செங்கல்களை அடுக்கும் அழகு ( கிராஃபிக்ஸ் என்றாலும் )  என ஜால வித்தை..

5.  காலம் காலமாக பெண் தன்னை விரும்பும் ஆணிடம் தனக்கு வேறு பக்கம் மணம் ஆகப்போகிறது என பொய் சொல்லி அவன் மனம் வாடுவது கண்டு மனம் மகிழும் பெண்ணியல் சார்ந்த உளவு சூத்திரத்தின் படி நாயகி நாயகனை சீண்டி விட்டி ஒரு குதியாட்டம் போடுகிறாரே.. மார்வலஸ் நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் இனியா & ஆல்சோ டைரக்டர்..

6. பையன் ஒருவன் கிணற்றில் விழுந்ததும் உடனே அந்த ஊரில் ஏற்படும் பதட்டம், களேபரம், குழப்பம் என அனைத்தையும் இசையால், காட்சிப்படுத்தியமைக்கு சபாஷ்!

7. சின்னப்பசங்க ரேடியோவைத்திருடிட்டு ஓடிப்போறப்ப திருடாதே பாப்பா திருடாதே ஒலிபரப்பாவது டைமிங்க்....


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/idhayathil-idam-kodu/idhayathil-idam-kodu-movie-udhayakumar-iniya-ganja-karuppu-stills-13_720_southdreamz.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. கதைக்கான ரோல் மாடலாக முந்தானை முடிச்சையும், திரைக்கதைக்கான ரோல் மாடலாக திருமதி பழனிச்சாமியை எடுத்துக்கொண்டதும் பட்டவர்த்தனமாய் த்தெரிகிறது ..

2. வாத்தியாரை கிராமத்துக்கு நியமிக்கும் சேவா சங்கம் சட்டப்படி உறுதிப்படுத்த மாதம் 2 முறை வர வேண்டும், ஆனால் யாரும் வரவே இல்லை.. ஹீரோ பாடமே எடுக்காமல் 2 மாச சம்பளமே வாங்கி விடுகிறார்.. அதற்குப்பிறகே சிலேட், புக்ஸ் எல்லாம் வருது.. எப்படி?

3. ரேடியோவில் பாட்டு கேட்கும் சீனில்; அதில் லைட் எரியுமே.. காணோமே? ரேடியோவை மட்டும் காட்டி விட்டி பாட்டை வேறு டேப்பிலிருந்து ஒலிபரப்பியது நல்லாத்தெரியுது..

4. அபியும், நானும் படத்தில் த்ரிஷா வீட்டு வேலைக்காரனாக வந்து கலக்கினாரே அவர் இதில் பைத்தியமாக வருகிறார்.. அவர் விமலிடம் நான் போறேன்.. நீ இருக்கனும் என்று சொல்லி விட்டுப்போகிறார்.. அந்த சஸ்பென்ஸ் காட்சியை வைத்து இடைவேளை விட்டு பில்டப் பண்றாங்க.. ஆனா அதுக்குப்பிறகு அது பற்றி எதுவும் சொல்லவே இல்லை.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?

5. களவாணி படத்தில் இருந்த கலகலப்பு மைனஸ்..  இடைவேளை வரை கதைக்கே போகாமல் இழுத்தது அதை விட பெரிய மைனஸ்.. 

6. அவ்ளவ் கட்டுப்பெட்டியான கிராமத்தில் வாத்தியாருடன் ஹீரோயின் பழகுவதை யாரும் கண்டுக்கவே இல்லையே ஏன்?

7. க்ளைமாக்ஸில் ஹீரோ கவர்மெண்ட் வேலையை விடுவது தியாகமாகத்தெரியவில்லை.. அவர் பாடம் சொல்லித்தருவதே தினமும் மாலை 1 மணி நேரம் தான்.. அதற்கு ஏன் வேலையை விட வேண்டு> கவர்மெண்ட் வேலைக்குப்போய்ட்டே அதை தொடரலாமே? வாரா வாரம் சனி , ஞாயிறு மட்டும் வந்து சொல்லிக்கொடுத்தால் போதுமே?

8. பொன்வண்ணன் மாதிரி கேணை வில்லனை பார்க்க முடியாது.. அவர் ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்.. ?

அடிதடி தாதா கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம்தான் இந்தப்படம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6gakMt66Yon5-ZYk3mQAP_bxKPB9H8k2E6RkS0PFDhuWMgbpcKYU-IKS7nyts4adj_jUgV9ifX_I97rV4RfJEm5d5SscwJA6TbAA0WZjW3BymHzsFd_vbMfJ_1Gicotk9Y6_x2iRxXE/s400/RA%25252B5.jpg



ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்....

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.


ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்


டிஸ்கி -1

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி -3

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்



Monday, September 19, 2011

நாளைய இயக்குநர் - கீர்த்திக்கு நோஸ்கட் விட்ட கே பாக்யராஜ் - விமர்சனம்

நாளைய இயக்குநர் ஆரம்பித்த நாள் முதல் கீர்த்தி செஞ்சுட்டு வர்ற கேலிக்கூத்துக்கள் உலகப்பிரசித்தம்... இயக்குநர்களாக வரும் இளைஞர்களிடம் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து லூஸ்தனமாய் கேள்வி கேட்பது.. பின் வழிவது .. ஆனால் ஹாய் மதனோ, பிரதாப் போத்தனோ செய்யாத ஒரு வேலையை கே பாக்யராஜ் செஞ்சாரு.. அது என்னான்னா.......

1. ஸ்டீபன் - 1 4 3

கீர்த்தி - வாங்க ஸ்டீஃபன்.. உங்க படத்தோட பேரு என்ன?

1 4  3

லவ் சப்ஜெக்ட்டா?

கே பாக்யராஜ் - ஏம்மா , கீர்த்தி அவர் தான் தெளீவா டைட்டில் பேரை சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன லவ் ஸ்டோரியானு ஒரு கேள்வி.. ?

. சாரி. சார்.. தெரியாம கேட்டுட்டேன்.. 

படத்தோட கதை கவிதையா சொல்லப்பட்டிருந்தது./.. 

ஸ்கூல்   ஒரு கிறிஸ்டீன் டீச்சரை இந்து வாத்தியார் காதலிக்கிறார். அதை வெளிப்படுத்தும்போது. சாரி.. எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லி எஸ் ஆகறாங்க.. 

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பேங்க்ல அவங்க 2 பேரும் மீட் பண்றாங்க. வாத்தியாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அந்த டீச்சர் காரணம் கேட்கறாங்க.. அப்போ கரெக்டா அவருக்கு டோக்கன் நெம்பர் வரிசை வந்துடுது.. நெம்பர் 143 .. எனக்கான அழைப்பு இப்போ வந்துடுச்சுனு சொல்லி அவர் எழறார்.. 

ரொம்ப நீட்டா கதை சொல்லப்பட்டிருக்கு..

1980 கதை நடக்கறதா காட்டுனாலும் பீரியட் ஃபிலிமுக்கான மெனக்கெடல் இருந்துச்சு.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. எனக்கு தெரிஞ்சு 1 4 3 என்பது 1994 தான் புழக்கத்துக்கு வந்தது.. ஆனா கதை நடக்கும் கால கட்டம் 1980...

2. ஹீரோயின் ஸ்டெல்லா கிறிஸ்டியனா இருந்தாலும் இந்து போலவே அழகாக பொட்டு வெச்சு பூ வைத்திருக்கிறார்.. எப்டி? ( அவர் தீவிர மதப்பற்று உள்ளவராக காட்டி விட்டதால் சமாளிஃபிகேஷனுக்கு வழி இல்லை.. )

3. அந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள், மாணவிகள் , டீச்சர் என எல்லோருக்கும்  1 4 3 பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் ஹீரோ வாத்தியாருக்கு மட்டும் தெரியவில்லை.. அவர் என்ன சின்னத்தம்பி பிரபுக்கு சின்னத்தம்பியா?

ரசிக்க வைத்த காட்சி - தனது காதலை சொன்ன வாத்தியார் டீச்சரிடம் வேணும்னா எங்க  அம்மா அப்பாவை உங்க கிட்ட வந்து பேசச்சொல்றேன்.. என பம்முவது.


கே பி கமெண்ட்  -  எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லிடறதோட முடிச்சிருக்கலாம், எதுக்காக அந்த டீச்சர் தான் கிறிஸ்டியன் .. அவர் ஹிந்துன்னு எக்ஸ்ட்ரா பிரச்சனையை கிளப்பனும்..?மத்தபடி படம் நீட். இசை அழகு.. மாண்டேஜ் ஓக்கே... 


2. பாரதி பாலா - அவள் பெயர் அழகி..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஃபிகர் அலங்காரம் பண்ணிட்டிருக்கறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டறாங்க.. பார்க்கற ஆடியன்ஸ் பாப்பாவுக்கு மேரேஜ் போலன்னு நினைக்க வைக்குது.. ஒரு ஃபிளாஸ்பேக்.. பாப்பா ஒரு காலிப்பையலை லவ் பண்ணுது. வீட்ல முறைப்பையனை கட்டிக்க சொல்றாங்க.. அவளோட லவ்வர் வீட்டை விட்டு ஓடிப்போயிடலாம்.. உன் கிட்டே இருக்கற பணம் , நகை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்கறான்

இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை.. எத்தனை படம் பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கெட்டவன் கிட்டே மாட்டிக்குவாங்க.. நல்ல ஆணை மனம் புண் படற மாதிரி பேசுவாங்க

அவ்வளவுதான். அவன் மேரேஜ் பண்ணி அவளை அந்த மாதிரி இடத்துல வித்துடறான். இதெல்லாமே குறிப்பால் உணர்த்தப்படுது.. இப்போ அவ அலங்காரம் பன்றது மேட்டருக்கு ரெடி ஆக.. ஒரு குரல் கேட்குது.. ஏம்மா பொண்ணு ரெடியா? கஸ்டமர் ரெடி

இந்தப்படத்துல ஹீரோயின் செம ஃபிகர்.. நல்ல அமைதியான நடிப்பு.. அவளோட மாமன்  பையனா வர்றவர் காமெடி நடிப்பில் கலக்கறார்.. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாட்டுக்கு அவர் பொண்ணுக்கு வளையல்போட்டு விடுவதும், அதற்கு ஹீரோயின் காட்டும் ரி ஆக்ஷனும் கலக்கல்..

கே பி கமெண்ட் - ஹீரோயின் செலக்ஷன் ஓக்கே.. பிளசண்ட் & இன்னொசண்ட்
பொண்ணுக்கு மாமா பிடிக்கலைன்னு சொல்லத்தேவை இல்லை.. கதையோட நாட் ஹீரோயின் காதலனை பேஸ் பண்ணித்தானே இருக்கு?



3.  சஞ்சய் - சத்தியம்

ஒரு போலீஸ் ஜீப்ல 3 கொலைக்குற்றவாளீகளை கூட்டிட்டு போறாங்க.. ஒரு எம் எல் ஏவை கொன்ற கூலிப்படைகள் , யார் ஏவியதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க.. 

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதில ஜீப் நிக்குது.. 3 பேர்ல ஒருத்தனை இன்ஸ்பெக்டர் தனியா கூட்டிட்டு போறார்... கேமரா அவங்க பின்னால போகலை.. ஜீப்லயே காட்சி நிக்குது.. டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது... 

அவ்ளவ்தான் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்.. இப்போ 2 வது ஆளை கூட்டிட்டு போறார்.. கொஞ்ச நேரத்துல அதே போல் டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது.. இப்பவும் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்...இப்போ 3வது ஆளுக்கு ஈரக்குலை எல்லாம் நடுங்குது.. 

கால்ல விழுந்து கதறிடறான்.. லோக்கல் வி பி ஒருத்தர் தான் கொலை செய்யத்தூண்டுனதா ஒத்துக்கறான்.. இப்போ இறந்ததா நினைக்கப்பட்ட 2 பேரும் உயிரோட வர்றாங்க. இப்போ தான் உண்மை தெரியுது,.. என்கவுண்ட்டர் நடக்கவே இல்லை.. உண்மையை வரவைழைக்க என்கவுண்ட்டர் பயம் மட்டும் ஊட்டப்பட்டிருக்கு.. 

போலீஸ் ஜீப்பில் கைதிகள் கலாய்த்த வசனங்கள்

1. சார்..போர் அடிக்குது பாட்டுப்போடுங்க.. அட்லீஸ்ட் கிரிக்கெட் ஸ்கோராவது போடுங்க கேட்போம்..

2. என்ன சார்.. மிரட்றீங்களா? 60 வயசு வரை வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்? ஐஸ்வர்யாராய் கூட குடும்பமா நடத்தப்போறேன்? உங்கே சுடுங்க சர்ர்.. இங்கே சுடுங்க.. 

3.  .. இவர் பெரிய ராகவன் பி எஸ்.. கால் பண்றார்... டேய் போடா..... 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கான்ஸ்டபிளா வர்றவர் அவ்ளவ் லீனா மனோபாலாவுக்கு தம்பி மாதிரி இருக்காரே? கொஞ்சம் பாடி உள்ள ஆளை போட்டிருக்கக்குடாதா?

2. என்கவுண்ட்டர் நாடகத்துல குண்டு சத்தம் மட்டும் தான் கேட்குது.. !! அய்யோ என மனித அலறல் சத்தம் கேட்கலை.. துப்பாக்கி முனைல மிரட்னா அவன் அலறிட்டு போறான்.. இன்னும் எஃபக்டா இருந்திருக்குமே?

கே பி கமெண்ட் - கொலைக்கைதிகளா ஜீப்ல அழைச்சிட்டு போகப்படறவங்க ஒரு பயம் இல்லாம ஜாலியா கமெண்ட்  அடிச்சுட்டே வர்றாங்க.. அது எப்படி?

சுந்தர் சி - நீங்க கீர்த்திட்ட பேசறப்போ ஜெயிச்சுடுவீங்களா?ன்னு கேட்டதுக்கு ம் ட்ரை பண்றோம்.. பார்க்கலாம்னு அசால்ட்டா பதில் சொன்னீங்க.. அது தப்பு நம்மால முடியும்கற கான்ஃபிடண்ட்டோட உழைக்கனும்,, அது லைஃப்லயும் சரி.. சினிமாலயும் சரி.. 


4. ராமானுஜம் - மீண்டும் ஒரு குழந்தை


 ஒரு ஆகாவளி தன்னோட நோயாளி அம்மாவை ஹாஸ்பிடல்ல நைஸா விட்டுட்டு எஸ் ஆகிடறான்..அந்தம்மாவுக்கு மேட்டர் தெரில.. பையன் வருவான் வருவான்னு வெயிட்டிங்க்.. ஹீரோ வந்து என்ன மேட்டர்னு கேட்டா அந்தம்மா இந்த சீட்டை என் பையன் என் கிட்டே கொடுத்து இங்கே விட்டுட்டு போயிருக்கான், வந்துருவான்குது. 

அந்த சீட்ல பையனோட ஃபோன் நெம்பர் எழுதப்பட்டு இந்தம்மா இறந்துட்டா மட்டும் இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்கன்னு எழுதப்பட்டிருக்கு,,

மேட்டர் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிடறாங்க.. என்னை ஏதாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடுங்கனு சொல்றாங்க.. ஹீரோ தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.. எனக்கு 2 குழந்தைங்க. 3 வதா நீங்களும் இருந்துடுங்க எங்களுக்கு குழந்தையாங்கறார்..

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. 50 லட்சம் பங்களாவில் வசிப்பவர் காரிலோ, பைக்கிலோ வராமல் ஏன் ஆட்டோவில் வர்றார்?


2. அந்தம்மாவை வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவு எடுத்தது ஓக்கே, அதைப்பற்றி ஃபோன்ல அவர் மனைவிக்கு தகவலாகக்கூட ஏன் சொல்லலை?

படத்தில் மனம் தொட்ட வசனங்கள்

1. எத்தனை வேலை இருந்தாலும், பிஸியா இருந்தாலும் பெத்தவங்களை காப்பாத்தறது முக்கியக்கடமை

2. லைஃப்ல எல்லாருமே குழந்தைகளா வர்றோம், அப்புறம் பெற்றோர் ஆகறோம், மீண்டும் குழந்தைகளா ஆகறோம்... குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு..

கே பி கமெண்ட் - படம் டாக்குமெண்ட்ரி எஃபக்ட் தருது.. ஒரு சாதாரண கம்பவுண்டர் அவ்ளவ் மெச்சூரிட்டியா வசனம் பேசறது நம்பற மாதிரி இல்லை

ஆட்டோ டிராவல் பண்றப்ப லைடிங்க் எஃபக்ட் அழகா கொடுத்திருக்காங்க.. டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் அந்த வயசான அம்மாவுக்கு நல்லா குரல் குடுத்திருக்காங்க.. 

அம்மாவா நடிச்சவங்க ரொம்ப பழைய நடிகை.. புதிய தலை முறை மட்டும் அல்லது முதிய தலைமுறைக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒரு ஏணியா இருக்கு.. 

மேலே சொன்ன துல முதல் படத்துக்கு சிறந்த படம் அவார்டும், சிறந்த நடிக்கான விருது அவள் பெயர் அழகி ஹீரோயினுக்கும், சிறந்த டெக்னீஷியனுக்கான விருது கடைசிப்படத்துல ஒளிப்பதிவாளருக்கும் கிடைச்சது. 

Living DOLL

Monday, September 12, 2011

நாளைய இயக்குநர் - கே பாக்யராஜ் ஜட்ஜ்மெண்ட்டில் - விமர்சனம்

http://www.extramirchi.com/wp-content/uploads/2007/12/bhagyaraj.JPG

இத்தனை நாளா ஹாய் மதன், பிரதாப் போத்தன் இருவரது தீர்ப்புகளை பார்த்துட்டு கே பாக்யராஜ், சுந்தர் சி காம்பினேஷன் பார்க்க ரொம்பவே மாற்றங்கள். அனைத்தும் வரவேற்கத்தக்க மாற்றங்கள்...  இருவரும் அலட்டிக்கொள்வதே இல்லை.. போட்டியாளர்கள் அவர்களை விட 3 மடங்கு வயது குறைந்தவர்களாக இருந்தபோதும் சார் என மரியாதையாகவே அழைக்கிறார்கள். நிறைகளை முதலில் பாராட்டி விட்டு ,குறைகளை மயிலிறகில் வருடுவது போல் சொல்கிறார்கள். சபாஷ்..!!

கீர்த்திப்பாப்பா இன்னைக்கு பிளாக் கலர் நைட்டி மாதிரி ஒரு டிரஸ் போட்டு வந்தாங்க. எத்தனையோ பேரை அறிமுகப்படுத்துன கே பி யை ஜட்ஜா இவர் அறிமுகப்படுத்துறதா சொன்னது செம தமாஷ்.

நானும் ஒரு ஸ்டூடண்ட்டா இந்த புரோகிராம்ல நிறைய கத்துக்கனும்கற ஆர்வத்துல வந்திருக்கேன்னு கே பாக்யராஜ் சொன்னாரு. 

1. சீனிவாசன் - செல்வி. 

 ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் ரெட் லைட் ஏரியா போறான். அந்த பொண்ணு படிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சு  அவளை டீச்சரா ஏத்துக்கறான். பல டைம் மீட் பண்ணி படிச்சு எக்சாம்ல  பாஸ் ஆகிடறான். நன்றி சொல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு வர்றப்ப போலீஸ் ரெய்டுல அவளை கூட்டிட்டு போகுது. ஒரு முழுமையான நிறைவைத்தராத படம்னாலும் வசனங்கள் செம ஷார்ப்.


மனம் தொட்ட வசனங்கள்

1.  வந்து. வந்து. எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். 

இன்னைக்கு மட்டும் ஃபர்ஸ்ட்டா? இதுவரைக்குமே இதான் ஃபர்ஸ்ட்டா? ( சபாஷ் சிக்ஸர்)

2.  படிச்சிருக்கற நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே?


ஏன்? நீ கூடத்தான் படிச்சிருக்கே? இங்கே வர்லையா? ( பளார் பளார்)



3. வேணாம், போகாதீங்க.. நீங்க போய்ட்டாலும் எப்படியும் இன்னொருத்தனை அனுப்பத்தான் போறாங்க.  ( நாயகன் வசனம் பை சரண்யா உல்டா?)

4. என்னை பார்க்க வந்த பலர் என்னை யூஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க, என்னை கோயிலுக்கு கூட்டிட்டு வந்த முத ஆள் நீங்க தான்./.

கே பி  கமெண்ட் - கத்தில நடக்கற மாதிரி கதை. பொதுவா இந்த மாதிரி கதையை யாரும் எடுக்க யோசிப்பாங்க, பசி படத்துல துரை, அவளும் பெண்தானே,அரங்கேற்றம்ல பாலச்சந்தர் சார் எடுத்தாங்க.. குறும்படம் எடுக்கற நீங்க இதை எடுக்க வந்தது துணிச்சல் தான்.

சுந்தர் சி -  கேமரா ஒர்க் நீட்.  ரீ ரெக்கார்டிங்க் எங்கெங்கே எவ்வளவு தேவையோ அதை மட்டும் யூஸ் பண்ணி இருக்கீங்க.. பல இடங்கள் சைலண்ட்.. சபாஷ்..

http://3.bp.blogspot.com/-48Mp_h8_8hU/ThbnvyiDz9I/AAAAAAAACho/wEk0fdKnGUc/s1600/monica-sun-tv-093-766789.jpg


2. பிரசாந்த் - நைஜீரியன் காதல்

காமெடியான கதை.. ஒரு 60 மார்க் ஃபிகர்.. நைஜீரியன் ஆளை ரோட்ல பார்க்குது..  பார்த்ததுமே லவ். அவனையே ஃபாலோ பண்ணுது.. ஃபிகரோட ஸ்கூட்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும்போது அண்ணன் தான் ஸ்டார்ட் பண்ணித்தர்றான்..  ( அதுக்காக  3 டைம் ஒரே மாதிரி ஸ்டார்ட் சீன் வெச்சது ஓவர்..)கடைசில பார்த்தா க்ளைமாக்ஸ்ல அவன் படு லோக்கலான தமிழ் பாஷை பேசறான்.. ஃபிகர் நொந்து நூடுல்ஸ் ஆகி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மனம் தொட்ட வசனங்கள்

1.  வண்டிக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள். லவ் ஸ்டார்ட் ஆகிடுத்து ..


2. என் ஹார்ட் பீட்  லவுடு ஸ்பீக்கர் போட்டது போல் ஏன் சத்தம் போடுது?

3. நைஜீரியன் காதல்னு நினைச்சேன், ஆனா கடைசில லோக்கல் நீலாங்கரை லவ் ஆகிடுச்சே?

கதை கொஞ்சம் சில்லித்தனமா எனக்கு தோணுச்சு,, காமெடின்னாலும் காதலை காமெடி பீஸ் ஆக்குவதை காதலர்கள் விரும்ப மாட்டார்கள்..


கே பி  கமெண்ட் - இது ஒரு எவர் க்ரீன் ஃபார்முலா. ஆனா ஒரு பொண்ணு இவ்ளவ் ஜொள்ளு விடுமா? டவுட்டு.  படம் ரொம்ப்ப சிம்ப்பிள் & நீட்..

சுந்தர் சி கமெண்ட் - ஓ ஹென்றி, சுஜாதா,புதுமைப்பித்தன் இவங்க எல்லாம் அவங்க சிறுகதைல கடைசில ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க.. அது மாதிரி ட்ரை பண்ணீ இருக்கீங்க.. படத்தோட க்ளைமாக்ஸ்ல நைஜீரியன் சாங்க் வெச்சது சூப்பர்.. நைஜீரியனா நடிச்ச அந்தாள் நடிப்பு செம..

http://www.faltooclub.com/Biography/Bigimage/kanika62011.jpg

3. நந்தா - உயிர்

ஒரு பழைய பைக், அதை வித்துடுங்கன்னு மனைவி சொல்றா.. கணவன் ஓக்கே சொல்லி மெக்கானிக் ஷாப்ல அதை காட்டி ரேட் கேக்கறான்.. 2 நாள் கழிச்சு வாங்கன்னு அவன் சொன்னதால பைக் ரிட்டர்ன் பேக் டூ த சேம் ஹவுஸ்..

அவங்க பாப்பா வீதில விளையாடப்போகுது.. அப்போ பஸ் ஒண்ணு வருது. பைக் வீட்டு வாசல்ல இருந்து  கிளம்பி பஸ்ஸூக்கு முன்னே விழுந்து பாப்பாவை காப்பாத்துது.. அதுக்கும் உயிர் இருக்குன்னு ஒரு ஃபீலிங்க் காட்றாங்க.. ( ஃபிலிம் காட்றாங்க? )

அப்புறம் அந்த பைக்கை சாமியா நினைச்சு கும்பிடறாங்க.

சத்தியமா நம்பவே முடியல..

கே பி  கமெண்ட் - பைக் ஸ்டேண்ட் லூஸா இருந்துச்சு.. தானா ரிலீஸ் ஆகி ரோட்டுக்கு வந்துடுச்சுன்னு காட்டி இருக்கலாம்.. இன்னும் நம்பகத்தன்மை வந்திருக்கும்.. பொல்லாதவன் படத்துல கூட இந்த மாதிரி ஒரு சீன் வருது,, தனுஷை துப்பாக்கிக்குண்டுல இருந்து பைக் காப்பாத்தும்./.

சுந்தர் சி கமெண்ட் - பழைய பைக் மாதிரி கதைல சொல்றாங்க. ஆனா அது புது பைக் மாதிரிதான் தெரியுது.. இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/namitha-latest-hot-photos/Namitha-latest-sexy-photo-45.jpg

4. நிகிலன். - புதிர். 

ஒரு குறும்படத்துல இவ்வளவு டேலண்ட்டை காட்ட முடியுமா? என திரைக்கதையில், மேக்கிங்க் ஸ்டைலில் கலக்கிய படம்.  ஒரு பைக் ஆக்சிடெண்ட்ல ஒரு பொண்ணுக்கு அடிபடுது.. அவ கிட்டே இருந்து ஒருத்தன் செல் ஃபோனை அடிச்சுக்கிட்டு ஓடறான். அவன் எப்படி போலீஸ்ல பிடிபடறான்.. அப்டிங்கறதை பல திருப்பங்களோட சொல்லி இருக்காங்க.

ஓப்பனிங்க் சீன்ல என்ன சீன் வருதோ அதுவே க்ளைமாக்ஸ்ல வேற கோணத்துல காட்டி இருப்பாங்க..

இந்த இயக்குநர்க்கு செம  எதிர்காலம் உண்டு.. கங்க்ராட்ஸ்.. இவரோட ஸ்கிரிப்டை யாராவது திருடுனாக்கூட இவரைத்தவிர யாராலும் அதை புரிஞ்சுக்க முடியாது.



கே பி  கமெண்ட் - ஆங்கிலத்துல இர்ரிவர்சிபிள்னு ஒரு படம் வந்தது.. அதே போல் ட்ரை பண்ணி இருக்கீங்க. ரொம்ப வித்தியாசம்.. கீப் இட் அப்.

சுந்தர் சி - பக்கா ஸ்க்ரீன்ப்ளே வெரி டிஃப்ரண்ட்.. நைஸ்..

 லிங்க் -
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-39/