Showing posts with label CINECRITICS. Show all posts
Showing posts with label CINECRITICS. Show all posts

Saturday, February 19, 2011

காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்


http://indiamoviez.com/wp-content/uploads/2009/12/KaavalarKudiyiruppuFront.jpg
சயனைடு (குப்பி )என்ற வித்தியாசமான படம் குடுத்த ரமேஷ் இயக்கத்தில் வந்துள்ள காதல் சப்ஜெக்ட் படம்.மனதைக்கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ், இறுக்கமான, உருக்கமான கடைசி 30 நிமிட காட்சிகள் என பல பிளஸ் பாயிண்ட்ஸ் இருந்தும் படத்தின் முதல் பாதியில் இயக்குநர் ஏன் அவ்வளவு தடுமாறினார் என்றே புரியவில்லை...

நண்பனுக்காக காதலை விட்டுகொடுத்தல்,தனக்கு நோய் இருப்பதால் காதலியாவது நல்லாருக்கட்டும் என காதலிக்காக காதலை விட்டு கொடுத்தல்,குடும்ப நலனுக்காக காதலை விட்டுக்கொடுத்தல் வரிசையில் நன்றிக்கடனுக்காக காதலை விட்டுக்கொடுக்கும் கதை.

ஹீரோ அனிஷ் தேற மாட்டார். (ஹூம், நாம எந்தக்காலத்துல ஆம்பளைங்களை பாராட்டி இருக்கோம்..?# மனசாட்சி)காதல் வரும்போது,ஊடல் கொள்ளும்போது, அம்மாவிடம் பேசும்போது,காதலியிடம் பேசும்போது, என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் அண்ணனிடம் கைவச,ம் ஒரே முக பாவனை தான். பாவம் அவர் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்..? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்?

இப்படியாக முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்‌ஷன்லதப்பு பண்ணுன இயக்குநர் ஹீரோயின் செலக்‌ஷன் ல அடடே சொல்ல வெச்சுட்டார்.. ( அதானே பார்த்தேன்..)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijYhFWTYHtbuW6AkGT33bXhPVbZAJJnIh_L956kmQboo6cFnsnDIG0ZRDxEAeP5CpsspoWOHnm9W96uXHx6MmzCtL5CA4OZt-3FeJEnh86a3PprAqsSjdCmnVmA8f3SfGLrS0ROjLA_uzb/s400/009-Kavalar-Kudiyiruppu-37.jpg

ஸ்ருதி... இவர் நடிப்புல பாஸ் மார்க் வாங்கிடறார் ஈஸியா..( பொண்ணுங்க எப்பவும் ஈஸியா பாஸ் ஆகிடுவாங்க..) இவர் கிட்டே பர்சனலா எனக்கு பிடிச்சதே இவர் சுடிதாருக்கு போடற துப்பட்டாவை புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்.வாழ்க தமிழச்சி பண்பாடு.



படத்துல இயக்குநர் ரொம்ப நம்பி இருந்த சீன் பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்துல நாட்டுல நடந்த கலவரத்தை படத்துல சாமார்த்தியமா புகுத்துன விதம்.ஆனா பின்னணி இசை, படமாக்கம், எடிட்டிங்க் எல்லாமே ரொம்ப சுமார்தான் அந்த சீன்ல.

கங்கை நதி எங்கேயோ பிறந்து .. பாட்டு 1968 ல நடக்கற கதைல வர்ற சிச்சுவேஷன்கறதை  புரிஞ்சுக்கிட்டு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பழைய கால மெட்டு இதம்.

சொன்னதைக்கேட்க மாட்டே பாட்டு செம கும்மாளம் என்றாலும் அது ஸ்ரீகாந்த் - சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் வரும் சைட் அடிக்கப்போக மாட்டோம் பாட்டின் மெட்டை ஞாபகப்படுத்துது.



http://nowrunning.com/content/movie/2009/kavalarkudiyiruppu/stills/kaavalaar_kudiyiruppu%20(34).jpg
--
உயிரே ... என் உயிரில் ஏன் வந்தாய் பாட்டுக்கான ஓபனிங்க் லீடில் ஹீரோயின் ஒரே ஒரு நெற்பயிரைக்கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே நிற்கும் காட்சியை படமாக்கிய விதத்தில் இயக்குநர் தனது அழகியல் ரசனையை பதிவு செய்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மேல் ஏன் காதல் வருது? என்பதற்கான காட்சி அமைப்பில் ஒரு ஆபத்து என்றதும் ஓடி வந்து ஹீரோ காப்பாத்தறார் என்பதுதான் எனும்போது பெண் எப்போதும் செக்யூரிட்டி பர்ப்பஸ்க்குத்தான் லவ் பண்ணுறாங்க என்ற எண்ணம் வருது.அதே போல் ஹீரோ ஹீரோயின் மேல் எரிந்து எரிந்து விழுகிறார்.. தியேட்டர் இருட்டின் தனிமையில் ஹீரோயின் ஹீரோ தோளில் சாய்ந்து கொண்ட அந்த உடல் நெருக்கத்தில் தான் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் காதல் வருகிறது என்று சொன்னதும் ஒரு காதல் சப்ஜெக்ட்டில் முக்கிய மைனஸ்.

பொதுவாக ஒரு காதல் கதை வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் வரும் சம்பவம் கவிதையாக இருக்க வேண்டும்.பிறகு முதன் முதலாக காதலை பரஸ்பரம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும் ஒரு கலக்கலான காட்சி அமைப்பு வைக்க வேண்டும்.இந்த இரண்டையும் சரியாக கவனிக்காத காதல் படங்கள் தோல்வி அடைவதை தவிர்கவே முடியாது. காரணம் படம் பார்ப்பவர்கள் மனதில் முதலில் அந்த காதல் ஆழப்பதிய வேண்டுமே...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXMZ_ye7_G7EaWXD5utx7u7pe5jVAPYYDFoNZemKv9zXloKbCToQs-Nt4mL_C8NUc0udef6BXLsvnxyqE0Ro_d6XecCxPhyphenhyphenpKqCea5C8yueOv-4xITcS330gpUgQbR8JNWCwGB4qQ7RJrh/s400/kavalar-kudiiruppu-movie-latest-stills-pics-photo-gallery-01.jpg
வசனகர்த்தா நம் மனதில் குடி கொண்ட இடங்கள்

1. ஹீரோயின் - அத்தை...காலேஜ் சீட் கிடைச்சிருக்கு..ஸ்வீட் எடுத்துக்கோங்க..

ஹீரோ - த்தூ...

சரண்யா - ஏண்டா.. துப்பறே,,?

ஹீரோ - பல் துலக்கறப்ப துப்பாம எப்படி இருக்கறது..?

2. டேய். பைக் வேணாம்டா.. நடந்தே போயிடலாம்டா...

ஏன்?

ஷோ ரூம் காரன் போட்ட பெட்ரோல் தீர்ந்துடுச்சு.

அட த்தூ... ( படம் பூரா துப்பீட்டே இருக்கறாங்கப்பா..)

3. எங்கண்ணன் கூட பிளஸ் டூ எக்ஸாம் எழுதுனே...,அப்புறம் என் கூட, இப்போ என் தம்பி கூட... அவங்க எல்லாம் பாஸ் ஆகிட்டாங்க.. நீ அநேகமா என் பையன் பிளஸ் டூ படிக்கறப்பவும் எழுதுவேன்னு நினைக்கறேன்...

4. எதுக்கு தாரை தப்பட்டையோட ஊர்வலம் வர்றீங்க..?

நான் பிளஸ் டூ ல பாஸ் ஆகிட்டேன்.

அடப்பாவி,.. இது சாவுக்கு அடிக்கற மேளம்டா...

5. ஹீரோயின் - நீ குடிச்சாலும் சரி,வேற ஒரு பொண்ணோட சுத்துனாலும் சரி.. நான் உன்னைத்தான் லவ் பண்ணுவேன். ( நல்ல பொண்ணு போல...)

6. நீ அவளைக்கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ செத்துடுவா... ஆனா பண்ணீக்கிட்டா அவங்கம்மா,அப்பா செத்துடுவாங்க... ( அப்போ ஆடியன்ஸ்..?)

சரண்யாவின் நடிப்பு அருமை.ஒரு சராசரி தாயின் பரிதவிப்பை கண் முண் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆனால் பேசாம செத்துத்தொலையேன்மா என கோபத்தில் மகன் சொன்னதும் நிஜமாகவே தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை.

அதே போல் மதக்கலவரம் நடக்கும்போது தனது மாமா மகனுக்கு ஃபோன் பண்ணி ஹீரோயின் கூப்பிடும்போது அவர் சாரி.. நான் வர்லை பைக்ல பெட்ரோல் இல்லை என்பதும்,ஃபோன் ரிசீவரை கையில் வைத்துக்கொண்டே தனது அம்மாவிடம் கலவரம் நடக்கறப்ப நான் போனா மாட்டிக்குவேன் என சொல்வதும் காதில் பூ சுற்றும் காட்சிகள்.

மாமா பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க எல்லாம் பாய்ஞ்சு போக மாட்டோம்..? ( அதான் உனக்கு மாமா பொண்ணே இல்லை..)என்ன பண்றது..? ஹீரோ வந்து தான் ஹீரோயினை காப்பாற்ற வேண்டும் என்ற ஆகம விதியின் படி.....

படத்துல ரசிக்கற மாதிரி ஒரு சீன்னா  ( சாதா சீனப்பா) ஹீரோ,ஹீரோயின் சந்திப்பின்போது ஹீரோயின் ஹீரோவிடம் உன் ஃபிரண்டை கழட்டி விடு ,நாம ஜாலியா பேசிட்டு இருக்கலாம் என்பதும் அதற்கு நண்பன் நொந்து கொள்வதும் செம காமெடி சீன். ஹீரோவின் நண்பராக நடிப்பவரின் முக பாவனை அருமை. அதனால்தானோ என்னவோ ஹீரோ வசனம் பேசும் காட்சிகளில் கூட கேமரா ஹீரோவின் நண்பன் முகத்தையே காட்டுது.

ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.ஹீரோயின்-ன் மாமா மகனாக வருபவர் சல்மான்கான் மாதிரி ஜம் என இருப்பதும்,ஹீரோவாக வருபவர் பேப்பர் பொறுக்குபவர் போல் சீவாத பரட்டைத்தலை,துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுடன் இருப்பதும் தமிழ் சினிமாவின் தலை எழுத்து.

ஏ, பி ,சி என அனைத்து செண்ட்டர்களிலும் இந்தப்படம் 10 நாட்களைத்தாண்டாது.

ஆனந்த விகடன்ல இந்தப்படம் விமர்சனம் போட மாட்டாங்க ,மீறிப்போட்டா 37 மார்க்.(மீறாம போட்டா..?)

குமுதம் ரேங்க்கிங்க்  - சுமார்.



டிஸ்கி 2 -  ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்

Saturday, February 12, 2011

தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

படத்தோட டைட்டிலையும், போஸ்டர் டிசைனையும் பார்த்து இந்தப்படம் தேறாதுன்னு நினைச்சுட்டு உள்ளே போனா ஷாக் சர்ப்பரைஸ்.. சந்தானம் காமெடி படத்தோட முதல் பாதியை காப்பாத்திடுது....

உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி கெட்டப்ல சந்தானம் மொட்டை மாடில நின்னுக்கிட்டு  சிம் மாத்தி மாத்தி ஃபிகருங்களோட கடலை போடறது  நல்ல ஓப்பனிங்க்....

ஹீரோ சித்திரம் பேசுதடி,அஞ்சாதே நரேன்.. பாக்க பாவமா இருக்கார்...(சம்பளம் சரியா தர்லை போல)விஷால் கால்ஷீட் கிடைக்காம இவரைப்பிடிச்சுட்டாங்களோன்னு யோசிக்க வைக்குது கதையோட ஒன்லைன்.

காலேஜ் படிக்கற ஹீரோ சொந்த ஊரை விட்டு வேற ஒரு ஊருக்கு போறாரு ( மலைக்கோட்டை உல்டா)அங்கே ஹீரோயினை பார்க்கறாரு. லவ் பண்றப்ப ஒரு தாதா ,தாதாவோட தங்கை ( இவரும் ஒரு தாதாவே) 2 பேரையும் சமாளிச்சு எப்படி கைப்பிடிக்கறாரு? அப்படிங்கறதுதான் திரைக்கதை.. ( திமிரு உல்டா)...

இந்தக்கதை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அப்படிங்கற மாதிரி ஃபிளாஷ்பேக்ல பிரபு 4 சீன் வர்றார்..

அக்கா கேரக்டர்ல மீனாவைப்பாக்க சங்கடமா இருக்கு.( நமக்கு பொண்ணுங்களைப்பார்த்தாலே ஒரு இரக்கம் வந்துடுது.. ஹி ஹி )அக்கா தம்பி பாசத்தை போட்டு பிழி பிழின்னு பிழிஞ்சு எடுத்திருக்காரு டைரக்டரு.
ஹீரோயின் பூனம் பஜ்வா.. (இதுவரை ஏனோ தானோன்னு விமர்சனம் படிக்கறவங்க நிமிந்து உக்கார்றாங்க  # ஞான திருஷ்டி)).பசுமையான இலை தழைகளோட கொத்தா வாங்குன ஊட்டி கேரட் மாதிரி அவ்வளவு ஃபிரஷ்...(சைட் அடிக்கறப்பக்கூட சைடு டிஷ் ஞாபகம் ).. பார்ட்டி நல்ல ஃபிகர்தான்.. ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்? # ஷெல்ஃப் ஷொட்டு)

ஹீரோ - ஹீரோயின் சந்திக்கற முத சீன்ல ஹீரோயின் தடுக்கி விழுந்து ஹீரோ மேல படர்ந்து கிஸ் அடிச்சுடறாரு...( நல்லா யோசிக்கறாங்கய்யா சீனு). நரேன் பூனம் பஜ்வாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் சீன் செம செயற்கை.அதே போல் ஹீரோயின் அறிமுக காட்சியில் வரும் பாடலில் டான்ஸ் மாஸ்டர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

ஹால் டிக்கெட்டை தொலைத்த ஹீரோயின் காட்டும் பதட்டம்,டென்ஷன் எல்லாம் ஓவர் ஆக்‌ஷன். ( நாமதான் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே தொலைஞ்சாலும் கண்டுக்காத ஆள் ஆச்சே...). ஆனால் அந்தக்காட்சியில் கோட்டை விட்டவர் கோயிலில் சிவப்பு  - சிவப்பு கலர் காம்பினேஷனில் தேவதையாக வரும் சீனில் மனதை அள்ளி சரிக்கட்டி விடுகிறார்.( அந்த ஷாட்டில் நல்லா டைட் க்ளோஷப் ஷாட் வெச்சிருக்கலாம் # ஜஸ்ட் மிஸ்ஸு.)
பெண் தாதாவாக வரும் சங்கீதா ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.10 சொர்ணாக்கா, 15 நீலாம்பரி கலந்தவனு பில்டப்பு வேற. ஆனா அவர் சேலையை கிராமங்களில் ஆண்கள் லுங்கியை தூக்கிக்கட்டுவது போல் கெண்டைக்கால் தெரிய தூக்கிக்கட்டுவது செம கிளு கிளு (நீ பார்க்கும் மொக்கைப்படத்தில் கூட எதிர்பாராத விதமாக சக்க சீன் இருக்கலாம் மிஸ் பண்ணிடாதே # மனசாட்சி )

இந்த பட விமர்சனத்துக்கு தேவையே இல்லாத ,ஆனா நமக்கு(!!??) தேவையான ஒரு சீன்.தாதா சங்கீதா காலை வேலைக்காரப்பொண்ணு அமுக்குது. அப்போ , “ஏய்.. முழங்காலுக்கு மேலே வராதே.. என் புருஷனே அங்கே எல்லாம் வந்ததில்லை...  ( தியேட்டர்ல ஹீரோ அறிமுக சீனுக்கு கூட எவனும் கை தட்டலை.. இந்த சீனுக்கு செம அப்ளாஸ்)

ஹீரோவோட பேரு படத்துல அழகிரின்னு வெச்சதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு தெரியல. ஆனா இந்த கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா இனி ஆளாளுக்கு அழகிரி,ஸ்டாலின், உதய நிதி,அப்படி இறங்கிடுவாங்களோன்னு பயம்.
மாமூல் மசாலாப்படத்தில் பார்த்த மால் வசனங்கள் ( காமெடி)

1. ஏன் எல்லாப்பொண்ணுங்களுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பிட்டு இருக்கே?

சந்தானம் - பேச ஆசைதான். ஆனா செல்லுல பேலன்ஸ் இல்லை.10 பைசாதான் இருக்கு.

2.  டேய்.. உன்னைப்பார்த்தா என் வயிறு எரியுது..

சந்தானம் - ஏன் ..ராவா குடிச்சியா?

3. டே.. நல்லா கேட்டுக்கோ.. நான் எழுதியே தர்றேன்.. நீ ஃபெயில் தான்.

சந்தானம்  - சார்..நீங்க எழுதிக்குடுத்தா நான் கண்டிப்பா ஃபெயில் தான் ஆவேன். நான் வேற நல்ல ஆள் வெச்சுக்கறேன்.

4. காலேஜ் லெக்சரர் - ராமாயணத்துல மொத்தம் ஆறு காண்டம் இருக்கு..

சந்தானம் - டே மாப்ளை நேத்து நீ வாங்கிட்டு வந்த காண்டம் பாக்கெட்ல 3 தாண்டா இருந்தது.. கடைக்காரன் உன்னை ஏமாத்தீட்டானா?

5. பேங்க், போஸ்ட் ஆஃபீஸ் இங்கே தான் லஞ்ச் டைம் போகக்கூடாது.. ஆனா ஃபிரண்ட் வீட்டுக்கு சாப்பாட்டு டைம் தான் போகனும்.. அதான் நம்ம ஃபிரண்ட்ஷிப் ரூல்ஸ்..

6. சந்தானம்  - ஏம்மா.. அக்கா.. உன் தம்பி போருக்கா போறான்..?இங்கே இருக்கற ஊருக்கு டூருக்குத்தானே போறான்.. எதுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து ஓவர் பில்டப் தர்றே,..?

7. போலீஸ் பாதுகாப்போட பெட்ஷீட் போர்த்தி படுத்திருக்கற அந்த ஆள் யாரு?

 டேய்.. அது டெட் பாடிடா...

அய்யய்யோ.. யார்டா அது ..பட்டப்பகல்ல கொலை பண்ணுனது?

சந்தானம்  - மாலைக்கண் வியாதிக்காரனா இருப்பான்..

8. வில்லன் - என் மேல இன்னும் 19 கேஸ் நிலுவைல இருக்கு.. வக்கீல் சரி இல்லை. பேசாம வக்கீலைப்போட்டுத்தள்ளீட்டு அதை 20 கேஸ் ஆக்கிடலாமா?

9. சின்ன வீட்டுக்கு இருக்கற மரியாதை பரம்பரை வீட்டுக்கு இருக்கறதில்லையே அது ஏன்?   ( அது மரியாதை இல்லை.. கிளு கிளுப்பு # படத்துல வராத பிட்டு)

10.வில்லன் - இந்தாங்க கோயிலோட சாவி.. பொழுது சாஞ்சா உடனே என் கைக்கு சாவி வந்தாகனும்.

சந்தானம்  - ஏன் உங்களுக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கா?

11. இதோ இங்கே உக்காந்து பிச்சை எடுத்துட்டு இருக்கே இந்தப்பொண்ணு தான் கோயிலோட ரிசப்ஷனிஸ்ட்..இந்தப்பொண்ணைத்தாண்டி ஒரு பய உள்ளே வந்துட முடியாது..அதோ காசை எண்ணிட்டு இருக்கே ஒரு தறுதல.. அவன் தான் கேஷியர்.. பிச்சைக்கார நாயிங்களா..

12, ஆர்த்தி  - என்னால இப்போ கோயிலை விட்டு வெளில வர முடியாது...

சந்தானம்  - ஏன்?

 ஏன்னா இப்போ சுண்டல் தர்ற நேரம்.

13.சந்தானம்  - அதென்னடா எல்லாப்படத்துலயும் நீங்க வில்லனோட பொண்ணையே லவ் பண்ரீங்க.. ஊர்ல எத்தனை பொண்ணுங்க இருக்கு...?

14.  ஒரு வருஷம் உன் பின்னாலயே சுத்துனேன் நாய் மாதிரி.. 

நான் என்ன வோடஃபோன் கனெக்‌ஷனா?

15. சந்தானம்  - நீ கனகா மடில படுக்கனும்கறதுக்காக நான் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல நான் படுக்க முடியாது.. 

16. லவ் பண்றவனை ஃபிரண்டா வெச்சுக்கிட்டா அவன் தூக்க மாத்திரை சாப்பிட்டுத்தான் படுக்கனும் இல்லைன்னா தூங்க விடமாட்டானுங்க..

17. சந்தானம்  - என்னது முருகரை விநாயகர் கும்பிடுது?

ஆர்த்தி - 108 தடவை ஸ்ரீராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயர் மேல சாத்தறேன்..

சந்தானம் - அதை எழுதுனதுக்கு பிட் எழுதி இருந்தாக்கூட பாஸ் ஆகி இருப்பே..?

18. திருவிழாங்கற கான்செப்ட் ஏன் வந்துது தெரியுமா?

ஊர்ல மாசாமாசம் ரேப் நடக்கும். ஊர்ப்பெருசுங்களுக்கு அது பொறுக்கல.. இனி வருஷம் ஒரு தடவை மட்டும் தான் அதெல்லாம் நடக்கனும்கறதுக்காகத்தான் திருவிழாவையே கண்டு பிடிச்சானுங்க..

19..சந்தானம்  -  மேடம் .. உங்க செயினை விட்டுட்டு போறீங்களே...

ஆர்த்தி - விளையாடாதீங்க.. அது யானையைக்கட்டற சங்கிலி.

20.ஆர்த்தி - அவங்கப்பாவுக்கு மேட்டர் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.

சந்தானம் - ஏன் ? உங்கப்பனுக்கு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டானா?

ஆர்த்தி -  தோலை உரிச்சிடுவார்.

சந்தானம்  - அப்போ சாத்துக்குடிப்பழம் 2 கிலோ வாங்கித்தர்றேன்...உக்காந்து உரிச்சுத்தர சொல்லுங்க..
அப்புறம் படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கறப்ப வர்ற தம்பிக்கோட்டை கனகா தாலி கட்ட வரவா பாட்டு அப்படியே அச்சு அசல் கில்லி பட அப்படி போடு பாட்டு நடனத்தின் காப்பி..

ஒரு சீன்ல கரண்ட் போயிடுது.. உடனே எல்லாரும் மெழுகுவர்த்தி பற்ற வைத்து போற மாதிரி வருது.. அவ்வளவு பெரிய மாளிகைல எமர்ஜென்சி லைட்டே இருக்காதா? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படமெங்கும் விரவி இருக்கின்றன,

வித்தியாசமான படம் விரும்பும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப்படம் சாதா.மற்றபடி மாமூல் மசாலாப்படம்னா ஓக்கே என்பவர்களுக்கு இந்தப்படம் இருக்கும் தோதா.. ( மனசுக்குள்ள இவனுக்கு டி ஆர்-னு நினப்பு) 

படம் ஏ பி செண்ட்டர்ல தலா ஒரு மாசம் ஓடிடும். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடிடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

டிஸ்கி 1 - படத்துல முக்கிய கேரக்டர்களா வர்ற பிரபு - மீனா ஸ்டில்ஸ் ஏன் போடலை? ஏன்னா அட்ரா சக்க யூத்துங்களுக்கு மட்டும் இடம் தரும் ஹி ஹி

டிஸ்கி 2

பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக்





தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் -