Showing posts with label பூர்ணா. Show all posts
Showing posts with label பூர்ணா. Show all posts

Friday, November 18, 2011

வித்தகன் - வின்னர் - சினிமா விமர்சனம்

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/10/Viththagan-Tamil-Movie-2011-Poster-488x400.jpg 

அசிஸ்டெண்ட் கமிஷனராக பகலில் வேலை பார்க்கும் குண்டக்க மண்டக்க ஆர். பார்த்திபன் இரவில் ராபின் ஹூட்டாக மாறி ரவுடிகளை போட்டுத்தள்ளுகிறார்.. அப்போ அவர் எப்போ தூங்குவார்? எப்போ ரெஸ்ட் எடுப்பார்னு எல்லாம் யாரும் கேக்காதீங்க.. ஏன்னா நானும் கேட்கலை.. புரொடியூசரும் கேட்டிருக்க மாட்டார்னு நம்பறேன்... இது பார்த்திபனோட 50 வது படம்கறதால கொஞ்சம் விளையாண்டு பார்க்கலாம்னு ஆசைப்பட்டிருக்கார்.. 

படத்தோட விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னால பார்த்திபனுக்கும் கமலுக்கும் உள்ள ஒரு சைக்காலஜிக்கல் ஒற்றுமையை பார்க்கலாம்..  குணா படத்தில் இருந்து கமலுக்கு ஒரு எண்ணம்.. ஸ்க்ரீன்ல தான் வர்ற ஒவ்வொரு சீனும் தான் மட்டுமே கவனிக்கப்பட வேண்டும்.. தன் நடிப்பு பிரத்யேக கவனத்தை பெற வேண்டும்னு நினைப்பாரு.. லேசா செயற்கை தட்டி நடிப்பாரு.. அதே போல பார்த்திபன்க்கும் ஒரு ஆசை.. தான் தான் செம பிரில்லியண்ட்.. மத்தவங்க எல்லாம் கேனை. அவன் இண்ட்டர் நேஷனல் கிரிமினல் ஆக இருந்தாலும் சரி மாக்கான் தான்னு நினைக்கறார்..

அவரோட எண்ணம் ரொம்ப தப்பு.. வில்லன் கேப்டன் பிரபாகரன்ல வர்ற மன்சூர் அலிகான் மாதிரி பலசாலியா, காக்கிசட்டை சத்யராஜ் மாதிரி புத்திசாலியா, ஏழாம் அறிவு வில்லன் போல் பிரமிக்க வைக்கும் அளவு காட்டிட்டு, அதுக்குப்பிறகு ஹீரோ வில்லனை வெல்வது போல் காட்னாத்தான் செம இண்ட்ரஸ்ட்டா இருக்கும்..

சரி படத்தோட கதைக்கு போலாம்.. ஹீரோவோட அப்பா ஒரு போலீஸ்காரர்.. அவர் ரவுடிகளை, சமூக விரோதிகளை ஒடுக்கறதால அதுல ஒருத்தன் அவரோட மகளை கொலை பண்ணிடறான்.. அதாவது ஹீரோவோட தங்கை.யை மர்டர்டு..வெறுத்துப்போன ஹீரோவோட அப்பா  வேலையை ரிசைன் பண்ணிட்டு வேற ஊர் போயிடறார்.. 

http://www.123stills.com/wp-content/uploads/2010/01/No-Buzz-About-Poorna%E2%80%99s-Viththagan.jpg

அப்பாவுக்கு தெரியாமயே ஹீரோ போலீஸ் வேலைக்கு படிச்சு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆகி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறார்.. தன் தங்கையை கொலை செஞ்ச வில்லன் இப்போ தாய்லாந்து நாட்டுல ... படம் லோ பட்ஜெட் என்பதால் ஹீரோ தாய்லாந்து போக முடியல.. தன்னோட சாணக்கியத்தனத்தால வில்லனை இங்கே வரவழைக்கறார்.. 

சாதாரண எக்ஸிக்கியூட்டிவ் முடிக்க வேண்டிய வேலையை கம்பெனி பாஸே செஞ்சா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு அந்த வில்லன் தமிழ் நாடு வர்றது..

சரி.. ஹீரோ ஆடும் ஆடுபுலி ஆட்டத்துல ஹீரோயினுக்கு என்ன வேலை? அவரை எப்படி கதைக்குள்ள கொண்டு வர்றது? ரொம்ப ஈசி.. ஹீரோ செய்யற ஒரு கொலையை அவர் நேர்ல பார்த்துடறார்.. என்ன ஏது? எதுக்காக அவர் கொலை செஞ்சார்ங்கற ஃபிளாஸ்பேக் எல்லாம் அவர் தெரிஞ்சுக்காததுக்கு முன்னேயே அவர் ஒரு போலீஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சதும் லவ்வ ஆரம்பிச்சடரார்.. ( நல்ல லவ்வுய்யா)

இடைவேளை ட்விஸ்ட் வேணுமே , அதுக்காக ஹீரோ போலீஸ்ல மாட்டிக்கறார்.. இடைவேளைக்குப்பிறகுதான் டர்னிங்க் பாயிண்ட்.. தண்டனை முடிஞ்சு ஹீரோ வெளீல வந்து தாதா முன்னேற்றக்கழகம்னு எதும் ஆரம்பிக்காமயே தாதா ஆகிடறார்.. 

இப்போ ஊர்ல 3 தாதா.. ஒண்ணு ஹீரோ தாதா..  2 வில்லன் தாதா.. 3 சைடு வில்லன் தாதா.. 2வது வில்லன் தாதா ஹீரோ கிட்டே கெஞ்சறாரு.. நீங்க 3வது வில்லனை போட்டுடுங்க...அப்போ நான் முதல் இடத்துக்குப்போயிடுவேன்.... நீங்க 2வது இடத்துக்கு வந்துடலாம்னு.. 

ஹீரோ தன்னோட அதி புத்திசாலித்தனத்தால என்ன செய்யறார்.. எப்படி ஜெயிக்கறார்? பழி வாங்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி திரைக்கதை..

பார்த்திபன் சும்மா சொல்லக்கூடாது மிடுக்கான அசிஸ்டெண்ட் கமிஷனர் ரோல்லயும் சரி.. தெனாவெட்டான தாதா ரோல்லயும் சரி. அசால்ட்டான நடிப்பு.. படம் முழுக்க அவரது எள்ளல்கள், நக்கல்கள், நையாண்டிகள் கொட்டிக்கிடக்கு.. ரசிக்கலாம்.. சில இடங்களில் மட்டும் ஓவர்..

பூரணி  சும்மா ரிலாக்‌சேஷனுக்கு , அதாவது ஆடியன்ஸூக்கு.. 2 டூயட் உண்டு.. ஆனால் மேற்படி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மேற்படிகள் இல்லை.. 

மெயின் வில்லன் நடிப்பு ஓக்கே.. டெபுடி கமிஷனராக, அரசியல்வாதியாக வருபவர் நடிப்பும் அருமை.. 

எடிட்டிங்க் செம ஷார்ப்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கு,.. இசை ஓக்கே 2 பாடல்கள் ஆல்ரெடி ஹிட்.. 

http://pirapalam.com/wp-content/uploads/2011/11/18-vithagan300.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயின் அருகே ஹீரோ ஜீப்பில் போகும்போது ஹீரோயின் கண்களுக்கு வில்லனாகத்தெரியும் ஹீரோவின் 2 கண்கள் மட்டும் தனியாகப்போய் ஹீரோயின் ஜாக்கெட் விளிம்பில் எட்டிப்பார்க்கும் சீன் என்னதான்  ஜிம் கேரியின் மாஸ்க் பட உருவல் என்றாலும் ரசிக்கும்படி இருக்கிறது..

2.   டி வியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போலீஸ் ஆஃபீசர் பார்த்திபன் ஹீரோயின் கண்களுக்கு மட்டும் அவரை எச்சரிப்பது போன்ற ஹீரோயின் கற்பனை செம காமெடி.. 

3. ஒரு பாடல் காட்சியில் பூரணாவின் சேலையில் இருக்கும் பூ டிசைன் அப்படியே பூவாக மலர்வது செம உத்தி.. கலக்கல் சீன் அது. 

4. இடைவேளைக்குப்பிறகு தாதா ஆகும் ஹீரோவின் ஆஃபீஸ்க்கு ஹீரோயின் வரும்போது அவரது ஆஃபீஸ் இண்ட்டீரியர் டெக்கரேஷன் செம.. ஆர் பார்த்திபன் ஆர்ட் டைரக்‌ஷனில் தனி கவனம் செலுத்துபவர் என்பதற்கான சான்று.. 

5. வசனகர்த்தா பார்த்திபனின் அபார உழைப்பு படத்தின் வெற்றிக்கு பக்க பலம் சேர்க்கிறது..  அவரது நக்கல் நையாண்டி வசனங்கள் மட்டும் 42 ஜோக்ஸ் தேறும்.. 

6. போர் அடிக்காமல் பர பர என காட்சிகளை நகர்த்திச்செல்லும் வேகம் அழகு..

7. ஒரு பாடல் காட்சியில் அதிகாலை செய்தித்தாள் போலே நீ வந்தாய் என்ற அழகு வரிகளுக்கு உயிர் ஊட்டும்படி ஒரு புறா கதவை திறந்து உள்ளேவருவது சோ க்யூட்.. 

8. வில்லன் கூட வரும் எடுபுடி கிழவன் செம காமெடி நடிப்பு டயலாக் டெலிவரி.. செம



http://suriyantv.com/wp-content/uploads/2011/10/vithakan-vizha.jpg
இயக்குநர் ஆர் பார்த்திபனிடம் சில கேள்விகள், பல சந்தேகங்கள். சில ஆலோசனைகள்

1.  மகன் அப்பாவை டேய் என கூப்பிடுவது கவுண்டமணியின் காமெடிக்கு ஓக்கே.. வில்லனின் மகனுக்குமா? அது கூட தேவலை.. கொலை நடந்த அன்று நீ எங்கே போனே? என அப்பா கேட்கறப்ப ஒரு மகன் அப்படியா தன் தந்தையிடம்  நான் ஃபிகர்ட்ட ஜல்ஸா செய்ய போனேன்னு சொல்வான்?

2. ஒரு கொலை நடக்குது. அதை செஞ்ச ஹீரோ கொலை ஆன டெட் பாடி சர்ட் பாக்கெட்ல இருந்து செல் ஃபோனை எடுத்து எஸ் எம் எஸ் அனுப்பறார் வில்லனுக்கு.. அதை பார்த்து அங்கே வர்ற வில்லன் கொலை செஞ்சதா மாட்றதா சீன்.. மெசேஜ் பார்த்து அவன் கால் பண்ணீ கன்ஃபர்ம் பண்ண மாட்டானா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட வெச்சு கொலை நடந்த ஒரு மணி நேரம் கழிச்சே வில்லன் வந்தான் கற உண்மை தெரியாம போகாதா? அந்த செல் ஃபோன்ல ஹீரோவோட கை ரேகை இருக்கே?

3.  ஹீரோயின் பூரணா முகம் உடம்புக்கு செமயா பவுடர் போடறாங்க பாராட்டறேன்.. ஆனா முதுக்குக்கு நோ மேக்கப்... இதனால டூயட் சீன்ல அவர் நேரா நிக்கறப்ப கலரா தெரியறார்.. திரும்பறப்ப கறுப்பா தெரியறார்.. ( அவர் முதுகை எல்லாம் உன்னை யார் நோட் பண்ண சொன்னது?ன்னு கேக்காதீங்க.. அதை நான் பார்க்கலை.. பக்கத்து சீட் ஆள் சொன்னார்.. )

4. எல்லா படத்துலயும் வில்லன்க ஏதாவது கெட்ட தகவலை சொல்ற தன் ஆளுங்களையே டபக் டபக்னு சுட்டுட்டே இருக்காங்களே.. ஆள் பற்றாக்குறை வராதா? இந்தப்படத்துல 4 பேர் அவுட்.. பாவம்..

5. டூயட் சீன்ல கூட ரிவால்வர் வெச்சுக்கிட்டே ஹீரோ அலையறாரே.. அது ஏன்? வித்தகன் வித் த கன்  என்பதாலா?

6. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை போட்டுத்தள்ளும் வில்லன் அதே ஸ்பாட்க்கு ஹீரோவை ஏன் வரச்சொல்லனும்? கொஞ்சம் தள்ளி வர சொல்லக்கூடாதா? ஹீரோயின் செயின் , ரத்தம் எல்லாம் அங்கே இருக்கே.. அதை  ஹீரோ பார்த்துட்டா ஹீரோயினை பிணையக்கைதியா வெச்சு நாம பண்ற டிராமா ஹீரோவுக்கு தெரிஞ்சுடுமேன்னு கூட  யோசிக்காத மாங்கா மடையனா?

7. பார்த்திபன் சார்.. 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே.. போலீஸ் யூனிஃபார்ம் கெட்டப் செம.. ஆனா தாதா கெட்டப் நல்லாவே இல்ல.. ஏதோ நோய் வந்து இளைச்ச ஆள் மாதிரி இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD5cSwtAZhEj-_dzqrGsvu3aV6BoAQiQAXuokex0WIeUVBkt1j7WXth3tUGzIcAEoJPvP_D216lbEWdqUfibE-4qayZPcdd75uTbZAI_N4Ej3lZyNjOd7Mg_bDDX8u80QT2TWf5NFf9MPY/s1600/poorna-hot-navel-stills-01.jpg

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42


எதிர்பார்க்கப்படும் குமுதம் மார்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஆர் பார்த்திபனின் ரசிகர்கள், அவரது நக்கல் நையாண்டியை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.. ஃபேமிலியோட பார்க்கர மாதிரி டீசண்ட்டாதான் இருக்கு..

ஈரோடு ஆனூர் -ல் பார்த்தேன்

டிஸ்கி - வழக்கமாக போடும் ரசித்த வசனங்கள் போடாததற்கு காரணம்

. ஆல்ரெடி பதிவு நீளம்.. வசனங்கள் மட்டும் 45 டயலாக்ஸ் சேர்ந்துடுச்சு.. அதை தனி பதிவா போட்டுக்கலாம்-னு ஐடியா

Friday, February 18, 2011

ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1460&option=com_joomgallery&Itemid=65
சி எம் சீட்டுக்காக நாய் மாதிரி அலையும் ஒரு சந்தர்ப்பவாத , பச்சோந்தித்தனமான மன நிலை கொண்ட அரசியல் வாதி.... ( சுருக்கமா நம்ம டாக்டர் ராம்தாஸ் மாதிரி) தான்  படத்துக்கு வில்லன்.(பொதுவா இந்த அரசியல் வாதிகளே நமக்கு வில்லன்க தானே..?). அவரது பொண்ணைக்காதலிக்கும் ஹீரோ...எப்படி எதிர்ப்புகளை மீறி கைப்பிடிக்கிறார்ங்கறது தான் கதை.

ஈரம்,அய்யனார்,மிருகம் போன்ற வித்தியாசமான சப்ஜெக்ட்டில் நடித்து நல்ல பெயர் வாங்கிய ஆதிக்கு விஜய் மாதிரி ஆக்‌ஷன் கம் மசாலா ஹீரோ ஆகனும்னு ஆசை வந்துடுச்சு போல.. அறிமுக பாடல் காட்சிலயே விஜய் மாதிரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் குடுத்து பயப்பட வைக்கிறார்.அதே போல் வில்லனிடம் சவால் விடும் காட்சிகளில் சிவகாசி விஜய்-யை இமிடேட் செய்கிறார்.ம்ஹும், தேற மாட்டார்னு நினைக்கிறேன்.. ஏற்கனவே விஷால்க்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்.

ஹீரோயின் பூர்ணா.. ஜூனியர் அசின் -னு முகச்சாயல்ல இவரை கோடம்பாக்கத்துல சொல்றாங்களாம். (அப்படின்னு பூர்ணாவே வதந்தியை கிளப்பறார்னு நினைக்கிறேன்.)முகத்துல ஒரு ஃபிரஸ்னெஸ்ஸெ இல்லை. ஏதோ சம்பளம் வாங்குனமா? டைரக்டர் சொன்னபடி நடிச்சமா?ன்னு ரொம்ப சுமாரான நடிப்புத்தான்.

படத்துல ஆறுதலான ஒரே அம்சம் வில்லனா வர்ற சுரேஷ்தான் ( பன்னீர் புஷ்பங்கள் புகழ்)சொட்டைத்தலையோட வந்து அவர் நயவஞ்சகமா சிரிக்கறப்ப அப்படியே டாக்டர் ராம்தாஸைப்பார்க்கற மாதிரியே இருக்கு.

http://www.dinamani.com/Images/article/2010/8/6/cin2.jpg
வில்லனுக்கு பி ஏ வாக வரும் மயில்சாமி அப்பப்ப சிச்சுவேஷனுக்குத்தக்கபடி கவுண்ட்டர் டயலாக் குடுத்து அப்ளாஸை அள்ளறார்.

உன்னை நினைக்கையிலே மனசுக்குள் மழைக்காலம் என்ற பாடல் வரிகளை அழகாக எழுதிய கவிஞர் பாடலை படமாக்கிய விதத்தினை பார்த்திருந்தா (PICTURAISATION OF THE SONG)பாட்டு எழுதுறதையே விட்டுடுவார்னு நினைக்கிறேன்.

அதே போல் இடைவேளைக்குப்பிறகு வரும் மாமூல் ஃபேமிலி சாங்க்கில் அத்தனை பேரும் (கிட்டத்தட்ட 24 பேர்) கூலிங்க் கிளாஸ் அணிந்து வந்து பயமுறுத்துகிறார்கள். அந்த பாடல் காட்சியில் பழம்பெருமை மிக்க ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா உட்பட அனைவருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்து அவர்களையும் படுத்தி , நம்மையும் படுத்தி எடுக்கிறார் இயக்குநர்.

மனதைத்தொட்ட வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip5yXmTS28HTTvXFc6fyBMstjRMTKdmLRfI92ZwrLF8X0-0-XUr4HfxXaStLbxnvUR-S6Uxhyphenhyphen2EFBJW9Qz4ef37bhM2efDyDlzAvrMNhrTsBeHdaNGJ9JyVLzX3gWVOUQf7EjEdE909Ls/s320/poorna.jpg
1. அடேங்கப்பா.. வழுக்கு மரமே இப்படி ஏர்றானே.....வாழ்க்கைல எப்படி முன்னேறுவான்?

அவ்வளவுதானா? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்.

2.  நீங்கதான் என் பையனுக்கு ஒரு பேரு வைக்கனும்.

ஹரிதாஸ்  , ஹரிதாஸ்

எனக்கு இந்த பேரு பிடிக்கலை.
ஓ. இதுக்குத்தான் குழந்தைகளுக்கு பேசறதுக்கு முன்னேயே பேரு வெச்சுடறாங்க போல...

3. ஏம்மா.. படுத்திருந்த பொண்ணைக்காணோமேன்னுபதட்டப்படாம ஸ்கூல்க்கு கிளம்பறியே.. ஏன்?

பொண்ணைப்பெத்திருந்தா பயப்படுவேன், பொறுக்கியை அல்ல பெத்திருக்கேன்..? ( ஆஹா என்ன ஒரு மாதர் குல மாணிக்கங்களாடா...)

4. பாப்பா பாக்க டாப்பாத்தான் இருக்கு, ஆனா ட்ரை பண்ணிப்பார்த்தா படு லோக்கலா இருக்கும் போல...

5. கணக்கு டீச்சர் - டேய்.. உங்கப்பாவுக்கு நான் ரூ 1000 பணம் கடன் தர்றேன். மாசாமாசம் ரூ 50 திருப்பித்தர்றதா சொல்றாரு. அப்போ எத்தனை  மாசத்துல திருப்பித்தருவாரு?

மாணவன் - எத்தனை  மாசமானாலும் திருப்பியே தரமாட்டார் மேடம்.. உங்களுக்கு எங்கப்பாவைப்பற்றித்தெரியலை...

6. ஒரு கெட்டவன் உருவாகறது அவன் சொன்ன முதல் பொய்ல...

7. எல்லாரும் சாவுக்கு சங்கு ஊதுவாங்க.. இவன் தான் சாகறதுக்கே சங்கு ஊதறான்.

8. ஒரு பொண்ணு வண்டி ஓட்டறப்ப அவ பின்னால ஒரு பையன் உக்காந்தா அது லிஃப்ட்டுன்னு நினைப்பாங்க. ஆனா ஒரு பையன் பின்னால ஒரு பொண்ணு உக்காந்தா லிஃப்ட்டைத்தவிர மத்த எல்லாத்தையும் நினைப்பாங்க..

9. ஹீரோயின் - உன் கை டிகாக்‌ஷன் மாதிரி இருக்கு, என் கை பால் மாதிரி இருக்கு...

ஹீரோ - அப்போ நமக்குப்பிறக்கபோற குழந்தை காஃபி  மாதிரி இருக்கும்னு சொல்லு.

(இந்த சீன்ல என்ன காமெடின்னா 2 பேர் கையும் மாநிறமா தான் இருக்கும் )

10. எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்.

ஏன் அப்படி சொல்றே.. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையே...எந்தப்பொண்ணையும் எதுவும் பண்ணுனது இல்லையே...

அதான். கல்யாணத்துக்குப்பிறகு மட்டும் என்னைக்கட்டிட்டு என்ன செய்யப்போறே,,?

(சபாஷ்.. தமிழ்ப்பொண்ணுன்னா இப்படித்தான் கலாச்சாரத்தைக்காப்பாத்தனும்)

11. ஹீரோ - அப்பா, இவ்வளவு கட்டுப்பாடா வளர்ந்த நீங்க எப்படி எனக்கு இவ்வளவு ஃபிரீடம் குடுத்தீங்க..?

பிரபு -  நான் எப்படி எல்லாம் வாழனும்னு நினைச்சனோ அந்த மாதிரி...நீ வாழனும்னு ஆசைப்படறேன்.

12. ஹீரோயின்  - எதுக்காக என்னை அவசரமா வரச்சொன்னே..?

ஹீரோ - நம்ம லவ் மேட்டர் எங்க வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு.

ஹீரோயின் - அய்யய்யோ.. என்ன சொன்னாங்க..?

ஹீரோ - ஓக்கே சொல்லீட்டாங்க.. அதான் கவலையா இருக்கு..

13. வில்லனின் எடுபுடி  - பால்பாண்டின்னா பால் கறக்கற பாண்டின்னு நினைச்சியா?உனக்குப்பால் ஊத்தற பாண்டிடா... ( பஞ்ச் டயலாக்காம்.. சகிக்கல...)



http://www.sivajitv.com/newsphotos/poorna4.jpg
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஹீரோ தனது காதலை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தனித்தனியே சொல்லி உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் .என டபாய்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும்  கல கல சீனும்.

2.செலவு அதிகம் இல்லாம ஒரு மசாலாப்படத்தை கொடுத்தது.

3. ஹீரோயினை சுமாரா செலக்ட் பண்ணி கடுப்பை கிளப்பினாலும் ஹீரோயின் அம்மாவா யுவராணியை போட்டு கிளுகிளுப்பு ஏத்துனது..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஹீரோ கம்பம் ஏறும்போது கீழே விழுந்து சேறு ஆகிடுது ஓக்கே... அப்போ கூட இருந்த 42 பேருக்கும் அதே மாதிரி சேறு எப்படி ஆச்சு? ( பாட்டுக்கு மேட்ச்சுக்கு மேட்சுக்கா?)

2. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பைக்ல வேகமா வந்து விழறார். வில்லனோட அடியாளுங்க 34 பேர் சுத்தி நிக்கறாங்க. உடனே எந்த ஸ்பேனர், ஸ்க்ரூ ட்ரைவர் இல்லாம தன் பைக்கோட முன்னாடி சக்கரத்தை கழட்டி வீசி அடிக்கறாரு..? அது எப்படி?அந்த ஒரு சக்கரம் பட்டு 12 பேர் விழறாங்க...

எப்படியோ படம் தப்பிச்சிக்கிச்சு....

ஏ செண்ட்டர்ல 35 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல  15 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே


டிஸ்கி -