Friday, December 19, 2014

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 18.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை


சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு துவக்க விழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து In the Name of My Daughter திரைப்படம் திரையிடப்படவுள்ளது. 



காலை 10 மணி
Brotherhood of Tears/France/Jean Baptiste Andrea /95’/2014 

 
முன்னாள் துப்பறியும் நிபுணர் காப்ரியல் செவாலியரின் வழியாகத்தான் இப்படத்தின் கதை சொல்லப்படுகிறது. 



சூதாட்டத்தில் வைத்த கடன்கள் தொடர்ந்து தோல்வி எண்ணங்களை தோற்றுவிக்க அவர் தொடர்ந்து போதையில் சிக்குகிறார். தவிர, அவருடைய பதின்ம வயது மகளும் இவருக்கு நிறைய தொல்லை தருகிறாள். ஒரு நடைப்பிணம் போல வாழும் அவர் நெருக்கடியான சூழலைக் கடக்க ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் கூட போதும் என்று நினைக்கிறார். 



இந்த நேரத்தில்தான் அவரைத் தேடி ஒரு வாய்ப்பு வருகிறது. அது நல்லதா கெட்டதா என்பதை படத்தின் பின்பாதி நமக்கு கூறுகிறது. ஒரு பூங்காவில் காத்திருக்கும் அவரைத்தேடி வரும் ஒரு வயதான மனிதர் இவர் செய்யவேண்டிய வேலை பற்றி கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறிய அலுவலகத்திற்கு இவர் செல்கிறார். ஒரு ஆள் கூட வேலை செய்யாத அலுவலகம் அது. ஒரு மாதிரிய சூன்யமாக இருப்பதை உணர்கிறார். ஒரு கறுப்பு சூட்கேஸ் அவரிடம் கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது. 



அப்போது அவருக்கு ஒரு அறிவுறுத்தல், இந்த சூட்கேஸை எக்காரணத்தைக்கொண்டும் எப்பொழுதும் எதற்காகவும் திறந்துபார்க்கக்கூடாது. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று சூட்கேஸை கொடுத்துவிட்டு வரவேண்டும். காப்ரியல் துணிச்சலோடு அவர்கள் சொன்ன இடத்திற்கு கிளம்புகிறார், அங்கு இருக்கும் ஆபத்தை உணராமல். ஜெராமி ரேனியரின் நடிப்பில் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். 



மதியம் 12 மணி
Flapping in the middle of nowhere / Dap Canh Giua Khong Trung / Diep Hoang Nguyen / Vietnam / 2014 99' 

 
ஹூயென், டுங் என்ற இரண்டு ஆண்-பெண் விடலைகள், இதில் பெண் விடலை கல்லூரி மாணவி. ஆண் - வேலை செய்து கொண்டிருக்கிறான். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரை விட்டு வெகுதொலைவில் ஹனாயில் வசிக்கின்றனர். போதுமான அளவுக்கு தவிர இவர்களிடம் பணம் இல்லை. இவர்கள் பொதுவாக அலட்சிய மனோபாவம் கொண்டவர்கள். டுங்கிற்கு உடலுறவு கொள்வதில் ஆர்வம் அதிகம். இதன் விளைவாக ஹூயென் கருத்தரிக்கிறாள். ஆனால் கருவைச் சுமக்க அவள் விரும்பவில்லை. டுங் அவள் எதுகூறினாலும் அதற்கு உடன்பாடாகவே இருந்தான். ஆனால் கருக்கலைப்புக்கு அவர்களிடம் பணம் ஏது? 





மதியம் 3 மணி
The Dark Valley /Austria/Andreas Prochaska/114’/2014
19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஒரு குளிர்காலம். மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குச் செல்லும் ரகசிய வழியில் கிரீடர் எனும் ஒரு தனியாள் குதிரையில் செல்கிறான். ஆள்நடமாட்டம் அற்ற பள்ளத்தாக்குகளின் வழியே சென்று மலையுச்சியிலிருக்கும் ஒரு ஊரை அடைகிறான். அங்கு ஒரு விதவையின் வீட்டில் தங்குகிறான். அவளுடைய மகள் கவனித்துக்கொள்கிறாள். தன்னை ஒரு புகைப்படக் கலைஞன் என்று கூறிக்கொண்டு மலைச்சூழலை படம்பிடித்துவருகிறான். 



ஆனால் அவன் இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. முக்கியமாக அந்த ஊர் தலைவனுக்கும் அவன் மகன்களுக்கும் இவனைப் பிடிக்க வில்லை. இவன் வந்தபிறகுதான் ஊர்த்தலைவனின் மகன்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். அடக்குமுறைக்கு ஆளான மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ள கிரீடர் அதற்குக் காரணமானவர்களைக் கொல்வதற்காகவே வந்திருக்கிறான் என்பது மெல்லமெல்ல மற்றவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்போது கிட்டத்தட்ட இவன் பலபேரை கொன்றுமுடிக்கிறான். 87வது ஆஸ்கர் அகாதெமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. 



மாலை 6.15 மணிக்கு துவக்க விழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து In the Name of My Daughter திரைப்படம் திரையிடப்படவுள்ளது/ 



In the Name of My Daughter/France/Andre Techine/116’/2014 

 
பிரென்ச் ரிவேராவில் உள்ள நீஸ் எனும் நகரில் உள்ள நட்சத்திர விடுதியின் உரிமையாளர் மேடம் ரேணி லீ ரோக்ஸ். அவளின் மகள் ஏக்னஸ் காணாமல் போனதாக தொடுக்கப்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை மீண்டும் கொண்டுவருகிறாள். தன் மகள் கொலைசெய்யப்பட்டதாகவும் அதைச் செய்தது வழக்கறிஞர் மௌரீயஸ்தான் எனவும் புகார் தெரிவிக்கிறாள். கதை1976-க்குப் பின்னோக்கிச் செல்கிறது. 



அப்போது நட்சத்திர விடுதியின் கேஸினோ இறங்குமுகத்தில் இருந்தது. அங்கு வந்துபோய்க்கொண்டிருந்த வழக்குரைஞர் மௌரீயஸ் அதை எப்படியாவது கைப்பற்ற நினைக்கிறான். கேஸினோ உரிமையாளர் ரேணியின் மகள் ஏக்னஸுடன் நெருங்கிப் பழகுகிறான். அவளும் இவன் காதல் வலையில் விழுகிறாள். இத்தனைக்கும் அவன் நிறைய பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன். 



பின்னர் உள்ளூர் மாஃபியா ரௌடி ஃப்ரேட்டினியின் துணையை நாடுகிறான். தாய்க்கும் மகளுக்கும் அவன் சண்டைமூட்டிவிடுகிறான். சிலநாட்களில் ஏக்னஸ் காணாமல் போகிறாள். ஏக்னஸ் லீ ரோக்ஸ் என்பவளின் உண்மைக் கதைதான் இங்கு சுருக்கமான உளவியல் ரீதியான திரைப்படமாகியுள்ளது. ரேணி எழுதிய புத்தகத்திலிருந்து இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்னதும் இப்படத்தின் இயக்கத்தில் ரேணியின் இளைய மகன் துணைநின்றதும் முக்கியமான விஷயங்கள். 

thanx - the hindu

0 comments: