Showing posts with label cine critics. Show all posts
Showing posts with label cine critics. Show all posts

Monday, April 25, 2011

விகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சனம்

http://i.indiaglitz.com/tamil/news/vikatakavi220411_1.jpg
ஆடிமாசம் குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு ஆகாது என்ற நெகடிவ் வசனத்தோடும்,அதே கருத்து உள்ள பாட்டோடும் படம் தொடங்குது.. பத்தாம்பசலித்தனமான இயக்குநரோ என கவலைப்பட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன்.. ..

படத்தோட ஓப்பனிங்க்ல ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி சிறார்கள் செய்யும் சில்மிஷங்களை காமெடி கலாட்டாவாக 40 நிமிடங்கள் காட்டும்போதே நினைச்சேன்.. அண்ணன் கிட்டே சரக்கு கம்மி போலன்னு.. மெயின் கதைக்கு வந்ததும் படம் பிரேக் அடிச்ச தேர் மாதிரி டக்குன்னு நிக்குது.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அதுல சின்ன வயசுல இருந்தே ஒண்ணா படிச்ச 2 பொண்ணுங்க, 3 பசங்க அதுல ஒரு பையனும் ,பொண்ணும் லவ் பண்ணறாங்க.. ( வேற என்ன பண்ணுவாங்கன்னு நாம எதிர்பார்க்கமுடியும்?)பொண்ணோட அப்பா வில்லன்.. நரி மாதிரி திட்டம் போட்டு காதலர்களை பிரிக்க நினைக்கறான்.. எப்படி காதலர்கள் ஒண்ணு சேர்றாங்க என்பதுதான் படம். 

 25 வருஷங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம். அமலா பால் இந்தப்படத்தில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார்.. ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...

http://kollyworld.com/images/stories/news/102009/Vikatakavi_movie.jpg



இங்கிலீஷ் டீச்சருக்கும்,தமிழ் வாத்தியாருக்கும் லவ் ஏற்படுவதையும் அதை மாணவர்கள் கிண்டல் அடிப்பதையும் செம காமெடியாக எடுத்திருக்கிறார்கள் என்றால்.. அடி ஆத்தாடி நீ போகும் பாதை.. பாட்டைப்போட்டு டைமிங்க் அடித்தது தூள்.. 

குட்மார்னிங்க்  என்று மட்டும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி டீச்சர் மாணவியை தூதாக அனுப்பி வாத்தியாரிடம் குடுப்பது நம்பவே முடியலை.. அவர் என்ன சீமைலயா இருக்கார்? அடிக்கடி 2 பேரும் சந்தித்துக்கொண்டு தானே இருக்காங்க.(.# மொக்கைப்படத்திலும் லாஜிக் பார்ப்ப்மில்ல?)

படத்தில் தென்பட்ட நல்ல வசனங்கள்


1.  அப்பா - டேய்.. போய் புக்கை எடுத்துப்படி.... 

 மகன் - ஹூம்.. ஆடு மாடு மேய்க்கிறவன் எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. 

2. இந்த ரன்னிங்க் ரேஸ்ல நானும் கலந்துக்கறேன்.. 

 தம்பி நீ செம சோம்பேறி ஆச்சே..இது ஜாக்கிங்க் போட்டி இல்ல தம்பி.. ரன்னிங்க் போட்டி.
http://icdn1.indiaglitz.com/malayalam/news/amala171210_1.jpg
-- 
3.  அப்பா - டேய்.. எங்கேடா போய்ட்டு வர்றே..?

மகன் - வம்பை விலை குடுத்து வாங்கறே,. ம் ம் 

4. கட்டப்பஞ்சாயத்துல என்ன இம்புட்டுக்கூட்டம்?

என் பொண்டாட்டி கேஸ் நடக்குதே... ( அவன் பொண்டாட்டி ஒரு கேஸ்.. கேஸ் நடத்தும் கேஸ் ஹி ஹி )

5. இப்போது நேரம் நெருங்கி விட்டதால் நமது மாண்பு மிகு கலெக்டர் அவர்கள்..... ( டமால்.. வெடி.. )

நிஜமாவே கலெக்டருக்கு நேரம் நெருங்கிடுச்சு..

6.இப்போ என்ன நடந்ததுன்னு டைனோசர் மாதிரி கத்தி ஊரைக்கூட்டறே..?

7. இன்னைக்கு என்ன நாள்?

சனிக்கிழமை..

 அட.. ஞாபகம் வெச்சுக்கரெக்ட்டா சொல்லீட்டியே.. செம மூளை தான்..

8. டியர்.. ஏதாவது பேசுங்க..

ஐ லவ் யூ... 

 வெறும் காத்து தாங்க வருது.. 

9. எனக்கு லவ் மூடு வந்துடுச்சு.. இம்மீடியட்டா என்னை லவ் பண்ணு .. 

 அய்யோ என்னை வீட்ல வைவாங்க.. 

http://1.bp.blogspot.com/-PcS2SljOfq0/TavojdzdPuI/AAAAAAAABFM/8tKW4RQoq_w/s1600/kungumam_75.jpg


படத்தில் ரசனையான காட்சிகள்

1. செம காமெடியான ஆனால் ஏகப்பட்ட குறும்புகள் செய்து ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் 5 பேரையும் விரட்ட அநாதை விடுதிக்கு நிதி திரட்டி குடுக்கும் சீன்...

2. கேஸ் சிலிண்டரை குக்கர் என நினைத்து விறகு அடுப்பில் அதை வைக்கும் மாணவியின் அப்பாவித்தனம்... சத்துணவு  ஆயா டமால் ஆவது... ( அந்த அளவுக்கு மடச்சியா இருப்பாங்களா? யாராவது என எண்ண வைத்தாலும் சீனில் தெறிக்குது காமெடி)

3. பொண்ணுங்க 4 பேரு நடந்து வரும்போது பசங்க கூட்டம்ல ஒருத்தன் ஒரு பேனாவைப்போட்டு யார் இந்தப்பேனாவை எடுக்கறாங்களோ அவ தான் என் ஆள் என உதார் விட ஸ்கூல் கக்கூஸ் காரம்மா அதை எடுப்பது .. 

4. ஏதோ ஒண்ணு சொல்ல நினைச்சேன்  பாடல் காட்சியில் திராட்சைத்தோட்டத்தை அழகு ரசனை பொங்க காட்டியதும்.. அந்தப்பாடலில் அமலா பாலின் அழகு முக பாவனைகளும்.. 

5. அமலாபாலின் மாமா அவரை காதலிக்க சொல்லும்போது உப்பு மூட்டை தூக்கத்தெரியுமா? என விளையாட்டாக கேட்கையில் அமலாபாலை உப்பு மூட்டையாக தூக்காமல் மளிகைக்கடையில் உப்பு மூட்டை தூக்கி பயிற்சி எடுப்பது..  ( அம்புட்டு அப்பாவியா அவரு.. சின்னத்தம்பி பிரபு தோத்தார் போ)


இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

1. சொத்துக்காக ஆசைப்பட்டு அக்கா கணவரையே போட்டுத்தள்ளும் வில்லன் அடுத்த சீனே சாமான்யன் போஸ்ட்டில் இருந்து ஜமீன் தாரர் ஆவது எப்படி?

2. தன் அப்பாவின் கபட நாடகம் புரியாமல்  ஹீரோயின் காதலனை வெறுப்பது ஓக்கே.. ஆனால் எனக்கு உங்களை விட அப்பா தான் முக்கியம் என பஞ்ச டயலாக் பேசி கொல்வது எதற்காக? 

3. அமலாபாலும், ஹீரோவும் ஒரு பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ( அடச்சே வெறும் பேச்சுத்தானா? )அப்போ ஹீரோ ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் இருக்கிறார்.. அப்போ ஃபிரண்ட்ஸ் வர்றாங்க.. கூப்பிட்டதும் அவர் பாறையை விட்டு இறங்கி வர்றார்,, இப்போ அவருக்கு அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி தாடி..???? ( கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்)

படத்தில் ஒரே ஒரு ஆறுதலான அம்சம் அமலாபால் 18 3/4 வயசுல இருந்தப்ப எடுத்த படம்.. அவரது அபார இளமை கொள்ளை அழகு.. 

பாடல்கள் சுமார்.. எல்லா டெக்னிக்கல் அம்சங்கள் ரொம்ப சுமார்.. திரைக்கதை ஜவ்வு.. படம் எல்லா செண்ட்டர்களிலும் ஒரு வாரம் தான் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் - 35

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - அமலாபாலின் கன்னிப்படம் என்றால் முதல் படம் என அர்த்தம்.. ஹி ஹி .

Monday, April 18, 2011

தேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh02GbzF2KBtfWgE62bkDU1Qce_tsAepD3dXJs75i3TLW_TYxhz3eF_tyBEkQiityi8egi-gcoBnqL8JuEEYWByp6VTvC3ngmJiy3qGbHvUploFBQGgiuYW8sQK-WLDuvHU1QWpR5334OoV/s1600/Devathasiyin_Kadhai_Movie_Posters_02.jpg


வெள்ளிக்கிழமையே (15.4.2011)இந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் அன்னைக்கு போகமுடில.. ஆஃபீஸ்ல கண்காணிப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு..( எவனாவது போட்டுக்குடுத்துட்டானா)17.4.2011 அன்னைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு(!!!) ஈரோடு பள்ளிபாளையம் சினி ராம் தியேட்டர்க்கு  மதியம் 2.45 க்கு போனேன்..( பெரிய கலெக்டரு.. விசிட் அடிக்கற டைம் எல்லாம் சொல்றாரு) 

 பைக் ஸ்டேண்டில் வண்டியைப்போட்டு விட்டு காலம் காலமாக லேட்டாக தியேட்டரில் எண்ட்ரி ஆகும்  எல்லா  கேனப்பசங்களும்  கேட்கும் அதே புராதனக்கேள்வியை நானும் கேட்டேன்.( அப்போ கேனம்னு ஒத்துக்கறியா?) “ படம் போட்டாச்சுங்களா? இன்னும் இல்லங்க... 3 மணிக்குத்தான் படம்..( உஷ் அப்பாடா..)

உள்ளே போய் சீட்ல உக்கார்ந்ததும் பக்கத்து சீட்ல 2 பேர் பேசிட்டிருந்ததை ஒட்டு கேட்டேன் .( ஓட்டு கேட்டாத்தான் கேவலம்)

அண்ணே.. இந்தப்படத்துல கண்டிப்பா சீன் இருக்கும்.....

 எப்படி சொல்றீங்க?

தேவ லீலை ல சீன் இருந்தது..தேவ ரகசியம் ல சீன் இருந்தது.தேவதாசியின் கதைலயும் சீன் இருக்கும்.. 3 லயும் பொதுவான சொல்லா தேவ இருக்கு..

( அப்படியே செண்ட்டிமெண்ட் செம்மல்னு நினப்பு)
 http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/jan/devathasiyin-kadhai/devathasiyin-kadhai_018.jpg
படத்தோட ஓப்பனிங்க்லயே செம காமெடி .....ஃபாரீன் ரிட்டர்ன் ஹீரோன்னு சொல்லப்படும் அந்த ஆள் பக்கா லோக்கல் மாதிரி,பஞ்சப்பரதேசி மாதிரி  இருக்கான். அவன் பீச்ல ஜாக்கிங்க் போற ஒரு அட்டு ஃபிகரை டவுன் பஸ்ஸை குறுக்காட்டற மாதிரி கை காண்பிச்சு நிறுத்தறான்..

நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்

அதுக்கு அந்த அ.  ஃபி  ஒத்துக்கலை ( அ.  ஃபி  = அட்டு ஃபிகர்). 2 பிளம் கேக்கும் ஒரு கடலை மிட்டாயும் வாங்கிக்குடுத்தாலே பின்னாலயே வந்துடற மாதிரி இருக்கற அவ  நாட் ஓக்கே சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

மின்சாரக்கனவுல கன்யாஸ்திரியா வர்ற கஜோல் இந்த பார்ட்டியை பார்த்தா மனசு வெறுத்து சினி ஃபீல்டை விட்டே விலகிடும்.

ஃபிளாஸ்பேக்.

அந்த அட்டு ஃபிகர்  ஸ்கூல்ல கூட படிக்கற  ஒருத்தனை லவ் பண்றா.. ஆனா அவன் வேற ஒரு ஆண்ட்டியை லவ் பண்றான்.அந்த ஆண்ட்டிக்கு கண் தெரியாது..

பையனுக்கு மீறி மீறிப்போனா 18 வயசு இருக்கும்.. ( மீறாம போனா....?) ஆண்ட்டிக்கு 28 இருக்கும்..( வயசுய்யா..)

இந்த இடத்துலதான் இயக்குநர் டைரக்‌ஷன் டச் வெச்சிருக்கார்.அந்த கண் தெரியாத ஆண்ட்டி பங்களா காம்பவுண்ட் கேட்,வீட்டுக்கதவு, பாத்ரூம் கதவு எல்லாத்தையும் திறந்து போட்டுட்டு குளிக்குது.. ( பாவம் ரொம்ப ஓப்பன் டைப் போல,..)

யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. டர்க்கி டவல் கட்டிட்டு தான் குளிக்குது.....
( அடச்சே...  வட போச்சே...)




http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/jan/devathasiyin-kadhai/devathasiyin-kadhai_023.jpg

ஒரு கூரியர் பாய் அவளை செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுக்கறான்.. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகி அவனை துரத்திட்டு இவ கிட்ட ஐ லவ் யூ சொல்றான்.. உடனே அவ அவனை ஏத்துக்கறா...(சப்புன்னு போச்சே..)

கண் ஆபரேஷன் பண்ணப்போறேன்னு ஆண்ட்டி சொன்னதும் ஹீரோ பயந்துட்டான்.. வல்லவன் சிம்பு மாதிரி வயசு கம்மி என்பதால் ஆண்ட்டி ஏத்துக்க மாட்டாங்களே...இப்போ ஆண்ட்டிக்கு ஹீரோ வயசு கம்மின்னு தெரிஞ்சுடுது...( ஆனா பர்த் சர்ட்டிஃபிகேட் எல்லாம் கேட்கலை)

இப்போ ஆண்ட்டி தயங்கறா... அந்த அட்டு ஃபிகர் ஹீரோ கிட்டே என்னை ஏத்துக்குங்க அப்படிங்கறா.. உடனே இந்த ஹீரோ சரி ஆண்ட்டி கிட்டே ஃபைனல் ரிசல்ட் கேட்கறேன்..அவங்க ஓகே சொல்லாட்டி உன்னை ஏத்துக்கறேன்கறான்.. ( ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம் )

ஆண்ட்டியை பார்க்கப்போறப்ப இந்த தடவையும் ஆண்ட்டி 3 கதவுகளையும் திறந்து வெச்சுட்டு குளிக்குது.. 3 வில்லன்க வந்து ரேப் பண்ணிடறாங்க..
( வில்லன்க பின்னே சமூக சேவையா செய்வாங்க..)

ஆண்ட்டி மேல் லோகத்துக்கு டிக்கட் வாங்கிடுது. ( ஒரு டிக்கெட்டே டிக்கெட் வாங்கிடுச்சே.. அடடே ஒரு ஆச்சரியக்குறி...)ஹீரோ அதை பார்த்து ஸ்பாட்லயே செத்துடறான்.( தெய்வீக  காதலாம்..அடிங்கொய்யால)

ஃபிளாஸ்பேக் முடியுது.. நான் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணுனதால.. அவன் இறந்துட்டதால இந்த கன்யாஸ்திரி ஆகும் முடிவை எடுத்துட்டேன்கறா...


http://mimg.sulekha.com/tamil/devathasiyin-kadhai/stills/devathasiyin-kadhai-011.jpg
பஞ்சப்பரதேசி ஹீரோ   கட்டாயப்படுத்தறான்.. உடனே அந்த அட்டு ஃபிகர் அடுத்த ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்ணுது... (ஃபிளாஸ்பேக்கை மட்டும்தான் ஓப்பன் பண்ணுது ஹி ஹி # 50 ரூபா தண்டமா?)

அவளோட அம்மா தேவதாசிக்குடும்பம்.. மோனிகா பேடி சும்மா தக தக என 100 பவுன் நகை போட்டு அலங்கரிக்கப்பட்டு தேவதை மாதிரி ஒரு ஓப்பனிங்க்ல வர்றப்ப  இடை வேளை வருது.. 
எவனும் எந்திரிக்கலை..... ஏன்னா கேண்ட்டீன் போய்ட்டு வர்றதுக்குள்ள படம் போட்டுட்டா சீன் மிஸ் ஆகிடுமே..?ரிஸ்க் எடுக்க விரும்பலையாம். (உஷார் பார்ட்டி உலகநாதன்கள்)

மோனிகா பேடியோட அம்மா ஒரு தேவதாசி..அவளைப்பார்க்க வர்ற வில்லன்  ஒரு 500 ரூபாய் நோட்டுக்கட்டை தர்றான்..( ஆனா பார்ட்டி ரூ50,000க்கு ஒர்த் இல்லை.. 5000 கூட தேறாது ஹி ஹி )

இந்தியாவோட பொருளாதாரமும்,பணப்புழக்காட்டமும்,பண வீக்கமும் ஏன் தாறுமாறா இருக்குங்கறது இப்பத்தான் புரிஞ்சுது.. ( கில்மாப்படத்துக்கு  வந்தாலும் சமூக சிந்தனை மாறலை பார்த்தீங்களா?ஹி ஹி )

அவன் மோனிகாபேடியைப்பார்த்ததும் அவதான் எனக்கு வேணும்னு  அடம் பிடிச்சு 1 1/2 லட்சம் தர்றான்.கோயில் விக்ரகம் மாதிரி இருக்கற ஃபிகரை அவ்வளவு கம்மியான ரேட்டுக்கு விக்கற ரகமா அவங்கம்மா.. ஹூம்.. 

இப்போ பெட்ரூம்ல மோனிகா பேடி.. நகை எல்லாம் கழட்றாங்க.. ( நகையை மட்டும் தான் ஹி ஹி )அதுக்கே 7 நிமிஷம் ஆகுது.. (வாட்சை பார்த்துட்டே டென்ஷனோட ஆடியன்ஸ்)

அப்புறம் முக்கியமான நேரத்துல இன்னொரு வில்லன் குறுக்கே வந்துடறான். அவன் தான் முறைப்படி பொட்டுக்கட்டி முறைப்படி ரிசர்வ் பண்ணுனவனாம்..
( பண்றதெல்லாம் முறையற்ற செயல்... )

புதுசா வந்த வில்லனை பழைய வில்லன் போட்டுத்தள்ளிடறான்.அப்புறம் காலம் காலமா சீன் படங்கள்ல காட்ற மாதிரி ஒரு புள்ளிமானை புலி அடிக்கற மாதிரி ஓவியத்தை காட்றாங்க.. ( அட போங்கப்பா)

கொஞ்ச காலத்துக்குப்பிறகு அந்த வில்லன் மீண்டும் வர்றான்.இப்போ மோனிகா பேடியோட மகளுக்கு ஆசைப்படறான்.( அந்த மகள் தான் இப்போ ஃபிளாஸ்பேக் சொல்லிட்டு இருக்கற அந்த அட்டு ஃபிகர்)

வேற வழி இல்லாம அதுக்கும் ஓக்கே சொல்லிடறாங்க மோனிகா பேடி.. பெட்ரூம்ல அட்டு ஃபிகர்.. +அடாவடி வில்லன்.. பால்ல விஷம் வெச்சு குடுத்துடறா.. அந்த தத்தி வில்லன் அதைக்குடிச்சு செத்துடறான்..

அம்புட்டுதான் ஃபிளாஸ்பேக்.

தான் ஆசைப்பட்டபோது  வாழ்வு அமையல.. வாழ்வு அமையறப்ப தனக்கு ஆசை இல்லை.. அப்படிங்கற உயரிய தத்துவத்தோட படம் முடியுது.. ஹி ஹி

http://www.indiaonapage.com/upload/images/wallpaper/original/00/00/03/131307639298570.jpg



சீன் படத்துல பார்த்த அதாவது கேட்ட கேவலமான வசனங்கள்

1,  மண்ணு திங்கற இந்த உடம்பை மனுஷன் சாப்பிட்டுப்போகுது விடம்மா..
( நர மாமிசம் சாப்பிடற கதையா?)

2.  டியர்.. என் மேல உங்களுக்கு அவ்வளவு ஆசையா?

 ஆமா.. அதான் மல்லிகைப்பூ வாங்கிட்டு வந்தேன்,வெச்சுக்கோ.. ( தக்காளி.. 2 முழம் பூ வாங்கிட்டு வந்து வசனம் பேசுது பாரு.. )

ஆசை இருக்கறவங்க பூவை கையில தர மாட்டாங்க.. தலைல தான் வெச்சு விடுவாங்க.. ( கல்யாணம் ஆன கபோதிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா.. எல்லாரும் அவனவன் சம்சாரத்துக்கு தலைல பூ வெச்சு விடுங்க.. டேபிள்ல வீசிட்டு பெட்ரூம் போகாதீங்க # நீதி)

3.  வில்லன் - பால் சூடா இருக்கறப்பவே சாப்பிட்டா தான்  டேஸ்ட்டா இருக்கும். ( புதிய தத்துவம் 12,357)

நான் நிலா மாதிரின்னு நினைக்காத.. பார்க்கத்தான் நிலா.. ஆனா கிட்டே வந்தா சூரியன்.. நெருப்பு..

வில்லன் - அப்போ நான் என்ன பருப்பா? ( இந்த டயலாக்ல பருப்புங்கற வார்த்தையை சென்சார் பண்ணீட்டாங்க போல..)




http://media.onsugar.com/files/2011/02/08/3/1440/14400286/7e/devathasiyin-kadhai_2B_11_.jpg
இந்தப்படத்துல ரசிச்ச அம்சங்கள்

 1, மோனிகா பேடியை கண்ணியமா காட்டிய ஒளிப்பதிவாளர்.. ( அவர் கண்ண்னியத்துல இடி விழ,,)

2. படத்துக்கு சம்பந்தமே இல்லைன்னாலும் வில்லனோட மனைவியோட குளியல் சீன்.. ( நல்ல ஃபிகர்ப்பா)

3.மோனிகா பேடியோட  அம்மாவா வர்ற ஃபிகர்க்கு 30 வயசுதான் இருக்கும்.. வளர்ர்புத்தாய் போல.. அந்த ஃபிகரும் நல்லாருந்தது.

 இந்தப்படத்தின் மூலம் நாம் கற்க வேண்டிய நீதிகள்

1. யாரையாவது ரேப் பண்ண போறப்ப முட்டாள் தனமா அவங்க வீட்ல எதையும் சாப்பிடக்கூடாது.. ( விஷம் கலந்திருக்கும்)

2. ஏதாவது ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணுனா அதோட விட்டுடனும்..நைஸா அந்தப்பொண்ணோட மகளையும் ட்ரை பண்ணக்கூடாது.. ( அதுவும் ஒரு வகைல மக முறை தானே..)

3.எந்த ஃபிகரையாவது லவ் பண்ணுனா சான்ஸ் கிடைக்கறப்ப  மேட்டரை முடிச்சுடனும்.. மிஸ் ஆனா பொண்ணு மிஸ் ஆகிட்டா பின்னால் அல்லது முன்னால வருத்தப்பட வேண்டி வரும்.

4. போஸ்ட்டர் டிசைன் நல்லாருக்குன்னு விசாரிக்காம எந்த படத்துக்கும் போகக்கூடாது.. ஏ சர்ட்டிஃபிகேட் பணம் குடுத்து  வாங்கி இருப்பாங்க.. படத்துல சீன் இருக்காது .. அ வ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 1 - இடப்பற்றாக்குறையின்  காரணமா இந்தப்படத்துல பார்த்த  2 நல்ல ஃபிகர்கள் பற்றி வர்ணிக்க முடில. ஹி ஹி . அப்புறம் படத்துக்கு சம்பந்தமே இல்லாம வந்த வேலைக்காரி VS காமெடியன் சீன் பற்றி சிலாகிக்க முடியல..

டிஸ்கி 2 - இந்தப்பதிவை படிச்சுட்டு என்னைத்திட்றவங்களுக்கும், மைனஸ் ஓட்டுப்போட நினைப்பவர்களுக்கும் ஒரு வார்த்தை.. இதுக்குப்பரிகாரமாத்தான்
நான் நேற்றே 2 ஆன்மீகப்பதிவு போட்டாச்சு.. 

டிஸ்கி 3 - இது வரைக்கும் நல்ல பசங்களா இருக்கறவங்க இந்த பதிவு மூலமா கெட்டுப்போனா(!!!!) அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.. வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.. மன்னிப்பு கேட்ட்டுக்கறேன் ஹி ஹி


Saturday, April 16, 2011

Lake Consequence (1993) - சினிமா விமர்சனம் 18 +

http://img.getglue.com/movies/lake_consequence/rafael_eisenman/normal.jpg

A MAN AND TWO WOMEN  -என்னதான் ஹோட்டல்ல வெரைட்டியா சாப்பிட்டாலும்,கல்யாண மண்டபத்துல பஃபே சிஸ்டத்துல ஓ சி ல ஒரு வெட்டு வெட்டினாலும் ,கிராமங்கள்-ல சாப்பிடற பழைய சோறும், மோர் மிளகாய் அல்லது வத்தல் காம்பினேஷனும் செம டேஸ்ட்டா இருக்கும்..( இது கில்மா பதிவா ?உப்புமா பதிவா? #டவுட்டு) 

 அது சாப்பிட்டாத்தான் உண்மையிலேயே வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.. அந்த மாதிரி தான் இந்த மாதிரி பழைய படங்களை ஒரு ரிவிஷன் பண்றதும். (ம்க்கும்.. எட்டாங்க்ளாஸ் படிக்கறப்ப இப்படி ரிவிஷன் பண்ணி இருந்தா பாஸ் ஆகி இருப்பே..# மனசாட்சி )


 படத்தோட கதை என்ன? ஓப்பனிங்க்ல (என்னது எடுத்ததுமே ஓப்பனிங்கா?)
ஒரு சந்தோஷமான தம்பதி சந்தோஷமா இருக்காங்க.. ( இதென்ன கேனத்தனமான லைனா இருக்கு? சந்தோஷமான தம்பதி சந்தோஷமா த்தான்இருப்பாங்க. இதுல என்ன இருக்கு?ன்னு தங்கபாலுத்தனமா கேள்வி கேட்கறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்..)


மங்களகரமா முத எடுத்ததும் சீன் பார்த்த சந்தோஷம் தியேட்டர்ல இருந்த 890 பேர்ல 760 பேருக்கு.. (பெரிய சைக்காலஜி சகுந்தலான்னு நினப்பு) மீதி 130 பேரோட கருத்து என்னான்னா புருஷன் பொண்டாட்டி குஜாலா இருக்கறதுல என்ன சுவராஸ்யம் வந்துடப்போகுது?அது காங்கிரஸ்காரங்க கோஷ்டி சண்டை போடற மாதிரி..ரெகுலரா நடக்கறதுதான்.

http://kinofilms.tv/images/films/8/7090/pict/3.jpg

ஏதாவது கள்ளக்க்காதல் சீன் வந்தாத்தான் விறுவிறுப்பா இருக்கும்னு நயன் தாராத்தனமா  அடச்சே.. நாதாரித்தனமா  நினைக்கறப்பத்தான் படத்துல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வருது.. ( ம் ம் இப்பத்தான் கொட்டாவி விட்டவனெல்லாம் நேரா உட்கார்றான்)


ஹீரோயின் தனிமைல இருக்கா ( ஹி ஹி சீன் கன்ஃபர்ம் # பட்சி சொல்லுது) ஹீரோ ஆஃபீஸ்க்கு போயிட்டான் ( தொலைந்தான் எதிரி )
இப்போ வில்லன் ஹீரோயின் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன்ல வந்து மரங்களை வெட்றான்.( இவன் படத்துக்குத்தான் வில்லன்.. நமக்கு ஹீரோ எப்படின்னா இவனாலதானே சீன் வருது?# வாஸ்கோடகாமா தோத்தான் போ)
ஏன் இப்படி  சத்தம் வர்ற மாதிரி மரம் வெட்றே?ன்னு ஹீரோயின் சண்டை போடறா..( மரத்தை வெட்றப்ப கோடாலியை அல்லது ரம்பத்தை சைலண்ட் மோடுலயா போட முடியும்?)வில்லன் சிரிக்கறான்.ஒரு கட்டத்துல ஹீரோயின் வில்லனோட வேன் ல ஏற வேன் கிளம்பிடுது. (வேன் மட்டுமா? ஹி ஹி )

 ஒரு ஏரி.. ஒளிப்பதிவு  சூப்பர்னு ஒருத்தன் சிலாகிக்கறான்.. அப்போ ஒரு கமெண்ட்.. டே கூமுட்டை... கேமராவைப்பாராட்ற நேரமா இது?அப்போ இன்னொரு ஃபிகரு சேரில அடச்சே ஏரில குளிக்குது... அவள் புன்னகையை மட்டுமே அணிந்திருந்தாள் ( நன்றி அமரர் சுஜாதா @நில்லுங்கள் ராஜாவே)

Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-008.jpg
இப்போ நம்ம பழைய ஹீரோயினும், புது ஹீரோயினும் சேர்ந்து குளிக்கறாங்க. பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. 17  நிமிஷம் ரெண்டு பேரும் கம்பைன் பாத் பண்றாங்க.. ( கம்பைன் ஸ்டடி பண்றப்ப கம்பைன் பாத் பண்ணக்கூடாதா?)

அப்புறம் வில்லன் வந்து 2 பேரையும் ஒரு கிளப்புக்கு கூட்டிட்டு போறான்.அங்கே புது ஹீரோயின் கூட வில்லன் சந்தோஷமா இருக்கான். அது பழைய ஹீரோயினுக்கு  பிடிக்கலை.. ( ஆனா நமக்கு பிடிக்குது ஹி ஹி )

இப்போ அந்த பழைய ஹீரோயின் வில்லி ஆகறா.. அதாவது ஹீரோவுக்கு ஜோடியா இருந்தப்ப அவ ஹீரோயின்.. வில்லனுக்கு ஜோடி ஆன பின்னே அவ வில்லி... ( நம்ம பழைய ஹீரோயின் வில்லன் கூட மேட்டரை முடிச்சுட்டா என்பதை இவ்வளவு கண்ணியமா ,மறைமுகமா சொன்னதுக்காக இந்த நூற்றாண்டின் சிறந்த கண்ணிய எழுத்தாளர் என்ற விருதை எனக்கு நானே வழங்கிக்கறேன் ஹி ஹி )


http://content.internetvideoarchive.com/content/photos/266/011179_3.jpg
இப்போ டைம் ஆகிடுச்சு.. ( ஹீரோயினுக்கா/) அதாவது ஹீரோ வீட்டுக்கு வர்ற டைம் ஆகிடுச்சு.. வீட்டுக்கு திரும்பி போகனுமே.. வில்லன் டிராப் பண்ணலை.. இவ கோவிச்சுக்கிட்டு தானே போறா.. இது வில்லனுக்கு பிடிக்கலை.. துரத்தறான்... ஒரு காட்டுல சேஸிங்க் சீன்.. ( சேஸிங்க்கின் முடிவில் ஒரு சீன் உண்டு என்பதால்  சேஸிங்க் சீன். என்ற பதம் உருவக அணியாகவும், தற்குறிப்பேற்ற அணியாகவும் இங்கே இடம் பெறுது. # தமிழ் இலக்கணத்துல பின்றேடா போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கப்படுது ஹி ஹி .)

இப்போ காலம் போன காலத்துல ஹீரோயின் சின்ன வயசுல அவளுக்கு நடந்த ஒரு பாலியல் பலாத்கார ஃபிளாஸ்பேக்கை சொல்றா... வில்லன் அதை கேட்டுக்கறான்... இப்போ ஹீரோயின் வீடு வந்து சேர்ந்துடறா... 

பழையபடி பத்தினி ஆகிடறா.... இப்போ சுபம்... ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU7SQLFzi4jvOPPpbXZ_zkzLtPmazlDxSXrM8JOazPBofT8sDyzIs20FPNCRA3NzgqhN6x4bXOf5aYHVpG0hyOWC1WRIuxywyS-A6FSHZU3gbSKyBlfGDvGiQuwo0xWwWVjD4ilW3zVqg/s400/star-joan_severance-nue.jpg
.
படம் முடிஞ்சிடுச்சுன்னு ரசிகர்களுக்கு உணர்த்தறதுக்காக  THE END  கார்டு போட்ட பின்பும் எவனும் கிளம்ப மாட்டேங்கறான்.. என்னமோ அத்தை பொண்ணோட திரட்டிக்கு வந்த முறைமாமன் கணக்கா அங்கேயே உக்காந்திருக்கான்.. 
தியேட்டர்காரன் வந்து கிளம்பப்பா படம் முடிஞ்சுதுன்னு சொன்ன பிறகு வேண்டா வெறுப்பா கிளம்பறாங்க.. இதுல எத்தனை பேரு ரிப்பீட் ஆடியன்சா அடுத்த ஷோவே வரப்போறாங்களோ.. 

இந்தப்படம் ஈரோடு அபிராமி தியேட்டர்ல  4 வாரம் ஹவுஸ் ஃபுல்லா தியேட்டர் பூரா ஜொள்ளா ஓடுச்சு.. நான் 3 தடவை பார்த்தேன்  என்பதை வெட்கத்தை விட்டு சொல்றேன்.. ( தக்காளி.. பார்க்கறது சீன் படம் இதுல வெட்கம் என்ன வேண்டி கிடக்கு..?)



http://pulsarwallpapers.com/data/media/554/Lake_Bell_001_2837_Wallpaper.jpg
 படத்துல மொத்தம் 6 சீன் இருக்கு. 1. ஹீரோ ஹீரோயின் 2. வில்லன் வில்லி 3 வில்லன் ஹீரோயின் 4 வில்லி ஹீரோயின் 5 வில்லன் + வில்லி + ஹீரோயின்
6.க்ளைமாக்ஸ்ல வில்லன் ஹீரோயின்.

பாருங்கள் பயன் பெறுங்கள். ஹி ஹி.

படத்தோட உண்மையான டைட்டில் THW LAKE CONSEQUENCE. ஆனா போஸ்டர்ல A MAN AND TWO WOMEN  அப்படின்னு போட்டிருக்கறதுக்கு காரணம் ஒரு கிளாமருக்கு..


http://dodjer.com/uploads/posts/2010-10/1288311725_Lake_Consequence_1993_1.jpg
டிஸ்கி -1  இந்தப்படத்துல ஹீரோ, வில்லன்,ஹீரோயின், வில்லி யாரோட நடிப்பு நல்லாருந்ததுன்னு சொல்லவே இல்லை? என யாரும் கேட்காதீங்க.. யார் நடிப்பை பார்த்தா..? ஹி ஹி,படத்தின் ட்ரெய்லர்

டிஸ்கி 2 - வழக்கமா சிறந்த வசனங்கள்னு ஒரு இடம் ஒதுக்குவேன் அதுவும் இந்த போஸ்ட்க்கு இல்லை.. ஏன்னா வசனத்துகு வேலையே இல்லாத படம்.. ஹி ஹி  டிஸ்கி 3 - இளைஞர்களை கெடுக்கறதா யாரும் என்னை சொல்ல முடியாது.. ஏன்னா அதுக்கு அட்வான்ஸ் பாவ மன்னிப்புபப்ரிகாரமா இன்று 2 நல்ல பதிவு போட்டூட்டேன்.. ஹி ஹி .. Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-010.jpg

Thursday, April 07, 2011

DISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://pacejmiller.files.wordpress.com/2009/08/district9poster.jpg?w=321&h=475
போஸ்டர்ல கிங்க் காங்க், த லார்டு ஆஃப் த ரிங்க்ஸ் படத்தை எடுத்த இயக்குநரின் படம் அப்படின்னு சிலாகிச்சு இருந்ததாலயும்,  ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் போட்டிருந்ததாலயும் போனேன்...,(என்னது ?ஓப்பனிங்க்லயே ஒரு தன்னிலை விளக்க மன்னிப்பு..?)

ஏலியன்ஸ் வகையறா படங்கள்  ரிலீஸ் ஆனப்ப ஆரம்பத்துல ஒரு பிரமிப்பை ஏற்படுத்துனது நிஜம் தான் .. அது கேப்டன் கட்சி ஆரம்பிச்சப்ப கிடைச்ச ஓப்பனிங்க் வரவேற்பு மாதிரி... ஆனா இப்ப கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா,அழகி மோனிகா சிலந்தி மோனிகா ஆன கதையா,கதை கந்தல் ஆகிடுச்சு.. வடிவேல் எல்லாம் வந்து கேப்டனை பொளந்து கட்ற மாதிரி... 

சரி.. படத்தோட கதை என்ன?வேற்றுக்கிரக வாசிகள் ஃபாரீன்ல ஒரு ஊர்ல விண்கலம் மூலமா வந்து இறங்கறாங்க.. அங்கேயே டேரா போடறாங்க.. அவங்க வந்து இருக்கறதே பூமியோட ஆயுத பலம், படை பலம் எல்லாத்தை பற்றியும் ஆராய்ந்து நோட் ஸ் எடுக்கத்தான்...
http://cinemaverytasty.com/wp-content/uploads/2009/07/district9_biggun.jpg
ஆனா அந்த ஏரியா மக்களுக்கு பீதி.. இவங்க இங்கே இருக்கக்கூடாது.. அப்புறப்படுத்தனும்னு ஒரே ஆர்ப்பாட்ட்டம்... ஒரு ஆராய்ச்சிக்குழு வருது.. அதுல நம்ம ஹீரோ இருக்காரு.. அவர் ஆராயும்போது வை கோவை அம்மா துரத்தி விட்ட மாதிரி எதிர் பாராத சம்பவம் ஒண்ணு நடக்குது..


அதாவது ஏதோ ஒரு திரவம் அவர் மேலே பட்டுடுது... ஆராய்ச்சிக்குழுவுல இருந்த 27 பேர் மேல படாம ஏன் ஹீரோ மேல மட்டும் அது பட்டுச்சு அப்ப்டி எல்லாம் கேட்கப்படாது... ஊர்ல 1008 பர்சனாலிட்டி பசங்க இருக்கறப்ப தலையே சீவாம, தாடி வெச்சு, பல்லு கூட விளக்காத பர தேசியை ஹீரோயின் லவ் பண்ணுதே அந்த மாதிரி தான் இதுவும்..

அந்த திரவம் பட்டதால அவர் ஆஃப்பாயில் ஆறுமுகம் மாதிரி பாதி மனிதன், பாதி ஏலியன்ஸ் ஆகிறார்... 

http://passionforcinema.com/wp-content/uploads/district-9-warning.jpg

அவர் நிலைமை என்ன ஆச்சு? அவரோட மனைவியை அவர் எப்படி சமாதானப்படுத்துனாரு... இந்த கருமாந்தரத்தை எல்லாம் தில் உள்ளவங்க படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க..

வேற்றுக்கிரகவாசியை வடிவமைத்த ஆர்ட் டைரக்டரை இங்கே கூட்டிட்டு வந்து டி ஆர் படம் பத்து காண்பிக்கனும்.. சீரியசா படம் எடுக்க சொன்னா காமெடி பண்ணீட்டு.. ராஸ்கல்..

அந்த ஏலியன் முகத்தை க்ளோசப்ல பார்த்தா 4 நாள் சாப்பாடு இறங்காது.. ( 5வது நாள் மட்டும் இறங்கிடுமா..?)
http://shadesofcaruso.files.wordpress.com/2010/01/basterdsending.jpg

கேனத்தனமாக திரைக்கதை அமைத்த இயக்குநரிடம் கிறுக்குத்தன்மான சில கேள்விகள்

1.  ரெண்டு வருஷமா டேரா போட்டும் அந்த ஏலியன்சால ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியலையா?

2. ஏலியன்சில் ஆண், பெண் பேதம் இருப்பதைக்காண்பிக்க தோற்றத்தில் வித்தியாசம் காட்டினால் போதாதா? லேடி ஏலியன்சுக்கு ஜாக்கெட், பெட்டிகோட் போட்டு விட வேண்டுமா? ( பக்கத்து சீட் ஆள் அப்போ கண்டிப்பா சீன் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றான்.. )

3.ஏலியன்ஸ் தேசத்தின் பாதுகாப்புக்கு கேடு விளைவிப்பதாக சந்தேகப்பட்டால் அப்பவே ராணுவம் போட்டுத்தள்ளலாமே.. மனித உரிமைக்கமிஷன் எதிர்ப்பதாக சீன் வெச்சு இருக்கீங்களே.. அவங்க தான் நம்ம கிரகத்து ஆள் கிடையாதே...

4. ஹீரோவின் மனைவியிடம் ஹீரோவின் மாமனார் “ உன் கணவன் வேற்றுக்கிரக பெண்ணோடு தகாத உறவு வைத்ததால் தான் அப்படி ஏலியன்ஸ் போல் ஆகிட்டான் என கதை கட்டி விடுகிறாரே.. அதற்கு என்ன காரணம்..?அதைக்கூட நம்பிடலாம்.. அந்த முட்டாள் மனைவி  (பெரும்பாலும் மனைவிகள் எல்லாம் முட்டாள்களாகத்தான் இருப்பாங்க என்பது வேற விஷயம்.. ) அதை அப்படியே நம்பிடறாளே.. அது எப்படி?




http://images.allansgraphics.com/picture/2/t/tania_van_de_merwe_district_9-8113.jpg
5.ஆராய்ச்சிக்கூடத்தில் வைத்து ஹீரோவை கேள்வி கேட்கும் விசாரணை அதிகாரிகள்  திடீர் என சேம் சைடு கோல் போடுவது எப்படி?

6. படத்தின் பெரும்பாலான காட்சிகள் டமால் டுமீல் என ஒரே இரைச்சலாவே இருக்கே.. அது எதுக்கு..? ஆக்‌ஷன் படம்னு லேபிள் குத்திக்கவா?

7. வேற்றுக்கிரகவாசிகளிடம் பூமி ஆட்கள் பண்டமாற்றாக உணவு கொடுத்து ஆயுதம் வாங்கற சீனை எல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான்.. அவ்வளவு ஏன்? ஒரு காங்கிரஸ்காரன் கூட நம்ப மாட்டான்.. 

8.. ஏலியன்ஸ் வெச்சிருக்கற ஆயுதத்தை மனிதனால் யூஸ் பண்ண முடியாது .. ஓக்கே.. ஆனால் ஏலியன்ஸ் மட்டும் மனிதனின் ஆயுதத்தை யூஸ் பண்ணுதே அது எப்படி?

9. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வெச்ச மாதிரி ஒரு சீன்.. ஏலியன்சை அழிக்க வந்த ராணுவத்தினர் ஏலியன்சிடம் ஒரு பேப்பரை நீட்டி “ இதுல ஒரு சைன்( SIGN) பண்ணுங்க என கேட்பதுதான்.. அது என்ன கூட்டணிக்கட்சி பேச்சு வார்த்தையா? கையெழுத்து கேட்க...?
 http://www.joblo.com/images_arrownews/mr44.jpg
படத்துல ஹீரோயினை எதுக்கு ஒப்பந்தம் பண்ணுனீங்க.. அவர் ஒரு சீன்ல கூட ஹீரோ கூட சந்தோஷமாவே இல்லையே...  அவங்க 2 பேரும் சந்தோஷமா இருந்தாத்தானே ரசிகர்கள் சந்தோஷமா இருப்பாங்க.. ரசிகர்கள் சந்தோஷ்மா இருந்தாத்தானே டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சந்தோஷமா இருப்பாங்க.. அட போங்கப்பா. கோடிக்கணக்குல செலவு தான் பண்ணத்தெரியுது.. போட்ட காசை எப்படி வசூல் பண்றதுங்கற சூட்சுமம் தெரியலையே...

 கேமரா, எடிட்டிங்க்,சவுண்ட் ரெக்கார்டிங்க், இசை எல்லாம் மகா மட்டம்... 

மொத்தத்துல 50 ரூபா தண்டம்..



Monday, April 04, 2011

கே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

http://www.123musiq.com/Tamil-Images/Appavi.jpg


எலக்‌ஷன் டைமில் இந்த மாதிரி படங்கள் ஒரு பரபரப்புக்காக ரிலீஸ் ஆவது எப்பவும் நடப்பதுதான்.. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி இந்த மாதிரி ஆட்சி பற்றிய நேரடி விமர்சன படங்கள் அதுவும் ஒரு லோ பட்ஜெட் படம் வந்தது துணிச்சல் தான்...

படத்தோட கதை என்ன?ரமணா, சிட்டிசன்,சாமுராய் 3 படங்களின் உல்டா தான்.. ஊழல் அரசியல்வாதிகளை வரிசையாக போட்டுத்தள்ளும் கல்லூரி மாணவர் அவர்களை சாகடிக்கும் முன் அவர்களது  ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களது செல் ஃபோனிலேயே வீடியோ பதிவு செய்து அனைவருக்கும் அனுப்புகிறார்...இது தொடர் கதை ஆக அரசியல் வாதிகள் திருந்தினார்களா? என்பதே க்ளைமாக்ஸ்...

ஹீரோ புதுமுகம் ஆள் தோற்றம், நடிப்பு எல்லாம் ஓக்கே என்றாலும் இந்த படத்துக்கு உண்டான கெத்து பத்தாது.. ஒரு சரத் குமாரோ, விஜய்காந்தோ, இயக்குநர் சீமானோ ஏற்றிருக்க வேண்டிய கனமான ரோலை இந்த மாதிரி ரொமாண்டிக் லுக் உள்ள ஹீரோ ஏற்பது படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்.

ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..?)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா .....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyaddvsty7jSGC-1SvU8veA2QQWuIaFZTFaMUZIwsgk2YIG4ku5l7qUkbH32N-ey93w8aRSdvG6SAoNsDW9R44CzpRfBJvQoNto2nwLTLy7Qdbmxdk7ZEMi9kYKmQdsUNIGiYMNo1fXo6Q/s1600/Suhani-appavi-movie-stills-pics-photo-gallery-05.jpg

டூயட் சீன் -ல் தனது துப்பட்டாவை தொட்ட பெட்டா பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்து விட்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும் போது... ஹி ஹி # வாழ்க ஸ்லோமோஷன் சீன்ஸ்..

பஞ்சாபி பர்பி பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயின் ஆல்ரெடி கலராக இருந்தும் எதற்கு ஓவர் மேக்கப்? டால் அடிக்குதப்பா சாமி... 

படத்தில் பட்டாசைக்கிளப்பும் அரசியல் கார சார வசனங்கள்

1. தட்டுல இட்லியைப்போட்டுட்டு தலைல இடியைப்போட்டானாம் ஒருத்தன்...
எப்படி தலைவரே.. அது?

ரெண்டு பேருக்கு முன்னால வில்லனா இருந்தாலும் , 200 பேருக்கு முன்னால ராமனா இருக்கனும்,

2. போலீஸ்காரங்க எப்படி சார் நேர்மையா இருக்க முடியும்..?அப்படி இருந்தாதான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்களே..?

எல்லா ஆஃபீசர்களும் நேர்மையா இருந்துட்டா ட்ரான்ஸ்ஃபர் ஆகி வர்ற ஆஃபீசரும் நேர்மையா தான் இருப்பாங்க.. அப்போ அரசியல் வாதிங்க தோத்துப்போய்டுவாங்க....ட்ரான்ஸ்ஃபர்ங்கற பேச்சே இருக்காது...( #செம ஐடியா ஆனா எல்லாரும் அப்படி நல்லவங்க ஆவாங்களா?)

3.  அல்லக்கை - அய்யா.. நீங்க சொன்னது ரொம்ப சரி.. 

தலைவர் - நான் ஒண்ணுமே சொல்லலைடா.. கொட்டாவி தானே விட்டேன்..?

4.  தலைவரே.. எனக்கு ஆளுநர் போஸ்ட் வேணும்....

யோவ்.. உனக்கெதுக்கு கவர்னர் ஆகற ஆசை..?

ஓஹோ.. ஆளுநர்னா கவர்னர்னு அர்த்தமா?





http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/appavi-aug8-2009.jpg

5.   ஏய்.. என்னை எதுக்கு கொல்றே..?

மக்களை ஏமாத்துனதுக்கு..

நான் இன்னும் எம் எல் ஏ வா ஆகவே இல்லையே..?

6.  நாயரே.. நிர்வாணமா ஒரு டீ போடுங்க... 

அப்படின்னா?

ஆடை இல்லாம ஒரு டீ போடுங்க    ( அம்பை தேவா எழுதுன 1998 சூப்பர் நாவல் ஜோக்)

7.  நான் அநாதை ஆனதுக்கு காரணமே முறுக்கு தான்..

அது எப்படி?

எங்கம்மா பலகாரம் சுட்டப்ப எங்கப்பா முறுக்கு பிரமாதம்னு பாராட்டுனார்.. உடனே எங்கம்மா பூரிக்கட்டையால ஒரே போடு.. ஆள் அவுட்....

ஏன்?

எங்கம்மா சுட்டது ஜிலேபி.. முறுக்குன்னா கோபம் வராதா? ( கிரேசி மோகன் நாடக காமெடி வசனம்)

8.  இந்த அரசியல்வாதிங்க குடுக்கறது வாக்குறுதி.. ஆனா போடறது வாய்க்கரிசி...

9.  டேய்.. நாட்ல 1000 பேரை அழிச்சுட்டு நீ மட்டும் நல்லா வாழனும்னு ஆசைப்படறே.. ஆனா உன் ஒரு ஆளை அழிச்சுட்டு அந்த 1000 பேரை வாழ வைக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்.. 


10.. அந்த காலத்துல வில்லன் தான் கொலை செய்வான்.. இப்பவெல்லாம் ஹீரோவே கொலை பண்றதுதான் ஃபேஷன்... 


http://assets.findchennai.com/images/entertainment/gallery/812/Appavi-Movie-Press-Meet-40.jpg
11.  நாங்க எல்லாம் ராஜா பரம்பரை,,... 

எது? புள்ளி ராஜா பரம்பரைதானே..?  (வி சாரதி டேச்சு ஜோக் -ஆனந்த விகடன்)

12. முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிங்க கிடையாது.. ஆனா பிடிபடற எல்லாரும் முஸ்லீம்களா இருக்காங்க.. அது ஏன்?

13.  தேர்தல்னா என்ன தெரியுமா? இத்தனை நாளா எந்த கெட்டவனுக்கு ஓட்டு போட்டமோ அவனுக்கு ஓட்டு போடாம வேற ஒரு கெட்டவனுக்கு ஓட்டு போடறதுதான்.

14.  நான் படிச்சுட்டு விவசாயம் பார்க்கபோறேன்... 

சும்மா கதை விடாதே..  

நிஜமாத்தான்.. யாரோ விவசாயம் பண்ணுவாங்க.. அதை வேடிக்கை பார்ப்பேன்.. 

15.  நான் தாய்மையை மதிக்கறேன்.. அதனால படிப்பை முடிச்சுட்டு கல்யாணம் பண்ணி சீக்கிரம் தாய் ஆகப்போறேன்...

சார்.. நான் ஸ்டெல்லா தாய் ஆக ஹெல்ப் பண்ணப்போறேன்.. ( எஸ் வி சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடக டயலாக்)

16.  பெத்த அம்மாவுக்கு ஒரு கஷ்டம்னா செத்த பொணம் கூட துடிக்கும்.. 

17.  அடுத்த எலக்‌ஷன் பற்றித்தான் எல்லா அரசியல் வாதிகளும் யோசிக்கறாங்க.. அடுத்த தலைமுறை பற்றி யாரும் யோசிக்கறதில்லை..

18.  தண்ணி ஊற்றி கழுவறப்ப போகாத கறையை ஆசிட் ஊற்றி கழுவற மாதிரி நம்ம நாட்டையும் ஆசிட் வாஸ் பண்ணி க்ளீன் பண்ணனும்..
http://www.cinemaexpress.com/Images/article/2010/1/18/15appavi.jpg
பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை.. பாறையில் பூக்கின்ற பூக்கள் பாட்டு கவி நயம் மிக்கது என்றாலும் அந்நியன் பட குமாரி.. மனம்.. பாட்டின் அதே லொக்கேஷன், அதே மெட்டு என உல்டா அடித்திருப்பது மைனஸ்... 

ஒரு சீனில் ஹீரோ 2 அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கும் காரின் பெட்ரோல்டேங்க் மீது ரிவால்வரால் சுடுகிறான்.. அப்படி சுட்டால் 20 அடி தூரம் வரை யார் நின்றாலும் ஆளை காலி பண்ணி விடுமே.?

ஹீரோ வில்லனை தேசிய கீதம் தெரியுமா? எனகேட்க தெரியாது என சொன்னதும் அவனை போட்டுத்தள்ளூகிறான்... அதற்குப்பிறகு ஆளாளுக்கு தேசிய கீதத்தை மனப்பாடம் செய்வது நல்ல கற்பனை... 

கே பாக்யராஜ் புரட்சி விதை  விதைக்கும் பேராசிரியராக வருகிறார்.. ஆளுங்கட்சி ஆதரவாளரான அவர் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது ஆச்சரியம் தான்.. யார் கண்டது,. இந்நேரம் அவருக்கு டோஸ் கூட விழுந்திருக்கலாம்... 

இசை ஜோஸ்வா ஸ்ரீதர்.. படம் பூரா இசை ஒரே இரைச்சல்.. அவ்வப்போது அமைதியும் வேணும்னு யாராவது சொன்னால் தேவலை.... 






http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/06/Appavi_movie_still_kodambakkamtoday_com.jpg



இந்தப்படம் எல்லா சென்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடலாம்..    

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் படம் பார்த்தேன்..

Friday, March 18, 2011

முத்துக்கு முத்தாக - வெற்றிக்கு வித்தாக -சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/MuthukuMuthaga1.jpg
மாயாண்டி குடும்பத்தார்,கோரிப்பாளையம் ,பாண்டி,பூ மகள் ஊர்வலம் பட வரிசையில் இயக்குநர் ராசு மதுரவனின் 5 வது ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படமான இது கல் நெஞ்சையும் கரைக்கும், கண் கலங்க வைக்கும் அம்மா, அப்பா பாசக்கதை...இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடமாக வந்திருக்கும் இந்தப்படம் அடையப்போகும் வெற்றி ரவுடியிசக்கதைகளையே நம்பி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பாடாவதி இயக்குநர்களுக்கான சவுக்கடி,...

அம்மா, அப்பாவாக வாழ்ந்திருக்கும் இளவரசு - சரண்யா ஜோடிகளின் குணச்சித்திர நடிப்பு அருமை.அதுவும் இளவரசின் அண்டர்ப்ளே ஆக்டிங்கும் அவரது பாடி லேங்குவேஜூம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு பாடம்.

படத்தோட கதை என்ன?5 பசங்க பெத்திருந்தும் கடைசி காலத்துல மருமகள்களின் நயவஞ்சகத்தால் அடைக்கலமோ, பாசமோ கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றொரின் கதை தான்...ஏற்கனவே தவமாய் தவமிருந்து, சம்சாரம் அது மின்சாரம்,வானத்தைப்போல போன்ற பல படங்களின் சாயல் இருந்தாலும் இது ஒருகவனிக்கத்தக்க படமே...

படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.அதே போல் ஓப்பனிங்க் ஃபைட் சீனில் பதட்டத்தை ஏற்படுத்தாமல் ஏதோ லவ் தீம் மியூசிக் மாதிரி போட்டு பின்னணி இசையில் ஏன் சொதப்பினார்கள் என்பது தெரியவில்லை.. 


http://monikaonline.in/wp-content/uploads/2011/01/monika-muthukku-muthaga.jpg
கிராமத்து தெம்மாங்குப்பாட்டான  பொண்ணைபார்த்தா விசில் அடிப்பேன்...என்னத்தை பாட்டுக்கு  செமயான கலக்கல் இசை அமைத்து தியேட்டரை எழுந்து ஆட வைத்திருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் ரொம்ப வே அடக்கி வாசித்தது ஏனோ..?அந்த பாட்டுக்கு எல்லா ஆண்களும் வேட்டையை அவிழ்த்து அண்டர் டிராயருடன் ஆடுவது மொத்தப்படத்துக்குமான திருஷ்டி...

படம் முன் பாதி வரை கலகலப்பாகப்போகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிங்கம்புலி. சாதாரண சீனைக்கூட இவர் செய்யும் அலப்பறைகளால் களை கட்டுகிற மாஜிக் தெரிந்தவர் போல..

.கதைக்களனாக  ஐவரில் ஒருவர் வேன் டிரைவராக வருவதும் அவரது வேனில் மோனிகா பயணிப்பதும் அழகு. ஆனால் நாயகி மோனிகாவை எந்த வித பில்டப்பும் இல்லாமல் சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தியதை அகில இந்திய ”அழகி ” பட மோனிகா ரசிகர் மன்றத்தை சார்ந்தவன் என்ற முறையில் இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்..

அதே இயக்குநர் இன்னொரு  நாயகி களவாணி ஓவியாவுக்கு மட்டும்  ஸ்லோமோஷனில் செம பில்டப்போடு அறிமுக சீன் வைத்தது ஏன்?
ஆனால் தாவணீயில் வந்து கிராமத்துமாணவியாக மனதில் பதிந்த ஓவியா இதில் சிட்டி காலேஜ் கேர்ளாக எடுபடவில்லை.. அதுவும் அவரது ஹேர் ஸ்டை பல காட்சிகளில் சகிக்க வில்லை.

http://narumugai.com/wp-content/uploads/2010/09/oviya-4.jpg
மோனிகா காதலன் தனக்கு கிடைக்கமாட்டான் என தெரிந்து கதறுவது செம நடிப்பு.. அவரது கழுத்து நரம்புகள் புடைக்க கதறும் அந்த சீனில் மோனிகாவின் அர்ப்பணிப்பான  நடிப்பு அட்டகாசம்.

ஐந்து மகன்களில் இருவருக்கு திருமணம் ஆகிறது.. அதில் ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போகிறான்.. அந்த சீனில் அந்த மகன் கண் கலங்கிக்கொண்டே வீட்டை விட்டுக்கிளம்பும் சீன் டாப் கிளாஸ் நடிப்பு....

5 மகன்களிடம் அடி வாங்கும் ஆள் இந்த தேன் கூட்டின் மீது கை வைக்காதீர் என கட் அவுட் வைப்பது செம காமெடி சீன்...அதே போல் வேன் வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு கல்யாண ஜோடியையே பிரிக்கும் காமெடியும் கலகல ..
சிங்கம்புலியின் கரிமேடு கருவாயன் கெட்டப் நகைக்க வைக்கிறது..

கிளாமர் ஹீரோயின் என்றால் ஸ்லோமோஷன்ல பேஸ்கட் பால் விளையாட வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் டைட் டீ சர்ட் போட்டு ஜாக்கிங்க் போக வேண்டும் (அதுவும் ஸ்லோ மோஷன்ல தான்) என்ற கோடம்பாக்கத்தின் மாறாத செண்ட்டிமெண்ட்டை வரவேற்கிறேன்.. (ஹி ஹி கிடைச்ச வரை லாபம்....)

http://monikaonline.in/wp-content/uploads/2011/01/Muthukku-Muthaga-Audio-Launch-monika.jpg

என்ன பண்ணி தொலைச்சே.. என் நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துதே  பாட்டுக்கு மோனிகா ஆடும் டான்ஸ் இதம்... பாடல் வரிகள் இலக்கிய நயம். படமாக்கிய விதம் கண்ணியம்..

ஊருக்கு போய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் ஒரு பையன் அம்மா சேலையையும், அப்பா வேட்டியையும் ஞாபகத்துக்காகவும் , வாசத்துக்காகவும் எடுத்து செல்வது செம செண்ட்டிமெண்ட் சீன்..

ஒரு சுடிதார் பூ வந்து என்னைத்தொட்டு சென்றது.. என் கன்னம் 2-ல் ஹைக்கூ சொல்லி சென்றது 30 நாளும் பவுர்ணமியே பாட்டுக்கு ஓவியா ஆடும் சீனும் கலக்கலான கொரியோகிராஃபி..

இந்த பாடலுக்கு பிளாக் ஜீன்ஸ் + ஸ்கை ப்ளூ டீ சர்ட்டில் ஓவியா ஆடும்போது.. செம கிளு கிளு..

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு பாட்டுக்கு கிராமத்தின் பெருமையை அறிமுகப்படுத்தும் காமெடி சீன்கள் ஓக்கே ரகம்...
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_145913000000.jpg
முத்துக்கு முத்தான வசனங்களில் நினைவில் நின்றவை...

1. எம் பி பி எஸ் படிச்சுட்டு ஃபாரீன் டாக்டர் ஆகாம் ஏன் இந்த கிராமத்துக்கு வந்தேன்? இங்கே ஜாதிச்சண்டை அதிகம்...நிறைய பேரு வெட்டிக்குவாங்க.. அடிச்சுக்குவாங்க.. 4 காசு சம்பாதிக்கலாம்னுதான்.....

2.  அண்ணே.. உள் குத்து, வெளி குத்து என்ன வித்தியாசம்?

அவங்க ஆள்கள் அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டா அது உள்குத்து.. வெளி ஆட்களை அடிச்சா அது வெளி குத்து...

3.  என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா..? இது சரி ஆகுமா?

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது..

4. என்னதான் வீட்டுசாப்பாடு ருசியா இருந்தாலும் மாமன் மச்சான் வீட்ல ஓசி சாப்பாடு சாப்பிடற சுகம் இருக்கே,,,.. அடடா...

5.. டே.. எதுக்கு இவ்வளவு பதட்டம்..? முத ராத்திரி ரூம்ல இருந்து வெளில வந்து எதிர்ல இருக்கற பொருளை எல்லாம் தட்டி விடறே.. கைல குடுத்த காபி டம்ளரை தட்டி விட்டே... ஆனா தலைல இருக்கற மல்லைகைப்பூவை தட்டி விடாம இருக்கே..? அதை முதல்ல தட்டி விடடா..

6. எண்ணையை தூக்கி உள்ளே வைடான்னா என்னை தூக்கி உள்ளே உட்கார வைக்கறியா..?

7. ஹீரோ -எந்த அழகான பொண்ணு என் எதிரே வந்தாலும் ஆட்டோகிராஃப் வாங்கறது என் பாலிசிங்க..போடுங்க...

8.சிங்கம்புலி  -எதுக்குய்யா என்னை சுருட்டைன்னு கூப்பிடறீங்க.? சச்சின் டெண்டுல்கர்னு கூப்பிடுங்க..

9.   அண்ணே , என் ஆளு வர இன்னும் 10 நிமிஷம் ஆகும் .எப்படியாவது இவங்களை  சமாளி....

சிங்கம்புலி - ஆமா.. இவனுங்க என்ன கலெக்டர் ஆஃபீஸ்லயா வேலை பார்க்கறானுங்க..?

10. சிங்கம்புலி - வண்டி 10 நிமிஷம் நிக்கும், யூரின் போறவங்க எல்லாரும் போயிட்டு வந்துடுங்க..

யோவ்,, வண்டி கிளம்பியே 10 நிமிஷம் தான் ஆகுது.. அதுக்குள்ளே  யூரின் போன்னா எப்படி வரும்?

11.  சிங்கம்புலி - யோவ்.. இடைத்தேர்தல் வந்தா ஓட்டுக்கு ரூ 10000 கிடைக்கும்.. செத்துத்தொலைய்யான்னா சாக மாட்டேங்கறே.. நீ எல்லாம் என்னய்யா எம் எல் ஏ..?

12. எல்லா நாளும் சண்டேவா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.. நாம் எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கறது  அன்னைக்குத்தானே..

13.  என்னதான் ஏ சி ரூம்ல சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி வருமா?

14.  சரண்யா - டே.. தம்பி.. காலேஜ்க்கு போ.. படி ஆனா பாஸ் மட்டும் ஆகிடாதே., அப்புறம் எங்களை  பிரிஞ்சு போயிடுவெ...

15.  நாங்கதான் 10 மாசம் சுமந்து பெக்கறோம்..

அடிப்போடி.. உங்களுக்கு அந்த 10 மாசத்தோட முடிஞ்சிடுது மொத்த வேலையும்.. மீதி நாள் பூரா கஷ்டப்படறது நாங்கதான்.. அடுத்த ஜென்மம்னு  ஒண்ணு இருந்தா நான் உனக்கு பொண்டாட்டி ஆகனும், நீ என் புருஷன் ஆகனும். நீ இப்போ நீ  பண்ற சித்திரவதை எல்லாத்தையும் நான் உனக்கு                 பண்ணனும்..

என்ன சாபம் குடுக்கறீங்களா?

கையாலாகாத  ஆம்பளைங்க சாபம் தான் குடுக்க முடியும்.. ( இந்த சீனுக்கு செம க்ளாப்ஸ்.. ஏகப்பட்ட ஆம்பளைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க போல )
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/05/D-0490.jpg
பல காட்சிகளில் அம்மா செண்ட்டிமெண்ட்டையும், ஆண்களே கண் கலங்க வைக்கும் காட்சிகள் வைத்தும் இயக்குநர் பாராட்டைப்பெறுகிறார்..

மாமனார் மாமியார் வந்ததும் தனது அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு கடையில் டிஃபன் வாங்கி வருவது,பேரனைப்பார்க்க வந்த மாமியார் ஆஸ்துமா பேஷண்ட் என்பதால் தன் குழந்தைக்கும் வந்து விடும் என அவனை அண்ட விடாமல் பண்ணுவது , வீட்டோட மாப்ளையான பையன் அங்கே மரியாதை கிடைக்காமல் மன்ம் ஒடிந்து வந்து அம்மா பசிக்குது சோறு போடு என சொல்லும் இடங்கள் என கண்களை குளம் ஆக்கும் சீன்கள் மட்டும் 13 இடங்கள்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. சொல்லி வைத்தது மாதிரி எல்லா மருமகள்களும் அப்படி கொடூரமாக இருப்பார்களா? யாராவது ஒருவரையாவது பாஸிட்டிவ்வாக காண்பித்திருக்கலாம்..

2. மோனிகாவும், ஹீரோவும் செல் ஃபோன் ரிங்க் டோனில் காதல் பாட்டு ரிங்க் டோன்களை மாற்றி மாற்றி வைத்து வேனில் காதல் தூது விடுவது கவிதையான சீன் தான்.. ஆனால் செல் ஃபோனில் ரிங்க் டோனோ அல்லது மெசேஜோ வந்தால் லைட் எரியுமே.. என்னாச்சு? 

3. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில்  பின்னணி இசை அந்தகாலத்து பழைய பாணீயில் ஏன்..?

4. கதைக்களன் திண்டுக்கல்லில் நடப்பது போல் காட்டி இருக்கிறீர்கள். புது மணத்தம்பதிகள் கல் உப்புக்குவியலில் கால் வைத்து மிதிப்பது போல் ஒரு சாங்கிய சம்பிராதய சீன் உள்ளது.. உப்பை தாண்டுவாங்க.. மிதிக்க மாட்டாங்க..

5. க்ளைமாக்சில் அரளி விதை அரைத்த துவையலை  ( பச்சை கலர்)சரண்யா மட்டன் குழம்பில் மிக்ஸ் பண்றாங்க... ஆனா அதே கலர்ல தான் குழம்பு இருக்கு மாற்றமே இல்லை கலர்ல..

6. மருமகள் அரளி விதையை அரைச்சு குடிச்சு சாக வேண்டியதுதானே  என திட்டியதால் மனம் உடைந்த சரண்யா கணவனுடன் சாவது ஓக்கே.. ஆனால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு மருமகள்  மீது போடலை.. அவளுக்கு தண்டனையே தர்லையே ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_txRCodujsFK0B71dlN4xtlPQiunyEcAqqHiqJkebXmXOqjhEaB0T_Pl_pN4hVcD82ZsDas6oP5kcBpYNGYBGdHW67rpIrluwJdKz5zU_FarnQgRbnYJ_LiiEDYqSoleQg9z4azdkO-uk/s320/Kollywood-news-1740.jpg
படம் பார்க்கும் இளைஞர்களுக்கு இயக்குநர் சொல்ல வரும் கருத்துக்கள்

1. கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் வீட்டோட மாப்பிள்ளையா போகாதே..ஆரம்பத்துல சுகமா இருக்கும்.. ஆனா போகப்போக மதிக்க மாட்டாங்க..

2. அம்மா, அப்பா செத்த பிறகு அவங்களை நினைச்சு கண்ணீர் சிந்துவதை விட அவங்க உயிரோட  இருக்கறப்பவே அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்.

படம் முடியற ஸ்டேஜ் வந்ததும் நான் அப்படியே சுத்தி பார்க்கறேன். எல்லாரும் அவசர அவசரமா கண்களை துடைச்சுக்கறாங்க.. அவங்க விடற கண்ணீர் வெளி ஆட்களுக்கு தெரிஞ்சுடக்கூடாதாம்..லைட் போடப்போறாங்கள்ல...
இந்தப்படம் பி  செண்ட்டர்களில்  40 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். ஏ செண்டர்களில் 30 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் -ஓக்கே

ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்.. லட்சுமிலயும் போட்டிருக்காங்க..

Saturday, March 12, 2011

சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV5KJFadRm6Y2jOb6dv9r7qhwn31SrDkwVqPu6zNzgfoLUg3f-TDxS5BqXnMokJLUS_8Mclxb712uVQfzkRqAibSO9C3NPd6tiqg78URBN4SWUeWlSEh8HRQXHcwmXZucmyYPnuZ4-SJJ5/s1600/Bhavani.jpg
சிரிப்பு அழகி சினேகாவுக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை.. நாமளும் விஜய சாந்தி மாதிரி ஒரு வைஜயந்தி ஐ பி எஸ்  டைப் ஆக்‌ஷன் படம் கொடுக்கனும்னு..அதனால வலுக்கட்டாயமா தன்னோட ஸ்பெஷல் பிராண்ட் சிரிப்பை மூட்டை கட்டி பரண்ல வெச்சுட்டு போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி பல வித்தைகளை காட்டி இருக்காரு.........ஆனா.....

பொதுவா போலீஸ் யூனிஃபார்ம் போட்டா எல்லாருக்கும் கெத்தாதான் இருக்கும்..ஆனா திரைக்கதைல கெத்து இல்லையே....போலீஸ் ஆஃபீசரோட வீர தீர சாகசப்படம் பார்க்க வந்தவங்க போலீஸ் ஆஃபீசரோட தங்கையை ரேப் பண்ணி கொலை செஞ்சவனை பழி வாங்கற எஸ் ஏ சந்திர சேகர் கால படக்கதையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க தான்.

என்னதான் சினேகா முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலும் அவரது முகம் ஒரு சாஃப்ட்டான முகம் என்பதால்  ( கண்டு புடிச்சுட்டாருய்யா துர)  போலீஸ்க்கே உரிய கண்டிப்பு முகத்தில் வெளிப்படுத்த முடியல... ஆனா அவரும் முடிஞ்சவரை சமாளிச்சிருக்காரு..அவர் ஜீன்ஸ் பேண்ட் . டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு  .( சென்சார் சென்சார்....)

அவர் வர்றப்ப ஒரு பேக் கிரவுண்ட் ஹம்மிங்க் கொடுக்கிறாங்க.. பாருங்க .. யதா யதா தரிகிடத்தோம் யதா யதா தரிகிடத்தோம் தம் தோம்... ஸ்லோ மோஷன்ல போலீஸ் புடை சூழ சினேகா நடந்து வர்றப்ப பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனா பில்லா ரேஞ்சுக்கு அதே சீன் 13 இடத்துல வர்றப்ப கடுப்பாகுது...

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataC/cinemakisukisu/images/127404_f520.jpg
இந்தப்படத்துக்கு டூயட் வேண்டாம்னு முடிவு பண்ணுன இயக்குநரை நான் பாராட்டறேன்.. ஆனா சினேகாவை ஒரு இடத்துல கூட சிரிக்கறதை காட்டாததை வன்மையா கண்டிக்கிறேன்.. ( ஒரு சீன்ல அப்பாவைப்பார்த்து சிரிக்கிறார்.. ஆனா சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதுன்னு சொல்ற மாதிரி அப்பாவைப்பார்த்து சிரிப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.. ஹி ஹி )

ஃபைட் சீன்ல சினேகா ரொம்ப படுத்தறார்.. வில்லனின் அடியாளை ஓங்கி ஒரு அடி குடுத்துட்டு 5 விரல்லயும் நெட்டை (சொடக்கு - நன்றி - கி ராஜ நாராயணன்)எடுத்துட்டு இருக்கார்.. சுத்தி 36 வில்லனின் அடியாட்கள் அவர் சொடக்கு எடுத்து முடியற வரை காத்திருந்து அப்புறம் அடிக்க வர்றாங்க...

விவேக்- செல் முருகன் காமெடி காட்சிகள் தனி டிராக்கில் படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் போவதால் மனதை நிற்கவில்லை.. ஆனால் மோசமில்லை.. சிரிப்பு வருது....

http://www.viduppu.com/photos/full/actresses/sneha/004.jpg
வசனகர்த்தா பவானியில் பவனி வந்த இடங்கள்

1. இந்தத்தடவை உனக்கு எம் எல் ஏ சீட் இல்லை..

யோவ்,,நீ ஜெயிக்கனும்கறதுக்காக கள்ள ஓட்டு, கொலைன்னு எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன்..( நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு..)

2.  யோவ்.. எஸ் ஐ.. ராஜா ராமன் மேல ஒரு சூசயிடு கேஸ் போடு.. அவனை நான் கொல்லப்போறேன்...

கேஸா..அப்படின்னா..?

சுத்தம்.. அதே தெரியாதா?    ( ரொம்ப அப்பிராணியா இருக்காரே...இந்த சப் இன்ஸ்பெக்டர்..) 

3. எனக்கு  கிம்பளம் தர்றது முதல் வீடு கட்டித்தந்தது வரை எல்லாமே அவர்தான்... அவரை எப்படி நான் அரெஸ்ட்  பண்றது?

உன் பொண்டாட்டிக்குத்தாலி கட்னதும் அவர்தானா..?

4.  ஹலோ... வந்து சேர்ந்திட்டியா.?

விவேக்.. - ஹா ஹா ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. போயே சேர்ந்துட்டான்

5.  இனிமே ரன்னிங்க்ல செல் ஃபோன் பேசுவே நீ..?

ம்ஹூம்.. இனி வாக்கிங்க்ல கூட செல் ஃபோன்ல பேச மாட்டேன்...

6.  ஆஹா.. முருகன் மயில் மேல ஏறி வர்றது எனக்கு தெரியுது...

விவேக்.. - அடப்பாவி.. இங்கே பார்த்து வண்டி ஓட்டுடா.. எனக்கு எமன் எருமை மேல வந்து துரத்தறது நல்லா தெரியுது...

7. விவேக்.. -  அடப்பாவி.. வண்டில போறப்ப சாமி கும்பிடாம போனா சாமி கோவிச்சுக்கவா போகுது?ஏண்டா ஆக்சிடெண்ட் நடக்க ஒரு காரணி ஆகறீங்க..?

8.  விவேக்.. - என்னது? ரேப் பண்ணுனவனுக்கு ரூ 500 அபராதமா? இனி பாக்கெட்ல ரூ 500 வெச்சிருக்கறவன் எல்லாம் அடங்க மாட்டேனே... ( உயிர் புகழ் சங்கீதா நடித்த தனம் பட டயலாக் உல்டா.. # வாழ்க வல்லாரை லேகியம்)

9. விவேக்.. - என்னது? ஆயிலுக்கு பஞ்சமா? தமிழ் நாட்ல இருக்கற டீகடைகள்ல விற்கற பஜ்ஜிகளை பிழிஞ்சா ஆயில் கஷ்டமே வராதேடா.....

10. விவேக்.. -  நான் நினைக்கறேன்  இந்த பஜ்ஜில இருக்கற ஆயில் தான் பின் மருவி பஜாஜ் ஆயில்னு வந்ததோ..?

11.வில்லன் - இங்கே பாரு.. ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர்  ஒரு சப் இன்ஸ்பெக்டரை அடிச்சான்னு பேர் வெளில வந்தா பெரிய பிரச்சனை ஆகும்...

ஓக்கே.. கான்ஸ்டபிளை விட்டு அடிக்க சொல்றேன்..

12. .வில்லன் - இவனுங்க பார்க்கற பார்வையே சரி இல்லையே.. ஓட்டு போடுவானுங்களா?

அல்லக்கை - நீங்க இதுவரை ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்கீங்களா?

இல்லை..

அப்புறம் என்ன கவலையை விடுங்க.. இந்த ஜனங்க எபவும் நல்லவங்களுக்கு ஓட்டு போடவே மாட்டாங்க.. எல்லா ஓட்டும் நமக்குத்தான்..

13.  தலைவரே.. குழந்தைக்கு பெயர் வைங்க....

நம்ம சின்னம் கோடாலி சின்னம் தானே .. அதையே வை.. தேர்தலுக்கு யூஸ் ஆகும்..

14.  வில்லன் - அவ நம்மளை திட்றாளா? புகழ்றாளா? தெரியலையே..?

ஜனங்க கை தட்றாங்க.. அப்போ புகழ்றாங்கன்னு தான் அர்த்தம்..

அடப்போடா.. அவங்க எதுக்கு கை தட்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது..



http://ulavan.net/wp-content/uploads/2010/12/sinega-e1292341879707.jpg
பரவை முனியம்மாவை வைத்து எடுக்கபாட்ட பாடல் அப்பட்டமாக தூள் பட ஏய் சிங்கம் போல நடந்து வரும்.. பாட்டின் உல்டா...

இயக்குநருக்கு பாராட்டு பெற வைக்கும் இடங்கள்

1. ஹீரோயின் தங்கையை வில்லனின் ஆட்கள்  கடத்தி செல்லும்போது அவளைக்காப்பாற்ற போகாமல் வில்லனின் மகனை ரிவால்வர் முனையில் மிரட்டி வில்லனை பணிய வைக்கும் இடம் விறு விறு....

2. ஆக்சிடெண்ட் ஆன செல் முருகன் பால் வண்டியிக்கு கீழே விழுவதும்.. எதேச்சையாக அவர் வாய் பால் பைப்புக்கு கீழே இருப்பதும்...செம காமெடி.. இந்த சீனில் விவேக்கின் டயலாக் டெலிவரி செம...

3. சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி 
http://thangameen.com/Images/ContentImages/admin/sneha_23.gif
இயக்குநருக்கு சில கேள்விகள்

1.போலீஸ் கான்ஸ்டபிள் தனது குழந்தை இறந்ததற்கு லீவ் கேட்டும், அதை அடக்கம் பண்ணக்கூட லீவ் தராமல் எஸ் ஐ டபாய்ப்பதும்...எந்த ஊர்ல அப்படி நடக்குது..?

2.ஏ சி பவானியின் கதையில் தேவை இல்லாமல் கான்ஸ்டபிள் சம்பத்குமாரின் கிளைக்கதை எதற்கு?

3. ஹீரோயின் தங்கயின் பெண் அழைப்பு விழாவில் பன்னீர் தெளிப்பதற்குப்பதில் பெட்ரோலை தெளித்து அரை மணி நேரம் கழித்து பட்டாசு பற்ற வைத்து எரிப்பது ஓவர்...சுற்றி இருப்பவர்கள் கேட்க மாட்டாங்களா?

4. ஹீரோயின் ஆக்சிடெண்ட்டில் காலில் அடிபட்டு ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆன அடுத்த வாரமே எப்படி டெர்மினேஷன் லெட்டர் வரும்? மெடிக்கல் லீவ் இருக்கே..? 2 வருஷம் கழிச்சுத்தானே அந்த நடவடிக்கை எடுக்க முடியும்?

5. எந்த காலேஜ்ல எண்ட்ரன்ஸ்ல நீச்சல் குளம் இருக்கு?அதுல ரவுடிங்க நீச்சல் அடிப்பாங்களா? காலேஜ் டைம்ல...

6. ஹீரோயின் தங்கை டிரஸ் சேஞ்ச் பண்ண அறிமுகம் இல்லாதவர் வீட்டில் ஒரு அறையில் நுழையும்போது கதவைத்தாழ் போடாமல் டிரஸ் சேஞ்ச் பண்ணுவாளா? ( அப்பத்தானே வில்லன் ரேப் பண்ண உள்ளே வர முடியும்?னு சால்ஜாப்பு சொல்லக்கூடாது?)

7 கத்திக்குத்து பட்ட பொண்ணை காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்க்காம ஏம்மா எந்திரி.. பாரு  அப்படின்னு ஹீரோயின் கத்தறாங்க.. லாஜிக்  ஓட்டை  ஓவர்...


http://www.thedipaar.com/pictures/resize_20101227131420.jpg
எட்டடுக்கு சோலை என்னுடைய சேலை எனும் டப்பாங்குத்துப்பாட்டு வரிகள் செம கில்மா .. ஆனால் அந்த பாட்டை படமாக்குவதில் ரசனைக்குறைவு..அந்த பாட்டுக்கு நடன தாரகைகளை தலைக்கு குளிக்க வைத்து  ( என்னமோ இவனே தலையை துவட்டி விட்ட மாதிரியே சொல்றானே.. )சேலை கட்ட வைத்து டீசண்ட்டாக ஆட வைத்தும் நோ யூஸ்...

கரும்புச்சாறு சொல்லழகி,கற்பூரக்கண்ணழகி  செல்ஃபோன் சிணுங்கல் சிங்காரி பாட்டு வரிகள் அழகு கற்பனை...

கோட்டா சீனிவாசராவ் வில்லன் நடிப்பில் ஓக்கே... ( ஆம்பளைங்களை இவன் பாராட்றதே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..)

சராசரியாக 20 நாட்கள் ஓடும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க்  - ஓக்கே

Friday, March 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/March/3-3-11/Prithviraj-anvar.png
 நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும், நல்ல சினிமா தர வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் கொள்கையால் அவரது இமேஜ் திரை உலகில் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு சாட்சியாக பிரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்த மலையாள டப்பிங்க் படத்துக்கு பிரகாஷ்ராஜின் பிம்பத்தை  போஸ்டரில் போட்ட சாமார்த்தியத்துகு ஒரு சபாஷ்..

கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது?யார் அதன் பின் புலமாக இருந்தார்கள்?முஸ்லீம்கள் அந்த நிகழ்ச்சியால் எந்த அளவு பாதிப்பு அடைந்தார்கள் என்பதை விளக்கும் கதை.

தீவிரவாதிகள் ட்ரூப்பில் பிரித்விராஜ் சேரும்போதே இது கேப்டனின் நரசிம்மா படத்தில் வருவது போல போலீஸின் டெக்னிக் என  தெள்ளத்தெளிவாய் தெரிகிறது ..ஆனால் பிரித்விராஜின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் வரும்போது இயக்குநரின் சாமார்த்தியம் வெளிப்படுகிறது.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஜெயில் கைதிகள் வேட்டி சட்டையோட உலாவுவதைப்பார்த்தால் லாஜிக் கன்னா பின்னா என அடி வாங்கப்போகுதுன்னு பார்த்தா கேரளாவில் அப்படித்தானாம்.

ஒளிப்பதிவு அம்சமாக இயற்கை அழகுகளை அள்ளிக்கொள்கிறது...அதுவும் அபூர்வமாய் வரும் பாடல் காட்சிகள் 3-ல் ஒளிப்பதிவு ரெகை கட்டிப்பறக்குது.. போற போக்கைப்பார்த்தா இந்த டைரக்டர் ஆக்‌ஷன் படத்தை விட காதல் சப்ஜெக்ட்ல படம் எடுத்தா கலக்குவாருன்னு தோணுது...



http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/prithivra10.jpg
கிழக்கில் பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திடுவாயோ பாடல் வரிகளை கேட்கும்போது இந்த மாதிரி ஆக்‌ஷன் சப்ஜெக்ட்ல கூட மனுஷன் மெனக்கெட்டு பாடல் வரிகளை செலக்ட் பண்ணி இருக்காரே..ன்னு தோணுச்சு..வெல்டன் டைரக்டர் கம் பாடல் ஆசிரியர் .அந்த பாடலுக்கான ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு மகா கண்ணியம்.செம...

அதே போல் கண்ணின் இமை போலே பாடலுக்கு நடன தாரகைகள் ( நன்றி - சாண்டில்யன்) அணிந்திருக்கும் கவுரவமான உடைகள் புதிதாய் படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு நல்ல ஒரு முன் உதாரணம்..சமீப கால படங்களில் இவ்வளவு  டீசண்ட்டாக க்ரூப் டான்சர்ஸை ஃபுல்லா கவர் பண்ணி அழகு படுத்தியவர்  யாரும் இல்லை...( நற நற... )


பிரகாஷ்ராஜ் பல இடங்களில் சர்வ சாதாரணமாய்ப்பேசும் ஆங்கில வசனங்களில் வசனகர்த்தா மிளிர்கிறார்.. துல்லியமான ஆங்கில அறிவும், நாட்டு நடப்பை தாக்கும் வசனங்களும் வெல்டன் சொல்ல வைக்கிறது.

http://www.ulakacinema.com/wp-content/uploads/2011/03/anwar01.jpg
வசனகர்த்தா வெங்கடேஷ் கலக்கிய இடங்கள்

1.  உங்களை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க தெரியுமா?

ம்.. தெரியும்.. ஏன்னா நான் ஒரு முஸ்லீம்..

மத்த முஸ்லீம்களை ஏன் அரெஸ்ட் பண்ணலைன்னு தெரியுமா?

ஓ... அதுக்காக வருத்தப்படுகிறீர்களா?


2.  அப்போ.. உங்களுக்கும் பாம் பிளாஸ்ட்க்கும் தொடர்பு இலைன்னு சொல்றீங்களா..?

நீங்க என்ன சொல்லப்போறீங்களோ அது தானே நாளைக்கு பேப்பர்ல வரப்போவுது...? நான் சொல்றதையா போடப்போறாங்க..?

3. ஜெயிலர் - அங்கே என்னடா பேச்சு..?

புது கைதி வந்திருக்கான் இல்ல// விசாரிக்கறோம்..

ஆமா, அடையாளம் தெரிஞ்சு எம் எல் ஏ சீ ட் குடுக்கப்போறியா..?

4.  அன்வர், அப்துல்லா இப்படி பேர் வெச்சது தப்பு.. அதான் போலீஸ்ல அரெஸ்ட் பண்றாங்க..

அதுக்காக இந்த வயசுல போய் பேரை மாத்த முடியுமா?

5,  சரி சரி.. சிகரெட்டை அணை... ஜெயிலர் வர்றான்...

ஏன்.. அவர் ரொம்ப கண்டிப்போ...?

ம்ஹூம்.. சிகரெட்டை பிச்சை கேட்பான்...

6.  போலீஸ்காரங்க எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்றியா..?

முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள்னு சொல்றியா..?

7.  அங்கே என்னடா மீட்டிங்?

ஜெயில்ல பாம் வைக்கறதைப்பத்தி  டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்..

அப்படியாவது  இந்த ஜெயில் வாழ்க்கைக்கு முடிவு காலம் வரட்டும்...

8.  இது கோர்ட் வாசல்.. விசில் அடிக்கறே..?

உள்ளே ஜட்ஜ் சுத்தியல்ல அடிக்கிறாரு...அதை கேட்க மாட்டீங்க..?
http://3.bp.blogspot.com/_zTKOyc3q9PU/TLthtP3xb9I/AAAAAAAACpI/lMF0sMiuces/s1600/Anvar+Movie+photos+_27_.jpg
9.  உங்களை நான் ஜெயில்ல பார்க்கவே இல்லையே...

வரனும்.. ரொம்ப நாளா நண்பன் கூப்பிட்டுட்டே இருக்கான்.....

10. மேலே போனவன் கீழே வந்தே ஆகனும்.. இது இயற்கையின் விதி ( LAW OF NATURE)

11..ஆஷா.. விசாரணைக்கு ஒத்துழைக்கனும்.. உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா..?

அதை உங்க கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

12. மரண பயத்தை வெல்லும்போதுதான் ஒரு சாதாரண மனிதன் முஸ்லீம் ஆகறான்.

13.  இவ்வளவு கஷ்டப்பட்டும் 3 பேர் தான் செத்தாங்களா?

எத்தனை பேர் செத்தாங்கங்கறது முக்கியம் இல்ல..உயிரோட இருக்கறவங்க மனசுல பயத்தை விளைவிக்கனும்..

14.  என் பையனுக்கு  திமிர் ஜாஸ்தி.. ஆனா வயசானா அது சரியாகிடும்...

15. பசியோட இருக்கறவங்களுக்கும், அநாதைகளுக்கும் உதவி செய்யனும் நாம எல்லாரும்...

16.  ஒரு நிமிஷம்... ஒரே நிமிஷம்.. நான் அநாதை ஆகிட்டேன்...

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_095934000000.jpg
இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. பிரகாஷ்ராஜ் சுடப்படும் சீன் குருதிப்புனல் க்ளைமாக்ஸை நினைவு படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...

2. மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில வசனங்களை கரெக்ட்டான இடங்களில் போட்டது சந்தோஷம் .. ஆனால் திரையில் அதைத்தமிழ்ப்படுத்தி இருக்கலாம்.

3. மிக நீளமான அந்த ஆக்‌ஷன் காட்சியில் ஹீரோ ஜீன்ஸ் பேண்ட் போட்டபடி காலை தூக்கவே சிரமப்பட்டு உதைக்கிறார்.. அது எப்படு பவர் ஃபுல் ஷாட்டாகும்? ஜாக்கி சான் படங்களில் ஃபைட் சீன்களில் அவர் அணியும் பேக்கீஸ் ரக பேண்ட்களை கவனிக்கவும்..

4. வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்...
5.. இடைவேளைக்குப்பிறகு வரும் 28 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சியில் வெறும் 6 நிமிட இடை வெளியில் 2 பாடல்கள் வருவதை தவிர்த்திருக்கலாம்..

http://thatstamil.oneindia.in/img/2010/04/21-mamthamoh200.jpg

அது போக காயத்ரி ரகுராம் அவர்களின் நடன இயக்கம்  ரொம்பவே அழகு...ஹீரோயின்  18  நிமிடங்களே வந்தாலும் (மம்தா) மனதில் நிற்கிறார்.. ( நல்ல வேளை உட்காரலை)

இந்தப்படம் மலையாள டப்பிங்க் படம் என்பதால் ஆனந்த விகடன் -ல் விமர்சனம் போட மாட்டாங்க..குமுதம் புக் எலக்‌ஷன் ஸ்பெஷல்ல மும்முரமா இருக்கறதால அதுலயும் போட மாட்டாங்க.... ( அப்போ நான் தான் இளிச்சவாயனா..?)

படம் எத்தனை நாள் ஓடும்.. ஆவரேஜ்ஜா 20 நாட்கள்